டத்தோஸ்ரீ சாமிவேலு
பன்னெடுங் காலம் பலதுன்பம் பட்டவர்
பொன்னேரம் தன்னைப் பொதுவிற்கு -- எந்நாளும்
தந்தசாமி வேலுத் தலைவர்க்குத், தூதுவராய்
வந்தார் பதவிக்கு, வாழ்த்து.
Printable View
டத்தோஸ்ரீ சாமிவேலு
பன்னெடுங் காலம் பலதுன்பம் பட்டவர்
பொன்னேரம் தன்னைப் பொதுவிற்கு -- எந்நாளும்
தந்தசாமி வேலுத் தலைவர்க்குத், தூதுவராய்
வந்தார் பதவிக்கு, வாழ்த்து.
அலைப்பட்ட அவை
ஊழல் இலதாம் ஒருதுறை இவ்வுலகில்
வாழும் மனிதர்க்கும் வாய்த்திடுமோ --- கூழும்
துவையலும்போல் எங்கும் தொடர்தரும் இஃதால்
அவையும் அலைப்படுதல் காண்.
ஊடக மாந்தரிடம் உண்மையிலை காசுபணம்
பூடக மாகயிலை பாதகரும் நேரடியாய்
நாடக மாடுகிறார் நம்செவியில் நறுமலரை
சூடிட சாடுவ தாரு?
பிகு: இப்போது தான் எழுதிப் பழகுகிறேன். பிழைகளை சுட்டிக்க்காட்டினால் திருத்திக்கொண்டு கற்க ஆர்வமாக உள்ளேன்.
Welcome! Welcome!!Quote:
Originally Posted by P_R
பிழைகள் என்று சொல்வதைவிட, எப்படி வெண்பாவாக்குவது என்று சிந்திக்கலாம். வெண்பாவாக இல்லாவிடின் வேறு ஒரு வகைப் பாட்டு ஆகலாம் அல்லவா?
நறுமலரை என்பதை நன்மலரை என்றும்,
சாடுவதாரு என்பதைச் சாடுவ தார் என்றும் மாற்றிப் பாருங்களேன்.
சிறு மாற்றங்களே தேவை . Very good attempt.
ஆம். இலக்கணச்சுத்தமாக எழுதப் பயில ஆசை.Quote:
Originally Posted by bis_mala
ஆஹ். காய் முன் நேர். கோட்டை விட்டுவிட்டேன். நன்றிQuote:
நறுமலரை என்பதை நன்மலரை என்றும்,
இந்த நாள்,மலர்,காசு,பிறப்பு எனக்குச் சரியாகப் புரியவில்லை என்று நினைக்கிறேன். தாரு - என்பது 'காசு' போன்ற சொல்லாக கொள்ளமுடியாதா?Quote:
சாடுவதாரு என்பதைச் சாடுவ தார் என்றும் மாற்றிப் பாருங்களேன்.
Thank You.Quote:
Very good attempt.
Thank You.[/quote]Quote:
Originally Posted by P_R
ஊரு என்று முடித்து, அது காசு என்னும் வாய்பாடு என்று வாதிடக் கூடுமென்றாலும், தமிழ்ச்சொல் "ஊர்" என்பதே ஆகலின், ஊர் என்றே முடிக்க.
ஊர் என்பது நாள் என்ற வாய்பாட்டில் வந்து, வெண்பா இடர் ஏதுமின்றி முடிவதால், ஊரு தேவையில்லையாகிறது.
Compose a few more and enjoy....
ஆசியக் கண்டத் தருந்தலைவர் சார்பின்மை
பேசிய பேரரிமா நேரு.
நேரு செயற்கரிய செய்தார்; நிகரற்றார்;
யாரும் இவர்ந்தறியா மேரு.
நெடிலைத் தொடர்ந்து ருகரத்தில் முடிந்த இறுதிச்சீர் கொண்ட சான்றோர் வெண்பா யாப்புச் செய்யுட்களைக் காணமுடியவில்லை. Anyone who comes across such, please post. Thank you.
ருகரம் கிடைக்கவில்லை றுகரம் கிடைத்தது:
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
ஒரு கேள்வி:
ஒற்றில் முடியில் சீருக்கு அடுத்த சீர், உயிரில் தொடங்கும்போது, சில சமயம் சேர்த்தெழுதுகிறார்கள், சில சமயம் அப்படிச் செய்வதில்லை.
உம்.: மேற்சொன்ன குறளைச் சில இடங்களில்
"அரசரு ளேறு" என்று முடிக்கிறார்கள். Consistentஆக இருக்க வேண்டும் என்றால் "நட்பர ணாறும்" என்று இருக்கவேண்டுமல்லவா. ஆனால் அப்படி இல்லை. "நட்பரண் ஆறும்" என்று பிரித்து எழுதுகிறார்கள்.
எப்படி எழுத வேண்டும்?
பண்டைத் தமிழில் எதையுமே பிரித்து எழுதாமல்,
"அகரமுதலவெழுத்தெல்லாமாதிபகவன்முதற்றேயுலகு"
என்று எழுதினார்கள்! அக என்பதிலிருந்து படிக்கத் தொடங்கி, பக என்பது வந்தவுடன் அடுத்த அடி தொடங்கி விட்டதென்று கண்டுகொண்டார்கள்.
அசையும் சீரும் படிப்பவரே அல்லது பாட்டாய்ப் பாடுகிறவரே பிரித்துக்கொள்ளவேண்டியதுதான்.
ஓலைச் சுவடியின் ஓர் ஓலையில் முழுவதும் எழுத இடம் வேண்டுமென்பது 'மட்டுமல்ல', தனிதனிச் சொற்களாகவோ சீர்களாகவோ எழுதுவது அவர்கள் பழக்கமில்லை.
தொடரும்.