சாரி வாசு சார்
மதுர கானங்கள்
திரியை மறுந்து விட்டேன்
Printable View
சாரி வாசு சார்
மதுர கானங்கள்
திரியை மறுந்து விட்டேன்
வாசு சார்
இந்த ஜானகி சபதம் பாடலும் சிலோன் ரேடியோ ஹிட் சார்
இதே மாஸ்டர் சேகர் கவிதா ஜோடி னு நிநேகிறேன்
வித்யா மொவீஸ் பேரும் புகழும் முக்த ஸ்ரீனிவாசன் டைரக்டர்
1976 ரிலீஸ்
"அவளே என் காதலி " பாலா வித் வாணி குரல்கள்
மன்னரின் flute இசையுடன் தபேல இணைந்து இசைக்கும்
இதே படத்தில் ஜேசுதாஸ் சோலோ ஒன்னு உண்டு சார்
"தானே தனக்குள் ரசிகின்றாள்
தலை முழுகாமல் இருகின்றாள் "
முத்துராமன் சுஜாதா ஜோடி
இரண்டுமே சிலோன் ரேடியோ ஹிட் சார்
கிருஷ்ணா சார்!
எண்ணப் பொருத்தம் என்னே பொருத்தம்!
நேற்று நைட் தான் இந்தப் பாடல் ஞாபகம் வராமல் யோசிச்சு யோசிச்சு மண்டை காய்ந்தேன்.
எனக்கு 'அவளே என் காதலி' பாட்டு ஞாபகம் வர்றதற்கு முன்னாலேயே அதே மாதிரி இருக்கும் 'பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ' ஞாபகத்திற்கு வந்திடும். அதான் குழப்பமே! தேங்க் யூ சார்.
சூப்பர் சார். இன்று இரவு நிம்மதியாகத் தூங்குவேன் (ஷிப்ட்டில்)
இன்னைக்கு என்ன 'மாஸ்டர்' சேகர் தினமா?
தெரிஞ்சோ தெரியாமலோ இந்தப் பையன் பாட்டா வருதே!
https://www.youtube.com/watch?featur...&v=-_BsBGsQchk
கிருஷ்ணா சார்,
பாட்டுல நம்ம தொலைகாட்சி அம்மாவைப் பார்த்தீங்களா? ஆமாம்! கேக்கணும்னு நினைச்சேன்.
அந்த
'மஞ்சள் முகமே வருக'
பார்த்திருக்கீங்களா? தப்பா நினைக்காதீங்க சார். என்னென்ன பாட்டுன்னு பிட்டு பிட்டு வைப்பீங்களே! அதுக்காக கேட்டேன் சார். :)
உங்களுக்கு எப்படி சார் தூக்கம் வரும்
வித்தை உள்ளவனுக்கும் விசாரம் உள்ளவனுக்கும் (கௌவரம்)
நீங்கள் வித்தை உள்ளவர் சார்
ஒ மஞ்சு படத்தை பற்றி சொல்லி இருந்தீர்கள்
1976 இல் வெளிவந்த ஸ்ரீதர் படம் சார்
அடோலேச்சென்ட் வயதில் மாஸ்டர் சேகர் மற்றும் கவிதா (இதில் கவிதா பணக்கார விட்டு பெண் ) இருவரும் சென்னையில் இருந்து வீட்டுக்கு தெரியாமல் ரயில் ஏறி திருநெல்வேலி தென்காசி குற்றலாம் என்று எல்லாம் சென்று விட்டு இறுதியில் பிரிவது போல் கதை வரும்
ஜேசுதாஸ் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது
"உலகம் ஒரு கவிதை " மாஸ்டர் சேகர் போதையில் பாடுவது போல் வரும்
வாணியின் "சபலம் சலனம் மயக்கம் " போதை குரலில் வரும் பாடல்
மியூசிக் மன்னர் தானா சார்
தலை
இப்பதான் நினைச்சேன் (மஞ்சள் முகமே வருக )
ராம நாராயணன் காஜா (ராம் ரஹீம்) இருவரும் சேர்ந்து கதை எழுதிய படம் சார்
கிருஷ்ணா சார்,
'பேரும் புகழும்' படத்தில் இன்னொரு பாட்டு.
'நல்ல பேரோடு புகழ் பெற்ற பெண்மை'
பாலாவும், சுசீலாவும் பின்னுவார்களே!
10 நிமஷம் சார்
சின்ன வேலையை முடிச்சுட்டு வந்துடறேன் ப்ளீஸ்
பேரும் புகழும் கரெக்ட் சார்
மஞ்சள் முகமே வருக படம் கொஞ்சம் விரசம் கலந்த படம் என்று நினவு
சத்ய பிரியாவை கொஞ்சம் உரிசுருப்பங்க
பாட்டு நினைவுக்கு வரலே
அந்த ய.விஜய ஒரு பாட்டு ஒன்னு கிடார் எல்லாம் வைச்சுக்கிட்டு
வாணி குரலில்
"அண்ட காக்கை பறக்குதடி ஷோக்க
ஒன்னும் தெரியதா பாப்பா அவ கண்ணாலே போட்டாளம் தாப்பா "
என்று வரும் அந்த படம் என்ன படம் சார்
கண்ணகி, மாதவி, பார்கவி, அருந்ததி என்று அய்யர் படுக்கையில் புலம்ப,
அவர் தர்மபத்தினி
'ஏன்னா! பகவான் நாமமாவே சொல்லிண்டு இருக்கேளே!'
என்பார். ரகளை.
ஆசை 60 நாள்
விஜயகுமார் ஸ்ரீவித்யா
துரை direction
அந்த படத்தில் தானே இந்த பாடல்
"அண்ட காக்கை பறக்குதடி ஷோக்க
ஒன்னும் தெரியதா பாப்பா அவ கண்ணாலே போட்டாளம் தாப்பா "
'மஞ்சள் முகமே வருக' படம் கொஞ்சம் இல்ல சார்.... அதுக்கு மேலேயே சொல்லலாம்.
விஷயம் தெரியாம பக்கத்து வீட்டுக்காரம்மா எங்க வீட்டில சொல்லிட்டு என்னை கூப்பிட்டுட்டு போயிட்டாங்க. பக்குன்னு பத்திக்குற வயசு வேற. ஒன்னும் புரியல. மஞ்சள்ன்னு டைட்டில் இருக்கவே மகாலஷ்மி படம் வரும்னு நினைச்சுட்டாங்க போல் இருக்கு.:)
உள்ளே போய் பார்த்தா மஞ்சள் இல்ல. நீலம். அதுவும் ரொம்ப நீளம். பக்கத்து வீட்டுக்காரம்மா இப்படி திரும்பு இப்படி திரும்பு என்று ஆப்பரேடர் ரூம் பக்கம் என் கழுத்தைப் பிடித்துத் திருப்பியது நன்றாக நினைவிருக்கிறது. (பாவம்! அவுங்களும் எத்தனை முறைதான் கழுத்தைப் பிடித்து திருப்புவாங்க!) :)அதைவிட சத்யப்ரியா மிக நன்றாக நினைவிருக்கிறது.
டியர் கிருஷ்ணாஜி,
'அவர்கள்' படத்தில் இடம்பெற்ற 'அங்கும் இங்கும் பாதை உண்டு' பாடல் பற்றிய பதிவும், அதற்க்கான சிச்சுவேஷன் விளக்கமும் நன்றாக இருந்தன. (மன்மத லீலைக்கிடையே பதித்ததற்காக வருத்தம் ஏன்?. எல்லாப்பாடல்களையும் அலசுவதர்க்க்காகத்தானே இந்த திரி?).
இப்பாடல் பற்றி ஒரு விசேஷம் உண்டு. பலர் பலமுறை சொன்னதுதான். நானும்கூட ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில், மேடையிலேயே பாலச்சந்தர் சிச்சுவேஷன் சொல்லி, மேடையிலேயே கவிஞர் பாடல் இயற்றி, மேடையிலேயே மெல்லிசை மன்னர் மெட்டமைத்து, மேடையிலேயே எஸ்.பி.பி. பாடி அசத்திய பாடல் இது. பாடல் மிகச்சிறப்பாக அமைந்ததால், பாராட்டுவதற்கு பதிலாக 'இவர்கள் முன்கூட்டியே எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டு வந்துவிட்டு இப்போதுதான் புதிதாக செய்வதுபோல நடிக்கிறார்கள்' என்று பலர் சொன்னார்களாம்.
இப்படத்தின் மேலும் இரண்டு அருமையான பாடல்களான
'இப்படியோர் தாலாட்டு பாடவா, அதில்
அப்படியே என் கதையை கூறவா'
பாடலையும்
'ஜூனியர்... ஜூனியர்....
இருமனம் கொஞ்சும் திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்'
பாடலையும் அலசுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்...
நிச்சயம் கார்த்திக் சார்
1977 இல் முத்துராமன் ஜெயசித்ரா,அபர்ண நடித்து
s p முத்துராமன் டைரக்டர்
ஆளுக்கொரு ஆசை
கொஞ்சம் காமெடி கலந்த படம் ஈஸ்ட்மேன் கலர்
ஓரளவ ஓடிச்சுன்னு நினவு
இளையராஜா மியூசிக்
budget பத்மனபான் போல் வரும்
கொஞ்சம் ஜெயசித்ரா குண்டு ஜெயசித்ரவ மாறி கொண்டு இருந்த நேரம்
ஜேசுதாஸ் சுசீலா பேஸ் வாய்ஸ் சாங்
இளையராஜாவின் கிடார் கொஞ்சும்
இதய மழையில் நனைந்த கிளிகள்
புதிய நதியில் குளித்து குளித்து எழ வேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள் உறவினில் பெற வேண்டும்
காதல் வரச்சொல்ல கால்கள் தடை சொல்ல
மௌனம் பிறக்கிறது
காவலோ வேலியோ யாரைத் தடுக்கிறது
ஏதோ புரியுது ஏதோ தெரியுது இன்பம் எழுகிறது
ஏக்கமோ தூக்கமோ கண்கள் தவிக்கிறது
மலர்ந்த நேரமே மயங்கத் தோன்றுமா
உணர்ந்த பின்னரே உறங்கத் தோன்றுமா
இதய மழையில் நனைந்த கிளிகள்
புதிய நதியில் குளித்து குளித்து எழ வேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள் உறவினில் பெற வேண்டும்
மாறன் அரண்மணை மாடம் இரண்டிலும் தீபம் எரிவதென்ன
மாலையோ காலையோ மயக்கம் வருவதென்ன
வாசல் பளிங்குகள் ஆசை வெளிச்சத்தில் கோலம் இடுவதென்ன
வாடையோ தென்றலோ வசந்தம் தருவதென்ன
கனிந்த உள்ளமே இணைந்து கொண்டது
இருந்த நாணமே மறைந்து நின்றது
2. வாணி ஏக்க குரலில் ஒரு பாடல்
அபர்ணாவுக்கு
அந்த பாட்டை கேட்டு முத்துராமன் ஜெயசித்ராவுக்கு மூடு கிளம்பற மாதிரி
"மஞ்சள் அரைக்கும் போது மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன சொந்தம் காண
பல நாளா தூக்கம் இல்ல ஏக்கம் தீராதோ
உதடெல்லாம் செக்க செவக்க
வெத்தலைய போட்டுக்கொண்டேன்
வாங்கத்தான் ஆளைக்காணோமே
தங்கம் போல் மேனி எங்கும்
ஜவ்வாது பூசி வெச்சேன்
தழுவத்தான் நேரம் வரலியே
ஆளுக்கொரு ஆசை வெச்சு
அவரவர பிரிசும்வேச்சு
ஏக்கத்தை பங்கு வெச்சானே
தேகத்தில் வேகம் வெச்சு
வேகத்தில் போதை வெச்சு
விளையாடும் ஆள காணேனே
3.சௌந்தராஜன் குரலில் அசரீரி பாடல்
"கணக்கு பார்த்து காதல் வந்தது
கட்சிதமா ஜோடி சேர்ந்தது
ஒன்னும் ஒன்னும் ரண்டு "
இந்த படத்தில் ஒரு காமெடி நினவு உண்டு சார்
முத்துராமன் லீவு போட்டு ஜெயசித்ரவை ஆபீச்ல வந்து அவங்களையும் லீவ் போட்டு ஒரு மஜா பண்ணனும் நினைச்சு ஆனால் அவங்க 3 நாள் விலகு விலகு
இலக்கியக் காதலுக்கு
இங்கே வேலை இல்லை
எல்லாமே காவியம் இல்லை
கற்பனை உலகத்திலே
ஆசைகளும் இல்லை
கனவுக்கு வேலையும் இல்லை
நடுத்தர குடும்பத்துக்கு
பட்ஜெட் காலி இல்லை
வரவுக்கு மேல் செலவு வந்தால்
எந்நாளும் தொல்லை
சூப்பரா இருக்கும் சார். இல்லாமையின் இயலாமை நன்றகப் புரியும் சார்.
கிருஷ்ணா சார்!
ஜானகியின் 'வாழ்வென்னும் சொர்க்கத்தில்'?
கிரேட் வாசு சார் பாட்டை நிறைவு செய்ததற்கு
இந்த படத்தில் தேங்காய் கொஞ்சம் கலக்கி இருப்பார்
இதய மழையில் நனையும் கிளிகளின் பாடல். வீடியோ இல்லை பாட்டையாவது கேட்போம்.
http://www.youtube.com/watch?v=Cw1VA2S2TXQ&feature=player_detailpage
சார் சார் சார்
எழுத வந்தேன்
முடியல
http://www.dailymotion.com/video/xmw...aiyil_creation
இந்த லின்க்லே விடியோ இருக்கு சார்
ப்ளீஸ் ட்ரை
vaaaav....super sir. kalakkitteenga. dailymotion பார்க்கணும் போலிருக்கு.:)
டியர் வாசு சார்,
'ஜானகி சபதம்' படத்தில் சேகர் - ரோஜாரமணி பாடல் அலசல் நன்றாக இருந்தது. இரண்டும் அப்போதுதான் பருவத்தைத் தொட்ட வயது. அதனால் பள்ளிப்பிள்ளைகள் காதலிப்பது போலிருந்தது. நல்லதொரு குடும்பம் வந்தபோது பையன் கொஞ்சம் தேறிவிட்டான், தோற்றத்தில். நடிப்பில் எப்போதும் தேர்ச்சிதான். (படத்தில் ரவிச்சந்திரன் பெயரைக் குறிப்பிடாததற்கு உங்களுக்கு இருக்கிறது பாட்டு). தலைவரின் எங்க மாமா குழந்தைகள் கூட்டத்தில் இவ்விருவரும் இருப்பார்கள். 'சேகர் தினம்' இன்று தொடங்கவில்லை. நாம் தங்கதுரை, மணிப்பயல் பற்றிப் பேசிய அன்றே தொடங்கிவிட்டது.
மாணவன் படத்தில் இளம் கமலுக்காக டி.எம்.எஸ். 'விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா' பாடியபோதே உறுத்தியது. (இந்த மெட்டுதான் கானா உலகநாதனின் மஞ்சள் சட்டை, கருப்புக்கண்ணாடி பாடலுக்கு மூலம்)
நல்ல பாடல், நல்ல காட்சியமைப்பு. ஆய்வுக்கு நன்றி.
கார்த்திக் சார்!
உங்களுக்கு ஒன்னு தெரியுமோ! ரவிச்சந்திரன் பெயரை டைப் செய்துவிட்டு பின்னர் வேண்டுமென்றே டெலிட் செய்து விட்டேன் பார்ட்டி கண்டுபிடிக்கட்டுமே என்று. அதற்குள் நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள். (ரவிச்சந்திரன் படத்தில் இருக்கிறாரா இல்லையா என்ற டவுட்டில் எடுத்ததற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று யுவர் ஆனர் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்) தப்ப முடியாதுடா சாமியோவ்.
கோபால் சார்
மோகனம் பற்றிய உங்கள் வர்ணனை ரசிக்க வைத்தது
மேலும் சில பாடல்கள் என்னை கவர்ந்தவை
1.மலர்கள் நனைத்தன பனியாலே (ரவியின் இளமையுடன் சேர்ந்து ரசிக்கும் போது கூடுதல் இன்பம் )
2.வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே (சலங்கை ஒலி)
(கமல் இன் குறும்பு மற்றும் கீதாவின் )
3.கண்மணியே காதல் என்பது கற்பனையோ (ரஜினியின் இளமை மற்றும் சங்கீதாவின் )
4.மீன்கொடி தேரில் (கரும்புவில் )
இளையராஜாவின் ஸ்டார்டிங் பீட் ஜேசுதாஸ் வாய்ஸ் chorus
(மைனஸ் மொக்கை சுதாகர் சுபாஷினி )
இந்த மோகன ராகத்தை பற்றி படித்த ஒரு குறிப்பு
tremendous relief to patients of high blood pressure.
Mohana is present where beauty and love coexist.
It filters out the ill-effects of kama (desire for sex) , krodha (anger) and moha (lust), bestowing immense benefits on the listener.
Also said to cures indigestion, and depression.
https://i1.ytimg.com/vi/pMpXm2Hsa7k/mqdefault.jpg
உண்மைதான் கார்த்திக் சார்!
நன்றாக நடிக்கக் கூடிய பையன். தங்கதுரை, அநாதை ஆனந்தன், எங்க மாமா, அகத்தியர், ஓ..மஞ்சு, ஜானகி சபதம், பயணம், நல்லதொரு குடும்பம், கவரிமான் என்று நிறையப் படங்கள். சிறுவயதிலேயே காலமாகி விட்டார். இவரிடம் பிடித்தது இயல்பாக நடிப்பது. இவருக்கு முன்னால் மாஸ்டர் ஸ்ரீதர் இருந்தாரே! அவர் ரொம்ப ஓவர்.
வாசு சார்
மாஸ்டர் ஸ்ரீதரும் காலமாகி விட்டார் என்று கேள்விபட்டேன்
பேபி இந்திராவின் கணவர் தானே மாஸ்டர் ஸ்ரீதர்
அதே போல் மாஸ்டர் பிரபாகரனின் தங்கை பேபி சுமதி என்று நினைவு. கரெக்ட்டா?
http://i.ytimg.com/vi/Gd62BWoGg5k/0.jpghttp://i.ytimg.com/vi/Qik4IhlDpzI/0.jpg
எப்படி இருந்த பிரபா
இப்படி ஆயிட்டாரே!
http://www.telugucinema.com/c/uploads/1/prabha3.JPG
மணிப்பயல், அன்னை வேளாங்கண்ணி, வாணிராணி உள்பட ஏராளமான படங்களில் நடித்திருந்தார் சேகர்.
தவிர ராஜா, குடியிருந்த கோயில், இதய வீணை படங்களில் கதாநாயகர்களின் சின்ன வயது வடிவமாகவும். பிற்காலத்தில் டி.வி.சீரியல்களிலும் நடித்து வந்தார்.
புதிய வீடு கட்டிவந்த இவர் (வேளச்சேரியா வளசரவாக்கமா நினைவில்லை) காலை நேரத்தில் புதிய வீட்டு சன்ஷேடில் நின்றவாறு சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது காலில் தண்ணீர் ஹோஸ் மாட்டிக்கொள்ள தவறி விழுந்தபோது காம்பவுண்ட் சுவரில் பின்மண்டை பலமாக அடிபட்டது. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
நடிகர்திலகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் 'சிவாஜி அங்கிள்' என்றே குறிப்பிடுவார்.
கரெக்ட் வாசு சார்
பேபி சுமதி நடித்த அழகு னு படம்
இந்த படம் வந்ததானு தெரியலை சார்
சிலோன் ரேடியோவில் கேட்ட பாடல்
"தேவி வந்தாள் தரிசனம் " ஜானகி அண்ட் மலேசியனு நினவு
உங்களுக்கு நினவு உண்ட
இந்த பிரபாகர் எங்க இருக்கிறார்