டியர் வாசு சார், அசத்திட்டீங்க.
'நான் தன்னந்தனிக்காட்டு ராஜா' பாடல் அலசலில் நடிகர்திலகத்தின் ஒவ்வொரு அசைவையும் தனித்தனியாக புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். இதுபோன்ற பொது இடங்களில் (குறிப்பாக பொருட்காட்சி) படமாக்கும்போது ஸ்டுடியோவில் எடுத்தது போன்ற அதே முகமலர்ச்சி, உற்சாக துள்ளல் என்று அசத்தியிருப்பார். அதற்கேற்ப குழந்தைகளும் நடிப்பதாக தெரியாமல் ஏதோ பிக்னிக் வந்த உற்சாகத்தோடு நடித்திருப்பார்கள்.
அதென்ன ஜெயகௌசல்யா, ரோஜாரமணிக்கு மட்டும் அடிஷனல் விளக்கம் மறவர்களுக்கு இல்லையா. பிரபாகர் ('ராமன் எத்தனை ராமனடி'யில் நடிகர்திலகத்துக்கு படத்தில் நடிக்க சான்ஸ் வாங்கி (!?!?!?) கொடுப்பவர். சேகர் (ராஜா, வாணிராணி, கவரிமான், நல்லதொரு குடும்பம்) .
நடுவில் ஒரு சரணம் வானொலியில் வேண்டுமென்றே கட் செய்யப்பட்டதல்ல. அப்போதைய வினைல் ரிகார்டுகளில் மூன்றரை நிமிடங்களுக்குள் வருமாறு பாடல்கள் எடிட் செய்யப்பட வேண்டும். அதனால் பல பாடல்களின் அருமையான இடையிசை, மற்றும் சரணங்கள் கட் ஆகிவிடும்.
இதில் அதிகம் அடிவாங்கியது வசந்த மாளிகை பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும் ஒரு சரணம் கட்.
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடலில் 'தக்கதகதிமி தாளம் ஜதியோடு' கட் செய்யப்பட்டு 'சொர்க்கம் இருப்பது உண்மைஎன்றால்' என்ற சரணத்திலிருந்து துவங்கும்.
மயக்கம் என்ன பாடலில் இரண்டாவது சரணம் 'பாடிவரும் வண்ண நீரோடை' இசைத்தட்டில் கிடையாது.
கலைமகள் கைப்பொருளே பாடலில் 'உன்னிடம் ஆயிரம் ராகங்களே' சரணம் கட். 'நான் யார் உன்னை மீட்ட' என்றே துவங்கும்.
இரண்டுமனம் வேண்டும் பாடலில் 'சிறிய காயம் பெரிய துன்பம்' என்ற சரணம் கட். இரண்டாவது சரணமான 'இரவும் பகலும் இரண்டானால்' என்பதிலிருந்து துவங்கும்.
உ.சு.வாலிபனில் சிரித்து வாழ வேண்டும் பாடலில் 'முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே' என்ற சரணம் இசைத்தட்டில் இடம்பெறவில்லை.
சில பாடல்களில் படத்தில் இடம்பெற்ற அருமையான முன்னிசை இசைத்தட்டில் கட் செய்யப்பட்டு, திடீரென்று பல்லவியிலிருந்தே பாடல் துவங்கும்.
அதுபோலத்தான் நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில் 'மெல்ல வளர்ந்திடும் செல்லக் குழந்தைகள்' சரணமும் கட்.
நடிகர்திலகத்தின் வித்தியாசமான தொப்பி ஸ்டைல், அதுவும் பாடல் முழுவதும் அமர்க்களம்.
உங்கள் ஆய்வும் கூட முழுதும் அமர்க்களம்.