-
ulagam sutrum valiban - a review by a fan
'உலகம் சுற்றும் வாலிபன்'. 1973ல் வெளியானபோது வாலிபனுக்கு வயது 55. என்ன தில் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எவரும் தமிழகத்தில் எட்ட முடியாத மாஸ். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்றே மூன்று படங்களைதான் தலைவர் இயக்கியிருக்கிறார். எம்.ஜி.யார் பிக்சர்ஸ் லோகோ அதிகாரப்பூர்வமாக வெள்ளித்திரைக்கு வந்த முதல் படம்.
தலைவரின் மாஸ்டர்பீஸ். அந்த காலத்திலேயே அறுபது நாட்களில் தேவிபாரடைஸ் திரையரங்கில் மட்டும் ஐந்து லட்சத்தை வசூலித்த வசூல் சக்கரவர்த்தி. சென்னையிலும், மதுரையிலும் வெள்ளி விழா கண்ட படம். தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளில் இன்று வரை சாதனையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் படம். தடைகளை தவிடுபொடியாக்கிய சரித்திரம்.
இப்படத்தை திரையரங்கிலும், டி.வி.டி.யிலும் எத்தனைமுறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு படத்தின் ஸ்க்ரிப்டை மடமடவென்று ஒரு 192 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதித்தள்ள முடியும். இத்தனை முறை பார்க்குமளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது.
உலகத்தரமா.. வித்தியாசமான கதையா? இது இரண்டுமே இல்லை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கொண்டாட்டம். கொண்டாட்டத்தைத் தவிர வேறெதுவுமில்லை. தலைவரே பாடுவது போல் 'எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்'
இந்தியாவின் தலைசிறந்த(?) விஞ்ஞானிகளில் ஒருவரான முருகன் மின்னலின் ஒட்டுமொத்த சக்தியை சிறு கேப்ஸ்யூல்களில் அடக்கிவிடக்கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். அதை ஆக்கசக்திக்கு பயன்படுத்தும் விதமான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்கு முயல்கிறார். அழிவுசக்திகளுக்கு இந்த ஃபார்முலாவை விற்று கோடி கோடியாக சம்பாதிக்க நினைக்கிறார் சக விஞ்ஞானி பைரவன். ஃபார்முலாவை முருகன் எங்கோ மறைத்துவைத்திருக்க அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பைரவன் முருகனை கடத்தி விடுகிறார். கடத்தலுக்கு முன்பாக முருகன் நினைவாற்றலை இழந்துவிடுகிறார். ஒருபக்கம் வில்லன் குழு ஃபார்முலாவை தேட, மறுபுறம் முருகனின் தம்பியும், போலிஸ் சிஐடியுமான ராஜூ ஃபார்முலாவையும், அண்ணனையும் சேர்த்து தேடுகிறார். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் என்று பலநாடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு இறுதி வெற்றி நல்லவர்களுக்கே.
* இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தலைவர் ஒரு கெட்டப்புக்கு வித்தியாசம் காட்டுவதற்காக குறுந்தாடி வைத்து அசத்துவார். விஞ்ஞானி பாத்திரம் என்பதால் தாடி பொருத்தமாகவே இருக்கும்.
* தலைவர் ஆங்கிலத்திலும் விட்டு விளாசியிருப்பார். ஹோட்டல் ரிசப்ஷனில் "மே ஐ மீட் மிஸ்டர் பைரவன்?" என்று ஆங்கிலத்தில் கேட்கும்போது அரங்கமே அதிரும்.
* லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை என்று தலைவருக்கு நாலு ஹீரோயின்கள். ஒவ்வொரு ஹீரோயினுடனும் குஜாலான டூயட்கள் உண்டு.
* மனோகர், அசோகன், தேங்காய்சீனிவாசன், நம்பியார் என்று ஏராளமான வில்லன்கள். ஏராளமான சண்டைகள். சிகப்பு விளக்கு ஒளிகாட்டவே தலைவர் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டியிருந்திருக்கும்.
* சந்திரகலாவை ஒரு நடன ஓட்டலில் இருந்து தலைவர் மீட்கும் காட்சியில் ஸ்டண்ட் அட்டகாசம். தலைவரை விட பலமடங்கு எடை கூடி இருக்கும் வில்லனை அசால்ட்டாக தூக்கி எறிவார். அந்த சண்டைகாட்சியின் போது வளையவரும் அயல்நாட்டு கவர்ச்சித்தாரகைகளால் நம் கண்ணுக்கும் பசுமை.
* இறுதிக்காட்சி ஸ்கேட்டிங் ஃபைட்டுக்காகவே வாத்தியார் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்திருந்தார்.
* வாலி - எம்.எஸ்.வி கலக்கல் காக்டெயில். பாடல்கள் ஒவ்வொன்றும் காதில் தேன்மழை.
சீர்காழி குரலில் 'வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' கம்பீரமான ஓபனிங் சாங்க். 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' விஷூவல் ட்ரீட். 'சிக்குமங்கு சிக்குமங்கு சிக்கப்பாப்பா' பாட்டில் தலைவரின் குழந்தைத்தனம் வெளிப்படும். 'தங்கத் தோணியிலே' அசத்தலாக போட்டில் படமாக்கப்பட்ட பாடல். 'நிலவு ஒரு பெண்ணாகி' பாடலில் வரும் வார்த்தைகள் 'மடல்வாழை துடையிருக்க மச்சமொன்று அதிலிருக்க' இளமைக்குறும்பு. 'பச்சைக்கிளி முத்துச்சரம்' பட்டாசு, சிகப்புச்சட்டை, நீலநிற ஃபேண்ட், கழுத்தில் கர்ச்சீப், டீனேஜ் ஹீரோயின் என்று அதகளப்படுத்தியிருப்பார் தலைவர், போதாதற்கு 'கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா?' கிளர்ச்சியூட்டும் வரிகள். 'பஞ்சாயீ' இனிமை. 'அவள் ஒரு நவரச நாடகம்' படமாக்கப்பட்ட விதம் ஆச்சரியம். 'உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம்' டோக்கியோ டூர்.
* படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. தலைவரின் இளமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹீரோயின் சந்திரகலா முத்திய முகமாக இருப்பார். புரட்சித்தலைவி நடித்திருந்தால் செம மஜாவாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் தலைவருக்கும், தலைவிக்கும் ஊடல் இருந்ததாக சொல்வார்கள். ஆனாலும் சந்திரகலாவின் நடனம் பரவசம்.
* "நீங்க என்னாச்சி? என்னாச்சின்னு கேட்குறீங்க.. அவர் யார் ஆட்சி? யார் ஆட்சின்னு கேட்குறாரு...", "நாயோட திறமைய அவர் பார்க்கட்டும். என்னோட திறமைய நீ பாரு" - பஞ்ச் டயலாக்குகள், தவுசண்ட் வாலா சரங்கள்.
* பச்சைக்கிளி டூயட்டில் தாய்லாந்து ஹீரோயினை கசக்கி, தடவிய அடுத்தக் காட்சியில் தலைவர் "தங்கச்சீ..." என்று பாசமழை பொழிய, ஹீரோயினும் "அண்ணா.." என்று ஆரத்தழுவிக்கொள்வது அசத்தல் காமெடி. நாகேஷின் காமெடியை விட தலைவரின் காமெடி படத்தில் கொடிகட்டிப் பறக்கும்.
* தெத்துப்பல் நம்பியாருடனான சண்டைக்காட்சி தான் படத்தின் ஹைலைட். புத்தவிகாரத்தில் நடைபெறும் சண்டையில் அனலும், ஆவியும் பறக்கும். புத்த விகாரத்துக்குள் நுழையும்போது தலைவர் ஷூவை கழட்டிவிட்டு நுழையும் காட்சியில் இன்றும் கைத்தட்டல்.
* படத்தின் படப்பிடிப்பின்
போது தலைவர் திமுகவில் இருந்ததால் ஆங்காங்கே கருப்பு சிகப்பு தெரியும். மிகக்கஷ்டப்பட்டு எடிட்டிங்கில் அவற்றை வெட்டியிருந்தாலும் பலகாட்சிகளில் கருப்பு சிகப்பு இன்னமும் பளீரிடுகிறது.
* படத்தின் எண்ட் கார்டில் 'எமது அடுத்தத் தயாரிப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்று போடுவார்கள். தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் இன்னொரு சாதனைப்படத்தை தமிழ் திரையுலகம் இழந்தது.
Courtsey
Net..........VSM
-
நவயுக பாரி வள்ளல் புரட்ச்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர் வாழ்க்கை பக்கங்களியிருந்து
ஒரு சமயம் தலைவர் வண்டி ஒரு மலையடி பாதையில் பயணிக்கிறது, வண்டியில் புரடச்சித் தலைவர், அவரின் இல்லத்தரசி ஜானகி அம்மையார், கதை மற்றும் வசனகர்த்தா திரு ரவீந்திரன் மற்றும் கார் ஓட்டுநர் பயணத்தில் இருந்தனர், காரில் உரையடிக்கொண்டு இருக்கயில் பேச்சு தலைவரின் பெயர்,பட்டம் பற்றி போனது இதில் ரவிந்தர் தலைவரிடம் " அண்ணே! இந்த உலகம் பூரா தங்களை பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது "என்று கூறினார் அதற்க்கு தலைவர் "அப்படியெல்லாம் இல்லை என்னை அறியாதோர் எத்தனையோ பேர் இருக்கிறார் கள் " என்று கூறினார் இருருக்கவே முடியாது பந்தயம ₹500/= என்றார் ரவீந்திர், சரி என்றார் தலைவர் வண்டி சென்று கொண்டு இருந்தது சற்று தொலைவில் ஒரு வயோத்திகர் ஒருவர் நடந்து போய்க்கொண்டு இருந்தார் தலைவர் கரை நிறுத்தி அவரிடம் யாரு,? எங்கே? செல்கிறீர்கள் என்று வினாவினார் தான் இந்த மழைபக்கத்தில் ஒரு குடுசையில் இருப்பதாகவும் விறகு வெட்டி கிழே ஒரு கடையில் விற்று விட்டு வீடு திரும்புவதாக கூறினார் காரில் ஏறுங்கள் தங்களை வீட்டில் இறக்கிவிடுகிறேன் என்றார் தலைவர் அதற்க்கு அந்த முதியவர் பரவயில்லை பக்கம் தான் நடத்து போய் விடுவேன் என்றார் ஆனாலும் தலைவர் விடுவதாக இல்லை பரவாயில்லை வாருங்கள் நாங்கள் போகும் பாதைத்தான் சிரமம் ஏதும் இல்லை என்றார் பெரியவரும் ஏறிகொண்டார் பயணம் தொடர்ந்தது தலைவர் பெரியவரின் முழுவிபரமும் கேட்டு அறிந்தார் அதற்கு பிறகு காரில் மௌனம் நிலவியது கார் போய்க்கொண்டுருக்கையில் அந்த பெரியவர் ஓட்டுநரிடம் தம்பி அந்த ஓரத்தில் அந்த மரதிற்க்குபக்கத்தில் நிறுத்துங்கள், கரும் அவ்விடித்தில் போய் நின்றது, பெரியவர் இரங்கி " அய்யா மிக்க நன்றி! மன்னிக்கவும் தாங்கள் சற்று நேரம் இருங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு ஒரு ஒத்தையடி பாதையில் நடந்து மறைந்தார், தலைவர் ரவிந்த்ரை பார்த்து " பார்த்தாயா? அவருக்கு நான் யார் என்றே தெரியவில்லை என்றார், ரவிந்தார் தலைவரிடம் அவர் ஏழை, விறகு வெட்டி பிழைக்கிறார் அவருக்கு நீங்க எதுவும் உதவலேயே இது உங்கள் வழகத்திற்கு மாறாக உள்ளதே, அதற்க்கு தலைவர் அப்படியில்லை நான் அவரை காரில் ஏற சொன்ன பொழுது மறுத்தார் பார்த்தாய்யா?அதிலிருந்து புரிந்துகொண்டேன் அவர் மிகவும் தன்மானம் மிக்கவர் என்று என்வே பணம் தந்து அவர் உழைப்பை நான் அவமானப்படிதிவிட கூடாது,, தலைவர் சொல்லி முடிக்கும் தருவாயில் மூச்சிறைக்க வந்து சேர்ந்தார் பெரியவர் "தம்பி ஊருக்கெல்லாம் கொடுத்து உதவுற உன் நல்ல மனசுக்கு நான் ஏதாவது செய்யணும் என்று நினைத்துதான் வண்டியே நிறுத்தினேன் இந்தாப்பா என்னாலே முடிஞ்சது உனக்கு வாங்கிக்க என்று 3 ஆப்பிள் கணிகளை தலைவர் கையில் திணித்தார், தலைவர் பெரியவரின் கை பற்றி தன் கண்களில் ஒற்றி கொண்டார், பெரியவரிடம் விடைபெற்று கார் நாகர்ந்தது காரில் அனைவரும் மௌனம் தலைவர் மௌனம் கலைத்தார், " ஜானு அந்த பழங்களை பத்திரமாக வை அவைகளை நான் ஒருவன் மட்டும் தான் சாப்பிடப்போகிறேன் " என்றார் அடுத்தவர்களுக்கு கொடுக்காமல் சாப்பிடுவபவர நம் தலைவர்.....rmh
-
"தேர்த்திருவிழா" 1968 ம் வருடம் பிப்.23 ல் வெளியான தேவர் பிலிம்ஸின் 14 வது கருப்பு வெள்ளை படம்.
நல்ல அருமையான விறுவிறுப்பான படம். படம் வந்த நேரம் மிகவும் மோசமான ஒரு காலகட்டம். ஒரு பக்கம் "ரகசிய போலீஸ் 115" ஜன 11ல் வெளியாகி நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. "தேர்த்திருவிழா" பிப்ரவரியில் வருவதை ரசிகர்களே விரும்பவில்லை. தேவர் இதைப்பற்றி யெல்லாம் கவலை கொள்ளமாட்டார். அவருக்கு சொன்ன தேதியில் படப்பிடிப்பு முடியணும். சொன்ன தேதியில் படம் வெளியாக வேண்டும். இதிலே மிகவும் கவனமாக இருப்பார்.
வசூலும் முதல் ரவுண்டில் 20-25 லட்சம் வந்தால் போதும் போட்ட முதலை எடுத்து விடுவார். அதன்பின் ஓடுவது எல்லாம் லாபம்தான். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பிற நடிகர் படங்கள் எல்லாம் முதல் ரவுண்டில் வருவது மட்டும்தான் வசூல். அதோடு அந்தப் படங்கள் வசூலை நிறுத்தி விடும். அதன் பிறகு? அவ்வளவுதான்.
அதனால்தான் எம்ஜிஆர் காலத்திற்கு பிறகு மிகுந்த கடன்சுமையால் தேவர் பிலிம்ஸ் காணாமல் போய் விட்டது. இதில் தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த படங்களின் மொத்த உரிமைகளையும் கைமாற்றியதால் வந்த வினை.
படத்தின் முதலை 2 வாரத்திலே எடுத்து விடுவார். அதன்பிறகு படத்தின் ஓட்டத்தில் தலையிட மாட்டார். அப்படித்தான் நன்றாக போய்க் கொண்டிருந்த "விவசாயி" யை மற்ற எல்லா தியேட்டரிலிலும் எடுத்து விட்டு கிருஷ்ணவேணியில் மட்டும் 50 நாட்கள் ஓட விட்டார்கள். கூட வந்த "இரு மலர்கள்" "ஊட்டி வரை உறவை" விட "விவசாயி" அதிக வசூல் ஆகியிருந்தும் படத்தை 50 நாட்கள் கூட சரியாக ஓடவிடவில்லை.
அதேபோல் "தேர்த்திருவிழா"வும் ரிலீஸ் செய்த தேதி சரியில்லை.
அடுத்து மார்ச் 15 ல் மூன்றே வாரத்தில் அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படமான "குடியிருந்த கோயில்" வெளியீடு. ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவில் அழகிய கலைமான் என்பது போன்ற நிலை.
அதுமட்டுமல்ல பிப் 23 ல் "தேர்த்திருவிழா" கூட வந்த "பணமா பாசமா" எதிர்பாராமல் பம்பர் ஹிட்.. "பணமா பாசமா" முதல் முன்று நாட்கள் சரியாக போகவில்லை. மவுத் டாக் மூலமாக படம் பெண்களுக்கு பிடித்து போக படம் அசுரத்தனமான வெற்றியை பெற்றது. இருப்பினும் இப்போது "பணமா பாசமா" வை ஒரு காட்சி கூட தியேட்டரில் ஓட்ட முடியாது. ஆனால்
"தேர்த்திருவிழா" இப்போது திரையரங்கில் வெளியானாலும் 4,5
நாட்கள் ஓடி விடும் என்பதுதான் எம்ஜிஆர் படத்தின் மவுசுக்கு காரணம்.
இதில் சிக்குண்ட "தேர்த்திருவிழா"
ஒரளவு சுமாரான வெற்றியை பெற்றது. படத்தில் பாடல்கள் பிரமாதம். அதிலும் குறிப்பாக 'மழை முத்து முத்து பந்தலிட்டு','
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா?'
'யா யா பாத்தியா'? போன்ற அருமையான ஜோடி பாடல்களுடன் 'தஞ்சாவூரு சீமையிலே' போன்ற டப்பாங்குத்து பாடல்களும் ரசிக்கும்படி படமாக்கியிருப்பார்கள். அதில் தலைவர் கொடுக்கும் டான்ஸ் மூவ்மென்ட் மிகவும் அபாரமாக இருக்கும்.
படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகில் உள்ள கொள்ளிடத்தில் அமைந்திருக்கும் காவிரி கரையோரம் பரிசல் காட்சிகள் படமாக்கப்பட்டன. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி வெள்ளத்தை தடுத்தாலும் மக்கள் திலகத்தின் வருகையால் மக்கள் வெள்ளத்தை தடுக்க முடியாமல் திணறிய காவல்துறை ஒலி பெருக்கியை பயன்படுத்தியும் முடியாமல் தலைவரின் கண்ணசைவில் மக்கள் வெள்ளம் கட்டுப்பட்டதை ஒரு பேரதிசயமாக பேசிக்கொண்டனர்..
தேவர் படத்துக்குறிய சகல அம்சங்கள் நிறைந்திருந்தும் கால சூழ்நிலை சரியில்லாததால் எதிர்பார்த்த வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. இருப்பினும் சென்னையில் 50 நாட்களும் பிற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்களும் ஓடி ஒரு கெளரவமான வெற்றியை பெற்றது..........ksr...
-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
ஒளிபரப்பான*பட்டியல் (01/02/21 முதல் 10/02/21* வரை )
-----------------------------------------------------------------------------------------------------------------------
01/02/21- சன் லைப்- காலை 11 மணி - நம் நாடு*
* * * * * * * *மூன் டிவி - இரவு 8 மணி - நல்ல நேரம்*
* * * * * * * பாலிமர் - இரவு 11 மணி - நீரும் நெருப்பும்*
02/02/21-வஸந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - பணத்தோட்டம்*
* * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - தாய்க்கு பின் தாரம்*
03/02/21-முரசு -மதியம் 12 மணி /7 மணி -வேட்டைக்காரன்*
* * * * * * * புதுயுகம்* - பிற்பகல் 2 மணி - குடும்பத்தலைவன்*
** * * * * * * சன் லைப்* -* மாலை 4 மணி - ரிக் ஷாக் காரன்*
* * * * * * * *பாலிமர் - இரவு 11 மணி - வேட்டைக்காரன்*
04/02/21-வேந்தர் டிவி - காலை 10.30 மணி - தனிப்பிறவி*
* * * * * * * சன் லைப்- காலை 11 மணி - நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * மூன் டிவி - இரவு 8 மணி - காதல் வாகனம்*
05/02/21-மீனாட்சி -மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * *வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*
* * * * * * * சன் லைப்- மாலை 4 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * *மீனாட்சி - இரவு 9 மாய் - நான் ஆணையிட்டால்*
* * * * * * * பாலிமர் - இரவு 11 மணி - சங்கே முழங்கு*
06/2/21- சன் லைப்-காலை 11 மணி - ஆசைமுகம்*
* * * * * * * மீனாட்சி - இரவு 9.30 மணி -வேட்டைக்காரன்*
07/02/21-வானவில் -காலை 8 மணி -மாடப்புறா*
* * * * * * * மீனாட்சி - மதியம் 12 மணி - நல்ல நேரம்*
* * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி -சங்கே முழங்கு*
* * * * * * * சன் லைப்- மாலை 4 மணி - அரச கட்டளை*
* * * * * * * *மீனாட்சி -இரவு 9.30 மணி - விவசாயி*
08/02/21- மெகா 24- பிற்பகல் 2.30* மணி -நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * * சன் லைப் -மாலை 4 மணி - நவரத்தினம்*
09/02/21-வசந்த் டிவி -பிற்பகல் 1.30 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * * *புது யுகம் டிவி -பிற்பகல் 2 மணி -நீரும் நெருப்பும்*
* * * * * * * *சன் லைப் -மாலை 4 மணி -குடியிருந்த கோயில்*
10/02/21-சன் லைப்- காலை 11 மணி - அன்பே வா*
* * * * * * * * எப் எம். தமிழ் - இரவு 8 மணி - வேட்டைக்காரன்*
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி ...............
-----------------------------------------------------------------------------------------------------------------
இன்று முதல் (12/2/21) கோவை டிலைட்டில்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்*
உழைக்கும் கரங்கள்* தினசரி 2 காட்சிகள்* (மேட்னி /மாலை ) நடைபெறுகிறது .
தகவல் உதவி திரு. வி.ராஜா , நெல்லை.*
-
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய_சனிக்கிழமை #காலை_வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின் திரைப்படங்களை பற்றிய அலசலை ஒரு தொடராக பதிவிட ஆரம்பித்து உள்ளேன்
அதில் நேற்று தலைவரின் முதல் படமான சதிலீலாவதி பற்றி பார்த்தோம்.. அதில் துணை நடிகராக ஒரு காவல்துறை அதிகாரி வேடம் பூண்டு நடித்திருப்பார்.. அதிலிருந்து 14 படங்கள் வரை துணை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்..
தலைவர் தனது 15வது படத்தில் தான்
கதாநாயகன் வேடம் கிடைத்தது இன்று
அந்த திரைப்படம் பற்றி பார்ப்போம்..
#ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முதல் முறை கதையின் நாயகன் ஆக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார்.
இயக்கம்
ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்பு
எம். சோமசுந்தரம்
யூப்பிட்டர்
எஸ். கே. மொக்தீன்
இசை
எஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்பு
மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்
கே.மாலதி, எம்.என்.நம்பியார்,
எம்.ஆர்.சுவாமிநாதன், டி.எஸ்.பாலையா, புளிமூட்டை ராமசாமி,
கே.தவமணி தேவி,
எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்,
எஸ்.வி.சுப்பையா,
நாராயண பிள்ளை, டி.கே.சரஸ்வதி,
எம்.எம்.ராதாபாய்
ஒளிப்பதிவு
டபிள்யூ. ஆர். சுப்பாராவ், வி.கிருஷ்ணன்
படத்தொகுப்பு
டி. துரைராஜ்
வெளியீடு
ஏப்ரல் 11, 1947
நீளம்
14805 அடி
ராஜகுமாரி திரை படத்தின் சிறப்புகள் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,
மு.கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.
உடுமலை நாராயணகவியின் பாடல்களுக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற
எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம்.என்.நம்பியார் வாயசைத்தார்.
இப்படத்துக்கு உரையாடலை
மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.
படத்தில் ‘கதை, வசனம், சினாரியோ & டைரக்*ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் (பெயர் கையொப்ப வடிவில்) என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் வருகிறது.
ராஜகுமாரி மல்லிகாவை மீட்கப் புறப்படும் கட்டழகன் சுகுமாரன், வழியில் சர்ப்பத்தீவின் ராணி விஷாராணியிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது விஷாராணி, “காலையிலே ஜாலத் தீவுக்குப் போக கப்பல் தருகிறேன், இன்றிரவு நீ என்னை காமக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போ” என்கிறாள். விஷாராணி பேசும் இந்த ஒரு வசனம் அந்தக் கதாபாத்திரத்தின் குணத்தை மொத்தமாகச் சொல்லிச் சென்றது.
கலைஞர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியபோது 23 வயது இளைஞர்.
தனது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் மு.கருணாநிதி இப்படி நினைவு கூர்ந்திருக்கிறார் - “ஓராண்டு காலம் ’குடியரசு’ அலுவலகத்தில் பணியாற்றி, பெரியாரிடம் கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன். அதற்குப் பிறகு கோவையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு. திரைப்படத்துக்கு வசனம் எழுத வேண்டும் என்ற அழைப்பு. அதை அனுப்பியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி.
என்னுடைய நண்பர் துணையுடன் கோவை சென்று சாமியைச் சந்திந்தேன். ‘கோவை ஜுபிடர் நிறுவனம் எடுக்கவிருக்கும் ‘ராஜகுமாரி’ என்ற படத்துக்கு வசனம் எழுத வேண்டும்’ என்றார். இதை உடனடியாக பெரியாரிடம் தெரிவித்தேன். “போய் வா” என்று விடைகொடுத்தார்." என்று...
தனது 15வது படத்தில் கதாநாயகனாக நடித்த பின்பும் அடுத்தடுத்து துணை கதாபாத்திரம் வேடம் தான் வருகின்றது உதாரணமாக #அபிமன்யு போன்ற 7 படங்களில் நடித்திருக்கிறார்... புரட்சி தலைவர் கதாநாயகன் வேடம் ஏற்று அதிலிருந்து கதையின் நாயகனாகவே நடித்த திரைப்படம் பற்றி நாளை பார்ப்போம்....
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........
-
முத்தான முதல்வரே!!
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மக்களால் மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர்.இந்த வரலாறு வேறு
யாருக்கும் இல்லை.புரட்சித் தலைவருக்குப் பின் ஆள வந்தவர்கள் ஓட்டிற்கும்,கூட்டத்திற்கும் பணம் கொடுத்து சேர்த்த வரலாறை என்னாளும் மக்கள் அறிவர்.
இந்தியாவின் உயரிய விருதுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர்.
திரைத்துறையின் அனைத்து உயரிய விருதையும் பெற்ற ஒரே நடிகர் எம்.ஜி.ஆர்.
தமிழகத்தை ஆண்ட முதல்வர்களிலேயே
மக்கள் செல்வாக்கை நிரந்தரமாக பெற்ற ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.
அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளானாலும் இவருடைய புகழ் இமியும் குறையாத மாசற்ற மாணிக்கம் புரட்சித் தலைவரே!! இவர் கட்சியில் தொடர்கிறார்கள் என எல்லோரையும் உண்மையான புரட்சித் தலைவரின் ரசிகன் ஆதரிக்க மாட்டான்.....
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!
.........Rnjh
-
#பார்வை #ஒன்றே #போதுமே!
மக்கள் திலகம்...
தொலைவில் இருந்து பார்க்கப்
பார்க்க ஆவலைத் தூண்டும்...
கூட்டத்தில் இருந்து நகர்ந்து அருகே சென்று பார்க்கத் தூண்டும்...
நிறைய பேசத்தூண்டும்...
பொற்கரம் பற்றத் தோன்றும்...
பொற்பாதங்களில் விழத் தோன்றும்...
ஆனால் அருகே சென்றவுடன் நம் ஐம்புலன்களும் அடங்கிவிடும்...
நம்முள் பல இரசாயன அதிர்வுகளை ஏற்படுத்திவிடும்...
அந்த தரிசனமே கோடி புண்ணியமென்று நாம் கேட்க வந்ததையே மறந்து அவருக்குள் லயித்துவிடுவோம்...
தரிசனம் பெற்றதும், இந்த
உலகையே வென்றுவிட்டது போன்ற பரவச நிலையை அடைவோம்...
பிறந்த பயனை அடைந்து விட்டதாகப் பெருமை கொள்வோம்...
#இதுதான் #உண்மையான
#எம்ஜிஆர் #பக்தர்கள்.........bsm
-
உ.சு.வா...திரைக்கு பின் நடந்தவை பகுதி 4.
எக்ஸ்போ அரங்கில் லொகேஷன் பார்த்து கொண்டே இருக்கும் போது திடீர் என்று கூட்டத்தின் ஒரு பகுதியை நோக்கி அவர் ஓட....அவர் வேகம் முடியாமல் நாங்கள் தொடர்ந்து ஓட....
அங்கே ஒருவர் உடன் சகஜம் ஆக பேசி கொண்டு இருந்தார் எம்ஜிஆர் அவர்கள்..
இந்த நாட்டில் யார் அவர் இந்த மக்கள் கடலில் அவரை எப்படி இவர் கண்டு கொண்டார் என்று வியந்து அருகில் போய் நாங்க பார்க்க.....
என்னை பெயர் சொல்லி மணியன் சார் வாங்க இவர் யாரு தெரியவில்லையா...
நம்ம ஊரில் பிரபல தயாரிப்பாளர் பி.எஸ்.ரங்கா அவர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஹரிதான் இவர் என்று சொல்ல..
எம்ஜிஆர் அவர்கள் உடன் வந்த ராமமூர்த்தி அவர்கள் உடனே அடையாளம் கண்டு கொண்டு தொழில் ரீதியாக இணைய....
எம்ஜிஆர் அவர்கள் வந்த நோக்கம் புரிந்து கொண்டு அவரும் அதாவது ஹரியும் நானும் தயார் இணைந்து அருமையான காட்சிகளை கொண்டு செல்வோம் தமிழ் மண்ணுக்கு என்று சொல்ல.....
அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி...ஆனாலும் இந்த கூட்டத்தில் அவரை கண்டு பிடித்த கழுகு பார்வையை எண்ணி எண்ணி வியந்து கொள்வேன் நான்...அதுதான் அவர்.
அனைத்து இடங்களையும் தன் மன கண்ணில் உள்வாங்கி கொண்டு அடுத்த சில நாட்களில் அங்கே காட்சிகள் எடுக்க தயார் நிலையில் அனைவரும் புறப்பட்டு செல்ல.
ஒசாகா வரை விமானத்தில் செல்லும் போது ஜிப்பா வேட்டி அணிந்து என் அருகில் அமர்ந்து இருந்த பின் நான் சற்றே கண் அசர இறங்கும் இடம் வரும் போது சும்மா கோட்..சூட் உடையில் என் அருகில் ஒருவர் அமர்ந்து இருக்க...
யார் என்று பார்க்க அவரே தான்... என்ன இப்படி பயணத்தின் போதே உங்களால் எப்படி உடை மாற்றி கொள்ள முடிந்தது என்று நான் கேட்க.
அதுதான் நாடக அனுபவம்....கிடைக்கும் நேரத்தில் இடத்தில் சட்டுன்னு உடைகளை மாற்றி கொள்வது எங்கள் நாடக நடிகர்களின் வழக்கம் என்று சோலிகளை குலுக்கி கீழே போட்டது போல கல கல என்று சிரித்தார் அந்த விந்தை மனிதர்....
படத்தில் கடைசியாக வரும் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பாடலை தான் எண்ணிய படி எடுத்து முடித்தார்....
ஓர் இரு நாள் கழித்து எனக்கு தகவல் வந்தது சென்னையில் இருந்து.
படத்தின் முதல் பாடல் காட்சியை எடுத்து விட்டார் எம்ஜிஆர் என்ற தகவல் தெரிந்து..
அந்த ஒரே நாளில் விநியோக உரிமை பெற்று இருந்த நண்பர்கள் செங்கல்பட்டு...வட ஆற்காடு...தென் ஆற்காடு மற்றும் சில இடங்களில் பட வெளியீட்டு உரிமையை நினைத்ததை விட அந்த நேரத்தில் 4 லட்ச ரூபாய் அதிகம் ஆக கேட்க...
எவ்வளவு சொன்னாலும் சரி வாங்கி கொள்கிறோம் என்று முடிவாக..மற்ற தயாரிப்பாளர்கள் மனதில் படத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரிக்க....
அப்போதே சிறு சிறு உரசல்கள் ஆரம்பித்த நேரத்தில் எதிரிகள் என்ன ஆரம்பமே இப்படி இருக்கு என்று மனதுக்குள் புகைச்சல் அடைய.....
எல்லாம் நல்லா போகி கொண்டு இருந்த அந்த நாட்கள் கடந்து ஒரு நாள் நாகேஷ் அவர்கள் திடீர் என்று...என்று...
மொத்த பட குழுவும் அதிர்ந்து போக....
தொடரும்..அடுத்த பதிவில்....
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்.
நன்றி...நன்றி....
-
# பாவம் சி.கணேசன் ரசிகர்கள்,
ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்து கொண்டு அவ்வப்போது சில பதிவுகளை போட்டு அவர்களே கையும் தட்டிக் கொண்டு இருந்தார்கள்,
கூடவே எங்களின் கோயில் "அன்னை இல்லம் " என்றெல்லாம் சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் இப்படி ஒரு இடியை தலையிலே இந்த மனுஷன் இறக்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லையே எங்கள் அய்யனே கணேசா?????,
தேசியத்தையும், தெய்வீகத்தையும் கொண்டு வர போராடும் தற்போதைய பிரதமரே என் தலைவர் என்று முழங்கிக் கொண்டு அண்ணன் ராம்குமாரும், சூனியர் சிவாசி என்ற அடைமொழியோடு களம் இறங்கி முதல் ரவுண்டிலேயே காணாமல் போன துஷ்யந்த் சாரும் இப்படி சட்டியை கமத்துவார்கள் என்று கணேசன் குஞ்சுகள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை,
உடனே நம்ம அல்லக்கை சந்திரசேகர பூபதி கதறி அழுது அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ( இனி காங்கிரஸ்
கலைப்பிரிவு சார்பில் கணேசன் பிறந்தநாள் விழா? வுக்கும் பெப்பேதானா?)
நம்ம போண்டா மணிக்கு ஒருவர் நீண்ட அறிவுரையெல்லாம் வழங்கி பொங்கியிருக்கிறார் (அதாவது போண்டா அவர்களே இனி மேலாவது இந்த சுயநல வாதியின் அப்பனுக்கு வரிந்து கட்டிக்கொண்டு பதிவு போடுவதை விட்டுவிட்டு உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று ஒரு குஞ்சு சொல்ல போண்டாவும் சரிங்க என்று கண்ணீர் கடலில் நீந்தி பதிவு போட்டிருக்கிறது,
What a pity?)
போண்டா மணியும் உடனே தேர்தல் அலசல்கள் பண்ண ஆரம்பிச்சுருவாரு,
80 இல் பாராளுமன்ற தேர்தலில் ஏன் எம்ஜிஆர் வெற்றி பெற முடியவில்லை என்று ஒரு பதிவு போட்டு அவங்களுக்குள்ளே சொறிஞ்சு விட்டுக்குறது (இதெல்லாம் ஒரு பொழப்பு)
தலைவர் 80 பாராளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்களை பெற்றாலும் 80 லட்சம் வாக்குகளை அள்ளினார்,
மிருக பலத்துடன் இருந்த காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்து என்ன பெரிய புடுங்கி சாதனையை ஏற்படுத்தினார் என்று கொஞ்சம் சொல்லுங்களேன் போண்டா மணி அவர்களே, என்ன ஒரு 25 லட்சம் வாக்குகள் கூட வாங்கியிருப்பார்கள்,
ஆனால் சிவாஜி ஆரம்பித்த தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்து கணேசனார் மட்டும் மீசைய முறுக்கியதால் நம்ம ஆளு என்று மக்கள் கொஞ்சம் கருணை காட்டியதால் கோவணமாவது மிஞ்சியது,
திமுக வேட்பாளரிடம் 10643 ஓட்டு வித்தியாசத்தில் தோற்று கதறிக்கொண்டே கட்சியை கலைத்ததை போண்டா அப்படியே பூசி மெழுகுவார்,
ஆனால் தமிழ்நாடு முழுக்க கடும் போட்டியை 1980 பாராளுமன்ற தேர்தலில் தலைவர் கொடுத்ததை பேசாமல் விட்டு விடுவார்,
என்னதான் உங்கள் பிரச்சினை? கடைசியில் ராம்குமார் எல்லாருக்கும் சேர்த்து வச்சாரே ஆப்பு,
அதாங்க ஆப்பு, ஆப்பு,
இப்படித்தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் தூதுவிட்டு வி. பி சிங் கணேசனை ஜனதாதள தமிழக தலைவராக நியமித்து தனக்குத் தானே மீள முடியாத படுகுழியை வெட்டிக் கொண்டார்,
காமராஜரும் கடைசி வரையில் நம்பி கணேசனுக்கு வாழ்த்து கூறி விடை பெற்றுக்கொண்டார்,
80இல் கணேசன் " என் பிறந்தவீடும் புகுந்த வீடும் ஒன்றாகி விட்டது,
நாடாள கலைஞர் இருக்கிறார், எம்ஜிஆர் நடிக்கப் போகட்டும் என்று கூறி இரண்டு கட்சிகளுக்குமே வாய்க்கரிசி போட்டுவிட்டுத்தான் கணேசனார் ஓய்ந்தார்
இதையெல்லாம் போண்டா எழுதாது,
அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது ( ஏம்பா உனக்கே போரடிக்கலையா?)
கணேசன் திரை சாதனைகளை மூச்சு வாங்க விளக்கி கடைசியில் " வியட்நா ம் வீடு " படத்தை வாங்கி டிசிட்டலில்? வெளியிட்டு சாரு இப்போ எங்கே இருக்காரோ தெரியவில்லை,
இப்படி முன்பு பட்டை மீசை வைத்துக்கொண்டு திரிந்த ஒருவர் " பாசமலர் " படத்தை வெளியிட்டு அந்த மனுஷனும் படத்தில் வரும் சாவித்திரியை விட அதிகம் கண்ணீர் சிந்தியதாக கேள்வி?
இவனுங்க லட்சணத்தில் " அன்பே வா" டிஜிட்டல் படத்தைப் பற்றி விமர்சனம் வேற,
அன்பே வா தமிழகம் முழுக்க 150 திரை அரங்குகளுக்கு மேல் வெளியிட்டு அதுவும் திருப்பூர் போன்ற ஒரு சில இடங்களில் 25 நாளையும் வெற்றிகரமாக கடந்து ஒரே வாரத்தில் போட்ட காசை விட பலமடங்கு அள்ளி விட்டார் கந்தசாமி,
படம் டிஜிட்டல் செய்தது சரியில்லை என்று தலைவர் ரசிகர்கள் போராட்டம் நடத்தியதால் திரும்பவும் Redigital செய்து கொரோனா முடிந்ததும் படத்தை வெளியிட உள்ளார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் போண்டா மணி மற்றும் சில அல்லக்கைங்க,
Youtube இல் கூட எங்கு பார்த்தாலும் தலைவர் பற்றிய காணொளிகள் அப்படியே நிறைந்து கிடக்கிறது ( தலைவரை விமர்சிப்பதாக நினைப்பவன் கூட தலைவர் போட்டோ போட்டுத்தான் காசு பார்க்கிறான் )
தயாரிப்பாளர் கலைஞானம் சொல்கிறார் " மிருதங்க சக்கரவர்த்தி " படத்துக்கு கே. எஸ் கோபாலகிருஷ்ணன் 5 லட்சம் சம்பளம் கேட்டார் என்று சொல்லிவிட்டு ( சிவாஜியை விட இரண்டு மடங்கு சம்பளம் கூட கேட்டிருக்கிறார் )
அவர் சொல்லும் வார்த்தை இது " அப்போ எம்ஜிஆர் படம் டைரக்ட் செய்யும் டைரக்டரா அது வேற லெவல் சம்பளம் கொடுக்கணும் "
எங்க ஊரு சுசீந்திரம் சுப்பையா பிள்ளை கதையை எடுத்து அதில் சிவாஜி காட்டிய அங்க சேட்டைகளை பார்த்தால் உண்மையான தவில் வித்வான்கள் தவில் வாசிப்பதையே மறந்து விடுவார்கள்,
அதில் பட்ட லேசான காயத்துடன் தப்பிக்காமல் குறைந்த சம்பளம்தானே என்று மீண்டும் அய்யனை வைத்து " ராஜரிஷி " எடுத்து போர்வையை மூடி படுத்த கலைஞா னத்தை மீண்டும் வாழ்வளித்து நிமிர வைத்தது தலைவரின் கலையு லக வாரிசு பாக்கியராஜ் அவர்கள்,
அவரே காணொளி வெளியிட்டுள்ளார்,
இந்த சமையல் கட்டில் தூங்கும் பூனைகள் பார்க்கட்டும்,
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சித்ரா லட்சுமணன் அவர்களும் தலைவர் வாழ்க்கை வரலாறை சொல்லி views அள்ள ஆரம்பித்து விட்டார்,
கூடவே தலைவரின் திரை சாதனைகளை விலாவாரியாக சிலா கித்து சொல்கிறார் ( இவ்வளவுக்கும் கொஞ்ச காலம் சிவாஜி ரசிகர் மன்ற பத்திரிக்கை நடத்தியவர் சித்ரா )
இந்த பக்கத்தை பார்த்தால் யாருன்னு தெரியல " சிவாஜி முரசு " நேயர்களே அப்படீன்னு நல்ல காமெடியா தொடங்குவாரு ஒரு ஆள், அதை கேட்டால் யாருக்கும் சிரிப்பு வரும், அந்த வகையில் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி,
சில வருடங்களுக்கு முன் தினமலரில் " செலூலாய்டு சோழன் " தொடர் எழுதிய தற்சமயம் மறைந்து போன திரு. சுதாங்கன் அவர்கள் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார் " எம்ஜிஆர் படம் தோல்வி என்று சொன்னால் அந்த படத்தின் வசூல் என்பது மற்ற நடிகர்களின் மிகப்பெரிய வெற்றிப்படம் என்னும் படங்களின் வசூலுக்கு சமம் என்று விநியோகஸ்தர்கள் சொல்வார்கள் "
இதை சொல்லிவிட்டு சுதாங்கன் சொல்கிறார் வெற்றிப்படம் என்று சொல்லப்பட்ட " மன்னவன் வந்தானடி " படமும் "அவன்தான் மனிதன் படமும் உண்மையில் தோல்விப் படங்கள் "
இதைப் படித்து விட்டு "மய்யம் " இணைய தளத்தில் அவருக்கு வண்டை வண்டையாய் கணேசன் குஞ்சுகள் அர்ச்சனை செய்தார்கள்,
இப்போது போண்டா ஒரு பதிவு போட்டிருக்கிறார்
"எம்ஜிஆர் படங்கள் B&C யில் எப்போதும் வசூலை அள்ளுவதாக சினிமா ஆவணங்கள் எல்லாவற்றிலும் சரி, இப்போது வெளியிடுகின்ற புத்தகங்களிலும் சரி அடித்து சொல்கிறார்கள் என்று வேதனைப் பட்டிருக்கிறார்,
என்ன செய்ய உண்மையை உன்னைப் போன்ற ஒரு நாலு அவதாரங்கள் சிவாஜி அப்படி சிவாஜி இப்படி என்று எழுதினால் என்ன ஆகப்போகுது ( உங்களையெல்லாம் நினைத்து பரிதாபம்தான் ஏற்படுகிறது )
கூடிய சீக்கிரம் சிவாஜி ரசிகனாக இருந்த, உங்களுக்கெல்லாம் நிறைய தகவல்கள் தந்த ஒருவர் " The World Box Office Emperor Makkal Thilagam M. G. R. " என்னும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளார்.
தலைவரின் பக்தன்...
ஜே. ஜேம்ஸ்வாட்!.........(J.JamesWatt)