nerd, idhuvum dhanush tutea?
Printable View
nerd, idhuvum dhanush tutea?
Yeah yeah. Who is the yekka in your dp?
Nice to hear... Dr. Thanikachalam had kept his words.
Good news! Hope he gets back to normal now!
சென்னை,மே 22: நடிகர் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
சுவாசப் பாதை நோய்த்தொற்று, நிமோனியா காய்ச்சல் உள்ளிட்டவை காரணமாக நடிகர் ரஜினி காந்த் கடந்த 13-ம் தேதி சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஹீமோ டயாலிஸிஸ் (ரத்த சுத்திகரிப்பு) உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன.
பார்வையாளர்களைத் தவிர்க்கவும், சுவாசத்தை மேம்படுத்தவும் கடந்த 18-ம் தேதி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இட்லி, வடை உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிட்டு வருகிறார். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் நான்கு தினங்கள் கழித்து தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பார்வையாளர்கள் எவருக்கும் அனுமதி கிடையாது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவரது உடல் நிலையில் முழுமையான முன்னேற்றம் ஏற்படும் வரை மருத்துவமனையில் இருப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
நடிகர் ரஜினி காந்த் நலம் பெற வேண்டி ஆவடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
Even though he is back from the treatment, his style is still visible in that pic. Koodave porandhadhu!!
Praying God for Rajini to Get Well Soon Completely...
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று வரவேண்டி இயக்குநர் பாரதிராஜா தலைமையில் 500 இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்களும் இன்று சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.
கமலா திரையரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, எழில், பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், சேரன், எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார், ஈ.ராமதாஸ், சீனு ராமசாமி, வெற்றி மாறன், ஏ. ஜெகந்நாதன், டி.கே.சண்முக சுந்தரம், சசிமோகன் உள்பட 500 இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்களும், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
தமிழ்த் தாய் வாழ்த்து முடிந்ததும், இயக்குநர்கள், சங்க பொது செயலாளர் ஆர்.கே.செல்வமணி, எழுந்து பேசினார். "நமது கலைகுடும்பத்தின் மூத்த சகோதரர் அன்பிற்கினியவன், மனிதருள் பெருமைக்குரியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் உடல் நலம் பெற்று உடன் வீடு திரும்ப நாம் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்," என்று அறிவித்தார்.
உடன் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.
தமிழ் திரையுலகில் குறிப்பாக இயக்குநர்கள் சார்பில் இதுபோன்ற பிரார்த்தனை நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறை.