2014 - தேர்தலில் உண்மையான கதாநாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
http://i62.tinypic.com/ncfa6b.jpg
எல்லா கட்சி தலைவர்களும் இந்த நாடாளுமன்ற பொது தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் திலகத்தின் பெயரையும் பாடலையும் சொல்லி ஒட்டு கேட்டு வருவதின் மூலம் அரசியல் வரலாற்றில் மக்கள் திலகத்தின் அழியாப்புகழும்
செல்வாக்கும் நிலைத்திருப்பது உணர முடிகிறது .அரசியல் உலகில் மக்கள் திலகத்தின் புகழ் ஒரு ஓட்டு வங்கியாக
இருப்பது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெருமையான தாகும் .
பிரச்சார மேடை மற்றும் மைதானத்தில் எங்கு பார்த்தாலும் ஜெயாவின் கட் அவுட் .துரும்புக்கு கூட எம்ஜிஆர் படமோ , கட் அவுட்டோ வைக்க வில்லை .இதை ஜெயாவும் கண்டு கொள்ள வில்லை .மாவட்ட செயலாளர்களும் மந்திரிகளும்
எம்ஜிஆரை முற்றிலுமாக மறைத்து விட்டு தலை இல்லாத உடலாக வலம் வருகிறார்கள் .
மக்கள் திலகத்தின் பாடலை மட்டும் [அச்சம் என்பது ......] ஜெயா பாடி மக்களை பார்த்தது ஒட்டு கேட்பது சிரிப்பாக உள்ளது .
மற்ற கட்சிகாரர்கள் தங்கள் பிரச்சாரத்தில் எம்ஜிஆரின் பெயர சொல்லி , படத்தை காட்டி , அவருடைய அரசியல்
பெருமைகள் பற்றி நாகரீகமாக தைரியமாக பேசி ஓட்டு கேட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது .
1957ல் தேர்தலில் பங்களித்த மக்கள் திலகத்தின் அரசியல் பணி 57 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் எம்ஜிஆரின்
பெயர் இடம் பெற்றிருப்பது வரலாற்று சாதனையே .
அதே போல அவருடைய திரைப்படங்களும் 64 ஆண்டுகளாக திரை உலகில் ஓடிகொண்டிருப்பது இமாலய சாதனை .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன் - சினிமாவில் .
மக்கள் திலகம் வாழும் மனித தெய்வம் - கோடிக்கணக்கான உள்ளங்களில் .