ennaadhu 500 iyakkunargalaa... ivlo peraa irukkaanga?
but, a moving gesture...ellaa velayayayum uttupottu idhukku vandhu pray panradhu...
vaazhga tamil film industry.
Printable View
ennaadhu 500 iyakkunargalaa... ivlo peraa irukkaanga?
but, a moving gesture...ellaa velayayayum uttupottu idhukku vandhu pray panradhu...
vaazhga tamil film industry.
hmmm kootu pirarthanai huh ! Rajni will be fine no need to worry.
யாம் இருக்க பயமேன் !
Mass Prayer For Superstar @ Ragavendra Temple
Superstar Rajini’s ill health has disturbed his millions of fans throughout. Larencce Ragavendra organized a mass prayer at the Ragavendra temple for the star’s speedy recovery. Nadigar Sangam president Sarath Kumar, Prabhu and Bharath graced the occasion.
Photos @ http://www.indiaglitz.com/channels/t...nts/27241.html
ரசிகர்களுக்காக வெளிவருகிறது ‘ரஜினி வீடியோ’
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தான் நலமாக உள்ளதை ரசிகர்களுக்குத் தெரிவிக்கவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோன்றி பேசும் வீடியோ, விரைவில் வெளிவர உள்ளது.
மூச்சுக்குழாய் தொற்று மற்றும் குடல் நோய் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரஜினி சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் முழுமையாக பரிசோதனை செய்து, நுரையீரலில் இருந்த நீர்க்கோர்ப்பை அகற்றினார்கள். சிறுநீரகத்திலும் பாதிப்பு இருந்ததால், அவருக்கு `டயாலிசிஸ்’ செய்யப்பட்டது.
இதற்காக, கடந்த 18-ந் தேதி நள்ளிரவில் தனி வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் ரஜினி பற்றி மோசமான வதந்திகளைப் பரப்பினர் விஷமிகள். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து ரஜினி ரசிகர்கள் போரூர் மருத்துவமனை எதிரில் திரண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள், கோவில்களில் விசேஷ பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பல ரசிகர்கள் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்தார்கள். அக்கினி குண்டம் வளர்த்து தீ மிதித்தார்கள்.
கூட்டுப் பிரார்த்தனை
நேற்று சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலில், ரஜினிகாந்த் பூரண குணம் அடைய வேண்டி, அவருடைய ரசிகர்கள் விசேஷ பிரார்த்தனை நடத்தி, 500 பேர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி திரைப்பட இயக்குனர்கள் 500 பேர்களும், உதவி இயக்குனர்கள் 1000 பேரும் சென்னையில் நேற்று கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். இந்த கூட்டு பிரார்த்தனைக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்கினார். இயக்குநர்கள் பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டும் வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அமெரிக்க டாக்டர்கள் வருகை
இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவில் இருந்து 4 டாக்டர்கள் அடங்கிய குழு, நேற்று சென்னை வந்தார்கள். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் நேராக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார்கள். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய குறிப்புகளை பார்த்தார்கள்.
அமெரிக்க டாக்டர்கள் சென்னையில் 3 நாட்கள் தங்கியிருந்து, ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அதில் ஏற்படும் முன்னேற்றத்தை பார்த்த பிறகே அவர்கள் அமெரிக்கா திரும்ப இருக்கிறார்கள்.
ரஜினி வீடியோ
இதற்கிடையில், ரஜினிகாந்த் பற்றி அடிக்கடி வதந்திகள் பரவுவதால், அதை தவிர்க்கவும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் ரஜினியே தோன்றிப் பேசும் வீடியோ படத்தை வெளியிட அவர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இன்னும் மூன்று நாட்களுக்குள் அந்த வீடியோ வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
http://www.envazhi.com/?p=25624
Nalla mudivu...!
appove sonen...
சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி
சென்னை: சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக நடிகர் ரஜினி அடுத்த சில நாட்களில் லண்டன் கொண்டு செல்லப்படவுள்ளார்.
முன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க டாக்டர் குழுவை சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந் நிலையில் அவரை லண்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது.ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர்.
இதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல்நலக் குறைவுடன் உள்ளார்.
மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே, ரஜினிகாந்துக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. இவற்றுக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன.
சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் அவர் லண்டன் பயணமாவார் என ரஜினி குடும்பத்துக்கு வேண்டியவர்கள் தெரிவித்தனர். பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன
Nalla comedy panranga !
சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்
Adapaavigala!!!
Chronic hemodialysis is usually done three times per week, for about 3–4 hours for each treatment, during which the patient's blood is drawn out through a tube at a rate of 3-400 cc/min.
http://en.wikipedia.org/wiki/Hemodialysis
chance illa ponga... medical terms padiye weekly 3 times than pannuvaanga... inga 5 times'ah? ennada enda news'um kedaikalenu kuthumadhipa 5 times dialysis,london'u story create pannitaanga... Ivangaayellaam???
Thalaivar's latest pic from SRMC...
Romba elachutaar!!!