-
புர*ட்சித்த*லைவ*ரின் ஒரிஜின*ல் ட*ய*லாக்குக*ளை காப்பி அடித்த ந*டிக*ர்க*ளின் ப*ட்டிய*லும், ப*ட*மும்..
1. நான் எப்ப* வ*ருவேன் எப்ப*டி வ*ருவேன்னு யாருக்கும் தெரியாது..
ப*ட*ம்: தாய்ச்சொல்லை த*ட்டாதே..எம்ஜிஆர் ச*ரோஜாதேவியிட*ம் கூறுவ*து..
காப்பி: ர*ஜினி..முத்து ப*ட*த்தில்
2. என்வ*ழியே த*னிவ*ழி..
ப*ட*ம்: நாளை ந*ம*தே ப*ட*த்தில் எம்ஜிஆர், ந*ம்பியாரிட*ம் கூறுவ*து
காப்பி: ர*ஜினி... படையப்பா
ப*ட*த்தில்
3. அங்கே புத்த*ர் சிலை இருந்த*து..புனித*மான இந்த* புத்த*ர் ஆல*ய*த்தில் உன் ர*த்த* துளிக*ள் ப*ட*க்கூடாது என்ப*தால்தான் நான் அடி வாங்கினேன்..இப்போது என் ப*ல*த்தை காட்ட*ட்டுமா?
ப*ட*ம்: உலகம் சுற்றும் வாலிப*ன், ந*ம்பியாரிட*ம் எம்ஜிஆர் கூறுவ*து..
காப்பி: விஜ*ய*காந்த் மாந*க*ர*க்க்காவ*லில் ச*ண்டைக்காட்சி ஒன்றில் கூறுவார்...Pgdi
-
[அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில...
1. அண்ணா எம்ஜிஆர் இருவரும் பிறப்பில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள்.
2. நோயின் காரணமாக இருவரும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர்கள்.
3. அண்ணா இறக்கும் முன் என் எஸ் கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். எம்ஜிஆர் இறக்கும் முன் ஜவஹர்லால் நேரு சிலையைதிறந்து வைத்தார்.
4. இருவரும் முதலமை*ச்ச*ராக இருக்கும் போதே மறைந்தவர்கள்.
5. இருவரது உடலையும் அருகருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
6. அண்ணா எம்ஜிஆரை எனது இதயக்கனி என்றார் .எம்ஜிஆர் அண்ணாவை எனது இதயதெய்வம் என்றார்.
7. இருவரும் மக்களை ஈர்ப்பதில் தனித்துவம் பெற்றனர். அதில் வெற்றியும் பெற்றனர்.
8. இருவரும் நள்ளிரவிலே மறைந்தனர்.
9. அண்ணா என்பது மூன்று எழுத்து தமிழில் எம்ஜிஆர் என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில். அண்ணாவின் முமு பெயர் அண்ணாதுரை எம்ஜிஆர் முமு பெயர் எம் ஜி ராமச்சந்திரன்.
10. திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர். ]
-
சும்மா வந்ததில்லை நமது இரட்டை இலை !
புரட்சிதலைவர் தனது துணைவியாரின் துணையுடன் தன்னை நம்பி வரும் எம்.ஜி.ஆர் ரசிக தொண்டர்கள்,அப்போதைய கழக இளைஞர்கள் ,உடன் வந்த அரசியல் விசுவாசிகள் அனைவரின் இரவு பகல் பாராத உழைப்பை மையப்படுத்தி 1972ல் அ.தி.மு.க ஆரம்பித்தார்.அதற்கு முன்னர் வரை 1953 முதல் 1972 வரை உதயசூரியனை உலகுக்கு தெரிவித்து மக்கள் மனதில் ஆழமாக பதியச்செய்தவர் எம்.ஜி.ஆர் தான் முதன்மை.அந்த சின்னத்தை மறைத்து 1973ல் இரட்டை இலையை மக்கள் மனதில் பதிய செய்ய மிகவும் கஷ்டப்பட்டவர் நமது வேந்தன் எம்.ஜி.ஆர்.
1973ல் திண்டுக்கல் தேர்தலில் இரட்டை இலை முதன்முதலாக பிரகனப் படுத்தப்படுகிறது.அப்போது தலைவர் ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
கூட்டத்தில் மக்களைப்பார்த்து "என்னை தெரியுமா " என்று கேட்கிறார்.மக்கள் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் என்று ஆர்ப்பரித்தனர்.பின்னர் நமது கட்சியின் சின்னம் என்ன சொல்லுங்கள் என்று கேட்கிறார்.உடன் மக்கள் உதயசூரியன்.உதய சூரியன் என்று சொன்னார்கள்.இதைக் கேட்ட தலைவர் மனம் இறுகி சுக்கலாகி விட்டார்.பின்னர் சுதாரித்து தான் நீக்கப்பட்டு புதுகட்சி ஆரம்பித்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக நெடிய விளக்கத்தை கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.உதயசூரியனை விளம்பரப்படுத்தியதன் விளைவு அதை மறக்கவும்,புது சின்னம் இரட்டை இலையை மக்கள் மனதில் பதிய எம்.ஜி.ஆர் எடுத்த முயற்சி சொல்லி மாளாது. ஆம் ! சும்மா வந்ததில்லை இரட்டை இலை !!.
பின்னர் மிகுந்த மன வருத்தத்தில் அறைக்கு திரும்பி உடன் இருந்த ஜேப்பியார்,தாழம்பூ பட டைரக்டர் ராமதாஸ் அவர்களிடம் இரட்டை இலை திண்டுக்கல் முதல் தேர்தலில் வெல்லுமா ?ஏனெனில் மக்களை சூரியனில் இருந்து இலைக்கு கொண்டுவர நிறைய உழைக்கவேண்டியுள்ளது என்று வருந்தி சொல்லியுள்ளார்.
ஆனால் தலைவரின் ஒப்பற்ற உழைப்பு 1973ல் முதல் தேர்தலில் இரட்டை இலை வென்றது.மக்கள் திலகம் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார்.அவர் மனது எவ்வளவு ஆனந்தப்பட்டிருக்கும்.அவர் யாருக்கு நன்றி சொன்னார்.?
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற இளைஞர்கள்,கழக தோழர்கள் தங்களது செலவில் பணிபுரிந்தவர்களுக்கு. போஸ்டர்,தேர்தல் வேலைகள் அனைத்தும் தங்கள் செலவில் செய்தவர்களுக்கு.தலைவரிடம் பணம் இல்லை.சாண்டோ சின்னப்பா தேவர் பணம் கொடுத்தார். பின்னர் கோவை தேர்தல் வெற்றி.பின்னர் 1977ல் வெற்றி .இப்படி இரட்டை இலையை மக்கள் மனதில் பதிய வைத்தவர் நமது தலைவர்.அந்த சின்னம் புனிதமானது.
ஆக அவர் கொடுத்த இரட்டை இலை இன்று அவர் அரசு என்று சொல்ல ஆளுபவர்களுக்கு மனதில்லை.வேறு ஒருவர் அரசு அமைய இரட்டை இலைக்கு ஆதரவு தாருங்கள் என்கின்றனர்.
நாமறிவோம் எது நன்று என்று.மக்களும் இரட்டை இலை தோன்றலை அறிவார்கள்..........nssm.
-
அன்று எம்ஜிஆர் திமுகவை படத்தில் எப்படி வளர்த்திருக்கிறார் என்பது நாடறிந்த ஒன்றுதான்.
1.விக்கரமாதித்தன் படத்தில் தலைவர் நெற்றியில் உதயசூரியன் பொட்டு வைத்திருப்பார்
.2.புதியபூமி படத்தில் எம்ஜிஆர் பெயர் கதிரவன்
.3.நாடோடி மன்னன் அடிமைப்பெண் படத்தில் எடுத்தவுடனே திமுக கொடியைக் காட்டுவார்.4.நல்லவன்வாழ்வான் படத்தில் பாடல்களில் உதயசூரியன் எதிரில் நிற்கையில் உள்ளத்தாமரை மலராதே!எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இருண்டபொழுதும் புலராதே!
5.விவசாயி படத்தில் இருந்திடலாம் நாட்டில் பலவண்ணக்கொடி !எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி..பாடலில் கருப்பு சிவப்பு கொடியைப் பறக்கவிடுதல்
.6.கலங்கரை விளக்கம் படத்தில் பல்லவன் பல்லவி பாடலில் எம்ஜிஆர் சட்டையில் உதயசூரியன் போட்டிருக்கும். 7.ஒருதாய்மக்கள் படத்தில் கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற மேனியைப் பாரு !நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு கூறடி கூறு என பாடலின் நடுவே வரும். 8.அடிமைப்பெண் படத்தில் நீ கடவுளைப் பார்த்தது கிடையாது.அவன் கருப்பா சிவப்பா தெரியாது.இறைவன் ஒருவன் இருக்கின்றான் இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
என பாடலில் வரும்.
9.ரிக்சாக்காரன் படத்தில் பம்பை உடுக்கை பாடலில் எம்ஜிஆரும் ஜோதிலட்சுமியும் ஆடும் போது ஜோதிலட்சுமி கையில் கருப்பு சிவப்பு வளையல் அடுக்கி கையில் இரண்டிலும் கருப்பு சிவப்பு கர்சீப் கட்டியிருப்பார்கள். 10.நம்நாடு படத்தில் எம்ஜிஆர் கருப்புகலர் பேண்டும் சிவப்புநிற சட்டையும் படங்களில் தோன்றுவார்.பெரும்பான்மை படங்களில்.பர்ஸ் ஒன்று எடுப்பார் அதிலும் கருப்பு சிவப்புதான்.
11.சங்கே முழங்கு படத்தில் எம்ஜிஆர் முதன்முதலில் லட்சுமியை சந்திக்குமுன் தினத்தந்தி பேப்பர் படிக்கும் போது கொட்டை எழுத்தில் தி.மு.க. வெற்றி எனவரும்.
12.எங்கள் தங்கம் படத்தில் சிறு சேமிப்பு விழாவில் முரசொலி மாறன் தோன்றுவார்.பிறகு லாட்டரிசீட்டு விழுந்ததும் அண்ணா ,கருணாநிதி எல்லோரையும் காட்டுவார்கள். 13.பணக்காரகுடும்பம் எம்ஜிஆரும் மணிமாலாவும் பாடும் பாடல் ஒன்று எங்கள் ஜாதியே என வரும்.அதில் எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே!என வரும்
14.அன்பே வா படத்தில் உதயசூரியனின் பார்வையிலே என பாடல் வரும் ஆடியோவில்.. சென்சார் பிரச்சனையில் சிக்கி புதியசூரியன் என மாறியது. இப்படி நிறைய இருக்கு.அ.தி.மு.க. ஆரம்பிக்கும் போதும் அண்ணா,இரட்டைஇலை,அ.திமு.க கொடி இதனைத் தவறாமல் காட்டுவார்....gdr
-
மக்கள் திலகம் எம் ஜி ஆர் ரசிகர் மன்றம்
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் என்பது, தமது படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு நடிகருக்காகத் தொடங்கப்பட்ட மன்றம் அல்ல. இந்த மன்றங்களை, நாம் சினிமா சார்ந்த ஒரு விஷயமாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. `கடவுள் இல்லை’ என்ற பாரம்பர்யத்தில் தோன்றிய தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள், கடவுள் பயம் இல்லாத கெட்டவர்கள், ஏழை ஏதிலி, படிக்காத பாமரர், ரெளடி, எம்.ஜி.ஆரை ரசிக்கும் பெண்கள் மோசமானவர்கள்... என்பதுபோன்ற எண்ணங்களும் பரவலாக இருந்தன. இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள், அவர்மீது தீவிர அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆருக்கு முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர், தன் மனைவியின் தாலியை விற்று தொடங்கினார். அதன் பிறகு ரசிகர் மன்றங்கள் புற்றீசல்களாகத் தோன்றின. கோயில் இல்லாத ஊர் இருக்கலாம், குளம் இல்லாத ஊர்கூட இருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர் மன்றம் இல்லாத இடமே இல்லை எனும் அளவுக்கு ரசிகர் மன்றங்கள் துளிர்த்தன.
Posted by : MG.Nagarajan
Published by : யாழ் இணையம்
in வண்ணத் திரை
-
#எம்ஜிஆர்_உரிமைக்குரல்!
M.G.R. படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை பெரும்பாலும் அவரிடமே தயாரிப்பாளர்கள் விட்டுவிடுவது வழக்கம். எம்.ஜி.ஆர். குறிப்பிடும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமாக இடம் பெறுபவர் பண்பட்ட நடிகரான வி.எஸ்.ராகவன்.
எம்.ஜி.ஆரின் 100-வது படமான ‘ஒளி விளக்கு’ படத்தில்தான் முதன்முத லில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வி.எஸ்.ராகவனுக்குக் கிடைத் தது. அதன்பிறகு, ‘எங்கள் தங்கம்’, ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக்குரல்’ உட்பட எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் அவரோடு வி.எஸ்.ராகவன் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட, அவர் நடிக்கும் படங்களில் கூடுத லான சம்பளம் கிடைக்கும். அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா என்பதை எம்.ஜி.ஆர். உறுதிப்படுத்திக் கொள் வார்.
‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் நடிக்க வி.எஸ்.ராகவனுக்கு குறிப்பிட்ட தொகை சம்பளமாக நிர்ண யிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு தயா ரிப்பு தரப்பில் இருந்து வி.எஸ்.ராகவ னுக்கு கோரிக்கை விடப்பட்டது. அவருக்கோ தர்மசங்கடம். தனது நிலையை கவிஞர் வாலியிடம் கூறினார். உடனே, வாலி ஒரு யோசனை கூறினார்.
அந்த யோசனையை வி.எஸ்.ராகவன் செயல்படுத்தினார். வாலியின் யோச னைப்படி தயாரிப்பு தரப்பிடம் வி.எஸ்.ராகவன் ஏவிய அஸ்திரம் இதுதான். ‘‘என் சம்பளம் எம்.ஜி.ஆரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முடிவு செய்த தொகையைவிட குறை வாக நான் வாங்கிக் கொண்டால் அவர் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது?’’ என்றார். மறுபேச்சு இல்லாமல் ஏற்கெனவே பேசிய சம்பளமே அவருக்கு கிடைத்தது.
வி.எஸ்.ராகவனின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். தாயாரை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் வி.எஸ்.ராகவன் இருந்தபோதுதான் இயல், இசை, நாடக மன்றத்துக்கு கவுரவச் செயலாளராக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார்.
அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருநாள் திடீரென வி.எஸ்.ராகவன் வீட்டுக்கு வந்து அவரிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்து, ‘‘உங் கள் தாயாரின் மருத்துவ செலவுக்காக எம்.ஜி.ஆர். கொடுக்கச் சொன்னார்’’ என்றார். அதை ஏற்க மறுத்த வி.எஸ்.ராகவன், ‘‘இந்தப் பணத்துக்கு இப்போது அவசியம் இல்லை. என்னோட நன்றி யைத் தெரிவித்து பணத்தை திருப்பி அவர்கிட்ட கொடுத்துடுங்க’’ என்றார்.
‘நாம் கொடுக்கும் பணத்தை மறுக் கிறாரே? நம்மை வி.எஸ்.ராகவன் நெருக்கமாக நினைக்கவில்லையோ? ’ என்று எம்.ஜி.ஆருக்கு அவர் மீது வருத் தம். அரசின் இயல், இசை, நாடக மன்றத் தின் செயலாளர் என்ற முறையில் முதல் வர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது வி.எஸ்.ராகவன் தனது நிலையை விளக்கினார்.
‘‘உங்களுக்குத் தெரியாதது இல்லை. என் தாயாரின் மருத்துவ செலவுக்கு நான் கேட்காமலேயே பெரிய தொகையை கொடுத்து அனுப்பினீர் கள். என் தாயாருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. வீட்டுக்கு வந்துவிட்டார். இனி மருத்துவ செலவு கிடையாது. அப் படியிருக்கும்போது, தாயாரின் மருத் துவ செலவுக்காக என்று நீங்கள் அனுப் பிய பணத்தை நான் ஏற்றுக் கொள்வது சரியாக இருக்காது என்பதால்தான் திருப்பி அனுப்பினேன்’’ என்று வி.எஸ். ராகவன் கூறினார்.
அவரது விளக்கத்தை பொறுமை யாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., அவரை மன தார பாராட்டினார். உணர்ச்சிவசப்பட்ட ராகவன், ‘‘எனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் உங்களிடம்தான் வருவேன். வேறு யாரிடம் போவேன்?’’ என்றதும் எம்.ஜி.ஆர் அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.
ஆரம்ப காலத்தில் ஏச்சுக்களையும் பேச்சுக்களை யும் உரமாகக் கொண்டே வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சக நடிகர்கள் யாரையும் மற்ற வர்கள் கிண்டல் செய்வதோ, குறை கூறுவதோ பிடிக் காது. புதிய நடிகர் களை உற்சாகப் படுத்தி வாழ்த்து வார். வி.எஸ்.ராக வனும் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட ஒரு படப்பிடிப்பு.
காட்சிப்படி மாடிப்படி களில் இருந்து எம்.ஜி.ஆர். இறங்கி வரவேண்டும். அப் போது, வாசலில் வரும் தபால்காரர் ‘சார் போஸ்ட்’ என்று கூறி எம்.ஜி.ஆரிடம் தபாலைத் தர வேண்டும். தபால்காரர் வேடத்தில் நடித்தவர் புதுமுக நடிகர். ‘சார் போஸ்ட்’ என்ற இரண்டே வார்த்தைகள்தான் அவருக்கு வசனம். என்றாலும் பதற் றத்தில் இருந்தார். ‘‘தம்பி, எம்.ஜி.ஆரு டன் நடிக்கிறே. ஜாக்கிரதை’’ என்று இயக்குநர் ப.நீலகண்டன் வேறு எச்சரித் ததில் அவரது பதற்றம் அதிகரித்தது.
படப்பிடிப்பு தொடங்கியது. திட்டமிட்ட படி, எம்.ஜி.ஆர். புயலாக மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்தார். பதற்றத்தில் இருந்த தபால்காரராக நடித்த புதுமுக நடிகர், எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘‘சார் போஸ்ட்’’ என்று சொல்வதற்கு பதிலாக, ‘‘சார் பேஸ்ட்’’ என்று சொல்லிவிட்டார். செட்டில் சிரிப்பலை எழுந்தது. அதை அடக்கியபடி ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல். ‘‘நிறுத்துங்க. ஒரு நடிகர் தப்பு பண் ணிட்டா இப்படித்தான் சிரிக்கிறதா? நாம எல்லாம் தப்பே பண்ணலையா? யாரை யும் கிண்டல் பண்ணாதீங்க’’ என்று வெடித்தார். செட்டில் மயான அமைதி!
பின்னர், அந்த புதுமுக நடிகரை தனியே அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தோளில் கைபோட்டபடி, ‘‘கவ லைப்படாதீங்க. சரியா நடிங்க. உங்க ளால் முடியும்’’ என்று உற்சாகப்படுத்தி னார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அந்த நடிகர் சரியாக நடித்தார். ஷாட் ஓ.கே. ஆனது. உணர்ச்சிவசப்பட்டு காலில் விழுந்த நடிகரைத் தூக்கி வாழ்த்திய எம்.ஜி.ஆரின் பண்பைப் பார்த்து வி.எஸ். ராகவன் சிலிர்த்துப் போனார்.
எம்.ஜி.ஆரின் குரல் எப்போதுமே சமு தாயத்தில் ஏளனத்துக்கு உள்ளாகி கடை நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆதரவாகத்தான் ஒலிக்கும். அது உரிமைக்குரல்!.........Pngi
-
கவிஞர் கண்ணதானுக்கு உதவி ....
பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ...
ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார்.
யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது
அவருக்கு வேண்டிய ஒருவர்
நம்ம மாதிரி ஆள்களுக்கு
உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார்.
அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார்.
இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள்,
அய்யய்யோ வேண்டவே, வேண்டாம்
அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன்.
நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல,
இவர் சொல்கிறார்,
மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர்,
மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர்
அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை
எனவே எதையும் யோசிக்காமல்
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம்
என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன்
அவர்கள்
பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார்.
அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி,
உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்.
இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார்.
ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க
அவர் ரொம்பவும் தாழந்த குரலில்
எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன்
மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.
இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல்
சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார்.
அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து
இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல
அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து
பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து
இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார்
என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார்.
பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில்
பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு
உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று,
மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார்.
தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே ..
நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன்.
ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே
நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம்
நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்....bpg
-
வெற்றி முகம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் :
யாருடைய முகமானது இலட்சோப
லட்சம் இதயங்களைக் கவருகிறதோ,
யாருடைய பண்பானது மக்களது மனதில் வேரூன்றியிருக்கிறதோ
அத்தகைய முகத்துக்குரிய அத்தகைய பண்புக்குரிய "மக்கள்
திலகம் எம்.ஜி.ஆர் "அவர்களை வைத்துப் படம் எடுத்தால் எல்லா
வகையிலும் வெற்றியடையலாம், என்று தயாரிப்பாளர்கள் மலரை
வண்டு மொய்ப்பதுபோல் வந்து மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
- திரைத்தென்றல்-1974.
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........Sar.Swa
-
1972 செப் 15 ம் தேதி வெளியான தலைவரின் கடைசி கருப்பு வெள்ளை படம்தான் "அன்னமிட்டகை". முழுக்க முழுக்க கேரளாவில் உள்ளதேயிலை தோட்டத்தில் படமாக்கப்பட்ட வெற்றிப் படம்தான் "அன்னமிட்டகை". இதிலும் பாடல்கள் அத்தனையும் அருமை. படம் கலரில் வெளியாகியிருந்தால்
வெற்றியின் வீச்சு சற்று அதிகமாக இருந்திருக்கும்.
'ஒன்னொண்ணா ஒன்னொண்ணா சொல்லு சொல்லு'
'அழகுக்கு மறுபெயர் கண்ணா' 'மயங்கி விட்டேன் உன்னை கண்டு'
'பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா' 'அன்னமிட்டகை' போன்ற பாடல்கள் kv மகாதேவன் இசையில் மனதை ஈர்க்கும். பாரதியுடன் பாடும் 'மயங்கி விட்டேன்' பாடல் தலைவர் அழகில் மனம் மயங்கி விடும். 'அழகுக்கு மறுபெயர் கண்ணா' பாடல் ஜானகியின் குரலில் தேனாய் இனிக்கும்.
அத்தனையும் தேயிலை தோட்டத்தில் எம்ஜிஆரும் ஜெயாவும் புது புது ஸ்டெப்களுடன் ஆடிப்பாட அருமையாக எடுக்கப் பட்டிருக்கும். நல்ல எளிமையான கதை அழகாக பின்னப்பட்டிருக்கும். நாகேஷ்
வி கேஆர். காமெடியில் கடைசியாக வந்த படம் என்று நினைக்கிறேன். . சென்னையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகி. பிளாசாவில் 63 நாட்கள் வரை ஓடி வெற்றி பெற்றது. படம் வெளியாகும் போது திமுகவில் இருந்த தலைவர் அக் 17 ல் அதிமுக தொடங்கி அதிமுகவின் பொதுசெயலாளராக இருந்தார்.
ஆளும் தீயசக்தியின் அராஜக ஆட்சியினால் தியேட்டர்கள் மிரட்டப்பட்டு படத்தை சென்னையில் 63 நாட்களில் எடுத்து விட்டனர். திமுக காலிகள் "அன்னமிட்டகை" பேனர்களை கிழித்து அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டனர். பிரபாத் சரவணாவில் 49 நாட்களும் லிபர்டியில் 42 நாட்களும் ஓடியது. அக் 20 ல் வெளியான "இதயவீணை"யையும் தாண்டி ஓடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி ஜோஸப்பில் வெளியாகி 33 நாட்கள் ஓடியதிலிருந்து படம் நல்ல வெற்றிப்படம் என்று தெரிந்து கொள்ளலாம். ஜோஸப்பில் வெளியான கடைசி எம்ஜிஆர் படம் இதுதான்.
ஏனென்றால் இங்கு கைஸ்கள் வெற்றிப்படம் என்று சொல்லும் "ராஜா" 21 நாட்களும் "நீதி" 17 நாட்களும் "ஞானஒளி" 18 நாட்களும் "தியாகம்" 21 நாட்களும்தான் ஓடியது. மற்ற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்கள் வரை ஓடியது. அடுத்து வெளியான இதயவீணை 35 நாட்களிலே வெளியானதால் 100 நாட்களை எட்ட முடியவில்லை. 100 நாட்கள் ஓட தகுதியான படம்தான் "அன்னமிட்டகை". குறுகிய காலத்தில் "இதயவீணை" வெளியாகா விட்டால் நிச்சயம் 100 நாட்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்..........ksr.........
-
என் கொள்கைகளை பின்பற்றி வளர்ப்பதால் மட்டுமே என் பெயர், புகழ்
காப்பாற்றப்படும் - #எம்ஜிஆர்.
#உங்களை தெய்வமாக மதித்து வணங்கும் என்னைப் போன்றவர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை யாது?
MGR : என்னைத் தெய்வமாக்காதீர்கள் என்பதுதான் எனது முதல் வேண்டுகோள். நானும் சாதாரண மனிதன் தான். நான் கற்க வேண்டியது, நாட்டுக்கு ஆற்ற வேண்டிய தொண்டு நிறைய உள்ளன. என்னிடமும் குறைகள் இருக்கும். எனவே என்னை அந்த அளவிற்கு உயர்த்தாதீர்கள்.
#தங்களின் விடாமுயற்சிக்கு சவாலாக அமைந்த நிகழ்ச்சி எது?
MGR : கருணாநிதி அவர்கள் குற்றமற்ற என்னை கட்சியிலிருந்து வெளியேற்றியது.
#என் மறைவிற்குப் பிறகு என்னைப் பற்றிப் புரிந்து கொள்பவர்கள் என்று பேசி இருக்கிறீர்களே, இப்படிப்பட்ட வார்த்தைகளை கூறி மனதைப் பதற வைக்க வேண்டுமா?
MGR : தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும். வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும். பகலிருந்தால் இரவு இருக்கும். செயலிருந்தால்
விளைவிருக்கும். இளமையிருந்தால் முதுமையிருக்கும். பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும். எனவே இளைஞர்கள் ஒருவனுடைய கொள்கையிலும், அதை செயல்படுத்தும் முறையிலும் உண்மையான பற்று வைத்திருந்தார்களேயானால் அவைகளைத் தாங்களும்
செயல்படுத்திக் காப்பாற்றுவதற்கு, மேலும் வளர்ப்பதற்குத் தயாராக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நீங்கள் வேதனைபடுவதாகச் சொல்லுகின்ற வார்த்தைகளை வெளியிட்டேன். ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப்படும்.எனக்குப் பின் உங்களைப் போன்றவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால், அது அமரர் பேரறிஞர் அண்ணாவிற்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன்.
(வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆர். தந்த பதில்கள்)
Ithayakkani S Vijayan...VRH