//நண்பரே,
பொதுவாக, "தா" "ஜா" "லா" என முடியும் பெயர்கள் பெண்களுக்கானவை என்பது தமிழ் இலக்கணம்..//
idhu engalukku theriyaadhaakkum..
noval writer Sujathavai, avar photovaip paarkkumvarai penn endre ninaiththavargal 95 % readers. theriyumaa?.
Printable View
//நண்பரே,
பொதுவாக, "தா" "ஜா" "லா" என முடியும் பெயர்கள் பெண்களுக்கானவை என்பது தமிழ் இலக்கணம்..//
idhu engalukku theriyaadhaakkum..
noval writer Sujathavai, avar photovaip paarkkumvarai penn endre ninaiththavargal 95 % readers. theriyumaa?.
Mr Parthasarathy Sir,
Try to post in your own style on NT's songs.
http://youtu.be/GSupVVrB5t8
one of my sweet song
I differ with you on multiple points.
1) எந்த ஒரு இடுகைக்கும் வரும் எதிர்வினை அதன் மொத்த வாசகர்களின் எண்ணிக்கை அல்ல. ரசித்துப் படிக்கும் இடுகைகள் ஆகட்டும், தகவல் அறிந்துகொள்ள உதவிகரமாக இருந்த இடுகைகள் ஆகட்டும் - எல்லாவறிற்கும் எல்லாரும் பதில் எழுதுவதில்லை. மேலே சொல்ல எனக்கு எதுவும் இல்லாத பட்சத்தில் 'படித்தேன், பிடித்தது' என்பதுபோல இடுகை இட நானே தயங்குவேன். என்போல பலர் இருக்கலாம்.
2) முன்பே பலமுறை பேசியதுபோல, பலவகை ரசிகர்களுக்கான பலவகை இடுகைகள் உள்ள திரி இது. நீங்கள் எப்படி எல்லாவற்றையும் படிப்பதில்லையோ, அதுபோல தான் உங்கள் எழுத்தும். விருப்பம் உள்ளவர்களை சென்றடையும். அதற்கான வாசகர் வட்டம் நீங்கள் நினைப்பதுபோல குறுகலானது அல்ல என்று ஓரளவு நிச்சயமாகவே சொல்வேன். You should not hold back.
3) மேற்கோள் காட்டப்பட்ட இடுகையில் உள்ள condescensionஐ சற்றே திருப்பிப் போடுகிறேன். எனக்கும் கண்பட்டுக்கும் (துணைக்கு அவரையும் சேர்த்துக்கொள்கிறேன்) புரியும்படி இருந்துவிடும் என்பது என்ன நிச்சயம்? உங்கள் நன்மதிப்பை ஏற்கமறுக்கும் அவையடக்கம் எல்லாம் எனக்குக் கிடையாது :-) 'முனைப்புடன் வாசிக்கவேண்டிய ஆர்வம் எவ்வாறு எங்களுடையதோ, அதே போல 'தெளிவாக எழுதவேண்டிய பொறுப்பு உங்களுடையது'. Meet us half-way என்கிறேன் :-)
4) Jokes apart, ஒரு criticism: அந்த முதல் பத்தியில் நீங்கள் குறிப்பிட்ட பெயர்கள் அனேகம் (எனக்குப்) புதிது. அவற்றைப் பற்றி விரிவாக விளக்கப்படாத பட்சத்தில் அது ஒரு பெயர்த்தோரணமாக மட்டுமே வாசகருக்கு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு முதல்பத்தி, படிக்க முனைபவருக்கு படாடோபமாகப் பட்டு, ஆயாசத்தினால் மேற்கொண்டு படிக்காமல் விட்டுவிடும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். Particularly when you know most of us do not know those names.
மாறாக எங்களுக்குத் தெரியாத அவர்களைப் பற்றி, எங்களுக்குத் தெரிந்த சிவாஜியுடன் தொடர்பு படுத்திப் நீங்கள் எழுதும் பட்சத்தில், பலர் ஆர்வமாக படிக்கவும், அதன் மூலம் சிலருக்கு புது திறப்புகள் கிடைக்கவும் வாய்ப்புண்டு. அவற்றை உங்கள் முன்முடிவுகளால் முடக்கவேண்டாம், என்பதே என் வேண்டுகோள்.
கோபால்,
முதல் மரியாதை. ஏனோ அப்படி ஆகிவிட்டது. என்னவென்றால் மிக பெரும்பாலான இளைய தலைமுறையினருக்கும், எதார்த்த சினிமா பற்றி பேசுபவர்களுக்கும் மிக மிக பிடித்த இந்த திரைப்படம் பெருவாரியான நடிகர் திலகத்தின் ரசிகர்களின் டாப் 10-ல் இடம் பெறுவதில்லை.அதிலும் குறிப்பாக 60-களிலும் 70-களிலும் நடிகர் திலகத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களுக்கு இது அவரின் மேலும் ஒரு நல்ல படம் என்ற கருத்தே இருந்தது. அதற்காக அவர்கள் அந்தப் படத்தை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றோ அவர்களின் ரசனையில் ஏதோ குறை இருக்கிறது என்றோ அர்த்தம் இல்லை.
எனக்கு தோன்றிய காரணமெல்லாம் அவர் எத்தனை எத்தனையோ நல்ல பாத்திரங்களையும் படங்களையும் அளித்திருக்கிறார். அப்படி இருக்கும் போது இதில்தான் அவர் நடிப்பு பரிமளித்தது என்றும் இதுதான் அவரின் மிக சிறந்த நடிப்பை உள்ளடக்கிய படம் என்றெல்லாம் தொடர்ந்து ஊடகங்களில் பரப்புரை செய்யப்பட, அதுவே ஒரு சிவாஜி ரசிகனுக்கு இந்தப் படத்தை உச்சி முகந்து பாராட்ட ஒரு mental block-ஐ ஏற்படுத்தியது என சொல்லலாம். இதை ஏற்கனவே நமது திரியில் நானும் சாரதா போன்றவர்களும் எழுதியிருக்கிறோம். நண்பர்கள் பிரபு ராம் மற்றும் Maddy போன்றவர்களிடமும் நேரில் சந்தித்தபோது இதை சொல்லியிருக்கிறேன்.
குறிப்பாக நடிகர் திலகம் ராதாவின் குடிசையில் மீன் சாப்பிடும் காட்சியை மிகவும் சிலாகித்து சொல்பவர்களிடம் அதையெல்லாம் அதற்கு 17 வருடங்களுக்கு முன்பே உயர்ந்த மனிதன் படத்தில் செய்து விட்டார் எனபதை சொல்லுவேன். அன்றைய தினத்தில் இப்படி சின்ன சின்ன நகாசுகளை highlight செய்ய மீடியாக்கள் இல்லை என்ற காரணத்தினால் அவை இது போன்ற spot light-ல் வரவில்லை என்ற விஷயத்தையும் சொல்லியிருக்கிறேன். ஆனால் அது போன்ற காட்சி விவரணைகளில் இறங்காது படத்தையும் நாயக பாத்திரத்தையும் ஒரு மனவியல் ஆய்வாக நீங்கள் செதுக்கியிருக்கும் விதம் அருமை.
ரசிகர்களின் மனப்பாங்கைப் பற்றி சொன்னேன். அதற்கு பின்னால் வேறு ஒரு காரணமும் இருந்ததாக தோன்றுகிறது. அன்றைய கால கட்டத்தில் [1985 -ன் முற்பகுதி] வெளியான நடிகர் திலகத்தின் படங்கள் ஒரு தேக்க நிலையை பிரதிபலித்தது என்றே சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் இந்தப் படம் தயாரிப்பில் இருந்தது. வெளியாகும் வரை படத்தை பற்றிய எதிர்பார்ப்பு பெரிதாக இல்லை. மிக மிக அதிசயமாக சுமார் மூன்றரை மாதங்கள் இடைவெளி இருந்தது. மே மாதம் வெளியான நேர்மை-க்கு பிறகு 1985 ஆகஸ்ட் 15-ல் இந்த படம் வெளியானது.
இந்த நேரத்தில் மதுரை சம்மந்தப்பட்ட ஒரு விஷயத்தையும் கூற வேண்டும். [நான் இப்படி எழுதினாலே கிண்டலடிக்க கூடிய கோபால் இம்முறை அதை செய்ய மாட்டார்]. முதல் மரியாதை வெளியான அதே நேரம். மதுரையில் தங்கசுரங்கம் வெளியாகிறது. அதுவும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக மறு வெளியீடு காணாமல் இருந்த அந்தப் படம் புதிய பிரதி எடுக்கப்பட்டு ஆகஸ்ட் 16 அன்று சிந்தாமணியில் வெளியானது. ஒரு மாமாங்கத்திற்கு பின் வரும் ராஜனை வரவேற்க வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கிய ரசிகர் படை மலைச்சாமி தேவரை சற்று cold shoulder செய்தது நிஜம். அதிலும் முதல் மூன்று நாட்கள் சிந்தாமணி திரையரங்கு அமைந்துள்ள கீழ வெளி வீதி அல்லலோகோலப்பட்டது என்று நண்பர்களும் சிவாஜி அன்பர்களும் எப்போதும் சொல்வார்கள். இதன் காரணமாக கூட முதல் மரியாதை முதலில் சரியாக கவனிக்கப்படாமல் பின் wom மூலமாக நற்பெயர் பெற்று பிறகு கோலோச்சியது. அந்த காலகட்டத்தில் நான் மதுரையில் இல்லை. கேரளத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த நான் முதல் மரியாதை வெளியான 15 நாட்களில் ஒரு அவசர அலுவல் நிமித்தம் சென்னை வர வேண்டிய தேவை.
ஆகஸ்ட் 30 என்று நினைவு. சென்னை வரும் ரயிலில் உறங்கி கொண்டிருந்த நானும் சக பயணிகளும் அதிகாலை நேரத்தில் காட்பாடி நிறுத்தத்தில் எழுப்பபட்டோம். அன்றைய தினம் ஒரு ஹர்த்தால் அல்லது ரயில் மறியல் [இலங்கை பிரச்னை என நினைவு] என்றும் ஆகவே ரயில்கள் மேலும் இயக்குவதில்லை என அறிவித்து விட்டு பயணிகள் அனைவரையும் ரயில் நிறுத்தத்திற்கு வெளியே நின்றிந்த பஸ்களில் ஏற்றி அனுப்பினார்கள். சென்னை வந்து சேரும் போது காலை 10 மணியாகி விட்டது. வந்த வேலை முடிவதற்கு மதியம் மூன்று நான்கு மணி ஆகிவிட்டது. மதிய உணவை துறந்து விட்டு மவுண்ட் ரோடிற்கு விரைந்தேன். சாந்தி திரையரங்கிற்கு வந்து பார்த்தால் பால்கனி டிக்கெட்கள் எல்லாம் புல். கீழே உள்ள டிக்கெட்கள் ஒரு சிறியளவில் மட்டும் current booking-ல் கொடுக்கப்படும் என சொன்னதும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். ரசிகர்களை விட 90% பொது மக்களே வந்திருந்த ஷோ அது. மிகவும் ரசித்தேன். அந்த நாளுக்கு முன்பு வரை எத்தனையோ முறை அரங்க வளாகத்திற்கு வந்திருந்த போதிலும் அன்றுதான் முதன் முதலாக அரங்கினில் படம் பார்த்தேன். ஆக சாந்தி திரையரங்கம் எனக்களித்த முதல் மரியாதை இந்த முதல் மரியாதை திரைப்படம்.
இனி படத்திற்கு அலல்து உங்கள் விமர்சனத்திற்கு வருகிறேன்.
(தொடரும்)
முதல் மரியாதை படத்தைப் பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று கிளம்பும் பெரும்பாலானோர் நான் முன்னர் குறிப்பிட்ட மீன் சாப்பிடும் காட்சியையும் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் மற்றும் முதல் நாள் நடிகர் திலகம் விக் வைத்து வந்ததையும் அதை விரும்பாத பாரதிராஜா அதை நேரிடையாக சொல்லாமல் முகம் காட்டியதையும் பிறகு நடிகர் திலகத்தின் ஒரிஜினல் முடியே இடம் பெற்றதையும் பெரிய அளவில் விவரிப்பார்கள். அந்த template-ஐ எல்லாம் ஒதுக்கி விட்டு உங்கள் தனித்துவமான நடையிலே படத்தை அணுகியிருக்கும் முறை ரசிக்கதக்கதாக அமைந்திருக்கிறது.
நடிகர் திலகத்தின் பல படங்களைப் பற்றிய உங்கள் ஆய்வுகளை படிக்கின்ற போதெல்லாம் அதன் அடிநாதமாய் தெரிவது கதாபாத்திரங்களைப் உளவியல் பாணியில் அணுகும் நடைமுறை. அது இதிலும் தவறாமல் தொடர்ந்திருக்கிறது. பரந்துபட்ட ஆழமான வாசிப்பு, அலுவல் நிமித்தம் பல்வேறு நாடுகளுக்கு [60?] பயணப்பட்ட, பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஏற்பட்ட பல்வேறு மொழி படங்களுடான பரிச்சயம் இவை உங்கள் விமர்சன பார்வையை கூர்மைப்படுத்த உதவியிருக்கின்றன என்பதுடன் உங்கள் எழுத்திற்கு ஒரு பலத்தையும் வசீகரத்தையும் கொடுக்கிறது.
மலைச்சாமி தேவரை பெரும்பாலானோர் ஒரு silent sufferer ஆக பார்க்கும்போது அவர் தன்னை ஒரு அய்யோ பாவம் போல் வெளியே காண்பித்துக் கொண்டு உள்ளூர மனைவியை மானசீகமாக வதைப்பவர், physical புறக்கணிப்பின் மூலம் தன வாழ்க்கையின் சந்தோஷம் தொலைய காரணமாக இருந்தவளுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பவர் என்ற ஒரு முகத்தை வரைந்திருக்கிறீர்கள். அதை அடிப்படையாக கொண்டு சென்று அவருக்கு அந்த ஓடக்கார பெண்ணிடம் ஏற்படும் பரிச்சயம், அது நட்பாக மாறுதல் அதன் மூலம் வரும் கரிசனம் அதன் காரணமாக எடுத்துக் கொள்ளும் உரிமை, முடிவில் அது மரியாதை, நட்பு கரிசனத்தையும் தாண்டி வேறு ஒரு தளத்திற்குள் பிரவேசிப்பது போன்றவற்றை அலசி விட்டீர்கள்.
ஆனால் செல்வராஜ் அவர்களும் பாரதிராஜா அவர்களும் கூட இந்த பாத்திரத்திற்கு இத்தனை dimensions யோசித்திருப்பார்களா என்பதே சந்தேகம் என்றே எனக்கு தோன்றுகிறது. நீங்கள் எத்தனை அழகு பாடலைப் பற்றி எழுதும்போது கூட நாயகி அணிந்திருக்க கூடிய உடைகளின் வர்ணம் [Rose மற்றும் Red] எப்படி அந்த mood-ஐ பிரதிபலிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினீர்கள். With due respect to CVR, என்னால் அந்த credit-ஐ அவர் account-ல் சேர்க்க முடியவில்லை.
இது போன்றே சுமதி என் சுந்தரி-யிலும் வரும். இதை நான் முன்பே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். தன்னுடன் வாழ்பவள் சுந்தரி அல்ல சினிமா நடிகை சுமதி என்று தெரிந்தவுடன் அந்த ஆல்பத்தை எடுத்துக் கொண்டு மது வீட்டிற்கு வர அங்கே சுமதி கல்யாண சந்தையிலே பெண் பார்க்கும் நேரமிது என்று பாடிக் கொண்டிருக்க மதுவான சிவாஜி படியிறங்கி வந்து அங்கே flower vase-ல் வைக்கப்பட்டிருக்கும் காகிதப் பூவை முகர்ந்து பார்ப்பார். அவருக்கு தெரியும் அது மணமில்லா காகிதப் பூ என்று. ஆனாலும் மணமுள்ள நிஜ ஜாதி மல்லி என்று நினைத்தோமே அது உண்மையிலே ஒரிஜினல் மல்லியாக இருந்துவிடக் கூடாதா என்ற ஆதங்கத்தையும் அனால் அப்படி இல்லையே என்ற கசப்பான உண்மையையும் முகத்தில் வெளிப்படுத்தி அதை தான் விரும்பும் பெண்ணிற்கு உவமைப்படுத்திக் கொள்வதை பார்வையாளனுக்கு புரிய வைப்பார். இங்கேயும் CVR தான்.இங்கேயும் என்னை பொறுத்தவரை அவருக்கு credit இல்லை என்றே சொல்லுவேன்.
நடிகர் திலகம் சுயமாக செய்த பல விஷயங்களினால் இயக்குனர்களும் வசனகர்தாகளும் பெயர் தட்டி சென்றனர் எனபதே நடைமுறை உண்மை.
ஆனால் நீங்கள் என்னிடம் சொன்னது போல் ஒரு படைப்பு உன்னத நிலையை அடைவதே இது போன்ற பல்வேறு interpretation-களுக்கு உள்ளாகும் போதுதான் என்ற வாதம் சரி என்றே தோன்றுகிறது.
இது நாள் வரை மலைச்சாமி தேவர் பாத்திரத்தைப் செக்கானூரணி உசிலம்பட்டி கமுதி போன்ற பகுதிகளில் அன்றாடம் சந்திக்க கூடிய ஒரு கிராமத்து பெரிய மனிதன், பஞ்சாயத்து தலைவர் போன்றவர்களுடனே பொருத்தி பார்க்க தோன்றியிருக்கிறது. ஆனால் அதை தாண்டிய ஒரு பார்வையை அதிலும் குறிப்பாக கணவனால் இத்தனை உதாசீனப்படுத்தப்பட்டாலும் பொன்னாத்தாளுக்கு இருக்கும் தன் கணவன் என்ற possessiveness மலைசாமியிடம் இல்லை என்ற புதிய கோணத்தை சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள் பல.
நீங்களே விருந்து பரிமாறி விட்டர்கள் அதற்கும் மேலாக double dessert போன்று கணேஷ் அவர்கள் அற்புதமான் பாயசத்தை படைத்தது விட்டார். ஆக வாசித்தவர்களுக்கு double whammy.
மற்றப்படி நீங்கள் உலகளவில் சினிமா சம்மந்தப்பட்டு எழுதிய பெயர்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் தெரிந்துக் கொள்வதற்கு பிரபுராம் போன்றவர்களுக்கே google ஆண்டவர் உதவி தேவைப்படும்போது lesser mortals நாங்கள் எங்கே? நண்பர் கணேஷ் சொன்னது போல் பரவாயில்லை இருக்கட்டும் என்று சொல்லி கடந்து விட வேண்டியதுதான்.[கணேஷ் சார், sorry for the nit picking. அது க.கல்யாணம் இல்லை, ஊட்டி வரை உறவு]
மீண்டும் நன்றி கோபால்!
அன்புடன்
கணேஷ் சார்,
நாற்பதுகளில் வரும் காதல் பற்றிய உங்கள் பதிவிற்கு தனியே சின்னதாகவேனும் ஒரு பதிவு போட வேண்டும்.பார்ப்போம். [ஆமாம், நீங்கள் தஞ்சை குடந்தை பகுதியை பூர்விகமாக கொண்டவரா?]
முரளி சார் ,
இதை இதை இதைதான் நான் எதிர்பார்த்தேன். மு.வ. நமது NT நடிப்பை புலவர்களுக்கும், பாமரர்களுக்குமான இணைப்பு பாலம் என்று குறிப்பிட்டார். அதை போல் திரியில் பல்வேறு முகம் கொண்டவர்களின் இணைப்பு பாலம் நீங்களே. அதனால்தான் உங்களை வம்புக்கிழுத்தாவது உங்கள் பங்களிப்பை பெற விழைகிறேன்.வழக்கம் போலவே உங்கள் பின் ஆய்வு (இதிலும் பின் தானா என்று வனஜா முணு முணுப்பது காதில் கேட்கிறது)எழுதுபவர்களை உற்சாக படுத்துவதோடு, வழி நடத்தவும் செய்கிறது.
வழக்கம் போலவே ,ஒரு விஷயத்தை மறுக்கிறேன். C .V .Rajendran . underestimate செய்ய படுவதை மறுக்கிறேன். குமுதத்தில் 1972 இல் என்று நினைவு. தான் சுமதி என் சுந்தரி படத்தில் colour psychology உபயோகித்ததாகவும் ,அதை எந்த விமரிசகரும் கண்டு கொள்ளவில்லை என்றும் வருந்தி இருந்தார்.
பிரபு,
தாங்கள் சொல்வது எனக்கு உடன்பாடே. நான் ஒரு முழு கட்டுரை தொடர் எழுத விழைகிறேன் எனக்கும் vital few தான் target . trivial many அல்ல. (வியாபாரம்,கலை அனைத்திலும்)
நீங்கள் சொன்ன மாதிரி கோடி காட்டி விட்டு ,கடந்து செல்வது ஒருவித பொறுப்பின்மையே.
ஆனால் எனது எழுத்தில் வாசகனின் இட்டு நிரப்பும் ஆற்றலுக்கு தீனி போடும் விழைவு அதிகம். அதனால் வந்த ஆர்வ கோளாறு.