வாசு சார்
தங்கள் வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி.
அபூர்வமான பல பாடல்களை அவற்றின் சிறப்போடு இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
பொதுவாக ஹோட்டல், கிளப் நடனக் காட்சி, பாடல், எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் என்றாலே அந்தக் காலத்தில் தியேட்டரில் மக்கள் அமரமாட்டார்கள், இளைஞர்களைத் தவிர. அதுவும் பாடல் ஈர்க்க வேண்டும். ஆனால் மெல்லிசை மன்னருக்கு எந்த சூழ்நிலையானால் என்ன அவருடைய திறமை பளிச்சிட்டு விடும். எம்.எஸ்.வி. இசையமைத்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பல கிளப் டான்ஸ் பாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் இசையில் ஏராளமான நுணுக்கங்களைப் புகுத்தியிருப்பார். அப்படி ஒரு பாடலைத் தான் நாம் இங்கே காண உள்ளோம்.
மிஸ்டர் சம்பத் திரைப்படத்தில் எல்லோரும் பொதுவாக அறிந்த பாடல் ஆரம்பம் யாரிடம், அலங்காரம் போதுமடி. அவ்வப்போது எம்எஸ்வி பாடிய ஒரே கேள்வி உனைக் கேட்டேன் பாடல். ஆனால் இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் அவர் அமைத்த பாடல் அன்பான ரசிகன் என்னோடு இருக்க.. இப்பாடலில் கிடார் மற்றும் அக்கார்டியனுடன் மேற்கத்திய பாணிய்ல தொடங்கும் பாடல் நடுவில் சாஸ்த்ரீய மெட்டில் புகுந்து நாதஸ்வரத்தை வாசிக்க வைத்திருப்பது அவருக்கே உரிய சிறப்புத் திறமையாகும். அதனைத் தொடர்ந்து ட்ரம்பெட் ஒலிக்கும். பாடலின் தாள அமைப்பில் பாங்கோஸ் இசைக் கருவி அற்புதமாக கால்களைத் தாளம் போட வைக்கும்.
என்றென்றும் நான் விரும்பும் எம்எஸ்வியின் பாடல்களில் இது குறிப்பிடத் தக்கதாகும்.
http://youtu.be/6ZFr1rdnKOU