õ..õ..§Á§Ä ¦º¡øÖí¸û!
Printable View
õ..õ..§Á§Ä ¦º¡øÖí¸û!
venki :clap:
venkiraja, It's been a long time since I read a write-up as engrossing as yours. Not all essays with philosophical shades work, but yours does and that's quite an achievement.
And, may I add, please continue posting in unicode.
எல்லோரும் பாராட்டுவது ஒருசேர பயத்தையும் தைரியத்தையும் மூக்குத்துவாரத்தைப்போல,கொணர்கிறது.
ஆனால் பயனற்று எழுத்து அமையவேண்டா,ஏதாவது உபகாரமாய் சொல் என்றனர் நண்பர்கள்.உபதேசியாக எனக்கு வயதும் இல்லை,அறிவும் இல்லை.சரி முயன்று பார்ப்போமே என சிரஞ்சொறிந்ததில் விழுந்தவற்றை எழுதுகிறேன், குரூரங்களை 'ப்ளாஷ் பாக்' முடிவுற்றபின் பார்க்கலாம்.
(சினிமாவில் இப்படித்தானே கதையை அந்தரத்தில் விட்டு பழங்கதை பேசுவார்கள்?)
:lol:Quote:
Originally Posted by VENKIRAJA
இடைச்செருகல் ஒன்று:
வெற்றிக்கு பத்து வழிகள்.
எப்படி வெல்வது என்ற கேள்வி 'எத்தை தின்னால் பித்தம் தெளியும்?' என்பது போலில்லை.most wanted என நாடேறும் வினவப்படும் வாக்கியம் இது.விரலுக்கொரு யோசனை என்று வைத்துக்கொள்ளுங்கள்,எத்தனை வேண்டுமோ உபயோகியுங்கள்.
> எத்தனை இடர்வந்தினும் தனித்தன்மையை கைவிடாதீர்கள்.அத்தனித்தன்மை உங்கள் பெயர் சொன்னவுடன் நினவுக்கு வரவேண்டும்.காந்தி,பாரதி,இளையராஜா போல்.
> தீர்க்க சிந்தனைக்கு பிறகு ஒரே ஒரு குறிக்கோளை முடிவு செய்யுங்கள்.ஒரே குறி,உயர் குறி.வரைபடங்கள் உதவக்கூடும்.
> செவிப்பசியை தடையோ முடையோ செய்யாதீர், எவ்வழியாயினும் தகவல்களையும்,சுவையையும் புத்தகங்களினூடே,பட்டறிவினூடே உண்ணுங்கள்.அதைவிட அதிமுக்கியமாக அசைபோடுங்கள்.
> பல்தேய்ப்பீர்களா?இனி அழுத்தமாக தேயுங்கள்.அப்போதுதான் சிரித்தால் அழகாய்த்தெரியும்.சாகும்போதுகூட சிரியுங்கள்-வெற்றிகரமாக சொர்க்கம் போகலாம்.
> கண்மணியில் பதியுங்கள்.நேரவிரயம் வேர்,தோல்வி பூ.குறைந்தபட்சம் எழுதும்போது தேதி குறியுங்கள்.tracking செய்து முன்போகலாம்.
> தேக்குத்தடிகளிவிட சிறு புல்லாங்குழல்கள் அழகானவை.சுற்றி வளைப்பது old fashion.சொல்லிலும் செயலிலும் சுருக்கமாய் இருங்கள்.அது ஜெயத்திற்கு express ticket.
> அவசியமேயின்றி தியாகம்,உதவி,தர்மம் என ஈண்டு ஈடுபடாதீர்.அவற்றை வெற்றி வந்தபின் செய்யலாம்.
> தோல்விகள்,வெற்றிகள் எல்லாவற்றையும் போகிக்கு போட்டுவிட்டு ஒவ்வொன்றையும் முதல் செயலாக நுணுக்கமாகவும் ரசித்தும் செய்யுங்கள்.no போதை,no கீதை.
> வாயாடி என்று கிண்டலடித்தால் நன்றிகூறுங்கள்.நாக்கு தான் நம் வாள்,கேடயம் எல்லாம்.தெளிவாகவும் சமயோசிதமாகவும் பேசினால் உலகம் கடைவாய்ப்பல்லுக்கு கீழ்.
> பாரதியாரே முண்டாசு கட்டி வந்தால்தான் நம்மவர்களுக்கு தெரியும்.ஆதலால் பொருத்தமான உடை அத்தியாவசியம்.வெற்றியெல்லாம் வயிற்றுக்குத்தான் - எனவே உணவில் வஞ்சனை வேண்டாம்.சக்தியுடன் அழகான வெற்றிதான்!
சும்மா school magazinukkaaka ezuthinathu.a break amongst hecticness.
venki
well said :clap:
:thumbsup:Quote:
வாயாடி என்று கிண்டலடித்தால் நன்றிகூறுங்கள்.நாக்கு தான் நம் வாள்,கேடயம் எல்லாம்.தெளிவாகவும் சமயோசிதமாகவும் பேசினால் உலகம் கடைவாய்ப்பல்லுக்கு கீழ்
very nice and unilateral thinking............
i appriciate u much my vengi
kumar
'எத்தனை இடர்வந்தினும் தனித்தன்மையை கைவிடாதீர்கள்"
nice..........
kumar
இந்தியாவிலேயே மிக பிரும்மாண்டமான வியாபர மையம் என்று கருதப்படும் இடம்.ஒரே நேரத்தில் கோவில்களுக்கு அடுத்தபடி இந்தியர்கள் குழுமும் இடம் என கண்டாய்வு செயப்பெற்ற தலம்.ஒசாமா பின் லேடன் ஒரு தீபவாளி அல்லது பொங்கல் திருநாளுக்கு முந்தைய ஞாயிறோ,பள்ளி திறப்பதற்கு முன்னால் வரும் மே மாத கடைவிடுமுறையன்றோ அங்கே குண்டு வைத்து தகர்த்தால் குறைந்தபட்சம் சென்னை பாதிக்கு மேல் காலியாகும் களம்!
தி.நகரல்ல அது தீ நகர்.ரங்கநாதன் தெருவின் நெரிசலை மீறி கையிழந்த ஒருவன் வீதியில் பிச்சை எடுப்பது,குழந்தை தொழிலாளித்துவத்தை ஒழிப்போமென சிறார்கள் போஸ்டர் ஒட்டுவது என மிகவுண்டு அவலம்.ஜாதிப்பெயர்களை தெருப்பலகையிலிருந்து எடுத்தவர்கள் கடைப்பலகைகளிலிறுந்து எடுக்க முற்படவில்லை.தெருவுக்கொரு ஜவுளிக்கடை,நகைக்கடை,மதுக்கடை,ஆனால் புத்தகக்கடை அல்லது தமிழிசை ஒலிநாடாக்கடை?அங்குள்ள வியாபாரிகள்,நுகர்வோர் என பேதமின்றி அனைவரும் தகாத வார்த்தைகளை உதிர்த்தபடி நடக்கிறார்கள்.கேவலம் தென்னமரக்குடிக்காக அந்த நடுத்தர வயதுக்காரர் விற்பவனின் பிறப்பையே களங்கப்படுத்திவிட்டார்.கோபப்பட்ட கடைக்காரன் அவனது உறுப்புகளை இழித்துரைக்கிறான்.இதுதான் நாம் நம் நாற்பதாண்டு கால வாழ்வின் பயனாக கற்றுக்கொண்டதா?மிக இன்னல்களைத்தாண்டி செல்ல உதவக்கேட்கும் ஆட்டோக்காரன் அநியாய பேரம் பேசுவது,வெறும் இருபத்தைந்து ரூபாய் இலாபத்துகாக உயிரை போக்குமளவு கீழ்த்தரமான பண்டம் செய்து விற்பது,மேகநிறத்து எண்ணையில் பொன்னிற வடை பொறிப்பது,அத்தனை குப்பைகளை,எச்சில்களை,சிகரட் துண்டுகளை, என சகலமானவற்றையும் வீசி நோய்க்கு வழிவகை செய்வது எண்ணற்ற இடர்ப்பாடுகள் அங்குண்டு.நாகரிகங்கள் உருவான தேசத்தில் மாதரசிகளை இழிவுபடுத்தும் பாடல்களை ஒளிபரப்பும் ரேடியோக்களும்,தொலைக்காட்சிகளும் என மனம் தன் மணத்தை இழந்துவிடுமளவு குரூரங்கள்.வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இந்திக்கரர்களை எட்டுமாடிக்கட்டிடங்கள் கட்டவும்,தமிழனை கையேந்தவும், நாவற்பழம் விற்கவுமே அனுமதிக்கும்.அவ்வப்போது சிட்டி ரௌடிகள் வந்து துவம்சம் செய்து மாமூல் வசூலிக்கவும் செய்வர்.போலீசார்(சிலர்) தம் பங்குக்கு லஞ்சம் வாங்கும் இடம்.மூளையை கசக்கிப்பிழிந்து இந்திய இளைஞன் அமெரிக்கா சென்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை நம்மாள் பத்து ரூபாய் சி.டி யில் அடைத்து கனஜோராக கடத்தல் பொருட்களை சந்தைபடுத்தும் சுரண்டல் துறைமுகம்.கணிணிப்பொருட்கள் மட்டுமல்ல அயல்நாட்டு படங்கள்,விளையாட்டு பொருட்கள்,நாணயங்கள்,புத்தகங்கள்.
எல்லாவற்றையும் விட அத்தனை சுகங்களைத்தேடி அனைவரும் ஆலாய்ப்பறந்து அனுபவிக்கும் போது ஒரேயொருவன் மட்டும் துர்நாற்றத்தை முகர்ந்துகொண்டு தன் கிழிந்த டவுசர் அல்லது அரைசட்டை(அது கால்சட்டைகூட இல்லை)அல்லது நிக்கரில் இருந்து ஒரு காகிதம் எடுத்துச்சென்று தன் அண்டைவீடு போன் நம்பரினை கொடுத்து கொஞ்சம் போட்டுத்தரச்சொல்லி......பேசி ஏறத்தாழ 3 நிமிடங்கழித்து சிரித்தானந்த சாக்கடை துப்புரவு தொழிலாளி!ஏற்றத்தாழ்வு.ரொம்ப அழுவாச்சியாக அவார்டு படம் மாதிரி ரத்தம் வர அறுக்கிறேனா?நிறுத்துகிறேன்.ஆனால் இது நான் ஒருமுறை போய்வந்ததில் கண்டவை.கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதைப்போல பழகிவிட்டது.நாற்பது ரூபாய் மீதமிருக்கிறது,அதில் ஒரு சுஜாதா நாவல் வாங்கினேன்.அப்புறத்தை தான் அப்புறப்படுத்திவிட்டேனே. பஸ்ஸில் செல்லும் போது புத்தகம் புரட்டியபோது கண்டது:
"ஏட்டில் கிடக்கும்
வெள்ளத்தை மறந்து
நிஜவெள்ளத்தைப்பார்"
(பி.ஸ்ரீ)
சிறுசிறுகதைகளில் சுஜாதா மேற்கோள் காட்டியது தென்பட்டது.
அன்றுதான் நான் பாதசாரியாகத்தொடங்கினேன்.
ஆனால் அதற்குமுன்னரே மனதளவில் பாதசாரித்ததை சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன்.