Quote:
அவள் ஒரு தொடர்கதை-200
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "அவள் ஒரு தொடர்கதை'' தொடர், 200 எபிசோடை நிறைவு செய்து தொடர்கிறது.
சுஜாதா என்ற பெண் கதாபாத்திரத்தை சுற்றி நிகழும் சுவாரசியமான கதை இது. கதாநாயகி தன் தாயால் கறுப்பு வண்ணம் பூசப்பட்டு வெளியுலகுக்கு கறுப்பாக காட்சி தருகிறாள்.
சுஜாதாவின் உண்மை நிறம் தெரிந்த அப்பகுதி இன்ஸ்பெக்டர், தன்னை திருமணம் செய்து கொள்ள சுஜாதாவை வற்புறுத்துகிறார். அவரின் வற்புறுத்தலுக்கு பயந்து ஊரை விட்டு ஓடும்போது தனபிரபு சுஜாதாவை காப்பாற்றி தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
மிக பெரிய டானாக இருக்கும் தனபிரபுவிற்கு ஏகப்பட்ட எதிரிகள். ஒவ்வொரு எதிரியிடமும் சண்டையிடும் போதும் சுஜாதாவின் உதவியோடு தப்பிக்கிறார். இதற்கிடையில் தனபிரபு - சுஜாதாவிற்கிடையே காதல் மலர்கிறது. இவர்களின் இணைப்பை விரும்பாத தனபிரபுவின் அக்கா கலா மூலமும் சுஜாதாவுக்கு நெருக்கடிகள் தொடர்கிறது.
தொடரின் முக்கிய திருப்பமாக தனபிரபுவின் தந்தை வருகிறார். அவர் வந்தது தனபிரபுவிற்கு தெரியவர, குடும்பத்தில் குழப்பம் நிலவுகிறது. இந்த சூழலில் தனபிரபுவிற்கும் சுஜாதாவிற்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
தனபிரபு - சுஜாதா திருமணம் நடந்ததா? தம்பியின் திருமணத்தை தடுக்க முயன்ற அக்கா கலாவின் சூழ்ச்சி வென்றதா? தொடர்கிறது, தொடர்.