உதாரணமாக, இளையராஜா பாப் மார்லி, பாப் டிலான் இருவரையும் முற்றிலுமாக நிராகரித்துவிட்டவர். அவர்களை 'குப்பை' என்று குறிப்பிட்டவர். எந்த ஒரு கலைஞனும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல என்ற முறையில் அவருக்கு விமர்சிக்கும், நிராகரிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தங்களது இசையால் மிகப்பெரும் சமூக மாற்றத்தையும் அத்துடன் முழுமையான இசையின்பத்தையும் வழங்கிய இவ்விருவரின் தகுதியும் இளையராஜாவின் இந்த விமர்சனத்தால் குறைந்துவிடாது. இருவரும் உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் விதந்தோதுபவர்களையும் கொண்டிருந்தனர். இந்த நிமிடம் வரை அதிகளவில் விற்பனையாகும் பல இசைத்தொகைகளை கொடுத்த கலைஞர்கள்.
பாப் டிலான் இளையராஜாவை விட இரண்டு வயது மூத்தவர். இன்னும் தனது பாடல்களாலும் இசையாலும் வாழ்ந்துகொண்டிருப்பவர். சமீபமாக டிலானின் பிறந்தநாள் இந்தியாவின் மிஜோராம் மாநிலத்தில் கூட ஒரு மாதம் முழுதும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்று வாசித்தது ஞாபகம் வருகிறது.
தனது முப்பத்தி எட்டாவது வயதில் மறைந்துவிட்ட ரேகே இசை அதிசயம் பாப் மார்லி இளையராஜாவை விட இரண்டு வயது இளையவர். மிகவும் ஏழ்மையான, ஒடுக்கப்பட்ட குடும்பச்சூழலில் பிறந்தவர். இளையராஜாவை விட துயரம் நிறைந்த ஒற் பால்யகாலத்தைக் கழிக்க நேர்ந்தவர். மோட்டார் பழுதுபார்க்குமிடத்தில் உதவியாளராகவும், தெருக்கூட்டுபவராகவும் பணிபுரிந்தவர். ஆனால் இவ்வுலகை விட்டுப் பிரியும் முன் தனது மக்களின் துயரமிக்க வாழ்வினை உயர்த்தும் ஏராளமான பணிகளைச் செய்துவிட்டுச் சென்றவர். உலகநட்சத்திரமாக மாறிய பின்னரும் தன் வேர்களில் இருந்து பிரியாதவர். ஏழைகளுக்கு தடையிலாது உதவிய மனிதர். அவர் இறந்தபோது கிட்டத்தட்ட நாலாயிரம் ஜமைக்க குடும்பங்கள் அவரை நம்பி இருந்தன!
பொதுவான கலை விமரிசன மரபில் இரண்டு தரப்புகள் உள்ளன. ஒருவரின் கலைப்படைப்பை விமர்சிக்கும்போது கலைக்கு அப்பாற்பட்ட அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொருட்படுத்தத் தேவையில்லை என்பதுதான் ஒன்று. ஒரு கலைஞனின் வாழ்க்கை வழியாக அவனது கலையை, இசையை சென்றடைய முயல்வது தான் இன்னொன்று. Art without heart is futile அதாவது நல்லதோர் இதயம் வெளிப்படாத கலை வீண்போகும் என்பது தான் இந்த விமரிசன மரபின் சாரம். நல்ல உள்ளத்திலிருந்தே நல்ல கலையும் வருகிறது என்ற அந்த தரப்பைத்தான் என் இசைவிமரிசன எழுத்து வழியாக நானும் முன்வைக்க முயல்கிறேன். தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னதைப் போல, "சிறந்த கலை இவ்வுலகத்தை பாதுகாக் கூடுகும்".
லட்சக்கணக்கான நசுக்கப்பட்ட ஏழை மக்கள் ஒருவேளை உணவுக்காக போராடிக்கொண்டிருக்கையில், ஐம்பது லட்சம் மதிப்புள்ள தங்கப் பாதத்தை கோவில் பிரதிஷ்டைகளுக்கு அணிவிப்பதால் நீங்கள் சிறந்த மனிதர் ஆகிவிடுவீர்களா? லட்சக்கணக்கான பணத்தைக் கொண்டு 12 கோபுரங்கள் இருக்கும் ஒரு கோவிலுக்கு 13ஆவது கோபுரம் ஒன்றை கட்டுவதன் மூலம் நம் சமூகத்தைப் பீடித்திருக்கும் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது திருவாசகம், ரமணமாலை போன்ற பக்திப்பாடல்களை கேட்டுக்கொண்டிருப்பது பசியும், வறுமையும் தீர உதவுமா?
oruvarin thanipatta vendudhal seivadhai
vimarsika neengal yar..........
sRirangam kovil - kaetargal.. koduthar...
IR ethanai peruku , enna seidhu kondu irukirar
endru thagaval theiryuma...
theiryamal, edharku indha vimarsanam.....
oru vishayathai patri sollum podhu,
adhai patri muzhu thagavanaliyum petru kondu,
confirm seidhu kondu
blog podanam Shaji...........