நினைவே ஒரு சங்கிதம் - ஏத்தமையா ஏத்தம் பாடல் ம.வாசுதேவன் பாடிய தெம்மாங்கு பாடல்களில் முத்தான ஒன்று. பல்லவி, சரணங்கள் என சந்தங்கள், தாளக்கட்டுக்கள் எல்லாமே நிலத்தடி நீரை ஏத்தம் மூலம் ஏற்றி இறக்குவதற்கு ஒப்பானது. "முந்தி முந்தி வினாயகரே.. என ஆரம்பிக்கும் தொகையறாவிலிருந்து பாடல் முடியும் வரை கர்நாடக சாயல் கொஞ்சம் கூட தென்படாத பரிசுத்தமான ஒரு கிராமியப் பாடல். தெம்மாங்கு என்ற பதத்திற்கு நல்ல உதாரணம். "விஞ்ஞான காலத்தில் எல்லாமே மெஷினு, மனுஷன் மனசு கூட மெஷினாச்சி போ புள்ள!" என்ற வரிகளில் ம.வாசுதேவன் காட்டும் குரல்மொழி அருமை. பாடல் எடுக்கப் பட்ட களம் மற்றும் விஜயகாந்த்-ராதா இருவருக்கும் இடையேயான குறும்பு எல்லாமே ம.வாசுதேவன் - சித்ரா கூட்டணிக்கு அணி சேர்க்கிறது. ( வெள்ளிவிழா கண்ட படம். அதற்கான விழாவில் கமல் விஜயகாந்த்-ராதா உட்பட்ட ஏனைய கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி சிறப்பித்த புகைப்படங்கள் இராணி இதழில் வந்தது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது )
http://www.youtube.com/watch?v=TH7IF...9EA99AF75A2244