Originally Posted by
mr_karthik
டியர் முரளி சார்,
ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுறுசுறுப்பான தொடர் நாவலுக்குரிய சஸ்பென்ஸுடன் நிறுத்துகிறீர்கள். வார இதழ்களிலாவது 'சரி, அடுத்தவாரம் சஸ்பென்ஸ் அவிழ்ந்துவிடும்' என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தங்களின் அடுத்த பதிவு எப்போது வருமோ என்பதேகூட ஒரு சஸ்பென்ஸ்தான்.
நமக்குப்பிடித்த தர்மம் எங்கே படம் வரும்போதுதானா தமிழ்நாட்டில் இவ்வளவு போராட்டங்களும், அரசியல் மாற்றங்களும் நடக்க வேண்டும்?. முதல்நாள் ரிசர்வேஷன் கிடைக்காமல் ஆனால் எப்படியும் முதல்நாள் பார்த்தே தீரவேண்டும் என்ற ஆர்வத்தில் என் வாழ்நாளிலேயே முதல்முறையாக மகாராணி தியேட்டரில் பிளாக்கில் டிக்கட் வாங்கி பார்த்த படம் தர்மம் எங்கே. என்னைப்பொருத்தவரை பிளாக்கில் டிக்கட் வாங்கினாலும் இன்றுவரை அதற்கு தகுதியான படம்தான் 'தர்மம் எங்கே'. புரட்சி வீரன் வரிசையில் சண்டைக்காட்சிகளைப் பொருத்தவரை சிவந்த மண்ணைவிட சிறப்பான படம். சிறையில் அந்த மாமிசமலை முரடன்களோடு போடும் அந்த சண்டைக்கே கொடுத்த காசு செரித்தது. (அவ்விரண்டு படங்களைப்பற்றிய ஒப்பீட்டு பதிவு ஒன்றை இட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவல் பெண்டிங்காக இருக்கிறது).
அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்....