http://photos.filmibeat.com/ph-big/2...3469491240.jpg
Chinta Chinta Chinta !!! :) Poda Da Vediya... :thumbsup: Kaadhu therikkum Isai !!! Not 2 forget pick of album - Donu Donu :)
[emoji106] [emoji106]
SUPER !!! I like that attitude !!
WOW, amazing, wonderful, Marvellous , Fabulous "eagerly" awaiting "Intellectual" films like this ... :clap:
Vijay Yesudas
https://scontent.xx.fbcdn.net/hphoto...6e&oe=55E6E1D4
yaruppa adhu kajal agarwalukku dubbing pesinadhu?
Ragini Sri ah super ...
R Sarath Kumar @realsarathkumar Jun 25 Maari starring Dhanush to release on July 17th,
Dhanush
Sincere thanks 2 my fans and all the other actor's fans for this overwhelming response. 6 lacs + views in 24 hours. Love you all
paatellam semma theri..
Looks like film has red wood smuggling background
Can't smell Balaji Mohan anywhere in the Trailor....
My second favorite actor after Ajith.
Good luck to the movie. Eagerly waiting!!
Except Donu Donu, other songs are not that catchy. I hope the story and screenplay come out good.
https://pbs.twimg.com/media/CIl6rIDUkAAgi7b.jpg
[will edit it if I find a HD poster]
வெவ்வேறு கதைக்களங்களில் படம் பண்ண விரும்புகிறேன்: இயக்குநர் பாலாஜி மோகன் சிறப்புப் பேட்டி
மாரி’ படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்களிடையே கிடைத் துள்ள வரவேற்பால் உற்சாகமாக இருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
‘மாரி’ திரைப்படம் எப்படி வந்திருக்கிறது?
ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை விஷயங்களும் ‘மாரி’ யில் இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் பார்க்கும் வழக்கமான கமர்ஷியல் படப்பாணியில் இல்லாமல் வேறு மாதிரி இருக் கும். என் முந்தைய இரண்டு படங்களிலும் கதையை முழு மையாக எழுதி முடித்துவிட்டு, அதன் பிறகு நாயகனைத் தேர்வு செய்தேன். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது தனுஷ் சாரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை. ஒரு ரசிகனாக தனுஷ் சாரை எப்படி பார்க்க வேண்டும் என நினைத்தேனோ, அப்படியே இந்தக் கதையை எழுதி இயக்குகிறேன்.
உங்கள் முதல் இரண்டு படங் களை விட இப்படத்தின் பட்ஜெட் அதிகம். நட்சத்திரங்களும் அதிகம். அது கஷ்டமாக இல்லையா?
அதை நான் ஒரு பெரிய விஷயமாக மனதில் ஏற்றிக் கொள் ளவில்லை. என் முந்தைய படங் களைப் போல இதன் படப்பிடிப் புக்கு போனேன், கதையில் எழுதப்பட்ட காட்சிகளை இயக்கி னேன். அவ்வளவுதான். பெரிய செட், பெரிய நடிகர்கள் என்று மனதில் எதையும் ஏற்றிக் கொள் ளாமல் முந்தைய படங்கள் போலவே மிக வேகமாக எடுத்து விட்டேன்.
குறும்படத்தில் இருந்து வெள்ளித்திரை படமாக முதலில் மாறியது உங்களின் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம்தான். இப்போது பலரும் அதைக் கடைப்பிடிக்கிறார்களே?
வெள்ளித்திரை படங்கள் என் றால், ஒரு சின்ன யோசனையை வைத்துக் கொண்டு அதை படமாக பண்ணுவதுதான். அதையே இப்போது ஒரு குறும்படத்தை வைத்து வெள்ளித்திரை படமாக மாற்றுகிறார்கள். குறும் படத்தை வைத்துக் கொண்டு இயக்குநராகும் வாய்ப்பை பெறு வது ஹாலிவுட்டில் சாதாரணமாக நடக்கிறது. ஒரு புதிய இயக்கு நரின் குறும்படங்கள், அதை அவர் படம் பிடித்திருக்கும் விதம் ஆகியவை தயாரிப்பாளருக்கு நம்பிக்கை தரும். இதை ஒரு நல்ல விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.
‘மாரி’ படத்தின் பாடல்கள் எல்லாமே குத்துப் பாடல் ரகத்திலேயே இருக்கிறதே?
இப்படத்தின் கதை அப்படி. இதில் வேறு மாதிரியான பாடல் கள் எதையுமே திணிக்க முடி யாது. படம் பார்க்கும்போது அதை நீங்கள் உணர்வீர்கள்.
தனுஷ் - ரோபோ சங்கர் காமெடிக் கூட்டணி எப்படி வந்திருக்கிறது?
இப்படம் முழுக்க தனுஷ் சாருடன் ரோபோ சங்கர் வருவார். இருவரின் வசனங்கள், காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அதே போல, இப்படம் ரோபோ சங்கருக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுக்கும் .
உங்கள் முந்தைய படங்களைவிட ‘மாரி’ படத்தின் டிரெயிலர் கமர்ஷியலாக இருக்கிறதே. உங்களுக்கு கமர்ஷியல் இயக்குநராக வேண்டும் என்று ஆசையா?
வெவ்வேறு கதைக்களங்களில் படம் பண்ண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்துக்கு பிறகு வேறு மாதிரி படம் பண்ண வேண்டும் என்று ஆசைப் பட்டேன். சூழ்நிலை காரணங் களால் ‘வாயை மூடி பேசவும்’ அமைந்து விட்டது. அந்தப் படத்துக்கு முன்னால் பண்ணி யிருக்க வேண்டிய படம் ‘மாரி’. ஒன்றரை வருடங்கள் கழித்து பண் ணலாம் என்று தனுஷ் சார் சொன்னதால் இப்படம் தாமதம் ஆனது அவ்வளவுதான். ‘மாரி’ படத் துக்கு பிறகும் நான் வெவ்வேறு களங்களில்தான் படம் பண் ணுவேன்.
‘வாயை மூடி பேசவும்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையே. அதற்கு என்ன காரணம்?
அப்படத்தின் இரண்டாம் பாதி யில் வசனங்களே இருக்காது. இதை எவ்வளவு சரியாக பண்ணி னாலும், அப்படம் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமே போய் சேரும் என்று தொடங்கும்போதே தெரியும். தயாரிப்பாளர் சசிகாந் திடம் நாலு கதைகளை நான் கொடுத்திருந்தேன்.
அவற்றில் இருந்து அவர் ‘வாயை மூடி பேசவும்’ கதையைத்தான் தேர்வு செய்தார். அதைத்தான் படமாக எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதே நேரத்தில் நான் நினைத்ததை விட அதிகப்படியான மக்களிடம் போய் அப்படம் சேர்ந்தது.
மாரி ரீ ஷுட் வதந்தி -முற்றுப்புள்ளி வைத்தார் பாலாஜி மோகன்
மாரி படத்தின் தர லோக்கல் ட்ரெய்லரும், பாடல்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன. இந்நிலையில், திட்டமிட்டபடி ஜுலை 17 படம் திரைக்கு வரவில்லை, சில காட்சிகளை ரீ ஷுட் செய்கிறார்கள் என்று ஸ்டுடியோ வட்டாரங்களில் பரபரப்பு.
உண்மை நிலவரம் என்ன?
ஜுலை 17 சிவ கார்த்திகேயனின் ரஜினி முருகன் வெளியாவதாக முன்பு கூறியிருந்தனர். அதன் பிறகே ஜுலை 17 மாரி வெளியாகும் என அறிவித்தனர். தேவையில்லாமல் எதற்கு தனுஷுடன் போட்டி என சிவ கார்த்திகேயனும், திருப்பதி பிரதர்ஸும் ரஜினி முருகனின் பட வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இன்னும் பல காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது என்று அதற்கு காரணமும் கூறினர்.
இந்நிலையில் ஜுலை 17 சிம்புவின் வாலு வெளியாவதாக அறிவித்தனர். ரிலீஸ் தேதி நெருங்கும் நேரம், மாரி அன்று வெளியாகாது, ரீ ஷுட் போகிறார்கள் என்று வதந்தி.
அதனை மறுப்பதுபோல், தனது ட்விட்டர் பக்கத்தில் ஜுலை 17 மாரி வெளியாகும் என படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் குறிப்பிட்டுள்ளார்.
Anirudh Ravichander @anirudhofficial 51m51 minutes ago #Maari to release on July 17th.. Same weekend as #VIP last year :) #varom @directormbalaji @dhanushkraja https://pbs.twimg.com/media/CJU6Wz1UEAAx8pk.jpg View photo 193 retweets 310 favorites
மறுதணிக்கைக்குப் பின் தனுஷின் 'மாரி'க்கு 'யு' சான்றிதழ்
தனுஷ் நடித்திருக்கும் 'மாரி' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார். ஜூலை 17ம் தேதி வெளியாகிறது.
தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மாரி'. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தை மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
அனைத்து பணிகளும் முடிவடைந்து, இப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள். 'யு/ஏ' சான்றிதழ் அளித்ததால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. சில காட்சிகளை நீக்கினால் மட்டுமே 'யு' சான்றிதழ் கிடைக்கும் என்று தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து படக்குழு, மறுதணிக்கைக் குழுவிற்கு படத்தை நேற்று (ஜூலை 7) திரையிட்டு காட்டினார்கள். சென்சார் அதிகாரிகள் சில காட்சிகளின் வசனத்தை mute செய்துவிட்டு 'யு' சான்றிதழ் வழங்கினார்கள்.
தற்போது மறுதணிக்கை அதிகாரிகள் 'யு' கொடுத்துவிட்டால், வெளியீட்டிற்கான பணிகளை தொடங்கிவிட்டார்கள். ஜூலை 17ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
Saw Trailer ! Vijay Yesudas Fit Aagave illa police getup.... Robo Shankar Reactions - :rotfl:
Verithanam Theme Music Releasing Today @ 6pm - Anirudh ! :) :) :)
மாரி ஒரு லோக்கல் தாதா - தனுஷ் பேட்டி
தனுஷ் நடித்துள்ள மாரி நாளை வெளியாகிறது. மாரியுடன் போட்டியிடுவதாக இருந்த ரஜினி முருகன் ஆரம்பத்திலேயே விலகிக் கொண்டது. கடைசி நேரத்தில் கோதாவில் குதித்த வாலு, நீதிமன்ற தடையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போட்டியில்லாமல் நாளை தனியாக வெளியாகும் உற்சாகத்துடன் மாரி படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு தனுஷ் பதிலளித்தார்.
மாரி எந்த மாதிரியான படம்?
லவ், காமெடி, கமர்ஷியல் எல்லாம் கலந்த ஜனரஞ்சகமான படம். சென்னையில் நடக்கிற கதை. மாரி என்னுடைய கதாபாத்திர பெயர். படத்தில் மாரி ஒரு லோக்கல் தாதா.
கதாநாயகியாக யாரைப் போடலாம் என நாயகன் முடிவு செய்வது சரியா?
என்னைப் பொறுத்தவரை நான் யாருக்கும் இதுவரை சிபாரிசு செய்ததில்லை. அதை டைரக்டரே முடிவு செய்வார். ஹீரோயின் விஷயத்தில் நான் தலையிடுறதில்லை. சில படங்களில், ஸ்பாட்டுக்குப் போன பிறகுதான் ஹீரோயின் யார்ங்கிறதே எனக்கு தெரியும். மரியானில் அப்படிதான் நடந்தது. ஸ்பாட்டுக்கு போன பிறகுதான் ஹீரோயின் பார்வதி என்பது தெரிய வந்தது.
உங்கள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் மீண்டும் நடிப்பீர்களா?
அதுக்கு ஐஸ்வர்யா எனக்காக கதை எழுதணும். அது எனக்குப் பிடிக்கணும். பிடித்திருந்தால் நடித்தாலும் நடிக்கலாம்.
அப்படியென்ன அவர் இயக்கத்தில் நடிக்க தயக்கம்?
ஐஸ்வர்யா டைரக்ஷனில் நான் நடித்தால் இரண்டு பேரும் வீட்டில் இருக்க முடியாது. யாராவது ஒருத்தர் வீட்டில் இருந்தால்தான் குழந்தைகளை கவனிக்க முடியும்.
இந்திப் படங்களில் நடிப்பது பெயருக்காகவா? அதிக பணத்துக்காகவா?
இரண்டுமே கிடையாது. இந்தியில் தமிழ்ல வாங்குறதைவிட குறைவாதான் வாங்குறேன். சினிமாவுக்கு இன, மொழி பேதம் கிடையாது. அந்தவகையில் இன்னொரு மொழியில் நடித்தோம்ங்கிற திருப்திக்காகவே இந்தியில் நடிக்கிறேன்.
அடுத்து உடனே இந்திப் படம் நடிப்பீர்களா?
அதுக்காக காத்திருக்கேன். பத்து பதினைந்து கதைகள் கேட்டிருக்கிறேன்.
தென்னிந்திய நடிகர்களை இந்திப்படவுலகில் மதிப்பதில்லை, துரத்தப் பார்ப்பார்கள் என்று ஒரு கருத்து உண்டு. இப்போதும் அப்படித்தானா?
நிச்சயமாக இல்லை. நான் நடித்த ரெண்டு படங்களுக்குமே அங்க நல்ல வரவேற்பு தந்தார்கள். அங்குள்ளவர்கள் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார்கள்.
அப்பா, அண்ணன், நீங்கள் மூவரும் தனித்தனியாக வசிக்கிறீர்களே, ஏன்?
அது அப்பா கொடுத்த ஐடியாதான். வாழ்க்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அப்பா சொன்னபடி தனித்தனி வீடுகளில் வசித்து வருகிறோம். இது நீச்சல் கற்றுக் கொள்வது மாதிரிதான்.
“பாகுபலியால் என் படத்திற்கு பாதிப்பில்லை” தனுஷ் பேட்டி!
பாகுபலி வெளியாகி இரண்டு வாரமாகப்போகிறது. பாகுபலி வெளியான அன்று என் படம் வெளியாகியிருந்தால் வேண்டுமானால் சொல்லலாம். அதற்கான ரசிகர்கள் வேறு, என் படத்திற்கான ரசிர்கள் வேறு. அதனால் நிச்சயம் பாகுபலியால் என் படத்திற்கு பாதிப்பில்லை என்கிறார் தனுஷ்.
தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் லோக்கல் ரவுடியாக மாரி கெட்டப்பில் தனுஷ் நடித்து நாளை வெளியாகவிருக்கும் படம் மாரி. இப்பத்திற்கான செய்தியாளர் சந்திப்பு தற்பொழுது நடந்தது. மாரி படம் பற்றியான பல தகவல்களை படக்குழுவினர் நம்மிடையே பகிர்ந்துகொண்டனர்.
தனுஷ் பேசியதாவது, “ சரத்குமாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னோடை ஆசை. அதுமட்டுமில்லாமல் எப்போது சரத்குமார் சாரை சந்தித்தாலும் அவரை தம்பி என்று என்னை அழைக்கச்சொல்லுவார். எனக்கே ஆச்சரியமாக இருக்கும். பழகியப்பிறகுதான் தெரியும் அவர் அனிருத் மற்றும் என்னை விட யூத் அவர் தான் என்று. அந்த அளவுக்கு நல்ல மனம் படைத்தவர்.
தொடர்ந்து புகைப்பிடிக்கும் காட்சியிலேயே நடிக்கிறீர்களே?
அனேகன் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் கிடையாது. படத்திற்கு ஏற்றமாதிரி நடிக்கிறேன். மாரி படத்தில் லோக்கல் டானாக வருகிறேன். அதனால் புகைப்பிடிக்கும் காட்சிகள். இயக்குநர் சொல்லுவதைத்தான் நான் செய்கிறேன். அவரிடன் முடியாது என்று கூறமுடியாது.
படத்தோட சேட்டிலைட் உரிமையை நீங்கள் வாங்கிவிட்டீர்களாமே?
எங்கிட்ட சேட்டிலைட்டே இல்ல. பின்ன எப்படி சேட்டிலைட் உரிமையை நான் வாங்க முடியும். அப்படி வாங்கினாலும் எங்க கொண்டு போய் ஒளிப்பரப்புவது.
உங்களை பிடிக்கவே முடியவில்லையே?
முழுக்க முழுக்க வேலை மீது மட்டுமே கவனம் செலுத்துகிறேன். ஒரு நிமிடம் கூட எனக்கு ஓய்வு கிடைக்கவில்லை. மிகவும் கவனமாகவும் அதிகமாகவும் உழைக்க வேண்டியிருக்கிறது. அதனால் தான் நிருபர்களுடன் கூட பேச முடியவில்லை. அதான் இப்போ வந்துட்டேன்ல..
இப்போ பாட்டு! நெக்ஸ்ட் வசனம், இயக்கமா?
இயக்குநர் கேட்டால் மட்டுமே பாடல் எழுதிக்கொடுப்பேன். மற்றபடியெல்லாம் ஒன்றுமில்லை. இரண்டு வருடம் கழித்து வசனம், இயக்கம் கண்டிப்பாக இருக்கும். நானே இயக்கத்தில் இறங்க தயார்.
All shows in Malaysia were cancelled on Thursday night and refunds made.
Some cinemas offered tickets for 2 other movies instead!
Police were summoned to IOI mall who announced that the movie was banned!
What is happening!!!!
Only possible for tamil movies:lol: Same issue with uv..bunch of morons with no business ethics
What is UV?
throwing of dividers at IOI brought the police there. Real idiots!
at this rate, the chains will hesitate to screen Tamil movies.
Dhanush @dhanushkraja 8h8 hours ago Can't wait for Tom first day first show .. Gonna watch with my fans :) so excited :) God bless