Originally Posted by
g94127302
திரு செல்வகுமார் அவர்களுக்கு , இரு தரப்பினரும் இணைந்து ஒரு காழ்புணர்ச்சியும் இல்லாமல் செயல்படுவோம் என்று நீங்கள் சொன்னது , இந்தியா விற்கு சுதந்திரம் வந்த செய்தி எப்படி அன்று உள்ள அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சியை அளித்திருக்குமோ , அப்படி எனக்கிருந்தது . மிகவும் நன்றி சார் ! - உங்களுக்கு தெரியாத விஷயம் இல்லை இது - இரு கைகளும் இணைந்தால் தான் சப்தம் வரும் - நியூட்டனின் 3வது சட்டம் போல ( every action has its equal and opposite reaction ) இரு திரிகளும் ஆரோக்கியம் குன்றி வளர்வதால் நமக்கும், நம் அடுத்த தலைமுறைக்கும் என்ன இலாபம் இருக்க முடியும் ? நாம் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை . இருந்தாலும் உரிமையுடன் சகோதரர் என்று எழுதுகிண்டீர்கள் - உங்கள் எண்ணங்களை நான் மதிப்பேன் என்ற ஒரு நம்பிக்கைத்தானே என்னை உங்கள் சகோதரர் என்று சொல்லத்தோன்றுகின்றது - அப்படித்தானே மற்றவர்களும் நினைப்பார்கள் - அப்படி அவர்கள் நினைக்காவிட்டால் தான் தவறு .. கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒரு சக்தி இங்கே நம்மை எழுதவைப்பத்தின் மூலம் உறவை பிணைக்கின்றது - அதே சக்தி நாளை நேரில் சந்திக்கவும் வழி வகுக்கலாம் - இதில் ஏன் மற்றவரை புண்படுத்தக்கூடிய கடும் சொற்கள் நம்மிடையே ஒரு வில்லனாக வர வேண்டும் ? இரு திலகங்களுக்கும் இல்லாத அந்த குணம் தீவிர பக்தர்களான நமக்குள் ஏன் வளரவேண்டும் - கடிகாரத்தை பின்னோக்கி ஓட வைக்கும் திறன் நமக்கு இருந்தால் - அன்று நடந்த சில தவறுகளை திருத்தி விடலாம் - ஆனால் என்ன செய்வது காலத்தை பின்னோக்கி செல்ல வைக்கும் திறனை நமக்கு இறைவன் ஏனோ கொடுக்க வில்லை . இவர்தான் சிறந்தவர் என்று சொல்வதை சற்றே தவிர்த்து இவரும் சிறந்தவர் என்று சொல்லும் போது ஏற்படும் சுவை தேனிலும் இனியது - உங்கள் எழுத்துக்கள் போல , திரு கலைவேந்தனனின் அழகிய தமிழைபோல --- சத்தியமாக யார் மனமும் புண் பட கண்டிப்பாக வாய்ப்பே இல்லை . நடைமுறை சற்று கடினம் - முடிந்தால் முடிக்க முடியாதது ஒன்றுமே இல்லை - இரு திலகங்களும் காட்டிய வழி இதுதான் . நினைத்ததை முடிப்பவரை தலைவனாக கொண்ட உங்களுக்கு இது ஒரு சவாலே அல்ல ! எங்களுக்கும் அப்படித்தான் - சவால்களை வெற்றிகரமாக சமாளித்த ஒருவரை எங்கள் திலகமாக வைத்து கொண்டிருக்கின்றோம் !!
இந்த பதிவு ஒரு நட்பு முறையில் எழுதப்பட்ட ஒன்று - உங்களுக்கு யோசனை சொல்வதாக எடுத்து கொள்ளாதீர்கள் - எனக்கு அந்த அளவிற்கு திறமையோ , தகுதியோ இல்லை
அன்புடன்
ரவி