-
'இறைவி' சர்ச்சை: செயற்குழுவில் தயாரிப்பாளர்கள் காட்டம் - TAMIL THE HINDU
'இறைவி' படத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்ததாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவில் காட்டமாக விவாதிக்கப்பட்டது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'இறைவி'. சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
ஒரு தயாரிப்பாளருடான ஈகோ யுத்தத்தின் விளைவாக முடக்கப்படும் ஒரு திரைப்படத்தின் இயக்குநரை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு, அதையொட்டி நகரும் வகையில் இறைவி கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் காட்டப்பட்ட தயாரிப்பாளர் கதாபாத்திரம் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டதாகவும், ஒட்டுமொத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்களையும் அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பல தயாரிப்பாளர்கள் படம் வெளியான அன்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.
இதனால் ஜூன் 4ம் தேதி மாலை சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் 'இறைவி' படத்தின் காட்சி தயாரிப்பாளர் சங்கத்திற்காக திரையிடப்பட்டது. இதில் சுமார் 100 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு பார்த்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கார்த்திக் சுப்பராஜூக்கு ரெட் போட்டாக வேண்டும் என்ற குரல் மேலோங்கி இருக்கிறது.
செயற்குழுவில் தயாரிப்பாளர்கள் காட்டம்
'இறைவி' படத்துக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எதிர்ப்புகள் வலுக்கவே தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று (ஜூன் 6) மாலை நடைபெற்றது.
அதில் பல தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்பராஜூக்கு 'ரெட்' போட வேண்டும் என்று குரல் எழுப்பி இருக்கிறார்கள். மேலும் சிலர் இப்படத்தின் கதையை ஞானவேல்ராஜா மற்றும் சி.வி.குமார் இருவருமே முழுமையாக தெரியாமல் தயாரித்திருக்க மாட்டார்கள். ஆகவே, அவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.
செயற்குழு கூட்டத்தின் இறுதியாக, இயக்குநர் சங்கத்திற்கு புகார் தெரிவித்து அவர்களை கார்த்திக் சுப்பராஜை அழைத்து விசாரிக்க சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். அந்த முடிவு வரும் வரை கார்த்திக் சுப்பராஜூக்கு யாரும் ஒத்துழைக்க வேண்டாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எந்த ஒரு படத்துக்கோ, இயக்குநருக்கோ ரெட் போட முடியாது என்று சொல்லப்படுகிறது.
ஏன் ரெட் போட முடியாது?
'விஸ்வரூபம்' படத்துக்கு ரெட் போடப்பட்ட போது, டெல்லியில் உள்ள CCI -ல்(Compatision Commission of India) புகார் அளித்தார்கள். அப்போது அவர்கள் விசாரித்து, படத்துக்கு தடை குறித்து பேசியவர்கள் அனைவரையும் அழைத்து விசாரித்தார்கள். அந்த சர்ச்சை இன்னும் முடிவடையாத சூழலில் மீண்டும் ரெட் போட்டு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.
என்ன சொல்கிறார் கார்த்திக் சுப்பராஜ்?
கார்த்திக் சுப்பராஜ் தரப்பில் விசாரித்த போது, "இதுவரை புகார் உள்ளிட்ட எந்த ஒரு விஷயம் தொடர்பாகவும் அவருக்கு வரவில்லை. அவ்வாறு வந்தவுடன் மட்டுமே அவர் பேசுவார்" என்று தெரிவித்தார்கள்.
-
முதல் பார்வை: இறைவி - நிறைவற்ற செதுக்கல்! - tamil hindu
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மூன்றாவது படம், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி இணைந்து நடிக்கும் படம், டைட்டில் ஏற்படுத்திய ஈர்ப்பு என்ற இந்த காரணங்களே 'இறைவி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான முந்தைய படங்களான 'பீட்சா', 'ஜிகர்தண்டா' ஆகிய இரு படங்களும் மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தன. தமிழ் சினிமாவில் புது அலைகளை ஏற்படுத்திய இயக்குநர்களில் முக்கியமானவரான கார்த்திக் சுப்புராஜின் மூன்றாவது படம் இன்னும் சில எல்லைகளைத் தொடும் என்ற நம்பிக்கையில் 'இறைவி' பார்க்கும் ஆவலுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
தியேட்டர் நோட்டீஸ் போர்டில் வைக்கப்பட்டிருந்த சென்சார் சான்றிதழில் யு/ஏ குறிப்பைப் பார்த்து ரசிகர்கள் இத்தனை கட்ஸ் கொடுத்திருங்காடா என பேசியபடி உள்ளே நுழைந்தனர்.
'இறைவி' படம் எப்படி?
'இறைவி' கதை: தயாரிப்பாளருடன் ஏற்பட்ட தகராறால் தன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கிறார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. அண்ணனின் அழுகையைக் கண்டு அவரது தம்பி சிம்ஹா கோபப்படுகிறார். அவரது குடும்ப நண்பர் விஜய் சேதுபதி அதற்கும் மேலே தயாரிப்பாளரிடம் கொந்தளிக்க பிரச்சினை வெடிக்கிறது. அதற்குப் பிறகு யார் யார் என்ன ஆகிறார்கள்? எஸ்.ஜே. சூர்யாவின் படம் ரிலீஸ் ஆனதா? இந்த ஆண்களின் பின்னால் இயங்கும் பெண்கள் உலகின் நிலை என்ன? என்பது மீதிக் கதை.
முதல் இரண்டு படங்களின் சாயல் துளியும் இருக்கக்கூடாது என்பதற்காக முற்றிலும் வேறு ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்ட விதத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கவனம் பெறுகிறார். ஆனால், சினிமாவுக்கு மிக முக்கியமான திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தத் தவறி இருக்கிறார் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.
படத்தின் நாயகனாக ஆளுமை செலுத்தி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சொன்ன வார்த்தைகளை ரிப்பீட் அடிப்பது, இரட்டை அர்த்த வசனம் பேசுவது, ஹை டெசிபலில் கத்தி அட்ராசிட்டி பண்ணுவது என வழக்கமான இமேஜே இதில் உடைத்திருக்கிறார். ரிலீஸ் ஆகாத படத்தை எண்ணி வருந்துவது, விரக்தியில் புலம்புவது, ஏக்கப் பெருமூச்சில் விம்முவது, தயாரிப்பாளரிடம் பொங்குவது, ஒரே படத்தில் ஓவராகப் பேசும் இயக்குநருக்கு அட்வைஸ் செய்வது, கோபம்- ஆவேசம்- ஆதங்கம் என எல்லா உணர்வுகளிலும் ஸ்கோர் செய்கிறார். இன்னும் சொல்லப்போனால் எஸ்.ஜே.சூர்யா ஒரு நடிகனாக இறைவியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்குரிய தேர்ந்த நடிப்பை ஆத்மார்த்தமாக வழங்கியிருக்கிறார். விஜய் சேதுபதியின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகளிலும், அன்பான நடவடிக்கைகளிலும் சில நெகிழ்வான இயல்பான தருணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிம்ஹா தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். இன்னும் உச்சரிப்பில் தான் அவர் தடுமாறுகிறார். அதை இனி வரும் காலங்களிலாவது சரி செய்தாக வேண்டும்.
அஞ்சலியின் நடிப்பு நிறைவை அளிக்கிறது. விஜய் சேதுபதியின் கேள்விக்கு, 'எப்ப கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன்' என்ற அஞ்சலியின் உறுதி அவர் பாத்திரப் படைப்புக்கு கம்பீரம் சேர்க்கிறது.
சீனுமோகன் நடிப்பு யதார்த்தப் பதிவு. ராதாரவி, கருணாகரன், கமாலினி முகர்ஜி, பூஜா தேவ்ரியா, ஆர்.கே.விஜய் முருகன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
ஆர்.கே.விஜய் முருகனின் கலை இயக்கமும், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும் படத்துக்குக் கூடுதல் பலம். மழை, மதுபானக் கடைகள், இருட்டு, கோயில், வண்ணங்கள் என்று எல்லாவற்றிலும் சிவகுமார் விஜயனின் கேமரா ஆட்சி செலுத்தியிருக்கிறது.
சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. எடுத்த எடுப்பில் எட்டு ரவுண்டு போகப் போறேன் பாரு, துஷ்டா, 'மனிதி' மான்டேஜ் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. கடற்கரைப் பாடலை கண்ணை மூடிக்கொண்டு கட் செய்திருக்கலாம்.
'எப்பவும் நாம பேசக் கூடாது. நம்ம எடுத்த படம் பேசணும்', 'ஒரு கலைஞனை சிதைச்சிடாதீங்க. அது தப்பு', 'உன் எக்ஸ் வுட்பியோட கரன்ட் ஹஸ்பெண்ட்' போன்ற கார்த்திக் சுப்புராஜின் வசனங்கள் கூர்மை.
பார்த்துப் பார்த்து கதாபாத்திரங்களைத் தேர்வு செய்த கார்த்திக் சுப்புராஜ் பாத்திரப் படைப்பில் சொதப்பி இருக்கிறார். பூஜா தேவ்ரியா, சேதுபதியிடம், சித்தப்பா சீனுமோகனிடமும் அப்படி ஒரு தெளிவான விளக்கம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு சேதுபதியை ஜன்னலோரம் பார்த்து அழுவது ஏன்? அஞ்சலி ஏன் இன்னொரு நபர் மீதான காதலை கணவனிடம் சொல்ல வேண்டும்? அதற்குப் பிறகும் கணவனே வேண்டும் என முடிவெடுக்க வேண்டும்? சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யாவின் பாத்திரப் படைப்பிலும் இப்படி விரிசல்கள் நிறைந்துள்ளன.
கோவலன் - கண்ணகி - மாதவி கதாபாத்திரங்களை நவீனமய மறுவடிவமாக்க முயற்சி செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், அது முழுமை அடையாமலும், ஆழமான பாத்திர வார்ப்பு இல்லாததும் நீர்த்துப் போக வைக்கிறது.
படம் ரிலீஸ் நோக்கிய பயணம் இரண்டாம் பாதியில் தடம் மாறும் போது திரைக்கதையும் தடுமாறுகிறது. டிராமாத்தனம் கூடுவதால் படம் வலுவிழக்கிறது.
பெண்களை பெருமைப்படுத்த வேண்டும், போற்ற வேண்டும் என்பது வரவேற்க வேண்டியது தான். ஆனால், அதற்காக ஒட்டுமொத்த ஆண் சமூகமே கெட்டவர்கள். திமிர் பிடித்தவர்கள். ஆண் என்ற கர்வத்தில் தவறை மட்டுமே அடுக்கடுக்காக செய்வார்கள் என்று காட்சிப்படுத்தி இருப்பது படத்தில் இருக்கும் வன்முறையைக் காட்டிலும் அதிக ஆபத்துடன் தெறிக்கிறது.
மொத்தமாகப் பார்த்தால் 'இறைவி' நிறைவாக செதுக்கப்படவில்லை என்பதை உணரமுடிகிறது.
-
‘Iraivi’ film review - http://gulfnews.com
S.J. Suryah brilliantly carries the film on his shoulders
http://static.gulfnews.com/polopoly_...2033780213.jpg
Iraivi, a Tamil film out now in the UAE, delves into the lives of four women — Ponni, the lower-middle-class woman; Malar, a widow; Yazhini, the urban woman; and last, but not least, a grandmother lying in coma.
While Ponni (Anjali) dreams of a life of love with Michael (Vijay Sethupathi) after their marriage, she faces the bitter truth early on when he tells her that he was forced into the wedding.
Malar (Pooja Devaria), an artist in a relationship with Michael, treats their bond as a mere physical necessity and refuses to marry him.
Yazhini (Kamalini Mukherjee), a working woman and mother to a little girl, is a loving wife and caring daughter-in-law, but has to deal with an alcoholic husband, Arul, a filmmaker. Arul (S.J. Suryah) resorts to drinking after his producer refused to release his film — solely to settle old scores with him. Arul’s mother, lying in a coma, finally gets her husband’s attention — after having been neglected by him all her life.
Directed by Karthik Subbaraj, Iraivi is different from his earlier films, Pizza and Jigarthanda. But his signature is evident in the characterization and depth of the story. Each character is well fleshed-out and clearly not stereotyped.
What happens to these women whose lives are messed up by the impulsive behaviour of their men? The story picks up after the interval when the women decide to take charge of their lives. Does Yazhini’s solution lie in a divorce? Will Ponni return to Michael with their little daughter?
If ‘Pizza’ belonged to Vijay Sethupathi and ‘Jigarthanda’ is synonymous with Bobby Simha, Iraivi is S.J. Suryah’s film. The director of hits such as Vaali and Kushi is a natural and slips effortlessly into the skin of Arul.
Another remarkable performance is delivered by Anjali. Her Ponni wins your heart. Mukherjee brings out Yazhini’s dilemma well. Torn between her husband and the chance of a better life, she is a victim of circumstances.
Malar may be the other woman in Michael’s life but she is the sole woman in the story who is practical and in control of her life. Newcomer Devaria portrays Malar beautifully and with dignity.
Give Simha any role and he will deliver it to perfection. His Jagan, an impulsive college student, reveals a heart that is sensitive to the pain women go through. Subbaraj’s characters don’t fall in the regular mould, and the actor springs surprises now and then as the story unspools.
However, Iraivi does get a tad too long.
Santosh Narayanan’s music is wonderful and not easily forgotten.
-
சினிமா விமரிசனம் - இறைவி: பொறுப்பற்ற ஆண்களும் இறைவிகளும்! - www.dinamani.com
கணவன் எவ்வளவு தவறுகளைச் செய்தாலும் விட்டு விலக முடியாத, உதறமுடியாத பெண்களின் மனப்போராட்டங்களின் வடிவம், இறைவி. ஆண்களின் பொறுப்பற்ற செயல்களின் வழியே இந்தத் தலைமுறைப் பெண்களின் அவஸ்தைகளை உணர்வுபூர்வமாகவும் அப்பட்டமாகவும் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
எடுத்த படத்தை வெளியிடமுடியாமல் போராடும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, அதனால் உண்டாகும் விளைவுகள் என இந்த ஒருவரிக்கதையில்தான் எத்தனை எத்தனை முடிச்சுகள்! எத்தனை எத்தனை அலைக்கழிப்புக்கள்!
படம் வெளிவராததால் குடித்தே சீரழியும் எஸ்.ஜே. சூர்யா, அவரைச் சரியான வழிக்குக் கொண்டுவர பாடுபடும் அவருடைய மனைவி கமலினி ஒரு பக்கம்.
எஸ்.ஜே. சூர்யாவின் தம்பி பாபி சிம்ஹா. இருவருக்கும் நண்பர் விஜய் சேதுபதி. பாபி சிம்ஹாவுடன் இணைந்து கோயில் சிலைகள் தொடர்புடைய திருட்டுகளிலும் ஈடுபடுகிறார். எஸ்.ஜே. சூர்யாவைக் கொலை செய்ய முயல்கிற படத்தயாரிப்பாளரைக் கோபத்தின் விளைவால் கொலை செய்துவிடுகிறார் விஜய் சேதுபதி. அதனால் சிறைக்குச் செல்கிறார். இந்த நெருக்கடிகளால் குடும்ப வாழ்வில் படாதபாடு படும் அவருடைய மனைவி அஞ்சலி. (இந்த இரு பெண்களுக்கு இடையே இன்னொரு பெண், கணவனை இழந்தபிறகு, விஜய் சேதுபதியுடன் உறவு வைத்துக்கொள்ளும் பூஜா தேவரியா.)
மூன்று ஆண்களின் செயல்களால் கமலினியும் அஞ்சலியும் படுகிற அவஸ்தைகளை செண்டிமெண்ட் பாணியில் கதை சொல்லாமல் ஆக்*ஷன் படப்பின்னணியில் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர்.
உண்மையில் எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி என இந்த நடிப்புத் தூண்கள் தான் படத்தை வலுவாகத் தாங்குகின்றன. எஸ்.ஜே. சூர்யாவை இயக்குநர் வேடத்துக்குத் தேர்ந்தெடுத்ததில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பெரும்பாலான காட்சிகளில் குடிகாரன் போல நடிப்பதென்பது சவாலான காரியம்தான். அதை எஸ்.ஜே. சூர்யா நேர்த்தியாகச் செய்துள்ளார்.
விஜய் சேதுபதிக்கு வழக்கமான அடியாள் வேடம் (கொஞ்சமாச்சும் மாறுங்க ப்ரோ). நண்பருக்காகக் கொலை செய்வது, தொடர்ந்து திருட்டில் ஈடுபடுவது என்று குடும்பத்தின் மீது அக்கறை இன்றி சுற்றும் கதாபாத்திரம். கடைசிக் காட்சிகளில் தன் முத்திரையை பதித்துவிடுகிறார்.
பாபி சிம்ஹாவுக்கு வில்லன் கதாபாத்திரம். நண்பனுக்குத் துரோகம் செய்வது, நண்பனின் மனைவியைக் கவர நினைப்பது என படம் முழுக்க கெட்டக் காரியங்களில் ஈடுபடுகிறார். நடிப்பில் அவரும் நிறைவாகவே செய்துள்ளார். ஆனால் வசன உச்சரிப்பில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும்.
பெண்களின் தீராத் துயரங்களுடன் ஆண்களின் நட்புகளில் உண்டாகும் சிக்கல்கள், துரோகங்கள் என திரைக்கதை மனித வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தையும் காண்பிக்கிறது.
மீண்டும் அஞ்சலி. கனவுகளுடன் திருமணப் பந்தத்தில் நுழைகிறவர் பிறகு படிப்படியாக எப்படியெல்லாம் சோகங்களுடன் வாழ நேர்கிறார் என்பதை நடிப்பில் துல்லியமாக நிரூபித்துள்ளார். கணவன் ஜெயிலில் இருந்து வந்தபிறகு அவனிடம் உரிமையாக கோபிக்கும் காட்சிகளில் அஞ்சலி பிரமாதப்படுத்தியுள்ளார். ஒரு சினிமா இயக்குநரின் மனைவி படும் பாடு கமலினியுடையது. அஞ்சலிக்கு நிகரான மனப்போராட்டங்கள். நல்வரவு, புதுமுகம் பூஜா தேவரியா. பெண் கேட்டு வருகிற காட்சியில் தன்னை வெளிப்படுத்தும் விதமும் தன்னைச் சந்தேகப்படும் விஜய் சேதுபதியை எதிர்கொள்ளும் முறையும் இந்த நடிப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் வழக்கம்போல இனிமை. முக்கியமான காட்சிகளில் அழுத்தம் தருகிறது பின்னணி இசை. பல பகுதிகளில் பயணிக்கும் கதைக்கு ஒளிப்பதிவு கூடுதல் பலம். பல கிளைக்கதைகள் கொண்ட ஒரு படத்துக்கு எடிட்டிங் நிச்சயம் சவால்தான். ஆனால் படத்தின் நீளத்தைப் பார்க்கும்போது எடிட்டிங் இன்னும் கறாராக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
காமெடிக்கும் டூயட் பாடல்களுக்கும் வாய்ப்பில்லாத படம். பொழுதுபோக்கு அம்சம் என்கிற வழக்கமான தமிழ்சினிமாவுக்கே உரிய காட்சிகளையும் இணைக்கமுடியாது. அதேசமயம் காத்திரமான காட்சிகளுக்கு நடுவே பாடல்கள், சின்னச் சின்ன அழகான வசனங்கள் என படம் அதற்கே உரிய வேகத்தில், சுவாரசியத்தில் நகர்கிறது. கடைசி அரை மணி நேரத்தில் திருப்பமோ திருப்பம்... அதிலும் கட்டக்கடைசி காட்சியில் உண்டாகும் அதிர்ச்சியில் திரையரங்கம் உறைந்துவிடுகிறது. அஞ்சலி மீது ஏற்படும் பரிதாபம் கதையின் வெற்றி.
உறுத்தல்களும் இல்லாமல் இல்லை. ஏற்கெனவே ஒருமுறை இன்னொருவருக்காக ஜெயிலுக்குப் போனவன் மீண்டும் அதே நபருக்காக தவறான காரியங்களில் ஈடுபட வாய்ப்புண்டா? வடிவுக்கரசி கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நானும் உன் நண்பனைக் காதலித்தேன் என அஞ்சலி விஜய் சேதுபதியிடம் சொல்லவேண்டிய அவசியம் என்ன? அது வெறும் சினிமா வசனமாகவே தனித்து நிற்கிறது. எஸ்.ஜே. சூர்யா சினிமா இயக்குநர் என்றாலும் அவருக்கு திரைத்துறையின் வேறு நபர்களுடன் தொடர்பே இல்லையா? அவருக்கு உதவவோ அல்லது அவர் பிரச்னை குறித்து விவாதிக்கவோ ஒரு கோடம்பாக்கத்து நபரும் படத்தில் தென்படவில்லையே. என்னதான் கணவன் பொறுப்பற்றவன் என்றாலும் அவன் இறந்தால் அப்படியே எந்த மனைவி விட்டுப் போய்விடுவாள்? கிளைமாக்ஸில் எஸ்.ஜே. சூர்யா மனைவிக்கு போன் பேசும்போதே அவர் உணர்த்துவது என்ன என்பது புரிந்துவிடுகிறது. அந்தக் காட்சிக்கு நீளமான வசனம் தேவையா?
சமூகத்தைப் பிரதிபலிக்கும் கதை, அட்டகாசமான நடிப்பு, தனித்துவமான மேக்கிங் என இம்முறையும் தனது முயற்சிக்காகப் பாராட்டுகளைப் பெறுகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
-
’இறைவி’ – சில தவறுகள்…சில தருணங்கள் - www.dinamani.com
‘எவன்டா பெண்ணை முழுசா நேசிச்சு இருக்கீங்க?’ இப்படி சட்டைக் காலரைப் பிடித்து கேட்கும் ஒற்றை வரிக் கேள்வியை திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் அந்த கேள்விக்கு பதில் கண்டடைய முடிந்ததா இல்லையா என்றால் இல்லை என்று தான் சொல்ல முடிகிறது. எந்தத் திசையில் பயணிக்க வேண்டுமோ அதற்கு நேர் எதிர் திசையில் ஒரு பயணம் மேற்கொண்டால் எங்கு போய்ச் சேர முடியும்? அப்படித்தான் அமைந்துவிட்டது இறைவியின் நோக்கமும் சென்றடைந்த இடமும். குழப்பமாக உள்ளதா? திரைப்படமும் இத்தகைய குழப்பங்களை உள்ளடக்கியுள்ளதால் அதைச் சற்று அலசினால் தெளிவு பெறலாம்.
கதா பாத்திரங்கள்
நான்கு ஆண்கள் – பெரியவர் (ராதாரவி) அவர் மகன்களான இயக்குநர் அருள் (எஸ்.ஜே.சூர்யா), கல்லூரியில் படிக்கும் அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா) மற்றும் அருளிடம் வேலைப் பார்ப்பவனாக இருந்தாலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவனாகவே கருதப்படும் மைக்கேல் (விஜய் சேதுபதி) இவர்கள் தான் கதையின் நாயகர்கள்.
நான்கு பெண்கள் - அருளின் அம்மா (வடிவுக்கரசி), மனைவி யாழினி (கமலினி முகர்ஜி), மைக்கேலின் காதலி மலர்விழி (பூஜா), மனைவி பொன்னி (அஞ்சலி).
இந்த ஆண்களுக்கும் அவர்களுடைய பெண்களுக்கும் இடையே நடக்கும் உறவுப் பிணைப்புகளும், பிணக்குகளும், சிக்கல்களுமே ‘இறைவி’.
கதை
அருள் ஒரு சினிமா இயக்குனர். பெரும் போராடத்துடன் அவன் இயக்கிய இரண்டாம் படத்தின் வெளியீடு தடுக்கப்படுகிறது. காரணம் அவனுக்கும் அப்படத்தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்படும் பிரச்னை. அருள் அதனால் முழு நேர குடிகாரனாக மாறிவிட அவனுக்கும் யாழினிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவனுக்கும் தயாரிப்பாளருக்கும் ஒரு மழை இரவில் சண்டை வலுக்க, அது கொலை வரை கொண்டு போய்விடுகிறது. அருளுக்காக கொலை செய்யும் மைக்கேலின் கதி என்ன, இவர்களால் வதைபடும் யாழினி மற்றும் பொன்னியின் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதே மீதிக் கதை.
திரைக்கதை
பெண்களின் பிரச்னை பெரும்பாலும் வாழ்க்கை துணையால் மட்டும் என்று சொல்லிவிட முடியாது. அவர்களுடைய பல பிரச்னைகளுள் முக்கியமானது இது என்று சொல்லலாம். தவிர எல்லா ஆண்களும் சதா சர்வ காலம் குடித்துக் கொண்டும், மனைவியைத் துன்புறுத்திக் கொண்டும் இருப்பதில்லை. இந்தத் திரைப்படத்தில் வரும் ஆண்கள் குடிக்கிறார்கள், கொள்ளை அடிக்கிறார்கள், சத்தமாகப் பேசி சண்டை போடுகிறார்கள், கொலை செய்கிறார்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதில்லை. படம் ஒரு கொலைகாரனைப் பற்றியோ அடியாள் பற்றியோ என்றிருந்தால் அதன் கோணம் வேறு. பெண்களின் பிரச்னையை மையப்படுத்தும் படமெனில் அதை ஒரு பெண்ணின் பார்வையில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். பெண்களைப் பற்றிய முழுமையான பார்வையோ சரியான புரிதலோ படத்தில் இல்லாதது பெரும் குறை. தவிர சிலைக் கடத்தல், கொலை என்று கதை மையத்தைத் தாண்டி வேறிடத்திற்கு அலைக்கழிக்கப்படுகிறது.
சில தருணங்கள்
மைக்கேல் கடுமையான சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு மனைவியைத் தேடி குக்கிராமத்திற்கு வருவதும், அவனை எதிர்கொள்ளும் பொன்னியின் இயல்பான கோபமும், அதன் பின்னான சமாதானமும் நேர்த்தியாக காட்சியமைக்கப்படுகிறது. தன்னுடைய மகள் அங்கிள் என்று தன்னை அழைப்பதைக் கேட்டு வருந்தும் மைக்கேல் அவள் கடைசியில் அப்பா என்று அழைத்து சாக்லெட் கேட்கையில் அவனால் ஒரு போதும் அந்த சின்னஞ்சிறிய குழந்தையின் ஆசையை நிறைவு செய்ய முடியாமல் கொல்லப்படுவது சோகம்.
மழை…. இந்தப் படம் மழையில் தொடங்கி மழையில் முடிவது கவித்துவம். மழையை சுதந்திரத்தின் குறியீடாகப் பயன்படுத்தியிருப்பதும் காட்சிரூபமான அழகான படிமம். யாழினி தன் தோழியுடன் ஒரு காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருக்கும் போது மழை வர, மழையில் நனையலாமா என்று கேட்பாள். அதற்குத் தோழி உடை நனைந்துவிடும் என மறுப்பாள். யாழினி அதனால் என்ன என்று சொல்வாள். அவள் மழையில் நனைய நினைத்தால் நனைந்துவிடும் இயல்புடையவள். மழை பற்றிய கனவுடன் மட்டுமே ஒதுங்கி இருப்பதில் பயனில்லை என்பதை அறிந்தவள். நனைய நினைத்து நனையாமல் இருப்பதை விட, நனைதலே சுகம் என்ற நிலைப்பாட்டில் இருப்பவள் அவள். தன் வாழ்க்கை, தன் முடிவு என்று சுயம் சார்ந்து சிந்திக்கும் பெண் யாழினி. அழகும் அறிவும் இணையும் போது ஒரு பெண் பேரழியாகிகிறாள். உள்ளும் புறமும் மலர்ந்த ஒரு பெண்ணால் தான் இறைவியாக முடியும். ஆனால் இந்தப் படத்தில் அது நிகழவில்லை.
சில குழப்பங்கள்
படத்துக்குத் தேவையான காட்சிகள் எடுக்கப்படாமலும் தேவையற்ற காட்சிகள் திணிக்கப்பட்டதுமாக இருப்பதால் இறைவி ஒரு முழுமையான திரையனுபவத்தை தர மறுக்கிறது. உதாரணமாக, கலைஞன், பரம்பரையான படைப்பாளி என்று ராதாரவியைப் பற்றி அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்களே தவிர அவர்களின் நடவடிக்கைகள், அவர்களுடைய கலையைப் பற்றிய நம்பகத்தன்மையை சொல்லும் அழுத்தமான காட்சி எதுவும் படத்தில் காண்பிக்கப்படவில்லை. பழம் பெருமை பேசியும், செட் ப்ராபர்ட்டி போல ஆங்காங்கே வெங்கல சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன அவ்வளவே. கலைஞர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள், உணர்வு நிலைப் பிறழ்வார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அதன் எல்லை எதுவென்று அறிந்தவர்கள். ஒரு உண்மையான கலைஞன் உயிரே போனாலும் தான் படைத்த சிலைகளை திருட உடன் பட மாட்டான். பிள்ளைகள், குடும்பம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு கலையை தன் வாழ்வையும் அர்ப்பணித்த பாரம்பரியமான கலைஞர்களைப் பற்றித் தான் நாம் கண்டும் கேட்டும் படித்தும் உள்ளோம். கலைஞனின் அடிப்படை குணங்களையே தவறாகச் சித்திரத்துள்ளபடியால் கதை நகர்வு நம்பகத்தன்மையை இழக்கிறது. சரி காலக் கொடுமை ஒரு கலைஞன் சிதைந்து போய், குணம் மாறிவிடுகிறான் என்றே வைத்துக் கொண்டாலும் எது அவனை இப்படியாக்கியது என்பதற்கான காரணம் எதுவுமே படத்தில் சொல்லப்படவில்லை. ஒரு கலைக் குடும்பத்தை குடிகார குடும்பமாகக் காண்பித்ததோடு அல்லாமல் சிலைக் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகக் காண்பித்திருப்பது சரியில்லை. ஒருசில குணநலன்களோடு இருப்பவர்கள் அதிலிருந்து மாறுவது சாத்தியம் தானா? எனில் அதற்கான அகர்னம் என்ன? வெறும் பணத் தேவை கலைஞனை கிரிமினலாக மாற்றிவிடுமா?
எந்த ஒரு பெண்ணும் கணவன் இறந்து கிடக்க, அடுத்த சில மணித்துளிகளில் தெளிவு பெற்று மழையில் நனைய மாட்டாள். அதே போல் முறையாக விவாகரத்துக் கூட பெறுமுன் யாழினி மறுமணத்திற்கு எப்படி தயாராக முடியும்? பெண் மனம் என்ன அவ்வளவு எளிதாக மாறும் இயல்புடையதா என்ன?முன்பு யாழினி மழையில் நனைய விரும்பும் பெண்ணாக காண்பிக்கப்பட்டு கடைசியில் அவளுடைய மகள் நனையலாம் எனும் போது வேண்டாம் ஆடை நடைந்துவிடும் என்று சொல்வது அவளுடைய கதாபாத்திரத்தின் சரிவாகவே உள்ளது. ஒரு பெண் தன் மிச்ச வாழ்க்கைக்காக எடுக்க வேண்டிய முடிவில் அவளுக்கு சில குழப்பங்கள் ஏற்படலாம். ஆனால் பழைய கணவன் புதுக் காதலன் இருவரையும் சூழ்நிலை மாற, மாற்றி மாற்றி நேசிப்பது இருவருக்குமே செய்யும் துரோகம். உண்மையில் ஆண்களால் பாதிக்கப்பட்ட சுயம் சார்ந்து இயங்கும் பெண் ஆண்களே வேண்டாம் என்று தான் முடிவெடுப்பாள். கசந்து போன அவள் மனம் உடனடியாக இன்னுமொரு திருமண உறவுக்குள் நுழைய விரும்பாது. தவிர குழப்பத்தில் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது என்று படித்து சுயமாக வேலை செய்யும் யாழினி போன்ற பெண்களுக்குத் தெரியாதா என்ன?
கடைசியாக ஒரு அரைவேக்காட்டு பாத்திர அமைப்பான ஜெகன் பற்றி சொல்லியே ஆகவேண்டும். பெண்கள் ஆண்களால் பாடுபடுவதைக் கண்டு வெறுப்படையும் ஜெகன் பெண்களின் மீது அதீத இரக்கம் கொள்வதாகச் சொல்கிறான். ஆனால் சொல்லில் இருக்கும் கரிசனம் செயலில் இருப்பதை. அண்ணனைப் போல பழகும் ஒருவனின் மனைவி மீது மோகம் கொள்வது மனப் பிறழ்வன்றி வேறென்ன? மைக்கேலை சிறைக்கு அனுப்பி அவன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ள அவன் நினைப்பது சரி தவறு என்பதைத் தாண்டி அவன் பெண்களின் மீது என்ன மரியாதை வைத்திருக்கிறான் என்று அவன் அடிப்படை குணத்தை சந்தேகிக்க வைக்கிறது. தவிர மைக்கேல் பிடிபட்டால் நிச்சயம் அவன் அருள் மற்றும் ஜகனின் ஆள் என்று தெரிந்து போலீஸ் அவர்களையும் பிடித்து விடும் தானே? இது போன்ற நிறைய லாஜிக் மீறல்கள் படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
இந்தத் திரைப்படத்தில் லாஜிக் மீறல்கள் அதிக உள்ளது. ஒரு முறை தவறு செய்தவன் அதற்கான தண்டனையையும் அனுபவித்துவிட்டவன் என்ன தான் எஜமான விசுவாசம் இருந்தாலும் தன் உயிரையும் வாழ்க்கையையும் தான் காப்பாற்றிக் கொள்ள நினைப்பான். பட்டுத் தெரிந்த பின்பு மீண்டும் அடி படத் துணிவதெல்லாம் அசாத்தியம். மைக்கேல் அப்படி அருளின் அன்புக்கு அடிமையாக இருக்கிறான் என்பதை நாம் நம்பினாலும் கடைசியில் அருள் தனக்காக இரண்டு முறை தவறு செய்தவனை தன் தம்பியைக் கொன்றான் என்ற காரணத்தால் அதுவும் அவன் உலகமகா உத்தம தம்பி எல்லாம் இல்லை, இன்னொருவனின் மனைவியை அடைய ஆசைப்பட்டவன், ஒரு கணவனாக ஒரு அறச்சீற்றத்தில் தான் ஜெகனை அவன் கொல்கிறான் அதற்கான மன்னிப்பையும் அவன் ரயில் நிலையத்தில் அருளிடம் கேட்கிறான். ஆனால் துளியும் இரக்கமற்று அவன் தனக்கு முன்னர் செய்த நன்மைகளை மறந்துவிட்டு மைக்கேலை கொன்றுவிடுகிறான் அருள். அவன் ஆண்களைப் பற்றியோ பெண்களைப் பற்றியோ அல்லது எதைப் பற்றியோ கருத்து கூற அருகதையற்றவனாகிவிடுகிறான். ஆண் நெடில் பெண் குறில் என்று வசனம் பேசி திரையரங்கில் கைதட்டல் வாங்கிவிடலாம் ஆனால் இப்படிப்பட்ட பல அடிப்படை கேள்விளுக்கான பதிலோ அதன் நியாயங்களோ படத்தில் எங்கேயும் காண முடியவில்லை.
வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என எதுவென்றாலும் அதனை குடித்து கொண்டாடுவோம் என்று வலியுறுத்தும் காட்சிகளை திரைவழியே சித்தரிப்பது பெரும் சமூகக் கேடு. தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு வேண்டுமென்று போராடி உயிர் விட்டவர்கள் இந்த மண்ணில் இன்னும் இருக்க, இப்படி குடித்துச் சீரழவதை கொண்டாடமாகக் காண்பித்திருப்பது எவ்வகையில் சரியாகும்? அதுவும் குடும்பத் தலைவரான தந்தையே மகன்களுக்கு ஊற்றிக் கொடுக்கும் காட்சிகளை எடுத்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
பெண்ணியம் என்றால் என்ன, சுதந்திரம் என்றால் என்ன, சுயம் சார்ந்த தேடல் உள்ள பெண் இது போன்ற வாழ்நிலைகளில் என்ன செய்வாள் என்பதையெல்லாம் மெனக்கிட்டு ஹோம் வொர்க் செய்து படம் இயக்கியிருக்கலாம். அல்லது அந்த கருத்தை தொடாமலாவது இருந்திருக்கலாம். வங்கால இயக்குனர் ரிது பர்னோ கோஷின் கிட்டத்தட்ட அனைத்துத் திரைப்படங்கள் பெண்களின் சுதந்திரத்தையும் வலியையும் வாழ்க்கையையும் பேசுபவை. அவை நேரடியாகவும் உண்மைத்தன்மையுடன் எடுக்கப்பட்டிருப்பதால் தான் இன்றளவும் உலக சினிமா வரிசையில் பேசப்படுகிறது. பெண்ணின் வலி, பிரச்னை என்பதை இத்தனை மேலோட்டமாக சொல்லிவிட முடியாது.
நடிப்பும் இசையும்
படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் அருமை. அஞ்சலி, புது முகம் பூஜா, கமலினி முகர்ஜி ஆகியோர் அனைவரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து இயல்பாக நடித்துள்ளனர். அருளின் சித்தப்பாவாக வரும் அனுமோகன் அதீத உணர்ச்சிப் பிடியில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரங்களுக்கிடையே சற்று சாந்தமாக வெள்ளந்தியாக இருப்பவர். எஸ்.ஜே.சூர்யா சில இடங்களில் மிகை நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் இப்படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. விஜய் சேதுபதியை சந்திக்க நேரிட்டால் நிச்சயம் நமக்கே சந்தேகம் வந்துவிடும், உண்மையில் அவர் நடிகரா அல்லது அடியாளா என்று. மனிதர் அலுக்காமல் இத்தகைய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் நமக்கு அலுப்பு ஏற்படுவது நிஜம். ஆனால் அவர் ஒரு காட்சியில் பொன்னியிடம் தயங்கி அவனுடன் எந்த அளவுக்குப் பழக்கம் என்று கேட்கும் கணத்தில் ஒரு கையறு நிலைக் கணவனை கண் முன்னே நிறுத்துகிறார். பின்ணனி இசை சொல்லும்படி இருந்தாலும் படத்தில் பாடல்கள் ஒட்டாமலும் அதிக கவனம் பெறாமல் இருப்பதும் உண்மை.
இறுதியாக….
நம்மிடைய எப்போதும் இரண்டு வகைப் படங்களே உள்ளன. ஒன்று நல்ல படம் மற்றது கெட்ட படம். இறைவியைப் பொறுத்தவரை ஒரு இரண்டும் கெட்டான் தனம் உள்ளது. அதாவது ஏதோ ஒரு நல்லதைச் சொல்ல நினைத்து, தீயவற்றை ஆழப் பதிய வைத்துவிடுகிறார் இயக்கிய்னர். இது பார்வையாளர்களை பெரும் குழப்ப நிலைக்குள் இட்டுச் செல்கிறது. வெள்ளையா இருக்கறங்க எல்லாம் நல்லவங்க, கறுப்பர்கள் கெட்டவர்கள் என்ற முட்டாள்தனமான சிலரின் நம்பிக்கையின் நீட்சியாக ஆண்கள் தவறு செய்பவர்கள் பெண்கள் துன்பப்படுபவர்கள் என்று இக்கதையில் சொல்லப்பட்டிருப்பது வேடிக்கை.
புதிய முயற்சி, பரீட்சார்த்தப் படம் என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், படத்தின் நோக்கம் மிகச் சரியானதாகவே இருந்தாலும், அதைக் கையாண்ட விதம கோணலாக இருப்பதால், இறைவி மனிதியாகக் கூட இல்லாமல் போனது பெரும் சோகம்.
-
-
-
"Making of Iraivi" - Web Series Final Episode
https://www.youtube.com/watch?v=3ptsRQiDar8
-
-
-
Iraivi Tamil Movie Will Make You Watch It More Than Once: Kamalinee
https://www.youtube.com/watch?v=bBBwTpJSy_c
-
Karunakaran about Iraivi: I was afraid to work with two directors
https://www.youtube.com/watch?v=P4JNFIkVPc8
-
-
KARTHIK SUBBARAJ IRAIVI PRESS MEET - Apr 15, 2016
https://www.youtube.com/watch?v=AacniwegZLk
-
Karthik Subbaraj's humorous speech at Iraivi audio launch
https://www.youtube.com/watch?v=yJxngPaDVxA
-
This Is What Am Longing For - S.J Surya's Emotional Speech - May 27, 2016 - Uploaded by Cinema Vikatan
https://www.youtube.com/watch?v=rnvdDGt-FMM
-
-
"Iraivi is one of the best films I've seen," Says Santhosh Narayanan - May 28, 2016
https://www.youtube.com/watch?v=xPRd3Cp_Nfg
-
"The Biggest Plus Of Iraivi Is Its Cast" - Karthik Subbaraj - May 27, 2016
https://www.youtube.com/watch?v=s_iKK7h7_DQ
-
watched IRAIVI
Nalla muyarchi !kuraigal neraiya irunthalum hatss off to kartik subburaj
kudichi kudichi kudumbathaiyum pombalanggalayum thali arukkira kudigara payaluga paakka vendiya padam...
s.j suryah perfomence wooow...
-
கையை கட்டி மலக்கிடங்கில் போட்டதுபோல இருந்தது.. இறைவி பற்றி சாருநிவேதிதா
சென்னை: பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'இறைவி' திரைப்படம் வித்தியாசமான திரைக்கதைக்காக பலரது பாராட்டை பெற்றுவருகிறது. ஒரு சில விமர்சகர்கள், சில வசனங்களை குறை கூறுகிறார்கள்.ஆனால், எழுத்தாளர் சாரு நிவேதிதா, மிகவும் காட்டமாக தனது வெப்சைட்டில் இறைவி குறித்து கருத்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: "கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது. இவ்வளவு ஆபாசமான, அருவருப்பான குப்பைப் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. பத்தே நிமிடத்தில் கிளம்பியிருப்பேன். ஆனால் இருட்டில் தடுக்கி விழுந்து விடலாம் எனப் பயந்ததால் இடைவேளை வரை அந்த மலக்கிடங்கில் கிடந்து விட்டு வந்தேன். மை காட், எப்பேர்ப்பட்ட கொடூரம்! விரிவான விமர்சனம் நாளை எழுதுகிறேன்". இவ்வாறு சாருநிவேதிதா தெரிவித்துள்ளார்.
-
இறைவி விமர்சனம்?
June 5, 2016June 5, 2016 by Charu Nivedita
இறைவி விமர்சனம் எங்கே என்று பத்து இருபது பேர் மின்னஞ்சல். இறைவியை மலக் கிடங்கு என்று சொன்னதால் அடிப்பேன் உதைப்பேன் என்ற மிரட்டல் பல. தமிழ்நாட்டில் நீங்கள் கருணாநிதியை விமர்சிக்கலாம்; ஜெயலலிதாவை விமர்சிக்கலாம். ஆனால் சினிமாவில் ஈடுபட்டிருப்போரை விமர்சித்தால் அடி உதைதான் கிடைக்கும். அல்லது, அதற்கு சமமான ஏச்சு பேச்சுகள் மிரட்டல்கள் கிடைக்கும். ஏனென்றால் தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம்.
ஏஷியாநெட் மின்னிதழில் நான் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகளை நீங்கள் படித்திருக்கலாம். அந்த இதழில் சினிமா பற்றியும் எழுதச் சொன்னதால்தான் இறைவியை முதல் காட்சியே பார்த்தேன். இல்லாவிட்டால் பிரபு காளிதாஸ் போன்ற நண்பர்களைக் கேட்டு விட்டுத்தான் போவது வழக்கம். எனவே இறைவி விமர்சனம் முதலில் ஏஷியாநெட் மின்னிதழில்தான் வரும்.
அதற்குப் பிறகுதான் சாருஆன்லைனில் வரும். பல நண்பர்களுக்கு இறைவி பிடித்திருக்கிறது. இறைவி பிடித்தது என்று சொல்பவர்களிடம் என் நட்பை முறித்துக் கொள்வது என்ற அளவுக்கு முடிவு செய்திருக்கிறேன். ஏனென்றால், இறைவி ஒரு மட்டமான படம் மட்டும் அல்ல; மட்டமான படம் எடுக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. நான் கூட ஒரு படம் இயக்கினால் அது மட்டமாகப் போக எல்லா வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் இறைவி சமூக விரோதக் கருத்துக்களை முன்வைக்கிறது. அதிலும் heroic ஆக. கடைசி காட்சியில் தண்டனை கொடுத்து விட்டதாக இயக்குனர் சொல்லலாம். அது சரோஜாதேவி புத்தகங்களில் எல்லா போர்னோவையும் எழுதி விட்டு, எனவே சகோதரர்களே, நீங்கள் உங்கள் வாழ்வில் கவனமாக இருங்கள், நான் செய்த தப்பை நீங்கள் செய்து விடாதீர்கள் என்று ஒரு வரி வரும். அது போலத்தான் இறைவியில் கடைசியில் வந்திருக்கலாம். இந்தப் படத்தை இளைஞர்கள் பார்த்தால் சமூகம் இப்போது இருப்பதை விட நூறு மடங்கு கிரிமினலாக மாறி விடும்.
மோசமான படங்கள் எத்தனையோ வருகின்றன. ஆனால் நாங்கள் ஏதோ செய்தி சொல்லுகிறோம் என்று வரும் போதுதான் இறைவி போல் சமூக விரோதமாக ஆகி விடுகிறது. இந்தப் படத்தில் ஃபெமினிஸம் சொல்ல வந்து என்னென்னவோ ஆகி விட்டது. பொறுக்கித்தனத்தை நியாயப்படுத்தும் படம் இறைவி. அதனால்தான் இந்தப் படத்தை நல்ல படம் என்று சொல்பவர்களோடு நான் நட்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
ஏஷியாநெட்டில் பின்வரும் இணைப்பில் என் கட்டுரைகளைக் காணலாம்.
http://newsable.asianetnews.tv/home-page/iraivi-charu-nivedita-review
-
கார்த்திக் சுப்புராஜுக்கு ‘ரெட்’ கார்டா? உண்மை என்ன? வாட்ஸ் அப் ஆடியோ விளக்கங்கள்! - VIKATAN
’’இறைவி’ படத்தின் காட்சியில், தயாரிப்பாளர் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா முடித்த படத்தை ஒரு சில மனஸ்தாபத்தால் வெளியிடாமல் இழுத்தடித்து அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதோடு , ஒரு கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யாவை கொலை செய்யவும் முற்படுவார். படத்தின் இந்த பகுதிகள் சினிமா தயாரிப்பாளர்களை அவதூறாக சித்தரித்திருப்பதாகக் கார்த்திக் சுப்புராஜ் மீது தயாரிப்பாளர்கள் பலரும் புகார் வைத்துள்ளனர்.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜுக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ‘ரெட்’ கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இதற்கு வாட்ஸப் வாய்ஸ் மெஸேஜ் ஒன்றின் மூலம் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில், ”அனைத்துத் தயாரிப்பாளர் நண்பர்களுக்கும் வணக்கம். அனைவரின் கருத்துகளும் கேட்டேன்.அனைத்துத் தயாரிப்பாளர்களின் கருத்
துகளுக்கும் நான் தலை வணங்குகிறேன். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் 15, 20 வருடங்கள் துணை இயக்குநராக பணிபுரிந்து போராடி சினிமாவில் வாய்ப்புப் பெற்ற கஷ்டத்தைக் கூட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படவில்லை. வந்தார் ஆறே மாதங்களில் வாய்ப்புக் கிடைத்தது. சி.விகுமார் என்னும் புது தயாரிப்பாளர் அவருடையக் கதையைக் கேட்டு, பிடித்துப்போய் அந்தக் கதையை படமாக எடுக்க ரிஸ்க் எடுத்து ஓர் இயக்குநராக அவரை உருவாக்கிவிட்டார்.
இப்போதும் நல்ல படமாக ஒரு விருதுக்குரிய படமாக , மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளத்தை வைத்து, சொன்ன பட்ஜெட்டைக் காட்டிலும் அதிக பட்ஜெட்டில் இந்தப் படத்தை(இறைவி) முடித்துள்ளார். இதற்கு முந்தையப் படத்தில்(ஜிகர்தண்டா) கதிரேசன் சார் என்ன அவஸ்தை பட்டாரோ அதைவிட இரண்டு மடங்கு அவஸ்தை இந்தப் படத்தில் சி.வி.குமாருக்கு இருந்திருக்கிறது.
http://img.vikatan.com/cinema/2016/0...anavelraja.jpgஅதற்காக பட்ட கடனையும், பிரச்னைகளையும் தாங்கிக் கொண்டு படத்தை ரிலீஸ் செய்யவேண்டியக் கட்டாயத்தில் சி.வி.குமார் இருந்திருக்கிறார். அப்படியிருக்கும் சூழ்நிலையில், ஒரு கோடி ரூபாய், இரண்டு கோடி ரூபாய் கடனாக இருந்தால் கூட அத்துடன் முடிந்தது. அவர் மீண்டும் மதுரைக்கு தான் கிளம்ப வேண்டும். ஏதோ சின்னப் படங்கள் தயாரித்து தொடர்ந்து ஜெயித்து வருகிறார். ஏனெனில் அவர் பட்ஜெட்டே ஒன்றிரண்டு கோடி தான். அவருக்கு பதிமூன்றரைக் கோடி பட்ஜெட் அளவிற்கு இந்தப் படத்தின் பட்ஜெட்டைக் கொண்டுவந்து நிறுத்தியிருகிறார் சுப்புராஜ். சொன்ன பட்ஜெட் வேறு.
இத்தனை பிரச்னைகளையும் தாங்கிக்கொண்டு இந்தப் படத்தைப் பற்றி தவறாக ஏதோ ஒரு விஷயம் ரிலீஸுக்கு முன்பு வந்திருந்தால் அவரையும், அவரது குடும்பத்தையும் யாரும் காப்பாற்ற முடியாது. அப்படி ஒரு சூழலில் படத்தைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டியக் கட்டாயத்தில் இருந்திருக்கிறார் சி.வி.குமார். இந்தப் படம் நிச்சயமாக ஒரு தயாரிப்பாளரை உருவகப்படுத்திய படம் தான். இது யாருக்கு வலியோ இல்லையோ, அந்தப் படத்தைப் பார்க்கும் போது கார்த்திக்கை அறிமுகப்படுத்திய சி.வி.குமாருக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்திருக்கும். சி.வி.குமாரின் வேதனை உங்கள் அனைவரையும் தாண்டிய வேதனை.
அந்தப் படத்தை எப்படியேனும் கொண்டுவந்து சேர்த்துவிட வேண்டிய இக்கட்டான சூழலில் தான் அவர் மாட்டியிருந்தாரேயன்றி இதைக் கண்டிக்காமல் இருக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. இதற்கு எல்லாரும் இணைந்து முடிவெடுப்போம். தயாரிப்பாளர்கள் எல்லாரும் இணைந்து எடுக்கும் முடிவில் உடன் நிற்போம் நன்றி’ என முடித்திருந்தார் ஞானவேல் ராஜா.
இந்தப் பிரச்னைக் குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பாபு கணேஷ் ஆடியோ மெஸேஜ் ஒன்றை வாட்ஸ் அப்பில் பதிவிட்டிருந்தார். அதில், “அப்படியெல்லாம் நினைத்தபடி தயாரிப்பாளர்கள் ரெட் கார்ட்http://img.vikatan.com/cinema/2016/0...hj1328011g.jpg கொடுக்க முடியாது. ஏனெனில் இதற்கெல்லாம் டெல்லியில் முறையான இயக்கம் இருக்கிறது. அதன்மூலம்தான் செய்ய முடியும். கார்த்திக் சுப்புராஜ் என்பவர் நல்ல இயக்குநர். அதை யாரும் மறுக்கவில்லை. அவர் சொன்ன பட்ஜெட்டைக் காட்டிலும் அதிக அளவில் பட்ஜெட் ஆகியிருப்பது ஒன்றுதான் அவர்மீதுள்ள குற்றச்சாட்டு. ஒரு தொழிலில் ஒரு பட்ஜெட் சொல்லி, அதை மீறி செலவாகி நஷ்டம் வரும்போது அதற்கு இயக்குநரே பொறுப்பு என்று ஒரு ஷரத்து அக்ரிமென்டில் இருக்கும். இதில் அந்த ஷரத்து இருக்கிறதா என்றே நமக்கெல்லாம் தெரியவில்லை. ஒரு குறும்பட இயக்குநராக இருந்து தற்போது ஒரு சினிமா இயக்குநராக உயர்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சந்தோஷம்.
முன்பு வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்திலும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு நஷ்டம் என பிரச்னை வந்திருக்கிறது. இப்போது ‘இறைவி’ படத்திலும் அதே பிரச்னைதான் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரச்னைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு படமெடுத்து ஒரு தயாரிப்பாளர் நஷ்டமடைகிறார் என்றால் அது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது நாமறிந்ததே. இதுதான் இப்போதைய பிரச்னை. அதை விடுத்து தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம். உண்மை நிலவரம் வேண்டுமானால் தலைவர் கலைப்புலி தாணு, செயலாளர் சிவா என பலரும் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வார்கள். அதை விடுத்து தேவையில்லாமல் வதந்திகள் வேண்டாம். கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் என்று எல்லாரும் நல்லாருக்கணும்” என ’ரெட் கார்ட்’ வதந்திகளுக்கு அந்த ஆடியோவில் கருத்து கூறியுள்ளார் பாபு கணேஷ்.
இந்த வாட்ஸ் அப் வதந்திகளுக்கு முடிவே இல்லையா!
-
http://movieboxofficecollection.com
Iraivi Box Office Collection for 1st Weekend i.e. Total 3 Days Income from 1st day to 3rd day concludes with good opening box office verdict in Chennai. Even 4th day profit stays decent as per early estimates.Iraivi Box Office Collection: 1st Weekend, Total 3 Days Income, Day 4
The movie released on 3rd June 2016 completes 3 days at cinema counters. Made under the direction of Karthik Subbaraj, Vijay Sethupathi & S. J. Surya starrer movie opens on a good note in Chennai city.
Iraivi total 1st weekend box office collection mints Rs. 78,47,498 from all over 204 screen counts. [1st, 2nd Day and 3rd day Income]
Iraivi 4th day collection as per early estimates mints a profit of Rs 11 lakhs approx. in Chennai.
Therefore, this Tamil “Iraivi” total 4 days income stands at Rs 79,47,498 lakhs.
Note: These are official income shared by Behind Woods website the profit are only of Chennai city.
-
-
Iraivi Red card controversy: Karthik Subbaraj Vs producer council
https://www.youtube.com/watch?v=7cuMGMO68f4
-
Iraivi: A film about women who bear everything and put up with anything - www.thenewsminute.com
I get excited when someone makes a film on women, women’s rights, feminism etc. After all, in most films, the only thing we ever get to know about the heroine is that she’s beautiful and has a heart just like the hero’s mother. I devoured Pizza and slurped up Jigarthanda, so I was sure that Iraivi would be a good watch. But I came away feeling disappointed. And bored. I’m yet to decide which of the two I felt more.
Iraivi is about three men and the women in their lives. There’s Arul (SJ Surya), a director who has made a film that’s stuck in the cans because he had a tiff with the producer. Arul delivers lectures on films, how film-makers should behave, the greatness of Ilayaraja’s music and so on whenever he gets drunk. Which is all the time.
There’s Arul’s brother, Jagan (Bobby Simha), who is a college student and part-time thug. Jagan hits people on the head, asks questions about Tamil epics to his professors and is generally a do-no-gooder. There’s Michael (Vijay Sethupathi), who is a full-time thug. Michael’s job is to be angry with anyone who makes Arul angry. So to sum up, we have three men who are very angry and not too bright.
Arul is married to Yazhini (Kamalini Mukherjee), who works in an IT company and keeps threatening to leave him for his alcoholism. Michael is in a casual sex relationship with Malar (Pooja Devariya), an artist, but he ends up marrying Ponni (Anjali) because Malar doesn’t want to marry him. And oh, I almost forgot, there’s Arul and Jagan’s mother (Vadivukkarassi) who plays a coma patient for the entire film barring her opening scene.
This galaxy of characters is connected through the friendship that the three men share. The men do (moronic) things that create a ripple effect. The women are engulfed by the waves. The women wait for things to get better. The men don’t oblige. This goes on ad infinitum. The women in Iraivi may slap their men once in a while when they lose their cool (they are also slapped in return – it’s all about equality) but they are incapable of exercising choice. They are the sort who put up with any amount of bullshit. They can best be described by what Arul says towards the end, ‘Woman: she who bears everything and puts up with anything.’
Except, this is a horrid generalization that has done women no favours. In real life, now more than ever before, women across social classes are exercising choice, refusing to obey patriarchal social norms, and displaying their unwillingness to put up with anything and everything. And ironically, it is the idea that a woman is she who puts up with it all that’s thrown at her when she rebels.
The bride who cancels the wedding because the groom demanded dowry, the rape survivor who refuses the judge’s offer that she marry her rapist, the pregnant wife who walks out of the marriage because the in-laws want a sex-selective abortion, the minor girl who is steadfast in her determination to go to school and not get married, the intern who sues her powerful boss for making sexual advances…we see none of this agency in the female characters who appear in Iraivi. They are like the stone goddesses who become pawns in the games that the men play in the film though they may shriek now and then.
The problem is, Karthik Subbaraj has made a film that he thinks has revolutionary ideas but his notions of women’s liberation is still entrenched in patriarchal thought. Take, for instance, Malar – the artist who doesn’t want to marry Michael but just have sex with him. It is, perhaps, the first time in Tamil cinema that a woman has said ‘I just want to fuck’ but then, the narrative burdens her with a sob-story to make this seem acceptable. Malar is a widow who is still mentally devoted to her husband. She sleeps with another man for her physical needs but cannot marry him because she doesn’t want marriage again. She’s mentally Kannagi even if she may not be so physically. In OK Kanmani, Mani Ratnam gave Nithya Menen’s character a similar sob-story to justify why she wants to be in a live- in – her parents’ traumatic divorce.
In real life, women get into casual sex relationships, hook-ups, and live-ins for exactly the same reasons as men: they don’t want the commitment, they don’t believe in the institution of marriage, they are taking it slow. This happens all over India, including Tamil Nadu. Why give unnecessary ‘emotional’ justifications for it? Why not show it the way it is? Plenty of characters in Indian films have already done so – Queen, Piku, Margarita with a Straw, Masaan, Phobia to mention a few. And to top it all, Malar weeps secretly when she breaks up with Michael for ‘his own good’! Sigh.Films like Marupadiyum (1993) and Sati Leelavathi (1995) have already questioned the importance that society places exclusively on women’s chastity, so it’s quite disappointing that more than two decades later, we’re still hesitant to push the envelope when it comes to women exploring love or sex independent of the institution of marriage.
But my greatest problem with the film lies in how neatly it cleaves the masculine and the feminine. The men are angry, violent, insensitive, and incapable of change. We’re expected to understand why they are like this and even sympathize with it. The women are like characters from Waiting for Godot, hoping that someday, things will get better without taking charge of their own lives. This is a very simplistic depiction and does injustice to both genders. It is also unreal though we may be tricked into believing that it is completely realistic.
Towards the end, Subbaraj does suggest that women ought to stop depending on men for their happiness but sadly, even then, none of his female characters MAKE that choice actively. The men do it on their behalf. More than anything else, I got bored despite the commendable performances of the cast. There are too many characters, too many stories, too much rain and too much alcohol. I felt close to falling into a coma myself. Sorry, Subbaraj, this goddess wasn’t pleased.
-
-
-
-
Total Kamai Iraivi 6th Day Box Office Collection Worldwide Earning Report - www.dekhnews.com
Movie collected between 6.10 Crore from the very first day of release. And movie collected between 7.20 crore from the very second day of release also movie collected between 19.20 Crore from the very first weekend of release and that’s quite exciting.
Movie opened up with the good occupancy and collected good bucks for the makers and that’s amazing. Movie opened up with the 50% occupancy in very first day of release and that’s good also I like the way makers presented the story and that’s awesome.
-
திரை விமர்சனம்: இறைவி- TAMIL THE HINDU
http://tamil.thehindu.com/multimedia...w_2882389f.jpg
ஆண்களின் நிதானமின்மையாலும் பொருளற்ற ஆவேசத்தாலும் பாதிக்கப்படும் பெண்களின் கதைதான் ‘இறைவி’.
அருள் (எஸ்.ஜே.சூர்யா) திரைப்பட இயக்குநர். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் இவரது படம் வெளியாகாமல் இருக்கிறது. இதனால் அவர் பெரும் குடிகாரராக மாறிவிடுகிறார். இவரது மனைவி யாழினி (கமலினி முகர்ஜி) துயரத்தில் மூழ்குகிறார். அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா) அருளுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
இந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவர் மைக்கேல் (விஜய் சேதுபதி). இவருக்கும் கணவனை இழந்த மலர்விழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மலர்விழியை மைக்கேல் காதலிக்கிறார், ஆனால் மலர்விழிக்கு காதலில் நம்பிக்கை இல்லை.
திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை குறித்த சினிமாத்தனமான கனவுகள் கொண் டவர் பொன்னி (அஞ்சலி). பொன்னிக்கும் மைக்கேலுக்கும் திருமணமாகிறது.
பட வெளியீடு தொடர்பான தகராறு உச்சத்தை எட்ட, பல குளறுபடிகளும் விபரீ தங்களும் இந்தக் குடும்பங்களின் வாழ்வைக் கலைத்துப் போடுகின்றன. இவற்றின் முடிவு என்ன என்பதைச் சொல்கிறது இந்த நீண்ட படத்தின் கதை.
பெண்களைப் பற்றிய கவலையோ, புரிதலோ அற்ற ஆண்களின் போக்கு பெண்க ளின் வாழ்வை எப்படியெல்லாம் சிதைக்கும் என்பதைப் படம் அழுத்தமாகக் காட்டுகிறது.
விசுவாசத்தின் அதீத எல்லைக்குள் பிரவேசிக்கும் மைக்கேல், அதனால் பெற்ற பாதிப்பைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அதே எல்லைக்குள் பிரவேசிக்கிறான். மது அடிமை மையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அருள் மீண்டும் தடாலடி முடிவை எடுக்கிறான். தன்னுடைய விருப்பத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படும் ஜகனின் செயல்பாடு, பிறரது வாழ்வைச் சிதைக்கிறது. மனைவி மீதான தொடர் அலட்சியம் அருளின் தந்தையின் மீதான பெரும் குற்ற உணர்வாய்க் கவிகிறது. உணர்ச்சி சமநிலையோ, பொறுமையோ, நுண்உணர்வோ அற்ற ஆண்கள் திரும்பத் திரும்பச் சறுக்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். மழையைச் சுதந்திரத்தின் குறியீடாகக் காட்டியிருக்கும் விதம் கவித்துவமானது.
வசனங்கள் கூர்மையாகவும் வலுவாக வும் உள்ளன. எனினும், பல்வேறு கதாபாத் திரங்களின் கதைகளை சுவாரஸ்யமாகத் திரைக்கதையில் இணைத்துத் தருவதில் இயக்குநர் சறுக்கியிருக்கிறார். படத்தின் நீளம் பொறுமையைச் சோதிக்கிறது. பாடல்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் சில இடங்களில் சமநிலை தவறுகிறது. ஆண் பெண் உறவு சார்ந்த சித்தரிப்பில் ஆழம் இல்லை. ஆண்கள் அனைவருமே நிதானமற்றவர்கள் என்பதுபோன்ற சித்தரிப்பு எதார்த்தத்துக்குப் புறம்பானது. கோவலன் கண்ணகி கதையாடலைச் சமகாலத்தில் பொருத்திக்காட்டும் முயற்சி முழுமை பெறவில்லை. சிலைத் திருட்டுக் காட்சிகள் படத்தின் ஆதார நோக்கத்தில் இருந்து கவனத்தை விலக்குகின்றன. இறுதிக் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் நாடகத்தன்மை தூக்கலாக உள்ளது. பாபி சிம்ஹாவின் பாத்திரப் படைப்பு பலவீனம்.
தனது பாலியல் தேவையை நியாயப்படுத் தும் மலர் கதாபாத்திரம் வலுவானது. ஆனால், இந்தப் பாத்திரம் புனிதமாக்கப்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.
எல்லா நடிகர்களும் தத்தமது கதாபாத்திரங் களை உணர்ந்து இயல்பாக நடித்திருப்பது படத்தின் மிகப் பெரிய பலம். எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி, கமலினி, பூஜா தேவாரியா, ராதா ரவி, பாபி சிம்ஹா, சீனுமோகன் ஆகியோரின் நடிப்பு அவர்களைக் கதாபாத்திரங்களாக மட்டும் காண வைக்கிறது. கிளைமாக்ஸில் சூர்யாவின் நடிப்பு அவரைத் தேர்ந்த நடிகராக அடையாளம் காட்டுகிறது. தன் பாத்திரத்தை உணர்ந்து ஆழமான நடிப்பைத் தந்துள்ளார் அஞ்சலி.
மழைக் காட்சியில் தொடங்கி மழைக்காட் சியில் முடியும் படத்தில் சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிக்குமான ஒளியமைப்பு (லைட்டிங்) கதைக்குப் பெருந் துணை. சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை கதை யோட் டத்தைத் தாங்கிப்பிடிக்கிறது. படத்தொகுப் பில் விவேக் ஹர்சன் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தப் படமும் உபரிக் காட்சிகளுடன் மூச்சுமுட்ட வைக்கிறது.
பெண்களின் வலியையும் பாடுகளையும் அழுத்தமாகச் சொல்ல முயன்றதற்காக கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். அதே நேரம் இதுபோன்ற தீவிரமான கதையைக் கட்டுக்கோப்பான கால அளவில், ஈர்க்கக்கூடிய படமாகத் தந்திருந்தால் இறைவி அருமையான தரிசனமாக அமைந்திருக்கும்.
-
ஞானவேல்ராஜாவின் குற்றச்சாட்டு ஏற்கக் கூடியதா? - WEBULAGAM
இறைவி விவகாரத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜா தொடர்ச்சியாக கார்த்திக் சுப்பாராஜ் மீது குற்றம் சுமத்தி வருகிறார்.
'ஒன்றிரண்டு கோடிகளில் படம் எடுத்து வந்த சி.வி.குமாரை 13 கோடியில் படமெடுக்க வைத்துவிட்டார் கார்த்திக்' என்பது முக்கியமான குற்றச்சாட்டு.
'இறைவி படத்திற்கு அவர் சொன்ன பட்ஜெட்டைவிட அதிகம் செலவளித்துவிட்டார்' என்பது இன்னொன்று.
இந்த குற்றச்சாட்டுகளுடன், 'தயாரிப்பாளரை இறைவி படம் கொச்சைப்படுத்துகிறது' என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இவை போதாது என்று வாட்ஸ் அப்பில் மேலும் சில குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
"எத்தனையோ வருடங்கள் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிபவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு கார்த்திக் சுப்பாராஜுக்கு கிடைத்தது. சினிமாவுக்கு வந்த 6 மாதங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. சி.வி.குமார் என்னும் புது தயாரிப்பாளர் அவருடைய கதையைக் கேட்டு, பிடித்துப்போய் அந்தக் கதையை படமாக எடுக்க ரிஸ்க் எடுத்து ஓர் இயக்குநராக அவரை உருவாக்கிவிட்டார். சொன்ன பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் இந்தப் படத்தை கார்த்திக் எடுத்திருக்கிறார். கார்த்திக்கின் முந்தைய இயக்குநர் கதிரேசன் படத்தை விட 2 மடங்கு கஷ்டத்தை இறைவியில் சி.வி.குமார் அனுபவித்திருக்கிறார். இந்தப் படம் நிச்சயமாக ஒரு தயாரிப்பாளரை உருவகப்படுத்திய படம் தான். இது யாருக்கு வலியோ இல்லையோ, அந்தப் படத்தைப் பார்க்கும் போது கார்த்திக்கை அறிமுகப்படுத்திய சி.வி.குமாருக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஞானவேல்ராஜாவின் இந்த குற்றச்சாட்டுகள் ஏற்புடையதா?
இறைவி படத்தை சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன், ஞானவேல்ராஜா மூவரும் இணைந்து தயாரித்தனர். ஆனால், இறைவி பிரச்சனையில் சிக்கிய பிறகு, இறைவியை சி.வி.குமார் மட்டும் தயாரித்தது போல், அவரை மட்டும் முன்னிலைப்படுத்தி பேசி வருகிறார் ஞானவேல்ராஜா. இறைவி விவகாரத்தில் தனது பெயரையும் சேர்த்தால் சிம்பதி கிடைக்காது என்று சி.வி.குமாரின் பெயரை மட்டும் அவர் முன்னிலைப்படுத்துகிறாரா என்ற ஐயம் அனைவருக்கும் உள்ளது.
சி.வி.குமார் ஒன்றும் கைக்குழந்தையல்ல. தயாரிப்பின் நுணுக்கங்கள் லாப நஷ்டங்கள் அறிந்தவர். ஒன்றிரண்டு கோடிகளில் படம் செய்து வந்தவர் 13 கோடியில் இறைவியை தயாரிக்க முன்வந்தது அவரது தனிப்பட்ட விருப்பம். யாரும் அவரை நிர்ப்பந்திக்கவில்லை.
இதே கார்த்திக் சுப்பாராஜ் அறிமுக இயக்குனராக சி.வி.குமாரை சந்தித்து கதை சொன்ன போது என்ன நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும். அப்போது கார்த்திக் சி.வி.குமாரிடம் சொன்னது ஜிகிர்தண்டா படத்தின் கதையை. ஜிகிர்தண்டாவை தயாரிக்க பல கோடிகள் வேண்டும். அறிமுக இயக்குனரான கார்த்திக்கை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பாத சி.வி.குமார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் ஒரு கதை கேட்டுள்ளார். அதன் பிறகு சி.வி.குமாரின் பட்ஜெட்டுக்கு ஏற்ப கார்த்திக் எழுதிய கதைதான் பீட்சா. அப்படம் சி.வி.குமாருக்கு எக்கச்சக்க லாபத்தை தந்தது.
அன்று சின்ன பட்ஜெட் கதையை கொண்டு வாருங்கள் என்று சொன்ன சி.வி.குமார், இன்று 13 கோடியில் இறைவியை தயாரிக்க சம்மதித்தார் என்றால் அதற்கு காரணம் உள்ளது. இரண்டே படங்களில் தனக்கென ஒரு பெயரை கார்த்திக் சுப்பாராஜ் தமிழகத்தில் உருவாக்கி வைத்துள்ளார். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற நடிகர்களை வைத்து அவர் ஒரு படம் இயக்கினால், 13 கோடிகளை எளிதாக வசூலித்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் சி.வி.குமாரும், ஞானவேல்ராஜாவும் இறைவியை தயாரிக்க முன்வந்தனர். இன்று படம் பிரச்சனையில் சிக்கியதும் சி.வி.குமாரை முன்வைத்து ஞானவேல்ராஜா புலம்புவது அர்த்தமில்லாதது.
எத்தனையோ வருடங்கள் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிபவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு கார்த்திக் சுப்பாராஜுக்கு கிடைத்தது. சினிமாவுக்கு வந்த 6 மாதங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. சி.வி.குமார் என்னும் புது தயாரிப்பாளர் அவருடையக் கதையைக் கேட்டு, பிடித்துப்போய் அந்தக் கதையை படமாக எடுக்க ரிஸ்க் எடுத்து ஓர் இயக்குநராக அவரை உருவாக்கிவிட்டார்" என ஞானவேல்ராஜா பேசியிருக்கிறார். ஏதோ சி.வி.குமார் கார்த்திக் சுப்பாராஜுக்கு பிச்சை போட்டது போல்.
தயாரிப்பாளர் இல்லாமல் ஒரு இயக்குனர் உருவாகிவிட முடியாது என்று ஞானவேல்ராஜா கூறுவது போலவே, ஒரு இயக்குனர் இல்லாமல் தயாரிப்பாளரும் உருவாகிவிட முடியாது. இது பரஸ்பரம் சேர்ந்து உருவாகும் கூட்டு முயற்சி. அதில் தயாரிப்பாளரை மட்டும் பிரித்து முன்னிலைப்படுத்துவது சுயநலமேயன்றி வேறில்லை. எத்தனையோ வருடங்களாக உதவி இயக்குனர்களாக இருப்பவர்களுக்கு பரிந்து பேசும் ஞானவேல்ராஜா, உதவி இயக்குனர்களின் சீனியாரிட்டியை பார்த்து வாய்ப்பு வழங்குவதுதானே? ஏன் அதனை ஞானவேல்ராஜா உள்பட யாருமே செய்வதில்லை?
சினிமாவில் ஒருவன் எத்தனை வருடங்களாக இருக்கிறான் என்பது முக்கியமில்லை. அவனது திறமைதான் முக்கியம். அதற்குதான் மதிப்பு. சி.வி.குமார் ஒன்றும் ரோட்டில் போன ஒருவரை அழைத்து இயக்குனராக்கிவிடவில்லை. பீட்சா என்ற சுவாரஸியமான திரைக்கதையை படித்து, அது ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கையில்தான் கார்த்திக்கின் கதையை தயாரிக்க முன்வந்தார். இது ஒன்றும் உதவியோ பிச்சையிடுதலோ அல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த சி.வி.குமாருக்கு பீட்சா என்ற சுவாரஸியமான கதையை கார்த்திக் தந்து அவரை தயாரிப்பாளராக்கியிருக்கிறார். சி.வி.குமார் போன்ற 100 தயாரிப்பாளர்கள் தமிழில் இருக்கிறார்கள். ஆனால், பீட்சா, ஜிகிர்தண்டா போன்ற படங்களை தரும் இயக்குனர்கள் எத்தனை பேர் தமிழில் இருக்கிறார்கள்? பீட்சா படத்தை தயாரிக்க சி.வி.குமாருக்கு வாய்ப்பு கிடைத்ததுதான் அவரது பாக்கியம்.
"இந்தப் படம் நிச்சயமாக ஒரு தயாரிப்பாளரை உருவகப்படுத்திய படம் தான். இது யாருக்கு வலியோ இல்லையோ, அந்தப் படத்தைப் பார்க்கும் போது கார்த்திக்கை அறிமுகப்படுத்திய சி.வி.குமாருக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்திருக்கும்" என்று சி.வி.குமார் சார்பில் ஞானவேல்ராஜா துக்கப்படுகிறார்.
சி.வி.குமாரும், ஞானவேல்ராஜாவும் இறைவி படத்தின் ஸ்கிரிப்டை படிக்காமலா படத்தை தயாரிக்க ஒப்புதல் அளித்தார்கள்? இல்லை, முதலில் ஒரு கதையை சொல்லிவிட்டு பிறகு கார்த்திக் கதையை மாற்றி எடுத்தாரா?
பவுண்டட் ஸ்கிரிப்ட் எனப்படும் முழுமையான ஸ்கிரிப்ட் ஹாட் காப்பியாக இருந்தால் மட்டுமே படத்தை தயாரிக்கிறவர் சி.வி.குமார். திரைக்கதையை படித்துப் பார்க்காமல் அவர் படமே தயாரிப்பதில்லை. சரி, திரைக்கதையை படிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். படம் முடிந்த பிறகு டபுள் பாசிடிவ் கூடவா பார்க்கவில்லை?
படம் வெளியாவதுவரை மௌனமாக இருந்துவிட்டு, படம் சர்ச்சையில் சிக்கியதும், 'எனக்கொன்றும் தெரியாது கோவிந்தா' என்று கார்த்திக்கின் நெற்றியில் பட்டையடிக்க முயல்வதுதான் ஞானவேலின் இந்த பிலாக்கணம், கலப்படமில்லாத சுயநலம்.
படத்தின் பட்ஜெட்டை இழுத்துவிட்டார் என்பது தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்குமான தனிப்பட்ட பிரச்சனை. அதனை முறையிட, பஞ்சாயத்து செய்ய சங்கங்கள் இருக்கிறது. அதைவிட்டு பொதுவில் புலம்புவது, அதுவும் இப்படியொரு சந்தர்ப்பதில் பட்ஜெட் குறித்து கார்த்திக்கின் மீது குற்றஞ்சாட்டுவது சிம்பதியை கூட்ட ஞானவேல்ராஜா கையாளும் தந்திரம்.
ஞானவேல்ராஜாவின் புலம்பலிலும், அவர் முன் வைக்கும் குற்றச்சாட்டிலும் எள்ளளவும் நியாயமில்லை.
-
இறைவி படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா? - one india
முன் கோபம்
முன் கோபமானது புகை, குடி,போதை, மாது போன்றவற்றின் மீது கொண்டுள்ள மோகத்தை விட கொடியது. குடி உங்களை கொல்லும் எனில், முன் கோபம் உங்கள் வாழ்க்கையையே கொல்லும்.
மனைவி, குழந்தை
நட்பிற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், உங்களை நம்பி இருக்கும் மனைவி மற்றும் குழந்தையையும் அது பாதிக்கும் எனில், அதை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு மறுத்து, ஒதுங்கிவிடுவது நல்லது. உங்களை நம்பி இருக்கும் உயிர் மற்றும் உங்களால் பிறந்த உயிருக்கு முன்னே வேறு எதுவும் பெரியதல்ல.
பட்டும் திருந்தாதவர்கள்
ஆண்கள் ஆட்டு மந்தையாக இருந்துவிட கூடாது. ஓர் தவறு செய்து அதற்கான தண்டனையும் பெற்ற பிறகு, மீண்டும் அதே தவறை செய்வது, உங்கள் மீதுள்ள மனிதன் எனும் அடிப்படை மரியாதையையே குறைக்க செய்யும் செயலாகும். இல்லறமாக இருப்பினும் சரி, சமூகமாக இருந்தாலும் சரி, செய்த தவறை மீண்டும், மீண்டும் செய்வது அடிமுட்டாள் தனம்.
பெண் சுதந்திரம்
பெண் சுதந்திரம் ஆண்கள் தருவதல்ல, பெண்களின் பிறப்பிலேயே இருப்பது. அதை, மறுக்கவும், தடுக்கவும், கட்டுப்படுத்தவும் யாருக்கும் உரிமையில்லை. ஆண்களை சார்ந்து இல்லாமல், பெண்களே தனித்து வாழும் சூழல் வரவேற்க்கத்தக்கது.
நிச்சய திருமணம்
நிச்சய திருமணத்தில் பெரும்பாலும் பெற்றோர் செய்யும் தவறு, குடும்பத்தை பற்றி மட்டும் விசாரிப்பது. மணமகன் எந்தளவு நல்லவன், அவனது குணாதிசயங்கள் என்ன, அவனது தனிப்பட்ட செயல்பாடுகள், நட்பு, வேலை குறித்தும் ஆராய்ந்து தெரிந்துக் கொண்ட பிறகு திருமணம் செய்வது தான் சரி.
இரண்டாம் திருமணம்
நமது சமூகத்தில் இரண்டாம் திருமணம் என்பது கூட, ஆண்கள் செய்தால் ஓர் பார்வையிலும், பெண்கள் செய்தால் மாறுபட்ட பார்வையிலும் நோக்கும் சுபாவம் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், இருவருக்கும் எதிர்பாலின துணை கட்டாயம் தேவை தான்.
இறைவி!
பொதுவாகவே நமது சமூகத்தில் பெண் குழந்தை பிறந்தால் மகாலக்ஷ்மி பிறந்துவிட்டாள் என்பார்கள். கிராம புரங்களில் பெண் குழந்தைகள் குல தெய்வமாக கருதுவதும் உண்டு. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் நமது குடும்பத்தை காக்கும் தெய்வங்கள் தான். இதை எல்லா ஆண்களும் புரிந்துக் கொண்டால், இல்லறத்தில் எந்த பிரச்னையும் எழாது.
மழையும் சமூகமும்
பெண்களை அழ வைப்பவன் ஆணாகவே இருக்க முடியாது. நீங்கள் ஓர் சிறந்த ஆணாக இருந்தால் அந்த பெண் உங்களை நினைத்து அழ வேண்டுமே தவிர, மாறாக உங்களால் அழக கூடாது. ஆண்களின் பலம் பெண்களை காப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, நீங்கள் செய்வதை எல்லாம் பொறுத்துக்கொள்வதக்கு அல்ல.
வினை விதைத்தவன்
பெண்களை அழ வைக்கும் எந்த ஓர் ஆணின் வாழ்க்கையும் சந்தோசமாக இருக்காது. சிலர் அவர்கள் பிரிந்து செல்லும் போது உணர்வார்கள். பலர் அவர்கள் நிரந்திரமாக பிரிந்த பிறகு தான் உணர்கின்றனர்.
குடி பழக்கம்
குடி பழக்கம் வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல, நல்ல உறவுகளுக்கும் கேடு விளைவுக்கும். பெரும்பாலான வீடுகளில் இன்றளவும் பெண்கள் துன்புற காரணியாக இருப்பது இந்த குடி தான்.
-
Iraivi - Life is a big b**** party!
Peeve 1: Santhosh Narayan is hopeless in composing songs. He better just stick to BGM. (Condolences for Kabali.) 😳
Peeve 2: Why censor crucial scenes when it's already rated 18? 😠
Iraivi means statues of goddesses. Here the ones that have been left to rot are smuggled and sold to overseas markets where they are treasured.
A parallel is drawn with women who are neglected by men who then draw the interest of other men.
Karthik says he's heavily inspired by K. Balachander and the story indeed is KB-isque. Different women of all generations suffer the same neglect and how they cope with it is shown.
There are also tales of betrayal, friendship, murder and more.
Except for a couple of actors, the rest of them are the new-age cinema actors. Nice to see how Bobby Simha has matured as an actor.
Vijay Sethupathi is his excellent usual self and brings the laughs in the movie.
Verdict: Excellent movie minus the songs. Definitely repeat-worthy.
-
இறைவி - Dina Thanthi
நடிகர்-நடிகைகள்: எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி.
டைரக்ஷன்: கார்த்திக் சுப்புராஜ்.
கதையின் கரு: ஆணாதிக்கத்தால் பாதிக்கப்படும் பெண்கள்.
கோவில் (இறைவி) சிலைகளை வடிவமைக்கும் குடும்ப தலைவர், ராதாரவி. இவருடைய மகன்கள் எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா. இவர்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார், ராதாரவியிடம் வேலை செய்தவரின் மகன், விஜய் சேதுபதி.
எஸ்.ஜே.சூர்யா, ஒரு திரைப்பட இயக்குனர். இவர் இயக்கிய படம், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது. அந்த விரக்தியில் எஸ்.ஜே.சூர்யா குடிகாரர் ஆகிறார். இவருடைய அழகான மனைவி, கமாலினி முகர்ஜி. ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இதேபோல் விஜய் சேதுபதிக்கும், அஞ்சலிக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
முடங்கிக் கிடக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் படத்தை திரைக்கு கொண்டு வர அவருடைய குடும்பமே முயற்சிக்கிறது. இதற்காக தேவைப்படும் பணத்தை கோவில் சிலைகளை திருடி விற்பதன் மூலம் சம்பாதிக்கலாம் என்று யோசனை சொல்கிறார், பாபி சிம்ஹா. அந்த யோசனையை ராதாரவியும் ஏற்கிறார். பாபி சிம்ஹாவும், விஜய் சேதுபதியும் சிலை திருட்டில் ஈடுபடுகிறார்கள்.
விஜய் சேதுபதி சிலை திருட்டில் ஈடுபடும்போது, அவரை போலீசில் காட்டிக் கொடுக்கிறார், பாபி சிம்ஹா. அவர் ஏன் காட்டிக் கொடுக்கிறார், விஜய் சேதுபதி போலீசிடம் சிக்கினாரா, காட்டிக் கொடுத்த பாபி சிம்ஹாவை அவர் என்ன செய்கிறார், எஸ்.ஜே.சூர்யாவின் படம் திரைக்கு வந்ததா? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது மீதி படம்.
நல்ல ஒரு படத்தை இயக்கி, அது திரைக்கு வராததால் ஏற்படும் விரக்தியையும், வேதனையையும் மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார், எஸ்.ஜே.சூர்யா. தன் சோகத்தை நினைத்து குடிபோதையில் அழுவதும், சிரிப்பதும், சீறுவதுமாக நடிப்பில் உச்சம் தொடுகிறார். அந்த கடைசி காட்சியில், ‘‘பொறுமையாக இருக்க முடியாது. சகித்துக் கொள்ள முடியாது. ஏன்னா ஆம்பள...ஆண்...’’ என்று தன் குற்றத்துக்கு விளக்கம் சொல்லும் காட்சி, எஸ்.ஜே.சூர்யாவின் திறமையான நடிப்பு வெளிப்படும் மற்றொரு இடம். நட்புக்காக, ஒரு கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு செல்பவராக-திரும்பி வந்தபின், மீண்டும் அதே நட்புக்காக சிலை திருட செல்பவராக விஜய் சேதுபதி. அவருடைய கதாபாத்திரமும், யதார்த்தமான நடிப்பும் கதையை தாங்கிப் பிடிக்கும் உயர்ந்த அம்சங்கள். பாபி சிம்ஹா நல்லவர் போல் வந்து கடைசியில் வில்லனாகி விடுகிறார்.
அஞ்சலி, கமாலினி முகர்ஜி ஆகிய இருவரில் அஞ்சலிக்கு நடிக்க வாய்ப்பு. அவர், விஜய் சேதுபதி கன்னத்தில் பளார்...பளார் என அறையும்போது, தியேட்டரில் நிறைய பேர் கைதட்டுகிறார்கள். ‘மலர்’ கதாபாத்திரத்தில் வரும் பூஜா, மிக பொருத்தமான தேர்வு. முக்கிய பாத்திரங்களில் ராதாரவி, கருணாகரன், வடிவுக்கரசி. சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் படத்தின் ஜீவன்களாக அமைந்துள்ளன. கதையுடன் கச்சிதமாக பொருந்துகிறது, டைட்டில். எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகிய மூவருக்குமான உறவை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆரம்ப காட்சிகள் புதிராக அமைந்துள்ளன. நல்லவேளையாக, கிளைமாக்ஸ்சில், ‘‘நீ என் தம்பி மாதிரி. அவன் என் தம்பி’’ என்று எஸ்.ஜே.சூர்யாவை சொல்ல வைத்து, உறவுகளை புரியவைத்து விடுகிறார், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். அந்த வில்லத்தனமான தயாரிப்பாளரும், சிலை திருட்டில் விஜய் சேதுபதியை பாபி சிம்ஹா மாட்டி விடுவதும், யூகிக்க முடியாத திருப்பங்கள்.
‘இறைவி’யின் அருமை பெருமைகளை மனதில் பதிகிற மாதிரி இன்னும் ஆழமாக காட்சிப்படுத்தியிருக்கலாம்.
-
anandha vikatan - 43 marks
-
2 Attachment(s)
-
http://www.deccanchronicle.com/images/logo.png
Movie review Iraivi: Karthik Subbaraj's film is a hard hitting one!
Director: Karthik Subbaraj
Cast: Vijay Sethupathi, SJ Suryah, Anjali, Kamalinee, Pooja Devariya
Karthik Subburaj may be just two films old. But his quirky themes combined with compelling story telling ways has put him in high esteem in Kollywood. His recent offering Iraivi is no exception! The movie has a feminist theme, which is depicted in a hard-hitting manner and the bold women characters have semblance to one we used to see in K. Balachander’s films.
Arul (SJ Suryah) once a known filmmaker and now struggles to get his movie released as his producer refuses to do. Frustrated with life he drowns himself in alcohol. And his wife Yazhini (Kamlinee Mukherji), a liberated woman wants a divorce. Arul’s younger brother Jagan (Bobby Simha) is a student who has penchant for antique idols and more so of goddesses (Iravi). Michael (Vijay Sethupathi) works in their sculpture shop and he is treated like their brother. Despite in a relationship with Malar (Pooja Devaria) Michael ties the knot with Ponni (Anjali) against his wishes. He is insensitive towards his wife, who dreams to have a blissful life. A stage comes when all the three men join hands in a crime and what follows next is a series of unexpected twists and turns.
There are umpteen numbers of characters, but each one has a role to play in the intriguing plot. Karthik has extracted the best from the entire cast. It is SJ Suryah who steals the show with his lifetime performance. Anjali proves her mettle in a complex role. Vijay Sethupathi has in fact underplayed his character. Bobby, Pooja in a bold role, Kamalinee are adequate.
On the technical front Santhosh Narayanan songs are passable, while the BGM is good. Sivakumar Vijayan’s cinematography, Vivek Harshan’s editing and Vijay Murugan’s art work largely help the director to achieve his vision.
Despite some hiccups like every alternate scene depicts characters drinking and smoking and the raw violence soaked in blood and gore and the lack of fun elements, the film is an honest attempt from Karthik Subburaj and may go well with multiples audiences.
-
Thanks to Balaajee for the wonderful presentation & updates on his favourite filmstar SJ Surya's Iraivi Movie.
Iraivi
A Film by Karthik Subbaraj
Part One of Three
Recurring Phrase : But how much Karthik Subbaraj has convincingly projected his theory of interlocking two different beleifs of the same cultural faith depends purely on the experience of the viewer and not the expression of the film maker.
http://www.iflickz.com/wp-content/up...e-Stills-2.jpg
(SJ Surya as Arul)
Introduction
There are three forms on approaching a film to figure out what a filmmaker is trying to say in his work : formalist, realist & contextualist.
[Formalist : Deadpool (English, 2016), Vedalam (Tamil, 2015)]
[Realist : Inside Man (Korean, 2015), Visaranai (Tamil, 2015)]
The movie Iraivi should be approached contextually - a symptomatic interpretation look at the film as part of the broad context of society, reflecting and illustrating themes prevalent in the culture, in the time and place it was made, and possibly in the creator’s personal life experience. A psychological approach often identifies plot elements - looking for sexual symbolism, treatment of the subconscious, representations of the ego and superego.
A feminist analysis should concentrate on the portrayals of women in the film, whether they are strong, weak, stereotypes, protagonists or antagonists on a more of a broader context.
The genre of the film Iraivi, is a rare one. The movie comes under the genre 'Hyperlink Cinema', a word coined by Alissa Quart (nonfiction writer) in one of her reviews in 2005. This genre marks the story structure and relates it to spatial analysis in Sociology - horizontal experience of human life, the spatial dimension of individual behavior and social relations, as opposed to the vertical experience of history, tradition, and biography.
Iraivi is a multi-narrative film, a story that follows several protagonists rather than focusing on one main character. It extends itself to potray the relationship between the individual perspectives of characters inside a larger macro story. The film becomes hypernarrative during the final ACT, espicially while trying to connect the relationships established during the previous acts. During this ACT, Karthik tries to bring in an intensity by projecting as though the film is based on single-plot and this aspect makes the script wicked.
The film Iraivi aims for multiperspectivity, an aspect of narration or a mode of storytelling in which multiple and often discrepant viewpoints are employed for the presentation and evaluation of a story and its storyworld. The perspectival arrangements in multiperspective narrative fulfils a variety of different functions, mostly highlighting the perceptually, epistemologically or ideologically, the restricted nature of individual perspectives and may draw attention to various kinds of differences and similarities between the points of view presented therein. In this way, multiperspectivity frequently serves to portray the relative character of personal viewpoints or perspectivity in general.
'Roman a Clef' is a French term meaning 'novel with a key' refering to a film in which actual persons/events are disguised or masked as fictional characters, but with a 'key' the true persons/events are revealed. The character make up for the artist Vijai Murugan who plays a Film Producer in the film Iraivi, resembles the Jigardhanda producer Kathiresan. Jigardhanda release dates were shifted mercilessly without proper explanations and when the film's lead actor Siddharth expressed his displeasure over the production house for the delays, he was warned by the Production Council reminding him that he was a salaried worker and should not indulge in the distribution and decisions of the Production house. Jigardhanda was the second film directed by Karthik, and the episode containing a Producer character maybe a key to unlock the issue, about what might have happened during Jigardhanda film release.
The characters are handled in implicit manner, such that they are risened under slightly deeper level of interpretation - how the characters change, grow, and develop throughout the course of the film. None of the character mouths its action, but expresses it through emotions and reactions surrendering to the momentary suituations - refer to the 'Recurring Phrase' illustrated above.
http://www.iflickz.com/wp-content/up...-Stills-14.jpg
(Characters vs Suituation as found in the film)
Instances
1/ Kanaki, Madhavi, Kovalan & Mr. X
With Ponni, Malar, Michael and Jagan fictional characters, Karthik attempts to make his own Silappatikaram. Kanaki & Madhavi from the epic are invisible to viewers so that the writer's characters and situations are always in the primary focus.
http://www.iflickz.com/wp-content/up...e-Stills-3.jpg
(Anjali as Ponni)
Jagan questions whether the soceity would have accepted Kanaki acquainted with another man after the Kovalan's debacle. This expression is the base of Jagan's character structure, which gets blown-up during the final ACT. Jagan's philosophy (reminder : faith, politics & philosophy are personal) slightly gets scratched when the brothers rejoice with drinks.
The character Malar, played by Pooja, is displayed as a bold skinned, but the death of her husband had made her more pessimistic (fear of loosing someone) which corners herself as a disgrace to the soceity. Malar and Michael share an intimacy as Madhavi and Kovalan. Malar rejects Michael for the same reason, social fear, and then weeps. Ponni, on the lines of a similar fear elopes eventhough she is attracted to Jagan.
http://www.iflickz.com/wp-content/up...6/01/Pooja.jpg
(Pooja as Malar)
Apparantly and according to Karthik, Kanaki (represented by Ponni played by Anjali) did not have any problem with that principle of Jagan, whereas retelling it through Madhavi's POV, makes Madhavi and Kanaki float on the same boat.
Recurring Phrase.
2/ Nalayani
"If at all, I have lived the life of a chaste woman, dedicating myself to serving my Lord and Master and if my husband must die at sunrise tomorrow, then the sun shall not rise forever."
Yazhini, enacted by Kamalinee Mukherjee, is an alternate image of Malar. What Malar obtains after the end of her marital life, Kamalini does not get it while still being married. Yazhini pocesses all the items of an ideal life, and she serves her husband as the epic character Nalayni who had served her sick, stinking and bed ridden husband. Arul, Yazhini's husband, visits her only in the mornings depriving her the basic needs of a marital relationship. Yazhini tolerates him even when he stinks of alcohol. Arul is not impotent, the couple have a daughter, he is just depressed.
http://www.iflickz.com/wp-content/up...-Stills-12.jpg
(Kamalinee Mukherjee as Yazhini)
http://www.iflickz.com/wp-content/up...-Stills-11.jpg
(Arul and Yazhini (Kamalinee Mukherjee). Note the scribbling on the wall, indicating a child living/lived in that house)
When Nalayani is cursed that she will loose her husband in the morning, she halts the sunrise. Karthik bends this epic clause wildly, making Yazhini to discarde her relationship with Arul, so that she does not see him in the morning.
Recurring Phrase.
3/ Nala and Damayanti
http://www.iflickz.com/wp-content/up...e-Stills-9.jpg
(Michael and Ponni)
Ponni dreams about her marriage and just like the epic character Damayanti who had to pick one of the Gods Indra, Agni, Varuna; Ponni thinks he has a varied options to pick her husband personally (Kamal/Vijay/Ajith references). She falls for Michael considering him to be the most handsome (just like the swan). Arul and family gaurd the couple just like how Kali served for Nala and Damayanti. A statue theft leads a small conflict with Arul's family and the gap widdens similar to the absense of Kali when Nala forgets to wash his feet.
The life of Ponni and Michael disrupts where Ponni takes refuge elsewhere (just like Damayanti had done) while Michael had to fight his own demons (just like Nala) to reach Ponni (Othai ille nikurein di song sequence). When they meet, Ponni forgives Michael, just like Damayanthi forgives Nala after he had abandoned her in the jungle. Events forces Michael and Ponni to abscond and lead a peaceful life, when Micheal meets Jagan and then Arul.
Recurring Phrase.