தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள்.Quote:
Originally Posted by Shakthiprabha
Printable View
தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள்.Quote:
Originally Posted by Shakthiprabha
பெயர்கள் முதல்பக்கத்தில் இருக்கின்றன.
பிழையிருப்பின் திருத்தவும்
உதவவும்
நன்றி ஆனா!
இன்று தொடரை பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.
மீண்டும் 9ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து எழுதுவேன்.
Sakthipraha!
I like the icon (s)
and also the changing frequency
:clap:
Are you not able watch Sun TV...?.Quote:
Originally Posted by Badri
Is it not reaching Ausy...?. I thought sun network is world wide.
Hummm... koduththu vachavanga.Quote:
Originally Posted by Shakthiprabha
ennai yaarum virundhukku azhaiththu romba naaL aachu.. :oops:
avar Parthiban alla, Badri.Quote:
Originally Posted by Shakthiprabha
adhanaal kEtka maattaar... :D
yesterday I happened to watch this serial....
especially the scene of 'mupperum dhEviyar' challenging each other in front of Naradhar....
and....
the temple scene, where the poet and queen were arguing, exactly remembered the movie Saraswathi Sabatham, where NT and KRV were arguing. (the queen is Kaniga...?).
yes, The same Hanika who was in "Thangavettai"
list of names at
http://forumhub.mayyam.com/hub/viewt...er=asc&start=0
வில்லன் தளபதி = செளமியனா?
I watched the first dvd of Thiruvilaiyaadal...it's good :)
09/06/08
திடீரென எவனோ ஒருவன் அதிகாரம் செய்கிறான்.
திடீரென எவளோ ஒருத்தி, அரசவையில் வீற்றிருக்கிறாள்,
என்றெல்லாம் குழம்பி நிற்காமல், உடனே கதையின் போக்கு
புரிந்ததற்கு 'சரஸ்வதி சபதத்திற்கு' நன்றி சொல்லவேண்டும்.
வீரம் என்றாலே எங்கிருந்தோ சேர்ந்து தொத்திக்கொண்டு விடுகிறது
அதிகாரமும், ஆளுமையும். நம் அன்றாட வாழ்விலும் இதைக்
கண்டு வருகிறோம். எவன் ஒருவனுக்கு அல்லது எவள் ஒருத்திக்கு
எதிர்த்து நிற்கும் துணிவு இருக்கிறதோ, தன் சொல்லை செல்லுபடியாக்கும்
மனோதிடம் இருக்கிறதோ அவர்கள், மற்றவர்களை ஆட்டி வைக்கத்
தவறுவதில்லை.
இங்கும் வீரத்துடன் சேர்ந்த அதிகாரத்தைப் பயன்படுத்திறார் மலைமகளின் அருள் பெற்ற தளபதி மாமல்லன். மண்டபத்தில் கூடாரமிட்டுருக்கும் பிச்சைக்காரர்களை அவதூறு பேசி, விரட்டி விடுகிறார். தளபதி நகர்ந்த பிறகு, பிச்சைக்காரர்கள் சிலர், அரசியாரும் முன்னொரு நாளில் பிச்சைக்காரியாக இருந்ததால், இவர்களை சந்திக்க நேரிட்டால் தனக்கு களங்கம் உண்டாகுமோ என கருதி கடுமையாக நடந்து கொண்டுள்ளார் என்று புரளியைக் கிளப்புகின்றனர். அரசாட்சியையும் நாட்டையும் அவமரியாதையாகப் பேசுகின்றனர். இதைக் கேட்டுகொண்டிருந்த அமைசருக்கு மனம் சங்கடப்படுகிறது. அரசியிடம் நடந்ததைக் கூறி தகுந்த நடவெடிக்கை எடுக்குமாறு அறிவுரைக்கிறார் அமைச்சர். அரசியாரும்
தளபதியை வரவழைத்து, அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்ததை
சுட்டிக்காட்டி, தளபதியைக் கண்டிக்கிறார். அரசாட்சியில் திருட்டும்
கொள்ளையும் மிகுந்து விடாமல் தடுக்க, பிச்சைக்காரர்களையும் தடுக்கவேண்டுமென்றும், பிச்சைக்காரர்களின் ரூபத்தில் திருடனோ, அல்லது உளவாளியோ கூட உலவும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், தான் அத்தகைய கடுமையான நடவேடிக்கை எடுக்க நேர்ந்ததைக் கூறுகிறார். எதையும் தீர விசாரிக்காமல் செய்தது தவறு என்று அவரின் அதிகாரத்தை கத்தரிக்கிறார் அரசி.
புகைந்து கொண்டிருக்கும் தளபதியின் மனசை, மேலும் பற்றவைக்கிறார் பார்த்திபன் (இவர் முன்னாள் தளபதி என்றெண்ணுகிறேன் :? ). அமைச்சர், தளபதையைப் பற்றி தவறக அரசியிடம் புரளி கிளப்பிவிடுகிறார் என்று தளபதியின் கோபத்தை திசை திருப்புகிறார். இப்படியே வளைந்து கொடுத்து பழகிவிட்டால் தன்னால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போய்விடும் என்று பொருமுகிறார் தளபதி. அவரே மன்னன் ஆவதற்கு ஒரு அருமையான யோசனை இருப்பதாகக்
கூறுகிறார் பார்த்திபன்.
அவரின் யோசனைப்படி, தனித்திருக்கும் அரசியிடம், எந்த வித ஒளிவு மறைவும் இன்றி, தனது இச்சையைத் தெரிவிக்கிறார்
தளபதி. அரசி தன் அதிகாரத்தை பயன் படுத்தி அவரை அப்புறப்படுத்த நினைக்கிறார். எந்தக் காவலாளியும் அவரின் குரலுக்கு செவிசாய்த்து துணைவராததைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். லாவகமாக தளபதி அரசப் படைகளை தன் வசமாக்கியிருப்பதை உணர்கிறார். மீண்டுமொரு முறை
தன் இச்சையைத் தெரிவித்து, தான் அரசனாக மணிமுடி தரிக்க ஆசைப் படுவதைக் கூறி, தன்னை மணந்து கொள்ளும்படி கேட்கிறார் தளபதி.
அரசியாக கனிகாவின் நடிப்பு நன்று.
தளபதியாக நடிப்பவர் கொடூரம் முகத்தில் காட்டவேண்டும் என்பதற்காக, மூக்கை மட்டும் ஒரு பக்கமாய் இழுத்து கோபத்தை காட்டுவது ரசிக்கும்படி இல்லை. இவர் மூக்கை இழுப்பதற்கு பதில் சொல்வது போல் பார்த்திபனாக நடிப்பவர் புருவம் உயர்த்துகிறார். இது சற்றே மிகையாகத் தெரிந்தது. தளபதியாக நடிப்பவர் 'பிர்லாபோஸ்' என்று 'ஆனா' பதித்திருந்தார். அசப்பில் நடிகர் அஜித்குமாரின் சுமாரான கார்பன் காபி போல் இருக்கிறார்.
"அவர்கலிடம் வலைந்து கொடுத்து விடுவேன் என்று வீரத்தை
இலுக்காக எண்ணி கொல்லாதே" என்று நம்மை கொல்கிறார்கள்.
தளபதியாருக்கு 'ழ'கரமும் 'ள'கரமும் ததிங்கிணத்தோம்
போடுகிறது. கனிகாவிற்கும் கூர்ந்து கவனித்தால் சில இடங்களில்
அழகுத் தமிழின் 'ள' சற்று சறுக்குகிறது.
ராடன் க்ரியேஷன்ஸின் ராதிகாவிற்கே 'ள'கரம் 'ழ'கரம் தகராறு இருப்பதால்
இதற்கு கவனம் செலுத்தவில்லை போலும். செந்தமிழில் தொடர் வருவதால் சொல்வளமும் அதை சரியாய் உச்சரிக்கும் நா-வளமும் நன்கு தேவைப் படுகிறது. எந்த காலத்திலும்
சிலருக்கு 'ழ'கர 'ள'கர தகராறுகள் இருந்திருக்கலாம் என்று சாக்கு சொல்லி நம்மை சமாதானப்படுத்திக் கொள்வோம்.
கனிகா நீல நிறத்தில் ஜொலிக்கும் உடை அணிந்திருக்கிறார். அதற்கு பொருத்தமாய் காதணியும், கழுத்தில் அட்டிகையும் நீல நிறத்தில் ஜொலிக்கிறது. அழகே உருவாய் காட்சி தருகிறார். ஆனால் தலையை அலங்கரிக்கும் சுட்டி மட்டும் ஏன் தங்க நிறம்? நீலக் கற்கள் பதித்த தலை அலங்காரச் சுட்டிகள் கிடைக்கவில்லை போலும்!
அமைச்சரின் அதிகார பலத்தை காண்பிக்கவும், அரசியின் தலையீட்டை ஊர்ஜிதப்படுத்தவும், வேறு ஏதேனும் பலமான காரணத்தைக் கதையாக்கியிருக்கலாம் (பிச்சைக்காரர்களின் விரட்டலுக்காக பெரிய பதைபதைப்பும் அதனால் கதையில் மாற்றமும் ஜீரணிக்க முடியவில்லை)
(மீண்டும் நாளை)
நன்றி - சக்திபிரபா
மீண்டும் நாளை
:clap: :clap:Quote:
"அவர்கலிடம் வலைந்து கொடுத்து விடுவேன் என்று வீரத்தை
இலுக்காக எண்ணி கொல்லாதே" என்று நம்மை கொல்கிறார்கள்.
தளபதியாருக்கு 'ழ'கரமும் 'ள'கரமும் ததிங்கிணத்தோம்
போடுகிறது. கனிகாவிற்கும் கூர்ந்து கவனித்தால் சில இடங்களில்
அழகுத் தமிழின் 'ள' சற்று சறுக்குகிறது.
ராடன் க்ரியேஷன்ஸின் ராதிகாவிற்கே 'ள'கரம் 'ழ'கரம் தகராறு இருப்பதால்
இதற்கு கவனம் செலுத்தவில்லை போலும். செந்தமிழில் தொடர் வருவதால் சொல்வளமும் அதை சரியாய் உச்சரிக்கும் நா-வளமும் நன்கு தேவைப் படுகிறது. எந்த காலத்திலும்
சிலருக்கு 'ழ'கர 'ள'கர தகராறுகள் இருந்திருக்கலாம் என்று சாக்கு சொல்லி நம்மை சமாதானப்படுத்திக் கொள்வோம்.
வாழ்க தமிழ்.
10.6.08
அரசி தளபதியை மணப்பதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.
அவளை சிறைவைக்கிறான் மாமல்லன். சிறையில் வித்யாதரனின்
எக்காளச் சிரிப்பு மேலும் அவளை அவமானப் படுத்துகிறது.
"கற்றோரையும், அரசாளும் ராணியையும் சிறைவைத்து நீ என்ன
கதிக்கு ஆளாகப் போகிறாய் என்று நினைத்தால் பரிதாபமாக உள்ளது" என்று மாமல்லனை இகழ்கிறான் வித்யாதரன்.
இதற்கிடையே, மலைமகள் களிநகைப் புரிய, அலைமகளும் கலைமகளும் வேதனையுடன் உலாவருகின்றனர். நாரதரும் அங்கு செல்ல, அவர்களிடையே கடும் விவாதப் போர் துவங்குகிறது. "துக்கம் தொடருவதில்லை" "சிரித்தவர் வாழ்ந்ததில்லை, அழுதவர் கெட்டதில்லை" என்று வசனங்கள் பரிமாறப்படுகின்றன. அத்தனையும் கேட்டும், எக்காளச் சிரிப்பு சிரிக்கிறாள் ஷக்தி. நாரதர், மூன்று தேவியரும் ஒற்றுமையோடு செயல்படுவதே நன்று என்றும் கூறியதை அவள் லட்க்ஷியம் செய்யவில்லை.
"கலகம் உண்டு பண்ணினால் செவி சாய்ப்பவர்கள், நல்லனவற்றை எடுத்துரைத்தால் அலட்சியம் செய்கிறார்களே" என்று நாரதர் வருந்துகிறார்.
அமைச்சர், செய்தியறிந்து மனமுடைந்து விடுகிறார். அவரும் தங்கள் வசம் இருப்பின் நன்று, இல்லையெனில், அம்பிகைக்கு அடுத்த சிறையில் கம்பி எண்ண நேரிடும் என்று மாமல்லன் எச்சரிக்கிறான். மனம் வெம்பினாலும், வெளியே அரிதாரமின்றி முகமூடியிட்டு, தனக்கு ஏதும் இழப்பில்லை என்பது போல் காட்டிக்கொள்கிறார் அமைச்சர். "யார் அரசாண்டால் என்ன, என்னுடைய முதிர்ந்த இந்த வயதில் நான் அமைச்சராகவே இறுதிவரை நீடித்தால் சரி" என்று சாதூர்யமாகப் பேசுகிறார். அவரை இன்னும் முழுமையாக நம்பாத மாமல்லன் அவரைப் பற்றி விழிப்புடன் இருக்கவேண்டுமென்று பார்த்திபனுக்கு கட்டளை இடுகிறான்.
இதற்கிடையில் சிறையில் வித்யாதரன், அம்பிகைக்கு ஒரு யுக்தி கூறுகிறான். மாமல்லனின் இச்சைக்கு இப்போதைக்கு 'சரி' என்று சம்மதம் தெரிவிக்குமாறு கூறுகிறான்.
(இனி நாளை)
வித்யாதரனாய் நடிக்கும் ராம்ஜியின் தமிழ் உச்சரிப்பும் தகராறு தான். மனம் வருந்துகிறது. அவரின் நடிப்பு நிச்சயம் மற்றோரக் காட்டிலும் ஜொலிக்கிறது. கண் பேசுகிறது.
அதிகாரம் செலுத்துபவன் என்றால் முகத்தை கடுகடுவென வைத்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. சிரித்தே சாதித்தோர் பலர். மற்றபடி நன்றாகத் தான் செய்கிறார் பிர்லா போஸ்.
அதிகாரம் மட்டும் செலுத்தும் ஒருவனுக்கு மதியூகம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதாலோ என்னவோ, அவர்கள் பேசிக்கொள்வதற்கு வசதியாக, அம்பிகையை, வித்யாதரனின் அடுத்த அறையிலேயே சிறை வைக்கிறான். போதாத குறைக்கு இரு சிறைக்கும் மத்தியில் சுவரே இல்லை.
வெறும் கம்பிகள். கம்பிக் கதவிற்கு தாள் இல்லை என்றால், குறுக்க நெடுக்க புழங்கி ஒரு ஆணும் பெண்ணும் குடும்பமே நடத்திவிடலாம்.
:clap: :clap:Quote:
Originally Posted by Shakthiprabha
:wave:Quote:
Originally Posted by Shakthiprabha
ப்ரவல்லிகா = சரஸ்வதியா?
மாமல்லைனை மணக்க சம்மதம் தெரிவிக்குமாறு வித்யாதரன்
அம்பிகையிடம் ஆலோசனை கூறுகிறான். அவ்வாறு சம்மதித்தால்
மாமல்லன் மகிழ்ச்சிக் கடலில் திளைத்து திருமண ஏற்பாடுகளை
கவனிக்க முற்படுவான். அமைச்சரைக் கண்காணிப்பின்றி அவன்
உலவவிடக் கூடும். அப்போது அமைச்சரை, அம்பிகை சந்தித்து,
திருமணத்தைப் பற்றி மக்களிடையே பொது அறிவிப்பு விடுக்கும் போது,
சூசகமாய் நடந்த உண்மைகளையும் கூறினால், மக்களிடையே எழுச்சி
ஏற்படச் செய்து விட முடியும் என்று வித்யாதரன் திட்டமிடுகிறான்.
எதிர்பார்த்த படியே மாமல்லன் மிக்க மகிழ்ச்சியோடு ஏற்பாடுகளை
கவனிக்கிறான். அமைச்சர் மட்டும் அதிர்ச்சியாகிறார். பின்னர் சிறையில்
அம்பிகையை சந்தித்த போது, அவருக்கும் வித்யாதரன் திட்டதை
விளக்குகிறான். அதன் படி, அவர் வித்யாதரனின் மனைவி 'கலையரசி'யை
சந்திக்கமாறு வேண்டுகிறான். கலையரசியிடமே மக்களிடையே புரட்சியூட்டும்
பொறுப்பை விட்டுவிடுவது நலம். அறிவிலும் மதிநுட்பதிலும் சிறந்த கலையரசியே
இக்காரியத்திற்கு ஏற்றவள் என்று அமைச்சரும், அம்பிகையும் நம்புகிறனர்.
எதிர்பார்த்தது போலவே புரட்சித்தீ மெதுவாக நாட்டில் பரவுகிறது. திருமணத்தன்று
அம்பிகை அலங்கரித்து அழைத்து வரப்படுகிறாள். இன்னும் சற்றே நேரத்தில்
தான் அரசனாகப் போவது ஊர்ஜிதமாகிவிட்டபடியால், பார்த்திபனை தளபதி
பொறுப்பை ஏற்கும்படி மாமல்லன் ஆணையிடுகிறான்.
அதே சமயத்தில், கலையரசி நாட்டுமக்கள் பலர் சூழ அரண்மணையின் காவலை
மீறி, உள்ளே நுழைகிறாள். அம்பிகை தன் திட்டம் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில்
புன்னகைக்க, மாமல்லன் எதிர்க்க முற்படும் முன், முன்னேற்பாட்டின்படி திருமண
அலங்காரத்தில் ஈடுபட்டிருந்த சில வீரர்கள் (பொது மக்களுள் சிலர்) க்ஷண நேரத்தில்
உடைவாளை உருவ, மாமல்லனின் கழுத்து குறிவைக்கப் படுகிறது.
திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. மேடை நாடகம் பார்ப்பது போல் உள்ளது.
வசனங்களில் ஆழம் இல்லை. காட்சியமைப்பு மட்டும் அருமையாக இருக்கிறது.
(தொடரும்)
It is true SP mam...Quote:
Originally Posted by Shakthiprabha
this kind of historical serials need 'adukkumozhi, alangaara, anal paRallum' dialogues. that is missing here. (true, everyone cant be APN).
watched last night, as you said earlier, the forehead ornament not suit with others, because all others are in light blue.
On releasing from jail, when she was passing the poet's cell, Kaniga gives a meaningful look tto that poet, which was shown in close-up, beautiful. (but Kaniga's make-up was little dull in this scene and tried to show her own colour).
மிகச் சரியாகச் சொன்னீர்கள் கார்த்திக்!Quote:
Originally Posted by mr_karthik
நானும் அதை ரசித்தேன். :)Quote:
On releasing from jail, when she was passing the poet's cell, Kaniga gives a meaningful look tto that poet, which was shown in close-up, beautiful.
கனிகா தவிர ராம்ஜியின் நடிப்பும், சிரிப்பும் கூட பிரமாதமாய் இருக்கிறது. இவர்களின் தமிழ் உச்சரிப்புத் தான் இடிக்கிறது :(
Thanks again Shakthiprabha!!
We have been used to compare everything. Thats normal.
APN is genius for spiritual movies. Its bad we lost him- part of the life. since then no one attempted up to that level.
Mother tongue may be not Tamil ( aiyoo adika varavendam :-) ) or they donot have good tamil KG teachers.Quote:
Originally Posted by Shakthiprabha
Quote:
நானும் அதை ரசித்தேன். :)
நீங்கள் சொல்வது சரிதான் ஆனா!Quote:
Originally Posted by aanaa
இந்த ஒரு விஷயம் மட்டுமே ஏனைய குறைகளை போக்க வல்லது. தொடர்களையோ வேறு தொலைக்காட்சிக் கேளிக்கைளையோ பார்க்க பிரியப் படாத என் போன்றோர்களையும் இந்தத் தோடர் தொலைக்காட்சி முன் உட்கார வைத்திருக்கிறது.
புராண இதிஹாஸத் தொடர்களைத் தயாரிப்பதோ, திரைப்படங்களைத் தயாரிப்பதோ சாமான்ய விஷயமல்ல.
இத்தகைய தொடர்களின் மூலம், நிறைய நல்ல கருத்துக்கள் சிந்தனைகள் மக்களைச் சென்றடையும்.
துணிந்த எடுத்த இந்த முயற்சிக்காகவே ராடான் க்ரியேஷன்ஸை பெருமளவில் பாராட்டினாலும் தகும்.
:clap: :clap: :clap:
இன்றெப்படியும் "சரஸ்வதி சப்தம்" முடிந்து விடும் என்ற எண்ணதுடனேயே நாமும் திருவிளையாடல் பார்க்கத் துவங்குகிறோம். நம் எண்ணமும் வீண்போகவில்லை.
பார்த்திபனும், மாமல்லனும், கைது செய்யப் படுகின்றனர். ஒட்டுமொத்த நகரமும் சேர்ந்து, எஞ்சியிருக்கும் மாமல்லனின் காவலர்களை அடித்து விரட்டுகின்றனர்.மாமல்லனை மட்டும் தூக்கிலிட உத்தரவிடுகிறாள் அம்பிகை.
தன்னருள் பெற்றவனை சதி செய்து தூக்கிலிடப் போகிறார்கள் என்றதும் உமையவளுக்கு வருத்தம் மேலிடுகிறது. கலைமகளருள் பெற்றவனும் அம்பிகையும் தனித்தனியே இயங்காமல், கூட்டணி அமைத்து தனியொருவனாய் மாமல்லனை தூக்கிலிடுவது எப்படி சரியாகும் என்று அவள் வாதிடுகிறாள். நாரதரும் அங்கு வந்து சேர்ந்து, உமையவளுக்கு பரிந்து பேசுகிறார். வித்யாதரனை சிறையிலடைக்க எப்படி மாமல்லனும் அம்பிகையும் கூட வேறு சமயம் கூட்டாய்ச் செயல் பட்டதை இறைவன் நினைவுறுத்துகிறார். தேவியர் மூவரின் சபதத்தில் ஒரு உயிரல்லவோ பலியாகவிருக்கிறது, அதைக் காப்பது இறைவன் கடமை என்று நாரதரின் வலியுறுத்தலின் பேரில், இறைவன் வசந்தபுரத்தில் திருவெழுகிறார். இறைவன் சென்றதும் மற்ற தெய்வங்களும் அங்கு எழுந்தருளுகின்றனர்.
அதன் பின்னரும் கூட, சரஸ்வதிதேவியோ நிலைத்திருக்கும் கல்வியறிவும் ஞானமுமே என்றும் சிறந்தது என்று வாதிட, திருமகளோ இம்மைக்கு செல்வங்களிருந்தாலேயொழிய வாழ்வின் இலக்கை எட்டுவது கடினம் என்கிறாள். இத்துணை செல்வமும், கல்வியறிவும் இருந்தாலும் கூட அதைக் கட்டிக் காக்கும் வீரமும் தைரியமும் இன்றியமையாதது என்று உமையவள் அழுத்தம்திருத்தமாய்க் கூற, இறைவன்...
"இம்மூன்றும் ஒருங்கே பெற்ற ஒரு தனிமனிதனோ, நாடோ இருந்தால் அதற்கு இணை இருக்கவும் முடியுமா? மூன்றின் பெருமையும் ஒருங்கே செயல்படும் போது தான் அதன் வலிமை அதிக்கரிக்கிறது" என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். வீண்தர்க்கத்தின் விளைவாக மூவரும் தனித்தனியே மூவருக்கு அருளி இறுமாந்திருந்ததை விட, ஒருங்கே தங்கள் கருணையை ஒரு தனி மனிதனுக்கு வழங்கினால் அவனால் நாடும் வீடும் சுற்றமும் பெறும் நன்மைக்கு ஈடாகுமா என்று முடிக்கிறார். தேவியர் மூவரும் கூட, தங்கள் அறியாமையை நினைந்து சற்றே வெட்கி, இறைவனின் தீர்ப்பை ஒப்புக்கொள்கின்றனர். இறுதியில், அம்பிகை, வித்யாதரன், மாமல்லன் மூவருக்கும் அருள் வழங்கிச் செல்கின்றனர்.
தாவி பின்னோக்கி ஓடும் மனதை "அடச்சீ சும்மாயிரு" என்று அடக்கினாலும் கூட, சிவாஜி நடிப்பில் டி.எம்.எஸ் "கல்வியா செல்வமா வீரமா" என்று பாடிய பாடல் மனக்கண் முன் வந்து போகிறது.
"ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
...
ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது அது
ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
...
மூன்றும் துணையிருக்கும் நலம் வேண்டுமா"
என்று பாடலும் அதன் அர்த்தமிகு வரிகளும், இசையும், சிவாஜியும், இன்னும் ஏனையோரும் வந்து போகின்றனார்.
இப்பாடலை கண்டு மகிழ, கீழே சுட்டுங்கள்
http://www.youtube.com/watch?v=1yC2C3wdVjk
இறுதிக் காட்சியில், அரசியாய் அம்பிகை வீற்றிருக்க, பக்கத்தில் அரண்மணைப் புலவன் வித்யாதரனும், இன்னொரு புறம் தளபதியாய் மாமல்லனும் வீற்றிருக்கிறார்கள். எல்லாம் கலைவாணியின் அருள் என்று வித்யாதரன் சிரிக்க, ஏன் உமையவள் அருள் என்று சொல்லக்கூடாதா என்று மாமல்லன் கேலிக்க, திருமகளின் அருளன்றி வேறேது என்று நகைக்கிறாள் அம்பிகை. இக்கண்கொள்ளாக் காட்சியை கண்டு மகிழ்ந்திருக்கும் அமைச்சரும் "அடடா மறுபடியும் ஆரம்பித்துவிட்டதா" என்று கவலைப் பட
"இல்லையில்லை முடிந்துவிட்டது....அடுத்தது வேறொன்று ஆரம்பமாகும்" என்று அம்பிகை (டிவி பார்த்துக் கொண்டிருக்கும் நமக்குச் சொல்ல :P ) சொல்லவும் மூவரும் புன்னகைக்கின்றனர்
தூக்கிலிடுவதற்கு முன் மாமல்லன், வித்யாதரன், அம்பிகை மூவரும் உதிர்க்கும் வசனங்களை ரசிக்க முடிகிறது.
"நீ என்ன சிறுவயதிலா ஏட்டைப் பிடித்தாயா, கலைவாணியின் அருள் இடையில் கிடைக்கப் பெற்றவன் தானே" என்று வித்யாதரனை மாமல்லன் அவமதிக்க
"நீ மட்டும் அம்மாவின் வயிற்றிலேயே வாள் பிடித்தாயோ" என்று பதிலுரைக்கிறான் வித்யாதரன்.
இறைவனும் இறைவியும் மற்றோரும் பேசும் வசங்களும் பரவாயில்லை. நடுநடுவே தொன்று தொட்டு வழங்கி வரும், ஆண்கள் பெண்களிடம் அமைதி காப்பது போல் நடிப்பதும், "நல்லவேளை நான் பிரம்மச்சாரி" என்று நாரதர் பெருமூச்சுவிடுவதும், கேட்டுக் கேட்டுப் புளித்தப் போன நகைச்சுவைகள். சாமான்யர்கள் பேசும் வசனங்களையே தெய்வங்களையும் பேச வைத்தால் பல நேரம், சலிப்பு தட்டுகிறது. சில நேரம் புன்னகையும் மலர்கிறது.
வேறொரு கோணத்தில் பார்க்கும் போது, பெருமளவில் மக்கள் தொடரைப் பார்க்கும் போது பலரது மனநிலை, மனமுதிர்ச்சியை மனதில் கொண்டு வசனங்களை அமைத்திருக்கிறார்கள் என்று புரிகிறது. சில எளிய கருத்துக்களை எளியவர்க்கு சென்றடையும் நோக்கத்துடன் செயல்படும் போது, எளிய வழக்கும், பேச்சும் இருப்பது தான் சரி.
சுருக்கமாய் சொன்னால், நேற்றைய பகுதியில், சற்றே சுவாரஸ்யம் கூடியிருந்தது. இனி அடுத்தது என்ன என்ற ஆவலையும் தூண்டியுள்ளது.
'கூட்டாகச் சதி' செய்வது என்பது என்றைக்கும் எக்கால கட்டதிலும் எந்த யுகத்திலும் அரசியலுக்கு உகந்தது போலும். கூட்டணிகளும் மாறிக்கொண்டே இருக்கும். அரசியல் மட்டுமென்ன நடைமுறை வாழ்கைக்கு விதிவிலக்கா என்ன!? நம் அன்றாட அலுவலகக் கலகங்கள், குடும்ப மனப்பூசல்கள், நண்பர்கள் தகராறுகள் என எல்லாவற்றிலும் கூட்டுச் சதி, செயல்பாடு, பின் கட்சி மாறுவது என நவரச நாடகங்கள் எல்லா வீட்டிலும், ஏன் ஒவ்வொரு தனி மனிதனுக்குளேயும் கூட இருக்கத்தானே செய்கிறது! ஒரு போது ஒன்று நினைக்கிறோம் சிறிது நேரத்தில் நம் கண்ணோட்டம் மாறுகிறது. மாற்றங்கள் மட்டுமே நிலையானது. (கட்சி விட்டு கட்சி தாவுவதும் இப்படித் தான் என்பது முதிர்ந்த அரசியல் கூற்று!)
காட்சி அமைப்புக்கள் நன்றாக இருந்தது என்று நேற்று நான் எழுதியது, கண்பட்டு விட்டது போலும். இன்றைக்கு இருந்த தூக்கு மேடை காட்சியமைப்புகள் அத்தனையும் அட்டையில் செய்யபட்ட போலி அமைப்பு என்று குழந்தை கூட சொல்லிவிடும். இப்படிப் பட்ட அரிய காட்சிகளை படமெடுக்க சிரமம் இருப்பின், மிக்ஸிங் செய்யும் போது க்ரீன் ஸ்க்ரீன் / ப்ளூ ஸ்கீரீன் தொழில் நுட்பம் உபயோகித்து, ஏதேனும் ஒரு கல் மண்டபத்தின் காட்சியுடன் இணைத்திருக்கலாம்.
மிக்ஸிங் நுட்பங்கள் தெரிந்தோர்களுக்கு இந்த போலி காட்சியமைப்பு இன்னுமே உறுத்துகிறது. பள்ளி /கல்லூரிகளில் மேடை நாடகத்தில் வைக்கும் அமைப்பைப் போல் இருந்தது.
(நாளை வேறு விளையாடல் :) )
//இன்றெப்படியும் "சரஸ்வதி சப்தம்" முடிந்து விடும் என்ற எண்ணதுடனேயே நாமும் திருவிளையாடல் பார்க்கத் துவங்குகிறோம். நம் எண்ணமும் வீண்போகவில்லை.
(நாளை வேறு விளையாடல்)//
next movie 'kandhan karunai?' or 'thiruvarutchelvar ?' or 'agaththiyar ?' . let us watch today.
//தாவி பின்னோக்கி ஓடும் மனதை "அடச்சீ சும்மாயிரு" என்று அடக்கினாலும் கூட, சிவாஜி நடிப்பில் டி.எம்.எஸ் "கல்வியா செல்வமா வீரமா" என்று பாடிய பாடல் மனக்கண் முன் வந்து போகிறது.//
thiruviLaiyaadalai vida ungaL 'sol viLaiyaadal' nallaa irukku.
64 திருவிளையாடல்களாம் - ராதிகா கூறியிருந்தா.Quote:
Originally Posted by Shakthiprabha
ஆகவே இன்னும் 62 உள்ளன.
( மாம்பழம் /சரஸவதி சபதம்)
நன்றி சக்திபிரபா
தொடருங்கள் உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்தை...
ராதிகாவின் பார்வையில்:
[img=http://img99.imageshack.us/img99/9554/thiruvi03yh6.th.jpg]
சுந்தர் OAK = தட்சன்
சுந்தர் OAK = OAK தேவரின் மகன்
மிக வேகமாக வசனங்களை உச்சரிக்கின்றார்..
It is not movie, and therefore no time limit.Quote:
Originally Posted by aanaa
She can pull even up to 640 thiruviLaiyaadal
The one which you mentioned as 'maambazham' is ஞானப்பழம்...?.
சக்திப்ரபா, மிக அருமையாக எழுதுகிறீர்கள். தொடரையே நேரில் பார்ப்பது போலிருக்கிறது. தொடர் பார்த்தபின் உங்கள் விமர்சனம் படிப்பது ஒரு சுவையான அனுபவம்.
சின்ன சின்ன விஷயங்களைக்கூட விடாமல் கோர்வையாக, அதோடு முக்கியமாக உங்களது சுவாரஸ்யமான இடைச்செருகல் கமெண்ட்ஸ்களோடு தருகிறீர்கள். சூப்பர்.
நிறுத்தாமல் தொடருங்கள்.
என்ன ஒரு ஒற்றுமை...!!Quote:
Originally Posted by aanaa
'திருவிளையாடல்' படத்தில் தட்சனாக நடித்தவர் ஓ.ஏ.கே.தேவர்.
திருவிளையாடல் தொடரில் அதே ரோலில் அவரது மகன் ஓ.ஏ.கே.சுந்தர்.
ஆஹா... ஓ.ஏ.கே.தேவரின் அந்த வசன் உச்சரிப்பு... அடடா..
"ஈசன்... ஹும்... யாரவன்?. இறந்தவர்களின் உடலை எரித்து அந்த சாம்பலை உடலெங்கும் பூசிக்கொள்ளும் பித்தன். பேய்கள் நடமாடும் சுடுகாட்டை கட்டிக்காக்கும் சடையன். அந்த இடுகாட்டுத்தலைவனின் மனைவியை இங்கு எதிர் கொண்டழைக்க யாருமில்லை.. போய்விடு".
என்ன வேகம், என்ன அட்சர சுத்தமான உச்சரிப்பு..!.
இன்று அந்த வசனத்தைப் பேசச் சொன்னால் எத்தனை பேர் தேறுவார்கள்...?.
நன்றி கார்த்திக், சாரதா, ஆனா :bow:
சற்று உடல் நிலை சரியில்லாததால், என்னால் வெள்ளிக்கிழமை பகுதியைப் பற்றி உடனே எழுத முடியவில்லை.
நான் எழுத நினைத்ததை சாரதாவும் ஆனாவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஓ.ஏ.கே தேவரின் மகன் என்ற தகவலுக்கு நன்றி.
வேகமாய் அனல்பறக்கும் வசனங்கள் வீசி, சரியான உச்சரிப்பைக் கேட்க தாகம் கொண்டு அலையும் நம்மை, மகிழ்வித்தவர் யார் என்று நானும் யோசித்துக்கொண்டிருந்தேன்!
:clap:
thank youQuote:
Originally Posted by mr_karthik
"இனி எல்லோரும் எனக்குக் கீழ், ஈசன் எனக்குச் சமம்" என்று
மமதையில் வசனங்களை வீசும் தக்ஷனிடம் ஏனோ காழ்புணர்ச்சி வரவேயில்லை.
ஒருவேளை தமிழை இனிதாய் வழங்குவதால் நமக்கு இவரை பிடித்துப் போய்விட்டதோ என்னும் நம்
எண்ணம் தவறு என்பது போல் அடுத்து வரும் வருணனும், வாயுவும், அக்னியும் கூட
புன்சிரிப்புடனேயே தக்ஷனின் ஆணை ஏற்கின்றனர். தக்ஷனுக்கு அடிபணிவதைப் பற்றி சிறிதும் கவலையற்று காணப்பட்டனர். தக்ஷன் பிரம்மாவின் புதல்வன் என்பதால் எல்லோருக்கும் அடிபணிவதில் மகிழ்ச்சி இருக்கும் போலும். தஷனை 'தக்ஷப் ப்ரஜாபதி' என்றும் வழங்குவர் என்று புராணம் கூறுகிறது :? தக்ஷன் அஹங்காரத்தின் உருவாய் தெரிந்தாலும், மற்ற அரக்க குணங்கள் அற்று காணப்படுகிறான்.
பூமாதேவியும் கூட தக்ஷனுக்கு இனி அடிபணிந்தே இயங்கச் சம்மதம் தெரிவிக்கிறாள். குரு பகவானின்
வருகைக்கு பணிந்து நிற்கும் தக்ஷன், தன்னுடன் குருவும் இசைந்து, இணைந்து, இயங்கக் கோருகிறான்.
தக்ஷனைப் பற்றி பல வரலாற்றுக் கதைகள் உண்டு. தக்ஷன் பிரம்மாவின் வலது கட்டைவிரலிலிருந்து உருவானவன் என்றும் தக்ஷனின் மனைவியோ பிரம்மாவின் இடது கட்டைவிரலிலிருந்து உருவானவள் என்றும் கூறுவதுண்டு. சிலர் தக்ஷன் பஞ்சஜனியை மண்ந்தார் என்றும் கூறுவர். இவருக்கு புராணக் கதைகளின் வழக்குப் படி பல புதல்விகள் உண்டு. திருவிளையாடலில் தக்ஷன் "ப்ரசுத்தியை" மணந்ததாகக் கொண்டு கதையை கூறுகின்றனர். பிரசுத்தியிடமிருந்து தக்ஷனுக்கு நிறைய புத்ரிகள் உண்டு. இதில் பதிமூன்று பேர் காச்யப முனிவரை மணந்தனர். இருபத்தேழு பெண்கள் ( constellations) சோமனை (சந்திரன்) மணந்தனர் என்றும் சொல்வதுண்டு
நம் கதையில் மூன்று புதல்விகளுடன் நிறுத்திவிட்டனர்.
தக்ஷனின் புதல்விகளான அஸ்வினியும் ரேவதியும் ரோஹிணியும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குள் 'யார் பெரியவர்' என்ற போட்டி நடக்கிறது. புலிக்கு பிறந்ததல்லவா! விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது, முதலாமவள் "நான் தான் தக்ஷன், என் சொற்படித் தான் எல்லோரும் கேட்கவேண்டும்" என்கிறாள். மற்ற இருவரும் தங்கள் தான் தக்ஷன் தங்கள் சொற்படி தான் எல்லோரும் இயங்க வேண்டும் என்கின்றனர். "நான் என்ன அக்னி, வாயு, வருணனைப் போல் தலையசைத்து விடுவேனா, என் சொற்படி நீங்கள் கேளுங்கள்" என்று அதிகார தர்க்கம் துவங்குகிறது. இவர்களைப் பார்த்துப் பூரிப்படைகிறாள் பிரசுத்தி. அங்கு வந்து சேரும் தக்ஷனும் இதனைக் கண்டு மகிழ்கிறான். உலகமே உங்களின் கீழ் இயங்கும் போது, நான் எப்பேர்பட்ட பாக்கியசாலி என்று பெருமிதம் கொள்ளும் மனைவியிடம், தன் எண்ணதில் ஒரு பகுதி நிறைவேறி விட்டதென்றும் இன்னும் சில எண்ணங்கள் இருக்கிறது, அவையும் ஈடேறும் நாளை எதிர்ப்பார்த்திருப்பதாய் கூறுகிறான் தக்ஷன்.
சிவனும் ஷக்தியும் கைலாயத்தில் தக்ஷனைப் பற்றியும், அவனுக்களித்த வரத்தைப் பற்றியும் சம்பாஷணையில் ஈடுபட்டிருக்கின்றனர். நாரதர் வந்து சேருகிறார். "ஒருவனுக்கு ஆளும் திறமை இருந்தும், அருளிய வரம் இருந்தும், கூட ஷக்தி இருந்தாலல்லவா அவனால் இயங்க/இயக்கவிக்க முடியும்" என்று முன்னுரை வழங்கிச் செல்கிறார் நாரதர். அதன்படி ஷக்தி தக்ஷனிடம் வெகு விரைவில் சென்றடையும் நேரம் வந்து விட்டது என்று நாம் யூகிக்கிறோம்.
"உலகை அடக்கி ஆளும் அவன், இனி என்னையும் மருமகனக்கிப்) பணிய யுக்தி செய்திருக்கிறான்" என்று பூடகமாய் தெரிவிக்கிறார் இறைவன். நாரதர் சென்றவுடன் வழக்கம் போல் அஹம் சிறிதே தலை தூக்கிவிடுகிறது இறைவிக்கு. எங்கும் இயங்க ஷக்தி இல்லையேல் வழியேது என்று பெருமிதம் கொப்பளிக்க வினவுகிறாள்.
இது சிவனின் கோபத்தை தூண்டுவிடுகிறது. "நீரிலும் நெருப்பிலும், ஆகாயத்திலும், ப்ரபஞ்சமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது யாம்...யாமன்றி வேறுண்டோ" என்கிறார்.
"அப்படி எங்கும் நிறைந்திருக்கும் ப்ரம்மத்தை இயங்கச் செய்பவள் ஷக்தி. என் இயக்கமின்றி இங்கு எதுவும் செயல்படாது.." என்று இவர்களின் வாதம் முற்றுகிறது..
( இனி அடுத்த பகுதியில் ஷக்தி சாபமேற்பாள்....)
தக்ஷனாக வரும் ஓ.ஏ.தேவரின் மகன் சுந்தருக்கு :clap: அவர் சொற்சுத்தம், தொனி, ஏற்ற இறக்கம், எல்லாமே வெகு அற்புதமாய் பொருந்த, தக்ஷனாகவே உருவெடுத்துவிட்டார்.
தக்ஷனின் மனைவியாக சுமங்கலி. (ட்ராமா புகழ்)
சிவனாய் ஸ்ரீதர் நன்று.
நேற்று நாரதர் "அடடா....உமையும், இறைவனும் தனித்திருக்கும் போது வந்து விட்டேனே...." என்று வருத்தப்படுகிறார். இரண்டொரு வார்த்தை பேசி தன் வேலை முடிந்ததும் "அமைதியாய் அளவளாவிக் கொண்டிருக்கும் போது நான் வந்ததே தவறு...நான் பிறகு வருகிறேன்" என்று உடனே புறப்பட்டு விடுகிறார்.
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு தேவலோகத்திற்கே சென்று தங்கிவிடலாம் என்ற ஆசை மேலிடுகிறது. கிடைக்கும் ஒரு ஞாயிற்றுகிழமையிலும், யாரேனும் வந்து விட்டால், வலுக்கட்டாயமாய் புன்னகைத்து, காப்பி, பலகாரம் வேறு வழங்கவேண்டியிருக்கிறது. இறைவிக்கு காப்பி பலகாரம் வழங்கும் கடமையெல்லாம் கிடையாது. நாமோ, காப்பி பலகாரம் வழங்குவதோடன்றி, யோசித்த்து யோசித்து புதிதாய் ஏதேனும் சுவாரஸ்யமாய் பேசி, சிரித்து, அளவளாவி அவர்களை மகிழ்விக்கும் கடமையில் ஊந்தப்படுகிறோம். அவர்களும் லேசில் கிளம்பமாட்டார்கள். இதற்குள் ஞாயிறுக்கிழமையின் பாதி நேரம் முடிந்து விடும்.
ஆனாலும் நாரதர் "பரலோகத்தில் அதிகாரத் தகராறு" என்று சொல்லும் போது, இகலோகமான பூமியில் நிகழும், பொறாமை போட்டி, இகழ்ச்சி, புகழ்ச்சி, வருததம், மகிழ்ச்சி என்ற இரட்டைகளைத் தாண்டி அங்கு சென்றாலும் "அஹங்காரதுடன்" மோதவேண்டுமா என்ற சலிப்பு ஏற்படுகிறது. இதனால் தான் எல்லாம் தாண்டிய 'ப்ரம்மநிலையே' பேரானந்தம் என்று சொல்கிறார்கள் பெரியவர்கள் என்று நினைக்கிறேன். ஆசையற்ற அறிவுநிலைக்கு ஈடேது!!
SP mam,
on reading last two paras, we afraid you soon become a 'saamiyaarini'. (kaavi dress kattikittu maraththadiyil pOy utkaaraamal irundhaal sari).
If anybody want to go to SP mam's home on Sundays, please think twice before you go.
just kidding........
your writing is really superb and touching, and it brings the effect of physically watching the episode.
keep up your writing as long as the serial goes.
I just saw a scene in this.
அன்னை சரஸ்வதி : அவன் என்னுடைய பிள்ளை அல்லவா ?
பிரம்மா : ம்ம்.... நம்முடைய பிள்ளை ! :banghead: :lol: (He grins)
Dialogue writer :hammer: Oru masala serial paartha effect antha scene la. Konjam chinnapullathanaama irukku ithu :lol:
Anyway, haven't seen any of the episodes fully. The sets are good and cool. Let me see any one episode fully and comment on this.
karthik,
:)
selva,
நான் முன்பு கூறியதைப் போல், பலதரப்பட்ட மக்களை தொடரைக் காணச் செய்வதற்கு இது போன்ற அரிய நகைச்சுவையும், வசனங்களும் இணைத்திருக்கிறார்கள் (அள்ளி இறைத்திருக்கிறார்கள்) என்று எண்ணுகிறேன். இத்தகைய நகைச்சுவை நமக்கு நகையை வரவழைக்காத பக்ஷத்தில் நாம் கண்டும் காணாமலும் போவதே உத்தமம் :roll: :cry:Quote:
Originally Posted by selvakumar
தொடரின் அடித்தளமாய் நிற்கும் சொல்லப்படாத கருத்துக்களும், மெல்லியதாய் இழையோடும் பாடங்களும் மட்டுமே ஏற்பது நன்று.
:?
நன்றி இடைசெருகல்களுக்கும்..Quote:
Originally Posted by Shakthiprabha
டொரண்டோவில் 10 ஆண்டுகள் இப்படித்தான் ..Quote:
Originally Posted by Shakthiprabha
விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு சடங்குகள்
கல்யாணம்
பூப்புனித நீராட்டு
வைத்தியசாலையில் சுகவீனமுள்ளவர்களை பார்வையிடல்.
சிலவேளை - துக்க வீட்டிற்குப் போதல்
ஓய்வே இல்லை.
இப்பொழுது
ஒட்டாவாவில் - தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவென்றபடியால்
ஓய்வு நேரம் நிறையவே உள்ளன...
தொடருங்கள் உங்கள் பாணியில்
:clap:
:DQuote:
Originally Posted by mr_karthik
தாட்சாயினி யாக - சுஜிதா ஸ்ரீ
கணவருக்காக நாடகதின் கதாநாயகி்
காற்றுக்கென்ன வேலி யின் கதாநாயகியு்மான இவர்
பாக்கியராஜின் முந்தானை முடிச்சில் குழந்தை நட்சத்திரமுமாவார்.
எல்லா நாடகங்களிலும் ஏதாவதொரு வேடத்தில் தலைகாட்டும் 'பிரியங்காவும்"
இங்கும் ஒரு நடத்திரம் ( 27 ல் 1, அஸ்வினி =?)
உலகெங்கும் உள்ள பொதுநடப்பு :)Quote:
Originally Posted by aanaa
பொதுவாய் ஞாயிற்றுக்கிழமை சடங்குகள், கொண்டாட்டங்கள் வைத்துக் கொண்டால் விடுப்பு எடுக்க நேராமல் ஆஜாராவது எளிது என்று பலர் கருதிகிறார்கள் :)
:? :thinking: :?Quote:
:DQuote:
Originally Posted by mr_karthik
__
பி.கு: நடிகர்களின் பெயர் அறிவிப்புகளுக்கு நன்றி. எனக்குப் பொதுவாய் சீரியலில் நடிப்பவர்கள் பெயர்கள் தெரிவதில்லை. தெரிந்த சிலதும் நினைவில் நிற்பதில்லை.
"யாமனறி பிறிதொன்றும் உண்டோ" (இங்கு சிவம் எனப்படும் தத்துவத்தை விருப்பமுள்ளவர்கள் "சத் -சித் -ஆனந்தம்" (சச்சிதானந்தம்) ஆன பரம்பொருள் என்று பொருள் கொள்ளலாம்)
"கதிரவன் எழுவதும் விழுவதும், காற்றும், ஒளியும், நீரும் பஞ்ச பூதங்களுமாய் திகழ்வது யாம். எல்லாம் எமக்குள் அடக்கம்" (எல்லாமே நானாகிப் போகிறேன்) என்று இறைவன் கர்ஜிக்க
இன்னும் ஒரு மாத்திரை ஷ்ருதியை ஏற்றி, "ஆனால் நீரோ எமக்குள் அடக்கம்" என்கிறாள் ஷக்தி.
(ஷக்தி எனப்படுவது, எங்கும் இயக்கமாய் இயங்கும் ஆற்றல், அருட்பேராற்றல்)
இறுதியில் கோபமுற்ற சிவன், ருத்ர மூர்த்தியாய் பேருருவெடுக்கிறார். அண்டமெங்கும் அதையும் தாண்டியும், முடிவுறாத பரப்ப்ரம்மமாய் எல்லைகள் கடந்து எல்லைகளற்று எங்கும் நீக்கமற வியாபித்து நிற்கிறார். சிவன் இயக்கமற்று (ஷக்தியின்றி தனித்து) நின்றவுடன், எங்கும் இயக்கங்கள் நின்று போகின்றன. கடலும் காற்றும் ஸ்தம்பித்து நின்றுவிடுகிறது. இகத்திலும் பரத்திலும் எல்லா உலகங்களிலும் இருள் சூழ்கிறது. (இதனை பேரழிவின் நிலைக்கு ஒப்பாகக் கொள்ளலாம். பொதுவாக ஆக்கல் அல்லது உயிர்களின் தோன்றலின் போது, ஒன்றாய் திகழ்ந்திருக்கும் உயிர்சக்தி, பல்வேறு துகளாய் சிதறி வெவ்வேறு ரூபங்கள் கொள்கிறன. மீண்டும் அவை அந்த ஆதியான ஒன்றுடன் (சிவம்) கூடுவதை நாம் பேரழிவு என்கிறோம். (அஃதாவது ஆறுகள் கடலுடன் கலப்பது போல்.)
சிவன், மட்டுமே இயக்கநிலையில் அல்லாது தனித்து நிற்கும் போது, எங்கும் சொச்சமாக நிற்பது வெறும் "இருப்பு" மட்டுமே.
சராசரமெங்கும் நிறைந்து நிற்கும், காலநேரமற்ற சிவனின் இருப்பை கண்ட ஷக்திக்கு, உடல் நடுங்குகிறது. மெய் துவள்கிறது. தான் பெரிய தவறு செய்து விட்டதை உணர்கிறாள். சிவம் என்பதே இல்லாத போது ஷக்தி எனும் இயக்கநிலைக்கு ஏது அர்த்தம்? சிவனும் ஷக்தியும் இணைதலில் தான் பிரபஞ்சத்தின் செயல்பாடு நிகழ்கிறது. மீண்டும் கல்வியா/செல்வமா/வீரமா தர்க்கத்தை போல், ஒன்றை ஒன்று சார்புடையது. (dependant). இதில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது? எது சார்ந்தது எது சாராதது? இதற்கு பதில் தேடுவதே அனர்த்தம்.
உடல் நடுங்க, பயத்திடன், பவ்யத்துடன், தன்னைத் தாழ்த்திக்கொண்டு ஷக்தி சிவனிடம் மன்னிப்பு வேண்டுகிறாள். சிவன் சற்றே சாந்தமடைந்ததும், "வீண்தர்க்கம் செய்த பலனாய் பூமியில் பிறப்பெடுத்து கர்மத்தை நீயே கழித்துவிட்டுத் திரும்பு" என்று சொல்ல, உமையவள் உடன் பூமியில் அவதரிக்கிறாள்.
அழகிய இளஞ்சிவப்புத் தாமரை மலரில் சங்கின் வடிவம் கொண்டு ஆற்றிலே மிதந்து தக்ஷனின் கைக்கு வந்து சேருகிறாள். தக்ஷன் சங்கினைத் தொட்டதும் சங்கு அழகிய குழந்தையாய் உருவெடுக்கிறது. தக்ஷனும் பெருமகிழ்ச்சிக் கொள்கிறான். அவன் மனைவி ( புராணத்தின் படி பாஞ்சஜனி, பிரசுத்தி, அசுக்லி என்ற மனைவியர் தான் கேள்வி பட்டதுண்டு. நம் திருவிளையாடலில் தக்ஷன் மனைவியின் பெயர் வேதவல்லியாக்கபட்டிருக்கிறது) வேதவல்லியிடம் தம் அருமை மகளை வளர்க்கும் படி கூறிகிறான். தக்ஷனின் மகள் என்பதால் "தாக்ஷாயணி" என்று பெயர் சூட்டி செல்லமாய் வளர்க்கபடுகிறாள்.
தாக்ஷாயணி சிறு வயது முதல் சிவபூஜையில் ஈடுபடுவதும், சிவனைத் துதிப்பதுமாய் இருக்கிறாள். தக்ஷனுக்கும் உமையவளே தாக்ஷாயணியாய் உருவெடுத்திருப்பது புரிகிறது. காலங்கள் மிக வேகமாய் உருண்டோட,
(..............புராணத் தொடர்களில் ராமந்த் சாகரின் ராமாயணம், மஹாபாரதம், மற்றும் தற்போது ஞாயிறன்று தமிழ்ப் படுத்தபட்டு ஒளிபரப்பாகும் ராமாயணமும் பார்த்ததன் விளைவு, குழந்தைகள் பெரியவர்களாய் வளர குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் (பகுதிகள்) என்று மனதுள் வாங்கிப் பழகி விட்டது. சிறு குழந்தையாய் இரு நிமிடம் சிவனுக்கு பூஜை செய்த தாக்ஷாயணி, அடுத்த வினாடி, இளங்குமரியாய் பருவப்பெண்ணாய் மாறிவிடுகிறாள். பழைய தமிழ் திரைப்படங்களில் பாடிக்கொண்டே ஆடிக்கொண்டே, பந்து விளையாடிக்கொண்டே இரு வினாடியில் வளர்ந்துவிடும் சிறுவர்களைப் போல்.......)
நம் தாக்ஷாயணியும் வளர்ந்து விடுகிறாள்.
(மீண்டும் நாளை)
சிவன் உயர்ந்தோங்கி வியாபித்திருக்க, எங்கும் இருள் சூழ்ந்திருப்பதை புரியவைக்க சில பாத்திரங்களைப் பேசச் செய்திருக்கிறார்கள். அவர்களுள் சரஸ்வதி பிரம்மா, லக்ஷ்மி விஷ்ணுவும் உண்டு. எல்லா இடமும் இருட்டாய் இருக்க, இவர்கள் முகத்தைச் சுற்றி, டார்ச் அடிப்பது போல் 'ஸ்பாட் லைட்'. ஒருவேளை அவர்களின் ஞான ஒளிவட்டமாய் இருக்கலாம். நம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டால், அங்கு விளங்கும் சூழ்நிலைக்கு ஒப்பாய் இருந்தது.
இந்தப் பாத்திரங்கள் "பெண் கோபம் கொண்டால் எப்பேர்பட்ட நஷ்டம்' என்று படையப்பா ரஜினியைப் போல் வசனம் பேசினர். கோபம் என்பது பொதுவான ஒரு உணர்ச்சி. அது ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் அழிவை உண்டு பண்ணும். இங்கே ஏன் பாகுபாடு?
போதாத குறைக்கு "கணவனுக்கு அடங்கி இருக்கவேண்டாம், எனினும் ஒரு பெண் அடக்கமாய் இருப்பது அவசியம்" என்று திருமால் திருவாயால் திருவருளினார்.
"ஷக்தியாகவே இருந்தாலும் பெண்புத்தி பின்புத்திதான், அவசரப்பட்டு நானும் பெண் என்று நிரூபித்து விட்டேன்" என்று இறைவி தேவையற்ற வசனங்களை உதிர்க்கிறார்.
இருபத்தியோராம் நூற்றாண்டில் சமத்துவம் பேசிக்கொண்டு, இத்தொடரை பார்த்துக்கொண்டிருக்கும் சாமான்யர்களுக்கு இவர்கள் சொல்லவரும் செய்தி என்ன?
நம் மதத்தில் சொல்லப்பட்ட சமத்துவக் கருத்துக்கள் ஏராளம்.
ஆணென்றும் பெண்ணென்றும் பாராது, சமநிலை நோக்கை கொண்டுள்ள மதம் என்ற பெருமை நமக்கு உண்டு.
நம் புராணங்களில், மதத்தில் வழங்கப்பெற்றுவரும் அறிவுரைகளை, கருத்துக்களை, உவமைகளை, தர்க்கத்திற்குரியவைகளாக ஆக்கவேண்டாமே.
வீண்வாதம் செய்வதும், தர்க்கம் செய்வதும், கோபம் கொள்வதும், ஆணவம் கொள்வதும் தவறு, அது 'ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாய் இருந்தாலும் சரி'
ஜனரஞ்சகமாக வழங்குகிறேன் பேர்வழி என்று இப்படிப்பட்ட வசனங்களை இணைத்து எரிச்சலூட்டியிருக்கிறார்கள்.
those kadavuLs and saints married too many wives, but preaching thaththuvam as "oruvanukku oruththi" only for us.Quote:
Originally Posted by Shakthiprabha
they should follw it first.
if these functions arranged in working days, who will come?. thatswhy they are choosing holidays.Quote:
Originally Posted by aanaa
aanaa, if you go to north pole there will be very very less population and you will get complete rest.
காத்திக், நம் மதத்தில் கடவுளை (இயற்கையை) உருவ வழிபாட்டிற்காக (நம் வசதிக்காக) உருவமேற்கச் செய்துள்ளனர். (nature is personified)Quote:
Originally Posted by mr_karthik
இருபத்தேழு பெண்களும் இருபத்தியேழு நட்சத்திரங்கள் அவர்களின் கணவராய் சொல்லபடுபவன் சந்திரன் (moon)
எல்லாம் நம் புரிதலில் உள்ளது.
உங்கள் வசதிக்குத் தான் 'ஒருவனுக்கு ஒருத்தி' தத்துவம். விலைவாசி இருக்கும் நிலையில் இதற்கு மேல் தாங்காது :D
:rotfl:Quote:
Originally Posted by mr_karthik
:rotfl:
(விழுந்து விழுந்து சிரித்தேன்)
மனமும் - உடம்பும்
எங்கிருந்தாலும் தனித்திருக்கலாம்