Thank you so much Mr.Senthil & Mr.Rangan!
With each & everyone's contribution we will continue to make this thread a grand success.
Regards,
Pammalar.
Printable View
Thank you so much Mr.Senthil & Mr.Rangan!
With each & everyone's contribution we will continue to make this thread a grand success.
Regards,
Pammalar.
சுவாமி,Quote:
Originally Posted by pammalar
விளையாட்டுப் பிள்ளை 1970 பிப்ரவரி 6-ந் தேதி அன்றுதான் வெளியானது. சென்னையில் மட்டுமே 20 -ந் தேதி வெளியானது. படம் வெளியான மறுநாள் பிப் 7 -ந் தேதி சனிக்கிழமை மதுரை நியூசினிமாவில் இரவுக் காட்சி நான் பார்த்தேன். ராகவேந்தர் சார் அவர்களிடம், அவரின் நடிகர் திலகம் இணைய தளத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த தவறை திருத்தச் சொல்லி முன்பே சொல்லியிருக்கிறேன்.
நன்றி செந்தில். எங்கே ஆளே காணவில்லை? விழாவில் இடம் பெற்றது ராஜா ராணி படத்தில் இடம் பெற்ற சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடக காட்சி. ஒரே டேக்கில் 16 பக்க வசனத்தை நடிகர் திலகம் பேசி நடித்த காட்சி
மோகன், நன்றி. எங்கள் தங்க ராஜா மறக்க முடியாத ஒரு படம். அந்த படத்தின் ஓபனிங் ஷோ இன்னும் கண் முன்னே நிற்கிறது.
NOV,
Thanks for Thenum Paalum. நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை ஒரு சாதாரண படம் என்று நாம் நினைப்பது கூட ஒரு கதையம்சம் கொண்டதாய், உணர்ச்சி போராட்டங்களை உள்ளடக்கியதாய் திகழும். படத்தின் திரைக்கதையை ஒருவர் வர்ணித்து எழுதும்போது அதன் சுவை கூடும். தேனும் பாலும் கலந்து கொடுத்த உங்களுக்கு நன்றி.
இந்த படம் மட்டும் சரியான நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து வெளி வந்திருந்தால் நல்ல வெற்றியை பெற்றிருக்கும்.
அன்புடன்
நமது நடிகர் திலகத்தின் "ராஜா ராணி" திரைக்காவியத்திலிருந்து (கலைஞர் வசனம்), சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகக் காட்சி தான், முதல்வர் கலைஞருக்கான பாராட்டு விழாவில் காண்பிக்கப்பட்டது. அக்காட்சி ஓடிக் கொண்டிருந்த போதும், பின்னர் ஓடி முடிந்ததும் முதல்வர் கண் கலங்கினார். மேடையிலிருந்தவர்களும் அப்படியே. அரங்கிலிருந்தவர்களும் கண் கலங்கியிருக்கின்றனர்.Quote:
Originally Posted by HARISH2619
ஈரேழு பதினான்கு லோகங்களிலும் தலைசிறந்த நடிகர் நமது நடிகர் திலகமே என்பது மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதமாகியிருக்கின்றது.
பெருமிதத்துடன்,
பம்மலார்.
சுவாமி,
விளையாட்டுப் பிள்ளை திருச்சியிலும் வெற்றி பெற்ற விவரத்தை [முன்பே தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்லியிருந்தாலும்] அனைவரும் அறிந்துக் கொள்ளும் வண்ணம் பதிந்ததற்கு நன்றி. தங்கைக்காக படத்தைப் பற்றி குறிப்பிட்டது போலவே விளையாட்டுப் பிள்ளையும் சுற்றிலும் நடிகர் திலகத்தின் படங்களே ஓடிக் கொண்டிருந்த நிலையிலும் வெற்றிப் பெற்றது. ஒரு பக்கம் சிவந்த மண், மற்றொரு பக்கம் எங்க மாமா, இது தவிர வி.பிள்ளை வெளியாகி இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே வெளியான வியட்நாம் வீடு, இந்த அனைத்துப் போட்டிகளையும் தாண்டியே வெற்றி பெற்றது.
தங்கைக்காக படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சுற்றிலும் ஓடிக் கொண்டிருந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதில் மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். தங்கைக்காக 60 நாட்களை கடந்த போது சுமதி என் சுந்தரி மற்றும் பிராப்தம் ஆகியவையும் ஏப்ரல் 14-ந் தேதி வெளியானது. ஆக நடிகர் திலகத்தின் ஆறு படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில். எப்பேர்ப்பட்ட சாதனை!
அன்புடன்
Thanks for the write-up, NOV. Don't recall watching it. Were they playing it in Astro VT?
:exactly:Quote:
Originally Posted by Murali Srinivas
viraga thaagamaa irukkattum, mana kuzhapamaaga irukkattum, namma NTkku ellaam kai vandha kalai thaan. :D
yes Rakesh, yesterday's Vellithirai. if possible try to watch the 6pm slot every day - lots of 70s films.
Revisited Savale Samali (in the process of converting wife to NTism).
Some notes:
- not-so-subtle promotion of socialism. In fact, one dialogue of NTs says just that, that the marriage between poor farmer (NT) and rich socialite (JJ) is a form of socialism. Literally.
- The actual highlight of this film is NT's relationship with his dad, played beautifully by VS Raghavan. Equally fiery, emotional but with deep respect and love for each other, the father and son's bickering is both touching and funny.
- Muthuraman looks buff, rough and tough, if you pardon the accidental rhyming there. His moment comes right at the end when he brawls with, or should I say, whups MN Nambiar's rear.
- Vijayakumari, who plays NT's sister, again demonstrates that no matter how many great actors sorrounded her, she still overemoted from here to Pluto. Oh, she played ditched wife of Muthuraman...somehow you don't symphatise her.
- Nagesh, that show stealer, precedes Gounder in side-kick bashing, when in one scene, out of anger towards rich man Bagavathi, beats the crap out of his assistant...and it was perhaps the most hillarious scene in the movie.
- JJ somehow does not look good here. Something not right about her makeup.
- On the contrary, NT looks great.
- All the songs are fabulous. From socialism promoting Aanaikoru Kaalam Vantha, to girl having fun fare, Cittukuruvikkenna Kattupaadu, and the ever famous, and easily spoofable, but deeply meaningful Nilavai Partu Vaanam sonnathu, these are sounds you can hear again and again and again.
- It's NT's show all the way, as usual. From the moment he appears he grabs us by the collar and run us through the familiar rich versus poor conflict. There is no repressed anger of an underdog here; you get full blown rage and no-one is spared from this man's outburst, not even his own mother is spared from no-nonsense taking NT. At one point, even my wife verbally cautioned others to not talk crap with him.
- One thing to look out for, NT and JJ, using their own voice sings. NT sings a lone of Cittukuruvikkenna Kattupaadu, and JJ sings Nilavai Paartu Vaanam sonnathu.
- All in all, a satisfying revisit. I can revisit this film again and again and not get bored. Not NT's most memorable film, but definitely most revisitable.
டியர் NOV...,
நடிகர்திலகத்தின் (அதிகம் பேசப்படாத) 'தேனும் பாலும்' படத்தைப்பற்றி அருமையாக நினைவு கூர்ந்துள்ளீர்கள். நன்றி.
1971 துவக்கத்தில் நான்கே மாதங்களில் ஏழு படங்கள் (பாதுகாப்பு, இருதுருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா, பிராப்தம், சுமதி என் சுந்தரி) வெளியாகி, அவை ஓடி முடிந்து, ஒரு வழியாக அலப்பரைகள் அடங்கியபின்னர் வெளிவந்தது. நடிகர்திலகத்தின் 150 படமான சவாலே 'சமாளி வெளியாகி' 107 நாட்களுக்குப்பின் 'பாபு' வெளியாகும் வரை இடையே இரண்டே படங்களே வந்தன, (இது நமக்கு அதிசயம் இல்லையா?) தேனும் பாலும், மற்றும் மூன்று தெய்வங்கள். இருப்பினும் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று துவங்கி, 'ஒருவனுக்கு இருவர்' என்று முடிந்த கதை தாய்க்குலத்துக்கு மத்தியில் அவ்வளவாக எடுபடவில்லை. சென்னை மிட்லண்டில் ஓப்பனிங் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.
பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்னு நினைக்கிறேன் (வேறு படம் இருக்கா?). பத்மினியை விட சரோஜாதேவி நல்ல பாந்தமாக இருந்தார். 'ம்ஞ்சளும் தந்தாள் மலர்கள் த்ந்தாள் மங்கலமங்கை மீனாட்சி' பாடலை எஸ்.ஜான்கி, ஜிக்கி ஆகியோரைப் பாடவைத்து எம்.எஸ்.வி. HIT பண்ணியதைப்பார்த்துதான், தான் இசையமைத்த 'தலைவாழை இலைபோட்டு விருந்து வைத்தேன்' (நான் ஏன் பிறந்தேன்) பாடலை அதே இருவரைக்கொண்டு பாடவைத்ததாக இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் சொல்லியிருந்தார். மறு வெளியீடுகளில்கூட வெளியில் எட்டிப்பார்க்காத படம் 'தேனும் பாலும்'.
டியர் முரளி & பம்மலார்...
தமிழகம் முழுவதும் (1970) பிப்ரவரி 6-ம் தேதி வெளியான 'விளையாட்டுப்பிள்ளை', சென்னையில் மட்டும் 20-ம் தேதி (இரண்டு வாரம் தாமதித்து) வெளியானதற்கு ஸ்பெஷல் காரணம் ஏதும் உண்டா?. சென்னை மிட்லண்ட்டில்தான் வெளியானது. வேறு ஏதும் படத்தின் பூர்த்திக்காக வெய்ட் பண்ணியதா?.
Pammalar sir,
Photos and Nerration about Delhi function are very nice. Expecting the speeches of the distinguished guests, especially Radhakrishnan I.A.S., our beloved former collector.
NOV sir,
Nice rememberance about 'thEnum pAlum' another movie kept under shadow.
Rakesh sir,
Interesting hints about 'savAlE samALi' a worthwatch movie in repeated times. When talking about Nagesh, 'the election agreement signing scene' at temple, a hilarious one.
and also when talking about songs, you must have mention the three letters 'M.S.V.' பாவம் சார் அவர். everybody neglecting him to mention.
சாரதா, என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை. அன்றைய சென்னைவாசிகள் தான் சொல்ல வேண்டும்.Quote:
Originally Posted by saradhaa_sn
சுவாமி,
நேற்று சொல்ல மறந்து போன பாராட்டு, இதோ பிடியுங்கள். தர்த்தி படத்தின் வெற்றி செய்திகளை [பலருக்கும் தெரியாத] இங்கே பதிந்ததற்கு.
அன்புடன்
Rakesh, good points about Savale Samaali.
விளையாட்டுப் பிள்ளை, 20.2.1970 வெள்ளிக்கிழமையன்று, சென்னையில் மிட்லண்ட், கிருஷ்ணா, மேகலா, நூர்ஜஹான் ஆகிய 4 திரையரங்குகளில் வெளியானது.Quote:
Originally Posted by saradhaa_sn
மேகலாவிலும், நூர்ஜஹானிலும், 9.11.1969 தீபாவளி முதல், விண்ணை முட்டும் வெற்றி முழக்கத்தோடு ஓடிக் கொண்டிருந்த சிவந்த மண் திரைக்காவியம், 20.2.1970 அன்று விளையாட்டுப் பிள்ளைக்காக வழி விட வேண்டியதாகி விட்டது. சிவந்த மண் மேகலாவில் 103 நாட்களும், நூர்ஜஹானில் 103 நாட்களும் ஓடி இமாலய வெற்றி பெற்றது.
மிட்லண்ட், கிருஷ்ணா விவரம் இது வரை தெரியவில்லை. தொடரும் தேடலில் இது பற்றி தகவல் கிடைத்தால், அவசியம் தெரிவிக்கிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
Delhi muthamiz peravai nadathiya Sivaji vizha
news and photos are exiting.
As a true NT lover, we thank all those who organised the same
I wonder if such functions would have been organised if any other party is in power in TN
except DMK. I do not know if this has any relevance
But one thing is true-We have more and more functions organised ever since DMK came into power.
I happnened to see NT statue when I recently visited Chennai.
Day by day NT's pugaz is spreading Imayangalai kadanthu,
I do not know if such response and love is there for any other actor that too 9 years after he died
Hats off!
Oh crap :( How could I? I'll write that name three times: MSV, MSV, MSV!!! :notworthy:Quote:
Originally Posted by mr_karthik
திரு முரளி சார் & திரு பம்மல் சார்,
தகவலுக்கு நன்றி.
நான் இங்குதான் உள்ளேன் முரளி சார்.மலைகளின் தகவல் பறிமாற்றங்களுக்கு மத்தியில் இந்த மடுவுக்கு எந்த வேலையும் இல்லை என்பதால் எந்த போஸ்டும் செய்யவில்லை.வெறும் தரிசனத்தோடு சரி.
மதுரை அரசமர க்ரூப்ஸ் விழா செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
பம்மல் சார்,டில்லி விழா ஸ்டில்ஸ் சூப்பர்.விழா தொகுப்பை எதிர்பார்க்கிறோம்.ஒய்.ஜி.எம் விழா தொகுப்பை முழுமையாக முடிக்கும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகள் தொடர்கிறது ...
52. ரிஷிமூலம் - 26.1.1980 - 104 நாட்கள்
53. ரத்தபாசம் - 14.6.1980 - 83 நாட்கள்
54. விஸ்வரூபம் - 6.11.1980 - 102 நாட்கள்
55. சத்திய சுந்தரம் - 21.2.1981 - 105 நாட்கள்
56. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு - 3.7.1981 - 49 நாட்கள்
57. கீழ்வானம் சிவக்கும் - 26.10.1981 - 103 நாட்கள்
58. வா கண்ணா வா - 6.2.1982 - 104 நாட்கள்
59. தீர்ப்பு - 21.5.1982 - 105 நாட்கள்
60. தியாகி - 3.9.1982 - 72 நாட்கள்
61. பரீட்சைக்கு நேரமாச்சு - 14.11.1982 - 73 நாட்கள்
62. நீதிபதி - 26.1.1983 - 141 நாட்கள்
63. சந்திப்பு - 16.6.1983 - 100 நாட்கள்
64. மிருதங்க சக்கரவர்த்தி - 24.9.1983 - 100 நாட்கள்
65. திருப்பம் - 14.1.1984 - 105 நாட்கள்
66. சரித்திர நாயகன் - 26.5.1984 - 35 நாட்கள்
67. சிம்ம சொப்பனம் - 30.6.1984 - 46 நாட்கள்
68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்
69. வம்ச விளக்கு - 23.10.1984 - 46 நாட்கள்
70. பந்தம் - 26.1.1985 - 105 நாட்கள்
71. நீதியின் நிழல் - 13.4.1985 - 69 நாட்கள்
72. முதல் மரியாதை - 15.8.1985 - 177 நாட்கள்
73. ஆனந்தக்கண்ணீர் - 7.3.1986 - 63 நாட்கள்
குறிப்பு:
26.1.1985 வெளியான பந்தம், 12.4.1985 வரை 77 நாட்கள் தினசரி 3 காட்சிகளாக வெற்றி நடை போட்டது. 13.4.1985 அன்று நீதியின் நிழல் தினசரி 3 காட்சிகளாக வெளியானதால், பகல் காட்சிக்கு மாற்றப்ப்ட்ட பந்தம், அக்காட்சியில் தொடர்ந்து 28 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. ஆக, பந்தம் மொத்தம் 105 வெற்றி நாட்கள்.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
சாந்தி சாதனைகள் தொடரும் ...
அன்புடன்,
பம்மலார்.
'எழுதாத சட்டங்கள்' நல்ல படமாச்சே.Quote:
Originally Posted by pammalar
நடிகர்திலகம், ஜெய்சங்கர், நம்பியார், மனோகர், பிரபு, சரத்பாபு, ஷ்ரீவித்யா, நளினி, ஊர்வசி, தேங்காய் என ஏகப்பட்ட நட்சத்திரக்கூட்டம்,
நஸீர் வாப்பா ரோலில் நடிகர்திலகம் அருமையாக நடித்திருப்பார்,
கூடவே இளையராஜாவின் இசை.
எல்லாம் இருந்தும் ஏன்....?
இத்தனைக்கும் அடுத்த பட ரிலீஸுக்காகவும் மாற்றப்படவில்லையே.
Murali sir, can you quote a single incident where your memory has ever proved you to be wrong. I'm afraid there's any. Once again you were absolutely right about that " Saturday afternoon En Magan. :D
All I was trying to say is that I'm sure that the DVD's of Balaji's films are not released and that I am not aware about the DVD release of En Magan, about which you had mentioned in your post.
12/02/2010 - சிவ ராத்திரி
திருவருட்செல்வர் படத்தில் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி.
திருநாவுக்கரசர் வேடம் நடிகர் திலகத்தின் மணிமகுடத்தில் ஒரு வைரக்கல். அந்த பொருத்தமான ஒப்பனையாகட்டும், முகபாவங்களாகட்டும், சற்று கூண் விழுந்தபடி அவர் நடந்து செல்லும் அந்த நடையழகாகட்டும் - எல்லாவற்றிற்கும் மேலாக, அவரைத் திரையில் பார்த்தவுடன் இவர உண்மையிலேயே அப்பர் பெருமானோ என்று கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் அந்த வேடப் பொருத்தம், அற்புதம்! அற்புதம்! இனி காட்சிக்கு வருவோம்.
திங்களூரில் வாழும் அப்பூதியடிகள் அருள்மொழி அம்மையார் தம்பதியர், தாங்கள் நேரில் பார்த்திராத திருநாவுக்கரசரை தங்களது குலதெய்வமாக எண்ணி அந்த ஊரில் பல நற்காரியங்களை செய்து வருகிறார்கள். அத்தம்பதியின் வேண்டுகோளை ஏற்று அவர்களது இல்லத்தில் ஒரு வேளை உணவருந்த வாக்களிக்கிறார் நாவுக்கரசர். அத்தம்பதியருக்கு ஒரே மகன், அவன் பெயரும் திருநாவுக்கரசுதான்.
விருந்து தினத்தன்று அச்சிறுவன் வாழையிலை பறிக்கச் செல்லும் போது அரவம் தீண்டி மாண்டு விடுகிறான். தம்பதிகள் பெரும் சோகத்தில் ஆழ்கிறார்கள். ஆலயத்திற்குச் சென்றிருந்த திருநாவுக்கரசர் உணவருந்த வருகிறார். அப்பூதியடிகளைப் பார்த்து, " ஏன் உங்கள் திருமுகம் வாடியிருக்கிறது?" என்று வினவுகிறார். பிறகு அவரையும் அவரது மகனையும் தன்னுடன் சேர்ந்து உணவருந்துமாறு கோருகிறார் (விருந்துண்ண வந்தவரும் விருந்துக்கழைத்தவரும் சேர்ந்து உண்டால் தான் அது விருந்து, இல்லாவிட்டால் மருந்து ).
சிறுவன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவனது சடலம் இருக்கும் இடத்திற்கு விரைகிறார். விஷம் தலைக்கேறி இறந்து கிடக்கும் சிறுவனைப் பார்த்து இறைவனிடமே உரிமையோடு கோபப்பட்டு அவர் பேசும் போது பார்ப்பவர்க்கு மெய் சிலிர்த்துவிடும்.
சிறுவனது உடலைக் கையிலேந்தி, " இறைவா! இதென்ன நாடகம்? ஏன் இந்த விளையாட்டு? நல்லவர்களுக்கும், நாட்டிலே நன்மை செய்பவர்க்கும் தீமையை உண்டாக்கினால், நாதனே, நீ எங்கே? உன் ஐந்தெழுத்தெங்கே? உனது புகழெங்கே? உன்னைப் போற்றிப் பாடும் நானெங்கே? வேண்டாமப்பா இந்த வேடிக்கை ", என்று அப்பர் பெருமான் கதறும் அந்தக் காட்சியில் ரசிகர்களை கலங்கடித்துவிடுவார் நடிகர் திலகம்.
மகன் மீண்டும் உயிர்த்தெழுந்ததும், முத்துராமன் தட்டுத்தடுமாறி, " மண்ணிக்க வேண்டும் சுவாமி, உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகளே வர மறுக்கின்றன ", என்று சொல்வார். இந்தக் காட்சியைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கும் அதே நிலை தான்.
:notworthy:
Dear Mohan Sir,Quote:
Originally Posted by rangan_08
Our NT's "En Magan" VCD/DVD is now available in plenty at many CD retail shops in & around Chennai Anna Salai (Mount Road). I also came to know from an NT fan - Mr. R.Kumar who is a good friend of mine & who comes to Shanthi theatre regularly even today - that En Magan VCDs/DVDs are selling like hot cakes and the film print also looks good.
Regards,
Pammalar.
Dear Mohan Sir,
Please click the following link that provides a detailed listing of our NT films, released on VCD/DVD by Moserbaer.
http://www.moserbaerhomevideo.com/ti...DTYPE&category[]=ALL&searchin=STA&keyword=Sivaji&x&y&sbox=OK&pos=0
You will find many Sivaji-Balaji combinations in it.
Happy Viewing,
Pammalar.
செந்தில்,
முன் போல் நீங்களும் சில செய்திகளை குறிப்பாக பெங்களூர் நகரில் நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றி எழுதலாமே. மதுரை விழாவும் டெல்லி விழாவும் ஒரே நாளிலே நடைப்பெற்றதால் சுவாமி அவர்களால் மதுரைக்கு போக முடியவில்லை. ஆகவே மதுரை விழாவைப் பற்றி கேள்விப்பட்ட சில தகவல்களை சுவாமி இங்கே பகிர்ந்து கொள்வார்.
மோகன்,
உங்கள் பாராட்டுக்கு நன்றி. மகா சிவராத்திரியை வரவேற்று கட்டியம் கூறுவது போல் அழகாய் அமைந்துள்ளது தாங்கள் எழுதியுள்ள பதிவு. நடிக வேந்தன் அற்புதமாக அப்பர் பெருமானை திரையில் வார்த்தெடுத்த காட்சியினை மீண்டும் நினைவுப்படுத்தியதற்கு நன்றி.
சுவாமி,
Moser Baer லிஸ்டில் படங்கள் இருக்கின்றன. ஆனால் அவை கடைகளில் கிடைப்பதில்லை என்பதுதான் விஷயமே. உதாரணத்திற்கு தியாகம் டி.வி.டி, உனக்காக நான், ரத்த பாசம் போன்றவை கிடைப்பதில்லை. இன்னொரு விஷயம், ஏராளமான ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கும் தங்கை, என் தம்பி, திருடன் போன்றவை அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலிலே இல்லை. என் மகனும் இல்லை.
அன்புடன்
சகோதரி சாரதா,Quote:
Originally Posted by saradhaa_sn
எழுதாத சட்டங்கள் போன்ற நல்ல படங்களும், சில சமயங்களில், ஓட்டத்தில் சறுக்கி விடுகின்றன. என்ன செய்வது. இத்தனைக்கும் தாங்கள் குறிப்பிட்டது போல் நட்சத்திரக் கூட்டம், நமது நடிகர் திலகம் நஸீர் வாப்பா வேடத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார். அன்றைய கால கட்டத்தில், எழுதாத சட்டங்கள் போன்ற நல்ல படங்கள் ஓடாததற்கு, மக்களின் ரசனை வீழ்ச்சியே காரணம்.
எழுதாத சட்டங்கள், சாந்தியில் தினசரி 3 காட்சிகளாக, 15.8.1984 தொடங்கி 13.9.1984 வரை ஓடியது. 14.9.1984 அன்று சாந்தியில் தினசரி 3 காட்சிகளாக, மிதுன் சக்கரவர்த்தி நடித்த கராத்தே ஹிந்திப்படம் வெளியானது. மேலும் பகல் காட்சியில் அப்பொழுது சாந்தியில், கமல் நடித்த யாத்கார் ஹிந்தி திரைப்படம் ஓடிக் கொண்டிருந்ததால், எழுதாத சட்டங்கள் திரைப்படத்தை பகல் காட்சியிலும் திரையிட(மாற்ற) முடியாமல் போனது.
அன்புடன்,
பம்மலார்.
டியர் செந்தில் சார்,Quote:
Originally Posted by HARISH2619
நமது நடிகர் திலகத்தின் ஒவ்வொரு நல்லிதயமும் ஒரு மலையே. தாங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு விழாவும், இன்னும் சில தினங்களில் நல்ல முறையில் முழுமையான தகவல்களோடு நிறைவு செய்யப்படும்.
அன்புடன்,
பம்மலார்.
தர்த்தி திரைக்காவியத்தின் சாதனை விவரங்களை வழங்கியமைக்காக எம்மைப் பாராட்டிய முரளி சாருக்கு நன்றி!
Thank you very much Mr.Karthik & Mr.Sankara.
Regards,
Pammalar.
டெல்லி சிவாஜி விழா - 2
விழா உரைகள்
ஐ-டியூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவன இயக்குனர், நூல் வெளியீட்டாளர் திரு. வாழப்பாடி இராம. சுகந்தன் அவர்களின் உரை:
"நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் எனது தந்தையார் திரு.வாழப்பாடியாரின் மிக நெருங்கிய நண்பர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இருவரும் ஒரு சேர இணைந்து தொண்டாற்றியவர்கள். நடிகர் திலகத்துக்கு ஒரு தொகுப்பு நூலை தயார் செய்து வருகிறேன் என நண்பர் திரு. சந்திரசேகரன் கூறிய போது, அதனை நானே வெளியிடுகிறேன் என அவரிடம் உறுதி கூறினேன். அதன்படி, ஐ-டியூட்ட்ர் இந்தியா நிறுவனத்தின் சார்பாகவே, இந்நூல் வெளிவந்துள்ளது. இது எனக்கும், எங்களது நிறுவனத்திற்கும், அதனைச் சேர்ந்தவர்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய பெருமை."
நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர், நூல் தொகுப்பாசிரியர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களின் உரை:
"நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தமிழினத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே சொந்தமானவர். அவரைப் பற்றிய இந்தத் தொகுப்பு நூலை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த திரு.இராம சுகந்தன் அவர்களுக்கும் மற்றும் இந்நூலுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அன்பு இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
விழா உரைகள் தொடரும் ...
அன்புடன்,
பம்மலார்.
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத காவியம் புதிய பறவை நாளை வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாய் திரையிடப்படுகிறது.
அன்புடன்
மோகன், மதுரை ரசிகர்கள் உண்மையிலே கொடுத்து வைத்தவர்கள்.
Saradha,Quote:
Originally Posted by saradhaa_sn
தேனும் பாலும் மறு வெளியீடு - தமிழ்நாடு மற்ற மாவட்டங்களில் பற்றி தெரியவில்லை. அனால், எங்கள் மதுரையில் தேவி தியேட்டரில் தேனும் பாலும் மறு வெளியிட்டில் தான் நானும் மிக பெரிய NT ரசிகரான என் மாமாவும் பார்த்தோம். வெகு சில படங்கள் தவிர, மதுரையில் எல்லா NT படமும் மறு வெளியீட்டில் வந்துவிடும்.
Though not a great movie, thenum paalum is a nice one.
Regards.
This is 100% true. NT looks fabulous with a great hair style, simple dhoti and cotton shirt. I am sure this is the only movie in modern tamil films in which a super hero appeared in simple dhoti and shirt and still managed to look great. I guess the best in savale samali is its strong dialogues and the wonderful delivery from NT. All in all Saveli samali - A well etched and very restrained performance from NT.Quote:
Originally Posted by groucho070
Out of his 40+ years in films, I guess NT looked best during Savale Samali times. Question to NT veterans: How did he manage to look so good during these years? How sweet it would have been if he had maintained the same look in 80s and 90s..... Imagine Sumathi en Sundari look in 80s and 90s - man, it just feels wonderful!!!
Regards
Murali,Quote:
Originally Posted by Murali Srinivas
Great news from Madurai.
Any plan to visit Madurai for Pparavai? I wish I were there with fans for Sunday evening show......... Good old days in Madurai!!
Few memorable performances from NT, as Gopal, in this classic:
-- Gopal's introduction and song: Unnai Ontru Ketpen
-- Gopal's seductive looks and asks Saroja Devi to sing again
-- Gopal's ultra rich modern look in Singapore club when he meets Soukar first time. His cigar smoking style must have spoiled many in those days!!??
-- Gopal - MRRadha - Soukar confrontation
-- Gopal's classic Enge Nimmadhi song - wonderful depiction of a man wanders between fear and love in life
-- Gopal's performance in climax and finally ends the movie in his own unbeatable way revealing that he is still looking for love; at the end, you surely feel pity for him............
I always feel that PP is one of the best from MSV-TKR for NT movies. Sweet and evergreen songs!!
On the negative side, I never liked Saroja devi's performance in this movie - especially, her baby-like talk; it slows down the pace of the movie.
Overall, an evergreen classic from NT.
Please paste here posters and other alapparai's from theaters.
Regards.
Honestly, this time period is not great and he should have avoided these movies. Wondering how did LDriver Rajakannu managed to run more than that of Eluthatha Sattangal???Quote:
Originally Posted by pammalar
Considering that most of these movies were starred by both NT and Prabhu, did NT try to indirectly help Prabhu to establish in tamil films? Nothing against Prabhu, but as a well wisher of NT and his movies, it is just an emotional feeling.
Anyway, it is a fact that these films damaged some of NT's fame. His rival fans got a ground to bring in this period while discussing records.
Regards.
Dear tac.... வெகு நாட்களுக்குப்பின் தலைகாட்டியிருக்கீங்க..., வருக.Quote:
Originally Posted by tacinema
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. நீங்கள் குறிப்பிடும் அந்த கால கட்டம் நடிகர்திலகத்தின் அழகிய தோற்றம் கொண்ட காலம் எனலாம்.
அதாவது 'ஊட்டிவரை உறவு' துவங்கி 'அண்ணன் ஒரு கோயில்' வரையான காலம். (தியாகத்திலிருந்து மீண்டும் அவரது உருவம், அறுபதுகளின் துவக்கத்தில் இருந்த நிலை நோக்கி திரும்பியது). ஆனால் அறுபதுகளின் துவக்கத்தில் அந்த தோற்றத்தை தனது அலாதியான பெர்ஃபாமன்ஸைக்கொண்டு வென்று தள்ளினார். (குறிப்பாக 'பீம்பாய்' படங்கள்). ஆனால் தியாகத்துக்குப்பின் அவருக்கு அமைந்த ரோல்கள், அவரது உருவத்தோற்றத்தை மறக்கடிக்கப்போதுமானவையாக அமையவில்லை என்பதும் சற்று ஸ்டீரியோ டைப்பில் அமைந்தன என்பதும் உண்மை. அப்படியும் கூட அவர் ஏராளமான வெற்றிப்படங்களைக்கொடுத்தார். (உங்களது அடுத்த பதிவுக்கான பதிலில் சொல்லியிருக்கிறேன்). தமிழ்ப்பட வெற்றி வரலாற்றை திருப்பிப்போட்ட 'திரிசூலம்' போன்றவை வந்ததும் அந்தக்கால கட்டத்தில்தான்.
நான் எப்போதுமே சொல்லி சொல்லி மாய்வதுபோல 67 முதல் 77 வரையிலான அவரது தோற்றம் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான அழகு. அப்போது வந்த அவரது படங்களுக்கு அவரது அந்த ஒல்லியான அழகு தோற்றம் ரொம்பவே பொருந்தியது. அந்நேரத்தில்தான் பாலாஜி படங்களில் துவங்கி எல்லா படங்களிலும் ஒன்றிரண்டு சண்டைக்காட்சிகளாவது இடம்பெறத்துவங்கி, படங்களுக்கு சிறப்பு சேர்த்தன. அவற்றில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட 'சவாலே சமாளி'. அந்நேரத்தில் வந்த அவரது படங்களுக்கும் ஏற்றிருந்த ரோல்களுக்கும் அவரது ஸ்லிம் உடலமைப்பு எப்படி ஒத்துழைத்தது என்பது படங்களின் வரிசையைப் பார்த்தாலே தெரியும்.
சமீபத்தில் முரளியண்ணா ஆய்வு செய்த 'திருடன்' படமும் அவற்றில் ஒன்று. 'தங்கச்சுரங்கம்' சி.பி.ஐ ஆபீசரும் அவர்களில் ஒருவர். 'எங்கமாமா'வின் சொர்க்கம் பக்கத்தில் பாடலில், அழகிய நிர்மலாவோடு இவரும் சரிக்கு சரி ஒல்லியாக இருந்ததால்தானே அப்பாடல் காட்சி இன்னும் கண்களைக்கவர்கிறது. உள்ளே பனியன் போடாமல் வெறுமனே ஸ்பன் ஷர்ட்டோடு தெய்வமகனில் 'காதல் மலர்க்கூட்டம் ஒன்று' பாட முடிந்ததும் அந்த ஒல்லி உடம்பு தந்த போனஸ். புரட்சிக்காரன் 'பாரத்'துக்கு (சிவந்த மண்) தன் சாகசங்களில் ஒத்துழைத்தது அந்த ஸ்லிம் பாடிதான் என்றால் மறுப்பதற்கில்லை. நீங்கள் குறிப்பிட்ட சுமதி என் சுந்தரி நம் நெஞ்சங்களில் ஸ்டிக்கராக ஒட்டிக்கொள்ள உறுதுணையாக இருந்ததும் அந்த அழகு உடம்பு அல்லவா? (பொட்டுவைத்த முகமோ, ஒருதரம் ஒரேதரம் பாடல் காட்சிகளை இன்றைக்கும் கண்ணில் ஒற்றிக்கொள்கிறோமே). அந்த சிக்கென்ற தோற்றத்தில்னால் அல்லவா 'பொன்மகள் வந்தாள்' பாடும்போது விஜயலலிதாவை விட ஒல்லியாகத் தோற்றமளித்தார். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அமைந்த துப்பறியும் 'ராஜா'.
ஜோவியல் படங்களில்தான் என்றில்லை. சீரியஸ் ரோல்களுக்கும் அந்த மெலிந்த உடல் ரொம்பவே பாந்தமாக பொருந்தியது. பேண்ட்டுக்குள் ஷர்ட் இன் பண்ணி சட்டைக்கைகளை முழங்கைகளுக்கு மேல மடித்து விட்டபடி 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே' பாடிய அதே தோற்றத்தில் இருந்த அழகுக்கு மாறாக, ஏழு ஆண்டுகளுக்குமுன் அவர் நடித்த 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடல் காட்சியில் உடல் கண்களை உறுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.
'திருமால் பெருமை' திருமங்கை ஆழ்வாரும், சிக்கல் ஷண்முக சுந்தரமும், நாடக நடிகர் ரங்கதுரையும் சிறப்பான நடிப்போடு சேர்ந்து அழகிய தோற்றத்திலும் நம்மைக்கவர்ந்தனர் என்றால் அதற்கு முழுக்காரணம் அவரது அன்றைய அழகிய தோற்றம் என்பது உண்மைதானே. சுருக்கமாகச்சொன்னால், கட்டபொம்மனுக்குப்பின் காணாமல் போன அழகிய தோற்றம் திரும்பக்கிடைத்தது 67-ல் தான். இடைப்பட்ட காலத்தில் தன் அபார நடிப்புத் திறமையால் அந்தக்குறைபாடு தெரியாமல் ஊதித்தள்ளினார் (உதாரணம் நீங்களே இப்போது குறிப்பிட்ட 'எங்கே நிம்மதி' பாடல் காட்சி).
அனைத்துக்கும் மேலாக 'ஒரு குறிப்பிட்ட வார்த்தையால்' அவரது தோற்றத்தை கிண்டல் செய்து வந்தோரின் வாய்களுக்கு 'ரிவிட்' அடிக்கப்பட்டிருந்ததும் அந்த 'பிளாட்டினம் பீரியடில்'தான்.
PUDHIYA PARAVAI.............. the name itself is enough to bring joy in the faces of NT fans.what a lucky the madurai fans are.
I watched it for the 4th time in bangalore kino theatre in 1992 with all those amarkkalams and aarpaattams.all hell broke loose during enge nimmathi song on sunday night show and the theatre management stopped the movie without the climax scene as some fans burst the crackers inside the premesis during that song.I'm just thinking the way madurai fans will receive that song coming sunday night show.
BTW where is raghavendran sir ?
புதிய பறவைக்கு வசனம் எழுதிய அனுபவத்தை தனது நூலில் விரிவாக எழுதியிருந்தார் ஆரூர்தாஸ்.
சாரதா மேடம்,
உங்களுக்கு அவ்வளவாக பிடிக்காத படம் என்றாலும் "வசந்த மாளிகை" யில் அந்த அழகிய தமிழ்மகனின் அழகை வர்னிக்க வார்த்தைகளே இல்லை என்பதை உங்கள் பதிவில் விட்டுவிட்டீர்களே?
Yah...hubber Hamid will be upset that Vasantha Maaligai not mentioned. :)
Undoubtedly 60s to 77 would be my favourite period as well...athuvum in particular 67 to 77, which incidentally was the best year as far as Hollywood films and rock music is concerned...in my opinion of course.
That the look contributed is only secondary...the script and the mindset of the audience of that time required NT in those kind of films. It's the same audience that required NT in the kind of films we wish he didn't do in late 70s and 80s (though some were done out of favour to producers/directors). But yeah, those were NT's golden years in filmaking.
டியர் tac..,Quote:
Originally Posted by tacinema
நீங்கள் கொடுத்துள்ள வெற்றி வாய்ப்பை இழந்த படங்களின் பட்டியலும் அது தொடர்பான செய்திகளும், குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் வந்த நடிகர்திலகத்தின் அனைத்துப்படங்களும் தோல்வியோ என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
அவற்றில் லாரி டிரைவரும், சரித்திர நாயகனும் அவர் நடித்திருக்க வேண்டியில்லாத படங்கள் என்பதை மறுப்பதற்கில்லை, (இன்னொரு படம் 'நாம் இருவர்'). மற்றபடி சிம்ம சொப்பனம், வம்ச விளக்கு, எழுதாத சட்டங்கள் போன்றவை எல்லாம் ஓட்டத்தில் சறுக்கினவையே தவிர தரத்தில் மோசமானவை அல்ல. ('தியாகி' தோல்விப்படம் அல்ல, சுமாரைக்கடந்த வெற்றிப்படமே).
அதே சமயம் இன்னொரு முக்கியமான விஷயம். குறிப்பிட்ட இதே கால கட்டத்தில்தான் நடிகர்திலகத்தின் வெள்ளிவிழாப்படங்களான
தீர்ப்பு,
சந்திப்பு,
நீதிபதி,
முதல் மரியாதை
ஆகினவும், மற்றும் 100 நாட்களைக்கடந்த மாபெரும் வெற்றிப்படங்களான
கீழ்வானம் சிவக்கும்,
வா கண்ணா வா,
மிருதங்க சக்ரவர்த்தி,
வெள்ளை ரோஜா,
திருப்பம்,
தாவணிக்கனவுகள்,
வாழ்க்கை,
பந்தம்
போன்ற படங்களும் வெளியாகின. இவ்வெற்றிப்படங்கள் பெரும்பாலானவற்றில் இளையதிலகம் பிரபுவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(மற்றபடி 'சரித்திர நாயகன்' ஓட்டத்தில் 'சரிந்த நாயகனாகி'ப்போனது உண்மைதான். இப்படத்தின் கதையை நந்தமூரி டி.ராமாராவ் (என்.டி.ஆர்) எழுதினாராம். நல்லவேளை, இதோடு பேனாவை மூடிவைத்து விட்டு அரசியலுக்குப்போய்விட்டார்).
Dear Pammalar sir,
Thank you for giving the Moser.link. But as Murali sir said, the movies which I'm longing to watch, " Thirudan " and other films are missing.
Yes. The scene where NT is busily engaged in chopping down a big tree all by himself. VSR comes there and looks at his son's palms - feels so bad (he is the reason behind this ordeal) and then takes the axe and asks NT to go home ( MSV's bgm is ringing in my ears). Beautifully played by both the actors.Quote:
Originally Posted by groucho070
Similarly, the T.K Bhagavathy - S.Varalakshmi relationship is also beautifully etched. Again, excellently played by the actors.