PADITHTHA PENN - KAAPPI ONNNU EDDANAA
1956 ம் ஆண்டில் குலதெய்வம் படத்திற்கு நான்கு பாடல்களை எழுதிய நமது கவிஞர் PADDUKKODDAI KALYAANASUNTHARAM அடுத்து படித்த பெண் என்ற படத்துக்கு இரண்டு பாடல்களை எழுதினர் .
அதில் ஒரு பாடலை இங்கு தருகிறேன்
பாடல் :
காப்பி ஒண்ணு எட்டணா, கார்டு சைசு பத்தணா
காண வெகு ஜோராயிருக்கும், காமிராவைத் தட்டினா !
பிள்ளை குட்டி கூட நிண்ணு பெரிதாகவும் எடுக்கலாம்
பிரியம் போல காசு பணம் சலிசாகவும் கொடுக்கலாம் .
மல்லுக் கட்டி அழைக்கவில்லை மனமிருந்தா வந்திடலாம்
வயிறெரிந்த பேர்வழிங்க வந்த வழி சென்றிடலாம்
தண்டவாளம் விட்டிறங்கி தத்தளிக்கும் எனஜினைப் போல்
கொண்டவன் தனை மறந்து திண்டாடும் மங்கையரின்
குட்டு வெளியாகிடும் ஸ்டில்லுங்க - கையில்
துட்டு இருந்தா ஸ்டெடியா நில்லுங்க
எந்தப் போஸில் வேணுமென்னாலும் எடுத்துத் தரேனுங்க - ஆனா
எல்லோருக்கும் ஸ்டில்லை மட்டும் காட்டிடாதீங்க
தனியே வந்தாலும் கூட்டமா வந்தாலும்
சார்ஜ் ஒண்ணு தான் , வாங்க ஒரு சான்ஸ் அடிச்சுப் பாக்க
வாருங்க !
புகைப் படம் எடுக்கும் ஒரு தொழிலாளி பாடும் பாடல் இது !
இந்தப் பாடலைப் பற்றி ஒரு சுவையான வரலாறு ஒன்று இருக்கிறது .
இந்த சுவையான சம்பவத்தை எனக்கு தொலை பேசியில் சொன்னவர்
பெண்ணாடம் நீல மேகம் அவர்கள் !
அவருக்கும் பட்டுக்கோட்டையாரிடம் ஒரு அளவற்ற பக்தி உண்டாம் !
அவர் சொன்ன இந்தப் பாடலைப் பற்றிய தகவல் :
இந்த படித்த பெண் படத்தை சியாமளா பிக்சர்ஸ் , நளினி பிக்சர்ஸ் என்ற இரு நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்தன .தயாரிப்பாளர் வைத்தியநாத அய்யர் என்பவர் .
இவரிடம் நடிகர் நம்பி ராஜன் கவிஞரை அறிமுகப் படுத்தினார் . இந்த இரண்டு பாடல்களுக்கு அய்யர் அவர்கள் 150 ரூபாய் தருவதாகப் பேசி பாடல்களை எழுதச் சொன்னாராம் .
அடுத்த நாளே கவிஞர் பாடல்களை எழுதிக் கொடுத்து விட்டாராம் .
ஆனால் பல நாட்கள் பணம் கைக்கு வந்து சேர வில்லையாம் .
அய்யர் வீட்டுக்கு பல நாட்கள் நடையாக நடந்தாராம் .
ஒரு நாள் ஐயரது வீட்டுக்கு கவிஞர் சென்ற போது '' உட்கார் '' என்று சொல்லி விட்டு உள்ளே போன அய்யர் நீண்ட நேரம் வெளியே வரவிலையாம் .
அதனால் கவிஞரும் உள்ளே சென்று பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்த போது அய்யர்
'' வெளியே நில்லு ''
என்று அதட்டிப் பேசினாராம் !
தீண்டாமைக் கொடுமை உச்சத்தில் இருந்த காலம் அது !
இதைக் கேட்டு சினம் கொண்ட கவிஞர்
'' தாயால் வளர்ந்தேன், தமிழால் அறிவு பெற்றேன்
நாயே ! நேற்று நான் உன்னை நடுத் தெருவில் சந்தித்தேன்,
நீ யார் என்னை நில் என்று சொல்ல ? ''
என்று அறம் பாடி விட்டு இந்தக் கவிதையை ஒரு துண்டுத் தாளில் எழுதி அதை அவர் வீட்டுக் கதவிடுக்கில் செருகி விட்டு வந்து விட்டாராம் .
அதைப் படித்துப் பார்த்த அய்யர்,
இவன் ஒரு பிறவிக் கவிஞன், இவன் அறம் பாடி விட்டால் நாம் நன்றாக வாழ முடியாது
என்று நினைத்து ஒரு நண்பர் மூலம் பணத்தைக் கொடுத்தனுப்பினாராம் .
இந்தப் படித்த பெண் படம் வெளி வந்ததா எனத் தெரியவில்லை .
இந்த இரண்டு பாடல்களும் நமக்குக் கிடைக்கவில்லை !
நண்பர்கள் யாரிடமாவது இருந்தால் நல்கும் படி கேட்டுக் கொள்கிறேன் .
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
Re: Aasai Nilaa SendrathE
Quote:
Originally Posted by tfmlover
எனக்குப் பிடித்த ஒரு ஜிக்கி பாடல்
முன்பு சிவா.G sir லிங்க் தந்து இருந்தார்
ஆசை நிலா சென்றதே..வெங்கட்ராமன் இசையில்
மாமன் மகள் படத்தில் என்று அறிந்தேன்
வெவ்வேறு dvd vcd வாங்கிப் பார்த்து விட்டேன்
onlineலும் மாமன் மகள் பார்க்கலாம்
tvயிலும் வந்தது
ஆனால் அந்தப் பாடலைக் காணவில்லை
ப*ட*த்தில் இட*ம் பெற*வில்லையா
யாராவது பார்த்த ஞாபகம் உண்டா சொல்லுங்கள் ?
Regards
Hi tfml
நான் சில வருடங்களுக்கு முன் மாமன் மகள் படம் டி.வி.யில் பார்த்தபோது சாவித்திரி பாடுவதாக அந்தப் பாடல் வந்ததே !
President Panchaadcharam -1959
17. 7 . 59 முதல் வெற்றிகரமாக நடைபெறுகிறது
சென்னை
பாரகன் , மஹாராணி , ராஜகுமாரி
மதுரை சென்ட்ரல்
திருச்சி பிரபாத்
தஞ்சாவூர் நியூடவர்
கோயம்புத்தூர் ராயல்
மற்றும் தென்னாடெங்கும்
சாவித்திரி பிக்சர்ஸ்
பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்
ஏ எல் எஸ் வெளியீடு
டைரக்க்ஷன் A. பீம்சிங்
ஸ்டூடியோ பரணி
சங்கீதம் G.ராமநாதன்
கதை வசனம் B.S ராமையா
http://i871.photobucket.com/albums/a...haadcharam.jpg
President Panchaadcharam
with GR 's outstanding musical score
including this 'yaarO nee yaarO TMS PS
http://music.cooltoad.com/music/song.php?id=369660
thanks to thiru maaman
raagam ?
Regards