Gopal sir,
arumaiyaana ungal pattiyalil irandhu thirushti pottukkal ivargal.
Chandilyan ungalukku pidiththirukkiradhu, but Jegasirpiyanin 'Nandhivarman kaadhali' pidikkavillaiyaa?.
iththanaikkum Chandilyan same stereo typil vaLa vaLappavar.
Printable View
//25)பாக்கியம் ராமசாமி- மாணவர்தலைவர் அப்புசாமி,அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்,காதல் காவலர் அப்புசாமி.
//
Gopal sir,
When I read them, I feel some kind of abaththams, same like Savi's "Washingtonil thirumanam".
Ok, taste differs always.
ஆதிராம்..வாங்க வாங்க :) தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதி தான்..ஆனால் நான் தான் கொஞ்சம் கன்ஃப்யூஸ்.. இ.பாவினுடையது ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன (ரெண்டும் பறக்கறது தானே ஓய் :) ) ஏசுவின் மைந்தர்கள் இபா.
லிஸ்டிற்கு நன்றி கோ.. குறைந்தபட்சம் 85 சதவிகிதம் படித்திருக்கிறேன்..
சி.சு. செல்லப்பா - வாடிவாசல்
சாயாவனம் - சா. கந்தசாமி
புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
நானே நான், உடல்பொருள் ஆனந்தி, மின்னல் மழை மோகினி, பணம் பெண் பாசம் - ஜாவர் சீதாராமன்
சாகா வரம் ( நாவல்) நரிப்பல், அழகோ அழகு (சிறுகதைகள்)- வெ.இறையன்பு
மாலன் சிறுகதைகள்
இரா. முருகன் சிறுகதைகள் நாவல்.
அடிமையின் காதல் , தர்மங்கள் சிரிக்கின்றன, கையில்லாத பொம்மை, ராசி, ஒளிவதற்கு இடமில்லை, நான் கிருஷ்ண தேவ ராயன், வாளின் முத்தம், படகு வீடு, சின்னக் கமலா,
அழைப்பிதழ், ஹவுஸ் ஃபுல், ராத்திரிவரும் - ஓஹ்.. ரா.கி ரங்கராஜன் ( என் மானசீக குரு )
சாண்டில்யன் ஜீவ பூமி, கடல் ராணி, விலை ராணி மன்னன் மகள், கன்னிமாடம் இவையும் சேர்த்துக் கொள்ளலாம்..
ஆதிராம்..பாக்யம் ராமசாமி இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்..அந்தக்காலத்தில் அந்த நாவல்களைப் படித்த போது வாய்விட்டுச் சிரிக்க வைத்தன..அவரது உவமை எல்லாம் படக்கென மொட்டவிழ்வது போல் சிரிப்பை வரவழைக்கும்.. சீதாப்பாட்டியின் சபதம், ஆயிரத்தொரு அப்பு சாமி இரவுகள் எல்லாம் ஒரு தேர்ந்த நாவலாசிரியராக முடித்திருப்பார்..
எஸ்.ஏ.பி பிடிக்குமா.. எனக்குப் பிடிக்கும்.. எனக்கென்று ஒரு இதயம் - மனதிற்குள் ந.தியை வைத்தே எத்தனை முறை படமெடுத்திருப்பேன்.. , மலர்கின்ற பருவத்தில் இனிய காதல் கதை..இன்றிரவு ... த்ரில்லர்..
கோ.. வாண்டுமாமா.. சிலையைத் தேடி சொல்லியிருக்கிறீர்களே :) பைண்ட் பண்ணப்பட்ட புக்காய் எனக்குக் கிடைத்தது ..சித்திரத் தொடர்கதை..ஜெ....படங்கள் என நினைக்கிறேன்..வெகு சுவாரஸ்யமாக க கண்முன் விரியும் காட்சிகள்..
மூன்று மந்திரவாதிகள் படித்திருக்கிறீர்களா..
முத்துகாமிக்ஸின் இரும்புக் கை மாயவி பிடிக்கும்..ஆனால் இப்போது லார்கோவின்ச் என்றொரு நாயகன் வைத்து கலரில் கிராபிக்ஸ் நாவல்கள் முத்துகாமிக்ஸ் வெளியிடுகிறார்கள்..சுவாரஸ்யமாக உள்ளன
குமுதத்த்ல் வந்த சித்திரக் கதை ப்ளான் பட்டாபி..
சரி ஒரு பாட் போட்டுக்கலாம்
*
ரம்யா கிருஷ்ணன்.. ஆரம்பகாலப் படங்களில் சோபிக்காதவர் பிற்காலத்தில் எல்லாவற்றிலும் பிரகாசமாகச் சோபித்தார்..
முதல் படம் வெள்ளை மனசாம் 1983.. அப்போது அவர் எட்டாம் வகுப்பில் படித்திருந்தாராம். நான் நினைத்தது முதல் வசந்தம் என நினைத்தேன்.. ஆறு அது ஆழம் இல்லை அது சேரும் கடலும் ஆழம் இல்லை..வெகு சின்னப் பெண்ணாய் இருப்பார்..
ஸ்வர்ணலதாவின் குரலில் ஆட்டமா தேரோட்டமா மறக்க இயலாது தமிழ் சினிமா உபயோகப் படுத்திக்கொள்ளவில்லை என்று தான் சொல்லவேண்டும் இவரை.. இப்ப என்ன 48 வயசாகிடுச்சாம்..பட் இன்னும் தெரியவில்லை வயது..
*
தென்றல் அடிக்குது வந்து சிரிக்குது தேனே
செண்பகப் பூவிழி என்னை மயக்குது மானே
*https://youtu.be/t5JbLAtH3N4
விட்டு போனவை
அம்பை- சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை.
பா.சிங்காரம்-புயலில் ஒரு தோணி.
நாகராஜன்- நாளை மற்றுமொரு நாளே.
நான் சொன்னவை படித்தே ஆக வேண்டிய அந்தந்த எழுத்தாளர்களின் தனித்துவம் வெளிப்படும் படைப்புக்கள்.
படிக்க கூடியவை என்ற வரிசையில் இந்துமதி- மலர்களிலே அவள் மல்லிகை,தரையில் இறங்கும் விமானங்கள். எஸ்.ஏ.பீ யின் எனக்கென்று ஓர் இதயம்,பிறந்தநாள்,ஓவியம்,காதலெனும் தீவினிலே,புனிதனின் அன்புள்ள ஆறாம் வேற்றுமை,அணைக்க அணைக்க, w .r .ஸ்வர்ண லதா வின் நாளை வந்தே தீரும், எஸ்,தேவகியின் நினைத்தேன் வந்தாய், ஜாவரின்- உடல் பொருள் ஆனந்தி, மணியனின் காதலித்தால் போதுமா,தேன் சிந்தும் மலர், பால குமாரனின் மெர்குரி பூக்கள்,இரும்பு குதிரைகள்,தாயுமானவன்,சேவல் பண்ணை, சுஜாதாவின்- ஸ்ரீரங்கத்து தேவதைகள்,முடிச்சு கதைகள்,விஞ்ஞான கதைகள் (முக்கியமாக சுல்தான்-விஞ்ஞானி)கௌசிகனின் சுழிக்காற்று, தமிழ்வாணனின் எங்கேயோ கேட்ட குரல்,இன்னொரு செருப்பு எங்கே,கி.ராஜேந்திரன்- விண்ணும் மண்ணும்,
கி.ராவின் கோபல்ல கிராமம்,பாலுணர்வு கதைகள்,பீ.வீ.ஆரின் தொடு வானம்,சென்ட்ரல் ,கூந்தலிலே ஒரு மலர், ஹேமா அனந்த தீர்த்தன் மன்னிப்பே கிடையாது,கமலா சடகோபன் கதவு,மகரிஷி வட்டத்துக்குள் ஓர் சதுரம், மாயாவியின் துள்ளும் உள்ளம்.
இந்த மாதிரி பல.
நாடகம்,மொழிமாற்று கதைகள், பிறமொழி கதைகள்,உலக கதை ஆர்வமிருப்பின் பின்னொரு நாள் விரிவாக அலசலாம்.
ரவி சார்,
ஆயிரம் பதிவுகள் கண்ட தங்களுக்கு வாழ்த்துக்கள். ஆயிரம் பதிவுகள் போடுவது பெரிதல்ல. அனைத்து பதிவுகளிலும் அருமையான கருத்துக்களை கூறி பதிவிடுகிறீர்களே? அது பெரிய விஷயம். வாழ்த்துக்கள்.
திரு.கோபால்,
தங்களுக்கு என் உளப்பூர்வமான திருமண நாள் வாழ்த்துக்கள். திடீரென எரிமலையாய், அடுத்த விநாடியே பனி மழையாய், ஊரையே அழிக்கும் காட்டாறாய், அனைவரையும் ரசிக்க வைக்கும் அழகிய தெளிந்த நீரோடையாய் மாறும் உங்கள் குணாதிசயத்துக்கு ஏற்ப வாழ்க்கை பாதையில் உங்களுக்கு ஈடு கொடுத்து பயணிக்கும் தங்கள் துணைவியாருக்கு என் பணிவான வந்தனங்கள்.
சின்னக்கண்ணன்,
என்னவோ போங்க பிரமாதம். ரம்யா கிருஷ்ணனின் வயதை கண்டுபிடித்து சொன்ன உங்கள் ஆராய்ச்சிக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நான் யார்? நான் யார்? நீ யார்?
குடியிருந்த கோயில் படத்தில் நான் யார், நான் யார், நீ யார் பாடல் ஆழ்ந்த பொருளும் சுவையும் நிறைந்த பாடல். ஜி.என்.வேலுமணியின் தயாரிப்பில் 1968 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் பிரளயம் செய்த படம். இந்தப் பாடல் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன்பே எடுக்கப்பட்டது. பண்டரிபாயின் தாய்ப்பாசத்தால் தன்னை மறந்து கார் ஓட்டிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மக்கள் திலகம் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பார். அவரை தங்கள் கஸ்டடியில் வைத்திருக்கும் போலீஸார், அவரைப் போல தோற்றமளிக்கும் அவரது தம்பியான (இரட்டையர்கள்) மக்கள் திலகத்தை வைத்து கொள்ளைக் கூட்டத்தை பிடிப்பதற்காக திட்டமிடுவர்.
மனநிலை பாதிக்கப்பட்டவரை காட்டுவதற்காக, அவரது தம்பியை போலீஸ் அதிகாரி சுந்தரராஜன் அழைத்து வருவார். அப்போது இந்தப் பாடல். மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் திலகம் லூஸ் ஃபிட்டிங் முழுக்கை சட்டை அணிந்து சற்று குண்டாக தெரிவார். இளையவர் டி-ஷர்ட்டில் சிக். டாக்டராக வருபவர் இயக்குநர் கே.விஜயன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
நான் யார் நான் யார், நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
.... நான் யார் என்று சிந்தித்தால்..... நாலும் தெரிந்தவர்கள் (எல்லாம் தெரிந்தவர்கள்) என்று யாருமே கிடையாது. ஆத்திகர்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்று கூறப்படுவதுபோல, மாறி மாறி வரும் பிறவிகளில், இப்பிறவியில் தாய், மகன், தந்தை என்கிறோம். ஆத்திகர்களின் கோட்பாட்டின்படி, மறுபிறப்பில் யாருக்கு யார் தாய், மகன், தந்தை என்றெல்லாம் தெரியாது.
உறவார் பகையார் உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ?
வருவார் இருப்பார் போவார் - நிலையாய்
வாழ்வார் யார் யாரோ?
..... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று வாழ்த்திய வள்ளலாரைப் போல எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் உறவேது? பகையேது? அந்த பேதமே வராது. அப்படி அன்பு செலுத்தாது போனால், நமக்கே நம்மிடம் வெறுப்புதான் மிஞ்சும். அப்போது.. உனக்கே நீ யாரோ?
உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ?
..... (பணம்) இருப்பவர்கள் சாப்பிடுவார்கள். இல்லாதவர்களுக்கு கவுரமாக சொன்னால் தினமும் விரதம். அவர்களது உதவிக்கு யாருளர்?
வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற ஊரில் 1520-ம் ஆண்டு பிறந்து பல்வேறு நூல்களை எழுதிய மேதை அப்பைய தீட்சிதர். சிறந்த சிவபக்தர். அவருக்கு தன் பக்தியின் மீது சந்தேகம். நால்வரில் ஒருவரான சுந்தரர், இறைவனை, ‘பித்தா’ என்று அழைத்து பாடினாரே, அப்படிப்பட்ட பித்தனை, நாமும் பித்து நிலையில் இருந்தால் பாட முடியுமா? என்று அறிய விரும்பினார்.
ஊமத்தங்காயை தின்று விட்டு அதனால் சித்தம் கலங்கியிருக்கும்போது தான் கூறுபவற்றை தன் சீடர்களிடம் எழுதி வைக்கச் சொன்னார். சித்தம் கலங்கி பித்து நிலையில் இருக்கும்போது அவர் பிதற்றலாக கூறியதை சீடர்கள் எழுதிக் கொண்டே வந்தனர். எல்லாம் முடிந்த பின், பார்த்தால் சிவபெருமான் மீது அவர் எழுதிய 50 சுலோகங்களாக அவை இருந்தன. ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி, சீடர்கள் மாற்றுமருந்து கொடுத்து பித்தம் தெளிந்தார். பித்து பிடித்து, உன்மத்த நிலையில் இருந்தபோது அவர் பாடிய 50 சுலோகங்கள் என்பதால் அவற்றுக்கு ‘உன்மத்த பஞ்சாசத்’ என்று பெயர்.
பித்து பிடித்த நிலையில் பாடினாலும் இறைவனைப் பற்றியே அப்பைய தீட்சிதர் பாடியது போல, மனநிலை பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் பாடப்படும் பாட்டு என்றாலும் தலைவருக்கு அப்போதும் ஏழைகள், இல்லாதவர்கள், பசியோடிருப்பவர்கள் பற்றிய சிந்தனைதான்.
அதில் இன்னொரு ஒற்றுமையை கவனித்தீர்களா? பித்துப் பிடித்த நிலையில் உள்ள பாத்திரம் பாடும் இந்த பாடலை எழுதியவர் கூட ஒரு பித்தன்தான். அவர் புலமைப்பித்தன். இது எதேச்சையாக நடந்ததா? அல்லது மக்கள் திலகம் அவரை விட்டு இந்தப் பாடலை எழுதச் சொன்னாரா? என்று தெரியவில்லை.
அடிப்பார் வலியார், துடிப்பார் மெலியார்
தடுப்பார் யார் யாரோ?
.... அதைத்தான் சமீபத்தில் ஆந்திரா வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் பார்த்தோமே? இதுபோன்று ஏழைகளை, கூலிகளை அடித்தும் சுட்டும் அவர்களது உயிரைப் பறித்து, அந்த ஏழைகளின் குடும்பங்களை துடிக்க வைக்கும் வலியார்களை தடுப்பவர்கள் யார்?
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார்
எதிர்ப்பார் யார் யாரோ?
.....இழப்பவர்களின் அழுகையை விட எடுத்துக் கொண்டவர்களின் சிரிப்பு சத்தம்தான் பலமாகக் கேட்கிறது. இதையெல்லாம் எதிர்ப்பதற்கு யாருமில்லை.
பிணியார் வருவார் மருந்தார் தருவார்
பிழைப்பார் யார் யாரோ?
உயிரார் பறப்பார், உடலார் கிடப்பார்
துணை யார் வருவாரோ?
...பிறந்த உயிர்கள் அனைத்தும் இறந்தே ஆக வேண்டும். என்ன மருந்துகள் கொடுத்தாலும் உலகில் சாவை வென்று பிழைத்தவர் இவர் என்று யாரையாவது காட்ட முடியுமா? உயிர் பறந்து விட்டால் உடல் வெறும் கட்டையாய்தான் கிடக்கும். துணைக்கு யார் வருவாரோ? என்ற கேள்வி இருக்கட்டும். பட்டினத்து அடிகள் சொன்னதுபோல, ‘நாம் அரையில் அணியும் கோவணமும் வராதே?
கட்டையாக கிடக்கும் உடலை கவனிப்பாரின்றி அப்படியே போட்டுப் பார்ப்போமே. என்னாகும்? ‘நரியார், நாயார் கடிப்பார் முடிப்பார்’
என்னதான் படித்து, பெரிய பதவியில், அதிகாரத்தில் இருந்தாலும் கூட இதுதான் நமது உடலின் மதிப்பு.
எவ்வளவு அருமையான பாடல் பாருங்களேன். இன்னொன்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆத்திகர்கள் சொல்வது போல, ஞானத்தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலையில் அருள் பாலித்தாரே பகவான் ரமண மகரிஷி. அவரும் கூட இந்தக் கோயிலுக்கு போ, அந்த யாத்திரைக்கு செல். தினமும் இந்த தோத்திரம் சொல். என்றெல்லாம் சொன்னதில்லை. நான் யார்? நான் யார்? என்று ஆத்ம விசாரம் செய்யத்தான் சொன்னார்.
அவர் கூறியதுபோல ஆத்ம விசாரம் எல்லாம் நமக்கு, மன்னிக்கவும் எனக்கு தெரியாத விஷயம். ஆனால், நான் யார்? நிரந்தரமா? என்ன செய்தோம்? என்றெல்லாம் சிந்தித்தால் மற்றவர்களுக்கும் சமூகத்துக்கும் உதவி புரிபவர்களாக அதன் மூலம் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் தடம் பதித்தவர்களாக இருப்போம்.
இதில் இன்னொரு விஷயமும் உண்டு. பகவான் ரமண மகரிஷிக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கும் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் வந்தது புற்றுநோய் என்னும் கொடிய நோய்தான். அந்த நோய்தான் அவர்களை நம்மிடம் இருந்து பிரித்தது.
அந்த கொடுமையான நோய் யாருக்கும் வரவேண்டாம். நமக்கு வரவேண்டியது, அவர்களைப் போன்ற, மனிதனின் மேம்பாட்டுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் உழைக்கும் பெரியார்கள் மீதான பற்றுநோய்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்