on separating words and syllables
பிரிந்துசொல் நிற்க வரைந்திடல் ், கற்போர்
புரிந்துகொளல் வேண்டுமென் போக்கில் --- உரிந்த
பழம்போலும் உண்டிடப் பாங்குடைத்தாய்ப் பேச்சும்
எழுத்தும் இருத்தல் குறி.
இப்பாடலில் வெண்டளை பிழைத்துள்ளதா, பாருங்கள்.
என் இடுகைகளில், சில குறிகள் ( எ-டு " - " )தாமே ோன்றியுள்ளன. வாசிக்குங்கால், சரிசெய்துகொண்டு வாசிக்கவும். நன்றி.
Re: on separating words and syllables
விளக்கத்துக்கு நன்றி bis_mala :-)
Quote:
Originally Posted by bis_mala
பிரிந்துசொல் நிற்க வரைந்திடல் , கற்போர்
புரிந்துகொளல் வேண்டுமென் போக்கில் - உரிந்த
பழம்போலும் உண்டிடப் பாங்குடைத்தாய்ப் பேச்சும்
எழுத்தும் இருத்தல் குறி.[/]
முதலில் :clap:
இந்தச் சரளம் தான் என் குறிக்கோள்
Quote:
Originally Posted by bis_mala
இப்பாடலில் வெண்டளை பிழைத்துள்ளதா, பாருங்கள்.
இப்போது பிரித்துப் பார்க்கிறேன்:
கருவிளம் தேமா கருவிளம் தேமா
கருவிளங்காய் கூவிளம் தேமா - புளிமா
புளிமாங்காய் கூவிளம் கூவிளங்காய் தேமா
புளிமா புளிமா மலர்
அசை பிரித்தது சரியென்றால்
விளமுன்நேர் - சரி
காய்முன் நேர் - சரி
மாமுன் நிரை - சரி
தளை தட்டவில்லை என்று நினைக்கிறேன்.
ஆனால் நான் பிரித்ததுபோல உரக்க சொல்லிப் பார்த்தால் rhythm சரியாக வராததுபோல இருக்கிறது. அதனால் நான் சரியாகப் பிரிக்கவில்லை என்று நினைக்கிறேன். சரியா?