அனைத்து திரி நண்பர்கள், பங்களிப்பாளார்கள், திரியின் silent வாசிப்பாளார்கள் மற்றும் உலகெங்கும் உள்ள அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் ஆங்கில புத்தாண்டு 2014 நல்வாழ்த்துகள்.
அன்புடன்
Printable View
அனைத்து திரி நண்பர்கள், பங்களிப்பாளார்கள், திரியின் silent வாசிப்பாளார்கள் மற்றும் உலகெங்கும் உள்ள அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் ஆங்கில புத்தாண்டு 2014 நல்வாழ்த்துகள்.
அன்புடன்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
JULY - 1964- PESUM PADAM
http://i41.tinypic.com/2z7fztc.jpg
1972- BOMMAI
TOUCHING ARTICLE
http://i44.tinypic.com/2vjvaf8.jpg
டியர் வினோத் சார்,
அன்பளிப்பு, அஞ்சல்பெட்டி 520 பாடல்கள், கெளரவம் காட்சி, கைகொடுத்த தெய்வம் வெளியீட்டு விளம்பரம், 1972 வருடம் பொம்மையில் வெளிவந்த உருக்கமான கட்டுரை என 2014 ஆண்டை வரவேற்கும் விதமாக அமைந்த தங்களின் பதிவுகளுக்கு நன்றி.
திரு வினோத் சார்,
தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .அருமையான காணொளிகள் மற்றும் இதயத்தை கணக்க வைத்த கட்டுரைக்கு நன்றி.
Dear Vinodh Sir,thanks for your articles,specially BOMMAI article.
Dear Geno sir,you have asked about the stance of NT during emergency.Certainly he would not have supported it and the attempt to arrest KAMARAJ.But you know very well that there was no freedom of expression,or PRESS.Even people who were in power were not open and many great leaders have gone in hiding.To certain extent,the DMK govt and leaders who had some power, were open to the atrocities and faced the consequences bravely as a strong political party.NT was not in any powerful position except as a sincere worker of Kamaraj.I have replied to my knowledge.You can give your views.
Wish you all a very happy and prosperous new year 2014.
19.4.1965 DAILY THANDHI
NT MOVIES
SANTHI / THANGAMALAI RAGASIYAM /KUNGUMAM
http://i40.tinypic.com/15yiuxj.jpg
http://i39.tinypic.com/2lml8a8.jpg
1973- BOMMAI
http://i43.tinypic.com/2hfrzo2.jpg
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தலைவரின் பக்தர்களுக்கு அவர் பிறந்ததினமே புத்தாண்டு தொடக்கம்.
அவ்வகையில் அவர் பிறந்த நாளான இன்று சக பக்தர்களுக்கு வாழ்த்துக்களை கூறி
அனைவருக்கும் மிக ஆனந்தமான ,அமைதியான வாழ்வு அமைய எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன்.!
டியர் வினோத் சார்,
பொம்மையில் வெளியான பல சுவையான தகவல்களைப் பகிர்ந்ததற்கு நன்றி.
ஆனந்த விகடன் - 08 Jan, 2014
விகடன் மேடை - சத்யராஜ் பதில்கள்
வாசகர் கேள்விகள்,
ராமானுஜன், ஸ்ரீரங்கம்.
''சிவாஜி, ரஜினி, கமல்... என பலருக்கும் வில்லனாக நடித்தபோது நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்கள் கூறுங்களேன்?''
''எம்.ஜி.ஆர். தவிர்த்து, 'இவர் ரசிகர்’னு சொல்றதா இருந்தா, நடிகர் திலகம் சிவாஜியைத்தான் சொல்வேன். அவர்கூட நான் நடிச்ச அனுபவங்களைத் தனிப் புத்தகமாவே போடலாம். 'சிரஞ்சீவி’ படத்தில்தான் முதல் முறையா அவர்கூட நடிச்சேன். சிங்கப்பூர் போற கப்பல்ல நடக்கும் கதை. அப்போ ஷூட்டிங் ப்ரேக்ல நான் அவரை மாதிரியே மிமிக்ரி பண்ணினதை ரசிச்சவர், தான் பயன்படுத்துற ஒரு சென்ட் பாட்டிலை எனக்குப் பரிசாக் கொடுத்தார். அதை இன்னமும் பத்திரமா வெச்சிருக்கேன்.
'புதிய வானம்’ படத்துல எனக்கு ரஃப் அண்ட் டஃப் கேரக்டர். அவருக்கு ரொம்ப சாஃப்ட் கேரக்டர். நாங்க ரெண்டு பேரும் ஜீப்ல பாடிட்டு போற மாதிரி ஒரு காட்சி. அவர் பாடுறதுல, 'எளிமையும் மனப்பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை’னு ஒரு வரி வரும். அப்ப புரட்சித்தலைவர் இறந்த சமயம். 'டேய்... இதுல அண்ணனைப் பத்தி வரி வருது. அந்தக் காட்சியில அண்ணன் மாதிரியே நடிக்கலாம்னு இருக்கேன். நீதான் அண்ணன் மாதிரி நடிப்பியே... இந்தக் காட்சியில அண்ணன் நடிச்சிருந்தா எப்படி நடிச்சிருப்பார்னு கொஞ்சம் நடிச்சுக் காட்டுடா’ னார். 'என்னங்கப்பா நீங்க, உங்களுக்குப் போய் நான் எப்படி நடிச்சுக் காட்டுவேன்’னு சொல்லிப் பதறிட்டேன். ஆனா, என்னைக் கட்டாயப்படுத்தி நடிக்க வெச்சார். புரட்சித்தலைவர் மாதிரியே ஸ்டைலா ஓடி வர்றது, கையத் தூக்குறதுனு நடிச்சுக் காமிச்சேன். அவரும் அதே போல நடிச்சார். அவர்கூட வில்லனா, ஹீரோவா நடிச்ச நான், அவருக்கு ஒரு நடன உதவியாளராகவும் இருந் திருக்கேன் என்பது எனக்கான பெருமை.
சிவாஜி சார், பிரபுவைத் தொடர்ந்து அன்னை இல்ல மூன்றாவது தலைமுறையான விக்ரம் பிரபுகூடவும் இப்ப நடிக்கிறேன் என்பது கூடுதல் தகவல்.
THANKS CHANDRASEKAR SIR
http://youtu.be/3VyGB42TVx0
KC சார் - ஒரு சிலபேராவது இன்றும் நன்றியுடன் இருக்கிறார்களே என்று நினைக்கும்போது , மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .
அன்புடன் ரவி
:):smokesmile:
டியர் வினோத் சார் - உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை - எப்படிப்பட்ட ஆவணங்கள் , எவ்வளவு அருமையாக பதிவு செய்கின்றீர்கள் . உங்களை பெற MT திரி மட்டும் அதிர்ஷ்ட்டம் செய்யவில்லை - நாங்களும் தான் - இந்த திரிக்கு புதிய உற்சாகத்தை தந்து கொண்டு எங்களையும் பெருமை படுத்திகொண்டு இருகிண்டீர்கள் - தொடுருங்கள் உங்கள் இனிய பதிவுகளை !!
அன்புடன் ரவி
:):smokesmile:
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் சினிமாவுக்கான விளம்பரமாக இருந்தது பத்தி*ரிகைகள் மட்டுமே. ஜனங்களும் பத்தி*ரிகைகளை விரும்பி வாங்கிப் படித்தனர். சேட்டிலைட் சேனல்களின் ஆதிக்கம் ஆரம்பிக்காத அந்த காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரங்கள் சினிமா பத்தி*ரிகைகளில் ஆர்வம் காட்டினர். 1967ல் வெளியான பொம்மை இதழுக்காக சிவா*ஜி கணேசனை ஜெயலலிதா பேட்டி கண்டார். பேட்டியில் சிக்கலான விஷயங்களில் ஷார்ப்பாக ஜெயலலிதா கேள்வி கேட்டிருப்பது பளிச்சென தெ*ரிகிறது.
ஜெயலலிதா - உங்க பெயருக்கு முன்னாலே சிவா*ஜின்னு ஒரு பட்டம் சேர்ந்திருக்கிறதே, அது எப்படி வந்தது?
சிவாஜி - அதுதான் ஊர் அறிஞ்சதாச்சே.
ஜெயலலிதா - எனக்குத் தெ*ரியாதே. அதனாலே...
சிவா*ஜி - அப்போ ச*ரி. சொல்லிட வேண்டியதுதான். ஏழாவது சுயம*ரியாதை மகாநாட்லே சத்ரபதி சிவா*ஜி நாடகம் நடந்தது. பெ*ரியார் அவர்கள் மகாநாட்டுக்கு தலைமை வகிச்சாங்க. நாடகத்திலே சிவா*ஜியாக நடிச்ச என்னைப் பார்த்து பாராட்டிவிட்டு, சிவா*ஜிங்கிற பட்டத்தையும் கொடுத்தாங்க. அன்னேலேருந்து சிவா*ஜி கணேசனாயிட்டேன்.
ஜெயலலிதா - லைலா - ம*ஜ்னு, ரோமியோ - ஜுலியட் போன்ற இலக்கியங்கள்ளே வரும் காதலர்களைப் பற்றி படிச்சிருப்பீங்க. அந்த மாதியான காதலருங்க இருந்திருப்பாங்கன்னு நீங்க நினைக்கறீங்களா?
சிவா*ஜி - காதலிச்சா அந்த மாதி*ரி காதலிக்கணும் என்கிறதுக்காகத்தான் எழுதியிருக்காங்க. கொஞ்ச நாள் காதலிச்சிட்டு, கைவிட்டுட்டுப் போகக் கூடாது. காதல் என்பது கடைசிவரைக்கும், உயிர் போனா கூட இருக்கணும்னு சொல்றதுக்காகதான் இது. நாடகமும், சினிமாவும், இந்த மாதி*ரி கதைகளும் வெறுமே படிச்சிட்டு விடறதுக்காக இல்லே.
ஜெயலலிதா - அம்மாதி*ரியான காதலர்களை இப்போதுள்ள உலகத்திலே காண முடியும்னு நம்பறீங்களா?
சிவா*ஜி - நான் காதலிச்சது கிடையாது. இப்போ நீ தனி ஆள். இனிமேதான் நீ காதலிக்கப் போறே. நீதான் சொல்லணும்.
ஜெயலலிதா - வேறு வழியே கிடையாது என்ற நிலைக்கு வரும்போது, தற்கொலையைத் தவிர, வேறு நிலை இல்லை என்ற சூழ்நிலைக்கு வரும் போது ஒருவர் தற்கொலை செய்து கொள்றது பற்றி என்ன சொல்லுறீங்க?
சிவா*ஜி - தற்கொலை கோழைத்தனம் மட்டும் இல்லே, அது பெ*ரிய தவறும்பேன்.
ஜெயலலிதா - நான்தான் வேறு வழியே இல்லேன்னு சொல்லிட்டேனே. உதாரணமா ஒரு பெண் இருக்கா. அவ கணவனால் கைவிடப்பட்டு விடறாள், அவளுக்கு படிப்பும் கிடையாது, என்ன செய்வாள்?
சிவா*ஜி - பாத்திரம் தேய்க்கிறது, மூட்டைத் தூக்கறது, ஏதாவது நாணயமா வேலை செஞ்சு பிழைக்கிறது. வேலை இல்லாதவங்க, படிக்காதவங்க எல்லாரும் செத்தாப் போயிட்டாங்க?
ஜெயலலிதா - தமிழ்ப் படங்க இப்போ முன்னேறி இருப்பதா நினைக்கிறீங்களா? அல்லது தரம் குறைவாய் விட்டதாக எண்ணுறீங்களா?
சிவா*ஜி - எல்லாத்துறையிலும் நிச்சயமா முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதே சமயம் சில படங்கள் மக்களது ரசனையையும் குறைச்சிட்டும் போயிருக்கு. இந்த மாதி*ரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தைஞ்சு இருக்கும். ஆக, நாம் மேலே ஏறினால், இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கீழே இழுத்து விட்டுடுது.
ஜெயலலிதா - எப்படி?
சிவா*ஜி - இப்ப நீங்கள்ளாம் கால் சராய் போட்டு நடிக்க வந்துட்டதனாலேதான்.
ஜெயலலிதா - தயா*ரிப்பாளர்கள் அப்படி போடச் சொல்றாங்களே.
சிவா*ஜி - ஜனங்களோட வீக்னஸை தயா*ரிப்பாளர்கள் பயன்படுத்திக்கிறாங்க. நீங்க இன்னும் கொஞ்சம் பிகு வாக இருக்கலாம்.
ஜெயலலிதா - பிகுவாக இருந்தால், நீங்க வேண்டாம்னு சொல்லிவிடுவாங்களே. புதுசா வரும் நடிகைங்க என்ன செய்வாங்க? எதிர்க்க முடியுமா?
சிவா*ஜி - தப்பு. கால்சராய் போட மாட்டோம்னு சொன்னோம். வேண்டாம்னு தயா*ரிப்பாளர் சொல்லிட்டாருன்னு வெளியே தெ*ரிஞ்சா, தயா*ரிப்பாளரைத்தான் திட்டுவாங்க.
ஜெயலலிதா - இது ஒரு வியாபாரம் மாத*ரிதானே. அப்படி அவங்க பணம் பண்ணுவதில் என்ன தப்பு?
சிவா*ஜி - ஒத்துக்கறேன். இருந்தாலும் கொஞ்சம் நிதானமாகவும் இருக்கலாம் இல்லியா? அதைத்தான் சொல்றேன். அளவுக்கு மீறி எதுவும் போயிடக் கூடாது.
ஜெயலலிதா - இப்போ புதுசா ஒரு பிரச்சனை தலைதூக்கி இருக்கு. முத்தக் காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு. நீங்க என்ன நினைக்கறீங்க?
சிவா*ஜி - சே சே வெட்கக்கேடு. முத்தம் கொடுக்கிறதைக் காட்டவே கூடாது. முத்தம் கொடுக்கற மாதி*ரி நடிக்கணும். மூடிக் காட்டுவதுதான் கலை. பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது. அதனால முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக் கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
ஜெயலலிதா - ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்க முடியாததாக அமைஞ்சிடும். அம்மாதி*ரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது நடந்திருக்கா?
சிவா*ஜி - எகிப்தின் தலைநகரமான கெய்ரோவில் ஆசிய ஆப்பி*ரிக்க படவிழாவின் போது நடந்தது. அன்னிக்கு விழாவுக்கு வந்தப் படங்களின் *ரிசல்ட் சொல்றாங்க. நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்தவங்க எல்லாம் என்னை ஏதோ ஒரு டெக்னீஷியன்னு நினைச்சிருந்தாங்க. அங்கே வந்திருந்தவங்களெல்லாம் பெ*ரியவங்க, உயரத்திலும் ஏழடி.
அங்கே பல பெ*ரிய நாடுகளிலேருந்து பல கலைஞர்கள் கூடியிருந்தாங்க. நீதிபதிகள் எல்லாரும் வந்தாங்க. கட்டபொம்மன்தான் சிறந்த படம், கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க. என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க. நான் எழுந்து நின்னேன். வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்காதவன். நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோது கூட அசையாமல் இருந்தவன். ஆனால் அன்னைக்கு கெய்ரோவில் நடந்த அந்தச் சம்பவம் என்னையே அசத்திவிட்டது. எழுந்து நின்ற நான் மயங்கியே விழுந்திருப்பேன். நல்லவேளை என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிக்கிட்டாங்க. இல்லாட்டா நான் நிச்சயம் விழுந்திருப்பேன். நான் என்னையே மறந்து உணர்ச்சிவசப்பட்டது இந்த ஒரு நாள்தான்.
ஜெயலலிதா - நீங்க நாடகங்களிலே நடிக்க வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா?
சிவா*ஜி - அப்ப மட்டும் என்ன? இப்பவுந்தான். மெட்ராஸ் சிடியிலே நான் பார்க்காத படமே ஓடாது. நேத்து ராத்தி*ரி கூட ஒரு குப்பைப் படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.
இது கொஞ்சம். இதுபோல் சுவாரஸியமான பல கேள்விகள். இன்றைக்கு இப்படியொரு அந்தரங்கமான உரையாடலை சினிமாவில் எதிர்பார்க்கவே முடியாது.
நன்றி - பொம்மை ஆண்டு மலர் 1967
http://i1302.photobucket.com/albums/...ps8ef04637.png
http://i1302.photobucket.com/albums/...ps58d2cc2c.png
http://i1302.photobucket.com/albums/...ps91de7097.png
http://i1302.photobucket.com/albums/...ps0324dd0d.png
http://i1302.photobucket.com/albums/...ps48e3a3a0.png
http://i1302.photobucket.com/albums/...ps75a9263f.jpg
http://i1302.photobucket.com/albums/...ps11cb1be2.jpg
http://i1302.photobucket.com/albums/...ps4dd1510d.png
http://i1302.photobucket.com/albums/...psc511366f.jpg
http://i1302.photobucket.com/albums/...ps20972e47.jpg
http://i1302.photobucket.com/albums/...psa7c3cc3d.jpg
http://i1302.photobucket.com/albums/...ps79429766.jpg
http://i1302.photobucket.com/albums/...psfea206fe.jpg
http://i1302.photobucket.com/albums/...ps2f92cf30.jpg
http://i1302.photobucket.com/albums/...psbca5828e.jpg
http://i1302.photobucket.com/albums/...ps160190d8.jpg
http://i1302.photobucket.com/albums/...ps6e017e59.jpg
நன்றி Goldstar சார் , நீங்களும், Vinod சாரும் இந்த திரியை பழைய வேகத்தில் எடுத்து செல்வதற்கு - இந்த நிலைமை நீடிக்க வேண்டும் - சோகத்தின் சாயல் முழுவதும் அகல வேண்டும் , இந்த புத்தாண்டில் நாம் புதிய சாதனைகள் நிகழ்த்தவேண்டும் - இதுதான் எங்கள் மனமார்ந்த ப்ராத்தனை.
அன்புடன் ரவி
:):smokesmile:
நடிப்புலக மாமேதையின் அற்புத படங்களை பதிவு செய்த gold star அவர்களுக்கும் பல விதமான செய்திகளை போட்டு எங்களை திக்கு முக்காட செய்த வினோத் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் வெளிப்படையாகவே மோதல் இருந்தது என்றும் பிரச்சார மேடைகளில் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொண்டார்கள் என்றும் இந்த வார குமுதம் ரிப்போர்டரில் படித்தேன். உண்மையா?
1968
BANGALORE
NT IN PARASAKTHI 2ND WEEK- INDIAN EXPRESS
http://i41.tinypic.com/1695czq.jpg
1969- ANANDHA VIKADAN- COMMENTS PORTION
http://i40.tinypic.com/sg7uz7.jpg
முதல் முறையாக நடிகர் திலகத்தின் படத்தின் 100 வது நாள் விழாவில் மக்கள் திலகம் கலந்து கொண்டு சிறப்பித்தார் . ஜல்லிக்கட்டு -1987
எங்கள் தங்கம் பட துவக்க விழாவில் நடிகர் திலகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் -1969.
மக்கள் திலகத்திற்கு நடிகர் திலகமும் , நடிகர் திலகத்திற்கு மக்கள் திலகமும் பல விழாக்கள்
நடத்தி சிறப்பு செய்தார்கள் .
மக்கள் திலகம்உடல் நலம் பாதிக்கப்பட்டபோது நடிகர் திலகம் சர்வ மத பிராத்தனை செய்து
நியூயார்க் சென்று மக்கள் திலகத்தை நேரில் சந்தித்து வந்தார் .
மக்கள் திலகம் மறைவின் போது நடிகர் திலகத்தின் கண்ணீர் பேட்டி -மறக்க முடியாது .
அரசியல் - திரை உலகம் இருதுருவங்களாக இருந்தாலும் நட்பின் அடிபடையில் இருவரும்
சகோதர பாசத்துடன் கடைசி வரை வாழ்ந்தார்கள் .
இவையெல்லாம் குமுதம் ரிப்போர்ட்டருக்கு தெரியாமல் போனதா ?
Dear Ravi and Vinodh sirs,thanks for your articles and rare photoes.
Regarding the relationship between MT and NT,it is true that both were fierce competitors and had understood the positives and negatives of themselves but mutually.There would have been some issues,which is unavoidable between two individuals ,even between a father and son is unavoidable.Bit these issues had been magnified by few people who were enjoying by creating a imaginary split between the greats.Now the journalism has gone to hat level ,for sales they want to pick anything from a dustbin.What they want to prove after the death of those great personalities.Let KUMUDHAM REPORTER concentrate on LIVE and LIFE issues.
Dear POEM, MGR accepted Kalaignar as leader till he was in DMK and later formed own party.What is wrong when Sivaji accepted indhragandhi after the demise of Kamarajar?
Dear sathish sir,
all the stills are very rare and superb.i have never seen many of the stills till now,thankyou for uploading them.hope all our beloved hubbers including vasu sir,raghavendra sir and gopal sir will return soon.
From our raghavendra sir website:
மிக்க நன்றி வினோத் சார். பொம்மை இதழில் வெளிவந்த கட்டுரைகளை விட எனக்கு ஆச்சரியம் தந்தது பத்திரிக்கை விளம்பரங்கள்தான். அதிலும் 1965 ஏப்ரல் 19-ந் தேதி தினத்தந்தி நாளிதழின் scan உண்மையிலே அபூர்வமானது. பழைய பத்திரிக்கைகளை அவை வெளிவந்த காலகட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். இன்றைக்கு முழுக்க கலர் விளம்பரங்களாக தினத்தந்தி வெளிவந்தாலும், வெறும் எழுத்துக்களை மட்டுமே வைத்து வெளிவந்த அந்த நாள் விளம்பரங்கள் சுவையானவை.
நடிகர் திலகத்தின் பல படங்கள் பற்றிய விளம்பரங்கள். சாந்தி வெளிவருவதற்கு 3 நாட்கள் முன்பு வெளியான நாளிதழ். அந்த படத்தின் ரிசர்வேஷன் அதுவும் தாம்பரத்தில் உள்ள M R தியேட்டரில், தவிர புதிய பறவை, அன்புக் கரங்கள், தங்கமலை ரகசியம் மற்றும் குங்குமம் என்று எண்ணற்ற மறு வெளியீடுகள். மிகப் பிரமாதம்.
அது போன்றே பராசக்தி பல வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இரண்டாவது வாரம் ஓடுவது, அதிலும் ஷிமோகா போன்று பெங்களூரிலிருந்து பல மைல் தூரத்தில் உள்ள ஊர்களிலும் பராசக்தி வெற்றி முரசு கூடியது என்றால் அதன் வியாபார வீச்சை நினைத்தால் பிரமிக்க வைக்கிறது.
மீண்டும் நன்றி.
அன்புடன்