குறுகிய காலத்தில் 1,000 பதிவுகள் இட்டு, அதிலும் வரலாற்று ஆவணங்களை, அரிய பொக்கிஷங்களை பதிவிட்டுள்ள திரு.குமார் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
குறுகிய காலத்தில் 1,000 பதிவுகள் இட்டு, அதிலும் வரலாற்று ஆவணங்களை, அரிய பொக்கிஷங்களை பதிவிட்டுள்ள திரு.குமார் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மக்கள் திலகத்தின் '' சபாஷ் மாப்பிளே'' 14.7.1961
55வது ஆண்டு துவக்கம் . மக்கள் திலகம் -எம் ஆர் ராதா கூட்டணியில் வந்த முதல் படம் .மிக சிறந்த நகைசுவை படம் .
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி சகோதரர் திரு.ஹயாத் அவர்களின் தாயார் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். திரு.ஹயாத்துக்கு எனது அனுதாபங்கள். புனித ரமலான் நோன்பு காலத்தில் கடைசி 10 நாட்கள் மிகவும் தீவிரமான நோன்பு நாட்கள். அந்த புனித நாளிலே மறைவெய்திய திரு.ஹயாத்தின் தாயார் ஒரு புனித ஆத்மா.
ஹதீஸ் கூறுகிறது...
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ.
யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், மேலும் நரகத்திலிருந்து உன்னிடம் பாதுகாவலும் தேடுகின்றேன் (அபூதாவூத்)
..........மத நம்பிக்கையாளர்களின் கருத்துக்களின்படி, சகோதரர் ஹயாத்தின் தாயார் நிச்சயம் சுவர்க்கத்தில் அல்லாஹ்வின் திருவடியில் சேர்ந்திருப்பார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
‘உன் சீரிளமைத் திறம் வியந்து.....’
மனயங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற திரை இசை சக்ரவர்த்தி, மெல்லிசை மன்னர், எம்.எஸ்.வி. என்று அன்போடு அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் அமரராகிவிட்டார். இசையும் அவரும் இரட்டைப் பிறவிகள். அவருடனே இசையும் பிறந்தது. 13 வயதிலேயே மேடையில் கச்சேரி செய்யும் அளவுக்கு மேதையாக விளங்கியவர். இசை ஆர்வம் இருந்தாலும் ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் அவருக்கு ஆசை. மிகவும் குள்ளமாக இருந்ததால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அது தனது துரதிர்ஷ்டம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், நமது அதிர்ஷ்டம் அது. இல்லாவிட்டால் அந்த மேதையின் தேனிசையில் நாம் மூழ்கி இருக்க முடியுமா?
ஏறத்தாழ, 60 ஆண்டுகளாக ஆர்மோனியப் பெட்டியில் ஜாலம் புரிந்த தனது விரல் நுனிகளில் வைத்திருந்த இசையால், தமிழர்களை கட்டிப் போட்டவர். கடந்த 3 தலைமுறையைச் சேர்ந்த தமிழன் எவனும் அவரது பாடல்களை முணுமுணுக்காமல் இருக்க மாட்டான்.
நடிகராகும் ஆசையில் கோவை ஜூபிடர் பிக்சர்ஸில் சேர்ந்து, அது நிறைவேறாமல் பழம்பெரும் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவிடம் இசை பயின்று, பின்னர் இசையமைப்பாளர் திரு.சி.ஆர்.சுப்பராமன் இசைக்குழுவில் ஆர்மோனியம் வாசிக்கும் கலைஞராக பணியாற்றி, திரு.சுப்பராமன் அவர்களின் திடீர் மறைவால், அவர் ஒப்புக் கொண்டு முடிக்கப்படாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை முடித்துக் கொடுத்தார். மக்கள் திலகம் நடித்த ‘ஜெனோவா’ படத்தின் 4 பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்தார். ‘பணம்’ திரைப்படம் மூலம் திரு.சுப்பராமன் இசைக்குழுவில் வயலின் கலைஞராக இருந்த ராமமூர்த்தியுடன் இணைந்து முதன்முதலில் இசையமைத்தார்.
அதிலிருந்து, மக்கள் திலகம் நடித்த ஆயிரத்தில் ஒருவன் வரை சுமார் 700 படங்களுக்கு இரட்டையர்களின் இசைப்பயணம் தொடர்ந்தது. அதன் பிறகும் 500 படங்களுக்கு மேல் எம்.எஸ்.வி. தனித்து இசையமைத்துள்ளார்.
திரை இசையில் கர்நாடக சங்கீதத்தின் தாக்கமே அதிகமாக இருந்த காலத்தில், அதை பாமரனும் கேட்டு ரசிக்கும்படி இசையை எளிமையாக்கிக் கொடுத்த மேதை திரு.எம்.எஸ்.வி. அவர்கள். கர்நாடக இசையில் மேற்கத்திய இசையை கலந்து ரசிகர்களுக்கு விருந்தாக்கினார். எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது. ஆனால், திரையில் அவர் இசையமைத்த பல பாடல்களைக் கேட்டுத்தான் இந்த பாட்டு இந்த ராகம் என்று அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய அளவுக்கு என்னைப் போன்ற பாமரனுக்கும் எளிமையாக இசையை புகட்டியவர் அவர். பின்னணிப் பாடகர்களைக் கொண்டு மெல்லிசைக் கச்சேரிகளை முதன் முதலில் மேடையில் அரங்கேற்றியவர் என்ற பெருமைக்குரியவர் . 1965-ம் ஆண்டு போர்முனைக்குச் சென்று தனது குழுவினரோடு பாடி நமது வீரர்களை உற்சாகப்படுத்திய தேசபக்தர்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழர்களை இசையால் கட்டிப் போட்டிருந்த மேதைக்கு தேசிய விருதுகள் கிடைக்கவில்லை என்பது வேதனை. 2012-ம் ஆண்டில் ஜெயா டிவி சார்பில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் பாராட்டு விழா நடந்தது. முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள், அந்த இசை மேதைகளுக்கு தனித்தனியே ஃபோர்டு ஃபியஸ்டா காரும், தங்கக் காசுகள் கொண்ட பொற்கிழியும் பரிசளித்தார். ‘திரை இசை சக்ரவர்த்தி’ என்ற பட்டமும் வழங்கினார்.
அப்போது பேசிய செல்வி. ஜெயலலிதா அவர்கள் ‘‘பத்ம விருதுகளுக்காக மெல்லிசை மன்னர்களின் பெயரை பரிந்துரை செய்தபோதும் மத்திய அரசு அதை நிராகரித்தது’’ என்று குறிப்பிட்டார். எவ்வளவு வருத்தப்பட வேண்டிய விஷயம்? இன்று கூட செல்வி. ஜெயலலிதா அவர்கள் தனது இரங்கல் செய்தியில் மீண்டும் இதை தெரிவித்துள்ளார்.
மக்கள் திலகம் நடித்த காவல்காரன் படத்தில் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது...’ பாடலில் பெர்ஷியன் இசையையும் உலகம் சுற்றும் வாலிபனில் ‘பன்சாயி...’ பாடலில் ஜப்பானிய இசையையும் நாம் ரசிக்க கொடுத்த மேதை எம்.எஸ்.வி. அவர்கள். பெர்ஷிய இசை, ஜப்பானிய இசை என்றெல்லாம் தெரியாமலேயே இந்தப் பாடல்களை பாமரனும் பாடச் செய்தவர்.
அவரது திரை இசையின் உச்சம் என்று நான் கருதுவது உலகம் சுற்றும் வாலிபன். இசைக்காகவே அதிகம் செலவழிக்கப்பட்ட படம். படத்தின் பாடல்கள் மட்டுமல்ல, படம் முழுவதும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகள், புத்தர் கோயில் சண்டைக் காட்சி, ஹோட்டல் துஸித்தானி காட்சி, எக்ஸ்போ 70-ல் எடுக்கப்பட்ட காட்சிகள், கிளைமாக்சில் ஸ்கேட்டிங் சண்டை காட்சி என்று ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ப அவரது இசை ஜாலம் புரியும். கண்ணை மூடிக் கொண்டு படத்தின் இசையை மட்டும் கேட்டால், நாமே ஜப்பானிலும், சிங்கப்பூரிலும் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும். அதுதான் அவரது வெற்றி.
அந்தப் படத்தின் பாடல்களுக்காக, திரு.எம்.எஸ்.வி. எத்தனையோ டியூன்களைப் போட்டும் மக்கள் திலகம் அவற்றை எல்லாம் திருப்தியாக இல்லை என்று சொல்லி நிராகரித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, இனி முடியாது என்று எம்.எஸ்.வி. சொல்லிவிட்டார். பிறகு, அவரை மக்கள் திலகம் அழைத்து இசையமைத்ததற்காக பணம் கொடுத்திருக்கிறார். ‘உங்களுக்கு திருப்தி இல்லை என்று நீங்கள் சொன்ன பிறகு பணம் வாங்க மாட்டேன்’ என்று மறுத்திருக்கிறார் எம்.எஸ்.வி.
மக்கள் திலகம் சிரித்துக் கொண்டே, ‘நீ போட்ட மெட்டுக்கள் நன்றாகத்தான் இருந்தன. மேலும், சிறப்பாக வர வேண்டும் என்பதற்காகத்தான் திருப்தியாக இல்லை என்று சொன்னேன்’’ என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார். அப்போதும் பணம் வாங்க அவர் மறுத்த நிலையில், ‘சரி, போ’ என்று சொல்லிவிட்டு, எம்.எஸ்.வி.யின் தாயாருக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார் மக்கள் திலகம். அந்தப் பணம், தமிழ் திரையுலகில் இசையமைப்புக்காக அதுவரை யாரும் பெறாத பெரும் தொகை.
பாடல்கள் நன்றாக வரவேண்டும், ரசிகர்களுக்கு விருந்தாக்க வேண்டும் என்று, எந்த அளவுக்கு மக்கள் திலகமும், அவரது விருப்பத்துக்கேற்ப ஏராளமான டியூன்கள் போட்டு, அவர் திருப்தியடையவில்லை என்பதால் பணம் வாங்க மறுத்து எம்.எஸ்.வியும், அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுள்ளனர் என்பதை நினைத்தால் மனம் சிலிர்க்கிறது.
எம்.எஸ்.வி.யின் ஈடுபாட்டுக்கும் இசையில் சமரசம் செய்து கொள்ளாத தன்மைக்கும் மற்றொரு உதாரணம். இன்று காலையில் தனியார் தொலைக்காட்சியில் நான் பார்த்ததை கூறுகிறேன். தான் நினைத்தபடி பாடல் வரவில்லை என்றால் பாடகர்களை எம்.எஸ்.வி. கடுமையாக திட்டுவாராம். இன்று காலை தனியார் தொலைக்காட்சியில் எம்.எஸ்.வி.க்கு அஞ்சலி நிகழ்ச்சியாக எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களிடம் பேட்டி எடுத்தனர். ஈஸ்வரி அவர்கள் கூறும்போது, ‘‘பாடலை அவர் நினைத்த வகையில் நான் பாடவில்லை என்றால் கடுமையாக திட்டுவார். திட்டு என்றால் உங்க வீட்டு திட்டு, எங்க வீட்டு திட்டு அல்ல, அப்படி திட்டுவார். அதேபோல, நன்றாக பாடி முடித்ததும் அவரைப் போல யாரும் பாராட்ட முடியாது’’ என்றார்.
அப்படி, பாடல்கள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக இரவு, பகலாக தான் உழைத்தது மட்டுமின்றி மற்றவர்களிடமும் அதே பர்ஃபெக்க்ஷனை எதிர்பார்த்துள்ளார் எம்.எஸ்.வி., மக்கள் திலகத்தைப் போல.
அப்படி அர்ப்பணிப்போடு பணியாற்றியதால்தான் உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப் போலவே, அதில் நடித்த மக்கள் திலகத்தைப் போலவே, படத்தின் இசையும் இன்றும் இளமையாகவே உள்ளது.
அவரை இழந்து நாம் எல்லாருமே துயரில் வாடும்போது யாருக்கு யார் ஆறுதல் சொல்லி தேற்றுவது?
உடல் நலம் பாதிக்கப்படுவதற்கு முன்பு வரையிலும் உடல் இயக்கத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக, இளமையாகவே இருந்தார் எம்.எஸ்.வி.
அவருக்கு உள்ள சிறப்புகளிலேயே மிகப் பெரிய சிறப்பு.... மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த....’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவர் இசையமைத்தது. எந்த ஒரு முக்கிய விழாவும் அவரது இசை ஒலிக்காமல் நடக்காது. தமிழ் என்றாலே இளமை, அழகு, மோகனம்தானே. அதனால், அந்தப் பாட்டுக்கும் மோகன ராகத்திலேயே மெட்டமைத்தார் அந்த பிறவி மேதை.
தமிழ்த் தாய் வாழ்த்தின் கடைசியில் ‘உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே’ என்று தமிழன்னையை வாழ்த்துவதாக முடியும். திரு.எம்.எஸ்.வி. உடலால் மறைந்திருக்கலாம். என்றும் இளமை ததும்பும் அவரது இசை மறையாது. அவரது இசையை நாளைய உலகமும்......
சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்தும்.
வாழ்க திரை இசை சக்ரவர்த்தியின் புகழ்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
NOW A FEW SONGS IN THIRAI ISAI CHAKRAVARTHI'S OWN VOICE:
https://www.youtube.com/watch?v=G6cg7V6TinM
NOW A FEW SONGS IN THIRAI ISAI CHAKRAVARTHI'S OWN VOICE:
https://www.youtube.com/watch?v=49Ua6vIWfSw
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் மறைவிற்கு என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம் சார்பாகவும் ஆழ்ந்த
அனுதாபங்கள்.
காலத்தால் அழியாத பாடல்களை இசைத்து செவிக்கினிய கீதங்கள் தந்த இசை மேதை. குறிப்பாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களுக்கு, அற்புதமாக இசைஅமைத்ததோடு , பல திரைப்படங்களுக்கு, டைட்டில் இசை, ரீ ரிகார்டிங் பணிகளில் தன் முழு திறமையைக் காட்டி ரசிகர்கள் மனம் கவர்ந்தவர்.
குலேபகாவலி,மகாதேவி, மன்னாதி மன்னன், திருடாதே ,
பாசம், பணத்தோட்டம், பெரிய இடத்து பெண், ஆனந்த ஜோதி, என் கடமை , தெய்வத்தாய் , பணக்கார குடும்பம், படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், பணம் படைத்தவன், அன்பே வா, சந்திரோதயம் பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா,
கலங்கரை விளக்கம், காவல்காரன், புதிய பூமி ,கண்ணன் என் காதலன், நான் ஆணையிட்டால்,ரகசிய போலிஸ் 115, குடியிருந்த கோயில், ஒளி விளக்கு , நம் நாடு, தேடி வந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், சங்கே முழங்கு,ராமன் தேடிய சீதை, உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும் , நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, இதயக்கனி, நீதிக்கு தலை வணங்கு, இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன்,மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகியன
அவர் திறமைகளுக்கு சான்றுகள்.
எத்தனை தலைமுறை ரசிகர்கள் தோன்றினாலும், மேற்குறிப்பிட்ட திரைப்படங்களின் பாடல்கள் அழியா புகழ் பெற்று ரசிகர்களின் நெஞ்சில் நிழலாடும்.
மெல்லிசை மன்னரின் திறமைகளை முழு அளவில் வெளிக்கொணர்ந்து
தனது திரைப்படங்களின் வெற்றிக்கு வழி வகுத்த பெருமை மக்கள் திலகம்
எம்.ஜி.ஆருக்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
உதாரணம் : படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை , ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா , கலங்கரை விளக்கம், காவல்காரன், குடியிருந்த கோயில், ஒளி விளக்கு,
நம் நாடு, எங்கள் தங்கம், ரிக்ஷாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், இதயக்கனி போன்றவை.
ஆர். லோகநாதன்.
NOW A FEW SONGS IN THIRAI ISAI CHAKRAVARTHI'S OWN VOICE:
https://www.youtube.com/watch?v=8zKNIWHvwWI
NOW A FEW SONGS IN THIRAI ISAI CHAKRAVARTHI'S OWN VOICE:
https://www.youtube.com/watch?v=zED0_k0Y9t4
மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , நாளை இரவு 7 மணிக்கு பல இனிமையான பாடல்கள் நிறைந்த, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
திரையுலகின் "சந்திரோதயம் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
NOW A FEW SONGS IN THIRAI ISAI CHAKRAVARTHI'S OWN VOICE:
https://www.youtube.com/watch?v=I0M6mgDA3nI
We shall also reach the same destination sooner or later and you shall continue to entertain us over there. Good Bye Thirai Isai Chakravarthi/Mellissai Mannar Sri. MSV.
MGR fans,
As you all agree, MSV music played major part in MGR success, both in films and politics. As 3 time CM, MGR could have influenced centre to get him major awards such as Padmashri, etc. Any idea why it never happened?
Shut all your "openings" and restrict your comments to NT thread only. We ignored you on the last occasion but now you will face the consequences.
Moderator : if you are not going to remove Posting No. 785 and ban the person, we shall retaliate. Now what are you going to say he is a big NT fan and is there in Mayyam for 100 years! Now who is creating trouble???
Rathathin Rathangale,
Please access NT thread Part 15 and see the comments posted by the same -------, then you will know his intentions.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று .
தமிழகத்தை 9 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்திய ஏழை பங்காளர் . எளிமைக்கு பெயர் போனவர் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய பிறந்த நாளில் பெருந்தலைவருக்கு பல சிறப்புகளை செய்து
பெருமைகள் சேர்த்தார் . மறக்க முடியாத தலைவர்களில் ஒருவர் பெருந்தலைவர் காமராஜர் .
http://i61.tinypic.com/11tndia.jpghttp://i62.tinypic.com/10hrccz.jpg
http://i57.tinypic.com/2pqpci8.jpg
Sent from my HM NOTE 1LTEW using Tapatalk
திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு,
பணி நெருக்கடியில் மறந்து விட்டேன். தங்களுக்கு என் உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். அடிக்கடி திரியில் பங்கேற்க வேண்டும் என்று அன்போடு கோருகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ஆதிக்கபுரியினரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றியவரும் ‘பச்சைத் தமிழர்’ என்று அய்யா பெரியாராலும், ‘குணாளா, குலக்கொழுந்தே’ என்று பேரறிஞர் அண்ணாவாலும், ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று புரட்சித் தலைவராலும் புகழப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில் அவரை தமிழர்கள் ஒவ்வொருவரும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பெருந்தலைவரின் புகழ் காக்க பொன்மனச் செம்மலாம் நம் புரட்சித் தலைவர் மேற்கொண்ட பணிகளை எடுத்துக் காட்டும் ஆவணங்களை பதிவிட்டுள்ள திரு.குமார் சாருக்கு நன்றிகள். மூத்த காங்கிரஸ் தலைவர்களாக விளங்கிய திரு.பா.ரா., பெரியவர் பக்தவச்சலம், அய்யா மூப்பனார், மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி, அய்யா ம.பொ.சி. ஆகியோரின் கருத்துக்கள் மனதை தொடுகின்றன.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Don't ask such silly questions addressing MGR FANS. Try to understand one basic concept that our beloved God M.G.R. stood on his own and at the cost of others he never attained success both in Tamil Cinema and in Politics. In fact, our beloved M.G.R.'s contribution was enormous towards the growth of D.M.K. next to the Great Leader PERARIGNAR ANNA.
If CMs can use their influence to get Awards, then numerous Padmashree, Padmabhushan awardees will be there in all the States in our country. I don't consider at this age and stage, to add something into your brain and make you to be aware of this fundamental truth.
If you write like this then people will have their own doubt about the Padmashree Award received by Nadigar Thilagam, with the influence of then Congress CM.
We know about you and your intention behind the question. Don't enter into our Thread by asking such meaningless question, at-least, henceforth.
அன்றைய கால கட்டத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் வயது என்ன மக்கள் திலகத்தின் அண்ணா திமுக வின் வயது என்ன கோவை சட்ட மன்ற தொகுதி மற்றும் மக்களவை தொகுதி வாக்குகள் சொன்ன நீங்கள் திண்டுக்கல் பாராளுமன்றத்தின் வாக்குகள் வித்தியாசத்தை ஏன் சொல்லவில்லை உங்கள் கட்சியின் சின்னம் ஏர் உழவன் சின்னம் புதிது என்றால் எண்களின் இரட்டை இல்லை சின்னம் பழைய சின்னம்மா ? இரட்டை இலை என்று சொல்லுவதற்கு கூட உங்களுக்கு எழுத மனம் வரவில்லை அந்த அளவுக்கு எதிரி முகாம் நடிகர் ஆட்சி பிடித்து விட்டார் என்ற பொறாமையே தெரிகிறது . தலைவர் 1977 மற்றும் 1980 களில் தன்னுடைய பெரும்பான்மையும் மக்களின் ஏகோபித்த ஆதரவினையும் பெற்றது உலகறிந்த உண்மை 1967-இல் தலைவர் திமுகவில் இருந்தார் 1971-இல் திமுகவில் இருந்தார் திமுக ஆட்சி பிடித்தது தலைவரை திமுக வெளியேற்றியது 1977 -1முதல் 1987 வரை திமுகவினால் ஆட்சி கைபற்றமுடியவில்லை
இரு காங்கிரஸ் வாக்குகள் சேர்த்தால் ஆட்சி பிடிக்கும் அளவுக்கு வரும் சொல்லும் நீங்கள் திமுக அண்ணா திமுக வாக்குகள் சேர்த்தால் உங்கள் நிலை ?
எதுவான போதிலும் எங்கள் புரட்சி தலைவர் ஆட்சி பிடித்தார் தொடர்ந்து மூன்று முறை முதல்வர் ஆன ஒரே நடிகர் என்ற பெருமை எங்களுக்கு எல்லாம் மேலும் அவர் தோற்றுவித்த கட்சி இன்றும் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது தேசிய அளவில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக இருபதற்கு மக்கள் மக்கள் திலகத்தின் மேல் வைத்து இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை தான் இதை காட்டுகிறது
Quote Originally Posted by Murali Srinivas View Post
நடிகர் திலகம் அவரின் கலைப்பயணம், அரசியல் ஈடுபாடு, பெருந்தலைவருடனான அரசியல் பயணம் போன்றவற்றை பற்றி திருச்சியை சேர்ந்த நண்பர் பாஸ்கர் அவர்களுடன் உரையாடுவது வழக்கம், அப்படி ஒரு முறை அண்மையில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தகவலை ஒரு நிகழ்வை அவர் நினைவு கூர்ந்தார். அன்றைய நாளில் அதை நானும் கவனித்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் ஒருமுறை அந்த நிகழ்வை ஆராயும்போது கிடைக்கும் பரிமாணங்கள் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியது.
மற்றொர்ன்றுமில்லை. 1977 ஜூன் மாதம் தமிழக சட்டமன்றத்திற்கான பொது தேர்தல் நடந்தது. அதன் முடிவகள் இன்னும் சரியாக சொல்லப் போனால் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளையும் அதன் சதவீத கணக்கையும் உற்று நோக்கினால் கிடைக்கும் உணர்வுகளைதான் குறிப்பிட்டேன். நாம் குறிப்பிடும் தேர்தல் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தேர்தல். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தேர்தல் என்று எளிதாக சொல்லி விடலாம் என்றாலும் கூட பல்வேறு கட்சிகள் தங்கள் வலிமையை உரைத்துப் பார்க்கும் ஒரு களமாகவும் விளங்கியது.
அப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அன்றைக்கு நான்கு முனை போட்டி நடந்தது. காங்கிரஸ், ஜனதா, திமுக, அதிமுக ஆகிய நான்கு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. அதிமுக கூட்டணியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்வர்ட் ப்ளாக் போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஒரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட சி.பா. ஆதித்தனாரை அதிமுக ஆதரித்தது..இந்திய கம்யூனிஸ்ட் [வலது] காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. ஜனதா கட்சியும் திமுகவும் தனியே போட்டியிட்டன.
ஜனதா என்பது பெயர் மாறிய ஸ்தாபன காங்கிரஸ் இயக்கம்தான் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் என்ற பெயரில் தமிழகத்தில் அன்று இயங்கிய கட்சியினரும் 95% ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வந்தவர்களே எனபதும் அனைவரும் அறிந்த விஷயம். பெருந்தலைவர் மறைவிற்கு பின் ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்திலிருந்து ஒரு பிரிவினர் விலகி இந்திரா காந்தி அம்மையார் தலைமையில் இயங்கிய கட்சிக்கு சென்றனர். 1969-ல் காங்கிரஸ் இயக்கம் பிளவுப்பட்டத்திலிருந்து 1975-ல் பெருந்தலைவர் மறைவு வரை தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு அனைவரும் அறிந்ததுதான், அந்த பிளவிற்கு பிறகு இந்திரா காங்கிரஸ் 1971 பொது தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 10 மக்களவை தொகுதியில் மட்டும் போட்டியிட்டது. அந்த வெற்றியை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அதன் பிறகு 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 11 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார் திரு கரு.சீமைச்சாமி. அதற்கு அடுத்த வருடம் 1974-ல் புதுவை சட்டமன்ற தேர்தலும் அதோடு சேர்ந்து கோவை மக்களவை தொகுதிக்கும், மேற்கு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்நேரம் தமிழக அரசியலில் ஒரு வரவேற்கத்தகுந்த மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. 5 வருடங்களாக பிரிந்து இருந்த காங்கிரஸ் இயக்கங்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தன.
பெருந்தலைவரும் அவர் தொண்டர்படையும் களத்தில் முழுமூச்சுடன் இறங்க, இந்திரா அம்மையார் மேல் தமிழகத்தில் நிலவிய நல்லெண்ணமும் ஒன்று சேர தேர்தல் முடிவுகள் அதேற்கேற்றார் போல் அமைந்ததன. கோவை சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் அரங்கநாயகம் வெறும் 531 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது.. கோவை மக்களவை தொகுதியில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமதி பார்வதி கிருஷ்ணன் 1,71,000 + சொச்சம் வாக்குளை பெற்றபோது ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் திரு எஸ்.வி. லட்சுமணன் [பின்னாட்களில் ஜனதா கட்சியின் தமிழக தலைவராகவும் செயல்பட்டவர்] 1,69,000 சொச்சம் வக்க்கள் பெற்று வெறும் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
புதுவை சட்டமன்றத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 30 இடங்களில் 12 இடங்களை அதிமுக கைப்பற்றியபோது காங்கிரஸ் இயக்கங்களும் அதே போல் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவிற்கு ஆதரவு கொடுக்க சுயேச்சை உறுப்பினர் ஒருவரின் ஆதரவையும் பெற்று அங்கே அதிமுகவின் முதல் அமைச்சரவை பதவியேற்க அதிமுகவின் முதல் முதலமைச்சராக திருஎஸ். ராமசாமி பொறுப்பேற்றார், . ஆனால் பட்ஜெட் பேப்பர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்னரே வெளியாகிவிட சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அதிமுக அரசு தோல்வியை தழுவ 21 நாட்களில் அரசு கவிழ்ந்தது.
புதுவை சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்தபோதுதான் பெருந்தலைவரும் அன்னை இந்திராவும் இருபுறம் நிற்க நடுவில் நடிகர் திலகம் நிற்கும் அந்த famous புகைப்படம் எடுக்கப்பட்டது
நாம் குறிப்பிட வந்தது அதல்ல. காங்கிரஸ் இயக்கங்கள் இணைந்து செயல்படுவதால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய நன்மைகளையும் இந்த இணைப்பை மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக கோவை மற்றும் புதுவை வாக்காள பெருமக்கள் அளித்துள்ள ஆதரவையும் சுட்டிக்காட்டிய நல்லோர்கள் இரண்டு இயக்கங்களும் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். .
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பெருந்தலைவரின் கருத்து உறுதியாக இருந்தது. இணைவதில் எந்த பிரச்னையுமில்லை. ஆனால் அந்த இணைப்பு அகில இந்திய அளவில் இருக்க வேண்டும். ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தின் அகில இந்திய மற்றும் மாநில தலைவர்களின் ஒப்புதலோடு அது நடைபெறவேண்டும் என்பதுதான் அது.
ஆனால் இந்திரா காந்தி அம்மையாரோ அதற்கு தயாராக இல்லை. காரணம் மற்ற மாநிலங்களில் அவர் கட்சிக்கு செல்வாக்கு நிறைய இருந்தது. அங்கெல்லாம் ஸ்தாபன காங்கிரஸ் தயவு தேவையில்லை என்று அவர் நினைத்தார். மேலும் ஸ்தாபன காங்கிரஸ் அகில இந்திய தலைவர்களை மீண்டும் சேர்க்க அவர் விரும்பவில்லை. தமிழகத்தில் அவர் கட்சியால் வேரூன்ற முடியவில்லை என்பதனாலும் பெருந்தலைவர் மேல் இருந்த சின்ன கரிசனத்தினாலும் தமிழகத்தில் மட்டும் இணைப்பு அல்லது கூட்டணி எனபதற்கு இந்திரா தயாராக இருந்தார். தமிழகத்திற்கு மட்டும் என்ற நிபந்தனையை பெருந்தலைவர் ஏற்க தயாராக இல்லை. எனவே அந்த முயற்சி முழுமை பெறாமல் போனது. அதற்கு அடுத்த வருடம் [1975-ல்] இந்திரா கொண்டுவந்த அவசர நிலை சட்டம், எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் கைது என்ற நடவடிக்கைகள் பெருந்தலைவரை மனதளவில் பெரிதும் பாதித்து அந்த இணைப்பு முயற்சி அடியோடு கைவிடபப்ட்டது. .
அதன் தொடர்ச்சியாக பெருந்தலைவர் உடல்நிலை மோசமடைந்து அவர் காலமானதும் அவர் தலைமையில் இயங்கியவர்களில் ஒரு பிரிவினர் இந்திராவின் தலைமையை ஏற்று அங்கே பொய் சேர்ந்ததும் நாம் அனைவரும் அறிந்த பலமுறை இங்கே விவாதித்த விஷயங்கள்தான்
இப்போது நாம் முதலில் பேசிய 1977 தேர்தல் முடிவுகளுக்கு வருவோம். தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது காங்கிரஸ் 27 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 இடங்களையும், ஜனதா 10 இடங்களையும் கைப்பற்றியது. அதிமுக சின்னத்தில் 130 பேர் வெற்றி பெற்றிருக்க [அதில் அதிமுக மட்டும் 126 என்பது என் நினைவு] திமுக 48 இடங்களில் வெற்றி பெற்றது.
வாக்குகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் காங்கிரஸ் சுமார் 30 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தது. [சரியாக சொல்ல வேண்டுமென்றால் 29,94,535 வாக்குகள், 17.5 சதவீதம்]. ஜனதா பெற்றிருந்த வாக்குகளோ 28,51,884. 16.7 சதவீதம். பெருந்தலைவரின் இரண்டு தொண்டர்படைகளும் இணைந்து பெற்ற வாக்குகள் 58,46,419. சதவீத கணக்கில் சொன்னால் 34.2%..அன்றைக்கு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த அதிமுக பெற்ற வாக்குகளே 51,94,876.தான். [30.4%].
ஒரே இயக்கமாக இருந்திருந்தால் யார் கண்டது? 1967-ல் பறி கொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியிருக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் திலகத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் மக்களை ஈர்க்க கூடிய தலைவர்கள் என்று யாரும் இல்லை. [இந்திரா பிராச்சரதிற்கு வரவில்லை]
ஜனதா கட்சிக்கும் மக்கள் மத்தியில் அறிமுகமான தலைவர்கள் [பா.ரா., குமரி அனந்தன்] இருந்தார்களே தவிர கரிஸ்மாடிக் தலைவர்கள் கிடையாது.
1977 பாராளுமன்ற தேர்தலில் அகில இந்தியாவெங்கும் ஜனதா கட்சி வேட்பாளர்கள் ஏர் உழவன் சின்னத்தில் போட்டியிட்டபோது தமிழகத்தில் மட்டும் ஸ்தாபன காங்கிரஸின் ராட்டை சுற்றும் பெண் சின்னத்தை பயன்படுத்தினர். எனவே மூன்று மாதங்களில் வந்த சட்டமன்ற தேர்தலில் ஏர் உழவன் சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதே ஒரு சவாலாக இருந்தது.
முக்கியமான விஷயம் பெருந்தலைவர் உயிருடன் இல்லை. அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவர் இல்லாமல் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல்.
அவர் தேர்தல் களத்தில் இல்லாமலேயே இத்தனை லட்சம் ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன என்று சொன்னால் காலம் அவரை நம்மிடமிருந்து பிரிக்காமல் இருந்திருந்தால் அவர் தலைமையேற்று தேர்தலை சந்தித்திருந்தால் மீண்டும் அந்த பொற்கால் ஆட்சி மலர்ந்திருக்கலாம். நமக்கு கொடுத்து வைக்கவில்லை.
அவர் மறைந்து விட்டார் என்ற யதார்த்ததை மனதில் கொண்டால் கூட இத்தனை லட்சம் வாக்குகள் கிடைத்தது என்பது மெய்தானே. அவர் மறைவிற்கு பின்னால் யாரும் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறாமல் கட்டுக்கோப்பாக நடத்தி சென்றிருந்தால் 1977 மீண்டும் தேசிய ஆட்சியை கொண்டு வந்திருக்கும். இதைதான் பலமுறை நான் எண்ணி பார்ப்பது. நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது.
அவர் மறைவிற்கு பின் காங்கிரஸ்-ஐ தமிழகத்தில் வழி நடத்தி சென்றவர்கள் பல சமரசங்களை தொடர்ந்து செய்துக் கொண்டே வந்ததால்தான் இன்றைக்கு இந்த நிலைமை.
ஒப்பற்ற ஆட்சி வழங்கிய பெருந்தலைவரின் பிறந்தநாளான இன்று இதையெல்லாம் நினைத்து வேதனைதான் பட முடிகிறது. மீண்டும் அப்படி ஒரு மனிதனை காலம்தான் நமக்கு கொடையாய். தர வேண்டும்.
இந்த முடிவுகள் அடங்கிய விக்கி பக்கத்திற்கான சுட்டி
https://en.wikipedia.org/wiki/Tamil_...election,_1977.
அன்புடன்
அன்பர்களே மாற்று முகாம் நண்பர் முரளி ஸ்ரீநிவாஸ் பதிவுக்கு உங்கள் பதிலடி பதிவுகளை பதிவு செய்யுங்கள்
Yukesh Babu Sir,
Your one simple response "இரு காங்கிரஸ் வாக்குகள் சேர்த்தால் ஆட்சி பிடிக்கும் அளவுக்கு வரும் சொல்லும் நீங்கள் திமுக அண்ணா திமுக வாக்குகள் சேர்த்தால் உங்கள் நிலை?" is enough.
If I am going to compare then I would have compared the way you said AIADMK [ put together] and Congress [A to Z put together]. Then the question of "IF" does not arise. What has not happened in TN from 1967 [ Congress ruling party] is not possible in TN as of today.