-
நடிகப் பேரரசர்,
ஏற்கெனவே சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் ராஜா படத்தின் வசூல் மர்மம் பற்றி கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு சிவாஜி கணேசன் ரசிகர்கள் பதில் சொன்னதாக நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். விஷயம் என்னவென்றால் இவ்வளவு காட்சி ஹவுஸ்புல் ஆனால், இவ்வளவு தொகைதானே வரவேண்டும். ஆனால், கூடுதலாக இவ்வளவு தொகை எப்படி? என்று நீங்கள் கேட்ட கேள்விக்கு 11 சிறப்புக் காட்சிகள் கூடுதல் என்று கணக்கு காட்டியிருக்கிறார்களாம். சரிதான். ஏற்றுக் கொள்ள வேண்டிய கணக்குதான். ஆனால் வெறும் 50 நாள் கணக்கை அதுவும் தேவி பாரடைஸ் அரங்கில் மட்டும் காட்டி மொத்தமாக ரிக்*ஷாக்காரனை விட ராஜா திரைப்படம் அதிக வசூல் செய்த படம் என்று காட்ட முனைந்திருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன?.. பார்ப்போம்.
நீங்கள் போட்ட போட்டில் அவர்களிடம் இருந்து ஒரு உண்மை வெளிவந்துள்ளது. அதாவது, ரிக்க்ஷாக்காரன் படத்துக்கு பிறகு 1972 ம் ஆண்டில் ஜனவரியில் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தினார்கள் என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்படி டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தியதால்தான் தேவி பாரடைஸ் அரங்கில் 50 நாட்களில் ரிக்க்ஷாக்காரனைவிட ராஜா திரைப்படம் ஒரு சில ஆயிரங்கள் கூடுலாக வசூல் பெற்றுள்ளது என்ற உண்மையை அவர்களை அறியாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். படிப்பவர்கள் நன்றாக கவனிக்கவும். தியேட்டர் டிக்கெட் கட்டணம் உயர்வுதான் முதல் 50 நாட்களில் ராஜா படத்தின் ஓரளவு கூடுதல் வசூலுக்கு காரணம். இன்னொன்றையும் முக்கியமாக கவனியுங்கள். அப்படி கட்டணம் உயர்த்தப்பட்டும் கூட 50 நாட்களில் மட்டுமே ராஜா திரைப்படம் தேவி பாரடைஸ் அரங்கில் மட்டும் கூடுதல் வசூல் பெற்றுள்ளது. 75 மற்றும் 100 நாட்களில் ரிக்க்ஷாக்காரனை ராஜா-வால் நெருங்க முடியவில்லை. அப்படி நெருங்கியிருந்தால் சும்மா இருப்பார்களா? இதோ ஆதாரம் என்று குதிக்க மாட்டார்களா?
அதுவும் இந்த 50 நாள் வசூல் கூடுதல் கணக்கு வெறும் தேவி பாரடைஸ் தியேட்டரில் மட்டும்தான். ஒட்டுமொத்தமாக சென்னையில் ரிக்க்ஷாக்காரன் தேவி பாரடைஸ், ஸ்ரீகிருஷ்ணா, சரவணா தியேட்டர்களில் முதல் 50 நாளில் பெற்ற வசூலுக்கும் ஒட்டு மொத்தமாக சென்னையில் ராஜா திரைப்படம் தேவி பாரடைஸ், அகஸ்தியா, ராக்ஸி தியேட்டர்களில் முதல் 50 நாளில் பெற்ற வசூலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இரண்டு படங்களின் 50 நாள் விளம்பரத்தில் உள்ள தொகையை கூட்டிப்பார்த்தால் இந்த உண்மை தெரியும்.
இடமின்மையால் தொடர்ச்சி அடுத்த பதிவில் ............
-
என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது
பொற்கால ஆட்சி வழங்கிய பொன்மனச் செம்மல் அவர்களை “இதயக்கனி” என்று போற்றிய பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளாகிய இன்று, அவரின் பெருமைகள் பற்றியும், அவர் உருவாக்கிய தி.மு.க.வையும் அதன் சின்னமாகிய உதயசூரியனையும் பிரபலப்படுத்தும விதமாக நமது மக்கள் திலகம் அவர்கள் தனது திரைக் காவியங்கள் மூலமும். அரிசயல் நிகழ்வுகள் மூலமும் எப்படியெல்லாம் நினைவு கூர்ந்தார் என்பதை விளக்கும் பதிவு இது :
1. திரைக்காவியம் : நாம்
அண்ணா வாழ்கவே, குமரஅண்ணா வாழ்கவே!
2. திரைக்காவியம் : பெற்றால்தான் பிள்ளையா
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்
3. திரைக்காவியம் : நம் நாடு
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
4. திரைக்காவியம் : எங்கள் தங்கம்
சந்தனப் பெட்டியில் உறங்குகிறார் அண்ணா – சரித்திரப் புகழுடன் விளங்குகிறார்
5. திரைக்காவியம் : உரிமைக்குரல்
அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுவே
6. திரைக்காவியம் : நேற்று இன்று நாளை
நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்
7. திரைக்காவியம் : பல்லாண்டு வாழ்க
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
8. திரைக்காவியம் : பணம் படைத்தவன்
தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்
9. திரைக்காவியம் : இதயவீணை
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்
10. திரைக்காவியம் : நவரத்தினம்
உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்
11. திரைக்காவியம் : மீனவ நண்பன்
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
12. திரைக்காவியம் : நினைத்ததை முடிப்பவன்
என் அண்ணாவை ஒருநாளும் என்னுள்ளம் மறவாது
13. திரைக்காவியம் : கண்ணன் என் காதலன்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
14. திரைக்காவியம் : புதிய பூமி
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை
இவைகள் தவிர --------
1. “விக்கிரமாதித்தன்” திரைக் காவியத்தில் தி.மு.க. வின் சின்னமான “உதய சூரியனை” தனது நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்வார்.
2. “சக்ரவர்த்தி திருமகள்” காவியத்தில் தந்து கதாபாத்திரத்தின் பெயருக்கு “உதய சூரியன்” என்று சூட்டி மகிழ்ந்தார்.
3. “நல்லவன் வாழ்வான்” திரைக் காவியத்தில் “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் என்ற பாடல் காட்சியின் இடையே “உதய சூர்யன் எதிரில் இருக்கையில் உள்ளத் தாமரை மலராதோ, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இருண்ட பொழுதும் புலராதோ என்ற வரிகள் ஒலிக்கும்.
4. “விவசாயி” திரைக் காவியத்தில்,
a) இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி, எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி என்ற பாடல் வரிகளில் இறுதியாக பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி என்று காட்சி வரும் போது, தி.மு.க. வின் கொடியை காண்பித்து மகிழ்வார்.
b) அதே பாடல் வரிகளில், பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி என்ற வார்த்தை வரும் பொழுது, பேரறிஞர் அண்ணா அவர்கள் திரு வுருவமும் காண்பிக்கப் படும்.
5. “எங்கள் தங்கம்” திரைக் காவியத்தில் “கேளம்மா கேளு, நான் காஞ்சி புரத்தாளு” என்று பதில் சொல்லி பரவசம் அடைவார்.
6. நரசிம்ம பல்லவர் கதையை விளக்கும் காவியத்துக்கு “காஞ்சித் தலைவன்” என்று பெயரிட்டு பேருவகை கொண்டார்.
7. “ரிக்ஷாக்காரன்” திரைக் காவியத்தில் இடம் பெற்ற “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு” என்ற பாடலில் அறிஞர் அண்ணாவின் புகைப்படம் அருகே நின்று கொண்டு பாடுவார்.
8. “தெய்வத்தாய்” திரைக் காவியத்தில் இடம் பெற்ற “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்ற பாடலையை, ‘அண்ணா” என்ற மூன்று எழுத்தையும், தி.மு.க. என்ற மூன்று எழுத்தையும் குறிக்கும் விதமாக பாடப் பட்டிருக்கும்.
9. “நான் ஆணையிட்டால்” திரைக்காவியத்தில், “பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே” பாடலின் இடையில் வரும் வரிகளாக “உதய சூரியனின் நல் வரவு” என்று ஒலிக்கும்.
10. “இதயக்கனி” திரைக் காவியத்தில், புரட்சித் தலைவரை ‘இதயக்கனி’ என்று அழைத்ததற்கான விளக்க உரையோடு அறிஞர் அண்ணா பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
11. “அன்பே வா” திரைக் காவியத்தில், “புதிய வானம் புதிய பூமி” என்ற பாடல் வரிகளின் இடையே சூரியனின் உதயத்தை காண்பித்து, “உதய சூரியனின் பார்வையிலே; உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்று பாடி உவகை அடைவார்.
12. “எங்க வீட்டு பிள்ளை” திரைக் காவியத்தில், “நான் ஆணையிட்டால்’ என்ற பாடலின் இடையே வரும் வரிகளாக, “என் தலைவன் உண்டு, அவன் கொள்கை உண்டு” என்று இடம் பெற்றிருக்கும்.
13. “என் அண்ணன்” திரைக் காவியத்தில், “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” என்ற பாடல் காட்சியில் குதிரை வண்டி ஒட்டிக் கொண்டு வரும் பொழுது பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையை வணங்குவது போல் காட்சி இடம் பெறும்.
14. “கணவன்” காவியத்தில், “அடி ஆத்தி ஆத்தி” என்ற பாடல் காட்சியின் நடுவில், “அன்பு வழி நடந்தவனோ நாட்டினை பிடித்தான்” என்ற வரி வரும் போழ்து, அறிஞர் அண்ணாவின் பொம்மை காண்பிக்கப்படும். அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது 06-03-1968. இக்காவியம் குறுகிய இடைவெளியில் 15-8-1968ல் வெளியாகி, இந்த பாடலின் வரிகள் இடம் பெற்றது தனிச் சிறப்பு. இது கவனத்தில் கொள்ளத் தக்கதும் கூட.
15. “அன்னமிட்ட கை” திரைக் காவியத்தை, வெள்ளிக்கிழமையாக வரும் அண்ணா பிறந்த நாளன்று 1972ல் அதாவது 15-09-1972 அன்று வெளியிடச் செய்தார்.
16. “ஒரு தாய் மக்கள்” என்ற திரைக் காவியத்தின் “இங்கு நல்லாயிருக்கனும் எல்லோரும்’ என்ற பாடலின் இடையே வரும் வரிகளாக, கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற மேனியைப் பாரு” என்று இடம் பெற்றிருக்கும்.
17. அறிஞர் அண்ணாவின் உருவம் பொதித்த கட்சிக் கொடியை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் வடிவமைத்து, அதனை “உலகம் சுற்றும் வாலிபன்” திரைக் காவியத்தில், காட்டி புளகாங்கிதம் அடைந்தார்.
அரசியல் என்று எடுத்துக் கொண்டால், தான் தோற்றுவித்த இயக்கத்துக்கு அறிஞர் அண்ணாவின் பெயரை வைத்து, கட்சியின் கோடியில் அவரின் உருவத்தை பதிக்கச் செய்து, கட்சிக் கொள்கைக்கு “அண்ணாயிசம்” என்று பெயர் வைத்து, தனது உரையை முடிக்கும் போழ்து “அண்ணா நாமம் வாழ்க” என்று கூறி, பெருந்தன்மையின் சிகரம் பேரறிஞர் அண்ணாவின் பெருமைகளை மேம்படுத்துவார். அது மட்டுமல்லாமல், தமிழக முதல்வராக பொறுப்பேற்று மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயலாற்றும் பொழுதும், இது “அண்ணாவின் அரசு” என்று கூறித்தான், பெருமிதம் கொள்வார்.
இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம் ..... அண்ணாவின் பெருமைகளை புரட்சித் தலைவர் அவர்கள் பறை சாற்றியது பற்றி !
பேரறிஞர் அண்ணா அவர்களின் உண்மைத் தம்பி, அருமைத் தம்பி, அன்புத் தம்பி, அவரின் இதயக் கனி நம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். தான். .........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*28/08/20அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
நம்பிக்கை விதையாக, உற்சாக ஊற்றாக, நிழல் தரும் மரமாக நெஞ்சமெல்லாம் இனிக்கிற நினைவுகளாக மக்கள்* திலகம் எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பூரித்து போகின்ற மனங்கள் பெருகி கொண்டே இருக்கிறார்கள் .
மும்பை தாராவி புலவர் ராமச்சந்திரன், திருச்சி மிளகு பாறை மஜீத் போன்றவர்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியை பற்றி* சொல்லி சொல்லி மகிழ்கிறார்கள் . அன்பே வா படத்தில் வரும் பாடலை கம் செப்டம்பர் பாடலுடன் ஒப்பிட்டு சொன்னீர்களே அது அபாரம் என்கிறார்கள் .அப்படி இன்னமும் அவரை ரசிக்கின்ற ரசிகர்களாக ,அவரை நேசிப்பவர்களாக, அவரை உள்ளத்தில் ஏந்தி கொள்பவர்களாக லட்சக்கணக்கான நபர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு சாட்சியாக பல்வேறு விஷயங்களை நாம் தெரிவித்து வருகிறோம்.* காரணம் எம்.ஜி.ஆர். என்பவர் வெறும் நடிகர் மட்டுமல்ல .ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. ஒரு நம்பிக்கை நட்சத்திரம் .ஒரு காலத்தில் வளர்ச்சியடையாத சென்னையில் மாதம் ரூ.15/- க்கு வாடகை வீட்டில் குடியிருந்த ஒரு எளிய, சாதாரண, சாமான்ய மனிதர் தனது வாழ்க்கையின் இறுதி காலத்தில் தமிழகத்தையே ஆளும் முதல்வராக வரக்கூடிய வல்லமை பெற்றார் .வாய்ப்பை பெற்றார், மக்கள் அவருக்கு அப்படி ஒரு உன்னத வாய்ப்பை அளித்தார்கள் என்றால் அவர் என்னவிதமாக வாழ்ந்தார் ,எப்படி வாழ்ந்தார்.எப்படி மக்களின் உள்ளங்களை அறிந்து கொண்டார் என்பதெல்லாம் நமக்கு கிடைத்த பாடம் ,படிப்பினை, அவர் ஒரு பல்கலை கழகம் .அந்த பல்கலை கழகத்தில் உள்ள பாடங்களை சகாப்தம் நிகழ்ச்சியில் தொடர்ந்து பார்ப்போம் .
திருப்பதிசாமி என்கிற நடிகர் பெயர் இல்லாமல் எம்.ஜி.ஆர். படங்கள் இல்லை என்கிற காலம் உண்டு . அப்படி அவரது பெரும்பாலான படங்களில் , மன்னராகவோ, மந்திரியாகவோ,நீதிபதியாகவோ, காவல்காரராகவோ, மருத்துவராகவோ, இன்ஸ்பெக்டராகவோ, காவலராகவோ,,அடியாளாகவோ* வேடங்கள் ஏற்று நடித்தவர் .அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர் .உற்ற நண்பனாகவும் இருந்தார் . எம்.ஜி.ஆர். நாடக குழுவில் உறுப்பினராக இருந்தவர் . எம்.ஜி.ஆர். சினிமாவில் பிரபலம் ஆகுவதற்கு முன்பே தொடர்பில் இருந்தவர் . எம்.ஜி.ஆரின் நட்புக்கு இலக்கணமாக இருந்தவர் . திருப்பதிசாமிக்கு*ஐந்து குழந்தைகள் .அவர்களை படிக்க வைக்கவும் ,திருமணம் செய்து வைக்கவும் அனைத்து உதவிகளை எம்.ஜி.ஆர்.தான் செய்தார் . திருப்பதிசாமியின் குடும்பநலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அனைத்து விஷயங்களிலும்*எம்.ஜி.ஆர். பங்கேற்று* அவரது குடும்ப விளக்கை ஏற்றி வைத்தார் . இப்படி பலரது குடும்ப பொறுப்புகளை தானே வலியவந்து அவர்களது சுமைகளை ஏற்று சுமந்தவர் எம்.ஜி.ஆர். என்பது இந்த கால நண்பர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .
நடிகர் தங்கவேலு அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்திருப்பார் . அப்போது வேலை தேடி வந்த திரு.ரவீந்தர் ( இவர் ஒரு இஸ்லாமியர் .பின்னால் இவர் பெயரை ரவீந்தர் என எம்.ஜி.ஆர். மாற்றி வைக்கிறார் )தங்கவேலுவை தேடி வருகிறார் . தங்கவேலு ஒரு சிபாரிசு கடிதம்*எழுதி கொடுத்து அவரை எம்.ஜி.ஆரை சந்திக்க வைக்கிறார் . ரவீந்தர் எம்.ஜி.ஆரை சந்தித்ததும், உங்களுக்கு என்ன தெரியும், என்ன அனுபவம் இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். கேட்க, தான் எழுதிய நாடக கதையை காண்பிக்கிறார் .அப்போது உங்கள் பெயரை ரவீந்தர் என்று மாற்றி வைக்கிறேன் என்கிறார் . அந்த ரவீந்தர் எம்.ஜி.ஆர். குறித்து ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார் .கோடி மாலைகள் தாங்கிய எம்.ஜி.ஆர்.* தோள்கள்**என்ற சிறப்பான நூலையும் எழுதியுள்ளார் .பல காலம் எம்.ஜி.ஆருடன் பயணித்தவர் ரவீந்தர் . தன்னை நம்பி வந்தவர்களின் நலத்தில், வளர்ச்சியில்,முன்னேற்றத்தில்* மிகுந்த அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.என்பதற்கு பல சான்றுகள் கூறலாம் . அதனால்தான் நாடோடி மன்னன் படத்தில் அதற்கேற்றாற் போல ஒரு வசனம் இருக்கும் . என்னை நம்பாமல் கெட்டவர்கள்* பலருண்டு .நம்பி கெட்டவர்கள் இன்றுவரை இல்லை .அந்த வசனத்திற்கு அன்றும் சரி, இன்றும் சரி,பலத்த கைதட்டல்கள்*அரங்குகளில் எதிரொலிக்கும் .
எம்.ஜி.ஆர். விழுப்புரம் பக்கம் செல்லும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்திலபெட்ரோல் பங்கில்**பெட்ரோல் போடுவதற்கு*காரை நிறுத்திவிட்டு ,அந்த ஆறாவது மர நிழலில் ஒரு மூதாட்டி வடை விற்கிறார் .அவரிடம் சென்று ரூ.200 /- கொடுத்து வாங்கி வாருங்கள் , மீதி பணம் திரும்ப வாங்க வேண்டாம் .எவ்வளவு வடைகள் தருகிறார்களோ* அதை மட்டும் வாங்கி வாருங்கள் என்று சொல்லி அனுப்புகிறார் உதவியாளரிடம் . ஆனால் அந்த மூதாட்டியிடம் மீதி பணம் தருவதற்கு சில்லறை இல்லை . எம்.ஜி.ஆர். எப்போது இந்த பக்கம்* சென்றாலும் இதே போல வடைகள் வாங்கிவிட்டு மீதி பணம் வாங்க வேண்டாம் என்று சொல்கிறார் .இது தொடர்கதை ஆகிறது . இந்த மூதாட்டிக்கு சந்தேகம் . இவர்கள் யார் என்று தெரியவில்லை .மீதி பணம் வாங்காமல் செல்லுகிறார்கள் என்று அருகில் உள்ள நபர்கள், டிரைவர்களிடம் விசாரிக்கிறார் .ஆனால் முறையான, பதில், விடை கிடைக்கவில்லை .ஒருநாள் தட்டிலே வடைகள் வைத்துவிட்டு ஒரு ஓரமாக நின்று அந்த மூதாட்டி நோட்டமிட்டபடி இருந்துள்ளார் . அப்போது எம்.ஜி.ஆரின் கார் அருகிலுள்ள பெட்ரோல் பங்க் முன்பு நிற்பதையும் அவரின் உதவியாளர் தட்டில் பணம் வைத்துவிட்டு வடைகள் எடுத்து செல்வதையும் பார்த்துவிட்டு, பின்னாலேயே ஓடி வந்து எம்.ஜி.ஆரிடம்,ஐயா ,தர்மபிரபுவே, நீங்கள்தான் எனக்கு கணக்கில்லாமல் பணம் கொடுத்து ,இந்த ஏழையின்* வடைகள் வாங்குகிறீர்கள் என்பது எனக்கு இத்தனை நாட்கள் தெரியாமல் போனது .*நீங்க நல்லா இருக்கோணும் என்கிறார் .அதாவது உங்களுக்கு அன்பளிப்பாகவோ, நன்கொடையாகவோ பணம் கொடுத்தால் ,உங்கள் உழைப்பை மதிக்காதது போல் ஆகிவிடும் என்றுதான் பணம் கொடுத்து வாங்கினேன்,நீங்கள் தவறாக எடுத்து கொள்ளக்கூடாது* என்று கூறி மேலும் கொஞ்சம் பணம் கொடுத்தார் . வறியோர்கள், முதியோர்கள் ,ஆதரவற்றோர்களை காப்பாற்ற* இது போன்ற உதவிகள் அவ்வப்போது செய்து வந்தது மட்டுமில்லாமல், தான் முதல்வரானதும் ,முதியோர்,நல உதவி திட்டம் ஒன்றை அரசு சார்பில் தொடங்கி வைத்தார் .இந்த திட்டம் பற்றி 1958ல் வெளிவந்த நாடோடி மன்னன் படத்தில் அறிவிக்கும் பல திட்டங்களில் இதுவும் இடம் பெற்றிருக்கும் . என்பது குறிப்பிடத்தக்கது ..*மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.ஆடி வா ,ஆட பிறந்தவளே ஆடி வா - அரச கட்டளை*
2.தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை- நான் ஆணையிட்டால்*
3.எம்.ஜி.ஆர்.-திருப்பதிசாமி உரையாடல் - தேடிவந்த மாப்பிள்ளை*
4.ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் -குடியிருந்த கோயில்*
5.எம்.ஜி.ஆர். -ராமதாஸ் உரையாடல் - ரிக்ஷாக்காரன்*
6.நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆர்.*.*
-
சொல்வதெல்லாம்
உண்மை .
______________________
மக்கள் திலகத்தின் படங்களில் 99 சதவீதம் மறு வெளியிட்டில் தான் பார்த்தேன் .
படம் பார்க்க பெற்றோரகளிடம் கடும் தவம் புரியவேண்டும் .
முருகன் திரையரங்கம் வீட்டின் அருகில் இருந்ததால் இத் திரையரங்கில் மட்டும் பெற்றோர்கள் கருணை கண் திறப்பர் .
பள்ளிக்கு செல்லும் பொழுது என் தலையாய கடமை முருகன் திரையரங்கில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டில்ஸ்களை பார்ப்பது .
அப்படி காணும் பொழுது கன்னித்தாய் படத்தின் ஸ்டில்ஸ் ஒட்டப் பட்டிருந்தது .
என் மூளை சுறுசுறுப்பு அடைந்தது .
சொன்னாலும் புரியாது
சினிமா பார்க்க போடும் திட்டங்கள் .
திட்டம் நிறைவேறியதால் படம் பார்க்க புறப்பட்டேன் .
டிக்கட் 56 பைசா என்னிடம் 65 பைசா இருந்தது என்னுள் ஒரு திமிர்.
சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த கன்னித்தாய் படத்தின் போஸ்டர்களை பார்த்தவாறே பெருமிதத்துடன் நடந்தேன் .
சம்பரதாய தள்ளு முல்லுகளை அனபவித்து ஒரு வழியாக கன்னித்தாய் படத்தினை காண ஆயுத்தமானேன் .
படம் போட்டவுடன் விசில் சத்தம் அதிரந்தது .
ஆனால் படம் திரையிட்டது தனிப்பிறவி !
அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் முகத்தில் ஒருவருக்கும் கேள்வி குறிகளோ ? ஆச்சரியக்
குறிகளோ தென்படவில்லை !
மக்கள் திலகம் ஓர் அதிசயமே !
எங்களுக்கு தேவை அவர் முகம் மட்டுமே சொல்லாமல் விளக்கிய ரசிகர்கள் கூட்டம் !
நான் சொன்னதெல்லாம் உண்மை .......... Hd.,
-
தலைசிறந்த மாமனிதரின் கொள்கைப்பற்று
********************
நான் எனக்கென்று எதையும் சேமித்து வைக்கும் எண்ணம் கொண்டவன் கிடையாது....
எதாவது தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும் கிடையாது.
உழைக்கின்றேன்....
வறுமையில் வாடுபவர்களுக்கு அதன் மூலம் என் பணியை செய்கின்றேன்.
நான் மனிதர்களை மட்டும் பார்க்கும் ஒரு சாதாரண மனிதனாக
வாழ்கின்றேன்.
எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தால் அது என் தவறாகும்.
(புரட்சியார் விதைத்த அழமான கருத்தில் இருந்து..... 1972)
"தியாகத்தையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்த புரட்சித்தலைவரின் வழியில்".....யாம்.........ur
-
"இதயக்கனி": வண்டு துளைத்தது என்று துரோகிகளால் தூக்கியெறியப்பட்ட கனி எதிரிகளின் ஊழல் கோட்டையை
தகர்த்து. ஊழல் பெருச்சாளிகளை
விரட்டி விட்டு மக்கள் ஆதரவு பெற்ற
நல்லாட்சியை அமைத்துக் கொடுத்தது. அரசியலில் மட்டுமல்ல கலைத்துறையிலும் 1975 ம் ஆண்டு திரையிட்ட அநேக படங்களை தூக்கியெறிந்து முதல் இடம் பெற்ற படம்தான் "இதயக்கனி".
எதிர் முகாமிலிருந்து வந்த ஒரு பழம் பெரும் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் அவர்கள் "இதயக்கனி"யின் வெற்றி விழாவில் எம்ஜிஆரின் ஒவ்வொரு படமும்
மற்ற நடிகர்களின்
25 படங்களுக்கு சமம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டதை
திரைப்படத்துறையை சார்ந்த அனைவரும் வரவேற்றார்கள்.
அந்த தயாரிப்பாளரும் பல படங்கள் தயாரித்து கையில் உள்ள சில்லரையை இழந்து ஒரு படமாவது எம்ஜிஆரை வைத்து தயாரித்திருக்கலாமே என்ற ஏக்கத்தில் பேசியது, திருடனுக்கு தேள் கொட்டியது போல மாற்று அணி ரசிகர்கள் வாய் பேச முடியாமல் மெளனம் காத்தனர். இன்று அவர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் சிவாஜி படத்தின் வசூலாக புலம்பி வருகின்றனர். இவர்களுக்கு யார் இந்த கற்பனை வசூலை தியேட்டர் பங்கு, விநியோகஸ்தர் பங்கு என பிரித்து கொடுக்கிறார்களா? தெரியவில்லை.
இதற்கான தொழிற்கூடத்தை கண்டு பிடிக்க வேண்டும்.
சிவாஜியால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களிடம் அவர்களை ஒப்படைத்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.அதிலும் ஒரு உளறுவாயன் சிவாஜி நடித்த படங்கள்தான் ஒரு ஆண்டில் 60 சதவீத வசூல் கொடுக்கிறதாம். மற்ற நடிகர்களின் எல்லா படங்களும் சேர்ந்தே 40 சதவீத வசூல்தான் கொடுக்கிதாம். இப்படி கீழ்ப்பாக்க கேஸ்கள் நிறைய அலைகிறது. 1975 ல் வெளியான மொத்த படங்கள் 59
என்கின்றன புள்ளி விபரங்கள். அதில் எம்ஜிஆர் நடித்த படங்கள் 4.
"நினைத்ததை முடிப்பவன்" "நாளைநமதே" "இதயக்கனி" "பல்லாண்டு வாழ்க" ஆகியவை. முக்தா சீனிவாசன் கூறிய படி "இதயக்கனி" மட்டுமே 25 படங்களின் வசூலுக்கு சமம் என்றால் மற்ற எம்ஜிஆர் படங்கள் எல்லாம் சேர்த்து சுமார் 80 சதவீதத்துக்கும் மேலே வசூல் செய்தால் மீதம் இருக்கின்ற 20 சதவீதத்தில் பாவம் கணேசனின் பங்கு என்ன? என்று முடிவு செய்ய முடியும். அதனால்தான் சிவாஜி படம் எடுப்பவர்கள் சீக்கிரம்
i p கொடுத்து விடுகிறார்கள் போலும்.
அப்படிதான் தற்போது "வெள்ளை ரோஜா" என்று புலம்பி வருகின்றனர்."வெள்ளை ரோஜா"வில் யார் நடித்தாலும் அது ஹிட் ஆகியிருக்கும். "போஸ்ட் மார்ட்டம்" என்ற சூப்பர் ஹிட் அடித்த
மலையாளப் படத்தின் ரீமேக்தான் "வெள்ளை ரோஜா" அது எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்ற படம்.
ஏதோ சிவாஜி நடித்ததில் ஹிட் ஆன மாதிரி ரீல் விடுகிறார்கள். அதிலும் அவர் மெயின் ரோல் கிடையாது.
சிவாஜியை போல் மிகையில்லாமல் அவரது மகன் பிரபு நடித்திருப்பார்.
அவர் பெரியப்பா, எம்ஜிஆரின் ரசிகர் அல்லவா? அவர்தான் கதாநாயகன், நாயகி அம்பிகா,ராதா.
இது போன்ற இளம் நாயகர்களின் தேரோட்டமாக வந்து "இதயக்கனி" டைரக்டர் a.ஜகந்நாதன் இயக்கத்தில்
வெளியான படம். படத்தின் வெற்றிக்கு சொந்தக்காரர் பிரபு அம்பிகா ஜோடி. இதில் குணசித்திர வேடத்தில் நடித்த சிவாஜி என்ன செய்தார் என்று தெரியவில்லை.
வேறு நல்ல நடிகர்களை கூட நடிக்க வைத்து படம் வெற்றியடைந்தால் தன்னால்தான் என்று சிவாஜி ரசிகர்கள் கூவுவது வழக்கமாகிவிட்டது. படம் தோல்வியடைந்தால் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
மகனாக இருந்தாலும் அதேகதிதான்.
இப்படி அடுத்தவர்கள் வெற்றியில் குளிர்காய்வது சிவாஜி ரசிகர்களுக்கு வாடிக்கை. அது பிரபுவின் வெற்றிதான் என்பதை
அடுத்தடுத்த படங்களில் நிரூபித்தார்.
அதுவும் "சின்னதம்பி"யின் வெற்றி சிவாஜியால் நினைத்துகூட பார்க்க
முடியாத ஒன்று. அதேபோல் சிவாஜியும் தனது அடுத்தடுத்த படுதோல்வி படங்கள் அவருக்கும் "வெள்ளை ரோஜா"வின் வெற்றிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபித்தார்.
"இரு மேதைகள்" "படிக்காத பண்ணையார்"
"எமனுக்கு எமன்""
(தயாரிப்பாளர்களுக்கு) "நாம் இருவர்" இன்னும் இது போல
பல படங்கள் தயாரிப்பாளர்களை பார்சல் பண்ணியதை மறக்க முடியுமா? . தோல்வி ஒன்றா! இரண்டா! எடுத்துச் சொல்ல..ஆதலால் தயவுசெய்து "வெள்ளை ரோஜா" வை விட்டு விடுங்கள். சிவாஜியின் அட்டகாசம் தாங்க முடியாமல் பிரபுவும் தகப்பருடன் சேர்ந்து நடிக்க மறுத்து விட்டார்.
இந்த பொய் வசூல் கணக்கை அப்போதே தயாரிப்பாளர்களிடம் கொடுத்திருந்தால் அவர்களில் நிறைய தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். பேப்பரில் எழுதிக் காட்டியதெல்லாம் வசூலாகுமா? ஆனால் அவர்கள் எழுதிக் காட்டி ஏமாற்றிய வசூல் கணக்குகளை தாண்டி புரட்சி தலைவரின் "இதயக்கனி" வசூல் ஈட்டிய ஆதாரங்கள் இதோ உங்களிடம்.
இதயக்கனி சென்னை நகர மொத்த வசூல் ரூ 19,87,875.39.
சத்யம். 105. ரூ 8,56,362.50
மகாராணி. 105. ..4,64,984.50
உமா. 105. 3,78,876.49
கமலா. 72. 2,87,651.90
. ........... ----------------------
387 19,87,875.39
----------------------
மதுரை. சிந்தாமணி 146. 5,52,218.33
கோவை சென்ட்ரல். 105. 4,96,451.55
வேலூர் கிருஷ்ணா. 100. 4,02,884.76
சேலம் அப்சரா. 107. 5,08,748.20
திருச்சி பேலஸ். 118. 3,87,790.35
ஈரோடு ராயல். 109. 2,85,329.54
நெல்லை சென்ட்ரல்100. 2,88,223.70
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, வேலூர், நெல்லை ஆகிய எட்டு ஊர்களில் மட்டும் பெற்ற வசூல் ரூ 50 லட்சத்தை கடந்து இமாலய சாதனை படைத்தது. மேலும் 1975 ல் தமிழகத்தில்
50, 75, 100 நாட்கள் அதிக திரையரங்குகளில் ஓடி 5 மாத காலத்துக்குள் 46 திரையரங்குகளில் 1 கோடியே 10 லட்சம் வசூலாக பெற்று புதிய சாதனையை படைத்தது. சென்னையில் மிக குறுகிய காலத்தில் அதிக வசூல் பெற்ற காவியம் "இதயக்கனி.".........
-
சில 'உதவாக்கரைகள்' சூரியனை பார்த்து ஏதோ குரைக்கிறது என சொல்வார்களே அது போன்று உளறி கொட்டுவதாக நண்பர் சொன்னார். நான் அவருக்கு சொன்னேன், பாவம் அவர்கள் ஆதங்கம், இயலாமை, முடியாமை, எந்த ஜென்மத்திலும் தீராத அபிலாஷைகள் அந்த நடிகர் குடும்ப உறுப்பினர்கள் கூட கவலைப்படாத சில ஆசைகளை நிறைவேற்ற கொஞ்சம் கூட திறமையோ வேறெதுவும் இல்லாமல் (ரெண்டும் கெட்டான்) ஆகவே இருந்து போய் சேர்ந்தாரே.. என்ற சொல்லொண்ணா துயரத்தில் புலம்புவது, வெம்புவது அவங்களுக்கு புதிதில்லை. அப்பப்ப பதில் வினைகள் ஆற்றுவதாக நினைத்து எப்போதும் முட்டாளாக, மூடர்களாக இருந்து வருவதில் நமக்கெங்கும் நஷ்டமில்லை, குறைவில்லை...அவ்வளவே...
-
#கள்வர்களுக்கு #அருளிய #நன்னெஞ்சே
1964 ஆம் ஆண்டு வாத்தியார், ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க காரில் மதுரைக்குச் சென்று கொண்டிருக்கிறார்...உடன் நடிகர் திருப்பதிசாமி, புத்தூர் நடராசன், கட்டரத்தினம், எம்ஜிஆர் அண்ணன் மகன் சுரேந்திரன் மற்றும் டிரைவர் சாகுல் அமீது...இரவு நேரம்...கார் விரைவாகச் சென்று கொண்டிருக்கையில், ஒரு சாலையின் நடுவே ஒரு கூஜா...கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் பார்க்கையில் அது 'வெள்ளிக்கூஜா' என்று தெரிந்தது...
பாவம் ...! நமக்கு முன்னர் வந்த யாரோ ஒருவர் இந்த கூஜாவைத் தவறவிட்டிருக்கவேண்டும், போய் அதை எடுத்து வா...! அதை வரும்வழியிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிடலாம்...!!! என டிரைவரிடம் கூறித் தானும் இறங்குகிறார்...நல்ல கும்மிருட்டு ஒருவர் முகம் மற்றொருவருக்குத் தெரியாத அளவிற்கு...
அப்போது திடீரென 10 பேர் கம்புகளுடன் சூழ்ந்துகொண்டு, 'மரியாதையா கார்ல உள்ள பொருட்களை எடுத்து எங்ககிட்ட கொடுத்துட்டு கெளம்பிடுங்க...! உங்கள ஒன்றும் செய்யமாட்டோம் என்று கூறினர்...
அவர்கள் திருடர்கள் என அறிந்த வாத்தியார், 'இப்ப தரமுடியாதுன்னா என்ன பண்ணுவீங்க' அப்படின்னதும் கூட்டத்திலிருந்த ஒருவன், 'உங்க எல்லாரையும் அடிச்சுப்போட்டுட்டு எடுத்துட்டுப்போவோம்' ன்னு சொன்னான்..
அதைக்கேட்ட வாத்தியார் தனது டிரைவரிடம், 'சாகுல், கார்ல இருக்கிற கம்பை எடு' ன்னு சொல்லி கம்பை கையில் வாங்குகிறார்...
'நா எந்தப்பொருளையும் தரமாதிரி இல்ல...சண்டைக்கு நா ரெடி...ஒவ்வொருவரா வர்றீஙகளா அல்லது மொத்தமா வர்றீங்களான்னு' கேட்டு தனது கையிலுள்ள கம்பைச் சுழற்றி தாக்குதலை ஆரம்பிக்க...
அதிர்ச்சியடைந்த திருடர்கள், 'இத்தனை தைரியசாலி யாருடா, அந்த ஆள் முகத்தைப் பாக்கணும்னு' சொல்லி ஒருவன் தீக்குச்சியைக் கொளுத்தி முகத்தைப் பார்க்க, அதிர்ச்சியுற்று டேய்! நம்ம வாத்தியாருடா'ன்னு சொல்ல, அனைவரும் உற்சாகமடைந்தனர்...
'எங்கள மன்னிச்சுடுங்க வாத்தியாரே!' எனக் கோரஸாக அனைவரும் மன்னிப்பு கேட்டனர்...
'ஏம்பா! உங்களுக்கெல்லாம் உடம்பு நல்லாத்தானே இருக்கு...இப்படி திருடறீங்களே, உங்களுக்கே கேவலாமல்ல...இந்த ரோட்ல எத்தனை பேர் அவசர வேலையா வருவாங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள், இப்படி...அவங்களெல்லாம் உங்களால எந்தளவு பாதிக்கப்படுவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? எத்தகைய பாவச்செயல் நீங்க செய்யறது? அப்படீன்னு வாத்தியார் சொல்ல...
அனைவரும் "இனிமே நாங்க திருடவே மாட்டோம்னு" சொல்ல..
'நீங்களனைவரும் சத்தியம் செஞ்சாதான் நம்புவேன்னு' வாத்தியார் சொல்ல...அவரின் கையில் அடித்து சத்தியம் செய்தனர்...
வாத்தியார், அந்த பத்து பேருக்கும் தலா ரூ.1000/- வழங்க (1964 ம் வருடம் 1000 ரூபாய் என்பது இன்றைய தேதியில் குறைந்தது ஒரு லட்சம்) அதை அவர்கள் வாங்க மறுத்தனர்...உடனே வாத்தியார், ' இந்தப் பணம் நீங்க உழைச்சுப் பிழைப்பதற்காக, ஏதாவது கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள்...'ன்னு சொன்னபிறகு அவர்கள் வாங்கிக்கொண்டு சென்றனர்...
இப்படி வாத்தியாரின் வாழ்வில் வரும் ஒவ்வொரு சம்பவமும் பல திருவிளையாடல் தான்............
-
நினைத்ததை முடித்த நம் தலைவர் உடன் ஒரே அந்த படத்தில் நடித்தவர் சாரதா அவர்கள்.
துலாபாரம் படத்துக்கு அவர் நடிப்பில் வியந்து தேசிய விருது கொடுத்தது மைய அரசு.
மலையாளம் தெலுங்கு மற்ற பிற மொழி படங்களில் மிகவும் அவர் பிசி ஆக இருந்த நேரத்தில்" நினைத்ததை முடிப்பவன் " படத்தில் அவரை தலைவருக்கு தங்கை வேடத்தில் நடிக்க கோரிய போது.
வேண்டாம் நான் பல மொழி படங்களில் பிசி.
அவரோ அரசியல் மற்றும் சினிமாவில் பிசி...இருவர் தேதியும் ஒன்றாக செல்ல முடியாமல் படத்துக்கு ஆபத்து வரும்...என்று மறுக்க.
தலைவர் அவர் சொன்ன செய்தி அறிந்து முதலில் அவரே தேதிகளை நடிக்க கொடுக்கட்டும்.
அதே தேதியில் நான் சம்மதிக்கிறேன் என்று சொல்லுங்கள்...இந்த வேடத்துக்கு அவரே மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று நான் சொல்லியதாக அவரிடம் சொல்லுங்கள் என்றவுடன்....
மறுப்பு தெரிவிக்க முடியாமல் அன்று உச்சத்தில் இருந்த ஊர்வசி சாரதா அவர்கள் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்க..
இதுவரை அவர் கதாநாயகி ஆக கூட நடித்த படத்துக்கு கொடுக்க படாத உயர்வான தொகையை தலைவர் பேசி அவருக்கு வாங்கி கொடுக்க....
அசந்து வியந்து போனார் நடிகை சாரதா அவர்கள்..என்ன ஒரு தீர்க்கதரிசி அவர் என்று படம் வெற்றிக்கு பின் பல நாட்கள் புலம்பி தீர்க்கிறார் அவர்.
படம் தலைவர் எண்ணம் போல அருமையாக வந்து மாபெரும் வெற்றி அடைந்த வரலாறு அவருக்கு மட்டுமே சொந்தம்..
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்ற பாடல் அன்று ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை.
ஏன்...இன்று வரை கூடவே.
அன்று ஊர்வசி சாரதா அவர்கள் நடிப்பை பார்த்து கண்ணீர் சிந்தாத தாய்மார்கள் தமிழகத்தில் இல்லை
அதுதான் தலைவரின் வெற்றி ரகசியம்..யாரை எந்த ரோலில் போட்டு உடன் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து.
நினைத்ததை முடித்தவர் அவர் புகழ் என்றும்...காப்போம்.
நன்றி..உங்களில் ஒருவன்...தொடரும்..
திரையில் மட்டும் அல்ல இந்த தமிழ் தரையில் கூட கணிக்க முடியாத தலைவர் அவர்..நன்றி..........
-
எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.
ஆனால் எம் ஜி ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. அது ஊரறிந்த உண்மை! முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி அப்படியே கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி அடேயப்பா... எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக இந்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார். அதை அவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளின் பட்டியலைச் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். சரி இனி எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆண்டு வரிசைப்படி தெரிந்து கொள்ளுங்கள்.
1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.
1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (m.l..c.) ஆனார்.
1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
1984 - அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.
எம்ஜிஆர் போட்டியிட்ட இடங்கள் பெற்ற வாக்குகள்
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -54106. காங்கிரஸ் -26,432
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -65405 காங்கிரஸ் -40777
எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை -43065 தி.மு.க. -5415
எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு -57019 தி.மு.க. -35959
எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி -60510 தி.மு.க. -28016
24.12.1987 - முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்..........
-
முந்தைய வசூல் சில...
***************************
1984 பாரகன் 14 நாள்
வசூல் : 1,01,789.04
1985 நாகேஷ் 14 நாள்
வசூல் : 93, 250.00
1988 பிளாசா 14 நாள்
வசூல் :1,03,325.00
1988 நாகேஷ் 21 நாள்
வசூல் : 1,58,847.35
1988 நடராஜ் 21 நாள்
வசூல் : 1,50,792.40
1988 ஜெயராஜ் 14 நாள்
வசூல் : 65,690.45
1990 எம்.எம் தியேட்டர்
7 நாள் : 94,382.00
16 காட்சி House Full
1991 கமலா 7 நாள்
வசூல் : 97,509.50
15 காட்சி House Full*
1991 பிருந்தா 7 நாள்
வசூல் : 91,224.65
11காட்சி House Full*
இன்னும் ஏராளமான அரங்கில்
1984 முதல் 1993 வரை சென்னையில் இடைவிடாது சாதனையில்..மக்கள் திலகத்தின்
100 வது காவியம் ...
கோடிகளுக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது....
மேலும் பல புள்ளி விவரங்கள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.........
UR.
*
-
மக்கள் திலகத்தின் நூறாவது திரைப்படமான" ஒளி விளக்கு " திரைக்காவியம் பற்றி சில புள்ளி விபரங்கள்....
சென்னை நகரில் 1984 ஆம் ஆண்டு பாரகன் திரையரங்கில் திரையிடப்பட்ட ஒளிவிளக்கு காவியம் முதல் வாரத்தில் நடைபெற்ற 28 காட்சிகளும் அரங்கு நிறைந்து.... கொட்டும் மழையில்* இரண்டாவது வாரமாக 18
காட்சிகள் அரங்கு நிறைந்து மொத்தம் 46 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை படைத்த ஒரே காவியம் ஒளிவிளக்கு....
நாகேஷ் திரையரங்கில் திரையிடப்பட்ட ஒளிவிளக்கு 1985ல் 14 நாட்கள் நடைபெற்றது.*
இதில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்.
1988 ஆம் ஆண்டு நடராஜ், நாகேஷ் திரையரங்குகளில் 21 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை வசூலைக் கொடுத்து... 40க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
சென்னை பிளாசா, ஜெயராஜ் திரையரங்குகளில் 14 நாட்கள் ஓடி இரண்டு அரங்கிலும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
கோவை மாநகரில் (07.08.1992 ) ஒளிவிளக்கு திரைக்காவியம்*
ஒரே வாரத்தில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. கங்கா மற்றும் ராஜா திரையரங்குகளில் திரையிடப்பட்டு மாபெரும் வெற்றியை படைத்து சாதனை.
ஒரே நாளில் 8 காட்சி ஒடியது....
ஒரே வாரத்தில் ஒடிய.
56 காட்சி வசூல் : 2,45,860.80
2013 ஆம் ஆண்டு சென்னையில் ஒரே நேரத்தில் ஒளிவிளக்கு திரைக்காவியம் அண்ணா, மகாலட்சுமி இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு அண்ணா திரையரங்கில் ஒரு வாரத்தில் ஒரு லட்சத்து*
26 ஆயிரத்து வசூலை கொடுத்தது.
அதேபோல மகாலட்சுமி திரையரங்கில் 4 வாரங்கள் ஓடி*
3 லட்சத்திற்கு மேல் வசூலை வாரிக் கொடுத்து 12 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்-
மீண்டும் அதே மகாலட்சுமி திரையரங்கில் 2017 ஆம் ஆண்டு இரண்டு வாரங்கள் நடைபெற்ற திரைக்காவியம் ஒளி விளக்கு ஆகும்......இத்தகைய சாதனை படைத்த மற்ற யாருடைய படங்களேனும் உண்டா?!.........
-
இதயக்கனி திரைப்படத்துக்கு சென்னையில் மட்டும் 3 நாட்களுக்குள் ரிசர்வேஷன் வசூலே 90 ஆயிரத்தை தாண்டி புதிய சாதனை செய்தது. இந்த சாதனையைப் பார்த்து மிரண்டு போனது அப்போதைய திமுக ஆட்சி. உண்மையிலேயே அவ்வளவு வசூல் ஆகியிருக்கிறதா என வணிகவரித்துறை அதிகாரிகள் தியேட்டர்களில் சோதனை செய்தனர். சோதனை என்ற பெயரில் மக்கள் கூட்டம் வருவதை தடுக்கும் வகையில் கெடுபிடிகள் செய்தனர். ஆனால், மக்களின் துணையோடு இதையெல்லாம் புரட்சித் தலைவர் எதிர்கொண்டு வெற்றிபெற்றார். சென்னை சத்யம் தியேட்டரில் முதன் முதலாக 100 நாள் ஓடியபடம் இதயக்கனி. ரஷ்யா சர்வதேச பட விழாவிலும் இதயக்கனி படம் கலந்து கொண்டு சாதனை செய்தது.
புரட்சித் தலைவருக்கு வந்த சோதனைகள் வேறு எந்த நடிகருக்கு வந்தாலும் தாக்குப் பிடித்திருக்கமாட்டார். விஸ்வரூபம் 2 படத்துக்கு சோதனை வந்தபோது கமல்ஹாசன், ‘நாட்டைவிட்டே போய்விடுவேன்‘ என்றார். இப்பவும் சமீபத்தில் ‘கட்சியைக் கலைத்துவிடுவேன்’ என்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இதோ.. அதோ... என்கிறாரே தவிர, அரசியலுக்கு வர இன்னும் தயக்கம் காட்டுகிறார். சிவாஜி கணேசன் எதிர்ப்புகளை சந்தித்தது இல்லை. பிரச்சினை இல்லாமல் இருப்பதற்கு ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தார். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி போனாலும், கருணாநிதிக்கு நண்பராகவே இருந்தார். காமராஜர் மறைந்ததும் அவருக்கு துரோகம் செய்து நெருக்கடி காலத்தில் இந்திரா காந்திக்கு பயந்து மத்தியில் ஆளும் இந்திரா காங்கிரஸில் சேர்ந்தார். அங்கு மரியாதை இல்லை என்றதும் ஜானகி அம்மாளுக்கு ஆதரவு என்ற பெயரில் தனிக்கட்சி. அந்த அணி ஆட்சிக்கு வரும் என்ற தப்பு கணக்கு போட்டார். இல்லாவிட்டால் சேர்ந்திருக்க மாட்டார். என்னை சுற்றியிருந்தவர்கள் சுயநலத்துக்காக என்னை கட்சி ஆரம்பிக்கும்படி தூண்டினர் என்று சுயசரிதையில் அவரே சொல்லி இருக்கிறார். அவராக விரும்பி கட்சி ஆரம்பிக்கவில்லை. சுற்றியிருப்பவர்கள் பேச்சைக் கேட்டு லாபம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறார். அது போனியாகாமல் தேர்தலில் திருவையாறில் தோற்றதால் கட்சியைக் கலைத்துவிட்டு மத்தியில் ஆளும் கட்சியான ஜனதா தளத்தில் சேர்ந்தார். வி.பி. சிங்கை காலியாக்கி அவருக்கு பிரதமர் பதவி போய்விட்டது, தனக்கும் மார்க்கெட் இல்லை என்ற பிறகு இனிமேல் வண்டி ஓட்ட முடியாது என்று தெரிந்து அரசியலை விட்டே ஒதுங்கினார். சினிமாவிலும் அரசியலிலும் எதிர்ப்புகளை எதிர்த்து நின்று துணிச்சலாக சமாளித்து உலகத்திலேயே வெற்றி கொண்ட ஒரே நடிகர் மக்கள் திலகம்தான்..........ஸ்வாமி...
-
தனியார் தொலைக்காட்சிகளில் நிருத்திய* சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*பட்டியல் ( 09/09/20 முதல் 16/09/20வரை )
------------------------------------------------------------------------------------------------------------------------
09/09/20* - சன் லைப்* -காலை 11 மணி - நாளை நமதே*
* * * * * * * * *ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி -சிரித்து வாழ வேண்டும்*
10/09/20* *சன் லைப் - மாலை* *4 *மணி -- புதிய பூமி*
* * * * * * * *புதுயுகம் டிவி -இரவு 7மணி -* தனிப்பிறவி*
* * ** * * * * * * * *ஜெயா மூவிஸ் -இரவு* 10 மணி - இதய வீணை*
11/09/20-ராஜ் டிஜிட்டல் -காலை 9.30 மணி - மாட்டுக்கார வேலன்*
* * * * * * * *சன்* லைப் - காலை 11 மணி - - இதயக்கனி*
* * * * * * * *மெகா 24 - பிற்பகல் 2.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி - ஊருக்கு உழைப்பவன்*
12/09/20-* மீனாட்சி டிவி* - இரவு 9.30 மணி - நல்ல நேரம்*
14/09/20 - சன் லைப் -* காலை 11 மணி - அன்பே வா*
* * * * * * * *விஷ்ணு டிவி -காலை 11 மணி -மாட்டுக்கார வேலன்*
* * * * * * * மெகா 24 -* பிற்பகல் 2.30 மணி - தாயின் மடியில்*
* * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி- தாயை காத்த தனயன்*
* * * * * * * மூன் டிவி* - இரவு 8 மணி* * - நல்ல நேரம்*
15/09/20-முரசு டிவி -மதியம் 12மணி/இரவு 7மணி-தாயின் மடியில்*
* * * * * * * சன் லைப் -* மாலை 4 மணி - ஆசைமுகம்*
* * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி -சங்கே முழங்கு*
16/09/20 -சன் லைப் - காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * * மூன் டிவி* - இரவு 8 மணி* - முகராசி*
* * * * * * *பாலிமர்*டிவி*- இரவு 11 மணி - நல்ல நேரம்* *
*
* * * * * * * *
-
#ஒரு #பைசாக்கூட #தராத #எம்ஜிஆர்
மகாகவி காளிதாஸ் படப்பிடிப்பு ... சிவாஜி, காளிதேவி சிலையின் முன் அமர்ந்து பாடுவதாகக் காட்சி...பிரம்மாண்ட செட் போடப்பட்டிருந்தது...
மும்மரமாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத மின் கசிவினால் "செட்" தீப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. குழுவினர் அனைவரும் போராடி தீயை அணைத்தனர். ஆனால் பரிதாபமாக, அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த ஐந்து டெக்னீஷியன்கள் தீக்கு பலியாயினர்.
இறந்தவர்களின் உறவினர்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது... அவர்களது மனைவிமார்களும், முக்கிய உறவினர்களும் ஸ்பாட்டுக்கு வந்திருந்தனர்..குடும்பத்திற்காக கஷ்டப்படுபவர் போயிட்டாரேன்னு கதறினர்...சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்...புள்ள குட்டிங்களை எப்படி கரைசேர்ப்போம்னு புலம்பினர். இதைப் பார்த்து வருத்தமுற்ற உடனிருந்த டெக்னீஷியன்களும், குழுவினரும் தங்களால் முடிந்த தொகையைக் கொடுத்து உதவினர்...
இந்த ஸ்பாட்டுக்கு சிறிது தூரத்தில் எம்ஜிஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர் உடனே பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நடந்ததை விசாரித்தார். எல்லோருக்கும் இந்த துக்கத்திலும் சிறிது மகிழ்ச்சி...ஏனெனில் எம்ஜிஆர் வந்துட்டார்...கண்டிப்பாகணிசமான தொகையைக் கொடுத்து உதவுவாரென்று. ஆனால் #எம்ஜிஆர் #ஒரு #பைசா #கூடத்தராமல் கிளம்புகிறார். அனைவருக்கும் அதிர்ச்சி... 'கேட்காமலே உதவி செய்யற வள்ளலாச்சே...' மனிதநேயமிக்க எம்ஜிஆரா இப்படி...
ஏன் இப்படி நடந்துகொண்டார்..."
என்று அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த வருத்தம்...
மறுநாள் காலை, பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து அவர்களின் மனைவிமார்களுக்கும், முக்கிய உறவினர்களுக்கும் ராமாவரம் தோட்டத்திலிருந்து அழைப்புவிடுக்கப்பட்டு...
என்ன ஏதென்றறியாமல் அங்கு செல்கின்றனர்...
எம்ஜிஆர் அவர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் சிறுதொழில் தொடங்குவதற்காக கருவிகளையும், அதற்கான இடத்தையும், மூலதனத்தையும் அளிக்கிறார்...
வந்திருந்தவர்கள் உறைந்துபோய், 'அண்ணே! நீங்க நேத்து பணம் தராததுனால உங்கள தப்பா நெனச்சுட்டோம். எங்கள மன்னிச்சுடு சாமி' ன்னு கதறினர்... 'நீங்க நல்லா இருக்கணும் மவராசா' ன்னு வாழ்த்தினர்...
அப்ப கூட எம்ஜிஆர் வாயைத் திறக்கவில்லை...வழக்கம் போல தன் (பொ)புன்சிரிப்பையே பதிலாக அளித்தார்...
#நம் #இறைவன் #இதயதெய்வத்துக்குத் #தெரியாதான்ன! யாருக்கு என்ன செய்யணும்னு............
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி பல்வேறு தரப்புகளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது என்பதற்கு காரணம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை முறை , அவர் வாழ்ந்த விதம் , அவர் திரைப்படங்களின் மூலம் வாத்தியாராக இருந்து மக்களுக்கு போதிப்பது என்கிற லட்சியம்தான் .ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கு நாம் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவழிக்கிறோம் . அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல விஷயங்கள், சமூக கருத்துக்கள் பயன்படக்கூடிய வகையில் தெரிவிக்க வேண்டும் என்பதில் முனைப்பாகவும், மிகவும் கவனமாகவும் இருந்துள்ளார் எம்.ஜி.ஆர்.*
இன்றைக்கு வாழ்க்கையில் நம்பிக்கை* ஊட்டக்கூடியதாக, உத்வேகம் தர கூடியதாக பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது . இன்றைக்கு தமிழத்தில் பல்வேறு நகரங்கள், ஊர்கள், கிராமங்களில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் தன்னுடைய சொந்த மண்ணோடும், சிநேகத்தோடும் ஒட்டுறவோடும் இருக்கிற ஒரு நம்பிக்கை இருக்கிறதென்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடல்களினால்தான்*
ஒரு முறை ஆவடியில் இருந்து விமான நிலையம் வரை புதிய சாலை அமைக்கும் பணி துவக்கப்படுகிறது* .அது மிக நீண்டதூரத்திற்கான* பெரிய சாலை .அந்த சாலை செல்லும் வழியில் கே.கே.நகர் அருகில் கொட்டபாளையம் என்கிற இடத்தில* ஒரு அம்மன் கோவில் உள்ளது .அந்த அம்மன் சிலையுடன் கூடிய அந்த கோவிலை சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ளதால்*அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பது பொதுப்பணி துறை அதிகாரிகளின் வேண்டுகோள் .அதை அகற்றினால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், போராட்டம் நடத்த முன்வருவார்கள். சட்ட பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ன செய்யலாம் என்று குழப்பத்தில் உள்ள பொதுப்பணி துறை அதிகாரிகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்கிறார்கள் .உடனே*முதல்வர் எம்.ஜி.ஆர். காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியாரை சந்தித்து இது குறித்து*ஆலோசனை செய்கிறார் . நீங்கள் மாற்று இடம் தேர்ந்தெடுங்கள் .இந்த மாதிரியான இடம் முடிவு செய்யுங்கள். அங்கு இந்த அம்மன் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்யுங்கள்* அதன் பிறகு அங்கு முறைப்படி கோவிலை கட்டி ,பொதுமக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்று காஞ்சி பெரியவர் கூறினார் .இதே போல பல்வேறு தரப்பில் உள்ள பண்டிதர்களை எல்லாம் அழைத்து இந்த விஷயம் குறித்து கருத்துக்கள் கேட்டறிந்தார் . அதன் பிறகு*பொதுமக்கள் சிலரை அழைத்து இவர்கள் எல்லாம் இப்படி,கருத்துக்கள், யோசனைகள் தெரிவிக்கின்றனர் உங்களுக்கு சம்மதம்தானே ,ஏதாவது ஆட்ஷேபம் உள்ளதா என்று அவர்களின் கருத்தையும் இறுதியாக கேட்டறிந்து அதே பகுதியில் ,அனைவருக்கும் உகந்த*,மாற்று இடத்தில முறைப்படி கோவில் கட்டமைக்கப்பட்டது . இன்றைக்கும் பொதுமக்கள் வழிபடும் முக்கியத்தலமாக*அந்த கோவில் அமைந்துள்ளது .ஆகவே, மத விஷயங்களிலும் சரி, மக்களின்* மனம் குறித்த* விஷயங்களிலும் சரி ஒரு முடிவு எடுப்பதாக இருந்தால் அவர் தன்னை முதல்வர் என்று கருதாமல் மக்களில் ஒருவனாக, சாமானிய மனிதராக*முக்கியஸ்தர்கள் பலரிடம் கருத்துக்களை கேட்டறிந்து ,அதை முறைப்படி நிறைவேற்றுவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவரேதான் .
1970களில் சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடக்கும்போதெல்லாம்*நிறைய பேர் கையில் ட்ரான்ஸிஸ்டர் ,அல்லது பாக்கெட் ரேடியோ வைத்து*கிரிக்கெட் வர்ணனை கேட்டு கொண்டிருப்பார்கள் . 1974ல் ஒரு முறை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியை காண எம்.ஜி.ஆர். தன் உதவியாளர்கள், நெருங்கிய நண்பர்கள் சிலருடன் பார்ப்பதற்காக*முதல் வகுப்பு டிக்கட் வாங்கிவிட்டு ஸ்டேடியம் செல்கிறார் . அந்த காலரிக்கு எம்.ஜி.ஆர். செல்லும்போது பார்த்தால் , முன் வரிசையில் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் இருக்கையில் ஆக்கிரமித்து அமர்ந்துள்ளனர் . ஆனால் எம்.ஜி.ஆர். தன்னுடன் வந்தவர்களுடன் தனக்கு ஒதுக்கப்பட்ட பின்வரிசை இருக்கைகளில்*அமருகிறார் . போட்டியை*பார்க்க எம்.ஜி.ஆர். வருகை*தந்த*விஷயம் அறிந்த*பார்வையாளர்கள் கூட்டத்தின் பெரும்பான்மை பகுதியினர் எம்.ஜி.ஆர். இருந்த காலரியை*நோக்கி படையெடுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டது . இனிமேல் இந்த மாதிரி போட்டிகளை*நாமும் ரசிக்க முடியாது . பார்வையாளர்களும் ஒழுங்காக*பார்க்க மாட்டார்கள் .இதனால் போட்டி* தொடர்ந்து நடைபெறுவதில்*பிரச்னைகள்* ஏற்படலாம் என்று கருதி*உடனே,அங்கிருந்து தன்னுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு*,அந்த மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி*காரில்*புறப்பட்டு நேராக தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். அலுவலகம் சென்றடைந்தார் .பின்னர் தன் உதவியாளர்கள் மூலம் உடனடியாக ஒரு கருப்பு*வெள்ளை டிவி*வாங்கி வர செய்து, அதற்கு முறையான இணைப்புகள்*செய்ய வைத்தபின்*அன்று போட்டியை முழுமையாக ரசித்து பார்த்தாராம் .
எம்.ஜி.ஆர். தன் ராமாவரம் தோட்டத்து*வீட்டில்*கீழ் தளத்தில் உள்ள மிக பெரிய நூலகத்தில்*இல்லாத நூல்களே இல்லை எனலாம் .நாடகம், நாட்டியம், இசை, இலக்கியம் இலக்கணம் குறித்த*நூல்களும் இதில்*அடங்கும் . ஏறக்குறைய*600க்கு மேற்பட்ட நூல்கள் ஆங்கிலத்திலும் , இதர 3400 நூல்கள்*தமிழிலும்*அந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன . அதே*போல அமேரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே*ஜப்பான் போன்ற நாடுகளின்*நாணயங்களை சேகரிப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார் .ஏனென்றால் அவை அந்தந்த நாடுகளின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பிரதிபலிப்பு என்பதை அவர் உணர்ந்திருந்தார் .மற்ற தகவல்கள்*அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.நான் பாடும்*பாடல் நலமாக வேண்டும் - நான் ஏன் பிறந்தேன்*
2.ஓடி*ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்*
3. என்னை தெரியுமா*- குடியிருந்த* கோயில்*
4.எம்.ஜி.ஆர். -எம்.ஆர்.ராதா உரையாடல் --பெரிய இடத்து பெண்*
5.பறக்கும் பந்து பறக்கும் - பணக்கார குடும்பம்*
6.எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி -டி.ஆர்.ராமச்சந்திரன் -அன்பே*வா*
7.ஏய் நாடோடி போகவேண்டும் ஓடோடி*- அன்பே வா*
-
லண்டனில் மக்கள் திலகத்திற்கோர் மாபெரும் வரவேற்பு விழா.
அன்று [30.07.1973] மகாத்மா காந்தி மண்டபத்தில் மக்கள் திலகம் எம்.ஜி . ஆருக்கு ஒரு மாபெரும் வரவேற்பு விழா [இந்தியன் ஒய்.எம். சி.ஏ.] அங்கு கண்ட காட்சி, அப்பப்பா ...கூட்டம் அலை மோதியது. லண்டன் தமிழர்களின் வரலாற்றிலேயே இது வரை இப்படிப்பட்ட கூட்டம் கூடியதில்லை. அனைவரும் ஆவலுடன் காத்திருக்க சிறிது நேரத்திலேயே மக்கள் திலகம்,லதா, ப.நீலகண்டன், சித்ரா கிருவடிணசாமி ஆகியோர் வந்து சேர்ந்தனர். விழாவை ஏற்பாடு செய்த தமிழ் திரைப்பட சமூகக் கழகத்தினரின் அறிவிப்பாளர் திரு ஜெயம் குமாரநாயகம் அனைவருக்கும் வரவேற்பு கூறி ஒவ்வொருவராக மேடைக்கழைத்தார். கழகத்தின் செயலாளர் திரு. லத்திப் ஷா அவர்களின் வரவேற்பு உரையில் திரு .சித்ரா கிருஷ்ணசாமியும் திரு.ப . நீலகண்டனும் சிறு சொற்பொழிவாற்றினர். "உலகம் சுற்றும் வாலிபன் " படத்தை ரஷ்யாவின் மாஸ்கோவில் திரையிட வந்தவர்கள் அப்படியே லண்டன் வந்ததாகவும் கூறி மாஸ்கோவில் தமிழ் மக்கள் தங்களிடம் காட்டிய அன்பையும் வரவேற்பையும் அங்கு நடந்த சில சுவையான சம்பவங்களையும் இவர்கள் விபரித்தவர். லதா தானும் அ.தி.மு.க.வில் ஒரு அங்கத்தினர் என்று பெருமையாக கூறியதோடு தனது ஒரு நிமிட உரையை அழகாக முடித்து விட்டார்.
மக்கள் திலகத்தைப் பேச அழைத்தனர். "கையொலி வானைப் பிளந்தது". சாதாரன தொனியில் பேச்சை ஆரம்பித்த மக்கள் திலகம் இடி முழக்கத்துடன் அதை நிறைவு செய்தார். அவரது பேச்சில் இருந்த ஆழமும் கருத்துச் செறிவும் அங்கிருந்தோர் என்பவரையும் மெய் மறக்கச் செய்துவிட்டது. மக்கள் தன்னைப் போன்றவர்களுக்குக் காட்டும் இந்த அன்பும் ஆதரவும் எத்தனை காலத்திற்கு நிலைக்கும்?!. உயிர் உடலை விட்டுப் போனபின்னும் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் எத்தனை பேர்?!. கலைவாணரின் கதி என்னவாயிற்று? என்று அழகாகக் கூறிய எம்.ஜி.ஆர் இன்று மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்திருப்பதைப் போல என்றும் இருக்கவேண்டும் என்பதுதான் தனக்குள்ள பேராசை என்று கூறிய பொழுது எழுந்த கையொலி நீங்கள் அதைக் கூறியிருக்கவே வேண்டாம் என்று அவரிடம் கூறுவது போல இருந்தது.
நீண்ட நேரம் பேசாமல் சுருக்கமாகத் தன் பேச்சை முடித்த எம் .ஜி. ஆரை ரசிகர்கள் சும்மா விட்டு வைக்கவில்லை. மேடை ஏறிச் சென்று பல கேள்விக்கணைகளை தொடுத்தனர் ,. ஈழத்தமிழர் பிரச்சினை பற்றியும் , தமிழ் நாட்டிற்கு லண்டனிலிருந்து பணம் அனுப்புவதிலும் பிரமாண பத்திரம், பாஸ்போர்ட் புதிப்பித்தலிலும் உள்ள தொல்லைகளையும் பற்றிக்கட கேள்விகள் கேட்கப்பட்டன. அ.தி.மு.க.தேவையா ? என்ற கட ஓர் அன்பர் கேட்டார் . இன்னொருவர் சில புள்ளி விபரங்களின் மூலம் எம்.ஜி.ஆரை .மடக்கி விடப்பார்த்தார். அனைவரின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அழகான ஆழமான முத்துப் போன்ற பதில்களை எம்.ஜி.ஆர். அளித்தார். மடக்க முயன்றவர்கள் அடங்கிப் போயினர். நேரமோ 10 ஆகி விட்டது. யாருமே அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் அவைத்தலைவர் குறுக்கிட்டு எம்.ஜி.ஆருக்கும் ஓய்வு கொடுத்து அன்பர்களின் ஆவலுக்கும் அணை போட்டார். மேடையில் திரை விழுந்தது. மக்கள் திலகமும் மற்றவர்களும் கிழே இறங்கி வந்து ரசிகர்கள் மத்தியில் அமர்ந்தனர் . இதன் பின் சிற்றுன்டிகள் வழங்கப்பட்டன. அறிவிப்பாளர் தன்னால் இயன்ற மட்டும் கத்தியும் யாரும் தத்தம் இடங்கலிள் அமர்ந்து பின் நடந்த நிகழ்ச்சிகளை ரசிக்க முயலவில்லை. தேனுண்ட வண்டுகள் மறுபடியும் மலரைச் சுற்றி மொய்ப்பது போலவே அனைவரும் எம்.ஜி.ஆரை மொய்த்தனர். அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள, அவரின் கையெழுத்தை வாங்க, அவரோடு ஏதாவது பேச இப்படியாக அவரைச் சுற்றி பலர் துடித்துக் கொண்டு நின்றனர். எம்.ஜி.ஆர். பொறுமையோடு அனைவரையும் திருப்திப்படுத்தினார்.
மேடையில் நிகழ்ச்சிகள் நடந்தபடி இருந்தன . “ வார்டன் ஸ்டேஜ் கிரியேஷன்சார் " அளித்த ஒரு நவீன பாடல் கச்சேரி இடம் பெற்றது. திரு. செந்திவேலின் பாடல்களுக்கு திரு.இளம்பூரணன் மிருதங்கம் இசைக்க திருவாளர்கள் குரூப், தேவராஜ் ராஜ்புட் ஆகியோர் பக்க இசை அளித்தனர் . இதன்பின் திருமதி ராஜ்குமார் அவர்களின் மாணவிகளது மோகினி ஆட்டமும், செல்வி தேவராணி தம்பிராஜாவின் நடனமும் இனிக்கத்தான் செய்தன. இந்நிகழ்ச்சிகளை ரசனையோடு அனுபவித்தவர்கள் சிலரே எனினும் கலைஞர்கள் தளராது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது... இறுதியில் அறிவிப்பாளர் நன்றியுரை சுறி விழாவை முடித்த போது மணி 11 க்கு மேலாகி விட்டது .
இவைகளையெல்லாம் பார்த்துவிட்டு மனதில் ஒரு உண்மை பளிச்சிட்டது. அரசியல்வாதி என்றோ, திரைப்பட நடிகர் என்றோ எம்.ஜி.ஆரை யாரும் நினைக்கவில்லை . தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறார்கள். அதனால்தான் இத்தனை பாசமும் நேசமும். மக்கள் திலகம் உண்மையிலேயே மக்களுக்குத் திலகம் தான்..........
-
"ரிக்ஷாக்காரன்" போட்டியில். படு தோல்வியடைந்த "ராஜா" வுக்கு ஆதரவா கைபுள்ளைங்க ஆத்திரத்தில் ஏதேதோ உளறுகிறார்கள். தோல்வி நமக்கு சகஜம்தானே பாஸ். எம்ஜிஆரிடத்தில் புதுசாவா நாம தோற்கிறோம் என்று நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள்.. "ராஜா"வுக்கு அதிகமாக 11 காட்சிகள் திரையிட்டார்களாம். அதுதான் வசூலில் முன்னணி பெற்றதற்கு காரணமாம். அய்ய்--- அக்கா கால்ல ஆறுவிரல் என்று "அடிமைப்பெண்ணி"ல் வரும் ராணி என்ற குழந்தை சொன்னவுடன் சந்திரபாபு சும்மா இரும்மா! ஐந்து விரல்ல அள்ளி சாப்பிடவே சோத்தைக்காணோம் இதிலே ஆறாவது விரல் வேறயா? என்பார்.
அதே மாதிரி 3 காட்சிகளை hf ஆக்கவே மூச்சு வாங்கும் போது எக்ஸ்டிரா 11 காட்சிகள் போட்டா டங்குவார் அறுந்து போகாது. எக்ஸ்டிரா காட்சியை போட்டா சாயம் வெளுத்து விடும் என்று பயந்து காட்சி ஓடாமலே hf
ஆக்கியிருப்பாங்க போல தெரியுது.
அதனால்தான் இன்னெரு சிவாஜி ரசிகர் 35 நாளில் மொத்தம் 107 காட்சிகள்தான் ஓடியது என்று முந்தைய சிவாஜி ரசிகரை இவர் காட்டி கொடுத்து விட்டார்.
பொய் சொன்னால் எல்லா சிவாஜி ரசிகர்களும் ஒரே மாதிரி பொய்யை சொல்ல வேண்டாமா?.
ஒருவர் 2 காட்சிதான் எக்ஸ்டிரா என்கிறார். இன்னொருவர் 11 காட்சிகள் எக்ஸ்டிரா என்கிறார்.
முதலாமவர் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் 107 என்கிறார்.
இரண்டாமவர் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் 146 என்கிறார்.
எப்படியோ "ரிக்ஷாக்காரன்" வசூலை முறியடிக்க நினைத்து போட்ட திட்டம் முடியாமல் குறைந்த பட்சம் தேவி பாரடைஸிலாவது முறியடிப்போம் என்று செயல்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் 50 நாட்கள் வரை உயிரை கையில் பிடித்து ஓடிய "ராஜா" 50 நாட்கள் தாண்டியதும் ரத்த வாந்தி எடுத்து ஸ்டெச்சரில் படுத்து விட்டார் . பின்பு ஸ்டெச்சரோடு ராஜா வை இழுத்து சென்ற அவல காட்சியைத்தான் நாங்க பார்த்தோமே!. சிவாஜி அடிக்கடி படங்களில் வாஷ்பேசின் அருகே சென்று இருமி கைகுட்டையால் துடைக்கும் போது குங்குமத்தை கரைத்து கர்சீப்பில் ரத்தவாந்தி எடுத்ததை போல காண்பிப்பார்கள். "ராஜா" வுக்குப் அதே நிலைதான்.
அதற்கு காரணம் போட்டி என்பது தனது உடல்தகுதிக்கு தகுந்தவரோடு போட வேண்டும். இதுதான் "ராஜா" "ரிக்ஷாக்காரனோ"டு நடந்த காமெடி போரில் புறமுதுகு காட்டி ஓடி படுதோல்வி அடைந்த சம்பவம் . இப்போது "வெள்ளை ரோஜா" என்று லாலி பாடும் சிவாஜி ரசிகர்களின் மானத்தை அதோடு கூட வந்த "தூங்காதே தம்பி தூங்காதே" "தங்கைக்கோர் கீதம்" படத்தின் வசூல் விபரங்களை வெளியிட்டால் தெரிந்து விடும். அந்த நிலைக்கு போக விடாதீர்கள் சிறுவர்களிடம் தோற்று உங்கள் மானம் கப்பலேறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
"ராஜா" தோற்ற விஷயம் தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இனி என்ன பயன்? உண்மையை ஒத்துக்கொண்டு போவதை தவிர வேறு வழியில்லை. மேலும் ரிக்ஷாக்காரன் 75 நாளிலேயே 12 லட்சத்தை தாண்டி முன்னேறினான். ஆனால் ராஜா 100 நாட்களில் ஓட முடியாமல் மெல்ல நடந்துதான் 12 லட்சத்தை கடந்தது பரிதாபத்தை உண்டு பண்ணி விட்டது. முன்பாவது பரவாயில்லை எப்படியாவது கஷ்டப்பட்டு பணத்தை செலவு செய்து ஓட்டி வசூலை காண்பித்தார்கள். இப்போது அந்தக் கவலையில்லை. நேராக தொழில் பேட்டை சென்று இவர்கள் சொல்லுகின்ற வசூலை போட்டுத்தர அதுவும் வரி,விநியோகஸ்தர் பங்கு வரைக்கும் பிரித்து தர ஆட்கள் தயாராக இருக்கும் போது சிவாஜி ரசிகர்களுக்கென்ன கவலை. சும்மா தாறுமாறாக வசூலை போட்டு தந்து விடுகிறார்கள்.
இந்த வசூல் உண்மையிலேயே வந்திருந்தால் அன்றே பேப்பரில் போட்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்திருப்பார்களே கணேசன் ரசிகர்கள். .இப்போது fb ல்
போட்டு யாரை ஏமாற்றுகிறார்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த சிவாஜி ரசிகர்கள் அப்பாவி எம்ஜிஆர் ரசிகர்களை ஏமாற்றுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நாம் எம்ஜிஆரின் 4,5 படங்களின் வசூலைத்தான் போடுகிறோமாம். மீதமுள்ள படங்கள் பெரிதாக ஒன்றும் வசூலாகவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள்.
எங்களுடைய 4,5 படங்களுக்கே
உங்களுக்கு நாக்கு தள்ளுவதை பார்க்கிறோம். மீதமுள்ள படங்களின் வசூலையும் நாங்கள் தெரிவித்தால்
நீங்கள் அடையப்போகும் கதியை நினைத்து பயந்துதான் சற்று ஒதுங்கி இருக்கிறோம்.
இது உண்மையான வசூல் என்றால் சிவாஜி படத்தயாரிப்பாளர்கள் ஏனய்யா கையில் திருவோடு ஏந்தப் போகிறார்கள்.?
இதில் "புனர் ஜன்மம்" என்ற படம் எடுத்த தயாரிப்பாளர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுப்பதாக பிரபல நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வந்த செய்தியை நினைத்து பாருங்கள். அந்த தயாரிப்பாளரின் வயித்தெரிச்சலை வாங்காதீர்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
"ராஜா" வை மிகவும் கஷ்டப்பட்டு தேவிபாரடைஸ் மற்றும் ராக்ஸியில் மட்டும் 100 நாட்கள்
ஓட்டியதோடு தற்போது அகஸ்தியரவையும் சேர்த்துக் கொண்டார்கள். மய்யத்தில் மையம் கொண்ட சிவாஜி ரசிகர்களே மையத்தில் நின்றால் வெற்றி கிடைக்காது. சுற்றி ஓடினால்தான் வெற்றி என்பதை புரிந்து கொண்டு இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும்?, யதார்த்த நிலைக்கு வாருங்கள் என்று அழைக்கிறோம்..........
-
#புரட்சிதலைவர்
#கலைவேந்தர்
#பொன்மனச்செம்மல்
மன்னாதி மன்னbன் எம்.ஜி.ஆர்
#அவர்களின்_ஆசியோடு_இனிய
#காலை_வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜியார் ரசிகர்கள் பலதரப்பட்ட வகையினர். அவர்களில் ஒருவர் கர்னாடக இசைத்துறையைச் சேர்ந்த, மறைந்த மாண்டலின் இசைமேதை யூ. ஸ்ரீனிவாஸ். தனது தீவிர ரசிகராக இருந்தவரின் இசைக்கு, பின்னர் எம்.ஜி.ஆரே ரசிகராக மாறினார். அத்தகைய பெருமையை பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.
தூர்தர்ஷனில் 1983-ம் ஆண்டு இசை அரங்கம் நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சி முடிந்தவுடன் தூர்தர்ஷன் இயக்குநருக்கு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் பேசியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.! எதற்காக அழைக்கிறார் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, ‘‘இப்போது தூர்தர்ஷனில் மாண்டலின் வாசித்த சிறுவனின் வாசிப்பு அபாரம். அந்தப் பையனின் தொலைபேசி எண் வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
அப்போது, வடபழனியில் தனது குருவின் வீட்டிலேயே தங்கி மாண்டலின் கற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த வீட்டில் தொலைபேசி கிடையாது. எனவே, வீட்டு முகவரியை எம்.ஜி.ஆருக்கு தூர்தர்ஷன் இயக்குநர் அளித்தார். மறுநாள், எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தவர் வந்து ஸ்ரீனிவாஸை சந்தித்து, முதல்வர் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், ‘‘எம்.ஜி.ஆர். தலைமையில் விரைவில் நடக்க உள்ள விழாவில் மாண்டலின் கச்சேரி செய்ய வேண்டும்’’ என்றும் கூறினார். அந்த விழா, நடிகர் கமல்ஹாசனுக்கு எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த பாராட்டு விழா!
கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த எம்.ஜி.ஆரை வெகு அருகில் பார்த்து மகிழ்ச்சியில் மனம் நிறைந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த விழாவில் மாண்டலின் கச்சேரியை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர், தமிழக அரசின் ஆஸ்தான கலைஞராக ஸ்ரீனிவாஸை நியமிக்கப் போவதாக மேடையிலேயே அறிவித்தார். அந்த வருடம் வெளியான ஆஸ்தான கலைஞர்கள் பட்டியலில் வாய்ப்பாட்டு கலைஞர் மகாராஜபுரம் சந்தானம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டவர்களுடன் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயரும் இடம் பெற்றது.
ஆஸ்தான கலைஞராக நியமிக்கப் பட்டபோது மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு வயது பன்னிரண்டுதான்! ஒருவரிடம் இருக்கும் திறமையை மட்டுமே எம்.ஜி.ஆர். பார்ப்பாரே தவிர, வயதை அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். பின்னர், தஞ்சையில் ஆஸ்தான கலைஞர்களை நியமிக்கும் விழா நடந்தபோதும் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் கச்சேரியை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார்.
அதன் பின்னர், கச்சேரிகள் செய்வதற் காக விமானப் பயணம் மேற்கொள் ளும்போது, சென்னை விமான நிலையத்தில் சில சமயங்களில் அங்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் பேச வேண்டும் என்று அவருக்கு ஆசை. என்னதான் இசைமேதையாக இருந்தாலும் சிறுவனான அவருக்கு எம்.ஜி.ஆரிடம் போய் பேசத் தயக்கம். அதுபோன்ற நேரங்களில், எம்.ஜி.ஆரே ஸ்ரீனிவாஸை அழைத்து, அன்புடன் விசாரிப்பார். ‘‘அது நான் செய்த பாக்கியம்’’ என்று பெருமை பொங்கக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.
எம்.ஜி.ஆரின் வசீகரமான முகமும் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் துடிப்பான நடிப்பும் சிறுவயதிலேயே மாண்டலின் ஸ்ரீனிவாஸை ஈர்த்தது. அவரது படங்களில் இடம் பெற்ற அற்புதமான பாடல்கள், அதற்கான அபாரமான இசை ஆகியவற்றால் சொக்கிப்போனார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறிய ஸ்ரீனிவாஸ், மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து ரசிப்பார். அவர் மட்டுமின்றி, டி.வி.யில் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பானால் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே பார்த்து ரசிக்கும்.
1984-ம் ஆண்டு கச்சேரிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்ரீனிவாஸ் சென்றிருந்தார். அப்போது ஓய்வு நேரங்களில் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து தீர்த்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால், காரில் வெளியூர்களுக்கு ஸ்ரீனிவாஸ் செல்லும்போது எம்.ஜி.ஆர். படப் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார். ‘‘தன் படத்தில் இடம் பெறும் பாடல்களை எம்.ஜி.ஆரே கேட்டு டியூன்களை ஓ.கே. செய்வார் என்று கேள்விப்பட்டது உண்டு. அந்தப் பாடல்களை கேட்கும்போது, அவரது அபாரமான இசை ரசனையை புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று சிறுவயதிலேயே இசைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆரின் இசை ரசனையை வியந்து போற்றியுள்ளார்.
இசையை ரசித்தவர் மட்டுமல்ல; இசைபட வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையமைப்பாளர் வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்திய நாதன் என்றுதான் முதலில் விளம்பரம் வெளியானது. ஆனால், பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். 1977-ம் ஆண்டு மார்ச் 5-ல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த ‘நவரத்தினம்’ படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். அவர் இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர். படம் "நவரத்தினம்".........
-
"குடும்பத் தலைவன்" .
______________________
3 வருடங்களுக்கு முன் மதுரை நண்பன் மதுரை பஸ்டான்டிலிருந்து பஸ் ஏறி படம் படம் பார்க்க அழைத்துச் சென்றான் .
ஏதோ அருகில் என்று பார்த்தால் இரண்டு மணி நேரபயணம் .
ஜெயந்திபுரம் அரவிந்த் தியேட்டர் படம் குடும்பத் தலைவன் .
தமிழர்கள் இரத்தத்தில் ஊறியது காதல், வீரம்.
இவ்விரண்டும் இப்படத்தில் சற்று தூக்கல் .
கபடி ,ரேக்ளா ரேஸ் இது போன்ற போட்டிகள் நிறைய . கபடி போட்டியில் மக்கள் திலகத்தின் லாவகம் அலாதியானது .
எம் ஜி ஆர் : இத பார் அம்மா அது சொன்னாங்க அப்பா இது சொன்னாங்க ன்னு வீட்டை விட்டு போனே !
தேவி : என்ன செய்விஙகளாம் ?
எம் ஜி ஆர்: ம்.... உயிரே விட்டுடுவே !
இயற்கையான இலக்கணத்தை வகுத்த காதல் .
இடையில் ஒரு பாடல் .
மழை பொழிந்துக் கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும் .
பல முறை படம் பார்திருந்தாலும் ஏனோ இப்பாடல் என்னை முதன் முறையாக ஈர்த்தது .
இசையில் சொக்கி போனேன் செல்போனில் கேட்பதைவிட திரையரங்கில் நூறு சதவீதம் இனிமை கூடல் .
எனக்கு இசை ஞானம் அறவே கிடையாது இருப்பினும் தொடர்ந்த அந்த பேங்குஸ் சத்தம் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது .
அப்பொழது stereo system கிடையாது
Mono system தான் இருப்பினும் திரையில் இந்தப் பாடல் இனிமை என்னை பிரமிக்க வைத்தது .
பொறுமை தாளாமல் என் நண்பன்
ஶ்ரீ குமாரை அனுகினேன் அவன் மிகுந்த இசை ஞானம் உடையவன் அவன் தாயார் முறைப்படி
கர்நாடக இசையை பயின்றவர்.
அவனிடம் கேட்டேன் இதில் வாசித்துள்ள இசைக் கருவிகள் என்னென்ன என்று.
Vibro phone, guitar ,
violins , Hawaiian guitar ,
maybe xylophone ?
Rhythm bango , tabla etc .
என்று என் சந்தேகத்தை
தெளிய வைத்தான் ..........
-
"புரட்சித்தலைவரின் விஸ்வரூபம்;"
1962 க்குப் பிறகு புரட்சித்தலைவரின் சினிமா வெற்றி, யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்தது. தர்மம் தலை காக்கும், பெரிய இடத்துப் பெண், ஆனந்த ஜோதி, நீதிக்குப் பின்பாசம், காஞ்சித் தலைவன், வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, ஆணையிட்டால், நாடோடி, தனிப்பிறவி, தாயிக்குத் தலைமகன் போன்ற படங்கள் சூப்பர் ரூப்பா வெற்றி அடைந்தன.
இந்த படங்களின் காட்சிகளில், வசனங்களில், பாடல்களில் எல்லாம் தி.மு.க வெற்றிக்கு புரட்சித்தலைவர் மட்டும்தான் காரணம் என்பதை உறுதியாகவே நம்பினார்கள். அதனால்தான் அன்றைய நிலையில் கலைஞார் கருணாநிதியும் ஒரு கவிதை எழுதி எம்.ஜி.ஆரைப் பாரட்டினார்.
இதுதான் கலைஞர் கருணாநிதி புரட்சித்தலைவரை வெளிப்டையாகப் பாரட்டி எழுதிய கவிதை.
கருணாநிதி – எம்.ஜி.ஆர்.
‘வென்றாரும் வெல்லாரும்
இல்லாத வகையில் ஒளிவீசம் தலைவா..
குன்றனைப் புகழ்கொண்ட குணக்குன்றே ‚
முடியரசர்க்கில்லாத செல்வாக்கொல்லாம்
முழுமையுடன் விளக்கம் முழுமதியே‚
தென்னாடும் தென்னவரும் உள்ள வரை
மன்னா உன் திருநாமம் துலங்க வேண்டும்.
உன்னாலே உயர் வடைந்த என் போன்றோர்’’
உள்ளங்கள் அதைக்கண்டு மகிழ வேண்டும்‚”
இந்தத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக எம்.ஜி.ஆர் வெற்றி அடைந்தார். எம்.ஜி.ஆருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்த பேரறிஞர் அண்ணா, அமைச்சர் பதவிக்கு இணையான சிறுசேமிப்புத் துணைத் தலைவர் பதவியைக் கொடுத்து கௌரவப்படுத்தினார்.
புரட்சித்தலைவரின் விஸ்வரூபம்;
யாருமே எதிர்பாராத வகையில் 1969 ஆம் ஆண்டு அண்ணா மறைந்தார். தற்காலிக முதல்வாரன நாவலர் நெடுஞ்செழியன், நிரந்தர முதல்வர் பொறுப்புக்கு வருவார் என்று கட்சினரும் மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் புரட்சித்தலைவரிடம் சரண் அடைந்தர் கருணாநிதி. தன்னை முதல்வராக தேர்ந்தெடுக்க உதவும்படி கேட்டுக்கொண்டார். புரட்சித்தலைவரும் அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். காட்சிகள் மாறின. தன்னை நம்பிவந்த கருணாநிதிக்காக, தி.மு.க. எம்.எல்.ஏக்களை அழைத்துப் பேசினார் புரட்சித்தலைவர். அனைவரையும் தன் வசம் இழுத்து கருணாநிதியை முதல்வர் பதவியில் அமரச்செய்து அழகு பார்த்தார்.
மீண்டும் 1971 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வந்தது. பேரறிஞர் அண்ணா இல்லாத நிலையில் தி.மு.க வெற்றிக்காக புரட்சித்தலைவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் விளைவாக 184 தொகுதிகளில் வெற்றிபெற்று தி.மு.க மாபெரும் சாதனை படைத்தது.
அப்போது தி.மு.க வின் பொருளாளராக இருந்த புரட்சித்தலைவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் விரும்பினார்கள். எம்.ஜி.ஆர் பதவியில் இருந்தால்தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும், தவறுகள் நடக்காது என்று தலைவர்கள் நம்பினார்கள். அனால் இந்தக் கோரிக்கையை தட்டிக்கழிக்க திட்டம் தீட்டினார் கருணாநிதி. தனக்கு விருப்பம் இருப்பது போலவும், ஆனால் சட்ட விதிப்படி, அமைச்சராக இருப்பவர் திரைபடங்களில் நடிக்கக்கூடாது என்று இல்லாத ஒரு தடையை இருப்பதாகச் சொல்லிப் போலியாக நடித்தார். பேரறிஞர் அண்ணா அமைச்சருக்கு இணையான பதவியை புரட்சித்தலைவருக்குக் கொடுத்தபோது, நடிப்பதற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை‚ ஆனால். கருணாநிதியோ அப்படியொரு விதி இருப்பதாகச் சொல்லி முதலைக் கண்ணீர் வடித்தார்.
ஊழலை அம்பலப்படுத்தினார்;
பெரும்பாலான தலைவர்கள் புரட்சித்தலைவர் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், பதவி விவாதத்திற்கு உள்ளாவதை புரட்சித்தலைவர் கொஞ்சமும் விரும்பவில்லை. அதனால் அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டென்று நிராகரித்து, தன்னுடைய ஆளுமைத் திறனைக் காட்டினார். அப்போது புரட்சித்தலைவருக்கு, உண்மையிலே சினிமாதான் முதல் விருப்பமாக இருந்தது பதவியை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை என்பதுதான் உண்மை‚
பெரியார் அண்ணா கருணாநிதி ஆகியோருடன்… எம்.ஜி.ஆர்.
1971ஆம் தேர்தலுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதியின் போக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. கட்சி ஆட்சி இரண்டும் தன்னுடைய கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைத்தார். புரட்சித்தலைவருடைய புகழையும் செல்வாக்கையும் குறைக்க நினைத்தார். தன்னை வலுவாக நிலை நிறுத்திக் கொள்வதற்கு, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு வேண்டும் என நினைத்தார். அதனால், அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல், அனுசரித்து ஆட்சி நடத்தத் தொடங்கினார். தங்களைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை என்ற நிலையில், தி.மு.க. ஆட்சியில், ஊழல் கரை புரண்டு ஓடியது‚
இதனைக் கண்டு ஆவேசமான பெருந்தலைவர் காமராஜர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க.வின் ஊழல்களை அம்பலப்படுத்தினார். ஆனால் கருணாநிதியோ எதிர்க்கட்சிகளின் அறைகூவல்களை காதில் வங்கவே இல்லை‚
அடுத்த கட்டமாக, தன்னுடைய அரசியல் வாரிசாக மு.க. முத்துவை நுழைப்பதில் முழுமூச்சாக இறங்கினார். முதலில் மு.க.முத்துவை புரட்சிதலைவருக்குப் போட்டியாக சினிமாவில் கொண்டுவந்தார். புரட்சித்தலைவர் போலவே, அவதாரம் புரட்சித்தலைவர் போலவே நடித்த முத்துவின் பெயரில் தி.மு.க.வில் ஏராளமான ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. எம்.ஜி.ஆர் பெயரில் ரசிகர் மன்றங்கள்
தொடங்குவதற்கு அனுமதி மறுக்கபட்டு, முத்துவின் பெயரில் மன்றங்கள் ஆரம்பிக்கும்படி கட்சியின் கிளைச் செயலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவுகள் பறந்தன.
மதுரையில் நடந்த தி.மு.க. மாநாட்டில் மு.க.முத்து தலைமையேற்று ஊர்வலம் நடத்தியதைக் கண்டு புரட்சித்தலைவரின் ரசிகர்கள் அதிர்ந்து நின்றார்கள். எம்.ஜி.ஆர் மன்றங்களை முத்து மன்றமாக மாற்றுவதற்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஏராளமான ஊர்களில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் முத்து ரசிகர் மன்றமாக வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டன. இதைக் கண்டு தமிழகமெங்கும் புரட்சித்தலைவரின் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
நான் அப்போது தீவிர எம்;.ஜி.ஆர் ரசிகர் மன்ற உறுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றத்துக்கு நாங்கள் உருவாக்கிய தாமரைக் கொடி அப்போது திமுகாவில் பெருத்த சலசலப்பை எற்படுத்தியிருந்தது. எம்.ஜி.ஆர் மன்றங்களுக்கு ஏற்படும் சோதனைகளைக் கண்டு எங்கள் மனம் பொறுக்கவில்லை. அதனால் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற எதிர்காலம் குறித்து சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்தோம். எம்.ஜி.ஆர் மன்றத்தின் அடையாளச் சின்னமாக நாங்கள் ஏற்றியிருக்கும் தாமரைப்பூ கொடிக்கு அங்கீகாரம் பெற முடிவு செய்தோம். இதற்காக நாங்கள் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தர வேண்டும் என்று புரசத்சித்தலைவரை மன்றாடிக் கேட்டுக்கொண்டோம். புரட்சித்தலைவரும் ஒப்புக்கொண்டார்.
1972ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்று எம்.ஜி.ஆர். மன்றங்களின் சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியா திருமண மண்டபத்தில் (அதுதான் இப்போது அ.தி.மு.க.வின் தலைமையகம்) ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் புரட்சித்தலைவர் ஆட்சிக்கு எதிராகப் பேச வாய்ப்பு இருக்கிறது என்பதை முதல்வர் கருணாநிதி அறிந்துகொண்டார். உடனே அதனை தடுக்கும் முயற்சியாக, சில தலைவர்களை சமாதானம் பேசுவதற்காக புரட்சித்தலைவரிடம் அனுப்பி வைத்தார். கட்சியிலும் ஆட்சியிலும் இனிமேல் எந்தத் தவறுகளும் நடக்காது, தவறு செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் என்று உத்திரவாதம் கொடுத்தார். முதல்வரின் உத்தரவாதத்தை புரட்சித்தலைவர் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டார். அதுதான் எம்.ஜி.ஆரின் குணம்.
அதனால் அன்றைய கூட்டத்தில் புரட்சித்தலைவர், “ திமுகதான் நமது ஒரே அமைப்பு தி.மு.க. கொடிதான் நம்முடைய கொடி தனித்த வேறு அடையாளம் எதுவும் நமக்குத் தேவை இல்லை. தாய்க் கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று என்னிடம் கேட்டால் நான் தாய்க் கழகம்தான் வேண்டும் என்பேன். தாய் தன் குழந்தையை விட்டுத்தரமாட்டாள்” என்றார்.
புரடசித்தலைவரின் பிரகடனத்தைக் கலைஞர் கருணாநிதியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதற்காவே காத்திருந்தது போன்று, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் அவசரம் அவசரமாக செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதாக 1972, அக்டோபர் 10 ஆம் தேதி தி.மு.க.வில் இருந்து புரட்சிதலைவரை நீக்கினார். அப்பபோது, ‘அண்ணா ஒப்படைத்து விட்டுச் சென்ற கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதனால் வேறு வழியின்றி கனியை எறிய வேண்டியதானது” என்று விளக்கம் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி.
புரட்சித்தலைவர் கட்சியல் இருந்து வெளியேற்றப்பட்டதும், தமிழகமே ஸ்தம்பித்து நின்றது‚ ‘எம்.ஜி.ஆர் வாழ்க, கருணாநிதி ஒழிக” என்று வாசகம் எழுதப்பட்ட வாகனங்கள் மட்டும் ஓடின. எம்.ஜி.ஆர். செய்தி தாங்கிவந்த நாளிதழ்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்தது. யாருடைய தலைமையும் இல்லாமல் தமிழகத்தில் தன்னெழுச்சிப் புரட்சி ஏற்பட்டது. அ.தி.மு.க. உதயமானது.
பிரமிக்கவைத்த வெற்றி;
கட்சி தொட்ங்கிய ஆறு மாதத்திலேயே தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக புரிய வைக்கும நிகழ்வு நடந்தது. திண்டுக்கல்லில் 1973 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டார். அப்போது ஆளும் கட்சி சார்பில் புரட்சித்தலைவருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கபட்டன.
புரட்சிதலைவருக்கு இந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் சின்னம் – உதயசூரியன் என்று தான் மக்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இரட்டை இலை எடுபடாது என்று தி.மு.க.வினர் கணக்குப் போட்டனர். அதேபோன்று தி.மு.க. பிளவுபட்டதால், இந்தத் தேர்தலில் கமாராஜர் தலைமையிலான காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என்று கணிப்புகள் வெளியாகின.
திண்டுகல் இடைத்தேர்தல் வாக்குச்சீட்டில் ஏழாவது இடத்தில் இரட்டை இலையும், எட்டாவது இடத்தில் உதயசூரியனும் இடம் பிடித்தன. அந்தத் தேர்தலில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மாயத்தேவர் லட்சக்காணகான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில், அ.தி.மு.கவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தை. காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. அதுமட்டுமின்றி, சொற்ப ஓட்டுகளில்தான் டெபாசிட் தொகையை தக்க வைத்தது.
புதிய சின்னம், கட்சிப் பிளவு, காங்கிரஸ் வெற்றி என சொல்லப்பட்ட அத்தனை கணிப்புகளையும் புரட்சித்தலைவர் செல்வாக்கு அடித்து நொறுக்கியது. இந்த திண்டுக்கல் தொகுதி மட்டுமின்றி, இதுவரை தி.மு.க.பெற்றுவந்த அனைத்து வெற்றிகளுக்கும் புரட்சித்தலைவர்தான் மூலகாரணம் என்பது நிரூபணமானது‚
திரையிலும் வெற்றி;
தி.மு.க.வில் இருந்து வெளியேறி முழு நேர அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர் மாறியதும், அவரது சினிமா வெற்றி முடிவுக்கு வந்துவிடும் என்றுதான் அனைவரும் நம்பினார்கள். ஆனால், தனக்கு எப்போதும், எதிலும் தோல்வி இல்லை என்று புரட்சித்தலைவர் நிரூபித்துக் காட்டினார்.
கட்சியில் இருந்து புரட்சித்தலைவர் வெளியேறிய பிறகு வெளியான முதல் படமான இதயவீணையும், அடுத்த படமான உலகம் சுற்றும் வாலிபனும் ஏராளமான இடைஞ்சல்களை சந்தித்தன. இந்தப் படங்கள் வெளிவரவே முடியாது என்ற அளவுக்கு தொந்தரவகள் இருந்தன. ஆனால், அத்தனை சவால்களையும் தாண்டி வெளியான இந்தப் படங்கள் சாதனை வெற்றி பெற்றன.
இதனையடுத்து, வெளியான உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, இதயக்கனி, பல்லாண்டுவாழக், நீதிக்குத் தலைவணங்கு, உழைக்கும்கரங்கள், இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று கடைசிப் படம் வரையில் வெற்றிபெற்றார்
இன்றைய அ.தி.மு.க ஆட்சி மட்டுமல்ல, எதிர் காலங்களிலும் தொடர்ந்து அமைய இருக்கும் அ.தி.மு.க வின் ஆட்சிகளுக்கும் ஆணி வேராகப் புரட்சித்தலைவர் என்றென்றும் இருபார். இந்தப் பூவுலகில் கடைசி மனிதன் இருக்கும்வரை புரட்சித்தலைவரின் புகழ் நீடுழி நிலைத்து நிற்கும்..........mgn.,
-
ஒருதவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடாதவர் நம் தலைவர்..அதுக்கு என்ன என்கிறீர்களா பதிவை தொடருங்கள்.
ஆரம்ப காலங்களில் ஜிவாஜி படங்களை எடுத்து பின் தலைவர் உடன் இணைந்து பல வெற்றிகளை குவித்தவர் சரவணா பிலிம்ஸ் அதிபர் ஜி.என்.வேலுமணி அவர்கள்...
குடியிருந்த கோவில் படம் முடிந்து திரை விநியோகஸ்தர்கள் பார்த்து வியந்து வியாபாரங்கள் முடிந்து படம் வெளிவரும் நேரம்.
தலைவரின் 96 வது படம்..வந்த தேதி 15.3.68...இல்...படப்பெட்டிகளை வாங்க விநியோகம் செய்வோர் சரவணா பிலிம்ஸ் அலுவலகம் வர அங்கே இருந்த மேலாளர் ஆளுக்கு 5000 பணம் அதிகம் தந்தால் மட்டுமே பட பெட்டியை உங்களுக்கு கொடுக்க சொல்லி தயாரிப்பாளர் முடிவு என்று சொல்ல.
இது என்ன பேசி முடிவான தொகை விட அதிகம் இது அவர் தலைவரை தேடி ஓட அவர் வேலுமணி அவர்களை தொடர்பு கொள்ள அவர் வெளியூரில் இருந்த படியால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில்.
தலைவர் சரி அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து படத்தை வெளியிடுங்கள் ...நஷ்டம் வந்தால் நான் பொறுப்பு என்று சொல்லி படம் வெளிவந்தது.
சூப்பர் ஹிட் ஆனது படம்.....வெளியூரில் இருந்து திரும்பிய வேலுமணி அவர்கள் படத்தின் வெற்றியை குறித்து தலைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்ப போதிய மகிழ்ச்சி இல்லை தலைவர் தரப்பில்.
பேசிய வார்த்தைகள் மாறி விட்டதால் தலைவருக்கு வருத்தம்.
தன்னிலை விளக்கம் கொடுக்க முயற்சித்த அவருக்கு தலைவர் தரப்பில் போதிய வரவேற்பு இல்லை.
அடுத்த படம் அவர் எடுத்தார் நம்ம வீட்டு தெய்வம் என்ற பெயரில் முத்துராமன் அவர்கள் மற்றும் கே ஆர் விஜயா அவர்கள் நடிப்பில் ..படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற...
அடுத்த படம் அன்னை அபிராமி என்று அவர் தயாரிப்பில் வர படம் பெரும் தோல்வி அடைய...
அதல பாதாளம் நோக்கி பயணம் பயணம் ஆரம்பம் அவருக்கு..
மீண்டும் ஜிவாஜி அவர்களிடம் போக முடியாது....தலைவர் இடமும் சின்ன வருத்தம்...
சோர்ந்த மனநிலையில் அவர் தவிக்க அவரின் நண்பர் எழுத்தாளர் மா.லட்சுமணன் உங்கள் இந்த பள்ளத்தை சரி செய்ய அவரால் மட்டுமே முடியும் உங்கள் சார்பில் நான் போய் அவரிடம் பேசுகிறேன் என்று வர.
சந்தர்ப்பம் சூழ்நிலை ஒரு மனிதரை தடம் மாற வைக்கிறது என்று அவர் ஆரம்பிக்க.
தலைவர் எந்த சந்தர்ப்பத்திலும் தடம் மாறதவரே சிறந்த மனிதர் என்று சொல்ல.
முடிவில் ஜி.என்.வீ...அவர்கள் நிலை குறித்து தலைவரிடம் அவர் எடுத்து சொல்ல..
கடைசியாக அவர் எடுத்த படத்துக்கு கே.ஆர்.விஜயா அவர்களின் கணவர் வேலாயுதம் தான் பண பொறுப்பு என்று சொல்ல..
தலைவர் அவரிடமே விசாரிக்க....அதுவே உண்மை என்று தெரிந்த உடன்...என் படத்துக்கு பேசிய தொகையை விட கடைசி நேரத்தில் அதிகம் பணம் வாங்கினால் அது என் மீது இருந்த நம்பிக்கையை வீண் செய்வது போல அல்லவா..
சரி நாளை காலை கற்பகம் அரங்குக்கு அவரை அழைத்து வாருங்கள் என்று சொல்ல அதன் படி.
தலைவர் தவறுகளை மறந்து தன் 96 வது படத்துக்கு பின் 4 வருடங்கள் கழித்து 116 ஆவது தலைவர் படம் ஆக மீண்டும் அந்த ஜி.என் வேலுமணி அவர்கள் உடன் இணைந்து வெளி வந்த படம்தான்.
நான் ஏன் பிறந்தேன்.
படம் வெளிவந்த தேதி
09.06.1972...படத்தில் தன் கணவர் எடுத்து தோல்வி அடைந்த அவருக்கு ஆக கே.ஆர் விஜயா அவர்கள் நடிப்பில் இணைய 100 நாட்கள் தாண்டி ஓடிய வெற்றி குடும்ப படம் அது..
அவர்தான் பொன்மன செம்மல் எம்ஜிஆர் அவர்கள்...நன்றி.
வாழ்க அவர் புகழ்..........
தொடரும்...உங்களில் ஒருவன்..........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 01/099/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
இந்த கால தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்.அப்படி என்ன செய்து தி.மு.க.விற்கு சாதித்துவிட்டார் என்று கேள்வி எழுப்புகின்றனர் . அந்த கால தி.மு.க.வினர்*இப்படி கேள்வி கேட்கமாட்டார்கள்.ஏனென்றால் எம்.ஜி.ஆருடன் கட்சியில் அவர்கள் பயணித்தவர்கள். கண்கூடாக பார்த்தவர்கள் .பலனை அனுபவித்தவர்கள் .அவரை கட்சியில் இருந்து நீக்கியபின் விளைவையும் கண்டு நொந்து போனவர்கள் . எம்.ஜி.ஆர். தி.மு.க.விற்கு அப்படி என்ன செய்து விடவில்லை என்றுதான் கேட்கவேண்டும் .தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் பெயரை சூட்டி**,1957ல் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் நடித்தார்அந்த படத்தில் ஒரு வசனம் நாளைய போட்டியில் உதயசூரியன் என்ன ஒரு உதவாக்கரை போட்டியிட்டாலே ஜெயித்துவிடுவான் . . 1962ல் விக்கிரமாதித்தன் படத்தில் உதயசூரியன் சின்னத்தை தன் நெற்றியில் திலகமாக இட்டு நடித்தார் .புதிய பூமி படத்தில் தன்னுடைய பெயரை கதிரவன் என வைத்துக் கொண்டார் .பல படங்களில் தன் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் நாமத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகைகளில் அவரை பற்றி வசனங்கள், பாடல்கள், அவரது பெயரின் பின் பாதியான துரை என்கிற வேடத்தில் நடித்தார் . தி.மு.க.வில் இருக்கும்போது, உதயசூரியன் சின்னம் பிரபலம் ஆகும் வகையில் வசனங்கள் .உதாரணம் : குடை பிடிச்சா சூரியன் மறையாது - சந்திரோதயம் .* நீ அஸ்தமிக்கும் சூரியன் .அஸ்தமிக்கும் சூரியன் அடுத்த நாளே உதயமாகும் - ஆயிரத்தில் ஒருவன் .* உதயசூரியன் எதிரில் இருக்கையில் உள்ள தாமரை மலராதோ, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இருண்ட பொழுதும் புலராதோ -பாடல் -நல்லவன் வாழ்வான் . சூரியன் உதிச்சதுங்க இங்கே காரிருள் மறைஞ்சதுங்க ,சரித்திரம் மாறுதுங்க ,இனிமே சரியா போகுமுங்க -பாடல் -நம்நாடு .புதிய சூரியனின் பார்வையிலே ,உலகம் விழித்து கொண்ட வேளையிலே -அன்பே வா . தாமரை அவளிருக்க ,இங்கே சூரியன் நானிருக்க ,ஒய் சாட்சி சொன்ன சந்திரனே நீ போய் தூது சொல்லமாட்டாயோ - படகோட்டி*இப்படி பல உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்உதயசூரியன் சின்னத்தை தன் சட்டையில் பல படங்களில் அணிந்தபடி நடித்தார் . பல படங்களில் கருப்பு,சிவப்பு வண்ணத்தில் உடைகள் அணிந்து கட்சிக்கு விளம்பரம் தேடி தந்தார் .*.உதயசூரியன் உதயமாகும் பல காட்சிகள் திரைப்படங்களிலே காணலாம் .தி.மு.க.வின் தேர்தலநிலை அறிக்கை தயாராவதற்கு* முன்பே நாடோடி மன்னன் படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து*தான் அறிவிக்கும் தி.மு.க.வின் கொள்கை திட்டங்களான குடிசை மாற்று வாரியம், முதியோர் ஒய்வு ஊதிய திட்டம் விவசாயிகள் நலத்திட்டம் , மாணவர்கள் உதவித்தொகை திட்டம் ,நகர்ப்புறஅபிவிருத்தி* திட்டம், கல்விநிதி திட்டம் , பெண்களுக்கு பாதுகாப்பு திட்டம்,குடும்ப நல* திட்டம்* இப்படி பல்வேறு திட்டங்களை மலைக்கள்ளன் படத்தில் இருந்து நாடோடி மன்னன் வரையில் வசனங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் .மலைக்கள்ளன் படத்தில் தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்,கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் , கருத்தாக பல தொழில் பயிலுவோம், ஊரில் கஞ்சிக்கில்லையென்ற சொல்லினை** போக்குவோம்*ஆளுக்கொரு வீடு கட்டுவோம்,அதில் ஆன கலைகளை சீராக பயில்வோம் என்று பாடியுள்ளார் .நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவல்லாம் செய்வோம் என்பதை வசனங்கள், பாடல்கள் மூலம் தானே* அறிவித்து வரும் காலத்தில் அதை செய்து காட்டுவோம் என்றார் .அதனாலேயே 1967ல் நடைபெற்ற தி.மு.க மாநாடு அண்ணா தலைமையிலும் ,அதற்கு பின்னால் ஒரு மாநாட்டை எம்.ஜி.ஆர். தலைமையிலும் நடைபெற்றது என்பது வரலாற்று சிறப்பு பெற்ற நிகழ்வு .
நடிகன் குரல் பத்திரிகையில் எம்.ஜி.ஆரை நிருபர்கள் பேட்டி எடுத்த விஷயங்கள் வெளியாகி இருந்தது . அதில் சில கேள்விகள் கேட்கப்பட்டன .அதற்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாக பதிலளித்தார் . நீங்கள் ஏன் சொந்த படம் எடுத்தீர்கள்* என்னுடைய சொந்தப்படம் என்பது ,சொந்த கதை, சொந்த கற்பனை, என்னுடைய சொந்த ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் எனது சொந்த திறமையை வடிவமைத்து காட்ட வேண்டும் . அதை மக்கள் பார்த்து வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதற்காக நான் எடுத்த ரிஸ்க் . அந்த ரிஸ்க்கை, அந்த கடினமான பணியை வேறு ஒருவரின் காசில், செலவில் செய்து பரீட்சித்து பார்க்க விரும்பவில்லை.அதனால்தான் . நான் என் சொந்த செலவில் முயற்சித்து* .வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது ..உங்களுக்கு அரசியல் தெரியாது என்று நடிகர் சிவாஜி கணேசன் கருத்து தெரிவித்திருக்கிறாரே நீங்கள் ஏன் அவரை கடுமையாக சாடவில்லை என்பதற்கு எனக்கு அதுபற்றி சரியான தகவல் வரவில்லை என்று தட்டி கழிக்கிறார் . இப்படி யார் எந்த எதிரிகள் சாடினாலும் ,அவர் எப்போதும் வேண்டாத வம்புக்கு, வேண்டாத விஷயத்துக்கும் ஒரு போதும்* தீனி கொடுத்தவர் அல்ல . எப்போதும் மற்ற மனிதர்களின் மாண்பை, பண்பை, கருத்துக்களை மதித்தவர் .
பேரறிஞர் அண்ணா*கூறியது போல தம்பி சிவாஜி*கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார் .அவர் ஒவ்வொரு இடத்திலும் அதற்கேற்றது போல சூழ்நிலைக்கு தகுந்தபடி நடந்து வந்துள்ளார்* *நடிகன் குரல்*பத்திரிகை சார்பில்*பேட்டி அளிக்கும்போது அவர் நடிகர் சங்க*தலைவராகத்தான்*பதிலளிக்கிறார் .அங்கு வந்து எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதன் செயல்பாடு இல்லை .தமிழக முதல்வராக இருக்கும்போது முதல்வராகத்தான் செயல்படுகிறார் .கட்சியின்*தலைவராக*இருக்கும்போது கட்சி சார்பில் பொறுப்பாக நடந்து கொள்கிறார் .கட்சி தலைவராக இருக்கும்போது ஜெயலலிதா பேரவை தொடங்கப்பட்டபோது ஜெயலலிதாவை பக்கத்தில் அமர்த்தி கொண்டு ,இந்த பேரவையை யார் தொடங்கினார்கள் ,எப்படி தொடங்கினார்கள்.அவர்கள் மீது நடவடிக்கை கட்சி*ரீதியில் எடுக்கப்படும் , தனி நபர் துதி பாடல் நமது*கட்சியில் இருக்க கூடாது*என்று கூறி ,ஜெயலலிதா முன்னிலையில் அவர்கள்மீது*நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் . கட்சியை*வழி நடத்துபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக எம்.ஜி.ஆர். நடந்துகொண்டார் .*
அதே போல எம்.ஜி.ஆர். முதல்வராகவும், கட்சி*தலைவராகவும் இருந்த*நிலையில்*சேலம்*ஆத்தூர்*பகுதியில்*கட்சி பணியில் இருந்த ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விடுகிறார் .* அடுத்த சில நாட்களில் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருடன்,அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோருடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும் அமர்ந்து*உணவருந்துகிறார் .அதை கண்ட*அமைச்சர் ,எம்.ஜி.ஆரிடம் கேள்வி*கேட்டபோது ,அவர் கட்சியின் உறுப்பினராக இங்கு வரவில்லை*,கட்சி பணிகளை, தன் கடமைகளை முறையாக நிறைவேற்றாததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்* ஆனால் இப்போது இவர் என் உடன்பிறவா தம்பி ,என் உறவு .ராமச்சந்திரன் என்கிற தனி மனிதனாக*அவரை*உபசரிக்கிறேன்*என்றாராம் .இப்படி நாம் வைக்கிற இடத்தில வைக்கவேண்டிய பாத்திரத்தை சரியாக*வைக்க* வேண்டும் என்பதில்*ஒவ்வொரு பணியிலும், ஒவ்வொரு கட்டத்திலும் , ஒவ்வொரு காலத்திலும் சரியாக இருக்கிறார் என்பதால்தான்*அவரது வரலாறு இந்த பதிவுகளில் முக்கியத்துவம் பெறுகிறது .
அரசியல் சூழ்நிலைகளில் எம்.ஜி.ஆரை பின்பற்றி ரஜினிகாந்த் வருகிறார் என்று சொல்லப்படுகிறது .அல்லது எம்.ஜி. ஆரோடு ரஜினிகாந்தை ஒப்பீடு செய்வது சரியா*தவறா என்று கேள்வி எழுப்பப்படுகிறது .எம்.ஜி.ஆரை ஒரு போதும் யாருடனும் ஒப்பீடு செய்வதற்கில்லை* ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்**அந்த மன்னாதி மன்னன் . ஆனாலும்கூட அவர் தடம் பதித்த சினிமாவும் சரி, அரசியலும் சரி ,அந்த வழியில் வந்த எல்லோரையும் எல்லோரும் ஒப்பிட்டுத்தான்* பார்ப்பார்கள். அதை தவறு என்று சொல்லிவிட முடியாது .எப்படி ஒரு மிகப்பெரிய ஆலமரம் இருக்கிறதோ, அந்த ஆலமரம்தான்* ஒரு ஊரின் வழிகாட்டியாகவும், திசை காட்டியாகவும் உள்ளது* அப்படி திரையிலிருந்தும் அரசியலில் இருந்தும் உதித்த ஆலமரம்தான் இமயம் போன்ற எம்.ஜி.ஆர் . அவரை ஒப்பிடாமல், திரும்பி பார்க்காமல் யாரும் அரசியலில்*எதுவும் செய்துவிட முடியாது இந்த தமிழக அரசியலில் என்பதற்காகத்தான்*பலரும் வந்து ரஜினிகாந்திடம் பேசியிருக்கிறார்கள் .பேசுகிறார்கள்.ஊடகங்களில் அதை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன . அதை தவறு என்று சொல்லிவிட முடியாது .
இமயம் என்றைக்கும் இமயம்தான் . ஆனால் அதன் சாயல் பலருக்கும் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என்று ஒப்பிட்டு பார்ப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்* எம்.ஜி.ஆர் அவர்களை சிலர் கேட்டிருக்கிறார்கள் ஏன் நீங்கள் தர்மேந்திரா போல, திலீப்குமார் போல, ராஜேஷ் கன்னா போல நடிக்க முயலவில்லை என்று .* அதற்கு எம்.ஜி.ஆர். பதில் சொன்னது என்னவென்றால் நான் ஏன் அவர்களை போல் நடிக்க வேண்டும் , ஆட வேண்டும், வாழ வேண்டும் எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதனுக்கு தனி பாணி இருக்கிறது .தனி முத்திரை இருக்கிறது அதன்படிதான் நான் செய்வேன் என்று தனக்கென* உள்ள பாணியை வைத்துக் கொண்டு திரையுலகில்* எம்.ஜி.ஆர். நின்றார், வென்றார், ஜெயித்தார்*. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்,சமீபத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்தும், எம்.ஜி.ஆர். சிலை திறப்பது குறித்தும்*எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தில் திரு.ஏ.சி.சண்முகம் முன்னிலையில் பேசிய போது எம்.ஜி.ஆரின் அரசியல் தந்திரம், திறமை, வெற்றிகள் ,காய் நகர்த்துவது மற்றும் சினிமாவில் சிகரத்தை தொட்டது திரையுலகில் அவர் கடைபிடித்த வெற்றிகரமான பார்முலா ,வசூல் சக்கரவர்த்தி என்று வானளாவ புகழ்ந்து பாராட்டியுள்ளார் .அப்படி ஒரு* சிகரம் தொட்டஅசைக்க முடியாத** இமயம் போன்றவர் எம்.ஜி.ஆர்.*
ரஜினிகாந்த் பேசியது : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசுவதில் பங்குபெறுவதில் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன் .அடிப்படையில் நான் சிவாஜி கணேசனின் ரசிகன். நான் சென்னைக்கு வந்த பிறகு சினிமாவிற்குள் நுழைந்த பிறகு, மக்கள் திலகம் ,பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.அவர்களை பற்றி கேள்வி பட்ட பிறகு அவருடைய வாழ்க்கை வரலாறை படித்து, அவரது படங்களை ரசித்து பார்த்து ,வாழ்க்கையில் அவருடைய பெரிய ரசிகன் ஆகிவிட்டேன் .* அவருடைய பெரிய விசிறி, வெறியனும் ஆகிவிட்டேன்.இப்போ சொல்றேன்.அவருடைய சாதனைகள் என்னவென்றால் 1950களில்* ஒரு பெரிய ஆக்க்ஷன்* ஹீரோவாக இருந்தார் .மலைக்கள்ளன் ,அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன் போன்ற இமாலய வெற்றிகள் கொடுத்திருந்தார் .1952ல் ஒரு சாதாரண நடிகராக வந்த நடிகர் சிவாஜி கணேசன் ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்றார் .அதனால் பெரிய பட தயாரிப்பாளர்கள் சிவாஜி கணேசனை வைத்து படமெடுக்க படை எடுத்தார்கள் .அப்போது தன் திறமைகளை வெளிப்படுத்த , மக்களுக்கு சினிமாவில் தான் யார் என்று நிரூபிக்க எம்.ஜி.ஆர். சொந்தப்படம் எடுக்க தீர்மானித்தார் .* அந்த படத்திற்கு பெரும் பொருட்செலவு, காலவிரயம், தாமதம் ஆனதால் எம்.ஜி.ஆர். கதை இத்துடன் முடிந்தது என்று திரையுலகில் அவருக்கு வேண்டாதவர்கள் பிதற்றினார்கள் . ஆனால் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து ,தானே அதை இயக்கி வெற்றிகரமாக வெளியிட்டார் .தன்னை பற்றியும் ,படத்தை பற்றியும் விமர்சித்தவர்களுக்கு இந்த படம் வெற்றியடைந்தால் நான் மன்னன் இல்லாவிட்டால் நான் நாடோடி என்றார் .ஆனால சாதாரண வெற்றி அல்ல .பிரம்மாண்ட வெற்றி பெற்றார்படம் இதிகாசம் படைத்தது .இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நிலைகுலைந்து போனார்கள் . .விமர்சகர்கள் வாயை அடைத்தார். வசூல் சக்கரவர்த்தி என புகழ் பெற்றார் . சிறந்த படம், சிறந்த இயக்குனர் பரிசுகள் கிடைத்தன .**அந்த சூழ்நிலையில் படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர். வந்தாரென்றால்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்களுக்க ு வியர்வை வரும் .அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை கொடுத்திருந்தார் .* அப்படியொரு வரலாறு, சாதனை, சரித்திரம் படைத்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*அந்த காலத்தில் அவருக்கும் நடிகர் சிவாஜி கணேசனுக்குத்தான் போட்டி .ஆனால் அவரைவிட பெரிய மார்க்கெட்டை பிடித்து, பெரிய சம்பளத்தை பார்த்து , அவரைவிட மிக பெரிய படங்களை மக்களுக்கு அளித்து சாதனை, சரித்திரம், வரலாறு படைத்து, திரையுலகில் இமயம் போல் நின்றார் இல்லையா .அவர்தான் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்தபாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர். நாகேஷ் உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*
2.எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்* இந்த நாட்டிலே -மலைக்கள்ளன்*
3.எம்.ஜி.ஆர்.-நம்பியார் உரையாடல் -ஆயிரத்தில் ஒருவன்*
4.எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா உரையாடல் - அடிமைப்பெண்*
5.ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் - உரிமைக்குரல்*
6.ரஞ்சித் -சுந்தரம் -எம்.ஜி.ஆர். உரையாடல் -நினைத்ததை முடிப்பவன்*
**
-
மதுரையில்
கணேசனின் மூன்று படங்கள் பெற்ற வசூலை ....குறைந்த நாளில் துவம்சம் செய்த காவியங்கள்...
உரிமைக்குரல் 129 நாள் வசூல் :5,61,924.00
உ.சு.வாலிபன் 139 நாள்
வசூல் : 5,62,195.10
பட்டணம்மா
182 நாள் வசூல்
5,61,495.20
வறண்ட மாளிகை
200 நாள் வசூல்
5,30,536.15
தகரபதக்கம்
134 நாள் : 5,42,902.00
மதுரையில்..
1977 வரை கணேசனின் படங்களை ஒட்டுமொத்தமாக
முறியடிக்கபட்டது...
கணேசனின் போலி பொய் கூட்டம்...
மதுரையில் முக்காடிட்டுள்ளது...
சென்னை தெய்வமகன்
3 அரங்கில் 100 நாள் ஒட்டி மட்டமான தெய் (திருட்டு) மகன் வசூல்
சாந்தி,கிரவுன்,புவணே
300 நாள் : 8,71,870
கேவலமான வசூல்...
1966 ல்
பெ.தான் பிள்ளையா
வசூல் : 9,04,385.40
(ஸ்டார் 100, மகாராணி100, நூர்ஜகான் 84, உமா 80)
மக்கள் திலகத்தின்
நல்லநேரம்
வள்ளுவர் 50 நாள்
வசூல் : 84,518.04
வ.மாளிகை
50 நாள் அதே வள்ளுவர் அரங்கில் வசூல் :66,049.37.மேலே பழனி நகர் ஆகும்.
[ஈரோடு நகர் மலரில்
1956 ல் அலிபாபா திரைப்படம் 100 நாள் ஒடியுள்ளது என தகவல்..
.
சென்னை நகரில்
திரையிட்ட
நல்லநேரம்
4 அரங்கில் (சாதாரண அரங்கில் டிக்கட் கட்டணம் குறைந்த அரங்கில் திரையிட்டு) 100 நாள் ஒடி முடிய பெற்ற வசூல் : 12,67,127.60
கணேசனின் ராஜா (கூஜா) படம்
தேவிபாரடைஸ்
என்ற பெரிய அரங்கில் திரையீட்டு 99 நாள் (2காட்சி) மற்றும்
அகஸ்தியா, ராக்ஸி
ஒடி முடிய பெற்ற வசூல்
12,53,559.81 ஆகும்.
தேவிபாரடைஸ் 140 காட்சி வரை டிக்கட் கிழித்து அரங்கு நிறைந்த போர்ட் வைக்கப்பட்டு...
99.2 நாளில் காலாவதியான கூஜா வசூல் போலியானது....
பட்டணம்மா
சாந்தி 146
கிரவுன் 111
புவனேஸ்வரி 104 ஒடி
13 லட்சத்தை தாண்டாத மட்டமான வசூல்...
அடுத்து...
வறண்ட மாளிகை
சாந்தி 175 நாள்
கிரவுன் 140 நாள்
புவனேஸ்வரி 140 நாள்
ஒடி முடிய பெற்ற வசூல்
16 லட்சத்திற்கும் குறைவாகும்...
(நாள் : 455 நாள்)
நகரில் ரிக்க்ஷாக்காரன்
குறைந்த நாளில்...
அதாவது
தேவிபாரடைஸ் 142
கிருஷ்ணா 142
சரவணா 104
வசூல் : 16,84,958.32
(நாள்..388 நாள்)
கணேசனின்
மற்ற படங்களின் வசூலை பந்தாடிய
விபரம்...
ஞான ஒளியை விட
நான் ஏன் பிறந்தேன் வசூல் அதிகம்...
தருதலைப்புதல்வன் படத்தைவிட
ராமன் தேடிய வசூல் அதிகம்.
தர்மம் எங்கே என கேட்ட திருடன் படத்தை விட
அன்னமிட்டகை வசூலில் சூப்பர்.
நீதி படத்தை விட இதயவீணை பெற்ற வசூல் அதிகம்.
இதில் என்னட உங்க வசூல்....
சென்னையில்
நல்லநேரம்
ஒடி முடிய வசூல்
16 லட்சத்தை கடந்தது.
இதயவீணை
ஒடி முடிய 13 லட்சத்தை கடந்தது.
நான் ஏன் பிறந்தேன்
ஒடி முடிய 10 லட்சத்தை கடந்தது...
ராமன் தேடிய சீதை
ஒடி முடிய 9 லட்சத்தை கடந்தது..
சங்கே முழங்கு, அன்னமிட்டகை தலா
8 லட்சத்தை கடந்து...
மொத்தம் 6 காவியங்கள்...
சென்னை முழுவதும் திரையிட்டு ...
வசூல் 65 லட்சத்தை கடந்தது...
ஆனால் கணேசனின்
படங்கள் முதல் வெளியீட்டிற்கு பின் பெரிய அளவில் திரையீடு இல்லை...
இது தவிர தமிழகமெங்கும்
மாபெரும் சாதனையில் 6 படங்கள் திகழ்ந்தது.
ஆனால் கணேசனுக்கு
வறண்ட மாளிகை மட்டும் தான் குறிப்பிட்ட ஊரில் வசூல் ஆகும்.
மொத்தத்தில்
1972 ல் அதிக வசூல்
அதிக திரையரங்கு சாதனை...
அதிக நாட்கள் 50,75 எல்லாம் மக்கள் திலகத்திற்கு மட்டுமே.. ராஜூ..........
-
அதே வருடத்தில்*
தாய்க்குப்பின் தாரம் தாரம் காவியம் வெளியாகி தமிழகமெங்கும் மிகப்பெரிய வெற்றியை உருவாக்கியது.*
சமூக திரைப்படத்தின் வரலாறாக திகழ்ந்தது.* எங்கும் ஒரு புரட்சியை...... மிகப்பெரிய வெற்றியை, வசூலை கொடுத்தது
என்று சொல்லலாம்.
அலிபாபாவும் 40 திருடர்களும்
************************************
சென்னை சித்ரா 92 நாள்
சென்னை பிரபாத் 92 நாள்
சென்னை சரஸ்வதி 92.நாள்
மயிலாடுதுறை 92 நாள்
தஞ்சை 92 நாள்
திண்டுக்கல் 92 நாள்
விருதுநகர் 92 நாள்
குடந்தை 92 நாள்
நெல்லை 86 நாள்
வேலூர் 84 நாள்
காஞ்சிபுரம் 92 நாள்
கரூர் 84 நாள்
100 நாளை கடந்த ஊர்கள்
*********************************
சேலம் 154 நாள்
திருச்சி 147 நாள்
மதுரை 141 நாள்
கோவை 126 நாள்
ஈரோடு 100 நாள்
இலங்கை (2) அரங்கு*
100 நாள்...
பெங்களுர் 105 நாள்
கோவில்பட்டி 78 நாள்
கடலூர் 77 நாள்
சிதம்பரம் 77 நாள்
திருப்பூர் 75 நாள்
மற்றும் 50 க்கும் மேற்ப்பட்ட ஊர்களில் 50 நாட்களை கடந்த முதல் தென்னிந்திய திரைப்படம்
புரட்சி நடிகரின்...
பிரமாண்டமான வண்ணப்படைப்பு
அலிபாபாவும் 40 திருடர்களும்
திரைப்படமாகும்.
மக்கள் திலகத்தின் சரித்திர திரைப்படங்கள் ஆரம்ப காலத்தில் மாபெரும் வெற்றிகளை படைத்துள்ளது.*
அந்த வரிசையில் பார்த்தால் ராஜகுமாரி திரைப்படத்திற்குப் பின் மந்திரிகுமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் படைத்துள்ளது.*
1954 ஆம் ஆண்டு வெளியான மலைக்கள்ளன் பல இடங்களில்
100 நாட்களை வெற்றிக்கண்டு*
பல ஊர்களில் 12 வாரங்களை கடந்து சரித்திரம் படைத்துள்ளது. இப்படி மகத்தான வெற்றியை தந்த*
மலைக்கள்ளன் காவியத்திற்கு பின் .....
1955 ல் குலேபகாவலி திரைக்காவியம் மிகப்பெரிய வரலாற்று சாதனையையும்*
அதிக திரையரங்குகளில்*
100 நாட்களையும்...பல அரங்கில்*
12 வாரங்களை கடந்தும் ஓடி வெற்றியை படைத்தது.
1956 ம் ஆண்டு பொன்மனச் செம்மல் எம் ஜி ஆர் அவர்கள் திரைப்பட உலகின் சகாப்தம் நாயகனாக திகழ்ந்தார். ஒரே ஆண்டில் வெளியான மூன்று திரைப்படங்கள் கோலாகலமான வெற்றியை படைத்த முதல் காவிய நாயகனாக புரட்சி நடிகர்*
எம். ஜி ஆர் வலம் வந்தார்.
அலிபாபாவும் 40 திருடர்களும் திரைக்காவியம்......*
12 .01 .1956 ஆம் ஆண்டு வெளியானது. மதுரைவீரன் திரைக்காவியம் 13 .04.1956 ஆம் ஆண்டு வெளியானது.
பல இடங்களில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படம் மதுரை வீரன் திரைப்படத்தின் வெெளியீட்டிற்காக 92 நாட்களில் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்கள்*
ஓட வேண்டிய அலிபாபாவும் 40 திருடர்களும் காவியம் ஏழு ஊர்களில் மட்டும் 100 நாட்கள் ஓடியது. மதுரைவீரன் வரவில்லை என்றால் அலிபாபா திரைக்காவியம் கண்டிப்பாக*
20 திரையரங்கில் 100 நாட்களை கடந்து இருக்கும்.
அதன் பின் வெளியான மதுரைவிரன் திரைக்காவியம்*
40 திரையரங்குகளில் தமிழகத்தில் திரையிடப்பட்டு 33 திரையரங்கில் 100 நாட்களை வெற்றி கொண்ட திரைப்படமாக தென்னக சினிமாவில் சாதனை படைத்தது.
[15/09, 9:59 pm] Raju BS: 65 ஆண்டு கால சரித்திரத்தில்
இக்காவியத்தின் வரலாற்று வெளியீடுகள்....
கடல் போன்றவையாகும்....
1931 முதல் 1960 வரை வெளியான
திரைப்படங்களில்..
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரை வீரன்
தாய்க்குப்பின் தாரம்
சக்கரவர்த்தி திருமகள்
புதுமைப்பித்தன்
நாடோடி மன்னன்
பாக்தாத் திருடன்
திரைக்காவியங்கள்*
2019 வரை வெள்ளித்திரையில்
பல ஊர்களில் வெளியாகி*
உலக சரித்திரம் படைத்துள்ளது.
உலகதிரையின் அதிசயமாகும்.
நிலைத்து நிற்கும் சின்னங்களாகும்.......
வாழ்க!* 60 ஆண்டுகளை கடந்த
வரலாற்று பெரும் காவியங்களை தந்த...... சகாவரம் பெற்ற வெள்ளித்திரையின் ஒரே ஒப்பற்ற
நிழற்ப்பட கதாநாயகன்
மக்கள் திலகத்தின் புகழ்!
1960 வரை வந்த மற்ற நடிகர்களின் படங்கள் மறைந்து போனதப்பா....
நிலைத்து நின்று புகழ் கண்டோதோ மக்கள் திலகத்தின்
காலத்தால் அழியாத காவியங்களப்பா....
இனியும் நிலை பெற்று நிற்கும் திரைப்படங்கள் என்றால் அது பொன்மனச் செம்மலின் தரம் குறையாத காவியங்களப்பா....
தொடரும்...UR.........
-
திருடன் ரசிகனுங்க
என்றுமே உண்மை பேசிய வரலாறு கடந்த 60 வருடங்களாக கிடையாது...
சொன்னதை சொல்லியும்...
போட்ட பதிவையே போட்டு...போட்டு.....
சத்தியத்தின் கழுத்தை நெறிக்கும் கயவர்கள்...
அதனால் தான் தலைவர்....
ஒரு தாய் மக்கள் திரைப்படத்தில்...
சொல்லும் கருத்து இது!
" சத்தியத்தின் கழுத்தை நெறிப்பவர்களை...
சத்தியமாக விடமாட்டேன் என்பார்"
மற்றொன்று....
கணேசனின் எச்சிலை கூட்டம்...
சென்னை
சாந்தியை வைத்தே
பொய் வசூலை விதைப்பானுங்க...
100 க்கும் மேற்ப்பட்ட படங்கள் வெளி திரையரங்கில் ஒட்டப்பட்ட ரகசியம் தாண்டவமாடும் பொழுது..
சாந்தி...
கிரவுன்...
புவனேஸ்வரியின்...
கோல்மால் ..கணக்கு
1977 க்குப் பின்னும் தொடர்ந்துள்ளது போலும்..
உ. சு. வாலிபன்
இதயக்கனி
மீனவ நண்பன்
வசூலை விட..
கணேசனின் படம் தான் அதிகம் என ஊளையிடும் கூட்டத்தின் கனவு இன்னும் பொய் பதிவு மூலம்..... மய்யம் முகநூலில் தொடர்ந்த வண்ணமுள்ளது...
திரையுலகில் ஆண்டுகள் 43 யை கடந்த மக்கள் திலகம்...
மறைந்து 33 ஆகியும்
கணேசன் ரசிகனின் பொய் பித்தலாட்ட வேலை வெறிபிடித்த பைத்தியங்கள் போல்
வலம் வருகிறது...
இந்த பைத்தியங்களை கீழ்பாக்கம் கொண்டு தான் சேர்க்க வேண்டும்!
தமிழகம் முழுவதும் வெளியீட்டு வெற்றி கண்டால் தான் அந்த படம் மகத்தான வெற்றி! மாபெரும் வெற்றி! இமாலய வெற்றி என சொல்ல வேண்டும்..
அதை விட்டு...
2,3 தியேட்டரில் வெற்றி என தம்பட்டம் அடித்தால்...அது தயாரிப்பளாருக்கு
தோல்வியை தான் கொடுக்கும்...
ராஜா
தோல்வி......
நீதீ
மட்டமான தோல்வி......
ஞானஒளி
மரணஅடி........
தர்மம் எங்கே படுகேவலமான
தோல்வி........
தவப்புதல்வன்
பலத்த அடி.........
பட்டணம்மா
மதுரை...சேலம் மட்டும்
தப்பியது...
வ.மாளிகை....
ரி.காரன் பெற்ற வசூலில் பாதி கூட வராத தோல்வி...
இந்த லட்சனத்தில்
6 படம் 100 நாளாம்....
40 தியோட்டரில்..
ஒரு படம் 2 ஊரில் வசூல்!
இன்னொரு படம்
40 ல் 1மட்டும் வசூல்!
மற்றொரு படம்
வசூல் இல்லாது
100 தேய்தது...
இப்படி எல்லாம் ஒரு கேவலமான வெற்றி க்கு பெயர் தான்..
ஹீரோ 72 என்ற பொருளா?
அல்லது...
எங்களால் பொய்யை விலைக்கு வாங்கி மெய் ஆக்குவது தான் கணேசனாரின் படங்களில் நீங்கள் செய்யும் தொழிலா....
கணேசனின் பொய்யர்கள் குறைந்து விட்டனர்... இன்னும் 4,5,கணேசனின் போலி ரசிகர்கள் ஏதோ புலம்பி திரிகின்றனர்...
அவர்களின் நகைசுவை பதிவை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. இன்னும் எத்தனை நாள் இவர்களின் பதிவோ....
திருந்தாத ஜென்மங்கள்
வாழும் பைத்தியங்கள் ஆகும்...
உ.ரா..
-
"நல்லவன் வாழ்வான்"... - மக்கள்திலகம் நடித்து 1961 -ம் வருடம் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய கதை. இயக்குனர் நீலகண்டன் அவர்களின் சொந்த முதல் தயாரிப்பு... இந்த திரைப்படத்துக்கு டைட்டில் எவ்வளவு பொருத்தமாகவும் , மிக ஆழ்ந்த அர்த்தங்களுடன் அமைந்துள்ளது ? மக்கள்திலகம்-mr .ராதா -வில்லன் -ஆக திறம்பட நடித்த படம். தேர்தல் வெற்றி-தோல்வி என திரைகதை நுணுக்கமாக கையாளப்பட்ட காட்சிகளை கொண்டிருந்தது ...இன்றைய தலைமுறையினர் பார்க்க வேண்டிய படமாகும்..
இருட்டு இருந்தால் தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அதுபோல், துன்பங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றால் தான், அதன் முழுப்பலனை நாம் உணர முடியும்.
வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துபவை எண்ணங்கள். கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறு மணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அது போல், சிந்தனை இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த நம் இதயதெய்வம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சந்திக்காத சோதனைகளா? அந்தச் சோதனைகளை சாதனைகளாக்கி, இந்த மாபெரும் இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் நமது இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்...........
-
#பொன்மனச்செம்மல்புகழ்ஓங்குக!!!!!!
#பதவியிலும்_பணிவு...#நம்_தலைவர்
ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக மாண்புமிகு தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல் அவர்கள் அருகே அமைச்சர் திரு.நெடுஞ்செழியன்... இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி : முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக்கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சி யோடு வாங்கிசெல்கின்றனர். இப்போது ராதா அவர்கள் விருது வாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார். திரு ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்கமுடியமுடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி...!!!
மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!!
குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப்பார்து இன்னும் அதிர்ச்சி ...!!!
திரு. ராதா ஏதோ சொல்லமுயலும் போது...அவரை தடுத்து நம் செம்மல் கூறியதாவது : "நான் ஆரம்பகாலத்தில் கஷடபடும்போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தஙகளை அவமதிக்கும் செயலாகும். "தங்களன்றோ என்னை ஆசீர்வதுத்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்கவேண்டும் " என்று சொன்னது தான் தாமதம்...
திரு.ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின... ஒரு மாநிலமுதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச்செய்து திரு ராதா அவர்களுக்கு ப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது???.........
-
நடிகன் குரல் பத்திரிகையில் வாசகர் கேள்விக்கு நம் தலைவர் அளித்த பதில்..........
புரட்சியார் ரசிகன் என்பவர் 15.04.1973 அன்று கேட்ட கேள்வி.
உங்களை மட்டும் இல்லாது உங்கள் குடும்ப பெண்கள் அதுபோல சில தனிப்பட்ட நல்லவர்களின் வீட்டு பெண்கள் பற்றியும் தரக்குறைவான செய்திகளை வெளியிட்டு வருகிறதே நாத்திகம் என்னும் பத்திரிகை.?
தலைவர் பதில்.
அவர்கள் தங்கள் கடந்த கால சொந்த வாழ்க்கையை எண்ணி பார்த்து கொண்டு இருப்பார்கள் என்றால் உங்களுக்கு இந்த கேள்வி என்னிடம் கேட்கும் வாய்ப்பு வந்து இருக்காது...
நான் இது பற்றி பதில் கேட்டு ஒரு ரூபாய் 60 காசுகள் செலவில் அவர்களுக்கு ஒரு பதிவு தபால் அனுப்பி இருந்தேன்..
இதை பெற்று கொள்ள மனம் இல்லை என்ற குறிப்பு எழுத பட்டு அந்த தபால் என் கைகளுக்கு திரும்ப வந்து விட்டது..
ஒருவேளை தபாலில் குண்டுக்கு பதில் குண்டு இருக்குமோ என்று பயந்து விட்டார்கள் போல.
என்று பதில் சொல்லி இருக்கிறார் பொன்மனம்.....
தரம் கெட்டவர்கள் இடம் இருந்து வேறு நல்ல செய்திகளா வரும்?!...........
-
திமுக ஆதரவு நண்பர் ஒருவர்
"கலைஞர(மு.கருணாநிதி) இழுக்காட்டி உங்களுக்கு தூக்கம் வராதே...
நன்றாக கதறவும்.."
என என் பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தார்.
நானும் பதிலுக்கு கலைஞரை, நான் தினம் காய்ச்சிக் காய்ச்சிக் கழுவிக் கழுவி ஊற்றுவதற்கு, சில காரணங்களைக் கூறியிருந்தேன். அவருக்குத் திருப்தி இல்லை போலும்.
"வேற...?"
எனக்கேட்டிருந்தார்.
ஒரு புத்தகமே போடலாம்.
ஆனால் சுருக்கமாக ஒரு பதிவாவது போட்டுவிடலாம் என எண்ணி இந்தப் பதிவை மற்ற நண்பர்களுக்கும் முன் வைக்கிறேன்.
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.
1. முதல் துரோகம் சொல்லின் செல்வரின் நிர்வாகத்திறமையைப் பார்த்து அவருக்குப் பின்னால் ஒரு தலைவர் கூட்டமே நிற்பதைப்பார்த்து இந்த மனிதர்தான் தனக்குக்கட்சியில் உள்ள பெரிய தடை என திராவிட நாடு கோரிக்கையில் அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாட்டைப்பயன் படுத்திக்கொண்டு அவரை செயற்குழுக் கூட்டத்தில் மதுரை முத்து போன்ற ரௌடிகளை வைத்து சட்டையைப்பிடித்துச் செருப்பாலடிக்க வைத்துக் கட்சியை விட்டு வெளியேறச் செய்து சம்பத் கவியரசர் பழ நெடுமாறன் சிவாஜி கணேசன் போன்றவர்கள் கட்சியை விட்டு வெளியேற வைத்தார். தலைமைப் பதவிக்கு எப்போதாவது வர நினைத்தால் தனக்கிருந்த ஒரே இடைஞ்சல் EVK சம்பத் தான்.
தனது சுயநலத்துக்காக முதல் கட்சி உடைப்பு.
2.எம்ஜியாருடன் கைகோத்துக்கொண்டு நெடுஞ்செழியனைச் செல்லாக்காசாக்கிப் பதவி நாற்காலியைப் பிடித்தது.
ஆரம்பகாலத்தில் கட்சியில் ஐம்பெரும்தலைவர்கள் என திமுகவில் அறியப்பட்டவர்கள் அண்ணா, EVK சம்பத், இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராசன். ஒரிஜினல் Big five லிஸ்ட்லயே இல்லாதவர் திரு மு க அவர்கள்.
3. எந்த எம்ஜியாரி.ன் ஆதரவால் பதவிக்கு வந்தாரோ அதே எம்.ஜி.ஆர்.
"மாநாட்டுக்கு வசூல் பண்ணின காசையெல்லாம் என்ன பண்ணினய்யா?"
ன்னு கணக்குக் கேட்டவுடன் அவரைக் கட்சியை விட்டு வெளியேற்றி கழகத்தை பலவீனப்படுத்தி அடுத்த தேர்தலிலேயே கழகத்தைத் தோல்வி முகம் காணக் காரணமாயிருந்தவர் இதே மகானுபாவன்தான்..
இரண்டாம் முறை கட்சியை உடைத்தது இன்னொருவர் தனக்குப்போட்டியாக வந்து விடக் கூடாதென்று.
4.வைகோ வளர்ந்து வரும் வேகத்தைப்பார்த்து மகனுக்குப் போட்டியாக வந்து விடக்கூடாதேயென்று கொலைமுயற்சிக்குற்றம் சாட்டிக் கட்சியை விட்டு வைகோவை வெளியேற்றிக் கழகத்தில் இன்னொரு பிளவை உண்டு பண்ணி அதுவரை ஜாய்ன்ட் ஸ்டாக் கம்ப்பெனியாக திமுக என்று இருந்த கட்சியை The MK (திமுக) Private Limited என, பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றியது.
மூன்றாம் முறை கட்சியை உடைத்தது பொதுச் சொத்தைக் குடும்பத் சொத்தாக்க.
5.பியூன்கள் குமாஸ்தாக்கள் அதிகாரிகள் மட்டத்தில் 5 ரூபாய் 50 ரூபாய் 100 ரூபாய்களில் இருந்த லஞ்சத்தை லட்சக்கணக்கில் உயர்த்தி லஞ்சத்துக்குப் ப்ரோமோஷன் கொடுத்தது. அவை கடைசியாகப் பல கோடிகளில் போய் நின்றது.
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு விலை ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை என ஊழலை வாழ்க்கை நெறியாக்கியது.
6. சிறுபான்மையினர் வாக்குகளுக்காக அவர்களை சந்தோஷப்படுத்த இந்து மத ஆச்சார அனுஷ்டானங்களையும், ஆச்சார்யர்களையும், இந்து மதக் கடவுள்களையும் நையாண்டி பண்ணியது, அவமானப்படுத்தியது.
7. தமிழகத்தில் இன்று நிலவும் கலாச்சாரச் சீரழிவுக்கு, சீர்கேட்டுக்கு
அடிக்கல் மட்டும் நாட்டவில்லை கட்டடமே எழுப்பினார்.
அந்தக்கட்சியின் தலைவர்களில் மாவட்டம் வட்டம் உட்பட சின்ன வீடு இல்லாத ஒரு தலைவர் உண்டா இன்றைய தலைவரைத்தவிர? இருந்தால் அவருக்கு ஒரு கோவிலே எழுப்பிவிடலாம்.
8. எந்த இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலகட்டத்தில் தனது கட்சிக்காரர்களையே உள்ளே தூக்கி வைத்து நொங்கு நொங்கென்று நொங்கினாரோ அவருடனேயே
"அரசியலில் யாரும் எந்தக்கட்சியும் நிரந்தர நண்பனுமில்லை நிரந்தப் பகைவனுக்குமில்லை."
என தனது மானங்கெட்ட பல(ப)வட்டரைத் தனத்துக்கு ஒரு சமாதானம் சொல்லிக் கழகத்தின் தன்மானத்தைக் காற்றில் பறக்க விட்டது.
9. கலைஞர் பலதார மணச் சட்டத்தின் படி குற்றவாளி. தயாளு அம்மாள் கோர்ட்டுக்குப் போகாததால் ஜெயிலுக்குப்போகாமல் தப்பினார்.
இது போதுமா இன்னும் வேண்டுமா?
சட்டத்தால் தண்டிக்க முடியாததால் கொலைகாரன், கொலைகாரன் இல்லை என்று அர்த்தமல்ல. சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டப்பட்டவனுக்குத் தரப்பட்டிருக்கிட்டது.
சட்டம் போட்ட பிச்சை அவனுக்குக் கிடைத்த உயிர்ப்பிச்சை.
அதேபோல திருடன் சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை என்பதால்
அவன் மாசறு பொன்னாகி விடமாட்டான்..
நீங்களே சொல்லுங்கள் நான் என்னுடைய தினசரிக்கடமையாக கலைஞர் பெருமானைக் காய்ச்சிக் காய்ச்சிக் கழுவிக் கழுவி ஊற்றுவது சரியா இல்லையா என்று.
மிக்கநன்றி
Kothai Nachiar.........
-
அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதற்கு,” உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார். ” என்றார் போடோகிராபர். அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ”சரி, தம்பி ராமச்சந்திரன் சொன்னால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ” என்று ஒரு விரல் காட்டி, போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார். பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரைப் பார்த்தபோது, ”ஐந்து விரலை விரித்துக் காட்டினால், நம் கழகத்தின் சின்னத்தைக் குறிக்கும். ஒரு விரலை காட்டினால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார். ”ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள். ” என்றார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலாகித்துப்போன அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பாராட்டி மகிழ்ந்தார்..........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*(02/09/20)அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை முறை, அவர் வாழ்ந்த விதம் ,*ஆகியவற்றின் மூலம் திரைப்படங்களில் மக்களுக்கு தான் கற்ற, அறிந்த செய்திகளை வாத்தியாராக இருந்து கொண்டு போதித்து வந்தார் .
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஒரு முறை தஞ்சை அரண்மனைக்கு விஜயம் செய்ய வருகிறார் .அவரை வரவேற்க தஞ்சை மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் வருகின்றனர் .தஞ்சை அரண்மனையை அவர் பார்வையிடுகிறார் .பார்த்துவிட்டு வரும்போது குறிப்பிட்ட* இடத்தில ஒரு சுரங்க பாதை ஒன்று இருக்கிறது என்கிறார் . ஆனால் அதிகாரிகள் மாவட்ட அலுவலக ஆய்வின்படி அப்படி ஒன்றுமில்லை என்கிறார்கள் .அப்படி இல்லை. என்று கூற முடியாது .எனக்கு தெரிந்த வகையில் இருக்கிறது என்றுதான் சொல்லமுடியும் .அதிகாரிகளான நீங்கள் தான் சரியாக ஆய்வு செய்து கூற வேண்டும் என்றார் .அதிகாரிகள் இது குறித்து உடனடியாக தொல்பொருள் ஆராய்ச்சி துறை மூலம் ஆய்வு செய்து தங்களுக்கு தெரிவிக்கிறோம் என்றார்கள் . எம்.ஜி.ஆர். முதல்வராவதற்கு முன்பு எத்தனையோ மன்னர்கள் ஆண்டார்கள். முதல்வர்கள் ஆட்சியில் இருந்தார்கள் .யாருக்கும் இதுபற்றி தெரியவில்லை .கண்டுபிடிக்கவும் இல்லை .ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வராக வந்து விஜயம் செய்துகண்டுபிடித்து* சொன்ன பிறகுதான் இந்த விஷயம் மக்களுக்கு தெரியும்* வகையில் வெளிச்சத்துக்கு வந்தது, கண்டுபிடிப்பதற்கும் வழி ஏற்பட்டது .
கதாநாயகர்கள் காலால் சண்டையிடுவது ,உதைப்பது என்பதெல்லாம் நடிகர் விஜயகாந்த் சினிமாவில் நுழைந்த பிறகுதான் பிரபலம் என்று பலர் பேசுவதுண்டு .ஆனால் உண்மை அதுவல்ல .* அதற்கும் முன்னோடி எம்.ஜி.ஆர்தான் .எங்கள் தங்கம் படத்தில் ஒரு காட்சியில் ஜெயலலிதாவை மறித்து நகைகளை பறிக்கும் காட்சியில் அந்த இடத்திற்கு வரும் எம்.ஜி.ஆரும்* ,சோவும்* ஸ்டண்ட் நடிகர்கள் குண்டுமணி,மற்றும் புத்தூர் நடராஜனிடம்* நகைகளை கேட்கும்போது ஏற்படும் வாதத்தில் நாங்கள் அரை* பங்கை கொடுத்து விடுகிறோம் எனும்போது ,சோ சொல்லுவார் . நீங்கள் கொடுத்து அண்ணன் வாங்கி கொள்ள மாட்டார் .வேண்டுமானால் அண்ணன் கொடுப்பார் நீங்கள் வாங்கி கொள்ளுங்கள் என்பார் .அப்போது இவர்களுக்கு அரை எதற்கு கால் ஒன்றே போதும் என்று சொல்லி எம்.ஜி.ஆர். காலால் உதைத்து சில நிமிடங்கள் அவர்களுடன் சண்டை போடுவார் .
எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் இருந்தே சண்டை காட்சிகளில்* புதிய புதிய மரபு சார்ந்த ஆயுதங்களை பயன்படுத்துவது, புதிய புதிய யுக்திகளை கையாளுவது*என்பதில் முனைப்பாக இருந்தார் .உதாரணத்திற்கு ரிக்ஷாக்காரன் படத்திற்கு சுருள்வாள் வீசி சண்டை காட்சியில் நடித்திருப்பார் . சுருள்வாள் வீசுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல .பார்வையாளர் ஒருவர் .சுருள்வாள் வீசும்போது அந்த காட்சியை பார்த்து இது என்ன பிரமாதம் என்று விமர்சனம் செய்வது மிக எளிது . ஆனால் அதை சுயமாக வீசி பார்த்தால்தான்* அதிலுள்ள சிரமங்கள் தெரியும்* ஏனென்றால் சுருள்வாள் வீசுபவர் அந்த சமயத்தில் அவரே பலமாக காயப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது இந்த காட்சியில் எம்.ஜி.ஆர். ஒரு பெரிய மேஜை மீது முட்டிகள் போட்டு, மிகவும் விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக*வீராவேசமாக,அதே சமயத்தில் அநாயாசமாக* பல நிமிடங்கள் காட்சியில் நடித்து ரசிகர்களை பிரமிக்க செய்தார் .அந்த காட்சியில் அரங்கத்தில் கைதட்டல்கள் அடங்க வெகுநேரமாகியது .தமிழ்த்திரையுலகில் இந்த மாதிரி சுருள்வாள் வீசி சண்டை காட்சியில்**பிரமிக்கத்தக்க வகையில் வேறு எந்த நடிகரும் இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது .*
எம்.ஜி.ஆர். உழைக்கும் கரங்கள் படத்தில் மான் கொம்பு ஒன்றுடன் சண்டையிடும் காட்சி ரசிகர்களால் மறக்க முடியாதது .அந்த படம் வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம் அந்த சண்டை காட்சிதான் என்று**அந்த காலத்தில் பேசப்பட்டது .* மான்கொம்பூ சண்டை என்றாலே என்னவென்று தெரியாத ஒரு சமூகம் இருக்கிறது . இந்த மான்கொம்பு சண்டை என்பது நமது முன்னோர்கள் அறிந்திருந்த பாரம்பரிய சண்டைக்கலை . இந்த கலையை மக்கள் மனதில் நிலைநிறுத்தவும், மக்களுக்கு நினைவுபடுத்தவும் இந்த சண்டை காட்சியை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார் . இந்த காட்சியிலும் மிகவும் விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக,,சிலம்ப நடையுடன் ,பாவனைகள், அபிநயங்கள் காட்டி* ,அபாரமாக நடித்திருப்பார் எம்.ஜி.ஆர். இந்த காட்சி திரையில் சுமார் 10 நிமிடங்கள் வரை ஓடும். ஆனால் ரசிகர்கள் /பக்தர்கள் கைதட்டல்கள், விசில்சத்தம்* தொடர்ந்து எழுந்தவண்ணமிருக்கும் .* இந்த மாதிரியான சண்டை காட்சியிலும் தமிழ் திரையுலகில் வேறு எந்த நடிகரும் இதுபோல் நடித்து சாதித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம்*. சென்னை சாந்தம்,ஸ்ரீகிருஷ்ணா, உமா, கமலா அரங்குகளில் வெளியானது ..***சாந்தம் அரங்கில் 75 நாட்கள் (தினசரி 4 காட்சிகள் )-* *ஸ்ரீகிருஷ்ணாவில் 82 நாட்கள் (தொடர்ந்து 100 அரங்கு நிறைந்த காட்சிகள் ) உமாவில் 68நாட்கள் ஓடியது . சேலம் அலங்காரில் 96 நாட்கள் ஓடியது .சுமார் 25 அரங்குகளுக்கு மேல் 50 நாட்கள்* கடந்து ஓடியது .
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த ராஜகுமாரியில் இருந்து மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை (1947 முதல் 1978 வரை) பல படங்களில் கத்தி சண்டை, வாள் சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியிருப்பார் .* பல படங்கள் இவரது சண்டை காட்சிகளுக்காகவும், கத்தி சண்டை, வாள் சண்டைகளுக்காகவும் பெரும் வெற்றி பெற்று , ரசிகர்கள், பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன . எம்.ஜி.ஆர்., நம்பியாருக்கு அடுத்து தமிழ் திரையுலகில் அபாரமாக கத்தி சண்டை, வாள் சண்டை காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் எவருமிலர் .இவர்கள் இருவரும் முறைப்படி சண்டைக்கலை யுக்திகளை அறிந்தவர்கள்*.பல படங்களில் இவர்கள் இருவரும் மோதும் காட்சிகளில் அனல் பறக்கும் .ரசிகர்களின் ஆரவாரம் ,கைதட்டல்கள் பலமாக இருக்கும் . உதாரணத்திற்கு*சர்வாதிகாரி,நாடோடி மன்னன் , பாக்தாத் திருடன் , அரசிளங்குமரி ,கலையரசி , ஆயிரத்தில் ஒருவன் ,அரச கட்டளை, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்கள் .நீரும் நெருப்பும் படம் எம்.ஜி.ஆர் மணிவண்ணன் வேடத்தில் நல்லவனாகவும், கரிகாலன் வேடத்தில் வில்லனாகவும்இரு வேடங்களில்* நடித்து அசத்தியிருப்பார் . மணிவண்ணன் எப்போதும் இடது கையில் சிரித்துக் கொண்டே சண்டையிடுவார் . கரிகாலன் எப்போதும் கோபமாக, முரட்டுத்தனத்துடன் ,ஆக்ரோஷமாக வலது கையில் சண்டை போடுவார் . இருவரும் ஒட்டி பிறந்த , உடன்பிறந்த சகோதரர்கள் . ஆனால் இரு வேறு குணங்கள் . ஆகவே எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில் இது வழக்கத்திற்கு மாறான சற்று வித்தியாசமான படம் .கத்தி சண்டையில் ஒரு நேர்த்தி, அழகு, நளினம் எல்லாவற்றையும் காட்டி நடித்திருப்பார் கத்தி சண்டை காட்சிகளை ஒரு நடன காட்சிக்கு ஈடாக செய்திருப்பார் .
ஆங்கில படங்களில் உபயோகப்படுத்தும் கத்தியான sword ஒரு மாதிரியான வடிவில் இருக்கும் . அதே போல தமிழ் சினிமாவில் கத்திகள், வாள்கள் எப்படி இருக்கும் ,அதை எப்படி வீச வேண்டும் என்பதில் முறையான தேர்ச்சி பெற்றவர் எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் பலர் பேசுவதுண்டு .அதாவது ஆங்கில நடிகர் ஏரால்*பிளைன் என்பவர் கத்தி சண்டை ,வாள் சண்டை காட்சிகளில் நடிப்பதில் வல்லவர் .அவரை போல் எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்று .ஆனால் தான் எழுதிய சுய சரிதையான நான் ஏன் பிறந்தேன் என்கிற தொடரில் ,தனக்கும், ஏரால்* பிளைன் என்பவருக்கும் கத்தி சண்டை ,வாள்* சண்டை* காட்சிகளில் நடிப்பதில் உள்ள வித்தியாசங்கள் பற்றி* தெளிவாக எழுதி இருக்கிறார் .எம்.ஜி.ஆர். சண்டை கலைகளை முறையாக* பயின்றதால் ,சிலம்பம், கம்பு சண்டை, குத்து சண்டை ,கத்தி சண்டை, வாள் சண்டை காட்சிகளில் எதிரிகளுடன் போராடி நடிப்பது*அவருக்கு கைவந்த கலையாக இருந்தது . அந்த காட்சிகளை ரசிகர்கள் /பக்தர்கள்ஏன் பொதுமக்கள் கூட நல்ல வரவேற்புடன் ,ரசித்து மகிழ்ந்தார்கள் .இதனால்தான் எம்.ஜி.ஆர். படங்களை மீண்டும் மீண்டும் ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக இருந்தார்கள் .இதற்கு காரணம் எம்.ஜி.ஆருக்கு* முன்பும், பின்பும் நடித்தவர்கள் கூட கத்தி சண்டை, வாள் சண்டை காட்சிகளில் நடித்த நடிகர்கள் பலருண்டு .ஆனால் எம்.ஜி.ஆர். போல சோபித்தவர்கள் எவருமிலர் . இதை பல நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் ,தயாரிப்பாளர்கள் தங்களது பேட்டியில் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்கள் .எம்.ஜி.ஆரின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் ,சினிமா தொழில் மீது இருந்த பக்தி, பற்று, அக்கறை, ஈடுபாடு, அர்ப்பணிப்பு ,கற்று கொள்ளும் ஆர்வம் ,பல கலைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கம் ,ஆகியவைதான் .அந்த காலத்தில் பலர் சொல்வார்கள் எம்.ஜி.ஆர். அட்டை கத்தி வீசுவதில் வல்லவர் என்று கிண்டலும் , கேலியும் பேசியதுண்டு . உண்மையில் அட்டை கத்தி வைத்து சண்டை காட்சியில் நடிக்க முடியாது . மரக்கட்டையில் கத்தி வைத்தும் ,உலோகத்தில் கத்தி வைத்தும் பயன்படுத்தி இருப்பார்கள் .இதை*எம்.ஜி.ஆர். தனது சுய சரிதையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
-------------------------------------------------------------------------------
1.மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றது -தாயை காத்த தனயன்*
2.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர். - எங்கள் தங்கம்*
3.அதிசயம் பார்த்தேன் மண்ணிலே - கலையரசி*
4.சுருள்வாள் சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர்.-ரிக்ஷாக்காரன்*
5.மான் கொம்பு சண்டை காட்சி - உழைக்கும் கரங்கள்*
6.கடவுள் வாழ்த்து பாடும் - நீரும் நெருப்பும்*
7.எம்.ஜி.ஆர்.-நம்பியார் சண்டை காட்சி - கலையரசி*
-
மக்கள் திலகம் தலைவரும் இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களும் நல்ல நட்பில் இருக்க..
அவர் காங்கிரஸ் இயக்கத்தில் அதிக நாட்டம் கொள்ள தலைவர் வேறு திசையில் பயணிக்க தலைவர் பற்றி மற்றவர்களை போலவே தரக்குறைவாக பேச ஆரம்பிக்க.
மதுரைக்கு வந்து இருந்த அவருக்கு நம் தலைவர் ரசிகர்கள் கோவத்தில் சிறப்பு வழிபாடு நடத்த...விஷயம் அறிந்த தலைவர் நிகழ்வை கண்டிக்க.
ஆத்திரத்தில் தன் தாக்குதலை தலைவர் மீது அதிக படுத்தினார் கே.எஸ்.ஜி.
பணமா பாசமா படத்துக்கு ரஷ்ய நாட்டு கலைவிழாவில் அந்த படம் திரை இட பட அங்கே போய் இருந்தார் அவர்.
இங்கே சென்னையில் மொட்டை மாடியில் விளையாடி கொண்டு இருந்த அவரின் கடைசி மகன் 5 வயது குமார் நிலை தவறி தலை குப்புற கீழே விழ.
மண்டை உடைந்து பலத்த காயங்கள் உடன் சென்னை அரசு மருத்துவ மனைக்கு அந்த குமார் அனுமதிக்க பட.
பதறி பறந்து செல்கிறார் தலைவர்.
மருத்துவமனை டீனை சந்தித்து நல்ல சிகிச்சை செய்யுங்கள் என்ன மருந்து வேண்டுமானாலும் எங்கு இருந்தும் கொண்டு வந்து சிகிச்சை செய்யுங்கள்.
அனைத்து அதிக செலவுகளுக்கும் நான் பொறுப்பு என்று சொல்ல...அனுதினமும் குமார் உடல் நலம் பற்றி தலைவர் விசாரிக்க.
அடுத்தவந்த நாட்களில் அந்த குமார் நலம் அடைந்து வீடு திரும்ப.
ரஷ்ய நாட்டில் இருந்து விழா முடிந்து வந்த கே.எஸ்.ஜி. அவர்களிடம் அவர் மனைவி கண்ணீர் மல்க ஏங்க நம் பையன் குமார் உயிருடன் இருக்க பெரும் உதவி செய்த புண்ணியவான் மனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களும் ஒரு முக்கிய காரணம் இன்றி சொல்ல...வாய்அடைத்து போகிறார் அதன் பின் கே.எஸ்.ஜி.அவர்கள்.
அவர்தான் தலைவர்.
அன்னை சத்தியாவின் புதல்வர்...வாழ்க அவர் புகழ்...நன்றி..தொடரும்..........
உங்களில் ஒருவன்...
-
#பெரியார் மீது #எம்ஜிஆருக்கு மிகுந்த மதிப்பு உண்டு.
1978-79-ல் எம்.ஜி.ஆர்.ஆட்சியில் பெரியார் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரியார் நினைவுத் தூண் எழுப்பப்பட்டது.
பெரியாரின் பொன்மொழிகள் நூல் வடிவில் கொண்டுவரப்பட்டன. அவரது வாழ்க்கை வரலாறு மாவட்ட தலைநகரங்களில் ஒளி-ஒலி காட்சியாக நடத்தப்பட்டது.
பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை எம்.ஜி.ஆர். அமல்படுத்தினார். அதுவரை அதை
கண்டுகொள்ளாதிருந்த கருணாநிதி,
எம்.ஜி.ஆர். ஆட்சியில் அறிமுகமானது
என்பதற்காக 'முரசொலி'யிலோ,
தி.மு.க. சார்பு விசயங்களிலோ உடனே பயன்படுத்தாமல், காலம் தாழ்த்தி செய்தார். இதை பகுத்தறிவு (!) பீரங்கிகள் கி.வீரமணியிடம் கேட்க
வேண்டும்.
தமிழ் நாளிதழ்களில் 'தினமலர்' எழுத்து
சீர்திருத்தத்தை முதன் முதலில் பயன்படுத்தி பெருமை பெற்றது.
சென்னையில் #பெரியார் அவர்களின் உருவச்சிலையை தன்னுடைய முதல் ஆட்சி காலத்தில் 17 செப்டம்பர் 1977-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் #எம்ஜிஆர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள, அன்றைய மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர்
#பாபு_ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார்.
இந்த சிலையை தி.மு.க.வினர் கண்டு கொள்வதேயில்லை.
1979-ம் ஆண்டு பெரியார் பிறந்த நாளில் ஈரோட்டை தலைநகராகக் கொண்டு பெரியார் மாவட்டத்தை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்.
இருவருக்குமே டிசம்பர் 24-ம் தேதிதான் நினைவு நாள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இங்கேயுள்ள புகைப்படத்தில், வேலூர்
சி.எம்.சி.மருத்துவமனையில் பெரியார்
சிகிச்சை பெற்ற போது எம்.ஜி.ஆர். அவரது உடல்நலம் விசாரித்த காட்சி.
அருகில் கி.வீரமணி.
இதயக்கனி எஸ். விஜயன்..........
-
நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் - 2
ஆனால் இவளவு குறுகிய காலத்துக்குள் எவ்வளவு தூரம் இறுகிவிட்டது எங்கள் நட்பு ! எங்கள் குடும்ப நண்பரும் பழம்பெரும் ஹாஸ்ய நடிகருமான திரு. டி.எஸ். துரைராஜ் அவர்கள்ளின் மகளின் திருமணத்திற்காக சென்றவருடம் நான் தமிழகம் சென்றிருந்தேன் . அப்பொழுதுதான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முதன் முறையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். பேரும் புகழும் செல்வமும் படைத்த அவர் முதல் சந்திப்பிலேயே தன் அன்பு முழுவதையும் கொட்டியதை நினைக்கும் போது இப்பொழுதும் உடம்பு சிலிர்க்கின்றது . சென்னையிலுள்ள தன் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று அவர் கூறியவை இன்னும் காதுகளில் ங் காரமிடுகின்றன "இந்த வீட்டைக் கொழும்பிலுள்ள உங்கள் சொந்த வீடுபோலவே நினைத்துக்கொள்ளுங் கள். இலங்கையிலிருந்துவரும் தமிழர்கள் தமிழகத்திற்கு வரும்பொழுது ஒரு அந்நிய நாட்டில் இருக்கிறோம் என்ற நினைவே ஏற்படக்கூடாது. அவர்களும் நம்மவர்கள். தாய் நாடு - இலங்கை சேய்நாடு என்றார்கள் . இத்தகைய சொற்களை எம்.ஜி.ஆர் . அவர்களைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்?"
நான் சென்னைக்குச் சில நாட்களுக்கு முன்புதான் புதிதாக கார் ஒன்று வாங்கியிருந்தார். சில மைல்கள் கூட ஓடி இருக்கமாட்டார். அவ்வளவு புத்தம்புதிய கார். அந்தக் காரை என்னிடம் கொடுத்து படப்பிடிப்பு வேலைகள் அதிகமாக இருப்பதால் உங்களை முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சுற்றிக்காட்ட முடியவில்லை. அதற்கு ஈடாக இந்தக் காரையே உங்களிடம் கொடுத்துவிட்டேன், நீங்கள் தமிழ் நாட்டில் இருக்கும் வரை இந்தக் கார் உங்களுடையது என்னுடைய தல்ல என்று கூறினார் . அன்புள்ளம் கொண்ட எம். ஜி.ஆர் . நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவர். அவருடன் ஒரு நாள் பழகினாலே போதும் - யுக யுகாந்திரமாகப் பழகியதைப் போன்ற பந்தம் ஏற்பட்டுவிடும்.
எம்.ஜி.ஆர். அவர்களைப் போலவேதான் இவரது அண்ணன் திரு. சக்ரபாணி அவர்களும் - தம்பிக்கேற்ற அண்ணனாகவே குணத்திலும் செயலிலும் ஒரேமாதிரியகவே இருக்கின்றார்கள். உருவத்தில் வேறுபட்டவர்கள்; உள்ளத்திலும் செயலிலும் இருவரும் ஒருவர் என்றே கூறவேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வைத்திய சிகிச்சையின் நிமித்தம் சென்றிருந்த எனக்கு திரு . சக்ரபாணி அவர்கள் தன் இல் லத்திலேயே பிரபல வைத்தியர் ஒருவரை வைத்து சிகிச்சை பார்த் தார்கள் . திரு.சக்ரபாணி அண்ணாச்சி அவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருந்தும் என் பக்கத்திலேயே இருந்து வைத்தியம் செய் ததை நினைக்கும் பொழுது காலஞ்சென்ற என் தந்யைார் திரு.பட் டக்கண்ணு சுப்பையா ஆச்சாரி அவர்களே பக்கத்தில் இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது - மெய்சிலிர்த்தது. மகனுக்குத் தந்தை செய்யும் உப சரணைகள் போன்றிருந்தது இவரது உபசரணை அதை எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை. மக்களுக்காகவே உழைக்கவும் அவர்கள் தந்த பணத்தை நல்லவழியில் அவர்களுக்கே செலவிட்டு மகிழ்வதிலும் இன்பம் காணும் புரட்சி நடிகர் எம். ஜி.ஆர். அவர்களும் பண்புமிக்க அண்ணாச்சி சக்ரபாணி அவர்களும் இலங்கையிலுள்ள எண்ணற்ற இரசி கர்களைப்போல, நானும் எங்கள் நாட்டிற்கு சீக்கிரம் வரவேண்டும் என்று தான் விரும்புகிறேன். கவிஞர் கண்ணதாசன் பாடியது போல்:
"நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் நினைவிருக்கும் வரை அவர் முகமிருக்கும்" என்பது போல் என் நெஞ்சில் என் றும் அவர்கள் நினைவு நிலைத்திருக்கும்.
[கலை,இலக்கிய ஆர்வமும் பொதுவாழ்வில் ஈடுபாடுமுடைய திரு.சற்குருநாதன் அவர்கள் கொழும்பிலுள்ள நகை மாளிகை ஒன்றின் உரி மையாளர். எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய நண்பர். மக்களின் திலகமாக மதிக்கப்படும் தன் நண்பரைப் பற்றி இங்கே எழுதுகின்றார்]..........
-
“அன்புக்கு அர்த்தம் மக்கள் திலகம் தான்”
- ஜானகி எம்.ஜி.ஆர்
https://www.thaaii.com/?p=48526
எனக்குத் தெரிந்த எம்.ஜி.ஆர் : தொடர் – 14
“தொண்டராக இருந்து தலைவராகி, முதல்வராகப் பத்தாண்டுகளுக்கும் மேல் சேவை செய்த செம்மல், உலக அரங்கிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
நான் அறிந்து மூன்று இதழ்களுக்கு அவர் ஆசிரியராக இருந்தவர். அதில் ‘அண்ணா’ இதழும் ஒன்று.
எந்த இதழுக்காவது அல்லது சிறப்பு மலர் எதற்காவது கட்டுரை தருவதாக ஒப்புக் கொண்டால், உதவியாளரிடம் கருத்துக்களைச் சொல்லி கட்டுரை தயாரிக்கவோ, குறிப்புகளைத் தேடித் தயார் செய்து தரும்படியோ ஒருபோதும் கேட்கவே மாட்டார்.
அவரே கைப்பட எழுதித் தருவார். அவரது குறிப்பு நோட்டில் ஒரு சில சின்ன அடித்தல் திருத்தல்களோடு, அது அப்படியே உரியவருக்குச் செல்லும்.
ஒருவேளை அதனை வெளியிடுகிற அவர்களுக்கு – அதைப் புரிந்துகொள்வது எளிதில்லை என்று உணர்ந்தால் மட்டுமே, உடனே தமிழ் தட்டச்சில் அடித்து அளிக்கும்படி உதவியாளர்களை நாடுவார்.
‘சதிலீலாவதி’ முதல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை 136 படங்கள் அவரது திரைப்படச் சாதனைச் சரித்திரம். இதில் தமிழில் வந்த முதல் வண்ணப்படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தின் முதல் நாயகர் இவரே. இப்படி, இவர் ஒரு சகலகலா வல்லவர் – சாதனையாளர் என நான் நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்.
அநேகமாக உங்கள் இதயத்தில் என்றும் வாழுகிற என்னவரைப் பற்றி தெரியாததைச் சொல்வது சிறந்தது என்பதால், சிலவற்றை மட்டும் இங்கே சொல்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை என்று கருதுகிறேன். அங்கே ஒரு பஸ் டிரைவர் விபத்தில் சிக்கி விட்டார்.
காலில்தான் பலத்த அடி. அப்போதைய நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது காலை எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் அந்த இளைஞரின் அம்மாவிடம் தெரிவித்து விட்டார்கள்.
“காலை இழந்து விட்டு ஊனமுற்ற பிறவியாக வாழ்வதைவிட சாவதே மேல்” என்று பிடிவாதமாக அந்த இளைஞர் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
அவரது அம்மா – பிள்ளையைப் பெற்ற தாய் அல்லவா? அப்படி இருக்க முடியுமா? எப்படியாவது தனது பிள்ளையைப் பிழைக்க வைத்து, இந்த உலகத்தில் வாழ வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் அந்தத் தாயார்.
தன் மகனைச் சாவு நெருங்க நெருங்க அந்தத் தாய் பதறிக் கதறித் துடித்தார்.
“பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு” என்பார்களே, அது தான் அங்கே நிகழ்ந்தது. அறுவை சிகிச்சைக்கு அந்தப் பிள்ளை ஒத்துக்கொள்ளவில்லை. வயதான அம்மாவை அன்போடு கவனித்துக் கொள்ள வேண்டிய வயதில் இப்படியா?
ஒரு மகனின் கடமை தொடங்க வேண்டிய நேரத்தில் அந்த அம்மாவுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பது தான் அந்தப் பிள்ளையாண்டானின் தவிப்பு கலந்த வாதம்.
இந்த இரண்டு உள்ளங்களும் எவ்வளவு உயர்வானது? அந்த அம்மாவுக்குத் தன் மகனைக் காப்பாற்ற ஒரு வழி தான் தெரிந்தது. பெற்ற பிள்ளையைக் காப்பாற்ற இன்னொரு பிள்ளையை அழைத்து வர முடிவு செய்துவிட்டாள். அது முடியுமா? இயலுமா? என்று அவர் யோசிக்கவில்லை. நம்பிக்கையோடு புறப்பட்டு விட்டார் அந்தத் தாயார்.
யாரைப் பார்க்க?
அந்தத் தள்ளாத வயதில், தளராத உறுதியோடு “எப்படியாவது என் மகனைப் பிழைக்க வைத்து விடுவேன்” என்ற எண்ணத்தோடு மட்டுமே அந்த வாசலுக்கு அவர் வந்துவிட்டார்.
யார் வீட்டு வாசல்?
‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்றால் எல்லோருக்கும் தெரியும்.
அந்த அம்மாவின் உதடுகள் சொல்ல முடியாத வார்த்தைகளை அவர் கண்களில் வழிந்த கண்ணீர், வரி வடிவமாகப் வரைந்து காட்டியது.
இந்தத் தோட்டத்துத் தூயவரும் தாயின் துயர் அறிந்து உடனே மருத்துவமனைக்கு விரைந்தார்.
அச்சத்தோடு இருந்த அந்த இளம் டிரைவர், “ஆதரவுக்கு நான் இருக்கிறேன்” என்கிற அன்பான ஆறுதல் மொழிகளைக் கேட்டு நம்பிக்கை விதைகளைத் தன்னுள் விதைத்துக் கொண்டார்.
ஆண்டவன், ஒரு சகோதரனுக்கு இன்னொரு சகோதரன் மூலம் அன்று அச்சத்தை விரட்டினார்.
அந்த இளம் டிரைவருக்குத் துணிவு துணையானது. காலை இழந்தாலும் நம்பிக்கையோடு செயற்கைக் காலின் உதவியால் நடக்கத் தொடங்கினார்.
ஓடிக்கொண்டிருந்த அந்த அன்புச் சகோதரனுக்கு கடை வைத்து ஓரிடத்தில் உட்கார்வதற்கு உதவினார் நம் அன்புத் தலைவர்.
தாய்க்கும் மகனுக்கும் தாங்காத ஆசை என்ன தெரியுமா? தன் தங்கத் தலைவரைப் பார்த்து “நன்றி” என்ற மூன்று எழுத்தைச் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான்.
அப்போது அன்புத் தலைவர் சொன்ன பதில் இது…
“என்னைத் தேடி அந்த அன்னை வந்தபோது தன் பிள்ளைகளில் ஒருவனாகத்தான் என்னைக் கருதினார். ஒரு சகோதரனாகத் தான் அந்தத் தம்பியை நான் நினைத்தேன். நன்றி சொல்ல அவர்கள் வருவதென்றால் நான் அந்நியனாகிவிடுவேன்.
தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் வரலாம். தாய்க்கு ஒழுங்காக ஆதரவு காட்டி அவர் அன்பாக நடத்தினால் போதும்.
அதுவே என்னைப் பார்ப்பதற்குச் சமம்”
17.07.1988.........
-
மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு ..........
20.09.1968... Producers, Distributors, Exhibitors Lime Light Money Spinners always...In time...Every time...
52 ஆண்டுகள் நிறைவு நாள் .
1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
படம் ''ஒளிவிளக்கு ''
பிரம்மாண்ட வண்ணப்படம்
மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .
குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .
திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .
1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .
ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .
சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .
நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்
மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி
சோ வின் சந்திப்பு
ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்
அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை
கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி
சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்
வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .
சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .
கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி
மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை
''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்
பாடல் காட்சி - புதுமை
திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .
தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -
மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .
இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை
மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்
ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .
மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -
உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''.........
-
"பணத்தோட்டம்" 1963 ஜன 11 ம்தேதி திரைக்கு வந்த மாபெரும் வெற்றிப் படம். அடுத்தடுத்து வந்த தலைவரின் படங்களை சமாளித்து வெள்ளித் திரையில் வெற்றிகரமாக பவனி வந்த படம். அடுத்து வந்த "கொடுத்து வைத்தவள்" அதையடுத்து வந்த "தர்மம் தலை காக்கும்" என தொடர் தாக்குதலால் துவளாமல் நல்ல வெற்றியுடன் மகத்தான வசூலுடன் ஓடிய படம். 100 நாட்களுக்கு மேல் ஒடிய மற்ற நடிகர்களின் படத்தை விட குறுகிய காலத்தில் அதிக வசூலை ஈட்டிய படம்.
சில நடிகர்களின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் எடுத்து விட்டாலும் எங்காவது ஒரு திரையரங்கில் மட்டும் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும். அங்கே 100 நாட்கள் ஓட்டியவுடன் 100 நாள் விளம்பரம் முழு பக்க அளவில் கொடுத்து மகிழ்வார்கள். இது தொன்று தொட்டு நடந்து வரும் சிவாஜி ரசிகர்களின் உளவாரப்பணி.
தலைவருடன் இயக்குநர் k.சங்கர் இணைந்த முதல் படம். மாற்று நடிகரின் கூடாரத்தில் இருந்து வந்த அவர் "பணத்தோட்டம்" இயக்கிய அதே நேரத்தில் "ஆலயமணி" என்ற படத்தையும் இயக்கிக் கொண்டிருந்தார். மிகை நடிப்பையே பார்த்து பழகியிருந்த அவர் தலைவரின் இயல்பான நடிப்பு முதலில் அவருக்கு பிடிக்கவில்லை.
நிறைய ரீடேக்குகள் போய்க் கொண்டிருந்தவுடன் தலைவர் அவரை கூப்பிட்டு என்னிடம் எது(இயல்பான) கிடைக்குமோ அதை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். மற்ற நடிகர்களின்(மிகை) நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று கூறியதாக ஒரு செய்தி உண்டு.
குடும்பக் கதையில் கொள்ளை கூட்டம் கலந்திருந்தாலும் படம் மிக விறுவிறுப்பாக செல்லும். கள்ள பணத்தை கண்டுபிடிக்க தலைவர் எடுக்கும் வேஷங்கள் சுவையானது.
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" பாடல் அனைவருக்கும் வாழ்வில் நம்பிக்கையூட்டுவதாக அமைந்தது.
"பேசுவது கிளியா"? மெல்லிசையில்
ஒரு தென்றல் கலந்து வீசியது போல இருந்தது.
"ஒருவர் ஒருவராய் பிறந்தோம்" மேல் நாட்டுப் பாணியில் இசை முழங்க அதை தலைவர் வாத்யத்தை வாசிக்கும் விதமும் மேக்கப்பும் அந்த காட்சியை வர்ணிக்க இயலாது. "ஜவ்வாது மேடையிட்டு" தலைவரின் போதை நடிப்புக்கு ஈடு கொடுத்து சரோஜாதேவியும் பாடும் பாடலின் ஆரவாரம் அடங்க நெடுநேரம் ஆகும். படம் பார்த்து விட்டு வந்தவர்கள் தண்ணி போடாதவர்கள் கூட போதை மயக்கத்தில் நடந்து போவதை பார்த்தால் அதுதான் எம்ஜிஆரின் நடிப்பு.
நாகேஷ் வீரப்பன் காமெடி மிகவும் அருமையாக அமைந்தது. இரவுக்காட்சிக்கு நாங்கள் சென்ற
போது கூட்டம் அதிகமாக இருந்தது.
ஆங்காங்கே நின்றிருந்த மக்கள் எல்லாம் "ஜவ்வாது மேடையிட்டு" பாடல் காட்சி வந்தவுடன் படம் அரை மணி நேரத்தில் முடிந்து விடும் என்று அனைவரும் அப்போதே டிக்கெட் எடுக்க முண்டியடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலிருந்து டிக்கெட் கொடுக்கும் வரை நெரிசலில் நின்று டிக்கெட் எடுத்தபின் சென்றோம்.
ஜவ்வாது பாடலில் அதிலும் 'ஹே' என்று தலைவர் சொல்லும் போது தியேட்டரே,
அதிரும். "குரங்கு வரும் தோட்டமடி" தலைவரின் மாறுவேட நடிப்புக்கு
எடுத்துக்காட்டு. மொத்தத்தில் படம் முடிந்து வரும் அனைவரும் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று வருவார்கள். சில நடிகர்கள் வெளியில் நாம் படும் பாடு போதாது என்று அவர் பாட்டையும் நம் தலையில் கட்டி படம் பார்த்து வருபவர்களை வேறு வேலைக்கு போக விடாமல் செய்து விடுவார்கள்.
மேலும் அவர்களை தலைவலி காய்ச்சலில் தள்ளிவிடுவதுடன் 2 நாளைக்கு கனத்த மனதுடன் அலைய விட்டு விடுவார்கள். அதனால்தான் தலைவர் படத்துக்கு கூட்டம் அள்ளுகிறது. சென்னையில் பிளாசா கிரவுன் மேகலாவில் வெளியாகி பிளாசாவில் 84 நாட்களும் கிரவுன் மேகலாவில் 70
நாட்களும் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. இதுபோல் முக்கியமான நகரங்களில் 10 வாரங்களை கடந்தும் மற்ற ஊர்களில் 50 நாட்களை தாண்டியும் நல்லதொரு வெற்றியை பெற்ற படம்தான் சரவணா பிலிம்ஸின் "பணத்தோட்டம்.".........
-
courtesy - yaazh sudhagar
Olivilakku 53rd Anniversary.
20.9.1968
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.
யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.
அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.
இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு...தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு... ஆன்டவனே உன் பாதங்களை கண்ணீரில் நீராட்டினேன்...'
என்ற பாடல் தான் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உயிருக்காகப் போராடிய போது...இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள கோயில்களில் எல்லாம் ஒலித்தது.
1986 இல் நான் 'பொம்மை' பத்திரிகையில் பணியாற்றிய போது...நடிகை சௌகார் ஜானகி அவர்களைப் பேட்டி கண்ட போது...ஒளி விளக்கில் அவர் பாடி நடித்த இந்தப் பாடல் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்...இப்படி...
'.... உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலம் பெறப் பிரார்த்தனை செய்வது போலப் படத்தில் நான் பாடிய பாடல் ....பதினைந்து வருடங்கள் கழித்து உண்மையாகவே அவர் உயிருக்காகப் போராடிய போது மக்களால் பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது...என்னை நெகிழ வைத்தது...' என்றார்.
உண்மை தான். இந்தப் பாடலில் மட்டுமல்ல... எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பல பாடல்களில்... வரப் போவதை முன் கூட்டியே சொன்ன ஒரு தற்செயலான தீர்க்க தரிசனத்தை நானும் கண்டு சிலிர்த்திருக்கிறேன்..........
-
திமுக கோஷ்டி என்னதான் ராம்சாமி பற்றி சொன்னாலும், ராம்சாமி மேல் திமுக தலைவர்களுக்கு எக்காலமும் ஒரு வன்மம் இருந்தது என்பதும் , வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அதை வெளிபடுத்தினார்கள் என்பதும் உண்மை
பின் அவர்களுக்கு புரட்சித் தலைவரின் மக்கள் சக்தியால் ஆட்சி கிடைத்தபின் டெல்லிக்கு எதிரான அரசியல் செய்ய ராம்சாமியினை தூக்கிபிடித்து வஞ்சக நரிதந்திர அரசியல் செய்தார்களே அன்றி, ராம்சாமியிடம் இருந்து அவர்கள் பிரிந்த அந்த 1950க்கும் 1967க்க்கும் இடைபட்ட காலம் காமெடியாய் இருந்தது
"இவனுகளுக்கு கட்சி தொடங்க என்ன யோக்கியதை இருக்குண்ணே" என ராம்சாமி கேட்க, "அவரிடம் அரசியல் பயின்ற தகுதி இருக்கின்றது" என இவர்கள் சொல்ல தமிழகமே சிரித்தது
"இவனுக என் சொத்தை உருட்ட திட்டம் போட்டானுக, என்ன கொல்ல பாத்தானுக, வாரிசுக்காகத்தான் கல்யாணம் செய்தேன்" என ராம்சாமி சொல்ல திமுகவிடம் அதற்கு பதில் "நாங்கள் பொதுவுடமைவாதிகள் பொறுக்கிகள் அல்ல" என வந்தது
பொதுவுடமை என்றால் என்ன என்பதை இப்போதைய திமுக தலைவர்கள் சொத்து பட்டியலிலே தெரிந்து கொள்ளலாம்
இவர்களை கடுப்பேற்றவே காமராஜரை ஆதரித்தார் ராம்சாமி, ராம்சாமியினை கடுப்பேற்ற புரட்சித் தலைவரை தூக்கிபிடித்தது திமுக கோஷ்டி
"அய்யய்யோ கூத்தாடி கட்சி" என ராம்சாமி தலையில் அடிக்க , ராம்சாமியினை தங்கள் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சீண்டியது திமுக கோஷ்டி
அப்படி ஒரு படம் அவர்களுக்கு சிக்கியது அது "நாடோடி மன்னன்"
என்னதான் அது புரட்சித் தலைவர் சொந்த படமென்றாலும் பின்னணியில் அண்ணா உட்பட திமுக பிம்பங்கள் வேலையும் இருந்தது
இப்படம் புரட்சிபடம் என சொல்லிய திமுக கோஷ்டிகள், ராம்சாமியினை மிக அழகாக வைத்து செய்தன*
வீரப்பா தாங்கிய கதாபாத்திரம் ராம்சாமியின் அடாவடியினை அப்படியே கொண்ட பாத்திரம், குரு கோலத்தில் நிறுத்தினார்கள்
ராம்சாமி செய்த அவ்வளவு அட்டகாசத்தையும் வீரப்பா வடிவில் காட்சியில் வைத்து மகிழந்தார்கள்
அதில் மகா முக்கியமான காட்சி, தன் வளர்ப்பு மகளான சரோஜா தேவியினை (சரோஜா தேவிக்கு அதுதான் முதல்படம்) வீரப்பா திருமணம் செய்ய முனையும் காட்சி
அந்த காட்சி இப்படி வரும்
வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் –
"ரத்னா, என்னை அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை
என் செவிகள் குளிர்ந்து சிந்தை நிறையட்டும், ம்ம் அழை அத்தான் என ஆசையா அழை"
படம் வந்தபின் கொஞ்சகாலம் ராம்சாமி வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது, அன்றே புரட்சித் தலைவரை சுடும் முடிவினை ராம்சாமியின் சீடன் எம்.ஆர் ராதா எடுத்திருக்கலாம்.
போன நூற்றாண்டில் புரட்சித் தலைவரூக்கு முன் புரட்சித் தலைவருக்கு பின் என்பதே உண்மையான தமிழக அரசியல் வரலாறு.
அதுவே இன்று வரை தொடர்கிறது.
இன்றும் புரட்சித் தலைவர் கொடுத்த கட்சி கொடியும் இரட்டை இலை சின்னம் தானே அனைத்து எதிர் கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறது ..........