:ty: சாரதாQuote:
Originally Posted by saradhaa_sn
தொல்ஸ்-ஸின் பாணியே அதுதானே - நீங்கள் முன்பு சொன்ன ( எழுதிய) மாதிரி
Printable View
:ty: சாரதாQuote:
Originally Posted by saradhaa_sn
தொல்ஸ்-ஸின் பாணியே அதுதானே - நீங்கள் முன்பு சொன்ன ( எழுதிய) மாதிரி
emm pin thOdara... neengaL thOdarungaL :D
:lol:Quote:
Originally Posted by Arthi
விடிந்தால் சஷ்டியப்த பூர்த்தி விழா.......
நல்ல பெரிய மன்டபம்தான் பிடித்திருக்கிறார்கள். இரவில் மண்டபத்தின் அலங்கார வேலைகளைக் கவனித்துக்கொன்டிருக்கும் அபி, மற்றவர்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டிருக்கிறாள். கூடவே ஆர்த்தியும் கிருஷ்ணனும். (சரி, ஆர்த்தி இதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது தெரிந்தால் அவருடைய "ஆதியண்ணா" கோபித்துக்கொள்ள மாட்டாரா?). ஒரு காரில் வந்திறங்கும் தேவராஜின் ஆட்கள் ஈஸ்வரனைத்தேடும் பணியில் இறங்குகின்றனர். அவர்களில் ஒருவன் சமையல்காரன் போலவும், இன்னொருவன் எலெக்ர்டீஷியன் போலவும் மண்டபத்துக்குள் நுழைகிறார்கள். அவர்களுடைய நடவடிக்கைகலைப் பார்த்தால் அவர்கள் போலி என்பதை சின்னப்ப்பையன் கூட கண்டுபிடித்து விடுவான். அந்தளவுக்கு அமெச்சூர்தனம். இருவரும் அபியின் சந்தேகப்பார்வைக்கும் ஆளாகின்றனர்.
சற்று நேரத்தில் போலீஸ் வர, இவர்கள் ஒளிந்துகொள்கின்றனர். விழாவில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதுபோல தெரிந்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படி இன்ஸ்பெக்டர் சொல்லிப்போகிறார். போலீஸ் போனதும் மண்டபத்தின் பின் வழியாக உள்ளே நுழௌந்து தேடும் இவர்கள் கண்ணில் ஈஸ்வரன் மட்டுமல்ல, ஒரு ஈ, காக்காய் கூட அகப்படவில்லை. மறுநாள் காலை விழா நடக்கும் இடம்போலவே தெரியவில்லை.
வீட்டில் அபி, ஆனந்தி, சுமதி இவர்கள் மத்தியில் கற்பகம் தன்னுடைய பழைய கதைகளைச்சொல்லி சந்தோஷப்பட, மூவரும் ஆர்வமும் சிரிப்புமாக கேட்டுக்கொண்டிருக்கின்றனர்....
'ஏம்மா, உன் கல்யணத்துக்கு முன் அப்பாவைப் பார்த்தியா?'
'அதெப்படிடீ பார்க்க முடியும்?. கல்யாணம்னு சொன்னாங்க நானும் சம்மதிச்சுட்டேன். கல்யாணத்தன்னைக்குதான் பார்த்தேன்'.
'ஒருவேளை முன்னாடியே பார்த்திருந்தா அப்பாவை வேணாம்னு சொல்லியிருப்பே இல்லையா?'
'ஏன்டி அவருக்கு என்ன குறை?, நல்ல அழகு, நல்ல கலர், நல்ல உயரம்'
'அய்யோ அம்மாவுக்கு வெட்கத்தைப்பாரு... அம்மா நீ வெட்கப்பட்டு இன்னைக்குத்தான் பார்க்கிறேன். அப்பாவுடைய திருட்டு முழியை விட்டுட்டியே. அது ஆர்த்திக்குத்தான் அப்படியே வந்திருக்கு'.
'அய்யோ இல்லை இல்லை'.
'ஏண்டி அப்படி சொல்றே.. அவருடைய முழி, நிறம், உயரம் எல்லாம் உனக்குத்தாண்டி வந்திருக்கு'
மகள்களோடு கற்பகம் ரொம்ப சந்தோஷமாக சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறாள். (நேற்று தமிழ் நாட்டில் பலத்த மழை. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்பு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
இடையே உள்ளேயிருந்து வரும் ராஜேந்திரனும் இவர்களுடைய சந்தோஷத்தில் கலந்துகொள்ள, அப்போது வீட்டுக்குள் நுழையும் திருவேங்கடத்தைப் பார்த்து அபி... 'வாங்க'
'அதானே பார்த்தேன்... அபி அன்னைக்கு என் வீட்டுக்கு வந்த உன்னை நான் திட்டி அனுப்பினாலும் நீ இப்போ என்னை வரவேற்கிறே பாரு... ஒரு எம்.எல்.ஏ.யின் தயவு எப்பவும் வேணும்னு நினைக்கிறே இல்லையா?. அது தப்பில்லை அபி'
'நீங்க பதவியில் இல்லாவிட்டலும் நான் வரவேற்கத்தான் செய்வேன் சித்தப்பா'.
'சரி அதை விடு அபி, நான் அண்ணன் கிட்டே பேசணும். கொஞ்சம் கூப்பிடுறியா...?'
அபியின் சந்தேக முகம் குளோஸப்பில்....
wow ,typical Karpagam's dialog... cld imagine how she wld have delivered those diaglogs :PQuote:
Originally Posted by saradhaa_sn
was it because of Karpagam's change in nature??? :roll:Quote:
Originally Posted by saradhaa_sn
:ty: சாரதா
:rotfl:Quote:
Originally Posted by Arthi
enna... post-ku post sirippu adhigamaagikitE pOgudhu :P :)Quote:
Originally Posted by aanaa
a serial goes for more than 4 years
then what we do ...
'இப்போ எதுக்காக அப்பாகிட்டே பேசணும்'
'என்ன அபி, விடிஞ்சா அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி விழா. அதுக்காக அவரைப்பார்த்து பேசணும்'
'அவர் இப்போ வீட்டில் இல்லை'
'ஓ... அப்படீன்னா மண்டபத்தில் இருக்காரா?. அங்கே பார்த்து பேசிக்கிறேன்'.
'அவர் அங்கேயும் இல்லை. இப்போ எதுக்காக அவரைத்தேடுறீங்க?. என் கிட்டே விஷயத்தைச்சொல்லுங்க'
'சரி சொல்றேன்..., அபி, உங்க அப்பா எப்பவோ அண்ணியை விட்டுட்டு போயிட்டார். அப்புறம் அவர் வாழ்ந்ததெல்லாம் அந்த காஞ்சனாவுடன்தான். அப்போ அவங்கதானே கொண்டாடணும்?. நீங்க எதுக்கு கொண்டாடறீங்க?'
'சித்தப்பா... எல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க இப்போ போறீங்களா?'
'அப்பா உங்க மரியாதை கெட்டுப்போகும் முன் போயிடுங்க'
'இதோ பார் சுமதி, மரியாதையெல்லாம் எதிர்பார்த்தா அரசியலில் இருக்க முடியுமா?'
காஞ்சனா வீடு....
'எல்லாரும் இப்படி நின்னுக்கிட்டு இருந்தா எப்படி?. விடிஞ்சதும் அங்கே விசேஷம் நடந்துவிடும். அதுமட்டும் நடந்துட்டா நான் தூக்கில தொங்கிடுவேன்'
'அம்மா, அப்படி சொல்லாதீங்கம்மா'.
'பின்னே என்ன செய்யச்சொல்றே?. அந்த அவமானத்தை தாங்கிகிட்டு என்னால வாழ முடியாது'
'பொறுங்கம்மா, அப்பாவைக்கண்டு பிடிச்சதும் தேவராஜன் போன் பண்ணுவார். அதுக்காகத்தான் வெய்ட் பண்ணுறேன்'.
அப்போ திருவேங்க்டம் வருகிறார்... 'என்ன எல்லாரும் ரொம்ப சோகமா இருக்கீங்க?. அஙே என்னடான்னா அபி காலில் சக்கரம் கட்டிக்கிட்டு பறந்திகிட்டு இருக்கா'
'இப்போ எதுக்காக இங்கே வந்தீங்க?'
'கோபப்படாதே ஆதி, நியாயமா இது உங்க அம்மாவுடன்தான் நடக்கணும்னு எனக்கும் தெரியும். அதனால் என்னா, நாமும் ஒரு விழா இதைவிட கிராண்டா நடத்திடலாம்'
'இப்போ நீங்க வெளியே போறீங்களா?'
'அட அபியும் இதையேதான் சொன்னாள். அடடே மனோவும் இங்கேதான் இருக்கியா?. ஆமாம் நமக்கு எது ஆதாயமோ அங்கேதான் இருக்கணும்'
'சித்த்ப்பா, நான் எந்த ஆதாயத்துக்காகவும் இங்கே வரலை'
'கரெக்ட், இதே மாதிரி அப்பப்ப அறிக்கைகளும் விடணும்'
'முதல்ல நீங்க போங்க இங்கிருந்து'
அபி வீடு.... மீண்டும் வழக்கம்போல கற்பகம் சோகமாக.... இப்போ அபி இல்லை... ஆர்த்தியும் ஆனந்தியும் மட்டும்தான்...
'ஏம்மா சோகமா இருக்கே?'
'இல்லை ஆனந்தி, தப்பு பண்ணினது உங்க அப்பா. அதுக்கு அந்த காஞ்சனா என்ன பண்ணுவாள்?. அவள் நிலையை நீங்க நினைச்சுப் பார்த்தீங்களா?.'
'அம்மா, அந்த காஞ்சனாவையும் ஆதியையும் பத்தி உனக்கு தெரியாதா?. இதே மாதிரி ஒரு விசேஷம் அங்கே நடந்தால் அவங்க உன்னை நினைச்சுப்பார்த்திருப்பாங்களா?. கஷ்ட்டப்பட்டு இவ்வளவு ஏற்பாடும் செஞ்ச அக்கா காதில் இது விழுந்தா எவ்வளவு வருத்தப்படும் தெரியுமா? காலைல விசேஷம், நீ மனதைப்போட்டு குழப்பிக்காதே. அக்காவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படும்'.
ஆதியின் வீட்டு காம்பவுண்ட்... ஆதியும் கிரியும் காத்திருக்க, தேவராஜனும் ஆட்களும் காரில் வந்திறங்க...
'என்ன ஆச்சு தேவராஜன், எங்க அப்பாவை கண்டுபிடிச்சிட்டீங்களா?'
'இல்லை ஆதி, உங்க அப்பா மண்டபத்தில் இல்லை. நம்ம ஆளுங்க நல்லா தேடிட்டாங்க. எங்கோ வெளியில தங்கி, காலைலதான் வருவார் போலிருக்கு. கவலைப்படாதீங்க, அவர் மண்டப வாசலுக்கு வந்ததும் நம்ம ஆளுங்க ஒரே அமுக்கா அமுக்கி, இங்கே கொண்டுவந்திடுவாங்க'.
'சும்மா சொன்னா போதாது தேவராஜ், சொன்ன மாதிரி செய்யணும், சரி எல்லோரையும் போய் ரெடியா இருக்கச்சொல்லுங்க'.
இவங்க சொன்ன மாதிரி எல்லாம் நடக்கணுமே என்ற சிந்தனையில் ஆதி மூழ்க.....
:exactly:Quote:
Originally Posted by saradhaa_sn
:ty:
Thanks again saradhaa madam. We all greatly appreciate your contribution.
காஞ்சனாவின் வீட்டில் வழக்கம்போல அவள், ஈஸ்வரனக்கும் கற்பகத்துக்கும் நடக்கப்போகும் சஷ்டியப்த பூர்த்தி விழாவைத்தடுக்க தன் மகன் ஆதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவனைக் காய்ச்சியெடுத்துக்கொண்டிருக்கிறாள். ஆதி என்ன சமாதானம் சொல்லியும் அவள் திருப்தியாகவில்லை. ஆதியின் கோபம் முழுக்க அபியின் மீதே திரும்புகிறது. இன்னமும் அந்த தேவராஜ பாண்டியனின் ஆட்கள் தன் அப்பாவைக் கண்டுபிடிக்கவில்லையென்ற ஆத்திரம். ஆனால் தேவராஜனைக் கேட்கும்போதெல்லாம், ‘கவலைப்படதீங்க தம்பி, எவ்வளவு முயற்சி செய்தும் உங்க அப்பா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை, இந்நிலையில் நமக்கு இருக்கும் ஒரே வழி மண்டப வாசலில் வந்திறங்கும் உங்க அப்பாவை, அங்கிருந்து அப்படியே தூக்கி வருவதுதான். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டேன், நம்ம ஆட்கள் ரொம்ப தயாரா இருக்காங்க’ என்று சொல்லியும் ஆதி சமாதானம் ஆகவில்லை. அவனுடைய ஒரே அச்சம், எங்கே அந்த அபி எல்லோருடைய கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு அந்த விழாவை நடத்தி முடித்துவிடுவாளோ என்பதில்தான் இருக்கிறது. ஆகவேதான் அவன் அடிக்கடி தேவராஜனை உசுப்பேத்திக்கொண்டிருக்கிறான்.
மண்டபத்தில் எல்லோரும் ஒரே சந்தோஷமும் கும்மாளமுமாக இருக்கின்றனர். விடிய விடிய அம்மா கற்பகத்தைச் சீண்டிவிட்டு அவள் வெட்கப்படுவதைப்பார்த்து ஆனந்திக்கின்றனர். காஞ்சனாவின் வீட்டில் காஞ்சனாவும் ரேகாவும் செய்வதறியாது கலக்கத்தில் இருக்க, இன்னொரு இடத்தில் ஆதியும் தேவராஜனும், மண்டபத்திலிருந்து தங்கள் ஆட்களின் போன் செய்தியை பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருக்க இரவு இப்படியே ஓடிப்போகிறது, நேரம் ஆக ஆக ஆதிக்கு கலக்கம், முக்கியமாக இந்த ஃபங்க்ஷன் நடந்துவிட்டால் தற்கொலை செய்துகொள்ள்ப்போவதாக தன் அம்மா காஞ்சனா விடுத்திருந்த மிரட்டல். (இந்த தொடரிலேயே அம்மாவின் மீது உயிராகவும் அவளுக்காக எதையும் செய்யக்கூடியவனாகவும் வரும் ஒரே பாத்திரம் ஆதித்யாதான், அபியின் அம்மா பாசமெல்லாம் இவனுக்கு அப்புறம்தான்).
பொழுதும் விடிந்துவிட்டது. மண்டபமும் களைகட்டிவிட்டது. இன்னும் அப்பா வரவில்லையே என்று அபி வகையறாவுக்கு சற்று பதட்டம், இருந்தாலும் வரத்துவங்கிவிட்ட விருந்தினரை வரவேற்று உபசரித்து அமரவைப்பதில் பிஸியாக இருக்கின்றனர். அழைக்கப்பட்டவர்களெல்லாம் வந்துகொண்டிருக்க அவர்களை ஆர்த்தியும் ராஜேந்திரனும் வாசலில் நின்று வரவேற்கின்றனர்.
உஷாவின் வீடு…….. மொட்டை மாடியில் உஷா, அப்பா, அம்மா மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது தொல்காப்பியன் வர, ‘வாங்க தொல்ஸ், எப்படி இருக்கீங்க?’
‘அதிருக்கட்டும் உஷா, என்ன இங்கே இருக்கீங்க? நீங்க அபி விட்டு ஃபங்க்ஷனுக்கு போயிருப்பீங்கன்னு நினைச்சேன்’.
‘என்ன விளையாடுறீங்களா?. உங்களை அழைக்கலைன்னு கோபப்பட்டு, உங்க முன்னாடிதானே அபியிடம் இன்விடேஷனைத் திருப்பிக்கொடுத்தேன், மறந்துட்டீங்களா?. அதுவும் பக்கத்தில் நின்ற உங்களை அழைக்காமல் என்னை மட்டும் அழைத்தால் என்ன அர்த்தம்?’
‘இதோ பாருங்க உஷா, இது அபி வீட்டு குடும்ப விசேஷம். அவங்க குடும்பத்தில் யாருக்கும் என்னை பிடிக்கலை அதனால் அழைக்கலை, ஆனா நீங்க அப்படியில்லையே’
‘அப்படி பார்த்தா என்னையும்தான் அவங்களுக்கு பிடிக்காது, அப்புரம் நான் ஏன் போகனும்?’
‘உங்களை பிடிக்காததுக்கு காரணம் நீங்க எனக்கு சப்போர்ட்டா பேசுறீங்கன்னுதான், வேறு காரணம் எதுவும் இல்லை’
‘சரி தொல்ஸ், இப்போ அந்த ஃபங்க்ஷனுக்கு போகனும் அவ்வளவுதானே, வாங்க ரெண்டுபேரும் போவோம்’.
‘அய்யோ என்ன உஷா நான் எப்படி அங்கே’
‘தெரியுதுல்ல?. அப்போ பேசாமல் இருங்க, அதுமட்டுமல்ல இன்னைக்கு உங்களுக்கு லன்ச் எங்க வீட்டுலதான், அம்மா நம்ம எல்லோருக்கும் லன்ச் ரெடி பண்ணுங்க’.
மீண்டும் கல்யாண மண்டபம்…..
அப்பா இன்னும் வரவில்ல்யே என்று ஆனந்தி, சாரதா இவர்களுக்கு இருந்த பதற்றம் இப்போது அபியையும் தொற்றிக்கொண்டது, நேரம் ஆக ஆக அவளது முகத்தில் சந்தோஷம் மறைந்து சந்தேகமும் பரபரப்பும் குடிகொள்ளத்துவங்கிவிட்டன, ‘அப்பா வராமல் சொதப்பி விருவாரோ, அல்லது வழியில் அவருக்கு ஏதும் தடங்கலோ’ என்ற பதை பதைப்பு, இருந்தாலும் மற்ரவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. அப்பா தனக்கு ஒரு காண்டாக்ட் நம்பர் கூட கொடுக்காமல் இப்படி ஒளிந்திருப்பது அவளையும் ஆனந்தி, சாரதா ஆகியோரையும் கவலையில் ஆழ்த்துகிறது.
தேவராஜா பாணிடியனுக்கும் ஆதிக்கும் வாக்குவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது, ஒருகட்டத்தில் பொறுமை இழக்கும் ஆதி, தேவராஜனின் ஆட்கள் நிச்சயம் தன்னை ஏமாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் கொண்டு, தானே மண்டபத்துக்குப்போவதாக காரில் விரைகிறான்.
மண்டப வாச்லில் சட்டென்று ஒரு காரில் வந்திரங்கும் ஈஸ்வரன், நேராக மண்டபத்துக்குள் விரகிறார். அப்பாவைப்பார்த்ததும் அபி, ஆனந்தி, ஆர்த்தி ஆகியோருக்கும் மற்றவர்களுக்கும் முகத்தில் சந்தோஷம் குடி கொள்கிறது. நேராக அவர் மணவறியில் சென்று அமர, அலங்கரிக்கப்பட்ட கற்பகத்தை அழைத்து வருகின்றனர்.
‘வேகமா போப்பா’ என்று டிரைவரை விரட்டும் காஞ்சனா, காரின் பின் சீட்டில் அமர்ந்திருக்க, அவள் கையில் துப்பாக்கி.
மண்டப வாசலில் வந்திறங்கியதும் பரபரப்புடன் நேராக அவள் உள்ளே செல்ல, பின்னால் வந்த காரிலிருந்து ஆதி இறங்கி அவனும் உள்ளே செல்ல, அவர்களின் பின்னே இன்னொரு காரிலிருந்து மனோ, அனு, அஞ்சலி ஆகியோரும் பின்தொடர, மண்டபத்துக்குள் கையில் துப்பாக்கியுடன் அம்மாவைப்பார்த்ததும் ஆதிக்கு அதிர்ச்சி. இவர்களை யாரும் கவனிக்காமல் சடங்குகளில் மூழ்கியிருக்க, அப்பாவின் கையில் தாலியை அபி கொடுக்கப்போகும்போது….. காஞ்சானவின் குரல்…
“நிறுத்துங்க”
நிமிர்ந்து பார்க்கும் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி.
‘ஏய் அபி, இது உனக்கே நல்லாயிருக்கா, அவர் உங்கம்மாவுக்கு தாலி கட்டின புருஷன்னா, அப்போ என் கழுத்தில இருக்கிற தாலி யார் கட்டினது?. ஏன் எங்களை இப்படி வதைக்கிறீங்க?’
‘ஏம்மா, நாங்க உங்களை வதைக்கிறோமா? உங்க பிள்ளை ஆதி எனக்கு எவ்வளவு கொடுமை செஞ்சான்னு உங்களுக்கே தெரியாதா?. எத்தனையோ வருஷங்களுக்குப்பிறகு எங்க அப்பா எங்களுக்கு திரும்ப கிடைச்சிருக்கார். அவருக்கும் அம்மாவுக்கும் நடக்கிற விசேஷத்தை ஏம்மா தடுக்கிறீங்க?’
தொலைக்காட்சிகள் சும்மா எதற்கெடுத்தாலும் போட்டி வைத்து, நேயர்களை எஸ்.எம்.எஸ். அனுப்பச்சொல்லி படுத்துகின்றன. ஆகவே நாமும் ஒரு போட்டி வைத்தால் என்ன...?.
முந்தைய போஸ்ட்டில் 'மண்டபம்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வந்துள்ளது என்று சரியாக சொல்லும் நேயர்களில் மூவருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு : ரூ. பத்து லட்சம் மதிப்புள்ள கார் உடைய புகைப்படம்.
இரண்டாம் பரிசு : சிங்கப்பூருக்கு விமானப்பயணம் செல்லும் பயணிகளுக்கு டாட்டா காட்டும் வாய்ப்பு.
மூன்றாம் பரிசு: 21" கலர் டிவி யின் அட்டைப்பெட்டி.
:omg:Quote:
Originally Posted by saradhaa_sn
போட்டிக்கு முந்துங்கள்
:clap: :clap:
wow, attractive prizes...
I want second prize :P
'நாங்க ஆசைப்பட்டு நடத்துற இந்த விசேஷத்தை ஏம்மா தடுக்கிறீங்க?'
'நான் ஒண்ணும் தடுக்கலை அபி. தாராளமா நடத்துங்க' காஞ்சனாவின் இந்த வார்த்தைகள் அத்தனை முகங்களிலும் குழப்ப ரேகைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அபியின் முகம் அதிகமாகவே குழப்பம அடைகிறது.
'உண்மையாத்தான் சொல்றேன் அபி. நீங்க திட்டமிட்டபடி நடத்துங்க, ஏன்னா உங்க எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கு. என் கணவர் முதலில் தாலி கட்டியது உங்க அம்மாவுக்குத்தான். அதை இப்போ ஊரைக்கூட்டி வேறு நிரூபிச்சிட்டீங்க. அதுமட்டுமில்லே, அப்பா என்ற முறையில் நீங்க யாரும் இதுவரை அவரிடமிருந்து எந்த சந்தோஷத்தையும் அடைந்ததில்லை. அதன்னல்தான் சொல்றேன். நான் ஒண்ணும் இந்த விசேஷத்தை தடுக்க வரவில்லை. நீங்க எல்லோரும் என்னை அழைக்கலைன்னு கோபம்தான் எனக்கு, மத்தபடி எதுவுமில்லை'
காஞ்சனாவின் இந்த வார்த்தைகள் ஈஸ்வரன், கற்பகம், அபி, ஆர்த்தி, ஆனந்தி, சாரதா, ராஜேந்திரன், தோழர் பால கிருஷ்ணன் ஆகியோரை அதிகமாகவே குழப்பியது மட்டுமல்லாமல் மண்டபத்தில் வாசலில் நின்ற ஆதியை அதிர்ச்சியடைய வைக்கிறது.
'அம்மா, நீங்க சொல்றது ஒண்ணுமே புரியலை' என்று சொல்லும் அபியைப்பார்த்து, 'உண்மையாத்தான் சொல்றேன் அபி. இந்த விசேஷத்தில் கலந்துக்கத்தான் நான் வந்தேனே தவிர குழப்பம் விளைவிக்க வரவில்லை'. இந்த வார்த்தைகளைக்கேட்டதும் எல்லோர் முகமும் கொஞ்சம் கொஞ்சமாக மகிழ்ச்சியின் பக்கம் திரும்பியது என்றாலும் ஆனந்தியின் முகத்தில் இன்னும் சந்தேகம்.
காஞ்சனா இன்னும் என்னென்னவோ நிறைய பேசி அவர்களை சமாதானப்படுத்த (அந்த வசனங்களை எல்லாம் முழுசா இங்கு கொண்டு வர முடியவில்லை) அபி மகிழ்ச்சியடைந்து 'சித்தி'(?)யின் கைகளைப்பிடித்து அவளுக்கு நன்றி சொல்ல, மணமேடையில் இருந்து இறங்கி வரும் ஈஸ்வரன் 'என்னை மன்னிச்சிடு காஞ்சனா, நீயும் ஆதியும் ஏதாவது குழப்பம் செய்து இந்த விழாவை நிறுத்திடுவீங்களோ என்ற எண்னத்தில்தான் ரகசியமாக இந்த ஏற்பாடுகளை செஞ்சிட்டோம். நீ இவ்வளவு சீக்கிரம் மனம் மாறுவேன்னு நினைக்கவேயில்லை' என்று சொல்ல அனைவரும் மீண்டும் மணமேடைக்கு செல்ல, அபி மற்றும் அனைவரின் முகமும் ஆதியின் பக்கம் திரும்புகிறது.....
தன் அருகில் வந்து நிற்கும் அபியிடம், 'எங்க அம்மா சொன்ன பிறகுதான் எனக்கும் எல்லா விஷயங்களும் தெளிவாகிறது. நான் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தது முதல் உங்க எல்லோருக்கும் ரொம்பவே தொல்லை கொடுத்துவிட்டேன். ஆனா அதற்கு பதிலாக நீங்க எனக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. நான் உங்களுக்கு செய்த அநியாயத்துக்கெல்லாம் நீங்க என்னை மன்னிக்கணும்' (இன்னும் நிறைய வசனம் பேசுகிறான்) என்று கலங்கும் ஆதியின் கைகளைப்பிடித்துக்கொண்டு அபி, 'அப்படியெல்லாம் சொல்லாதே, நீ எப்போ என்னுடைய ஒரே ரத்தம்னு தெரிஞ்சு போச்சோ அன்றையிலிருந்து நீ செஞ்ச எதுவும் எனக்கு கஷ்ட்டமா தெரியலை'.
(திருச்செல்வத்துக்கு என்ன ஆச்சு?. ஏன் சீரியலை இவ்வலவு வேகமா முடிக்கப்பார்க்கிறார்?. காஞ்சனாவின் மனமாற்றமும், அதைவிட ஆதியின் மனமாற்றமும் கொஞ்சமும் நம்பும்படியாக இல்லையே. ரொம்ப சினிமாத்தனமாக இருக்கே. ஏன்?)
இவர்கள் இருவரும் மனம் விட்டுப்பேசிக் கொண்டிருக்கும்போதே மற்றவர்களின் மகிழ்ச்சியான முகங்கள் மாறி மாறி காண்பிக்கப்படுகின்றன.
'அக்கா, நானும் இந்த விசேஷத்தை ஒரு ஓரமா இருந்து பார்க்கலாமா?' என்று கேட்கும் ஆதியிடம்
'தம்பி, என்னடா சொல்றே, இது உன் வீட்டு விசேஷம்டா. நம்ம குடும்பத்துக்கு நீதான் மூத்த ஆண்பிள்ளை. நீ நின்னுதான் இதை சிறப்பா நடத்தணும்.. வா.. என் வாழ்நாளில் இன்னைக்குத்தான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்' என்று அபி சொல்ல...
அம்மா காஞ்சனாவையும் பெரியம்மா கற்பகத்தையும் அணைத்துக்கொண்டே ஆதி மணமேடைக்கு அழைத்துச்செல்ல.......
கற்பகத்துக்கு ஈஸ்வரன் தாலி கட்ட, காஞ்சனாவும் ஆதியும் பின்னால் நின்று அட்சதை தூவ, ஆதியும் அபியும் சிரித்துப்பேசிக்கொள்ள....
ஒவ்வொருவராக வந்து ஈஸ்வரனுக்கும் கற்பகத்துக்கும் பாதபூஜை செய்கின்றனர். முதலில் அபி, அடுத்து ஆதித்யா, பின்னர் ஆனந்தி, அடுத்து மனோ, அப்புறம் ஆர்த்தி, கூடவே ராஜேஷ், இவர்களோடு அஞ்சலி, கிஷோர், சுமதி, ராஜேந்திரன் ஆகியோரும் மகிழ்ச்சியோடு பாத பூஜை செய்ய...
எல்லோருடைய முகங்களிலும் சிரிப்போ சிரிப்பு... மகிழ்ச்சித்தாண்டவம்.... எல்லோர் முகங்களிலும் பயணித்துக்கொண்டே செல்லும் கேமரா... கற்பகத்தின் சிரித்த முகத்தில் அப்படியே குளோசப்பில் நிற்க.....
:omg: :shock: :shock: :shock:
கேமரா... கற்பகத்தின் சிரித்த முகத்தில் அப்படியே குளோசப்பில் நிற்க.....
"அம்மா" அபியின் குரல் கேட்க......
"டமால்"
ஊதப்பட்ட பலூன் மீது பட்ட ஊசியாக அபியின் அழைப்பு தாக்க, கற்பகத்தின் கற்பனைக்கோட்டை வெடித்து சித்றுகிறது...
நிமிர்ந்து பார்க்கும் கற்பகத்தின் முன் அபி, ஆர்த்தி, சுமதி நிற்க, அம்மாவின் குழப்பமான முகத்தைப்பார்த்து, அபிக்கும் குழப்பம்...
'என்னம்மா ஆச்சு?'
அதோடு ஆர்த்தி 'அம்மா எதாவது பகல் கனவா?'
'இல்லடி பலிக்கக்கூடிய கனவுதான். அது சரி உங்க அப்பா வந்துட்டாரா?'
'அப்பா இன்னும் வரலைம்மா'.
(ஓ... இன்னும் ஈஸ்வரனே மண்டபத்துக்கு வரலையா?. சரிதான்)
காரில் துப்பாக்கியுடன் வந்துகொண்டிருக்கும் காஞ்சனா கோபத்துடன், 'இன்னும் வேகமா போப்பா' என்று ஓட்டுனரை விரட்டுக்கிறாள்.
அதானே பார்த்தேன்....
காஞ்சனாவாவது மனம் மாறுவதாவது....!!!,
ஆதியாவது அபியை அக்காவாக ஏற்றுக்கொள்வதாவது....!!!!
திருச்செல்வமாவது, சீரியலை முடிப்பதாவது.....!!!!!!!.
காஞ்சனா துப்பாக்கியோடு வருவதால், ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது.
:roll: :phew:
கரெக்ட்....Quote:
Originally Posted by Madhu Sree
பார்க்கிறவங்க மட்டும் 'ஷாக்' ஆனா போதுமா?. படிக்கிறவங்களும் 'ஷாக்' ஆகட்டுமேன்னுதான், சஸ்பென்ஸை இரண்டாவது போஸ்ட்டில் போட்டேன்.
நான் நினைச்ச மாதிரியே 'ஷாக்' ஆயிட்டீங்க மது...
:) aamaaa nejamaave shock thaan :D episode-ee izhakka ipdi laam panraanga :x :sigh2: .....
Oh Saradha mam, :omg:
Even i was shocked., heard from my friend that Kolangal will be over by a month or two., but never expected this twist, the way u have described was awesome mam . :lol: :D
தொல்ஸ் யை விட நீங்கள் இயக்குனராகலாம் போல.....Quote:
Originally Posted by saradhaa_sn
இப்படி முடிக்கலாமென தொல்ஸ் யோசித்தாரோ என்னவோQuote:
Originally Posted by saradhaa_sn
பின் :banghead: :banghead:
அதுதானேQuote:
Originally Posted by saradhaa_sn
தொல்ஸ் சின் ஆயுள்கால திட்டம் அல்லவா :lol:
மது மட்டுமில்லீங்கQuote:
Originally Posted by saradhaa_sn
'அப்பா வந்துட்டாரா அபி?'
'இன்னும் இல்லம்மா, இப்போ வந்திடுவார்'.
'அக்கா இதையேதான் நீயும் ரொம்ப நேரமா சொல்லிக்கிட்டே இருக்கே, ஆனா அவர் வந்தபாடில்லையே. அழைக்கப்பட்டவஙளெல்லாம் வந்துட்டாங்க. ஆனா இன்னும் அவரைக்காணோமே'
'பயப்படாதே ஆர்த்தி, நிச்சயம் வந்திடுவார்'.
'ஒரு காண்டாக்ட் நம்பரும் கொடுக்காம, இருக்கிற இடத்தையும் சொல்லாமல் என்ன மனுஷன் இவர்?'
'கோபப்படாதே ஆனந்தி, எனக்கு நம்பிக்கையிருக்கு. வந்திடுவார்'.
'அதுக்கில்லை அக்கா, நேரம் ஆக ஆக ஒருவேளை அவர் வராமல் போய் விடுவாரோன்னு பயம் வர ஆரம்பிச்சிடுச்சு' என ஆர்த்தி சந்தேகத்தை துவக்கி வைக்க.
'ஆமா அபி, அவள் பயப்படுறதும் சரிதானே, இன்னும் அவரைக்காணோமே' என்று கற்பகமும் கலங்க, அந்நேரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வர.
'அபி கொஞம் வரீங்களா?. உங்க கிட்டே தனியா பேசணும்'
'வாங்க இன்ஸ்பெக்டர்'
'எதுவும் பிரச்சினையில்லையே?. அப்படி ஏதும் பிரச்சினைகள் வந்தால் உடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க'
'சரி சார்'.
'அபி இப்போ எதுக்கு போலீஸ் வந்திருக்கு?'
'பயப்படாதே அம்மா, அந்த ஆதியால் ஏதும் பிரச்சினை வந்துவிடக்கூடாதுன்னு ஒரு பாதுகாப்புக்கு வரவச்சிருக்கேன், அவ்வளவுதான்'.
அப்போது கோபத்துடன் திருமண மண்டபத்துக்குள் நுழைந்து நேராக இவர்கள் இருக்கும் இடத்துக்கு வரும் காஞ்சனா....
'அபி, நீ பண்றது உனக்கே நல்லாயிருக்கா?' என்று மண்டபனே இரண்டு பட கத்த, எல்லோருக்கும் அதிர்ச்சி. பார்வையாளர் கவனம் மொத்தமும் காஞ்சனா பக்கம் திரும்புகிறது.
ஆனந்தி மெதுவான குரலில், 'அக்கா இப்போ எதுக்கு இந்த பொம்பிளை இங்கே வந்திருக்காங்க?' என்று கேட்க, அபி அதே தாழ்ந்த குரலில், 'நாம் ஒண்ணும் பேச வேண்டாம். வேணும்னே பிரச்சினை பண்ண வந்திருக்காங்க'
வந்திருக்கும் பார்வையாளர்கள் பக்கம் திரும்பும் காஞ்சனா, 'ஏங்க இவங்கதான் விசேஷம் அது இதுன்னு கூப்பிட்டா உங்களுக்கு அறிவு வேண்டாம்?. தாலி கட்டிய மனைவி நானிருக்க என் புருஷனோடு தன் அம்மாவுக்கு சஷ்டியப்த விழா நடத்துறா இந்த அபி. அதுக்கு நீங்களும் வந்திட்டீங்க'.
இப்போது சாரதா குறுக்கிட்டு, 'ஏம்மா, நீங்க தாலி கட்டின மனைவின்னா அப்ப இவங்க யாரு?. உங்களுக்கு முன்னாலேயே அவருக்கு மனைவி ஆனவங்க. தெரியுமா?'
'சும்மா நிறுத்துங்க, இவள் அவருடைய மனைவிங்கறதுக்கு என்ன ஆதாரம்?. என்னோடு திருமனம் நடந்ததுக்கு எல்லா ஆதாரமும் இருக்கு, அதுமட்டுமல்ல எங்க மேரேஜை ரிஜிஸ்ட்டர் பண்ணியிருக்கோம். என்னை கல்யாணம் பண்ணிக்கொள்ளும் முன்னர் இவள் அவருடைய தொடுப்பா இருந்திருக்கலாம். அதுக்காக உரிமையுள்ளவங்க ஆயிட முடியுமா?'
இப்போது அனைவரும் திடுக்கிடுகின்றனர். கற்பகம், அபி, ஆனந்தி, ஆர்த்தி, சாரதா, கிருஷ்ணன், ராஜேஷ், தோழர் என எல்லோர் முகத்திலும் கோபத்தின் கொந்தளிப்பு. கோபத்துடன் கொந்தளிக்கும் அபி...
'நாக்கை அடக்கிப் பேசுங்க... எங்க அம்மாவைப்பத்தி இனிமேலும் ஒரு வார்த்தை சொன்னீங்க, அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்'.
'சும்மா நிறுத்துடி, பெரிசா பேசுறியே... நீ சொல்றது உண்மையா இருந்தா இப்போ இந்த விசேஷத்துல இருக்க வேண்டிய என் கணவர் இப்போ எங்கே சொல்லு?. ஏன் அவர் வரலை?. அவர் எங்கே இருக்கார்ங்கிறதாவது உங்களுக்கெல்லாம் தெரியுமா?. அவர் என் வீட்டில் உட்கார்ந்து டிவி.பார்த்துக்கிட்டு இருக்கார். (எல்லோர் முகத்திலும் சுனாமியின் தாக்குதல்) சந்தேகமா? இதோ நீயே பேசு'
நம்பரை டயல்பண்ணி அபி கையில் கொடுக்க, மறுமுனையில் ஈஸ்வரன்....
'அப்பா, ஏம்ப்பா இன்னும் வரலை?, நாங்க எல்லோரும் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கோம். எல்லோரும் வந்திட்டாங்க. இப்போ நீங்க வரலைன்னா எங்களுக்கு ரொம்ப அவமானமா போயிடும்பா'
அபி பேசுவதை எல்லோரும் மிக உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அவள் பேசப்பேச அவள் முகத்தில் சுரத்து இறங்கி ஏமாற்றம் படர்வது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது....
'என்னை மன்னிச்சிடு அபி, இப்போ நான் வர முடியாது' (அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ, என்ன மிரட்டலோ) என்ற ஈஸ்வரனின் பதில் அபியை இடியாகத்தாக்க, 'என்ன அபி, அவர் வருகிறாரா?' என்று கேட்கும் கற்பகத்திடம் 'இல்லை' என்று சோகமாக தலையாட்ட.... எல்லோர் முகத்திலும் ஏமாற்றம் மற்றும் கொந்தளிப்பு. அபியின் கையிலிருந்து தன் போனை வெடுக்கென்று பிடுங்கும் காஞ்சனா, கூட்டத்தினரைப் பார்த்து...
'என்னமோ பெரிசா பேசினாளே இந்த அபி, இப்போ தெரிஞ்சுபோச்சா?. இதுதான் இந்த மானங்கெட்ட குடும்பத்தின் லட்சணம். இவங்க கூப்பிட்டாங்கன்னு நீங்களும் வந்திட்டீங்களே. போங்க, போங்க... போய் உங்க வேலைகளைப்பாருங்க'.
கூட்டம் மொத்தமும் ஏதோ முணுமுணுத்தவாறு கலைந்துபோக, அதில் சிலர் இவர்கள் காதுபட மோசமாக பேசிக்கொண்டுபோக அவமானத்தின் உச்சத்தில் அபியின் குடும்பம்.
'நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான் நான் நான்' என்று பாடாத குறையாக மண்டபத்தில் இருந்து காஞ்சனா வெளியேற, வாசலில் காரில் வந்திறங்கும் ஆதி 'நீங்க எப்படிம்மா இங்கே?' என்று கேட்க...
'ஆமா உன்னை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லைன்னுதான் நான் வந்தேன். அந்த சஷ்டியப்த விழா நடக்காமல் நான் நிறுத்திட்டேன்' என்று கூறும் அம்மாவைப்பார்த்து 'எப்படீம்மா?' என்று கேட்க 'வா... காரில் போகும்போது சொல்கிறேன்' என்று அழைத்துப்ப்போகிறாள். (எப்படீன்னு தெரிஞ்சுக்க இன்னும் ரெண்டு நாளாகும்).
'இனிமேல் என்னடி இருக்கு? வாங்கடி எல்லோரும் சேர்ந்து செத்துப்போயிடுவோம்' கற்பகத்தின் கண்களில், நிரம்பி வழியும் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட வெள்ளமாக கண்ணீர் பெருக்கெடுக்க, ஆனந்தியும் ஆர்த்தியும் செய்வதறியாது திகைத்து நிற்க, அம்மாவை அணைத்துக்கொள்ளும் அபியின் இமைக்காத கண்களில் சோகமில்லை, அதிர்ச்சியில்லை, ஆனால் கோபம் நிறைந்த தீர்க்கமான ஆவேசம் நிறைந்திருக்க.......
இந்தக் கண்ணகியின் கோபத்தில் எந்த மதுரை எரியப்போகிறதோ......
Eswaran's voice in dubbing ????? ......
May be Eswaran will given an entry now.
சுதா...Quote:
Originally Posted by sudha india
வெறுமனே அவர் குரலை மட்டும் கேட்டிருந்தால் நீங்கள் சொல்வதுபோல நடக்க சான்ஸ் உண்டு. ஆனால் ஈஸ்வரன் பேசுவதை கேமரா வழியே நேரிலேயே நமக்கு காண்பித்தார்களே. ஒருவேளை இந்த விசேஷத்தில் கலந்துகொண்டால் கற்பகத்தையோ அல்லது அபியையோ கொன்று விடுவோம் என்று ஈஸ்வரனை மிரட்டியிருக்கக் கூடும்.
(டப்பிங் கலையும் மிமிக்ரி கலையும் அபாரமாக வளர்ந்துவிட்ட இக்காலத்தில் ஆடியோ கேஸட் ஆதாரங்களை கோர்ட்டில் சாட்சிகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்பது உண்மைதான்).
:ty: Sarathaa
its a very long project for Thols
mmm
:banghead:
OK Sarada.... I did not see the serial. Ellam unga post padithu ezhudhinathuthan.Quote:
Originally Posted by saradhaa_sn
Indeed, its VERY LONG project for Thols. :banghead: :banghead: :banghead:Quote:
Originally Posted by aanaa
ஆதியுடன் காரில் இருந்து இறங்கும் காஞ்சனா, அவன் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு நேராக தன் வீட்டுக்குள் சென்று ஒரு அறையைத்திறந்துகாட்ட, உள்ளே ஈஸ்வரன், சுற்றிலும் ரவுடிகள் பாதுகாப்பில் இருக்க, அவரைப்பார்த்ததும் ஆதிக்கு உற்சாகம்.
‘இந்த ஆள் எப்படி இங்கே?. எப்படிம்மா இவரைக் கண்டுபிடிசீங்க?.’
‘ஆதி, இதுக்கு நாம் மனோவுக்குத்தான் நன்றி சொல்லணும்’.
ஃப்ளாஷ்பேக் விரிகிறது…….
அம்பாஸிடர் கார் ஒன்றில் மண்டபத்துக்கு ஈஸ்வரன் வந்துகொண்டிருக்கும்போது வழியில் கார் ரிப்பேராகி நின்றுவிட, டிரைவர் இறங்கி செக் பண்ணிப்பார்த்து பெல்ட் அறுந்துவிட்டதாகச் சொல்ல, வேறு ஏதேனும் ஒரு வண்டிக்காக காத்திருக்கும்போது மனோவின் கார் வந்து நிற்க…. ‘மனோ நீ எப்படிடா இங்கே?’
‘என்னப்பா நீங்க, அங்கே எல்லோரும் மண்டபத்தில் காத்திருக்காங்க, ரொம்ப லேட்டா வரீங்களே. சீக்கிரம் என் வண்டில ஏறிக்குங்க’.
காரில் ஏறப்போகும் ஈச்வரன், உள்ளே ரவுடிகள் இருப்பதைப்பார்த்து திடுக்கிட… ‘அப்பா எல்லாம் உங்க சேஃப்டிக்குதான்’.
கார் நேராக காஞ்சனாவின் வீட்டுக்கு போய் நிற்க… ‘டேய் மனோ இங்கே ஏண்டா அழைச்சிக்கிட்டு வந்தே?’.
‘ஒழுங்கா மரியாதையா இறங்கி வாங்க, இல்லேன்னா இழுத்துக்கிட்டூப்போக வேண்டியிருக்கும்’. ‘டேய், நான் வரமுடியாதுடா?’ (சுற்றிலும் ரவுடிகள் இருப்பதைப்பார்த்தபின்னும், தன்னால் ஒண்ணும் பண்ண முடியாது என்ற நிலையிலும் எப்படித்தான் இப்படி வீர வசனம் வருகிறதோ?. சினிமாக்களிலும் இப்படித்தான், சுற்றிலும் குண்டர்கள் கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் நிற்க, கைகால்கள் கட்டப்பட்டிருக்கும் கதாநாயகன், பிரதான வில்லன் முகத்தில் காறித்துப்பிவிட்டு மேற்கொண்டு ‘அடிஷனலாக’ நாற்பத்தேழு அடிகளை வாங்கிக் கட்டிக்கொள்வார். திருந்த மாட்டானுங்களே..)
காஞ்சனாவுக்கு சொல்லணுமா…”ஏன்யா, என்னோடைய சொத்து சுகங்களை வச்சு ரொம்ப சொகுசா வாழ்ந்துட்டு எனக்கு பிள்ளைகளையும் கொடுத்திட்டு, இப்போ அவளோடு சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட போறியா?. அப்படீன்னா இதுவரை என்னோடு வழ்ந்தது போலி வாழ்க்கையா?. விட மாட்டேன்ய்யா. அந்த விழாவை நடக்க விட மாட்டேன். நீ போனால்தானே விழா நடக்கும். உனக்கு பதிலா நான் போறேன்’…… பீரோவைத்திறந்து துப்பாக்கியைக் கையிலெடுத்தவள்…. ‘இதோ பார், நான் அங்கே போயி அங்கிருந்து உனக்கு போன் பண்ணுவேன், நீ வரமாட்டேன்னு அந்த அபி கிட்டே சொல்லணும். மாத்தி சொன்னாலோ அல்லது இங்குள்ள சூழ்நிலையைச்சொன்னாலோ அந்த அபி, கற்பகம், ஆனந்தி, ஆர்த்தி எல்லோரையும் சுட்டுத்தள்ளி விடுவேன்’ (அட.. இந்த சாரதா சொன்ன மாதிரிதான் ஆயிடுச்சு…!!!)
‘காஞ்சனா நீ பண்றது கொஞ்சம் கூட நியாயமில்லை, என்னை அங்கே போகவிடு’ என்னமோ காஞ்சனாவும் ஆதியும் இவருடைய அறிவுரையைக் கேட்டு அப்படியே நடப்பது போல இவர் கீதோபதேசம் செய்ய… காஞ்சனா போயே விட்டாள். (அதற்குப்பிறகு நடந்ததுதான் நமக்குத் தெரியுமே)
ஃபிளாஷ்பேக் முடிந்ததும், ஆதி மகிழ்ச்சியுடன் மனோவைக் கட்டிக்கொள்கிறான், கூடவே அப்பாவின் பக்கம் திரும்பி… ‘பார்த்தியாய்யா, நாங்க நினைப்பதுதான் நடக்கும். என்னமோ பெரிசா கிழிச்சுடுவேன்னாளே அந்த அபி, இப்போ என்ன ஆச்சு பார்த்தியா?. அபியுடைய மொத்தக்குடும்பமும் அவமானப்பட்டு நிற்குது. இப்பவாவது நாங்க யாருன்னு அவங்களுக்கு தெரியட்டும். உன்னைக் கடத்திக்கிட்டு வந்த வேலை முடிஞ்சிடுச்சு, இனி நீ எங்களுக்கு தேவையில்லை, வீட்டை விட்டு வெளியில போய்யா’ ஆதியின் கத்தலைத் தொடர்ந்து காஞ்சானவின் முறை….
‘ஆமாய்யா, நாங்க ஒண்ணும் உன்னை எங்களோடு வச்சுக்கணும்னு நினைச்சு கடத்திக்கிட்டு வரலை. உன்மேல இருந்த பாசமெல்லாம் எப்பவோ போச்சு. இனிமே நீ எங்களுக்கு தேவையில்லை. போ வெளியே’
அபியின் வீடு…….
சோகமே உருவாக எல்லோரும்… மனதில் கொந்தளிப்பும் முகத்தில் வருத்தமுமாக எல்லோர் கோபமும் ஈஸ்வரன் மீதுதான்….
‘அக்கா அப்பவே நான் சொன்னேன், இவரை நம்பி எதிலும் இறங முடியாதுன்னு. மனுஷனா இவர்? நீ எல்லா எற்பாடுகளையும் செஞ்சதால்தான் நான் ஒண்ணும் பேசாமல் இருந்தேன்’
‘நான் என்ன பண்னுவேன் ஆனந்தி? இந்த ஆளு இப்படிப்பண்ணுவார்னு நானும் நினைச்சேனா, இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்துட்டார்’
‘ஆமா அக்கா, இனிமே அந்த ஆளுக்கும் நமக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாது, அந்த ஆள் செத்தால் கூட அம்மா தாலி அறுக்கக் கூடாது’ ஆனந்தியின் இந்த கோபாவேசப் பேச்சுக்கு அதிசயமாக யாரிடமிருந்தும், குறிபாக கற்பகத்திடம் இருந்து எந்த எதிர்ப்போ ரியாக்ஷனோ வரவில்லை. வழக்கமாக அழுத்து குவிக்கும் கற்பகத்தின் முகம் நேற்று, பாறையாக இறுகிக்கிடந்தது.
அபி, ஆனந்தி மட்டுமல்லாது ஆர்த்தி, சாரதா, கிருஷ்ணன் என்று எல்லோரும் ஈஸ்வரனைத் திட்டித்தீர்க்கிறார்கள், கற்பகம் மட்டும் மௌனமாக விரக்த்தியின் எல்லையை அடைந்ததுபோல் இருக்க….
‘இந்த வீடுதாம்பா, நிறுத்து’ ஆட்டோவில் இருந்து இறங்கி பரபரப்பாக ஈஸ்வரன் வீட்டுக்குள் வர….. அபியின் குரல் 1000வாலா பட்டாசாக வெடிக்கிறது…
‘நில்லுங்க, எங்கே வந்தீங்க? நாங்கல்லாம் இருக்கோமா செத்துட்டோமான்னு பார்க்க வந்தீங்களா?. என்ன உரிமைல இந்த வீட்டுக்குள் நுழையறீங்க?. நாங்க பட்ட அவமானமெல்லாம் போதாதா, அந்த காஞ்சனாவோடும், ஆதியோடும் சந்தோஷமா இருக்கிறதை விட்டுட்டு எதுக்காக இங்கு வந்தீங்க?. எங்களுக்கு இன்னும் என்ன அவமானம் மிச்சம் இருக்கு? உங்களை நம்பித்தானே இத்தனை ஏற்பாடும் செஞ்சோம். முதல்லேயே மறுக்க வேண்டியதுதானே, எதுக்காக ஒத்துக்கிட்டீங்க? ஊரையே கூட்டிவச்சு இப்படி அவமானப்பத்திட்டீங்களே. ஒரு பத்து நிமிஷம் மட்டும் வந்திட்டு போயிடுங்கப்பான்னு போன்ல எவ்வளவு கெஞ்சினேன்?’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘பேசாதீங்க, நீங்க பேசி நாங்க கெட்டதெல்லாம் போதும். கோயிலில் பிச்சைக்கார கோலத்தில் பார்த்த உங்களை அப்படியே விட்டுத் தொலைச்சிட்டு வந்திருக்கணும். அப்படிச்செய்யாமல் அப்பான்னு மதிச்சு எங்க கூடவே கூட்டிக்கிட்டு வந்தது என் தப்புதான். இன்னும் ஏன் நிற்கிறீங்க? போங்க இங்கிருந்து. இனி எங்க வீட்டு வாசற்படியை மிதிக்காதீங்க, இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாது. இனிமேல் உங்களை எந்த நிலையிலும் நான் சந்திக்க விரும்பலை, நீங்க செத்துட்டீங்கன்னு நினைச்சுக்கிறோம்…. போங்க வெளியே’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘வெளியே போங்கன்னு சொல்றேன்’
வீட்டிலிருந்து கேட்டுக்குப்போகும்வரை சுமார் இரண்டு நிமிடங்கள் வரை அவர்களை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே போகிறார் ஈஸ்வரன்.
ஆக இரண்டு வீட்டில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்டு விட்டார். ஆதி வீட்டில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.. ஆனல் அபி வீட்டில்…..??????????????.
இப்போ தப்பு யார் மீது?. நிச்சயமாக ஈஸ்வரன் மீதுதான்…..
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
என்று இருபத்தைந்து தடவை சொல்லிக்கொண்டிருப்பதைவிட….., அதில் பத்தில் ஒரு பங்கு நேரத்தில்….
‘அந்த காஞ்சனா உங்களையெல்லாம் சுட்டுக் கொன்னுடுவேன்னு மிரட்டினதினாலதான் நான் போனில் வரமுடியாதுன்னு சொன்னேன்’ என்று ஒரே வரியில் சொல்லிவிட்டுப்போயிருக்கலாம்.
அதிலும், வீட்டிலிருந்து ‘கேட்’டுக்குப்போகும்போது எல்லோரும் கோபத்துடன், அதே நேரம் அமைதியாக அவரைப்பார்த்துக்கொன்டிருக்க, அந்த நீண்ட இடைவெளியில் ஒரு பெரிய லெக்சரே பண்ணலாம், அவ்வளவு நேரம் இருக்கிறது…..
ஆனால் ஒரு விஷயம், அப்படியெல்லாம் சட்டு புட்டுனு விஷயங்களைப்போட்டு உடைச்சிட்டா இன்னும் 749 எபிசோட்களுக்கு இழுத்துச்செல்ல முடியாது….
749 எபிசோட ... :lol: :rotfl:Quote:
Originally Posted by saradhaa_sn
:rotfl:
:rotfl:
:rotfl:
தொல்ஸிடம் நிறையவே விடயம் இருக்கும் ..
ஆனால்
எல்லா முட்டைகளையும் ஒரு கூடைக்குள் திணிக்க முயல்கிறார்
அனுபவங்கள் என நேற்று....
dock dock dock...
Saratha ...
no updates :huh:
indha serial innum mudiyalaya :shock: :shock:
No and it won't be for a long time.Quote:
Originally Posted by great