I was shocked to see this "Now Running" poster in Srivilliputtur, when I was in India a couple of weeks ago!
[html:a362695f41]
http://sphotos.ak.fbcdn.net/hphotos-..._3732559_n.jpg
[/html:a362695f41]
Printable View
I was shocked to see this "Now Running" poster in Srivilliputtur, when I was in India a couple of weeks ago!
[html:a362695f41]
http://sphotos.ak.fbcdn.net/hphotos-..._3732559_n.jpg
[/html:a362695f41]
NOV,
that's amazing.
TODAY 11.11.2010, 8.00 P.M.
NADIGAR THILAGAM'S RATHA PASAM
SIRIPOLI CHANNEL
DON'T MISS
MELLISAI MANNAR'S CAPTIVATING SONGS
Kamal Interview in Malayalam Nana film Magazine (aug'10)
Kamal Haasan in an exclusive, free and frank interview goes nostalgic. In this candid conversation, the great actor speaks about his biggest inspiration in life, awards, Rajinikanth and influence of Malayalam cinema.
"So far in your journey, who has been your biggest inspiration?"
"In my acting career the biggest inspiration was Sivaji Ganesan. He was like the sun giving me light and definitely a huge inspiration".
எப்போதுமே அக்டோபர் நவம்பர் மாதங்களில் தீபாவளி வரும் போதும் ஒவ்வொரு தீபாவளியன்றும் வெளியான நமது நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் அவை வெளி வந்து எத்தனை வருடங்கள் ஆனது என்பது பற்றியும் சொல்லுகிறோம். யோசித்துப் பார்த்தால் ஐப்பசி 1 முதல் 30 வரை அதாவது அக்டோபர் 17 முதல் நவம்பர் 15 வரை அநேகமாக எல்லா தினங்களிலுமே நடிகர் திலகத்தின் படங்கள் வெளியாகியிருக்கின்றன. காரணம் தீபாவளி தினம். இது போன்று ஒரு மாதத்தில் அனைத்து நாட்களிலும் ஒரு நடிகரின் படம் வெளியாகியிருப்பது நடிகர் திலகத்திற்கு மட்டும்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது.
என் நினைவில் உள்ளவற்றை எழுதியுள்ளேன். விட்டுப் போனவற்றை சுவாமி எழுதுவார் என நம்புகிறேன்.
Oct 17 - பராசக்தி
18 - பாபு
19 - பாவை விளக்கு, பெற்ற மனம், பட்டாகத்தி
20 -
21 - எங்க ஊர் ராஜா
22 - சித்ரா பௌர்ணமி
23 - வம்ச விளக்கு
24 -
25 - கெளரவம், தேவர் மகன்
26 - கீழ் வானம் சிவக்கும்
27 - பந்த பாசம்
28 -
29 - சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள்
30 - பைலட் பிரேம்நாத்
31 - பாகப் பிரிவினை
Nov 1 ஊட்டி வரை உறவு, இரு மலர்கள்
2 - Dr சிவா, வைர நெஞ்சம்
3 - நவராத்திரி, முரடன் முத்து
4 - வெள்ளை ரோஜா
5 -
6 - விஸ்வ ரூபம்
7 - கப்பலோட்டிய தமிழன்
8 -
9 - சிவந்த மண்
10 - அண்ணன் ஒரு கோயில்
11 - செல்வம்
12 -
13 - அன்பை தேடி
14 - பரிட்சைக்கு நேரமாச்சு, ஊரும் உறவும்
15 - அன்னை இல்லம்
அன்புடன்
NOV,
Thanks for that thoughtful gesture.
டியர் முரளி,
தங்களுடைய அலசல் அட்டகாசம்.
How is my one line opinion?
இளமை ததும்பும் நடிகர் திலகம் கலைச் செல்வி ஜெயலலிதா தோன்றும் எங்க மாமா பாடல் காட்சி . பார்க்க பார்க்க தெவிட்டாத நடனம், கால்களை தாளம் போட வைக்கும் மெல்லிசை மன்னரின் இசை, செவிகளில் தேனூறும் டி.எம்.எஸ். சுசீலா குரல்கள் . வேறென்ன வேண்டும். இதோ அந்த பாடல்
என்னங்க சொல்லுங்க
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விஜய் டிவி அளித்த செவாலியே சிவாஜி கணேசன் விருதினை, சிவாஜியின் இல்லத்தில் வைத்துப் பெற்றுக் கொண்டார் ரஜினி.
சிவாஜி பற்றி ரஜினியின் நெகிழ வைக்கும் பேச்சும், அதைக்கேட்டு கண்கலங்கும் கமலும்!
http://www.google.co.in/imgres?imgur...:1&um=1&itbs=1
http://cineplot.com/gallery/sivaji-g...mar-prem-1960/
Hindi movie - don't know whether it was released or not.
NT, his wife, Kamal, Rajni, Queen Elizabath
http://farm4.static.flickr.com/3630/...f38b4cc9e2.jpg
இசைக்குயில் சுசீலா அவர்களுக்கு நமது பிறந்த நாள் மகிழ்ச்சியையும் அவர் நீண்ட நாட்கள் தீர்ககாயுளுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்வோம்.
இந்நேரத்தில் அவருக்கு சமர்ப்பணமாக இக்காட்சியைப் பகிர்ந்து கொள்வோம்.
நிறை குடம் படத்தில் வெவ்வேறு ராகங்களில் படைக்கப் பட்ட இப்பாடலில் டி.எம்.எஸ். சுசீலா மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி மூவரும் பாடியுள்ளனர். மிகவும் அபூர்வமான பாடல்.
தேவா உன்னை அழைக்கின்றேன் தேவா
Many more Happy returns of the day to the "Nightingale of India" Smt.P.Suseela.
Shiv
Dear Shiv,
Thank you very much for your regards on our website.
Raghavendran
டியர் முரளி சார்,
ஐப்பசி மாதம் வெளியான அய்யனின் காவியப்பட்டியல் அருமையான, வித்தியாசமானதொரு தொகுப்பு. தங்களுக்கு எனது பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்! தாங்கள் குறிப்பிட்டபடியே அப்பட்டியலில் விடுபட்டுள்ளவற்றை என்னால் இயன்ற அளவுக்கு பூர்த்தி செய்து தனியொருபதிவாகவே தந்துள்ளேன்.
அன்புடன்,
பம்மலார்.
Quote:
Originally Posted by Murali Srinivas
ஐப்பசி மாதம் வெளியான அண்ணலின் திரைக்காவியங்கள்
அக்டோபர் 17 - பராசக்தி(1952)
18 - பாபு(1971)
19 - பாவை விளக்கு(1960), பெற்ற மனம்(1960), பட்டாக்கத்தி பைரவன்(1979)
20 -
21 - எங்க ஊர் ராஜா(1968)
22 - அம்பிகாபதி(1957), சித்ரா பௌர்ணமி(1976)
23 - வம்ச விளக்கு(1984)
24 -
25 - கெளரவம்(1973), தேவர் மகன்(1992)
26 - கீழ்வானம் சிவக்கும்(1981)
27 - பந்தபாசம்(1962), தச்சோளி அம்பு[மலையாளம்](1978)
28 -
29 - சொர்க்கம்(1970), எங்கிருந்தோ வந்தாள்(1970)
30 - அவள் யார்(1959), பைலட் பிரேம்நாத்(1978)
31 - பாகப்பிரிவினை(1959)
நவம்பர் 1 - ரங்கோன் ராதா(1956), ஊட்டி வரை உறவு(1967), இரு மலர்கள்(1967), லட்சுமி வந்தாச்சு(1986)
2 - டாக்டர் சிவா(1975), வைர நெஞ்சம்(1975)
3 - முரடன் முத்து(1964), நவராத்திரி(1964)
4 - வெள்ளை ரோஜா(1983)
5 - கண்கள்(1953)
6 - விஸ்வரூபம்(1980)
7 - காத்தவராயன்(1958), கப்பலோட்டிய தமிழன்(1961)
8 -
9 - சிவந்த மண்(1969)
10 - அண்ணன் ஒரு கோயில்(1977)
11 - செல்வம்(1966), படிக்காதவன்(1985)
12 -
13 - பெம்புடு கொடுகு[தெலுங்கு](1953), கோடீஸ்வரன்(1955), கள்வனின் காதலி(1955), அன்பைத் தேடி(1974), பாரம்பரியம்(1993)
14 - பரிட்சைக்கு நேரமாச்சு(1982), ஊரும் உறவும்(1982)
15 - அன்னை இல்லம்(1963), லக்ஷ்மி கல்யாணம்(1968)
குறிப்பு:
1. பராசக்தி[294 நாள்], பாகப்பிரிவினை[216 நாள்], பைலட் பிரேம்நாத்[222 நாள், ஷிஃப்டிங் முறையில் 1080 நாள்] முதலிய காவியங்கள் 200 நாட்களைக் கடந்தவை.
2. படிக்காதவன், தேவர் மகன்[180 நாள்] முதலியவை வெள்ளிவிழாக் காவியங்கள்.
3. சிவந்த மண்[145 நாள்], தச்சோளி அம்பு(மலையாளம்), பட்டாக்கத்தி பைரவன் ஆகியவை இருபது வாரக் காவியங்கள்.
4. அன்னை இல்லம், நவராத்திரி, ஊட்டி வரை உறவு, இரு மலர்கள், சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், பாபு, கௌரவம், அண்ணன் ஒரு கோயில், விஸ்வரூபம், கீழ்வானம் சிவக்கும், வெள்ளை ரோஜா ஆகியவை 100 நாட்களுக்கு மேல் ஓடியவை.
5. கள்வனின் காதலி[83 நாள்], ரங்கோன் ராதா[71 நாள்], அம்பிகாபதி[84 நாள்], காத்தவராயன்[84 நாள்], பந்தபாசம்[77 நாள்], முரடன் முத்து[79 நாள்], எங்க ஊர் ராஜா[85 நாள்], பரிட்சைக்கு நேரமாச்சு[75 நாள்] ஆகிய காவியங்கள் 10 வாரங்களைக் கடந்தவை.
6. பெம்புடு கொடுகு(தெலுங்கு), பாவை விளக்கு, கப்பலோட்டிய தமிழன், செல்வம், லக்ஷ்மி கல்யாணம், டாக்டர் சிவா, வைர நெஞ்சம், ஊரும் உறவும், வம்ச விளக்கு, லட்சுமி வந்தாச்சு முதலிய காவியங்கள் 50 நாட்களுக்கு மேல் ஓடியவை.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
அன்புடன்,
பம்மலார்.
இசைவாணி பி.சுசீலா அவர்களுக்கு இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
டியர் நௌ சார்,
அரிய பொக்கிஷத்தை [ஸ்ரீவில்லிபுத்தூர் "பராசக்தி" போஸ்டர்] அனைவரின் கண்களுக்கும் விருந்தாக்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்!
டியர் ராகவேந்திரன் சார் & பாலா சார்,
அபார லிங்க்குகளுக்கு அற்புத நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி & பம்மலார்...
ஐப்பசி மாத வெளியீடு பட்டியலுக்கு நன்றி, (முன்பு பம்மலார் வெளியிட்ட தீபாவளிப் பட்டியலின் புதிய வடிவம்). நம்ம ஆளுங்க எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க. :D
'குறிப்பு' பகுதியில், முதல் பிரிவில் இடம்பெற்றிருக்க வேண்டிய 'கப்பலோட்டிய தமிழன்' ஆறாம் பகுதியில் இடம் பெற்றிருப்பது ஒன்றே நம் மனதை வலிக்கச்செய்யும் ஒரு விஷயம். 1961-ல் மட்டும் அது தீபாவளி அல்ல தீபா'வலி'.
Read long back -
CREDIT GOES TO MR. எம்கேஆர்சாந்தாராம.
" உயர்ந்த மனிதன் " படமும் , நடிகர் திலகத்தின் நடிப்பும் !
இந்த தலைப்பில் ஓர் இழையே போடலாம் !
அவ்வளவு எழுத வேண்டும் !
" அப்படி என்ன நடிகர் திலகத்தின் நடிப்பு இந்த படத்தில் சிறந்து
விளங்குகின்றது ? " என்று நீங்கள் கேட்பது புரிகின்றது ! படத்தைப்
பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வந்தது புரியும் ! முதலில்
இளமையாகத் தோன்றும் சிவாஜியைப் பாருங்கள். மலந்த முகத்துடன்,
புன் சிரிப்புடன், உற்சாகமாக நடை நடந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார் !
ஆனால் அதேசமயத்தில் தனது தந்தையார் " வறட்டுக் கெளரவத்தை "
கடைபிடிப்பது குறித்து அவர் கவலைப்பட்டு அசோகனிடம் வருந்துவதைக்
காட்டும்போது, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தகையது என்பது தெரிகின்றது !
அவரது சிரித்த முகம், மகிழ்ச்சி , எல்லாம் எது வரை ?
" வெள்ளிக்கிண்ணம் தான் " பாடல் பாடும் வரை !
அதற்கு அடுத்த காட்சியிலே, அவரது தந்தையார் ( எஸ்.வி. ராமதாஸ் ),
வாணியின் வீட்டைக் கொளுத்த வரும்போதுதான் மறைந்து விடுகின்றது !
அதன் பின்னர் வரும் காட்சிகளில் எல்லாம் சிவாஜியின் முகத்தைப்
பாருங்கள் !
சிவாஜியின் முகம் :
எதையோ பறி கொடுத்தவர் போலவும், வெறுப்புடன் இருப்பது போலவும்,
வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைத்தவர் போலவும், மகிழ்ச்சி என்றால்
என்ன என்று கேட்பவர் போலவும், உற்சாகம் இல்லாமல் இருப்பது போலவும்...........
படம் முழுக்க வருவார் ! இந்த மாதிரியான முகத்தை வைத்துக் கொண்டே
படம் முழுக்க நடிகர் திலகம் நடித்திருப்பதுதான் இந்த படத்தில் சிவாஜி
செய்த தனி சிறப்பு !
படம் முழுக்க இந்த துயரம் தோய்ந்த முகத்தில்தான் சிவாஜி நடித்திருப்பார் !
நான் படம் பார்த்த வரையில் எனக்கு கீழ்கண்டவாறு , அவரது
நடிப்பாற்றலை சான்று கூறும் காட்சிகளாக சொல்லலாம் ! அந்த காட்சிகள்
உங்களையும் கவர்ந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை !
1. வாணி இறந்த பின்பு தன் தந்தையின் எதிரில் படுக்கையில் படுத்தவாறு
பேசும் வசனம் :
" பார்வதி ! என்னை விட்டுப் போய்ட்டியே ! நீ எங்கே என்னை விட்டுப்
போனே ? நான் தான் உன்னைக் காப்பாத்த முடியாத கோழை ஆயிட்டேனே !
நான் ஒரு கோழை ! இந்த பாவத்திற்காக நான் என்னென்ன துன்பங்களை
நான் அனுபவிக்கப் போறேனோ ! கடவுளே ! "
என்று மனம் உருகும் காட்சியில் சிவாஜி " உயர்ந்து " நிற்கிறார் !
2. அசோகன் , குடித்துவிட்டு உண்மையை தாறு நாறாக சொல்லும் போது,
ஒரு இடத்தில் அசோகன் சிவாஜியைப் பார்த்து இப்படி சொல்லுவார் :
"உன்ன நம்பன பார்வதியே உன்னானே காப்பாத்த முடியலே ! " ராஜு, நீ
ஒரு கோழை ! SELFISH FELLOW , சுயநலக்காரன் ! " என்று குற்றம் சாட்டும்போது
சிவாஜி சொல்லும் வசனம் :
" கோபால் , என்னைக் கோழை என்று சொல்லு ! ஆனா சுயநலக்காரன்
என்னு மட்டும் சொல்லாதே ! அதுவும் உன் வாயாலே சொல்லாதே !
நானும் எனக்காக ஒரு கடமையையும் செய்யவில்லை ! ஆரம்பத்திலிருந்து
இன்றுவரை மற்றவர்களின் கடமைக்காக சுமையாக உழைத்துக்கிறேன் !
ஆரம்பத்திலிருந்து என் அப்பாவோட சுயநலத்திற்காக கட்டளை என்னும்
சுமையை சுமந்திருக்கின்றேன் ! கெளரவமான பரம்பரை என்கிற சுமை !
திரண்ட செல்வத்திற்கு அதிபதி என்கிற சுமை ! ஆயிரக்கணக்கான
தொழிலாளர்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை என்னும் சுமை !
இப்படி பல சுமைகளை ஆற்றிக் கொண்டு பொதி மாடு போல வாழ்ந்து
கொண்டிருக்கிறேன் ! சுருக்கமாக சொல்லப் போனால் நான் ஒரு நடமாடும்
சுமைதாங்கி ! "
இப்படி சொல்வதற்க்கு முன்பு நடிகர் திலகம் , அசோகன் கையை இழுத்து
அவரை தன் அருகே இழுத்து வந்து , அசோகன் முதுகில் ஆதங்கத்தோடு ஒரு
தட்டு தட்டிப் இப்படி பேச ஆரம்பிப்பது அற்புதமாக இருக்கும் !
2. சிவகுமார் தன் அம்மா படத்தை வி கே ராமசாமி பாழடித்தற்காக நேரே
சிவாஜியிடம் சென்று தான் வேலையில் நின்று நின்று விடப்போவதாக
சொல்வதும் , அப்போது சிவாஜி , சிவகுமாருக்கு அறிவுரை செய்ய, அப்போது
அங்கு வந்த அசோகன் , சிவாஜியிடம் " லொள்ளு " பண்ணிப் பேச , அப்போது
சிவாஜி பேசும் ஒரே வார்த்தை அற்புதமானது !
சிவாஜி : ( அசோகனிடம் ) : " டேய், நீ அவனுக்கு புத்திமதி
சொல்லுடா ! "
மேற்கண்ட ஒரே வார்த்தை யை சிவாஜி சொல்லும்போது அவரின் அந்த
வார்த்தை " டெலிவரி " மிக சிறப்பாக இருக்கும் ! எப்போதும் சோகத்துடன்
காணப்படும் சிவாஜியின் முகம் இன்னும் சோகம் கப்பியதையும் காணலாம் !
4. செளகார் ஜானகி கொடுக்கும் " பத்திய சமையல் ( ! ) " சிவாஜிக்கு அறவே
பிடிக்காது ! இதனை கவனித்த சிவகுமார் ஒரு நாள் சிவாஜியிடம் " எங்கள்
வீட்டு சமையலை சாப்பிடறீங்களா , ஐயா ? "என்று பணிவுடன் கேட்க அப்போது
சிவாஜியின் முகத்தை பார்க்க வேண்டுமே !
" சரி, கொண்டுவா ! சாப்பிடுகிறேன் ! "
என்று சொல்லும் பாணியில் சிவாஜி தலையை மெல்ல ஆட்டுவாரே !
பார்ப்பதற்க்கே ரொம்ப ரம்மியமாக இருக்கும் !
இது நம்ம கதை !
எனக்கும் , சந்தர்ப்பம் கிடைக்கும்போது கிராமத்திற்கு போகும்போது
அங்கிருக்கும் உறவினர் ஒருவர் என்னைப் பார்த்து , " கடலை
உருண்டை சாப்பிடிறீங்களா ? " என்று கேட்டால் , நான் அப்படித்தான்
தலையை ஆட்டுவேன் !
ஒரு பக்கம் சாப்பிட அசை ! மறுபக்கம் உடம்புக்கு
ஆகாது ! இன்னொரு பக்கம் யாராவது ஏதாவது சொல்வார்களா
என்று அச்சம் !
இதனை எல்லாம் சொல்லாமல் சொல்வதின் வெளிப்பாடுதான்
இந்த சிவாஜியின் " தலையாட்டல் ! " இந்த படத்தில் சிவாஜிக்கு ,
சாப்பிட ஆசை ! உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா என்பதில் அச்சம் !
அதை விட முக்கியம் , " தஞ்சாவூர் தவுறு " - அதான் எஜமானியம்மாள்
செளகார் ஜானகிக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ !
இவைகள் எல்லாம் சேர்ந்த கலவைதான் அந்த தலையாட்டல் !
இதனை நடிகர் திலகம் நன்றாக செய்திருப்பார் !
5. செளகார் ஜானகிக்கு சிவகுமார் வீட்டில் சென்று சிவாஜி சாப்பிட்டது
பிடிக்கவில்லை ! எனவே அவர் சிவாஜியைப் பார்த்து இப்படி கோபத்துடன்
கேட்கிறார் :
" ராத்தினத்திடம் சாப்பாடு கொடுத்தனுப்பின பிறகு பசி இல்லை
என்று சொல்லி , " சாப்பாடு நன்றாக இருந்தது ! " என்று சொன்னது
பொய் இல்லையா ? ஆபிஸ் ஐந்தரை மணிக்கு முடிந்த பின்னும் இப்படி
எட்டு மணிக்கு வந்து விட்டு " ஆபிஸில் வேலை அதிகம் ! " என்று
சொன்னது பொய் இல்லையா ? "என்று சொல்லி சிவாஜியைக் கேட்கும்போது
அதற்கு சிவாஜி சொல்லும் நீளமான வசனம் - அழுத்தம் திருத்தமாகவும் ,
முகபாவகளை மாற்றியும் அதே சமயத்தில் " ஸ்டைல் : ஆக நடந்து சென்றும்
சிவாஜி பேசும் " பொய் " என்கிற தலைப் பில்பேசும் வசனக்கள் - என்னை
மிகவும் கவர்ந்தது !
இதோ அந்த வசனம் :
சிவாஜி : ( செளகார் ஜானகியிடம் ) :
( சிரித்துக்கொண்டே )
" ஏய் ! நான் என்ன சத்ய மூர்த்தியா - சதா உண்மையைப் பேச !
நீ கஷ்டப்பட்டு கண்டு பிடித்தது 2 பொய்கள் ! ஆனா நம்ம வாழ்க்கையிலே
எவ்வளவு பயங்கரமான பொய்கள் மறைந்திருக்குத் தெரியுமா ?
உன் கணவன் யார் ?
மிஸ்டர் ராஜலிங்கம் - A , OWNER OF HUNDREDS OF FIFTY THOUSANDS
ACRES OF FERTILE LAND ! ! "
இதுக்கெல்லாம் என்ன ஆர்த்தம் ?
நாம ஓயாம , ஒழியாம பொய் சொல்லிக்கொண்டிறோம் என்று அர்த்தம் !
( சலிப்புடன் கைகளைத் தட்டிக்கொள்கிறார் )
நாம எழுதற கணக்கிலே பொய் ! " ரிஜிஸ்டர் ஆபீஸிலே பொய் ! "
நாம தொழிலாளர்களுக்கு கிட்டே பொய் ! நம்ம கூட்டாளிகிட்டே பொய் !
இப்படி பொய் ! பொய் ! பொய் ! பொய் !
இப்படி பொய்யே பேசிக்கிட்டு இருக்கிறதலால் ஒரு " மில் " இப்போது
ஏழு மில் ஆயிட்சு ! ஏன் !உன் கழுத்திலே மின்னுதே வைர நெக்லேஸ் !
கணக்கிலே வரும் அதன் விலை 3 லட்சம் ! ஆனால் அதன் மதிப்போ பல
லட்சம் பொய்கள் ! நாம ஏறிப் போற கார் , இந்த பங்களா, இந்த வீடு, ஆஸ்தி,
சொத்து , சுகம் அந்தஸ்து - இவை எல்லாம் என்ன ?
எங்க தாத்தா சொன்ன பொய் !
எங்க அப்பா சொன்ன பொய் !
இப்போ நான் சொல்லிக்கொண்டிருக்கிற பொய் !
மேற்கண்ட வசனங்களால் போலி வாழ்க்கையில் அவர் எவ்வாறு
அவதிப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது அல்லவா ?
6. இறுதியாக " கிளைமாக்ஸ் " காட்சியில் பாரதி தந்த பார்வதிப்
படத்தைப் பார்த்து அவர் காட்டும் உணர்ச்சிகள் - 20 வருடங்களாக
அவர் தன் உள்ளத்தில் தேக்கி வைத்த உணர்ச்சிப் பிரவாகத்தை
அந்த படத்தைப் பார்க்கும் போது அவர் காட்டும் முக பாவங்கள்............
என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது !
படத்தின் " கிளைமாகஸ் " :
கொடைகானலில் சிவகுமார் , பாரதியை திருமணம் நடத்தித் தருவதாக
உறுதிதரும் சிவாஜி, வீட்டுக்குத் திரும்பியவுடன் அங்கே கண்ட காட்சி ,
அவரை திடுக்கிட வைக்கிறது ! வைர நெக்லேஸ் காணாமல் போய்
விட்டது என்று செளகார் ஜானகி சொல்ல எல்லோருடைய உடமைகளையும்
சோதனை செய்ய முற்பட்டபோது, அதில் சிவகுமாரின் பெட்டியில் அந்த
வைர நெக்லேஸ் இருப்பதை அறிந்து அனைவரும் திடுக்கின்Tஅனர் -
வி கே ஆர் மற்றும் மனோரமாவைத்தவிர- ஏன் என்றால் சிவகுமாரை
அந்த வீட்டிலிருந்து " கல்தா "கொடுத்தால்தானே தாங்கள் முன்னேற
முடியும் என்கிற தப்புக் கணக்கில் செய்தது இந்த நெக்லேஸ் வேலை !
அனைவரும் சிவகுமார் மீது பழி போட , அந்த அவச் சொற்களைக் கேட்டு
சிவாஜி , சிவகுமார் மீது கோபம் கொள்கிறார் ! தான் , நல்லவன் என்று
முற்றிலும் நம்பிய ஒருவன் , இப்போது திருட்டுப் பட்டம் வாங்கி நிற்பது
அவருக்கு இன்னும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் மன நிம்மதி
இல்லாமல் இருக்கும் பொழுத்கு , அந்த சமயத்தில் என்ன நடந்தது என்று
விசாரிக்கும் நினைவு கூட இல்லாத நேரத்தில் மற்றவர்கள் கூறும் பழிச்
சொற்கள் , ஒருவரின் ஆத்திரத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என்பதற்கு
சிறந்த எடுத்துக்காட்டு இந்த படத்தில் வரும் இந்த காட்சி ! சிவாஜி,
அனைவரையும் போக சொல்கிறார் !
தன் வீட்டில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்த நாகய்யா , ஒரு நாள்
மூப்பின் காரணமாக வேலையை விட்டு விலக நேருடும் சமயத்தில்
அவரைப் பிரிய மனம் இல்லாமல் சற்றே கண் கலங்கும் நல்ல உள்ளம்
படைத்த சிவாஜி, மற்றவர்கள் பழிச் சொல்லைக் கேட்டு மதி இழக்கிறார் !
சிவாஜி : " சத்யா, ஏன்டா இப்படி செஞ்சே ? உன்னை நான் எப்படி
நினைச்சிருந்தேன் ! என்னை ஏமாத்தியேடா பாவி ! " என்று ஆத்திரத்தில்
தன் கையில் வைத்திருந்த பிரம்பால் சிவகுமாரை விளாசு , விளாசு என
விளாசுகின்றார் ! சிவகுமார் " அம்மா " என்று அழுதுகொண்டு கீழே விழுகிறார் !
செளகார் ஜானகி தடுத்தும் அவர் கேட்காமல் மறுபடியும் அடிக்கிறார் !
பின்னர் கோபம் கொண்டு தன் காலால் சிவகுமாரை எட்டி உதைக்கிறார் !
மேற்கண்ட காட்சி ஒரே " டேக் " -ல் படமாக்கினார்கள். ஆனால் பிரம்பால்
அடிபட்ட சிவகுமாருக்கு அதனால் ஒன்றும் ஆகவில்லை !
ஆனால் :
சிவாஜி, தன் " பூட் " காலால் எட்டி உதைத்ததில் சிவகுமாரின் தோள்பட்டை
கழன்று தனியே வந்து விட்டது ! வலியால் துடித்த சிவகுமார் , தன் வலியை
மறந்து காட்சி சிறப்பாக வந்தது குறித்து மகிழ்ச்சி கொண்டார் ! பின்னர் அவர்
தன் தோள் பட்டைக்கு மருத்துவ கிசிச்சை மேற்கொண்டது தனி கதை !
அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறும் சிவகுமார் தீப்பற்றி எரியும் ஒரு
வீட்டில் தன் அம்மாவை எண்ணியே தற்கொலை எண்ணத்துடன் நுழைகிறார் !
இங்கே , சிவாஜியிடம் பாரதி , சிவகுமாரின் அம்மா படத்தைக் காண்பிக்கும்
போதுதான் சிவாஜியின் முகம் மாறுகிறது ! " பார்வதீ " ( தீ ! ) என்று அலறிக்
கொண்டு கீழே விழுகிறார் ! செளகாரிடம் நடந்ததை சொல்கிறார் ! செளகாரும்
தன் மகன் தம் வீட்டிலே வேலைக்காரனாக இருந்தது குறித்து வேதனை
அடைகிறார் ! அப்போது தன் மகனைத் தேடி சிவாஜி வெளியே வரும்போது,
தீப்பற்றி எரியும் வீட்டில் சிவகுனார் உழைந்து விட்டார் என்பதை அறிந்து ,
தன் மகனைக் காப்பாற்ற தீபிடிக்கும் அந்த வீட்டில் நுழைந்து சிவகுமாரை
மீட்டு வெளியே வருகிறார் !
பிறகு என்ன சுபம் தான் !
விகேஆரும் , மனோரமா வும் தாங்கள் செய்த சதி வேலைக்கு மன்னிப்பு
கேட்கும்போது சிவாஜியோ , " உங்களால் தான் என் மகன் எனக்கு கிடைத்தான் !
எனெவே உங்களை மன்னித்து விட்டேன் ! " என்று சொல்லி " உயர்ந்த மனிதன் "
ஆகிவிடுகிறார் ! அதன்பின்னர் பட இறுதியில் ஏ விஎம் ந் " எம்பளம் " காட்டும்
போது தியேடரில் இருந்த மக்கள் கைகளைத் தட்டி " ஒரு நல்ல படத்தைப்
பார்த்தோம்! " என்கிற திருப்தியுடன் தியேடரை விட்டு வெளியேறுவதை நான்
பார்த்திருக்கின்றேன் !
படம் வெற்றி !
" உயர்ந்த மனிதன் " திரைப் படம் 29 / 11 / 1968 -ல் வெளியானது !
சென்னையில் வெல்லிங்க்டன், மகாராணி, ராக்ஸி ஆகிய தியேடர்களில்
ஓடியது ! இந்த படம் அதிகம் ஆராவாரம் இன்றி , ஆர்ப்பாட்டம் இன்றி
அமைதியாக ஓடியது ! ஏ வி எம் சரவணன் சொல்வது போல், அந்த
காலத்தில் பெரியவர்கள் திரை அரங்குகிற்கு சென்று படங்களைப் பார்த்து
எது நல்ல படம் என்பதைக் கண்டறிருந்து பின்னர் அந்த படங்களை தங்கள்
பிள்ளைகளும் பார்த்து ரசிக்கவேண்டும் என்று விரும்பி அனுப்புவார்கள் !
" உயர்ந்த மனிதன் " திரைப் படத்தை எனது தந்தையார் பரிந்துரையின் பெயரில் தான் நான் பார்த்தேன் !
இப்போதோ , நிலைமை வேறு !
இப்போது நம் பிள்ளைகள் முதலில் படத்தைப் பார்த்து பின்னர் தேர்வு செய்து அவைகளைப் பார்க்கும்படி பரிந்துரை செய்கிறார்கள் !
உயர்ந்த மனிதன் " படம் 125 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது !
125 நாட்கள் ஓடிய பிறகுதான் அந்த படத்தின் 100 -ம் நாள் விழா கொண்டாடப் பட்டது !
அன்றைய தமிழக முதல்வர் அண்ணாதுரை தலைமை தாங்க மத்திய அமைச்சர் ஒய். பி. சவாண் அவர்கள் விழாவுக்கு வந்திருந்து ரிசுகளை
வழங்கியது , இந்த படத்திற்கே அமைந்த தனி சிறப்பு !
காங்கிரஸ் கட்சியை சார்ந்த சிவாஜி பட விழாவுக்கு திமு க கட்சியில்
இருக்கும் நீங்கள் அதுவும் முதல்வர் பதவியில் இருக்கும் நீங்கள் , அந்த
நிகழ்ச்சிக்கு செல்லக் கூடாது அண்ணாவுக்கு யோசனை சொன்னார்கள் !
ஆனால் அண்ணா அதனைப் &
CONTD. ...
" உயர்ந்த மனிதன் "
அன்றைய தமிழக முதல்வர் அண்ணாதுரை தலைமை தாங்க மத்திய
அமைச்சர் ஒய். பி. சவாண் அவர்கள் விழாவுக்கு வந்திருந்து பரிசுகளை
வழங்கியது , இந்த படத்திற்கே அமைந்த தனி சிறப்பு !
காங்கிரஸ் கட்சியை சார்ந்த சிவாஜி பட விழாவுக்கு திமு க கட்சியில்
இருக்கும் நீங்கள் அதுவும் முதல்வர் பதவியில் இருக்கும் நீங்கள் , அந்த
நிகழ்ச்சிக்கு செல்லக் கூடாது அண்ணாவுக்கு யோசனை சொன்னார்கள் !
ஆனால் அண்ணா அதனைப் பற்றி கவலைப் படாமல் விழாவில் கலந்து
கொண்டதோடு அவருடைய " பஞ்ச் " வசனத்தையும் அந்த விழாவில்
சிவாஜிக்காக பயன்படுத்தினார் !
அதுதான் :
" மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு ! "
இந்த வசனம் அண்ணா எழுதின ஒரு படத்தில் இடம் பெற்ற வசனம் !
அந்த வசனத்தை இங்கே சிவாஜியைக் குறிப்பிட்டு பேசினார் !
" கணேசன் வேறு ஒரு கட்சியில் இருந்தாலும் அவருடைய திறமையை
நான் போற்றுகின்றேன் ! கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க ! "
என்று அண்ணா சொன்னார் !
நடிகர் திலகமும் அண்ணாவை புகந்து பேசினார் !
Rajapart rangadurai
The direction squanders a bit, especially the over-melodramatic tone with which it ends. Invariably, NT is the best thing about the film.. :notworthy:
Last Lear, Loose Liar-nu evan evano padam nadichu, empty deconstruction, subtext kandupidikaranga.
Something on lines of NT's masterclass transition from stage to film (And how he changed norms of acting in Tamil cinema since) would be the zenith. One of my fantasy films with NT, you see. For I think NT's encyclopedic modes of acting could have been fully registered in a subject like this. A film on those lines would have made it unquestionably easier to those who find it difficult to fully appreciate his unimaginable talent, and lazily describe it as 'theatrical'. How I wish something on these lines got materialized.
Gosh, you know we all share that sentiment, mate. If only....if only....
Rajapart scores because of NT, because of MSV's haunting songs, and was let down when they elected to dub NT during the Shakespeare thing. We all wouldn't have minded NT's own accent on English. Come on, avar English pesurathey oru azhagu. Ejjample: Gouvaram. Listen to him say, Not only you must stand, you must stayyyyy..... !!! I am getting goosebumps as I type this. :D Anyway, lots of sample in that film.
MT, NT, NTR, GG, Rajkumar (Hindi) - rare photo. Can any one tell when it was taken ?
http://cdn.wn.com/pd/d9/da/fef6d088e...cde_grande.jpg
Sri Sai Narayanan is a great fan of Shivaji Ganesan. When Shivaji Ganesan received the Chevalier of the Ordre des Arts et des Lettres Award from the French Government, Sri Sai Narayanan composed a beautiful song in Tamil by a way of his tribute to the multi-faceted genius of Shivaji Ganesan as an actor. He not only composed this beautiful song but also went to the residence of Shivaji Ganesan and sang the song in person, sending that versatile actor and all the members of his family into raptures of joy and happiness.
presenting below the text of that Tamil song. The lilting and majestic sweep of this song which leaves no detail of Sivaji Ganesan’s acting career untouched puts us all in a state of thrall. giving below the text of this beautiful Tamil song.
http://4.bp.blogspot.com/_Oeuzs-1w68...y+Saidasan.jpg
Thanks to Saidsan
Would rival Hollywood legends for sharpshoot idiosyncratic dialogue delivery.Quote:
Originally Posted by groucho070
Exactly, somewhere here, I think, you mentioned Pacino who can indulge in that delightful temperament, Scent of a Woman reminded me of NT here.
But that was the then Pacino, these days it's more sad case of self-caricaturisation. If you know what I mean.
Agreed Groucho. Pacino, personally I find a bit limited too..
Motor Sundaram Pillai lined up next.
வாலி அவர்களின் 80-வது பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்த போது பாடலாசிரியர் பழனி பாரதி ஒரு தகவலை சொன்னார். வாலி அவர்களுக்கு அவர் எழுதிய பாடலுக்காக ஒரு முறை தேசிய விருது கொடுக்க முடிவு செய்யப்பட்டு அவரை பற்றிய தகவல்களை அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்களாம். ஆனால் வாலி அனுப்பவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம் என் பாடலை பாராட்டி விருது கொடுப்பவன் என்னை பற்றி தெரிந்தவனாக இருக்க வேண்டும். இல்லையென்றால் என் பாடல் விருது பெற தகுதியானது என்று முடிவு செய்த போதே வேறு ஒன்றும் கேட்காமல் விருதை வழங்கியிருக்க வேண்டும் என்றாராம். இதை முன்பே கேள்விப்பட்டிருந்தாலும் அது எந்த பாடலுக்காக என்று தெரியாமல் இருந்தது. இந்த விழாவில்தான் பாரத விலாஸ் படத்தில் வந்த இந்திய நாடு என் வீடு பாடலுக்காக அந்த விருது பரிந்துரை செய்யப்பட்டது என்பது வெளிப்பட்டது. ஆக வாலிக்கும் கூட கிடைத்திருந்தால் அது நடிகர் திலகத்தின் படத்தின் மூலமாகவே கிடைத்திருக்கும் என்பது நமக்கெல்லாம் சந்தோஷமான விஷயம்தானே.
அன்புடன்
பாலா,
உயர்ந்த மனிதனை அப்படியே சாறு பிழிந்து கொடுத்த அந்த பதிவிற்கு நன்றி.
Thilak & Rakesh, wish you people discuss such things often here. Thilak, MSP should be a great watch for you.
ஞாயிறன்று சிவகாசியில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்ட ஓர் கூட்டம் நடைப்பெற்றது. விருதுநகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் அவர்கள் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் சிவகாசியில் நடிகர் திலகத்தின் முழு உருவ சிலை ஒன்றை அமைத்து விரைவில் திறப்பது என முடிவு செய்யப்பட்டது. மாணிக் தாகூர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்திலேயே ஒருவர் ரூபாய் ஐம்பதினாயிரமும் மற்றும் இரண்டு அன்பர்கள் தலா ரூபாய் இருபத்தையாயிரம் தருவதாக சொல்லி அது வரவில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆக அச்சு தொழில் நகரத்திலும் கலைத்தாயின் மூத்த மகனின் சிலை விரைவில் உதயமாகும்.
அன்புடன்
interestingly, I have never watched motor sundaram pillai. 8-)
This rare photo was taken in 1972 at a function held in Chennai to felicitate “Bharat” MGR.
Thanks to எம்கேஆர்சாந்தாராம்
"உயர்ந்த மனிதன் " படத்திற்கு சிவாஜிக்கு எவ்வளவு சம்பளம் ?
அந்த காலத்தில் சிவாஜியை வைத்து படம் எடுப்பது என்றால் அது " மெகா பட்ஜட் " படமாகும் ! சிவாஜியின் " கால் ஷீட் " கிடைத்து கேட்கும் சம்பளத்தைத் தந்து விட்டால்....... ஒரு நல்ல படம் " ரெடி " ஆகிவிடும் !
ஆனால் சம்பளத்தைப் பொருத்த வரை - அது சிவாஜியின் வேலை அன்று ! நடிகர் திலகம் " நடிப்பு " ஒன்றுதான் கருமமே கண்ணாக இருப்பார் !
பின்னர் யார் சம்பளம் பேசுவார்கள் ?
எல்லாம் சிவாஜியின் தம்பி வி. சி.சண்முகம் தான் !
வி. சி. சண்முகம்தான் சிவாஜியின் சம்பளம், கால்ஷீ, விவகாரம் போன்றவைகளை நிர்வாகித்து வந்தார். எம்ஜிஆர்க்கு , அவர் அண்ணன் சக்ரபாணி மாதிரி சிவாஜிக்கு , வி.சி. சண்முகம் !
அங்கே அண்ணன் - இங்கே தம்பி !
சம்பளத்தைப் பற்றி சிவாஜியிடமே நேரிடையாகக் கேட்டார் அப்பச்சி ! அதற்கு சிவாஜி சொன்னார் :
" சம்பள விஷயம் எல்லாம் என் தம்பி ஷண்முகத்திடம் பேசிக்கொள்ளவு ! "
சண்முகம் வந்தார், அவரிடம் சம்பள விஷயத்தை பேசினார்கள்.
ஷண்முகம் என்ன சொன்னார் தெரியுமா ?
(" அது தெரிந்தால் நீங்கள் எழுதுவதைப் படிப்போமா ? " என்கிறீர்களா ! )
சண்முகம் : " நீங்க எதைக் கொடுத்தாலும் வாங்கிக்க்
கொள்ளலாம் என்று அண்ணன் சொல்லிவிட்டார் ! "
செட்டியார் அவர்களுக்கு அவர் சொன்னது பிடிக்கவில்லை !
சிவாஜியின் முதல் படமான " பராசக்தி " யில் சிவாஜியின்
சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
மாதம் ரு. 250 !
அந்த சம்பளம் கூட சிவாஜி " வேண்டாம் " என்றும் இலவசமாக
நடிக்கிறேன்" என்றும் சொன்னவர் !
அப்போது கே.ஆர். ராமசாமியத்தான் " பராசக்தி " யில் போட
வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவர் செட்டியார் !
ஆனால் " உயர்ந்த மனிதன் " படம் எடுக்கும் போது சிவாஜி
ஒரு மாபெரும் நடிகர் ! அவருக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் ?
யோசித்தார் செட்டியார் !
" பளிச் " என்று ஓர் " ஐடியா " தோன்றியது செட்டியாருக்கு !
செட்டியார் , தன் மகனான சரவணனை இப்படி கேட்டார் :
" அவர் கடைசியாக நடித்த படத்தில் சிவாஜியின் சம்பளம்
எவ்வளவு ? "
அதாவது சிவாஜி அப்போது வாங்கும் சம்பளமே கொடுப்பது
என்று முடிவு செய்யப்பட்டது !
விசாரித்ததில் , சிவாஜி அவர்கள் ஏ.பி. நாகராஜன் படமான
" திருவருச்செல்வர் " படத்தில் நடித்தார் என்றும் அப்போது
ஏ.பி. என். சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் : இரண்டு லட்சம் ரூபாய் !
செட்டியார் " கணக்கு " போட்டார் :
என்ன கணக்கு ?
1. ஏ.பி. என். எடுத்தது வண்ணப் படம் - நாம் எடுப்பதோ கருப்பு -
வெள்ளைப் படம் !
2. ஏ.பி. என். படத்தில் " காஸ்ட்யூம் " கள் மிக அதிகம் !
கிலோ கணக்கில் " கில்ட் " நகைகளை சுமந்து சிங்க நடை
சிவாஜி நடக்க வேண்டும் !
" உயர்ந்த மனிதனுக்கு " - " கோட் - சூட் " போதுமே !
அதுவும் நடப்பதற்கு க் கூட " வாக்கிங் ஸ்டிக் " தருகிறோமே !
3. ஏ.பி. என் . படத்தில் நடிக்க நாட்கள் அதிகம் வேண்டும் !
" உ.ம " க்கு அதிக நாட்கள் தேவை இல்லை !
4.ஏ.பி. என் . படத்தில் சிவாஜிக்குப் பல வேடங்கள் !
" திருவருட்செல்வர் " படத்தில் சிவாஜி மன்னனாக, சுந்தர
மூர்த்தி நாயனராக, அப்பராக, சலவைத் தொழிலாளியாக- பல
வேடங்கள் !
" உ . ம " - க்கு சிவாஜிக்கு ஒரே வேடம் !
இதுதான் செட்டியாரின் கணக்கு !
இந்த மாதிரியான கணக்கு எல்லாம் ஒரு திறமையான
நிர்வாகிதான் போடமுடியும் !
ஏ வி எம் அவர்கள் ஒரு திறமையான நிர்வாகி என்று அடியேன்
சொன்னாள் ....... " சூரியனுக்கே " டார்ச் லைட் " அடித்த கதைதான்! "
( நன்றி : ஆர். பார்த்திபன் ! )
எனவே 2 லட்சம் வாங்கி நடித்த ஏ பி. என் படத்தை விட , ஏ வி எம்
படத்தில் வேலை கம்மி !
" எனவே 2 லட்சத்திற்குப் பதில் ஒன்றரை லட்சம் தரலாம் "
என்று முடிவு செய்தார் செட்டியார் !
என்ன செட்டியார் போட்ட கணக்கு சரிதான் என்று என்
மனது சொல்லியது !
உங்களுக்கு ?
" சம்பளம் ஒன்றரை லட்சம் " என்று சண்முகம் தரப்பில்
சொல்லப்படது ! சண்முகம் " ஓ. கே " என்றார் !
"ஆனால் ஒரு கண்டிஷன் ! " - என்றார் சண்முகம் !
" என்ன கண்டிஷண் ஸ்வாமி ? " என்கிறீர்களா ?
சண்முகம் சொன்னார் :
" இப்போது காலணா கூட தரக்கூடாது !
படம் மொத்தமாக முடிந்தவுடன் படம் " சென்சார் "
போய் வந்தவுடன் ஒரே " செட்டில் மெண்ட் " - ல் மொத்தமாக
கொடுத்து விடவேண்டும் ! "
கசக்குதா செட்டியாருக்கு ?
" சரி " என்றார் !
இத்தான் சிவாஜிக்கு சம்பளம் நிணயத்த கதை !
இப்போது எல்லாம் என்ன கதை என்று தெரியுமா ?
சிவாஜியின் " கலை உலக வாரிசு " கமல் நடிக்கும் " லேட்டஸ்ட் "
படமான " மன்மதன் அம்பு " படத்திற்கு கமல் சம்பளம் எவ்வளவு
தெரியுமா ?
23 கோடி !
அதுவும் எப்படி ?
பாதி தொகையை " அட்வான்ஸ் " ஆக கமலுக்கு -
கமல் ஒப்புக்கொண்ட அன்றே தரப்பட்டதாம் !
இது எப்படி இருக்கு ?
அதை விட கொடுமை என்ன தெரியுமா ?
பணப் பிரச்சனையை விட அந்த படத்தில் " திரிஷாவின் அம்மா நடிக்கிறாரா இல்லையா" என்பதே என்பதே பெரிய பிரச்சனையாம் !
எப்படி இருக்கிறது கதை !
பின்பு ஒரு வழியாக " உயர்ந்த மனிதன் " படப் பிடிப்பு தொடங்கியது
" உயர்ந்த மனிதன் " படத்தில் வாணிச்ரியை அசோகன் ஒரு தலையாக
காதலிப்பார் ! ஆனால் வாணியோ சிவாஜியைத்தான் காதலிப்பார் !
இருதியில் மனைவியைப் பிரிந்த சிவாஜி தன் மனைவி ஒரு குழந்தையைப்
பெற்றெடுத்தான் இறந்தாள் என்கிற உண்மை சிவாஜிக்குத் தெரியாது !
ஆனால் அசோகனுக்கு அந்த உண்மை தெரிய வரும் ! சிவாஜியின்
மகன் சிவகுமார்தான் என்கிற உண்மை சிவாஜிக்குத் தெரியாது ! ஆனால்
அசோகனுக்குத் தெரியும் ! டாக்டராக வரும் அசோகன் கதா பாத்திரம் ஓர்
இருதய நோயாளி ! அப்போது அசோனுக்கு கீழ் கண்டவைகளை தன் நடிப்பால்
செய்து பேர் வாங்கவேண்டும் !
அவைகள் :
1 .உண்மை தெரிந்த அன்று அசோகன் அதிக அளவில் குடித்து விட்டு
சிவாஜியிடம் சிவகுமார்தான் அவருடைய மகன் என்பதை சொல்ல
வேண்டும் !
2.அதே சமயத்தில் போதையில் பேச வேண்டும் !
3. சிவாஜியின் முண்ணாள் மனைவியைப் பற்றிப் பேசி அவரின்
கோபத்திற்கு ஆளாக நடிக்க வேண்டும் !
4. இறுதியில் " வலி " வந்தது போல் அவதிப் பட வேண்டும் !
5. அங்கே நின்று கொண்டிருக்கும் சிவகுமாரை போக வேண்டாம்
என்று சொல்லவேண்டும் !
6. இறுதியாக அசோகன் இறக்கும் தறுவாயில் " சத்யா..... சத்யா.... "
என்று சொல்லியபடி மடிய வேண்டும் !
இதனை வேலைகளை அசோகன் போன்ற ஒரு சாதாரண நடிகர்
செய்ய முடியுமா என்று சொல்லுங்கள் ! அதனால் அசோகனை நான்
குறைத்து எடை போடவில்லை ! அந்த படத்தின் கதா பாத்திரத்தை
அவரால் தாங்க முடியவில்லை என்று சொன்னேன் ! " இரட்டை
இயக்குனர்கள் " கிருஷ்ணன் - பஞ்ச்ய் வும் அவாறே நினைத்தனர்.
என்ன செய்வது என்று அவர்களுக்குப் புரியவில்லை ! நிலைமையைப்
புரிந்து கொண்ட நடிகர் திலகம் சுதாரித்துக் கொண்டார் ! அசோகன்
எப்படி அந்த முக்கியமான கட்டத்தில் அனைவரையும் கவரும்
வகையில் நடிக்க வேண்டும் என்பதை சிவாஜி அசோகனுக்கு சொல்லிக்
கொடுத்தார் !
( சுமாரான படம் தான் கிடைத்து !
பொறுத்துக்கொள்ளவும் ! )
அசோகனும் சிவாஜி சொல்லிக் கொடுத்த படியே நடித்தாராம் !
அந்தக் காட்சியிம் மிக சிறப்பாக வந்தது !
சிவாஜியிடம் உள்ள பல நற்பண்புகளில் ஒன்று :
" தன்னைப் போலவே மற்றவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் ! "
என்பதே !
ஒரு படத்தில் ஒரு கட்டத்தில் தான் " டம்மி " யாக இருந்தால் கூட
பரவாயில்லை, அந்த நடிகர் / நடிகை நன்றாக நடித்தார் படம் வெற்றி
அடைய வாய்ப்புக்கள் உண்டு என்று நினைப் பவர் ! இதற்கு நிறைய
எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம் !
இதோ சில :
1. பண்டரி பாய் , தன் கணவனாக வரும் சிவாஜியே நாட்டைக் காட்டிக்
கொடுக்கும் " துரோகி " என்று தெரிய வந்ததும் பண்டரி பாய் பேசும்
வசனங்கள் ! சிவாஜிக்கு அந்த இடத்தில் " டம்மி பீஸ் " தான் !
படம் : " அந்த நாள் "
2. தன் கணவனைப் பழித்துப் பேசும் , தன் தம்பியான எஸ் .எஸ். ஆரை
கனல் தெறிக்கும் வசனம் பேசி எஸ் எஸ் ஆரை சிவாஜி வைத்திருந்த
குடையால் விளாசும் காட்சியில் சிவாஜி " டம்மி பீஸ் " தான் !
படம் : " தெவப் பிறவி "
3. " பிரஸ்டிஜ் " பத்மனாப ஐயரை விட அவர் மனைவியாக வரும் பத்மினி
பல இடங்களில் சிவாஜியை " ஓவர் டேக் " பண்ணுவார் !
படம் : " வியட்நாம் வீடு "
4. சரோஜா தேவியின் வசனங்கள் - " இருவர் உள்ளம் " படத்தில் !
5. தன் மகள் களில் ஒருத்தி தனக்குப் பிறக்கவில்லை என்று உணர்ந்து
கொண்ட " பைலட் பிரேம் நாத் " ஐ , கடைசி கட்டத்தில் " மேஜர் "
சுந்தர்ராஜன் நீளமான வசனங்கள் பேசி உண்மையை உணர்த்தும் காட்சி !
6. " வீரபாண்டிய கட்டபொம்மன் " படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள்
உலகப் புகழ் பெற்றவை ! ஆனால் அதே படத்தில் அவருடைய மனைவியாக
வரும் எஸ். வரலட்சுமி , கட்டபொம்மனைப் போருக்கு வழி அனுப்பும் போது
பேசும் வசனங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா !
" நாமும் போருக்குப் போய்விடலாமா ! " என்று நினைக்கும் அளவுக்கு
இருக்கும் ! அப்போதும் சிவாஜி ஒரு " டம்மி பீஸ் " தான் ! இப்படி பல
படங்கள் ! சிவாஜி மற்ற நடிகர்களுக்கு வழி விட்டு அவர்களும் நன்றாக
நடிக்கட்டும் என்கிற தாராளமான மனப் பான்மை வேறு யாருக்கு வரும் ?
இதோ " உயர்ந்த மனிதன் " படத்திலும் இப்படித்தான் !
அசோகன் குடித்துக்கொண்டே பேசும் வசனங்களுக்கு நடுவே சிவாஜிக்கு
வேலை இல்லை ! எனினும் அசோகன் நடித்த அந்த இடங்கள் அனைவரும்
பாராட்டும் வகையில் அமைந்தது என்று நான் சொல்லித் தெரிய
வேண்டியதில்லை !
மேற்கண்ட படப் பிடிப்பு முடிந்தவுடன் சிவாஜி , சரவணனிடம்
இப்படி சொன்னாராம் :
" எனக்கு அவன் துரோகி !
அவனுக்கு நான் " ஆக்ஷன் " சொல்லிக் கொடுக்க வேண்டீருக்கு பார் !
படம் நல்லா வரணும்ங்கிறதற்காக அப்படி நான் சொல்லித் தர
வேண்டியுள்ளது ! " என்று முணுமுணுத்தாராம் !
நிலைமை இப்படி இருக்க ...........
அசோகன் , சரவவணன் இடம் அடித்த " கம்மெண்ட் "
என்ன தெரியுமா ?
" ஏண்ணே, இந்த ஆள் ( சிவாஜி ) நம்மளக் கவுத்திட வில்லையே ? "
இதைக் கேட்டு சரவணன் , அசோகனைக் கடிந்து கொண்டார் !
சரவணன் : ( அசோகனிடம் ):
" அடப் பாவி மனுஷா !, அவர் உனக்காக எவ்வளவு அக்கறையாகக் கற்றுக்
கொடுத்தார் ! ஏன் நீங்க அப்படி நினைக்கிறீங்க ? "
இந்த கட்டத்தில் ஒன்றை நான் சொல்லியே ஆக வேண்டும் !
அந்த காட்சியில் சிவாஜி , அசோகனுக்கு சொல்ல்க் கொடுத்தில்
ஒரு சதவிகிதம் தான் அசோகன் நடித்துக் காட்டினார் ! அசோகன்
சிவாஜி சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருந்தால் படம்
மிகப் பெரிய " இட் " ஆகிருக்கும் ! "
இதை சொன்னவர் :
அசோகனின் நெருங்கிய நண்பர் :
ஏ.வி. எம். சரவணன் !
Thanks to Sivaji rasikan,
டம்மி பீஸ் " வகையில் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாமே ? இதோ எனக்கு (?) தெரிந்த சில " டம்மி பீஸ் "
திருவிளையாடல் படத்தில் தருமி (நாகேஷ்) செய்யும் விவாதம்...
பார் மகளே பார் படத்தில் வி.கே.ராமசாமி நடிகர் திலகத்தின் கௌரத்தை குலைக்கும் விதமாக பேசும் அந்த காட்சி,
ராஜ ராஜ சோழன் -ல் லட்சுமியும் நடிகர் திலகமும் வாதிடும் "என்று சொல்லுங்கள் அண்னா" காட்சி
பாசமலர் படத்தில் ஜெமினி கணேசன் நடிகர் திலகத்திடம் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக மிரட்டும் காட்சி
மேலும் , தங்க பதக்கம் படத்தில் கே.ஆர்.விஜயா பல காட்சிகளில் நடிகர் திலகத்தையும் விஞ்சி நடித்திருப்பார்.
நடிப்பால் இவரை மிஞ்சி நடித்தவர்களில் சிலர்....
தேவிகா (நீலவானம்),
சாவித்திரி கணேஷ் (பாசமலர்,நவராத்திரி),
பத்மினி (பேசும் தெய்வம், தங்கபதுமை)
இன்றைய தினமணியில் லிருந்து...
.. எந்தக் காட்சி என்று தெரிகிறதா?Quote:
திரையுலகைப் பொறுத்தவரை கதையை முழுவதும் காப்பி அடிப்பது ஒரு ரகம். ஒரு சில சம்பவங்களை மட்டுமே காப்பி அடிப்பது மற்றொரு ரகம். இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. சிவாஜி நடித்த "பாவமன்னிப்பு' படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி ஒன்றை "முதல் மரியாதை' படத்தில் அப்படியே அமைத்திருந்தார்கள்
http://dinamani.com/edition/Story.as...Name=Editorial Articles&artid=332449&SectionID=133&MainSectionID= 133&SEO=&Title=கதை திருட்டுக்குத் தேவை கடிவாளம்!
டியர் பாலா,
'உயர்ந்த மனிதன்' படத்தின் சிறப்புகள் பற்றிய நீண்ட கட்டுரை அபாரம். இதன்மூலமாக அப்படம் பற்றிய பல அரிய தகவல்களைத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள், நன்றிகள்.
நடிகர்திலகமும் அசோகனும் பங்குபெறும் குறிப்பிட்ட காட்சியில் நடந்தவற்றை திரு ஏ.வி.எம் சரவணன் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியிலும் கூறியிருந்தார். 'இருமலர்கள்' படப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவத்துக்குப்பிறகு இருவரும் பேசிக்கொள்வதில்லை. இருப்பினும் இப்படத்துக்காக நடிகர்திலகம் சற்று விட்டுக்கொடுத்து நடித்தார். 'இவனெல்லாம் துரோகி, இவனுக்கெல்லாம் நடிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கு' என்று நடிகர்திலகம் சொன்னதையும், 'இந்த ஆள் என்னை அமுக்கப் பார்ர்கிறாரா?' என்று அசோகன் கேட்டதையும் சரவணன் நினைவுகூர்ந்தார்.
நடிகர்திலகத்தின் சகோதரர் வி.சி.சண்முகத்தைப்பொறுத்தவரை, அவர் பண விஷயத்தில் ரொம்ப கறார், கண்டிப்பானவர் என்றெல்லாம் அவரைப்பற்றித் தெரியாதவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நெருங்கிப் பார்த்தவர்களுக்குத்தான் அவருடைய மென்மையான அணுகுமுறை தெரியும்.
'ராஜபார்ட் ரங்கதுரை' படத்துக்காக நடிகர்திலகத்தை புக் பண்ணிய அப்படத்தின் தயாரிப்பாளர் வி.சி.குகநாதன், அவருக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக பல இடங்களில் பணம் ஏற்பாடு பண்ணி பேங்கில் போட்டுவிட்டு, ஒருலட்ச ரூபாய் செக்குடன் வி.சி.சண்முகத்தைப்போய்ப் பார்த்து, அட்வான்ஸாக ஒரு லட்சத்துக்கான செக்கை நீட்ட, (திரையுலகில் என்னென்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை 'அப்டுடேட்'டாக விரல் நுனியில் வைத்திருக்கும் சண்முகம், இப்பணத்தை ஏற்பாடு செய்ய குகநாதன் எவ்வளவு பிரயாசைப்பட்டார் என்று தெரிந்து கொண்டு) "முதல்ல செக்கை உங்க பாக்கெட்ல வைங்க. அட்வான்ஸுக்கெல்லாம் இப்போ அவசரமில்லை. முதல்ல இந்தப்பணத்தை வச்சிக்கிட்டு ஷூட்டிங் ஆரம்பிங்க. பாதிப்படத்துக்கு மேல் முடிந்து, ஏரியாக்கள் விநியோகம் ஆனபிறகு பணம் வாங்கிக்கிறேன். அதுமட்டுமில்லே, விநியோகஸ்தர்களிடம் ஏரியா விநியோகம் பற்றி நீங்க நேரடியாக பேசாதீங்க. உங்களை ஏமாத்திடுவாங்க. என்கிட்டே அவங்களை அழைச்சிக்கிட்டு வாங்க. நல்ல ரேட்டுக்கு உங்க படத்தை நான் பிஸினஸ் பண்ணித்தர்ரேன்" என்று சொல்லியனுப்பினாராம்.
சொன்ன மாதிரியே மிக நல்ல ரேட்டுக்கு படத்தை விற்பனை செய்ய உதவினாராம். தரத்திலும், பொருளாதாரத்திலும் தன்னை வெகுவாக உயர்த்திவிட்ட படம் ராஜபார்ட் ரங்கதுரை என்று இன்றுவரை வி.சி.குகநாதன் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
பிறிதொரு சமயம் தன் தம்பி பற்றி நடிகர்திலகம் சொல்லும்போது, "சண்முகம் மட்டும் இல்லேன்னா ரொம்பப்பேர் என்னை ஏமாத்தியிருப்பாங்க" என்று சொல்லியிருந்தார்.
"உயர்ந்த மனிதன்" வெற்றி விழா: அறிஞர் அண்ணா பாராட்டு
http://202.65.145.154/2010/01/29104142/sivaji.html
[quote="saradhaa_sn"]
நடிகர்திலகமும் அசோகனும் பங்குபெறும் குறிப்பிட்ட காட்சியில் நடந்தவற்றை திரு ஏ.வி.எம் சரவணன் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியிலும் கூறியிருந்தார். 'இருமலர்கள்' படப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவத்துக்குப்பிறகு இருவரும் பேசிக்கொள்வதில்லை. இருப்பினும் இப்படத்துக்காக நடிகர்திலகம் சற்று விட்டுக்கொடுத்து நடித்தார். 'இவனெல்லாம் துரோகி, இவனுக்கெல்லாம் நடிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கு' என்று நடிகர்திலகம் சொன்னதையும், 'இந்த ஆள் என்னை அமுக்கப் பார்ர்கிறாரா?' என்று அசோகன் கேட்டதையும் சரவணன் நினைவுகூர்ந்தார்.
சாரதா மேடம்,
கர்ணன் படத்திலேயே NT அவர்களுக்கும் அசோகனுக்கும் கருத்துவேறுபாடு வந்து அதன் பின் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படியென்றால் இருமலர்கள் படத்தில் நடிக்க NTஅவர்கள் எப்படி ஒப்புக்கொண்டார்?
that brings out for an interesting discussion
Nambiar was the only person who worked in both the camp without any problem i guess
ஜேயார்,Quote:
Originally Posted by J.Radhakrishnan
கர்ணன் படத்தின்போது ஏற்பட்ட பிரச்சினை, அப்போதே பந்துலு, சித்ரா கிருஷ்ணசாமி போன்றவர்களால் தீர்த்து வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 'முரடன் முத்து' படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பிறகு மூன்று ஆண்டுகள் இருவரும் சந்திக்கொள்ளவேயில்லை. பின்னர் இருமலர்கள் படத்தில் இயக்குனர் ஏ.சி.டி., தன் ஆப்த நண்பரான அசோகனை நடிக்க வைத்தார். அசோகனிடம் Loose Talking என்ற கெட்ட பழக்கம் உண்டு. அடுத்தவர்கள் பற்றி கமெண்ட் அடித்துக்கொண்டேயிருப்பார். அப்படி பேசிய ஒரு விஷயம் நடிகர்திலகத்தின் காதுக்கு எட்ட, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிரச்சினை வர, நடிகர்திலகம் கோபம் கொண்டு ஏ.சி.டி.யிடம், 'இவன் சீன்களை எடுத்து முடிச்சிட்டு என்னைக்கூப்பிடு' என்று போய் விட்டார். அதன்பின்னர் இருவரும் வரும் சில காட்சிகள் மட்டும் தனித்தனி குளோசப்கள் எடுக்கப்பட்டு எடிட்டிங்கில் இணைக்கப்பட்டன. (தகவல்: இயக்குனர் திரு எஸ்.பி.முத்துராமன்)
இதன்பிறகும், உயர்ந்த மனிதன் படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டது ஏ.வி.எம்.சரவணனின் நட்புக்காகவே. முதலில் நடிகர்திலகம் டாக்டர் ரோலில் மேஜரையும், டிரைவர் ரோலில் முத்துராமனையும் சிபாரிசு செய்தாராம். ஆனால் அசோகனுக்கு டாக்டர் ரோல் தருவதாக உறுதியளித்து விட்டதாக சரவணன் சொல்ல நடிகர்திலகம் தன் கருத்தை வலியுறுத்தவில்லையாம் (தகவல் திரு ஏ.வி.எம்.சரவணன்).