Anirudh Ravichander @anirudhofficial Jan 12 https://pbs.twimg.com/media/CYgMnunUwAAI4W_.jpg
Printable View
Winners List of 13th Chennai International Film Festival
https://pbs.twimg.com/media/CYm75EYUMAAE62b.jpg
Actress Nayanthara won Amitabh Bachchan Award @ 13th Chennai International Film Festival
https://pbs.twimg.com/media/CYm53rfU0AIIDvW.jpg
சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி - விஷ்ணு
http://tamil.thehindu.com/multimedia...J_2703244f.jpg
சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், மஞ்சிமா
மோகன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
'கெத்து' படத்தை அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் 'மனிதன்' படத்தில்
நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் உள்ளிட்ட
பலர் நடித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
'மனிதன்' படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிப்பதற்கு
தேதிகள் ஒதுக்கினார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தில் உதயநிதி உடன் யாரெல்லாம் நடிக்க
இருக்கிறார்கள் என்பதற்கான தேர்வு நடைபெற்று வந்தது.
தற்போது அப்படத்தில் உதயநிதிக்கு நண்பராக விஷ்ணுவிஷால், நாயகியாக
மஞ்சிமா மோகன் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று
காலை நடைபெற்றது. படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் துவங்கும் என்று
தெரிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்
'அரண்மனை 2'-க்கு 'யு' சான்றிதழ்: ஜன. 29-ல் படம் ரிலீஸ்
http://tamil.thehindu.com/multimedia...2_2675033f.jpg
'அரண்மனை 2' படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து
ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.
சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா
உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அரண்மனை 2'. குஷ்பு
தயாரித்திருக்கும் இப்படத்தை சுந்தர்.சி இயக்கி இருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி
இசையமைத்திருக்கும் இப்படத்தின் தமிழக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்
கைப்பற்றி இருக்கிறது.
பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்ட இப்படம், கிராபிக்ஸ் பணிகள்
முழுமைபெறாத காரணத்தால் ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்ததைத் தொடர்ந்து படத்தை
சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள். 'யு' சான்றிதழ்
வழங்கியிருக்கிறது சென்சார் குழு.
அதனைத் தொடர்ந்து இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என்று தனது
ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார் தயாரிப்பாளர் குஷ்பு.
சென்னையில் 'ப்ரேமம்' படத்துக்கு வரவேற்பு: இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் நெகிழ்ச்சிப் பதிவு
http://tamil.thehindu.com/multimedia...m_2704571f.jpg
சென்னையில் 'ப்ரேமம்' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால்
மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி உள்ளிட்ட
பலர் நடிப்பில் வெளியான மலையாள படம் 'ப்ரேமம்'. ஓர் இளைஞனின் வாழ்வில் பல்வேறு
கட்டங்களில் வரும் காதல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.
இப்படம் மலையாளத் திரையுலகில் வசூல் சாதனையைப் படைத்தது. கடந்த மே
மாதம் வெளியான இந்தப் படம், இன்றும் சில அரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு
வருகிறது. சென்னையிலும் ப்ரேமம் பல்வேறு திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக
ஓடியது.
சென்னையில் எஸ்கேப் திரையரங்கில் இப்போதும் இரவு நேரக் காட்சியாக
திரையிடப்பட்டு வருகிறது. இப்படத்தின் 222 நாள் காட்சியில் நிவின் பாலி கலந்து
கொண்டு, ரசிகர்களோடு படத்தைக் கண்டு களித்தார்.
தான் உதவி இயக்குநராக வாய்ப்பு தேடிய சென்னையிலும் இப்படத்துக்கு
பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்
தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "சத்யம் சினிமாவில் 7 மாதம் 24 நாட்களாக ஓடிக்
கொண்டிருக்கிறது 'ப்ரேமம்'. ஜனவரி 22-ல் இருந்து மீண்டும் மாயாஜாலில் திரையாகிறது.
உங்கள் அன்புக்கு நன்றி சென்னைவாசிகளே." என்று நெகிழ்ச்சியுடன்
பகிர்ந்திருக்கிறார்.
ஆஸ்கார் விருது பெறும் கோவை தமிழர்! - VIKATAN
கோவை நகரத்தைச் சேர்ந்த பொறியியலாளர் கோட்டலாங்கோ லியோன். இவர் இந்த ஆண்டிற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு சாதனைக்கான ஆஸ்கார் விருதைப் பெறுகிறார்.
சினிமா துறையில் இந்த ஆண்டு பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கண்டறிந்து பெரும் பங்காற்றியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இசை, நடிப்பு ஆகியவற்றை கவுரவிக்க ஆஸ்கார் அவார்ட் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வரிசையில் சினிமா துறையில் அறிவியல் , பொறியியல் தொழில்நுட்பம் போன்ற துறையிலும் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதுகள் ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவை தனது தாயகமாகக் கொண்ட கோவைக்காரரான இவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாதனையை செய்ததற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னர்அறிவிக்கப்பட்ட போது இந்த தொழில்நுட்ப விருது, இந்தியாவை சேர்ந்த ராகுல் தாக்கர் என்பவருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அவருடன் சேர்த்து நம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தேர்வு பெற்றுள்ளார்.அவர்தான் கோட்டலாங்கோ லியோன் ஆவார்.வெளிநாடு வாழ் இந்தியரான இவர் அமெரக்காவின் கலிபோர்னியா நகரத்தில் மனைவி,குழந்தைகள் என தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் இதுபற்றி தனது முகநூல் பக்கத்தில் " நான் வழக்கம்போல் எனது வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.இத்தகவல் எனக்குக் கிடைத்ததும் அடைந்த மகிழ்ச்சியை என்னால் அடக்க முடியவில்லை.இதற்காக என் மேல் அக்கறை கொண்ட எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் வெளிச்சம் விரும்பவில்லை.இருப்பினும் எனது மகிழ்ச்சியை தெரிவிக்கவே இந்த பதிவு".
என தனது மகிழ்ச்சி மற்றும் நன்றியை பகிர்ந்து உள்ளார்.அடுத்த மாதம் 13 ஆம் தேதி இந்த தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்பட உள்ளன.மற்றும் பல முக்கிய விருதுகள் அடுத்த 28 ஆம் நாள் வழங்கப்படும் என செய்தி வெளியாகி உள்ளது.
@balaji, anegan poster had more twists than this
மாடர்ன் டே மணிரத்னம்...பிரபல இயக்குநருக்கு எஸ்.ஜே.சூர்யா புகழாரம்!
எஸ்.ஜே.சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறித்து கூறியுள்ளார். பீட்சா, ஜிகர்தண்டா படங்களையடுத்து கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இறைவி படத்தை இயக்கி வருகிறார்.
சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்தப் படம் குறித்து எஸ்.ஜே,.சூர்யா பேசுகையில், எனது கேரக்டர் குறித்தோ படத்தின் கதை குறித்தோ இப்போது பேசுவது சரியல்ல.
எனது கேரக்டர் குறித்து கார்த்திக் கூறுகையில், அந்தப் பாத்திரத்தை எழுதும் போதே என்னை மனதில் வைத்து தான் எழுதியதாகக் கூறினார், எனக்கு இதுதான் சந்தோஷம், ஒரு இயக்குநர் என்னை மனதில் வைத்து ஒரு கேரக்டரை உருவாக்கியது நடிகராக எனக்கு மகிழ்ச்சி.
கார்த்திக் சுப்புராஜ் என் வாழ்வில் புது நெருப்பை உருவாக்கிவிட்டார், அவரை நான் மாடர்ன் தின மணிரத்னம் என்றே சொல்வேன் என்று பெருமை பொங்கப் பேசுகிறார் எஸ்/ஜே.சூர்யா.