http://i59.tinypic.com/35bdqx1.jpg
Printable View
அன்பு கலைவேந்தன் அவர்களுக்கு,
எனது தாயாரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இன்னமும் எழுந்து நடக்க இயலாத சூழ்நிலையில் தான் இருக்கிறார். இருப்பினும் அறுவை சிகிச்சைக்குப் பின் கால் எலும்புகளின் நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இன்னும் ஓரிரு வாரங்களில் மெதுவாக எழுந்து நடக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். தங்களது அன்பிற்கு நன்றிகள் பல.
காஞ்சித் தலைவன் . நரசிம்ம பல்லவனை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் மக்கள் திலகம். மயங்காத மனம் யாவும் மயங்கும் மக்கள் திலகத்தின் எழிலை இப்படத்தில் காணும் போது. கம்பீரம் என்பதற்கு மறுபெயர் எம்.ஜி.ஆர் தான். ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமான நடிப்பைத் தந்திருப்பார் மக்கள் திலகம். மாறு வேடத்தில் சிற்பியாக தன்னந்தனியே சிலை வடிக்கும் காட்சியில் மிக நுட்பமான நடிப்பைத் தந்திருப்பார். அதிலும் தான் வடிவமைத்த சிற்பத்தின் வனப்பை வெவ்வேறு கோணங்களிலிருந்து சரிபார்க்கும் நுட்பம் முகபாவங்கள் அலாதியானது. அதனைத் தொடர்ந்து பானுமதியுடனான விவாதக் காட்சி அற்புதம். கலைஞரின் வசனங்களும் அந்தக் கட்டத்தில் பிரமாதமாக இருக்கும். உலகப் பேரழகன் தன்னை அவலட்சணம் என்று தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்வது வேடிக்கையாக இருக்கும். அரசவையில் அமர்ந்திருக்கும் கம்பீரம், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வழக்கை வித்தியாசமான அணுகுமுறையால் தீர்க்கும் காட்சி அமர்க்களம். விருந்துக்கு அழைத்து தற்பெருமை பேசி மக்கள் திலகத்தின் மான உணர்ச்சியைத் தூண்டும் கட்டத்தில் பானுமதி அமர்க்களப் படுத்தியிருப்பார் என்றாலும் அதைச் சகித்துக் கொள்ளும் மக்கள் திலகம் இறுதியில் பொங்கியெழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆமாம் ஆமாம் என்று ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் பேசி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு பின்னர் தன் தந்தையையும் பழித்துப் பேசும் போது பொங்கியெழுந்து இந்த வார்த்தைகளைப் பேசி இந்நாட்டிலிருந்து ஒருவர் தப்பித்து போவது என்பது இயலாது. விருந்தினர் என்பதால் பொறுத்தேன் எனக்கூறி விருட்டென வெளியேறும் அந்த ஒரு காட்சிக்கு ஆயிரம் பாரத் பட்டங்கள் கொடுக்கலாம். மல்லனைப் போரில் தோற்கடிக்கும் காட்சி அற்புதம். ஒரு கொடியில் இருமலர்கள் பாடல் காட்சி உருக்கம். நண்பன் மானவர்மன் மனைவியை சோதிக்கப் புகுந்து தன் பெயரில் களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் காட்சியிலும் அவர் நடிப்பு உணர்ச்சிகரமாக இருக்கும். எல்லாவிதத்திலும் இந்தப் படத்தில் மக்கள் திலகம் நரசிம்ம பல்லவனாகவே வாழ்ந்திருப்பார். ஆனால் கல்கி விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல (ஏற்கனவே நமது திரியில் அதனைப் பதிவிட்டிருக்கிறேன்.மக்கள் திலகம் இந்தப் படத்தில் மிக உருக்கமாக நடித்திருக்கிறார். ஆனால் ஏராளமான சரித்திர ஆதாரங்களுடன் கூடிய கதையாக இது இல்லை) கதை அம்சம் இன்னும் சற்று மெறுகேற்றியிருக்கலாம். பாடல்களில் உலகம் சுற்றுது எதனாலே , வெல்க நாடு வெல்க நாடு தவிர மற்றவை அனைத்தும் அருமை.