-
அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன ...// இது அந்த மலைப்பகுதி வாழ் மக்களுடன் இருக்கும் போது இந்தப் பாட்டு இருந்திருக்கும் என நினைக்கிறேன்..சரியா..
பாடினார் கவிஞர் பாடினார், தென்றல் வரும் சேதிவரும் பாட்டெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் தாங்க்ஸ் டு கார்த்திக் சார்..
-
ஹப்பாடி.. அஞ்சு பாட்டும் இப்போது தான் பார்த்து முடிச்சேன்..
கண்கள் இரண்டும் விடிவிளக்காக – நல்லபாட்டு அண்ட் டான்ஸ்..விஷீவலில் இளமை.
நீராழி மண்டபத்தில் கொஞ்சம் வானத்தில் பறந்தாலும் நன்றாக இருந்தது..
வைகைப் பாட்டு தான் கொஞ்சம் சோகமாக இருந்தது..இன்னொரு தடவை கேட்டுப் பார்க்க வேண்டும்..
சாமி சத்தியமாக அவளே என் காதலி விஷூவல் இப்படி இருக்குமென்று நினைக்கவில்லை.. இதைப் பற்றி எழுதியதாக வேறு வாசு சார் எழுதியிருந்தார்.. என்னை ப் பார்க்கவொண்ணாமல் தடுக்கவைத்தது எதுவாக இருக்கும்..
வானம் இங்கே மண்ணில் வந்தது..அதுவாசல் தேடி வாவா என்றது – கேட்ட பாடல் தான்.. விஷீவல் நன்றாக இருந்தது..
கண்கள் இரண்டும் விடிவிளக்காக கொடுத்த எஸ்.வி சார், நீராழி மண்டபத்திலும் வைகைப்பாட்டும். அவளே என் காதலியையும் கொடுத்த மதுண்ணா. வைகைப் பாட்டுப் பற்றி நன்றாக எழுதியிருந்த் கார்த்திக் சார் வானம் இங்கே மண்ணில் வந்தது பாடலை வழங்கிய வாசு சார் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி..
-
ஒரிஜினல் சிவரஞ்சனி மிகப்பிரமாதமான படம்
அதையும் அதன் இசையயும் எப்படி சொதப்ப வேண்டும் என்று ஸ்ரீபிரியாவிடமும் சங்கர் கணேஷிடமும் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
ரமேஷ் நாயுடு உருகி உருகி போட்ட மெட்டுக்கள் ஆஹா ஜோருமீதுன்னாவோ தும்மெதா, நவமி நாட்டி வெண்ணெல நீவு தசமி நாட்டி (ஆஹா இசையரசியும் பாலுவும் இசைத்த காதல் காவியப்பாடல்)
http://www.youtube.com/watch?v=0-IYBCkQG6o
http://www.youtube.com/watch?v=lxrBUz7uSw4
தெலுங்கு ஒரிஜினலில் உள்ள உணர்ச்சிகரமான கதையமைப்போ நடிப்போ இசையோ தமிழில் இல்லவே இல்லை .. அதனால் தான் படம் தொபுக்கடீர் என ஊத்திக்கொண்டது. ஸ்ரீபிரியா நடிப்பார் தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனாலும் தெலுங்கு மலை என்றால் தமிழ் சிவரஞ்சனி மடுவிற்கும் கீழே
-
Navami naati in Malayalam KJY With ISaiyarasi
navami_naalin.mp3
-
எம்.எஸ்.வியின் புத்தம் புது பழுசுகள்.
Rare &Unique ones .
https://www.youtube.com/watch?v=JVfuAws-lpY
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண் மீனால் பூவொன்று சீர்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம் தெய்வ வீணை நாதம்
கேட்கும்போது மெல்ல கிள்ள வேண்டும் கன்னம்
தேவமாதர் கூட்டம் காம தேவன் ஆடம்
ஆடும்போது நாமும் ஆடிப் பார்க்க வேண்டும்
ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை
குளிக்கும்போது நானும் ஒளிந்து பார்க்க வேண்டும்
-
-
I will write an exclusive article on M.S.V.
-
இன்றைய ஸ்பெஷல் (71)
படம்: எங்க வீட்டு பெண்
http://www.inbaminge.com/t/e/Enga%20...enn/folder.jpg
நடிகர்கள்: ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ராதா, நாகேஷ், தங்கவேலு, வசந்தா, 'ஞான ஒளி' நிர்மலா, மனோரமா, மாதவி
கதை: சக்ரபாணி
வசனம்: ச.அய்யாப் பிள்ளை
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்கள்: கண்ணதாசன், ஆலங்குடி சோமு
தயாரிப்பு: நாகிரெட்டி, சக்ரபாணி
இயக்கம்: சாணக்யா
பிரம்மாண்டமாக செலவு செய்து பல படங்களைத் தந்த ஏ.வி. எம்.நிறுவனம் செலவே செய்யாமல் 'சம்சாரம் அது மின்சாரம்' படம் எடுத்தது கல்லாவை நிரப்பியது போல அதிக பொருட்செலவில் பல படங்களை எடுத்த விஜயா வாகினி நிறுவனம் அப்போதைய துண்டு துக்கடா நடிகர்களை வைத்து 'எங்க வீட்டு பெண்' படத்தைத் தயாரித்து வெற்றி கண்டது.
1965 இல் தீபாவளித் திருநாளன்று வெளியான விஜயா கம்பைன்ஸ் தயாரித்த 'எங்க வீட்டு பெண்' திரைப்படத்திலிருந்து 'தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்' என்ற ஒரு அருமையான மென்மையான காதல் பாடல். தென்றல் உடலைத் தழுவும் சுகம் போல மனதுக்கு சுகம், இதம் தரும் பூ போன்ற பாடல் இது.
http://i.ytimg.com/vi/4Gz7wNu0dJo/hqdefault.jpg
ஏ.வி.எம்.ராஜனும், விஜயநிர்மலாவும் இணைந்து பாடும் மிக அருமையான காதல் பாடல். (மிக அபூர்வமான ஜோடி இது என்பதும் தனி சிறப்பு) இருவருமே மிக இளமையாக காட்சி தருகிறார்கள். முதல் சரணம் ராஜன் வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் சகிதம் புடவையுடன் மணப்பெண் போல விஜயநிர்மலாவுடன் வருவது 'பூவும் பொட்டும்' படத்தின் 'நாதஸ்வர ஓசையிலே' பாடலை நினைவு படுத்துகிறது. இரண்டாவது சரணத்தில் கோட் சூட் அணிந்த நடிப்புச் சுடரையும், நவநாகரீகமான சேலை உடுத்திய நிர்மலாவையும் காண கொள்ளை அழகு.
பாடகர் திலகமும், பாடகியர் திலகமும் படுபாந்தம். அதுவும் சுசீலா அம்மா
'தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மணம் திருமணம்'
என்று பாடுகையில் தெய்வாம்சம் அவர் குரலில் குடி கொண்டிருப்பதைக் காணலாம். கண்ணதாசனின் அழகழகான தமிழ் வரிகள். கேட்க, கேட்கஅவ்வளவு சுகம். 'திரை இசைத் திலகம்' மிக அமைதியாக, ஆழமாக டியூன் தந்து நம்மை மூக்கின் மேல் விரல் வைக்க வைக்கிறார்.
பாடல் சற்று பெரிய பாடல்தான். மாலையும், இரவும் சந்திக்கும் நேரத்தில் அமைதியான சிச்சுவேஷனில் இப்பாடலைக் கேளுங்கள். அப்படியே மேகங்களூடே சேர்ந்து நீங்களும் வானில் தவழ்வீர்கள். அமைதியாக நம் நெஞ்சை ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கும் பாடல்.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/kar.jpg
இது மட்டுமலாமல் மிக அற்புதமான பாடல்களை இந்த 'எங்க வீட்டுப் பெண்' நமக்குத் தந்து நம்மை மகழ்வு கொள்ளச் செய்கிறாள்.
1. டைட்டில் சாங்கான
'இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோருக்கு சொந்தமடா'
சீர்காழியின் சிருங்காரங்களில் ஒன்று.
2. பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும்
'சிரிப்பு பாதி... அழுகை பாதி... சேர்ந்ததல்லவோ மனித ஜாதி'
3. பாடகர் திலகம், இசையரசி பட்டை கிளப்பும்
'கால்களே நில்லுங்கள்... கண்களே சொல்லுங்கள்'
4. சுசீலா குழுவினருடன் இணைந்து பாடும் தீபத் திருவிழாப் மங்கலப் பாடல்
'கார்த்திகை விளக்கு திரு கார்த்திகை விளக்கு'
என்று என்றும் சூப்பர் ஹிட்டாய் நம் மனத்தைக் கொள்ளை கொண்ட பாடல்கள்.
இப்போது நம் பாடலுக்கு வந்து விடுவோம்.
http://static.gaana.com/images/album...x175_18255.jpg
இனி பாடலின் முழு வரிகள்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
வண்ண முன்னழகில் வந்த மணம் தேன்மணம்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும்
அந்த மனத்தினிலே குலமகளின் குணம் இருக்கும்
மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும்
அந்த மனத்தினிலே குலமகளின் குணம் இருக்கும்
குணமிருக்கும் இடத்தினிலே குலமிருக்கும்
அந்த குலத்தினிலே திருமகளின் துணை இருக்கும்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
பொட்டு மஞ்சள் முகத்தின் மீது பொட்டு வைத்து
அந்தக் கோலத்திலே என்னுயிரைத் தொட்டு வைத்து
பட்டு போன்ற கூந்தல் தன்னைக் கட்டி வைத்து
பட்டு போன்ற கூந்தல் தன்னைக் கட்டி வைத்து
அதில் பருவத்தையும் உருவத்தையும் சுற்றி வைத்து
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
நன்றி சொல்ல வேண்டும் அந்த இறைவனுக்கு
இந்த நான்கு கண்கள் சேர வைத்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டும் அந்த இறைவனுக்கு
இந்த நான்கு கண்கள் சேர வைத்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டும் இந்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டும் இந்த தலைவனுக்கு
என்னை நாயகியாய்க் கொள்ள வந்த இறைவனுக்கு
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
வண்ண முன்னழகில் வந்த மணம் தேன்மணம்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
http://www.youtube.com/watch?v=4Gz7w...yer_detailpage
-
சின்ன கண்ணன் போல மூணு பக்கம் முன்னிருப்பதை கூட பார்க்காமல்,காந்தியடிகள் செத்துட்டாராமே என்ற ரீதியில் வர முடியாததால் ,முந்தினதை படித்தேன்.
எல்லாமே வழக்கம் போல full form .வாசுதான் கொஞ்சம் பிஸி போல.
கார்த்திக்- உங்களுக்கு...
நான் 70 க்கு பிறகு நல்ல பாடல்களே வரவில்லை என்று சொன்னது போல ஏதோ சில பாடல்களை குறிப்பிட்டு ,பார்த்தியா...பார்த்தியா ரீதியில் சில வரிகள்.
தெளிவு படுத்தி விடுகிறேன்.M .S .V -T.K .R best composers in india ,all time best என்றெல்லாம் மற்ற திரியிலும் வாதாடும் என்னை எம்.எஸ்.வீ எதிரி போல சித்தரிக்க வேண்டாம். எம்.எஸ் .வீ யை தூக்கி பிடிக்க பலர். டி.கே .ஆர் என்ற மேதை, அவர் சாதனைகள் மறக்க,மறுக்க பட்டதால் ,அவருக்காக,ஆதாரங்களுடனே வாதாடினேன்.
சில மிகைகள் இருந்திருக்கலாம். ஒன்றதை ஓங்கி சொல்ல ,மற்றதை குறைக்கும் வழக்கமான பாணியே அன்றி, எம்.எஸ்.வீ க்கு நான் எதிர் கட்சியல்ல.
என் ஒரே கேள்வி.... ஆலயமாகும் மங்கை மனது, நல்ல பாடல்,நல்ல படமாக்கம்,புதுமையான காட்சியமைப்பு. ஆனால் சராசரி நல்ல பாடல்,1971 இல் வந்தது.
ஆனால் இதே ராகம் சார்ந்து 1965 இல் ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் என்ற படத்தில், இருவர் இணைப்பிசையில் வந்த காதல் நிலவே என்ற பாடல் ஒரு composition marvel .அதை ஒப்பிடும் போது ,ஆலயமாகும், ஒரு பலவீன நிழலே.
நான் சொல்ல வருவது புரிந்ததா?(உங்களுக்கு புரியாததா?அறிந்தது,அறியாதது,தெரிந்தது,தெரியாத து அனைத்தும் உணர்ந்தவராயிற்றே தாங்கள்?)
-
vasu, deivam malarodu, cute song. Thanks.