Senthilvel,
Thanks for all treasures.
Printable View
Senthilvel,
Thanks for all treasures.
எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !
–கவியரசு கண்ணதாசன்
நீயுமா .... யு டூ?! You Too....!!
(நடிகர்திலகத்தை திகைக்க வைத்த 'திகில்பாண்டி'கள்!! குறுந்தொடர்
Quote:
வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்ததே நமது எதிரி நம் கூடவே உண்டு உறைவது தெரியாமல் ஒரு இக்கட்டான சந்தர்ப்ப சூழலில்
உண்மை வெளிப்படும்போது நாம் அதிர்ச்சியில் உறைவது நடப்பதே !
இத்தகைய அதிர்வலைகளை முகபாவங்களிலும் உடல்மொழியிலும் வெளிப்படுத்துவதில் ...தலைவா.....உங்களுக்கு நிகரேது?!
நம்பர் 1 : சொர்க்கம் பாலாஜி!!
You Too Brutus புகழ் பெற்ற சொற்றொடர் ! நடிகர்திலகத்தின் உணர்வுபூர்வ வசன வெளிப்பாட்டில் இன்னும் புகழடைந்தது
https://www.youtube.com/watch?v=-zyxs-tVB_Q
நீயுமா .... யு டூ?! You Too....!!
(நடிகர்திலகத்தை திகைக்க வைத்த 'திகில்பாண்டி'கள்!!குறுந்தொடர் பகுதி 2
நம்பர் 2 புதிய பறவை சரோஜா தேவி!!
https://www.youtube.com/watch?v=6jgbr6cjALQQuote:
இந்தப் படத்தில் நடிகர்திலகத்தை சுற்றி இருக்கும் எல்லோருமே தில்லாலங்கடி திகில் பாண்டிகள் என்னும் உண்மை உறைக்கும்போது ...கண்கெட்ட பிறகுசூரிய நமஸ்காரமே !!
என்னைப் பிடிக்க காதல் என்ற அஸ்திரம்தானா கிடைத்தது என்று நடிகர்திலகம் புரூடஸ் கம்பெனி குத்து வாங்கும் பொழுது நமக்கே காதலில் நம்பிக்கை
காணாமல் போய் விடுகிறது !!
நீயுமா.......... யு டூ ?! You Too Brutus குறுந்தொடர் பகுதி 3
நம்பர் 3 : கௌரவம் கண்ணன் சிவாஜி !!
https://www.youtube.com/watch?v=iGyJaA7yEBAQuote:
பெற்றோரை இழந்து ஆதரவின்றி அடைக்கலமானவன் சொந்தப் பிள்ளையே என்று மார்பிலும் தோளிலும் பாராட்டி சீராட்டி பாலூட்டி பழம் கொடுத்துப் பார்த்த சொன்னதைச் சொல்லமட்டுமே தெரியும் என்று உத்தமபுத்திரனாக நம்பிய பச்சைக்கிளி......உத்தமவில்லனாக தனக்கே எதிராக கச்சேரி வரும்போது......நீயும் நானுமா கண்ணா!? ......
பெரியவரோடு சேர்ந்து நாமும் பதைக்கிறோம் !! அதுதான் சிவாஜி Vs சிவாஜி!!
https://www.youtube.com/watch?v=HEaY_qGscLo
நீயுமா.......... யு டூ ?! You Too Brutus குறுந்தொடர் பகுதி 4
நம்பர்(நம்ப வைத்துக் கதற விடுபவர்) 4/5 : பாசமலர் சாவித்திரி / பாசமுள் ஜெமினி!
https://www.youtube.com/watch?v=SfVcsfcCxOkQuote:
கண்ணுக்கு கண்ணாக ஒவ்வொரு நொடியும் வேறு சிந்தனை ஏதுமின்றி தங்கையே தனது உலகமாக கொண்டவர் ....பாசமலரின் முள் குத்தும்போது....?
பதிபக்தி கண்ணை மறைத்து அண்ணனையே நீ யார் என்று ஒரு தங்கை சாட்டையின்றி விளாசும்போது ..... பாசத்தில் வழுக்கி தொபுகடீரென்று கீழே விழும் அண்ணனின் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி .... கைதூக்கி விட்ட நண்பன் உடுக்கை இழந்தவன் கை போல இருக்க வேண்டியவனே தன்னை கைநீட்டி அடிக்கும் போது.....போதுமடா இந்தப் பாசாங்கு நிறைந்த மாயாலோக வாழ்க்கை என்று கதறத் தோன்றாமல் தவிக்கிறாரே நடிப்பின் இமயம் ....நமது நெஞ்சை ஈரமாக்கி!!
Quote:
NT always comes back to review this philosophy of life with his wife character in Thookku Thookki! Kolaiyum Seivalo Paththini?!
நீயுமா.......... யு டூ ?! You Too Brutus குறுந்தொடர் பகுதி 5 தூக்குத்தூக்கி
நம்பர் (நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்) 6 : லலிதா
https://www.youtube.com/watch?v=Oo-VJWKVR4cQuote:
யாரையும் எளிதில் நம்பிவிடக் கூடாது அப்படி நம்பி விட்டால் சந்தேகப் படக்கூடாது
கொலையும் செய்வாள் பத்தினி என்று துணிந்த காதல் மனைவியை சந்தேகப் படாது உயிர் கொடுக்கவும் தயாரான இளவரசர் உண்மையுணர்ந்த தருணம்....பெண்களை நம்பாதே கண்களே ...இப்படியாக ஞானம் பெற்று பாட்டாலடிக்கிறார்!!