http://oi68.tinypic.com/73i1qx.jpg
Printable View
26:04:2019 வெள்ளிக்கிழமை,
இன்று பனிரெண்டாம் நாளாக
http://oi67.tinypic.com/2psf3w5.jpg
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்தும் தொடர் அன்னதானத்தின், முப்பத்தோராம் வார நிகழ்ச்சிக்கான அழைப்பு...
#வாருங்கள்தோழர்களே!
http://oi67.tinypic.com/2zho93k.jpg
http://oi65.tinypic.com/2iuufki.jpg
தொல்காப்பியத்தில், "மெய்ப்பாட்டியல்" என்று பகுதி, நடிப்பு பற்றிய தகவல், இலக்கணமாக சொல்லப்பட்டிருக்கிறது....
அதில் வரும் ஒவ்வொரு முத்திரைகளுக்கும், அகராதியாக உணர்ச்சிப் பிழம்பாக உருவகப்படுத்திக் காட்டும்படி, இன்றுவரை நடிப்புப்பயிற்ச்சிக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது....
மேற்கோள்களிலும் நடிகர் திலகம் படங்கள் இணைக்கப்பட்டுளது....
நடிப்புக் கலைக்கு இலக்கண நூல்கள் யாராவது எழுதினால், அதில் சிவாஜியின் மெருகேறிய, உணர்ச்சிகளை மேற்கோள் காட்டி, அவரது படங்களை போட்டு அதன் கீழே... இந்த் முகபாவம் இந்த உணர்ச்சியை குறிக்கிறது என்று ஒரு குறிப்பு எழுதி வைத்தால், பயிற்சி மாணவர்களுக்கு ஏற்றதாக அமையும்....
பேராசிரியர் டாக்டர் மா.நன்னன்...
குமுதம் வார இதழ், 6.2.1987.
நன்றி Nirmai Thiyagarajan
நடிகர் திலகம்......
இந்தச் சொல்..., உலகெங்கும் பரவியிருக்கும், ரசிகக் கண்மணிகளின் குதூகலமான இந்த ஒற்றைச் சொல்., ஒவ்வொரு அடிதட்டு முதல் நடுத்தர, மேல் தட்டு ரசிகர் வரை பூஜித்து வரும் பக்திச்சொல்.., வேதச்சொல்....
இவர்களைப் பொறுத்தவரை,மனம் கவர்ந்து, மனம் நிறைந்து பாராட்டப்படும் ஒற்றைச் சொல் சிவாஜி கணேசன் எனும்மந்திரச் சொல்மட்டும்தான்....
வணங்குவதற்கும், வழிபடுவதற்கும் ஏற்ற கடவுளும் இவர் மட்டும் தான்....... ரசிகர்கள் திரும்பிய பக்கமெல்லாம், இந்த மாபெரும் கலைஞனை திருவுருவமாக..., இல...்லத்திலும், தனது இதயத்திலும் சிம்மாசனமிட்டு அழகு பார்க்கும், நிலை இன்று வரை தொடர்கிறது..,
பராசக்தி முதல் பூப்பறிக்க வருகிறோம் வரை கிவாஜி பற்றிய செய்திகள், படங்கள்,பத்திரிகைதுணுக்க்குகள்,விளம்பரங்கள்,ப ாடல் புத்தகங்கள், சுவரொட்டிகள், ஒளி-ஒலிப்பேழைகள், குறுந்தகடுகள் எனப் பல்வேறு தகவல் களஞ்சியங்களாக அவர்களிடம் காட்சியளிக்கும் அற்புதங்களைக் காணலாம்,அருங்காட்சியங்களாக......
நன்றி Nirmai Thiyagarajan
வானளாவிய தன் கலைத்திறனால், திரைத்துறையில் இமாலய சாதனை புரிந்த பிறவிக் கலைஞன்.....
சிம்மக்குரலும் , ராஜநடையும், பேசாமல் பேசி, ஆயிரம் கதைகள் கூறும்..., அந்த விழிகள் நடித்த சில நூறு படங்கள்....
அதன் வாயிலாக ஆயிரம் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தி, நடிப்புக்கு இதுதான் இலக்கணம் என உலகுக்கே ஒரு புதிய பரிமாணத்தை தோற்றுவித்து, இன்று வரை அதை மறக்க முடியாத படி, எங்களை புகழ் பாட வைத்த தவத்திலகமே... உம்மை போற்றியே காலங்களை கடத்தி வருகிறோம் உமது தொண்டர்கள்.....
நன்றி Nirmal Thiyagarajan
இன்று வரை, கலையுலகில் தமிழகத்தின்..., தமிழர்களின் பெருமைதனை உலகெங்கும் காத்து நிற்பவர் சிவாஜி ஒருவர் தான்.....
தமிழ்ச் சொற்களை அடிபிரளாமல், ஏற்ற இறக்கத்துடன் கம்பீர குரலில், உலகெங்கிலும் தன் நடிப்பாற்றலால் கொண்டு சேர்த்த கோமகனல்லவா சிவாஜி கணேசன்....
அந்த ஆண்டவன் தந்த சிவாஜி கணேசனை, குரல் வளத்தால் வெல்ல ஒருவரால் மட்டுமே முடியும்....
அவர்தான், ராஜாமணி ஈன்றெடுத்த தவப்புதல்வன் வி.சி.கணேசன்.....
பராசக்திக்கு பல பெருமைகள் இருந்தாலும், பாரினில் சிறந்த கலைஞன் ச...ிவாஜி கணேசன், பாரதத்தில் இருப்பதே தனிச் சிறப்பாகும்.....
உலகக் குரல் தினமான இன்று, உலக மக்களின் பார்வைக்கு, அர்பனிப்பதில் ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் பெருமை கொள்கிறான்......
குரல் வளத்தின் பெருமை காத்த, சிறந்த பொருத்தமான கம்பீரத் திலகத்தின் அர்பணிப்பு இது.....
நன்றி Nirmal Thiyagarajan
திரையில் கர்ஜனை புரியும் இந்தச் சிம்மக்குரல், இயல்பாக குழந்தை போல நண்பர்களிடம் பேசும் போது, குழலோசையாக மாறி விடும் அதிசயத்தை நேரில் நாம் காணலாம்.....
புகழின் சிகரத்தை சிவாஜி அடைந்த போதும், அவரிடம் காணப்பட்ட எளிமை,எந்த நேரத்திலும் அவர் கடைபிடித்த அடக்கம், எல்லோரிடத்திலும் அவர் காட்டிய அன்பு, பிரச்சினைகளை மனித நேயத்துடன் அணுகும் அந்த உயரிய பண்பாடு இவைகளே அவரின் பெருமையை தமிழகத்தோடு மட்டுமல்ல, அகில பாரதத்தோடுமட்டுமல்ல, உலக அளவில் உயர்ந்து நிற்கும் தகுதியை அவருக்கு வழங்கியது....
அது என்றும் நிலைத்து புகழ் பரப்பியவண்ணமே இருந்து வருகிறது....
நன்றி Nirmal Thiyagarajan
சிவாஜி அவர்கள், Directors Delight என்றால் அது மிகையன்று....
வயது, அனுபவம் இவற்றில் மிக இளையவரானாலும், அவர்கள் இயக்குனர் என்கின்ற அந்தஸ்தில் இருந்தால், அவர்களிடம் பொறுமையாக பணிவாக பணியாற்றுவது என்பது சிவாஜியின் சிறப்பு....
இயக்குனரின் எண்ணத்திலும் சிந்தனையிலும் உதிக்கின்ற அக்காட்சியை தத்ரூபமாக சாதூர்யமாக காமிரா முன்பு கொண்டு வந்து விடுவார் சிவாஜி.....
தன்னுடைய நடிப்பு மட்டுமே, பிரதானமாக பேசப்பட வேண்டும் என நினைக்காமல், டைரக்டரின் எதிர் பார்பிற்கேற்ப காட்சி திரையில் வெளிப்பட வே...ண்டும் என எண்ணுபவர்தான் நடிகர் திலகம்.....
He is not only Directors Delight... but also make-up Delight.....
ஒப்பனைக் கலைஞர்களுக்கு கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம், சிவாஜியின் அழகான முகம்.......
எந்த வேடத்திற்கும் ஏற்ப அமைந்தது, இறைவன் அவருக்கு அளித்த வரம்......\
நன்றி Nirmal Thiyagarajan