ஆரோடும் மண்ணில் ------
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் - ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும் - போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்
( ஆரோடும் மண்ணில் )
மண்ணிலே தங்கம் உண்டு , மணியும் உண்டு , வயிரம் உண்டு
கண்ணிலே காணச்செய்யும் கைகள் உண்டு , வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் கொண்டு பாசம் கொண்டு , பசுமை கொண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராடும் வலிமை உண்டு
சேராத செல்வம் இங்கு சேராதோ , தேனாறு நாடில் எங்கும் பாயாதோ
( ஆரோடும் மண்ணில் )
பச்சை வண்ண சேலை கட்டி , முத்தம் சிந்தும் நெல்லமா
பச்சை வண்ண சேலை கட்டி , முத்தம் சிந்தும் நெல்லமா
பருவம் கொண்ட பொன்னை போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா----
அண்ணன் தம்பி நால்வர் உண்டு என்னவேண்டும் கேளம்மா - அறுவடை காலம் உந்தன் திருமண நாளம்மா -
திருமண நாளம்மா -
போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்
( ஆரோடும் மண்ணில் )
கைகட்டி சேவை செய்து , கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு , பொய் சொல்லி பிச்சை கேட்டால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது , பேர் சொல்லும் புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது
போர் செய்யும் வீரன் ஏது ?
போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்
( ஆரோடும் மண்ணில் )