-
சக்திப்ரபா
வெகு நாட்களாயிற்று தங்கள் பதிவுகளைப் பார்த்து. இது கனவா நனவா என்கிற ஐயப்பாடே வந்து விட்டது போல மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் வரவு புத்துணர்வூட்டுகிறது. தங்களுக்கு மிக்க நன்றி.
தங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் மிருதங்க சக்கரவர்த்தி படத்தைப் பற்றிய அபிப்ராயம் ஒன்று விழுந்து விட்டது. இக்காட்சியமைப்பு, இது படமாக்கப் பட்ட விதம் போன்றவை நிச்சயம் இந்த ஐயத்தையும் தவறான அபிப்ராயத்தையும் போக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
இதே மிருதங்கத்தை இளைய வயதில், கே.ஆர்.விஜயாவின் பக்க வாத்தியமாக வாசிக்கும் பொழுது அவருடைய நடிப்பை கவனித்தீர்களானால் தங்களுக்கு அந்தப் பாத்திரத்தின் தன்மை விளங்கும். கவலை அறியாத வயது, வேகம் போன்றவை அப்பாத்திரத்தில் பிரதிபலிப்பதோடு அவருடைய வாசிப்பிலும் அது தெரியும். தாளங்களுக்கு கைகளின் வேகம் ஒரே அளவுதான் என்றாலும் அதை வாசிக்கும் போது உடல் நலம் முக்கிய பங்கு வகிக்கும். ஒரே வித்வான் இள வயதில் வாசிப்பதற்கும் வயோதிகத்தில் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் கொண்டோமானால் அப்போது அந்த வித்தியாசத்தை நன்கு உணரலாம். வயதாக ஆக அந்த வாத்தியம் அவர் சொல்வதைக் கேட்கும் ஜீவனாக மாறி விடுகிறது, ஒரு ஆளுமை வந்து விடுகிறது. அந்த ஆளுமையின் வேகத்திற்கும் வயோதிகத்தின் இயலாமைக்கும் இடையே அவருடைய சுயமரியாதையும் தன் பங்கிற்கு அந்த மனிதருக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சவாலில் ஜெயிக்க வேண்டும், அதுவும் மோதுவது தன் மகனே என்கிற போது தன்னை மறந்த ஒரு ஆளுகை அவருக்குள் ஏற்பட்டு அது அந்த வாசிப்பில் பிரதிபலிக்கிறது. இத்தனை உணர்வுகளைக் கொண்டு உத்வேகத்தை வரவழைத்துக் கொண்டு அவர் வாசிக்கும் போது தன்னையறியாமல் அவருடைய வாய் முணுமுணுத்துக் கொண்டே, அந்த தாளத்தோடு பயணிக்கிறது.
இதனைத் தான் இந்த படத்தில் நடிகர் திலகம் சாதித்துக் காட்டியிருக்கிறார். இந்தப் பாடலில் வெறும் மிருதங்கம் வாசிப்பதோடு நில்லாமல் அந்தப் பாத்திரத்தின் அத்தனை உள்ளுணர்வுகளையும் கொண்டு வரவேண்டும்.
இதையெல்லாம் படப்பிடிப்பு சமயத்தில் நேரிலேயே நாங்கள் கண்டு பிரமித்து நின்றது நிஜம். அதுவும் இந்த இறுதிக் கட்ட காட்சியின் படப்பிடிப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலையரங்கில் கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்களுக்கு ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நாங்களெல்லாம் அதிர்ஷ்டசாலிகளாக அந்தப் படப்பிடிப்பைப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றோம். கர்நாடக சங்கிதத்தில் மிருதங்கத்தில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் நடிகர் திலகத்தின் வாசிப்பினை ஒவ்வொரு நுணுக்கமும் தவற விடாமல் செய்ததைக் கண்டு வியந்து நின்றார்கள். அது மட்டுமின்றி ஒவ்வொரு டேக்கிற்கு முன்பும் அவர்களைக் கேட்டுக் கொண்டே தன் நடிப்பைத் தொடர்ந்தார் நடிகர் திலகம்.
ஏராளமான ரசிகர்கள் சாட்சியாக பாத்திரத்தின் தன்மைக்கு கடுகளவு ஊறு கூட நேர்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்துப் பார்த்து எடுக்கப் பட்ட காட்சி இது.
இளம் வயதில் சுகமான ராகங்களே பாடலுக்கு மிருதங்கம் வாசிக்கும் காட்சி
http://youtu.be/Y5xxzt_zxH0
க்ளைமேக்ஸ் சவால் காட்சி
http://youtu.be/FnvSiVhqrZs
-
Raja - always Vasool king
-
Quote:
(நமக்கு 'ஐயோ பாவம குழந்தை' என்ற பரிதாபம் ஏற்படும்)
கார்த்திக் சார்,
ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
-
சக்தி,
நீண்ட நாள் கழித்து வருகை தருவதற்கு நன்றி.
இப்போது துண்டு துண்டாக டீவீயில் காட்சிகள் ,பாடல்கள் வருவதால் நடிகர்திலகத்தை பற்றி நாம் நிறைய பேசுவதும் அவசியமாகிறது. மற்ற நடிகர்கள் எந்த பாத்திரம் எந்த சூழ்நிலையானாலும் கவலை படாமல் ஒரே மாதிரி நடித்து கொண்டிருந்ததால், அவர்கள் சம்பந்த பட்ட பாடல்களை ,காட்சிகளை சுலபமாக பார்வையாளர்கள் கடந்து செல்ல முடியும்.
ஆனால் நடிகர்திலகத்தின் காட்சிகளையோ,பாடல்களையோ பார்பவர்களுக்கு படத்தின் கதை,சூழ்நிலை ,பாத்திர படைப்பு இவைகள் தெரிந்திருந்தால்தான் முழுமையாக ரசிக்க முடியும். அவர் காதல் காட்சிகளோ, நடன காட்சிகளோ,சண்டை காட்சிகளோ,உணர்ச்சி மிகு காட்சிகளோ,ஒரே மாதிரி அமைப்புக்குள் வராமல் , அந்தந்த பாத்திரத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும்.அவர் அளவு சோதனை முயற்சிகள் செய்தவர் உலக அளவில் விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தனை சோதனை முயற்சிகளிலும் நூறு சதவிகித வெற்றி பெற்றவர் அவர் ஒருவரே.
நடிப்பின் மிக நுண்ணிய நுணுக்கங்கள் புரிந்து தன் அபார திறமையினால் அதனை செய்தும் காட்டிய ஒப்பிலா மேதை.
எல்லாம் புரிந்த தெரிந்த எனக்கும் ,இன்னும் புரிந்து கொள்ள நிறைய உள்ளது என்று நாள் தோறும் உணர்த்தும் மேதை நடிகர்திலகம்.
தொடர்ந்து பங்களியுங்கள்.எங்களுக்கும் உற்சாகம் மிகும்.
-
கார்த்திக் சார்,
உங்கள் சொந்த பதிவு ,சோக பதிவாக மலர்ந்து விட்டது. இப்போது சொன்னால் நம்புவீர்களோ ,மாட்டீர்களோ பாலாஜி பட வில்லி மற்றும் item girls அல்லது துணை கதாநாயகிகள் பற்றி எழுதுவதாக இருந்தேன். காஞ்சனா முதல் சினேகலதா வரை . நீங்கள் பத்மகன்னா பற்றி அற்புதமாக வரைந்து ,சுமையை குறைத்து விட்டீர்கள். தொடர்ந்து நீங்களே எழுதுங்கள். தங்கை-காஞ்சனா, திருடன்-விஜயலலிதா, எங்கிருந்தோ வந்தால்-ஜெயகுமாரி, ராஜா-பத்மா கன்னா,நீதி-சகுந்தலா, என் மகன்-சினேகலதா (இவரை பற்றி நிறைய எழுதலாம்),தீபம்-சத்யப்ரியா,தியாகம்-படாபட்.
தொடருங்கள்.
-
சிவன் சார்,
தொடர்ந்து பங்களியுங்கள். எங்களுக்கு இதனால் glucose குடித்த விளையாட்டு வீரன் போல சக்தி.
ராகுல்- தூக்கு தூக்கி யை ஒரு தூக்கு தூக்கேன் பார்க்கலாம்.
ராகவேந்தர் சார்,
தங்கள் illustration உடன் கூடிய explanation பிரமாதம்.ஒன்றை மறந்து விட்டீர்கள்.வயதானவருக்கு டச் விட்டு போச்சு.
அதுதான் மெயின் பாயிண்ட். சங்கீத காரர்களுக்கு தொடர்ந்த பயிற்சி அவசியம்.
-
Welcome Kalnayak Sir. only person missing is Adiram. He is the one who instigated me to write about Raja.
பாகம்- 10 இல் ஆதிராம் அவர்களின் பதிவு.
Quote
Gopal sir,
Ok, 'Raja' padaththukku Index (poruladakkam) pottutteenga.
Next ovvoru pointtaaga eduththu deeppaaga analayse pannuveengannu edhirpaarkkirom. Because Index itself very cute and neat. We already enjoyed your deep analysis for serious movies. But now want to enjoy your smart analyse for a commercial entertainment Raja.
adhuvaraikkum naanum Vasudevan sirum Vaira Nenjaththai asai pottukkondu irukkirom.
Unquote
-
1972ல் ராஜா .... கிட்டத்தட்ட அனைத்து ஹப்பர்களையும் -வரவழைத்து விட்டது. அது தான் ராஜாவின் பவர். இருந்தாலும் பம்மலார், முரளி சார், சாரதா போன்ற ஸ்டால்வர்ட்ஸ் மிஸ்ஸிங்... அது நிறையவே தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து நீதி... இத்துடன் 1972 நிறைவடையும். வசந்த மாளிகை .. இன்னும் நிறைய அலச வேண்டும் என்றாலும் அதற்கென உள்ள திரியில் பார்த்துக் கொள்ளலாம்.
இன்னும் ராகுல் ராமின் தூக்குத் தூக்கி, கோல்ட் ஸ்டாரின் ரிஷிமூலம் அணிவகுப்பில் காத்திருக்கின்றன.
திரியின் பங்களிப்புத் திலகம் வாசு சாரின் ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடர், நாயகியர் தொடர் என அவை இடம் பெற வேண்டும்.
கோபால் சாரின் ஐட்டம் பெண்கள் தொடர்...
இவையன்றி அவ்வப்போது தகவல் பரிமாற்றங்களும் இடம் பெற வேண்டும்.
இவற்றை முறைப் படுத்தும் வகையில் ஆலோசனை கேட்டிருந்தேன்.
ஜோ சார் கருத்துச் சொன்னது போல் மற்றவர்களிடமிருந்து வரவில்லை என்றாலும் தற்காலிகமாக ஒரு ஏற்பாடாக எண்ணம் தோன்றுகிறது.
Turn முறையில் ஒருவர் ஒரு விவாதம் அல்லது கருத்துப் பரிமாற்றத்தைத் தொடங்கி வைத்து அதற்கு மூன்று நாட்கள் என வைத்துக் கொண்டு நான்காவது நாள் மற்றொருவர் இன்னொரு விவாதம் அல்லது கருத்துப் பரிமாற்றத்தைத் தொடங்கி வைக்கும் வகையில் அமைத்துக் கொண்டால் என்ன எனத் தோன்றுகிறது.
யார் யார் என்ற வரிசைக் கிரமத்தை திரியிலேயே இளையவர் பிரஸ்தாபிக்கட்டும். அவரை விட அடுத்த மூத்தவர் அதனை வழிமொழியட்டும். அதனை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளலாம். அந்தந்த வரிசைப் படி விவாதங்கள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
இது நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் எனத் தெரியவில்லை. மற்றவர்களும் இதில் உள்ள சாதக பாதகங்களைக் கூறலாமே. எல்லோரும் கூடி ஒரு முடிவுக்கு வந்து விட்டால் அதனை நடைமுறைப் படுத்தி விடலாம்.
ஒவ்வொரு விவாதத்திலும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லை யென்றால் அவருடைய விவாதம் அவருடைய வரிசையில் இடம் பெறாமல் கடைசியில் தள்ளப் படும் என வைத்துக் கொள்வோம். அப்போது அனைவரும் பங்களிப்பார். தவிர்க்க முடியாத காரணமிருந்தால் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் விட்டு விடலாம்.
இது வெறும் யோசனை மட்டுமே.
-
கோபால் சார்
Item girl - நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்த வரையில் இது மிகவும் முக்கியம் வாய்ந்த சப்ஜெக்ட். பல படங்களில் இது கதையின் போக்கையே நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை மிகவும் விரிவாக நீங்கள் எழுத வேண்டும்.
முக்கியமாக விஜயலலிதா ... முதல் இடத்தில் என் அனுமானத்தில் இருப்பவர். எதிரொலி, திருடன் போன்ற படங்கள் இவரைச் சுற்றித் தான் நகருகின்றன.
இப்போதே தயார் செய்யுங்கள்.
-
ராகவேந்தர் சார்,
1972 -வசந்த மாளிகையில் துவங்கியதை நீதி,பட்டிக்காடா பட்டணமா படங்களோடு நிறைவு பெறும். பிறகு Item Girls ஆரம்பிக்கலாம். இது நானும் கார்த்திக் சாரும் இணைந்து தொகுத்து, நீங்கள் படங்கள் வழங்கினால் அமர்க்களமாய் நகரும். (வாசு சார் நாயகியர்,சண்டை,உடை என்று நிறைய வைத்திருப்பதால் அவரை இழுக்க தயக்கம்)
என்ன சொல்கிறீர்கள்?