http://i1.ytimg.com/i/I-59-Ya8rnRNVcrw6hl8vA/mq1.jpg
http://i1.ytimg.com/vi/UxfLXO1CwKg/0.jpghttp://i1.ytimg.com/vi/6YWrochoxUA/0.jpg
http://i.ytimg.com/vi/EgKRiUkEE-4/0.jpghttp://i1.ytimg.com/vi/U35FjUKwzXE/hqdefault.jpg
Printable View
வாசு,
நாம் ஏற்கெனவே ரவி திரியில் பிய்த்து மேய்ந்த அன்று கண்ட முகத்தை மதுர கானங்களில் போட்டு அழகு படுத்தியதற்கு நன்றி.
இதயம் பொல்லாதது எனக்கு பிடித்த மாமா பாடல்.
சின்னகண்ணனார் மீள் வருகைக்கு நன்றி.தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்.
எஸ்வி-1971 ஆம் வருட பாடல்களில் எனக்கு பிடித்ததில் ஒன்று கண்ணன் எந்தன் காதலன்.நன்றி.
கார்த்திக் சாரின் உற்சாக ஊக்குவிப்பு நமக்கு உத்வேகம் உத்வேகம் .
my all time favourite song of ssr lyric by kannadasan
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்!
வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்!
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!
கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா!
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே !
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே !
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா !
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா !
விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை !
கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம் !
தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம் !
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே !
ஒரு நாள் பார்க்கவில்லை எவ்வளவு பதிவுகள் . அருமை
நவக்கிரகம் எனக்கு பிடித்த படம். கொஞம் பாலச்சந்தர் எதிர் நீச்சல் பாமா விஜயம் போல திரைக்கதை எழுதியிருந்தால் இன்னும் அருமையாக வந்திருக்க வேண்டிய படம் இருந்தாலும் பரவாயில்லை
ஸ்ரீகாந்த் நாகேஷிடம் ... அவ்ளோ பெரிய வேட்டியில் ஓரத்துல கோடு போட்ட மாதிரி ஜரிகை
நாகேஷ் .. ஓரத்துல இருந்தாதான் அது வேஷ்டி இல்லெனா புடவை ....
தூய உள்ளம் திரையில் ஒலித்த அழகான பாடல்(வெலுகு நீடலு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் வடிவம்)
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
டி.எம்.எஸ் மற்றும் இசையரசியின் குரலில்
திரையில் நாகேஸ்வரராவ் மற்றும் கிரிஜா
https://www.youtube.com/watch?v=usgUR94gVko
தெலுங்கு வடிவம்.
https://www.youtube.com/watch?v=iSH7PjF53m4
நடிப்பின் நாயகனுக்கு 13-வது நினைவுநாள்
http://maronites.files.wordpress.com...e-animated.gif
http://i812.photobucket.com/albums/z...psf612d3ba.jpg
இறைவா! இறைவா! இறைவா!
கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்.
எங்கள் தங்க ராஜா அவன்
என்றும் மணக்கும் ரோஜா
கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்.
எங்கள் தங்க ராஜா அவன்
என்றும் மணக்கும் ரோஜா
கடவுளை அடைந்தது ஒரு விளக்கு
எங்கள் கண்களில் எரிந்த மணிவிளக்கு
கடவுளை அடைந்தது ஒரு விளக்கு
எங்கள் கண்களில் எரிந்த மணிவிளக்கு
தன்னலம் கருதா தனி விளக்கு
நெஞ்சில் தாய்மை நிறைந்த அருள் விளக்கு
இறைவா! இறைவா! இறைவா!
கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்.
எங்கள் தங்க ராஜா அவன்
என்றும் மணக்கும் ரோஜா
ஜாதி சமயங்கள் ஒன்றென்பான்
ஒரு சகோதரர்கள் நாமென்பான்
ஆதி புத்தனின் வழி நின்றான்
அவன் ஆத்ம சாந்தி அடைந்து விட்டான்
நல்லவர்க்கெல்லாம் பகைவர் உண்டு
இங்கு நன்றியில்லாதவர் சிலருண்டு (சிலர் இல்லை பலர்)
கல்லினும் கொடிய மனம் உண்டு
இதில் கருணைக்கு எங்கே இடமுண்டு
கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்.
எங்கள் தங்க ராஜா அவன்
என்றும் மணக்கும் ரோஜா