ஆமாம் ராஜேஷ்ஜி. ஹேப்பி. உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
'பொண்ண பார்த்து மயிலக் காளை மயங்குதிப்போது'
பார்த்தீர்களா?
Printable View
VASU SIR
http://i60.tinypic.com/14meu7a.jpg
அப்படி போட்டு தாக்குங்கள் எஸ்வி சார்.
'திருமலை தென்குமரி' படத்தில் ஏ.பி.நாகராஜன் அவர்களுடன் குமாரி பத்மினி, சி.ஐ.டி.சகுந்தலா, ரமாபிரபா, உஷா, எனக்கு மிக மிக பிடித்த சைலஸ்ரீ இருக்கும் படம் தூள் வினோத் சார்.
வாருங்கள் வாசுதேவரே ... காலை வணக்கம்
உங்கள் வீட்டு யசோதா அம்மையார் நலம் தானே :)
அனைவருக்கும் வணக்கம்.
சி.க. நீங்கள் சர்க்கஸ் சம்பந்தமான பாடல்களுக்கு எழுதிய வரிகள் புயலை கிளப்பின என்று சொன்னால், நடிகர்திலகத்தின் கோபங்களைப்பற்றிய பதிவு 'அவலாஞ்சி'-யை கிளப்பிவிட்டன. (அடுத்த பதிவிற்கு சுனாமி புக்காகியுள்ளது) நீங்கள் சொன்னதால், வாசு இங்கே எடுத்துக் கொடுக்க கோபால் நடிகர்திலகம் திரி வரை எடுத்துச் சென்றுள்ளார்.
என் பங்காக இதோ அந்த அகநானூற்றுப்பாடல் (குறிஞ்சித்திணை):
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே."
தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உன்னும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா?
In our(!) own language:
O! honey bee with beautiful wings, you live drinking nectar from selected flowers,
tell me without bias
look at my friend who resembles a peacock in beauty
have you seen any flower that smells better than her hair?
அப்புறம் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். சிலர் இன்னும் விடாமல் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். நான் இங்கிருப்பதை அவர்களிடம் சொல்லிவிடாதீர்கள்!!!