தாராளமாக...யார் எப்போது வேண்டுமானாலும் தொடங்குங்கள். எழுதுங்கள். என்னைப் பொறுத்த வரையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ஒரு விவாதம் முடிந்த பிறகு மற்றொன்று என்ற நடைமுறை இருந்தால் குழப்பம் இல்லாமலும் ஒன்றுக்கொன்று இடையில் திசை மாறாமலும் இருக்க வசதியாக இருக்கும் அவ்வளவே. கால வரையறை கூட வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக நீண்ட நாட்களுக்கு இழுக்காமல் இருப்பதற்காக ஒரு ஏற்பாடு இருந்தால் நல்லதாக இருக்கும் என்பது தான். So that every body will take interest in posting. அதுவும் ஒவ்வொருவரும் தவறாமல் ஒரு கருப்பொருளில் விவாதத்தைத் தொடங்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
அது சரி, இதுவே ஒரு விவாதப் பொருளாகி விடப் போகிறது. இதனை சட்டென்று முடிக்க வேண்டும்...