-
டி.கே.ராமமூர்த்தி விஸ்வரூப தரிசனம் தந்த பாடல்கள் ஜல் ஜல் (நினைவு படுத்திய வில்லனுக்கு நன்றி), அழகு ஒரு ராகம்,உள்ளத்தில் நல்ல உள்ளம்,பல்லவன் பல்லவி ஆகியவை அலாதி. டி.கே.ராமமூர்த்தி அவர்களின் வண்டி பாடல்கள் தேர்ச்சியானவை.ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி ,மற்றும் சாட்டை கையில் கொண்டு .(நண்பர்கள் சிலர் இணைவு இசையை ஞாபக படுத்தினால் இவை நான் விச்சு ,ராமு ஆகியோரிடம் அந்தரங்கமாக பழகி பெற்ற செய்தி)
ஜல் ஜல் பாட்டில் முத்திரை வரிகள்- முதல் முதல் திருடும் காரணத்தால் முழுசாய் திருட மறந்து விட்டேன்.
எனக்கு பிடிக்காத கிழட்டு மிமிக்ரி பாடகியின் உருப்படியான பாடல்களில் ஒன்று ஜல் ஜல்.
-
Nandri ''kumaran '' gopal
courtesy- net
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. முக்கிய காரணம் பாடலின் வரிகளில் சில. அடுத்தது எம்ஜிஆரின் துடிப்பான அனைவரையும் கவரும் உற்சாகமூட்டும் நடிப்பு. திரைப்படத்தில் அடிமைகளின் தலைவனாக வரும் எம்ஜிஆர் அனைவருக்கும் விடுதலையில் நம்பிக்கை ஊட்டும் வகையில் பாடுவதாக வரும் வரிகள் கொடிய அடக்கு ஒடுக்குமுறைகளுக்குள் வாழும் மக்களுக்கு எப்பொழுதும் நம்பிக்கையினையும், ஆறுதலையும் தருவன. 'விண்ணில் எவ்வளவு ஆனந்தமாக, சுதந்திரமாகப் பறவை பறக்கிறது. அதனைப் போல் சுதந்திரமாகச் சிறகடித்துப் பறக்குமொரு வாழ்க்கை வேண்டும். கடலின் நீரலைகள்தாம் எவ்வளவு சந்தோசமாக, எந்தவித அச்சமுமற்று ஆடி, ஓடி வருகின்றன. இந்த அலைகளைப் போல் அடிமைத்தளைகளுக்குள் வாழும் நாமும் ஆனந்தமாக ஆடும் வாழ்க்கை வேண்டும்' என்று தன்னை நம்பியிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையினையும், அடைய வேண்டிய விடுதலை என்னும் இலட்சியத்தையும் எடுத்துரைக்கின்றான் தலைவன். இந்த வானில், இந்த மண்ணில் நாம் பாடுவதும் உரிமைக்கீதமாகவே இருக்கட்டுமென்கின்றான். தலைவனது நம்பிக்கையூட்டும் கூற்றினால் நம்பிக்கைகொண்ட ஏனைய அடிமைகளும் அவனுடன் சேர்ந்து விடுதலைக் கனவுடன் ஆடிப்பாடுகின்றார்கள்.
தலைவன் தொடர்கின்றான். இங்கு வீசும் காற்று நம்மை அடிமை என்று ஒதுக்குவதில்லை. கடல் நீரும் அடிமையென்று எம்மைச் சுடுவதில்லை. நாம் அடிமைகள் என்று காலம் நம்மை விட்டு விலகி நடப்பதில்லை. காதல், பாசம், தாய்மை போன்ற பந்தபாசங்களும் நம்மை மறப்பதில்லை. எம்மை அவை சுதந்திரம் மிக்க மனிதர்களாகவே நடாத்துக்கின்றன. தாயில்லாமல் யாரும் பிறப்பதில்லை. சொல், மொழியில்லாமல் யாரும் பேசுவதில்லை. பசியில்லாமல் யாரும் வாழுவதில்லை. அதுபோல் விடுதலைக்காகப் போராடும் மக்கள் வேறு வேறு பாதைகளில் செல்வதில்லை. இவ்விதமாகத் தொடர்ந்தும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் தலைவன் அடிமைச் சூழலில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் அச்சமின்றி ஆடிப்பாடிட, சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு விடுதலை வேண்டும். வானம் ஒன்று. இந்த மண்ணும் ஒன்று. அதுபோல் விடுதலைக்காக நாம் பாடும் கீதமும் ஒன்றாகவேயிருக்கட்டும். அது விடுதலைக்கான உரிமைக் கீதமாகவேயிருக்கட்டும் என்று தொடர்ந்தும் நம்பிக்கையூட்டிப் பாடுகின்றான். தலைவனின் நம்பிக்கையும், உற்சாகமும், ஆட்டமும் அவனைச் சுற்றியிருந்த அனைவரையும் பற்றிக்கொள்கிறது. எல்லோரும் அவனுடன் சேர்ந்து விடுதலைக்கனவுடன், நம்பிக்கையுடன், தம் மண்ணில் வாழும் மக்களின் அடிமை வாழ்வை உடைத்தெறிவதற்காக 'அதோ அந்தப் பறவை போல் வாழ வேண்டும்' என்று உரிமைக் கீதம் இசைக்க ஆரம்பிக்கின்றார்கள்.
எம்ஜிஆரின் உற்சாகமும், மகிழ்ச்சியும் ததும்பும் நடிப்பும் அவரது ஆடை அலங்காரங்களும். இந்தப் பாடலில் எனக்குப் பிடித்த ஏனைய விடயங்கள். சிறுவயதில் நெஞ்சில் வாழ்வின் சுமைகளற்று உல்லாசமாகத் திரிவோம். அந்தச் சமயங்களில் உள்ளங்களின் ஆழங்களில் பதிந்துவிடும் எவையும் பின்னர் அழிவதில்லை. அழியாத கோலங்களாக மானுட வாழ்வுடன் நிலைத்து நின்றுவிடுகின்றன. அவ்விதம் அழியாத கோலங்களாக பதிந்துவிட்ட தருணங்களிலொன்றுதான் இந்தப் பாடலும், திரைப்படமும். எத்தனைதரம் கேட்டாலும் சலிக்காத, மனதுக்கு இன்பமூட்டும் பாடல்களிலொன்று கவிஞர் கண்ணதாசனின் 'அதோ அந்தப் பறவை போல் வாழ வேண்டும்.' 'சிட்டுக்குருவியைப் போல் சிறகடிக்க ஆசைப்பட்டான் மகாகவி பாரதி. கவிஞர் கண்ணதாசனோ 'அடிமைத்தளையறுத்து, அச்சமற்ற ஆடிப்பாடி அதோ அந்தப் பறவைபோல் வாழ வேண்டுமென்று' விடுதலை நாடி உரிமைக்கீதமிசைக்கின்றார். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எமதுள்ளமும் விண்ணில் பறக்கும் சுதந்திரப்புள்ளாகச் சிறகடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.
-
அன்புள்ள வாசுதேவன் சார்
பழைய திரைப்பட பாடல்கள் தொடர்பான தகவல்களை
அளிக்கவிருக்கும் தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
அன்பு கோபு
-
டியர் கார்த்திக் சார்
ஸ்ரீனிவாசன் (MB ) அவர்கள் (வானொலி அண்ணா) மிக சிறந்த இசை அமைப்பாளர்
அவருடைய இசையில் வெளிவந்த எல்லா பாடல்களுமே மிக இனிமை
மதன மாளிகை என்று ஒரு திரைப்படம் நினைவிற்கு வருகிறது
சிவகுமார் அல்கா நம்ம ஸ்ரீகாந்த் சுருளி நடித்து 1976
NVR pictures கே.விஜயன் direction
1. பாலாவின் தேன் குரலில் "ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்றது அதன் சிந்தனை எல்லாம் தாய் அவள் அன்பு தேனில் குளிக்கிறது "
அன்னை என்பது மானுடம் அல்ல
அத்துடன் உலகத்தில் தெய்வகம்
அன்றவள் சொன்னது தாலாட்டு அல்ல
ஆன்ம பாடிய சங்கீதம்
வேதம் என்பது வேறு எதும் அல்ல
தாய் அவள் கூறிய உபதேசம்
விண்ணில் இருபது சொர்கமும் அல்ல
அதுதான் அன்னையின் மலர் பாதம்
சிவகுமார் பாடி கொண்டே வருவர்
ல ல லா ஹம்மிங் beautiful
-
அன்புள்ள இராகவேந்திரா சார்,
தமிழ்த்திரையுலக ஆரம்ப கால பாடலாசிரியர்கள்
தொடர்பான தங்களது தொடரினை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்
அன்பு கோபு
-
dear எஸ்வி சார்
ஜல் ஜல் சலங்கை ஒலி மற்றும் அந்தோ அந்த பறவை இரண்டுமே
மிக சிறந்த பாடல்
இங்கு கருத்துகள் பரிமாறும் நாம் அனைவருமே மிக சிறந்த இசை பிரியர்கள் அதில் சந்தேகமே இல்லை
-
மதன மாளிகையில் ஜேசுதாஸ் மற்றும் கண்ணிய பாடகி சுசீலாவின்
"ஏரீயிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது" ஜேசுதாஸ்
"மாலையிலே வரும் மன்னவனுக்கே மன்மத ஆராதனை " சுசீலா
கிட்டத்தட்ட "என் உயிர் தோழி கேளடி சேதி இதுதானோ உங்கள் மன்னவன் நீதி" போல் இருக்கும்
-
மேலும் மதன மாளிகையில் உஷா உதுப் பாடல் ஒன்று
"மல்லிகைபூ
அங்கொரு மங்கோ tree on தி banks of தி காவிரி "
-
நன்றி எஸ்.வீ சார். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். வேறொரு திரியில் பதிவிட வேண்டியவைகளை இங்கு வைக்க வேண்டாம். இது பாடல்கள் பற்றிய திரி. நீங்களோ உள்நோக்கம் வைத்தே செயல் படுபவர். தயவு செய்து இந்த திரியின் போக்கை மாற்றாதீர்கள். வாசு தேவன் போன்றவர்களும் இதில் உடன் படுவார்கள் என்றே எண்ணுகிறேன்.(Pl.register your thoughts about music if you have anything to say. Net search can be done by us as we all have better internet connection and expensive Lap tops)
-
அடங்க மாட்டேங்கது
மேலும் இன்னொரு பாடல் from மதன மளிகை
சுசீலாவின் போதை குரலில் excellant ஹம்மிங் ஆரம்பத்தில்
"ஆசையோ சுவையானது அதில் ஆடையோ சுமையானது
போதையோ சுகமானது அதில் பூஉடல் தடுமாறுது "
கண்ணதாசன் வரிகள் என்று நினைக்கின்றேன்