-
இப்பாடல் காட்சி ஒரு திரைப்படப் பாடல் என்ப்தைத் தாண்டி அந்நாளைய நினைவுகளை மீட்டும் ஒரு ஆவணமாகவும் திகழ்கிறது.
ஷண்முகப்ரியா திரைப்படத்தில் ஜெய விஜயா இசையமைப்பில் பாடகர் திலகம் டி.எம்.எஸ். பாடிய பாடல், இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே..
இப்பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள வாத்தியக்கலைஞர்களில் மெல்லிசை மன்னரின் இசைக்குழுவில் வாசித்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக புல்லாங்குழல் கலைஞர் நஞ்சுண்டையா அவர்களை மிகவும் அருகாமையில் திரையில் காணலாம்.
http://www.youtube.com/watch?v=xtNeZW9LFYg
இதனுடைய ஆவணத்தன்மை காரணமாகவே இங்கு இப்பாடல் காட்சி பதியப்படுகிறது.
இது போல் வாத்தியக் கலைஞர்கள், அல்லது அந்நாளைய தமிழக ஊர்கள், கோயில்கள், இவை போன்றவை இடம் பெற்ற காட்சிகளும் பகிர்ந்து கொள்ளலாம். மற்றபடி பாடலின் இனிமை, இசை போன்ற அம்சங்களை அலச இருக்கவே இருக்கிறது மனதை மயக்கும் மதுர கானம் தலைப்பு.
-
பொங்கும் பூம்புனல்
http://www.tamilstar.com/profile/upl...105Sridhar.jpg
தமிழ்த்திரையுலகின் முதல் டிரெண்ட் செட்டர். நான்கு சுவர்களைத் தாண்டியும் சினிமாவை கொண்டு செல்லலாம் என்பதற்கு அஸ்திவாரம் போட்டவர். நான்கு சுவர்களுக்குள்ளும் சினிமாவை சொல்லலாம் என்பதற்கும் அவர் தான் அஸ்திவாரம் போட்டார். புதிய முகங்கள், புதிய கோணங்கள், புதிய இசை, புதிய உத்தி முறைகள் என அவருடைய அனைத்து முயற்சிகளுமே அது வரை இருந்த நடைமுறைகளை மாற்றியவை. வெறும் நான்கு சுவர்களுக்குள் நெஞ்சில் ஓர் ஆலயம், நாடு தாண்டி சிவந்த மண் என இரு துருவங்களையும் இணைத்த புதுமை இயக்குநர்..
அவருக்கு இந்த உலகமே ஒரு கவிதை... அதை கதையில் கண்டார்...ஒளிப்பதிவில் கண்டார்... இசையில் கண்டார்...நடிப்பில் கண்டார்...படத்தொகுப்பில் கண்டார்... சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் கண்டார்..
அக்டோபார் 20 -- இன்று அவருடைய நினைவு நாள்...
இதோ அவருக்கு ஓர் அஞ்சலி,,,
http://www.youtube.com/watch?v=4p30PGZ4UC0
அவருடன் நேரில் சந்தித்து உரையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும் அவருடைய இயக்கத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பார்வையாளனாக அவருடைய படப்பிடிப்பில், நடிகர் திலகத்தைக் காணும் வாய்ப்பு பெரும் பேறு. முன்பே நடிகர் திலகம் திரியில் குறிப்பிட்டிருந்தவாறு நெஞ்சிருக்கும் வரை படப்பிடிப்பில் அவரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. கோபம் வந்து நாங்கள் பார்க்கவில்லை. மாறாக கோபம் வரும் போது நகத்தைக் கடித்துக் கொண்டு சற்று எட்டிப் போய்விடுவார்.
தமிழ்த்திரையுலகத்தின் வரலாற்றில் தவிர்க்க இயலாத பெயர் புதுமை இயக்குநர் ஸ்ரீதர்.
-
-
சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் உள்ள லில்லி பாண்ட் கட்டிடத்தில் இடம் பெற்றுள்ள ரிதம் என்கின்ற கடையைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரைக்கான இணைப்பு
http://www.thehindu.com/features/met...cle4724188.ece
அக்கடையின் ஒரு பகுதி
http://www.thehindu.com/multimedia/d...E_1460135g.jpg
-
சென்னை அடையாறு தத்துவ ஞான சபையின் அருகில் ஒருவர் பழைய இசைத்தட்டுக்கள், பிளேயர்கள் என விற்றுக் கொண்டிருப்பார். அதைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரைக்கான இணைப்பு
http://www.thehindu.com/news/cities/...cle2939636.ece
அவருடைய விற்பனைப் பொருட்கள்
http://www.thehindu.com/multimedia/d...NE_936675f.jpg
-
அனைத்து நண்பர்களுக்கும் , திரியின் பார்வையாளர்களுக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .
-
-
இன்னும் மெய்ன் படம் போடலைடா.. அப்ப உள்ள போய்க்கலாம்...
என்று சொன்னவாறு அரசாங்க செய்திப் படங்களைப் பார்க்காமல் பலர் அந்நாளில் தவிர்த்திருப்பர்..
(அடியேன் நியூஸ் ரீலை விடமாட்டேனாக்கும்... மெய்ன் பிக்சர் போடும் வரைக்கும் காத்திருப்பதில் இன்பம் உண்டு... தலைவர் பாட்டு உபயம்).
அவ்வாறு அந்நாட்களில் பார்க்காமல் விட்ட எத்தனையோ நியூஸ் ரீல்களில் முக்கியமான விஷயங்கள் இன்றைக்கு வரலாறாக நமக்கு உதவுகின்றன.
இதோ பாருங்கள்.. ஜெனரல் மானேக்ஷா பதிவியேற்புக் காட்சியை...
அது மட்டுமா... இந்த நியூஸ் ரீலைப் பார்த்தால் தாங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்.. எதற்காக நாங்கள் விடாமல் பார்த்தோம் என்று..
இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் மாட்ச்... காணக் கிடைக்காத காட்சி அப்போது.. தொலைக்காட்சி என்றால் என்ன எனத் தெரியாத காலங்கள்..
வடேகர், கவாஸ்கர், சலீம் துரானி, ஏக்நாத் சோல்கர், இன்ஜினீயர், பிஷன் சிங் பேடி, பி.எஸ்.சந்திரசேகர் என புகழ் பெற்ற கிரிக்கெட் நாயகர்கள்.. இந்திய அணியில், அதே போல், டோனி கிரெய்க், க்ரிஸ் ஓல்ட், ஆலன் நாட், என இங்கிலாந்து அணியில்...
அதே போல் மானேக்ஷா பதவியேற்பு விழாவில் வி.வி.கிரி, பிரதமர் இந்திரா, ஒய்.பி.சவான் என பலரை பார்க்கலாம்...
https://www.youtube.com/watch?v=4XQijHGcAuQ
-
ARMED FORCES ACADEMY சர்தார் வல்லபாய் படேல் துவக்கி வைக்கும் காட்சி
https://www.youtube.com/watch?v=u_CyjfKjJtY
-
இந்தியன் நியூஸ் ரிவியூ - 1741
ஜவஹர்லால் சர்வதேச கால்பந்து கோப்பைப் போட்டிகளை துவக்கி வைக்கிறார் இந்திரா காந்தி அவர்கள். மேலும் பல அந்நாளைய செய்திகள்
https://www.youtube.com/watch?v=SM265ejgxbs