"அஹ்ஹாஹ்ஹா... இன்று தேன் நிலவு" 'எதிரிகள் ஜாக்கிரதை' திரைப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஆர்ப்பாட்டமான குரலில். இனி ஒருவர் இப்படிப் பாட முடியுமா?
http://www.youtube.com/watch?list=UU...&v=FtF6qfaTo7U
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
"அஹ்ஹாஹ்ஹா... இன்று தேன் நிலவு" 'எதிரிகள் ஜாக்கிரதை' திரைப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஆர்ப்பாட்டமான குரலில். இனி ஒருவர் இப்படிப் பாட முடியுமா?
http://www.youtube.com/watch?list=UU...&v=FtF6qfaTo7U
அன்புடன்,
வாசுதேவன்.
"நடந்தது என்னவென்று நீயே சொல்லு"... 'குமரிப் பெண்' திரைப்படத்தில் ரவியும்,ஜெயலலிதாவும் மிதிவண்டியில் பாடுவதாக வரும் இந்த அற்புதப் பாடலைக் கேட்டு நீங்களே சொல்லுங்கள். (P.B.ஸ்ரீனிவாஸ் மற்றும் L.R.ஈஸ்வரி ஆகியோரின் அரிய அற்புதக் குரலில்)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&list=UUe5WmW7xj4lf ZH21gndsmdA&v=JABss-Qc4sw[/color][/B][/size]
அன்புடன்,
வாசுதேவன்.
thankyou sir. treat.
25-7-2012 அன்று 'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி. தன்னுடைய அழகாலும், துடிப்பான சண்டைக்காட்சிகள், மற்றும் நடனக் காட்சிகளால் இளைஞர்களைக் கவர்ந்த ரவிச்சந்திரன் அவர்களை அவருடைய நினைவு தினத்தில் நினைவு கூர்வோம்.
http://i1087.photobucket.com/albums/...n31355/r-8.jpg
ரவிச்சந்திரன் அவர்கள் நினைவாக நடிகர்திலகம் அவர்களின் 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்திலிருந்து அவர் நடித்த பாடல் காட்சி. நடிகர் திலகம் ரசிப்பதாக வரும் பாடல் கூட.
http://www.youtube.com/watch?v=5x2LFD2KkOQ&feature=player_detailpage
இன்று 29.07.2012 ஞாயிறு காலை 9.15 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் என்றும் இனியவை நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக கலை நிலவு ரவிச்சந்திரன் படப் பாடல்கள் ஒளிபரப்பப் பட்டன. நன்றி பொதிகை தொலைக்காட்சிக்கு. மற்ற மொழி சேனல்கள் தங்கள் மொழியில் சாதனை படைத்தவர்களை அன்றைய தினம் முழுதும் அவர்களுடைய படத்தை லோகோ போன்று நாள் முழுதும் இடம் பெறச் செய்து பெருமை செய்யும். தமிழ்த் தொலைக்காட்சிகளில் வணிகமல்லவோ முதலிடம் பெறுகிறது..
நிகழ்ச்சியில் ஒளிபரப்பப் பட்ட பாடல்கள்
1. நாளாம் நாளாம்
2. மலரைப் போன்ற பருவமே
3. போதுமோ இந்த இடம்
4. புது வீடு வந்த நேரம்
மிக மிக நீண்ட.............நாட்களுக்குப் பின் ..... ரவி ரசிகர்கள், ஜெய் ரசிகர்கள் மட்டுமின்றி, எஸ் பி பாலா ரசிகர்களும் ஆவலுடன் விரும்பும் பாடல்... நான்கு சுவர்கள் படத்தில் இடம் பெற்ற ஓ மைனா பாடல் .... இது டி.எம்.எஸ். பாட ரவிச்சந்திரனின் குரல் இடையிடையே ஒலிக்கின்ற வடிவம். கலை நிலவு ரவி அவர்களின் நினைவு நாளை யொட்டி இப் பாடல் அவருக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.
http://youtu.be/Dg08Vs2-L_I
படத்தின் கதையைப் பாடல் வரிகளில் படியுங்கள்
சாட்சி வைத்துக் காதல் செய்யும்
காட்சியை நான் அன்று கண்டேன்
சாட்சியை நான் மாற்றி விட்டேன்
காட்சியைத் தான் திருப்புகின்றேன்
வந்துட்டாரய்யா வந்துட்டாரு....
ரவிக்காகவே அவதாரம் எடுத்த எஸ்.பி.பாலா வந்துட்டாரு ...
எஸ் பி பி என்ற மூன்றெழுத்தை உலகம் முழுதும் அறியச் செய்த மூன்றெழுத்துப் பாடல் ....
நான்கு சுவர்களில் இடம் பெற்று ஐம்புலன்களையும் வசீகரித்த பாடல் ...
ஏழு ஸ்வரங்களையும் இஷ்டப்படி ஆட்டிவைக்கும் வல்லமை பெற்ற மெல்லிசை மன்னர் என்ற
அஷ்டாவதானி உருவாக்கிய பாடல் ...
9 கோள்களும் இந்தப் பாடலைக் கேட்டால் நின்று விடும் ...
பத்து விரல்களும் நம்மை அறியாமல் தாளம் போடும் ...
இன்னும் என்ன தாமதம் ... பாருங்கள் ... கேளுங்கள்....
http://youtu.be/PfoaGs2muHc
ஒ மை காட்... ஒ மைனாவா!?. இது என் கண்ணா!? நம்பவே முடியலையே.... ஆஹா... ஆஹா.. முன்னுரையை ரசிகவேந்தர் எழுதி விட்டார். இனி என்ன.. கலக்கல் தான். பாடல்களின் மணிமகுடம் இது ஒன்றே அல்லவா? குழைத்தெடுத்த குரலுக்கு சொந்தக்காரரான பாலாவின் டாப்மோஸ்ட் ஹிட்டாயிற்றே! ரசிகர்களில் எங்கள் ரசிகவேந்தர் மணிமகுடம் அன்றோ...
காணக் கிடைக்காத பொக்கிஷத்தை கண்டு மகிழச் செய்த ராகவேந்திரன் சார், தங்களுக்கு நன்றி எப்படி நவில்வது என்றே தெரிய வில்லை.
நான்கு சுவர்கள் படத்திலிருந்து ....
நினைத்தால் நான் வானம் சென்று
நினைத்துப் பார்த்தீர்களா இப்பாடல் காட்சியினைக் காண்போம் என்று....
என்று சொல்கிறார்களோ ரவிச்சந்திரனும் வாணிஸ்ரீயும்
மெல்லிசை மன்னரின் சூப்பர் ட்யூனில் எஸ் பி பாலா சுசீலா குரல்களில் தேன் மழை பொழியும் தெவிட்டாத கானம்
http://youtu.be/Ci788YfG7OY