-
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
நண்பர்களே
இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்
இது நீண்ட பதிவு
தயவு செய்து பொறுமையா படித்து
பாருங்கள்
மிக நீண்ட பதிவு.. பொறுமையாகப் படிக்கவும்..
ஒவ்வொரு எம்.ஜி.ஆர். ரசிகனுக்குள்ளும் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையை வெடிக்க வைக்கும் பதிவு!!
நன்றி: திரு. Shyam Shanmugaam அவர்கள்
ஷாலின் மரியா லாரன்ஸ் குமுதத்தில் எழுதிய அலசல்..
எம்.ஜி.ஆருக்கு நடிப்பு வராதா? ஹ்ஹ..
நிலவைப் போலே.. பளபளங்குது
நினைக்க நினைக்க.. கிறுகிறுங்குது
மலரை போலே.. குளுகுளுங்குது
மனசுக்குள்ளே.. ஜிலு ஜிலுங்குது
பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்...
ஆமாம். எம்ஜியாரை பார்த்தால் இப்படித்தான் ஒரு மயக்கம் வந்து தொற்றி கொள்கிறது.
எனக்கு வயது 33. எனது நாலரை வயதில் எம்ஜியார் மறைந்துவிட்டார். நான் அவரை நேரில் கண்டதுகூட கிடையாது. ஆனால் அன்பே வா 32 தடவையும், அவரின் மற்ற படங்களை குறைந்தது மூன்று தடவையும் பார்த்த எம்ஜியார் பைத்தியம் நான்.
எம்ஜியார் மறைந்தாலும் அவர் பெயர் மறையவில்லை. அவரை பற்றி எப்பொழுதுமே யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். பத்திரிகைகளில் அவரை பற்றிய கட்டுரைகள், தொடர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால்... எம்ஜியார் நல்ல தலைவர், நல்ல ஆட்சி செய்தார், நண்பர்களுடன் இப்படி பழகினார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக நடந்து கொண்டார், தோட்டத்திற்கு வரும் அனைவரையும் சிறப்பாக உபசரிப்பார் என்கிற விஷயங்களை தாண்டி எம்ஜியார் நடிப்பை பற்றி பேச தயங்குகிறார்கள்.
135 படங்களில் நடித்து 45 ஆண்டு காலம் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிய எம் ஜி ராமசந்திரன் என்கிற நடிகரின் நடிப்பை இந்த சமூகம் பேச தயங்குகிறது என்பதே உறுத்தலான விஷயம். சொல்ல போனால் தற்போதைய தலைமுறையால் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட மாபெரும் நட்சத்திரம் அவர்தான்.
எம்ஜியார் நடிப்பில் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் அவரின் ஐந்து படத்துக்கு மேல் பார்க்காமலே பேசுபவர்கள். சதி லீலாவதி துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவரின் மொத்த படங்களை பார்த்தவர்கள் மட்டுமே சரியாய் புரிந்து கொண்ட சகாப்தம் அவர்.
எம்ஜியார் என்றால் துள்ளல், எம்ஜியார் என்றால் சுறுசுறுப்பு, எம்ஜியார் ஒரு பட்டாசு.
எனக்கு எம்ஜியாரிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர் தன் ஜோடிகளை கையாண்ட விதம். படங்களில் அவர் காதலித்த அழகு.
ஜெமினி கணேசன் காதல் கொண்டு மையலில் திளைத்து நின்ற இடத்திலேயே பார்வையால் தூது விட்டுக்கொண்டிருப்பார். சிவாஜி கணேசன் காதலின் அதனை ரசங்களிலும் நீந்திக் கொண்டு காதலிகளை மறந்து பாடல் வரிகளில் லயித்திருப்பார். ஆனால் எம்ஜியாரோ தன் காதலிகளுடன் ஆடி, பாடி, ஓடி 'dynamic ' காதலராக இருப்பார்.
அத்தனை உற்சாகம் அவர் உடம்பில் இருக்கும். அவர் தன் ஜோடியை ஒரு பரிசுக் கோப்பையையை போல் இறுகப் பிடித்து ரசித்துக்கொண்டிருப்பார். ஒரு ரசிகைக்கு இதை விட என்ன வேண்டும்?
'acting' காதலனைவிட 'active' காதலன்தான் எப்பொழுதுமே பெண்களின் சாய்ஸ். இதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை, அவ்வளவுதான். 50 வயதை தாண்டி நடித்த படங்களில்கூட அதே வேகத்துடன் ,அதே இளமை துடிப்புடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது எம்ஜியாரின் ஸ்பெஷாலிட்டி.
எம்ஜியார் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அவரின் உடைகளுக்காக. "என்னய்யா, மஞ்ச சட்ட, பிரவுன் பேன்ட், மெரூன் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் தெரியாது.
அறுபதுகளின் பின் பாதியில் வந்த படங்களில்தான் அவர் இந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்தார். அதற்கு இரண்டு காரணங்கள். 1964 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. அந்த கலரில் எடுக்கப்படும் படங்களில் அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாக தெரியும். எம்ஜியார் அதற்கேற்ப உடை அணிய ஆரம்பித்தார். இரண்டாவது காரணம் அப்போது ஹாலிவுட் படங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த கேரி க்ரான்ட், கிரகரி பெக், பால் நியுமன் போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது. ஹாலிவுட் ஆடை ட்ரெண்டைதான் எம்ஜியார் கடைபிடித்தார்.
முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்ஜியார் ஒரு fashion icon என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிப்பார்கள். நான் அதற்கு கோபப்பட மாட்டேன். மாறாக எம்ஜியாரை போல அழகான ஒரு நமுட்டு சிரிப்புடன் உண்மைகளை தெளிய வைப்பேன். அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் ஏழையாக நடிக்கும்போதுகூட சட்டையை tuck in செய்து ஷூ அணிந்திருப்பார்கள். அதுதான் அன்று ஸ்டைல். அதை எம்ஜியார் பின்பற்றினார். அவர் ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
V கட் கழுத்து வைத்த குர்தா, slim-fit பேன்ட், வலது கையில் பிராண்டட் வாட்ச், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பி, ஸ்கார்ப் என்று அனைத்திலும் தனி கவனம் எடுத்துக் கொண்டது எம்ஜியார் மட்டுமே.
இன்றுகூட ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்ஜியார் பெயரை சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம்? ஜிப்பா வேட்டியுடன் சுற்றிய பாகவதர் போன்ற ஹீரோக்களை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பேன்ட் ஷூ சகிதமாக வந்த எம்ஜியார் நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்தானே?
52 வயதில் ரோமானிய மன்னர் பாணியில் முட்டிக்கு மேலே உடையணிந்து 'ஆயிரம் நிலவே வா’ என்று பாடி வருவார். அடித்து சொல்கிறேன், எம்ஜியாரை தவிர வேறு யார் அந்த உடை அணிந்தாலும் முகம் சுளிய வைத்திருக்கும். ஆனால் எம்ஜியாரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.
இது ஒன்று போதும் அவரின் அடையாலங்கார நேர்த்தியை பறைசாற்ற.
அடுத்து மிகவும் நக்கலடிக்கப்பட்டது எம்ஜியாரின் நடனம். அவரது நடனம் பெரும்பாலும் Broadway Musicals பாணியில் இருக்கும்.அந்த வகை நடனத்தில் நடிகர்கள் மேடையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பார்கள். நடனமும் கூடவே சேர்ந்து ஓட்டமுமாக இருக்கும். அதேபோல் எம்ஜியார் பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் தெரியும். குறிப்பாக மிகவும் கடினம் என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நடன அமைப்புகள் இருக்கும்.
'துள்ளுவதோ இளமை'யில் வரும் paso-doble 'என்னை தெரியுமா’வில் வரும் rock and roll, 'அன்று வந்ததும் இதே நிலா’வில் வரும் ballroom dancing என்று வகை வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.
ஆடும்போது கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார். நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும்.
சிவாஜி தன் இயல்பான முகபாவத்தை வைத்து பல நடனங்களை நேர்த்தியாக கடந்து விடுவார். எம்ஜியார் அப்படி இல்லை. எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அதை சிறப்பாக செய்தார்.
’ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி எடுத்தார். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை அந்த ளவிற்கு தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிகூட செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
நடனம் மட்டுமா? சண்டை காட்சிகளிலும் அப்படி ஒரு நேர்த்தி. ஆஜானுபாகு இல்லை என்றால் மலை போல் உடம்பு வைத்திருப்பவர்களுடன்தான் மோதுவார். தன்னைவிட பலம் குறைந்தவனை அடிப்பதில் என்ன ஸ்பெஷல் இருந்துவிட போகிறது?
சிவாஜி நடிப்பின் உச்சம்; அவர்போல் எம்ஜியார் நடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. நமக்கு இரண்டு சிவாஜி தேவையா? ஒருபக்கம் சிவாஜி அணுகுண்டாய் வெடித்துக் கொண்டிருந்தார். இந்த பக்கம் எம்ஜியார் underplay செய்து இயல்பாக வலம் வந்தார். இந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு தேவைப்பட்டது.
கட்டபொம்மன் போல் கர்ஜிக்க வில்லைதான். ஆனால் மதுரை வீரனின் எழுச்சி அவன் குரலிலும் பார்வையிலும் தெறித்தது. நாடோடி மன்னனின் கம்பீரம், அன்பே வா ஜேபியின் குறும்புத்தனம், எங்க வீட்டுப்பிள்ளையின் சாமர்த்தியம் என்று எம்ஜியாருக்கு அநேக முகங்கள் இருக்கிறது.
எம்ஜியார் சாக மாட்டார். எப்படியாவது உயிரோடு வருவார். மக்களை பொறுத்தவரை எம்ஜியார் ஒரு சூப்பர் ஹீரோ. இப்பொழுது பேட்மேன் ,மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும் இளைஞர் பட்டாளங்களுக்கு தெரியாது, அந்த காலத்தில் எம்ஜியார்தான் பேட்மேன், சூப்பர்மேன் எல்லாமே என்று.
நண்பர் ஒருவர் இருக்கிறார். பல சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர். .ஆனால் சொல்லுவார் "எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னுதான் போவேன். வழியில எங்கேயோ ஒரு எம்ஜியார் பாட்டு கேக்கும். அவ்வளவுதான். அட போடா நான் ஏன் சாவணும், நான் போராடுவேன் அப்படினு உள்ள ஒரு வெறி வரும் பாரு" என்று.
அந்த பாடல்களை எம்ஜியார் எழுதினாரா? இல்லை. ஆனால் இந்த வரிகள்தான் வேண்டும் என்று பாடலாசிரியர்களை கேட்டு பெற்றுக் கொண்டார். ஆக யாராவது "எம்ஜியார் எப்படி பாடி இருக்காரு பாரேன்" என்று கூறினால் அது தவறே இல்லை. எம்ஜியார்தான் எழுதினார், பாடினார்.
எதிரிகளை அடிப்பார். கொல்ல மாட்டார். கடைசியில் மன்னித்து விடுவார். இது ஒரு கடவுள் மனப்பான்மை. விளிம்பு நிலை ரசிகனுக்கு அது பிடித்தது. மோசமான வாழ்வு நிலையில் இருந்த அவனுக்கு திரையில் ஒரு கடவுள் தேவைப்பட்டார். எம்ஜியார் அதுவாய் இருந்தார். அவர் ஒரு திரை கடவுள்.
அவரும் பிரிந்து சென்ற காதலிக்காக அழுது, குடித்து, சாவது போல் நடித்திருக்க முடியும். நிஜ வாழ்வில் பலர் அப்படிதான் செய்கிறார்கள். ஆனால் எம்ஜியாரோ காதலிகளை வசீகரத்தால் கட்டி போடும் வித்தையை அவர்களுக்கு கற்று கொடுத்தார். அப்படியும் 'பாசம்' படத்தில் எம்ஜியார் கடைசியில் இறந்து போவார். என்னால் அந்த படத்தை இன்னொரு முறை பார்க்க முடியவில்லை. இறக்கும் கடவுளை யாருக்கும் பிடிப்பதில்லை.
எம்ஜியார் ஒரு ரசிகனின் நடிகர். அந்த காலத்தில் ரசிகர்களுக்கு எது தேவை பட்டதோ அதை கொடுத்தார். ரசிகனின் எதிர்பார்ப்பை தாண்டி அவர் தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.
படங்களில் அரசியலை திணித்தார் என்று குற்றம் சாட்டினால், அறுபதுகளில் சினிமாவில் திராவிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு தேவையாய் இருந்தது. அல்லாமல் எந்த நடிகர் அரசியல் பேசவில்லை? தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் யாரோ ஒரு நடிகர் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
உடையலங்காரம், பாடல்கள் மற்றும் நடனங்களில் முழு ஈடுபாடு, சண்டை பயிற்சி துல்லியம், வேறுபட்ட நடிப்பு திறன் என்று எம்ஜியார் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமில்லாது அதையும் தாண்டி ஒரு முழுமையான சினிமா கலைஞர் என்பதை எந்த தலைமுறையும் மறுக்க முடியாது.
அவருடைய கடைசி படம் வெளிவந்து 40 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த 2017 ல் ஒரு பெண் அவர் நடிப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறாள் என்பதே எம்ஜியார் என்கிற நடிகரின் மாபெரும் வெற்றிதான்.
இவ்வளவு நான் எழுத தேவை இல்லை. இதற்கும் சேர்த்து எம்ஜியார் ஒரு பாடலை பாடிவிட்டுதான் சென்றிருக்கிறார்.
நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து
மனதை கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம் பாடலாம்
அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவை கொண்டு
மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
என்னை தெரியுமோ
நான் சிரித்து பழகி
கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமோ
உங்கள் கவலை மறக்க
கவிதை பாடும் கவிஞன்
என்னை தெரியுமா
ஆகா ரசிகன் ஆகா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...
நன்றி sendra சார்
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி........... Thanks...
-
1980 நாடாளுமன்ற தேர்தலில் அஇஅதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயித்தது !!
""எம்.ஜி.ஆர் இரட்டைவிரலை காட்டினார் !
மக்கள் இரண்டு இடங்களை கொடுத்துள்ளார்கள் ""
என்று கிண்டல் செய்தார் கருணாநிதி !!
இந்திராவுக்கு அழுத்தம் கொடுத்து கழக ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட்டது !!
கழக முன்னனி அமைச்சர்கள்
நாஞ்சிலார் சுப்புலட்சுமி உள்ளிட்டவர்கள் திமுக வுக்கு ஓடினர் !!
தேர்தலை சந்திக்க எம்.ஜி.ஆர் க்கு கடும் பண நெருக்கடியில் 17 இலட்சம்
நிதி தந்து உதவினார் ஜி.வி.என்ற வரதராஜ் நாயக்கர் !
(பிஎஸ்ஜி நிறுவனங்களின் தலைவர் )
மக்களிடம் நேரில் நியாயம் கேட்டார் தலைவர் !!!
(அப்போது மீடியா பலம் இல்லை )
ஒரே வார்த்தைதான்
♦" நான் என்ன தவறு செய்தேன் ?♦
♦'ஏன் எனக்கு ஓட்டு போடவில்லை ?♦
இந்த கேள்வியை தைரியமாக மக்களிடம் கேட்ட ஒரே தலைவன்
உலக அரசியல் வரலாற்றிலேயே
#புரட்சிதலைவர் மட்டுமே !!!
மக்கள் அலைஅலையாய் திரண்டு
தலைவரை மீண்டும் முதல்வராக்கினார்கள் !!
தலைவர் பிரசாரம் செய்த கடைசி பொது தேர்தல் அதுதான் !!...............நன்றி........
-
புராண காலத்திலிருந்து ....
இன்று வரை ...
கொடைவள்ளல்கள் ....
என்றாலே ...
இருவர் பெயர்தான் ..
மக்களின் நினைவில் வரும் !!
ஒருவர் கர்ணன் !
இன்னொருவர் எம்.ஜி.ஆர் !!
கர்ணன் கூட கொடையாளி என்பதை தவிர்த்து மிகவும் மோசமானவன் !!
திரௌபதியை அஸ்தினாபுர அரசவைக்கு இழுத்துவர சொல்லி உத்தரவிட்டது கர்ணன் தான் !!
சமாதானம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ..
துரியோதனனை தூன்டிவிட்டு
போருக்கு வித்திட்டது கர்ணன்தான் !!
ஆனால் புரட்சிதலைவர்
ஈ எரும்புக்கு கூட தீங்கு நினைக்காத
பொன்மனம் படைத்தவர் !!
எனவே நான் கண்ட மனிதரில் சிறந்தவர்
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே !!
#இனிய_காலை வணக்கம் !!!........... Thanks...
-
கொடுத்து கொடுத்து சிவந்த கரம் தலைவர் ஒருவரே;-..........
எம்ஜிஆரிடம் துணை மந்திரியாக பதவி வகித்த ஐசரி வேலன், 14-06-1987ல் விருதுநகரில் அரசு பிரச்சார நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது மேடையிலே மாரடைப்பால் இறந்து விடுகிறார்அதற்கு அடுத்த மாதமே அவர்களின் வீடு ஜப்திக்கு வருகிறது...
பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவரது மகன் ஐசரி கணேஷ் மிகுந்த கஷ்ட நிலைக்கு ஆளாகிறார் இதிலிருந்து மீள ஒரே வழி எம்ஜிஆரை சந்திப்பதுதான் என்று முடிவெடுக்கிறார்
வீட்டின் பேரில் வாங்கிய கடன், வட்டிக்கு வாங்கிய கடன் அனைத்தையும் பட்டியலிடுகிறார் ஐசரி கணேஷ்
மக்கள் திலகம் ஆச்சரியப்படுகிறார். காரணம் ஐசரி வேலனுக்கு எதில் குறை வைத்தோம் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் "எல்லாத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் நீ கவலைப்படாமல் யார் யாருக்கு எவ்வளவு தரணுங்கிறதை எழுதிக் கொடுத்திட்டு போ என்கிறார்
இரண்டாவது நாள் ஜசரி கணேஷ் வீட்டிற்கு இரண்டு பேர் வந்து விசாரித்து விட்டு செல்கின்றனர்.மறுநாள் ஐசரி கணேஷ் ராமாவரத் தோட்டத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்
உதவியாளர் மாணிக்கத்தை அழைத்த எம்ஜிஆர் அந்த பையை எடுத்திட்டு வா என்கிறார்
எம்ஜிஆர் ஐந்து விரலை காட்டி "இதிலே ஐந்து லட்ச ரூபாய் இருக்கிறது. இதை வச்சு கடனை அடைச்சு மிச்சம் இருக்கிற ஓரு லட்ச ரூபாயைக் கையில வச்சுகிட்டு ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணனும்" என்று வார்த்தையாலும் சைகையாலும் சொல்லி அந்த பணப்பையை கொடுக்கிறார் எம்ஜிஆர்
ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையை கண்ணால் பார்த்த ஐசரி கணேசிற்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது
உடன் இரண்டு பேருடன் ஐசரி கணேசை ஜீப்பில் அனுப்பி வைக்கிறார் எம்ஜிஆர்.முதலில் ஜீப் நேராக புரசைவாக்கம் பெனிபிட் பண்டிற்கு செல்கிறது. உடன் வந்த உதவியாளர்களே பணத்தை கட்டி, பத்திரத்தை வாங்கி ஐசரி கணேசிடம் தருகின்றனர்
பிறகு, அங்கிருந்து மந்தைவெளி மார்வாடி கடைக்கு வந்து அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்டு தருகின்றனர். பிறகு ராயபுரம் சென்று, கடன் கொடுத்த பைனான்சியரிடம் கடனை திருப்பி அடைக்கின்றனர்
உடன் வந்த உதவியாளர்களே எல்லா கடன்களையும் செட்டில் செய்து விட்டு மீதமிருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை ஐசரி கணேஷிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள்.
எம்ஜிஆர் கொடுத்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை வைத்து கன்ஸ்டிரக்சன் வேலையை தொடங்கி வெற்றி மேல் வெற்றி குவித்து இன்று பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரராகி , வேல்ஸ் கல்லூரியையும் நிர்வகித்து வருகிறார் ஐசரி கணேஷ்.......... Thanks...
-
1973 APRIL மாதம் மக்கள் திலகம் ஒரு PRESS MEETING ல் கூறினார். நான் நடிக்க ஒப்பந்தமான படங்கள் 18 படங்கள் கருணாநிதியின் மிரட்ட லின் பேரில் நிறுத்தப்பட்டிருக்கிறது. என்னை வைத்து படம் எடுக்கும் PRODUCER களை கருணாநிதி மிரட்டுகிறார். என்னை படத்தை வாங்கும் DISTRIBUTORS மிரட்டப்படுகின்றனர் என்று கூறியுள்ளார். MGR ரசிகர்கள் இந்த விஷயங்களை இன்றைய தலைமுறையினருக்கு தயவு செய்து எடுத்துக் கூறவும். இது என் பணிவான வேண்டுதல். YOURS V.SUNDAR........ Thanks...
-
இது கதை அல்ல நிஜம்
------------------------------------------------
பாகனேரி என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தற்போதும் அதிமுகவில் இருக்கிறார் ;
ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர். திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.
எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம். இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால் எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார். எம்ஜியாரை எதிர்த்து கடுமையாக பொது கூட்ட மேடைகளில் விமர்சிப்பார் ;
தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து பத்திரிக்கை அடித்து தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாண செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார். கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு , நான் கல்யாணத்துக்கு வந்தா வரவேற்ப்பு,க ட்சிக்காரனுக்கு சாப்பாடு அது-இதுன்னு
எக்கச்சக்கமா செலவு வரும். நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி என தனது நரி சிரிப்பை உதிர்த்து விட்டு இருக்கிறார். .
உடைந்து போனார் அந்த சிவகங்கை திமுக காரர் ; தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்ச கொடுத்தவர்.
பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர். "வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்... புரட்சி தலைவரை பாப்போம் " என இழுத்திருக்கிறார்.
சிவகங்ககாரருக்கோ எம்ஜியாரை வச்சு
நாடகம் போட்ட காலத்துல பழக்கம்.
அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு தொடர்பு விட்டு போச்சு ; அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும் என தயங்கியிருக்கிறார்.
நீ வா மாமா... தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு.. என தைரியம் சொல்லி அழைத்து சென்றார். முதல்வர் எம்ஜியாரை வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம். எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர். காரை நிறுத்தி அருகில் அழைத்து இங்கேயே இருந்து சாப்பிட்டு வெய்ட் பண்ணுங்க ; கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன் என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.
மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு. உண்ட மயக்கத்தில் ஒரு குட்டித்தூக்கம். தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.
வந்தவர்களை வரவேற்று சாப்பிட்டீங்களா எனக்கேட்டு , என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார். புரட்சி தலைவர் ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு... தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து கொடுத்து விட்டு , அந்த கட்சியிலேயே இரு... நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் பொன்மனச்செம்மல் .
ஊருக்கு வந்த சிவகங்கை காரரும் திமுகவிலிருந்து விலகி அதிமுகவிலும் சேராமல் அரசியலை விட்டு ஒதுங்கி வாழ்ந்து மறைந்தும் போய் விட்டார்.
சொந்த கட்சிக்காரனுக்கு உதவாத இந்த கோபாலபுரத்து கோயபல்ஸ் தமிழினத்திற்காக ரத்தம் சிந்துவேன் என்று புழுகு மூட்டையை இன்னமும் அசராமல் அவிழ்த்து விடுகிறார்...
புரட்சி தலைவர் மணக்கும் சந்தனம்.
கருணாநிதி நாற்றமடிக்கும் சாக்கடை
என்பதற்கு இந்த உதாரணமே போதும் !........... Thanks...
-
மாற்று ரசிகர்களுக்கு
இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்...
இதை படித்தாவது
எங்கள் புரட்சித் தலைவரின் பொன்மனத்தை புரிந்து கொண்டு
திருந்துங்க...
நடிக்க மாட்டேன்??
---------------------------------
தன் கொள்கைக்கு ஏற்ற வண்ணமும் தன் ரசிகர்கள் விரும்பும் வண்ணமும் இருந்தால் மட்டுமே அந்தப் படத்தின் வாய்ப்பை ஏற்பது பற்றி சிந்திக்கும் எம்.ஜி.ஆர்----
தன்னை வைத்துப் படம் எடுக்க விரும்பி தம்மிடம் வந்த--
தயாரிப்பாளர்கள் இருவரிடம் தொடுத்த பதில்----
உங்கள் பேனரில் நடிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்??
அது!!--ராஜாமணி பிக்சர்ஸ்!!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னையின் பெயரில் துவக்கப்பட்ட நிறுவனம்!!
தேடி வந்தது----
இப்போதைய சந்தான பாரதியின் தந்தை- சந்தானமும்---பிரபாத் திரையரங்கின் மேனேஜரின் மகனான மோகனும்!!
ராஜாமணி பிக்சர்ஸ் என்னும் உங்கள் நிறுவனத்தின் பெயரை மாற்றிக் கொண்டு வாருங்கள். நான் நடிக்கிறேன் என்கிறார் எம்.ஜி.ஆர்!!
அது எப்படி முடியும்?? என்ற அவர்களின் கேள்வி முடியும் முன்னரே எம்.ஜி.ஆர்.பதில் சொல்கிறார்??
அப்படின்னா என்னாலும் அந்த பேனரில் நடிக்க முடியாது??
எம்.ஜி.ஆரின் வேகம் தணியவில்லை---
எவருடைய தாயார் பெயரில் பேனர் வச்சிருக்கீங்களோ எவருடைய தயவால நீங்க ஒசந்திருக்கீங்களோ அவரையும் [அதாவது சிவாஜி ] கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.
அவரோட படம் ஒண்ணுல நீங்க நஷ்டம் அடைஞ்சிருக்கலாம். ஆனால் அவரை வச்சு மறுபடியும் படம் எடுக்கறது தான் முறை!!---
நான்--வேலுமணி படங்களில் நடிக்கறேன்னா--அவரை எனக்கு ஜூபிடர் ஃபிலிம்ஸ் லேர்ந்து தெரியும்.
நான் ராமண்னா படத்துல நடிக்கறேன்னா--அவர் என்னை வச்சு கூண்டுக்கிளி குலேபகாவலி ஆகிய படங்களை எடுத்துருக்கார்.
விளக்கம் தந்தவரிடம் மேலும் அவர்கள் கெஞ்சவே---
இறுதியாகவும் உறுதியாகவும் பதில் சொல்கிறார் எம்.ஜி.ஆர்!1 சிவாஜி கிட்டே இருந்து ஒரு சிபாரிசு லெட்டர் வாங்கிண்டு வாங்க???
எம்.ஜி.ஆரின் ஆணித்தரமான பதிலால் திக்கித்தும் விக்கித்தும் போன அந்த இருவரும் இடத்தை காலி செய்ய-
ஏங்க !! பேசாம ஒத்துக்கிட்டிருக்கலாமே?? என்ற தன் நண்பர்களின் கேள்விக்கு பதில் தருவதன் மூலம் தான்--தன்-- பெருந்தன்மையில்-- உச்சம் தொடுகிறார் எம்.ஜி.ஆர்!!!
எனக்கு வரும் பல லட்ச லாபத்தை விட ஒரு தாய் மனதின் சிறு வருத்தம் ஏற்படுத்தும் நஷ்டமே பெரியது!!
என் அம்மாவா இருந்தா என்ன--சிவாஜி அம்மாவா இருந்தா என்ன !!!!
இது தான் இன்றுவரை நம்முள் எம்.ஜி.ஆரை உலா வரச் செய்கிறதோ????.......... Thanks...
-
தலைவருக்கு அறந்தை உலகப்பன் கொடுத்தப்பட்டம் புரட்சி நடிகர். மு.க.கொடுத்ததாக வதந்தி காலாகாலமாக பரவி வருகிறது. கோபிச்செட்டிப்பாளையத்தில் ஆர்எம்வீ தலைமையில் தலைவர் சிலை திறப்புவிழாவிலும் மு.க. தான்தான் எம்ஜிஆருக்கு புரட்சிநடிகர் பட்டம் வழங்கியதாக பேசினார். ஆனால் அன்று தலைவர் வரலாறு கட்டுரையை தினகரன் நாளிதழில் நான் எழுதி இருந்தேன். அதில் அறந்தை உலகப்பன்தான் தலைவருக்கு புரட்சிநடிகர் பட்டம் கொடுத்ததாக எழுதி இருந்தேன்....... Thanks...
-
புரட்சித்தலைவர்கலந்துகொள்ளும்விழாஒன்றுஅறந்தைஉலகப்ப ன்செய்திருந்தார்அதில்சிறப்புஅழைப்பாளராக கருணாநிதிகலந்துகொண்டார்,அதில்தான்புரட்சிநடிகர்என்ற பட்டத்தைத்தலைவருக்குத்தருவதற்குதயார்செய்துஎழுதியபே ழையைகருணாநிதியிடம்தந்துதலைவரிடம்அறந்தைஉலகப்பன்கொடு க்கச்செய்தார்என்பதுதான்உண்மை,கருணாநிநிதியேவிரும்பி தனதுயோசனையில்தரவில்லை........ Thanks...
-
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் நமது பொன்மனச்செம்மல் புரிந்த திரையுலக சாதனைகளை நான்கு பிரிவுகளாக தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் :
A. . உலக சாதனைகள் :
1. உலக சினிமா நூற்றாண்டு விழா 1995ம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, நமது இந்திய நாட்டிலிருந்து, மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு, தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மட்டுமே. (நடிகை : நர்கிஸ், இயக்குனர் : சத்யஜித்ரே .... ஆதாரம் 1995ல் வெளிவந்த பொம்மை மாத இதழ்)
2. 1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 25 ஆண்டுகள் ஆகியும், தனது பழைய படங்களை மக்கள் திரும்ப திரும்ப பார்க்க வைத்து, வசூல் சாதனை புரிந்த ஒரே நடிகர் உலகில் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். ஒருவரே.
3. 1956லிருந்து, மதுரை வீரன் காவியம் வெளியானது முதல் இன்று வரை (1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 25 ஆண்டுகள் ஆகியும்) வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை தக்க வைத்து வரும் ஒரே நடிகர் உலகில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். ஒருவரே.
4. ஒரு நடிகர் முதன் முதலில் அரசியலில் ஈடுபட்டு, கட்சி ஒன்றை நிறுவி, தீவிர அரசியல்வாதியுமாகி படங்களில் நடித்துக்கொண்டே, இடைத் தேர்தல்களிலும், உப தேர்தல்களிலும் வெற்றியை தொடர்ந்து குவித்து, பின் தமிழக மக்களால் முழுமையாக, முறையாக, மூன்று முறையும் தேர்ந்தேடுக்கப்பட்டு ஒரு மாநில முதல்வராக சாதனை புரிந்தது, உலகில் புரட்சித் தலைவர் மட்டுமே.
5. அதிக அளவில் ஒருவரை பற்றி பேட்டிகளும், வெவ்வேறு தலைப்புக்களில் செய்திகளில் இடம் பெற்றவர் நமது இதய தெய்வம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களே !
6. அதிக அளவில் இரட்டை வேடங்கள் தாங்கி அவற்றில் 90 சதவிகித படங்களை வெற்றிப்படங்களாக்கிய பெருமை படைத்தவரும் நமது நிருத்திய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களே !
7. பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்காத பிற திரைப்படங்களிலும், மக்களின் ஆரவாரத்தையும், கை தட்டல்களையும் பெறுவதற்காக, அவரது நிழற்படங்களும், அவர் பற்றிய வசனக் காட்சிகளும், பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும், அவரை தொடர்பு படுத்தி காட்சிகள் அமையப் பெற்று தயாரிக்கப்பட்ட படங்கள் அதிக அளவில் வெளியாகி, அவருக்கு புகழ் சேர்த்தது, உலக அளவில், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் மன்னவர் எம். ஜி. ஆர். ஒருவருக்கு மட்டுமே !
8. ஒரு நடிகரின் படங்கள் அதிக எண்ணிக்கையில், மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில், மறு வெளியீடுகள் செய்யப்பட்டு, வசூலை ஒவ்வொரு வெளியீட்டிலும் அள்ளிக் குவிக்க வைத்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சிக்கடலில் நீந்த வைத்துக்கொண்டிருப்பவர் வையகைத்தில் நம் மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !
B. ஆசிய சாதனைகள் :
1. கத்திச்சண்டை, கம்பு சண்டை, குத்துச் சண்டை, சிலம்பம் சண்டை, வாள் சண்டை, சுருள்பட்டை சண்டை, மான் கொம்பு சண்டை ஆகிய அனைத்து சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடி புதுமையை ஏற்படுத்தினார், எங்கள் வீட்டு பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டினரும் போற்றும் எம். ஜி. ஆர்.
2. கதாநாயகனாக நடித்த 115 படங்களில், சுமார் 75க்கும் அதிகமான மக்கள் திலகத்தின் காவியங்கள், 1980ம் ஆண்டு சுமார் 1100 அரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அப்போதைய தமிழக நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், வணிக வரி பெற்றுத்தந்த விவரங்களை அறிவிக்கும்போது சட்டப் பேரவையில் தெரிவித்த தவகலின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் ஆசிய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)[/COLOR]
C. இந்திய சாதனைகள் :
1. ஒரு நடிகர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் மாறி, விளம்பரம் இன்றி வெளியிட்ட ஒரு காவியம் பெரும் வெற்றி கண்டு சாதனையை படைத்தது பாரத் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே ! (படம் : 1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன்)
2. சுமார் 30,000க்கும் மேல் ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும், மன்றங்களும் கொண்ட ஒரே நடிகர் இந்தியாவில் நமது கலைப் பேரொளி எம். ஜி. ஆர். மட்டுமே !. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)
3. இந்திய துணைக்கண்ட வரலாற்றில், ஒரு பிரதமர் அவர்கள் துவக்கி வைத்த நடிகரின் ரசிகர் மன்றம் என்ற பெருமையையும் பெற்ற ஒரே நடிகர் நம் கொள்கைத்தங்கம் எம். ஜி. ஆர். மட்டுமே ! (இடம் : அந்தமான், பிரதமர் : மறைதிரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்)
4. ஒரு நடிகர் அரசியல்வாதியாகி, இணையதளம் மூலம் அதிக அளவில் வாக்குகளை பெற்று (ON LINE VOTING) இந்திய அரசியல் வாதிகளில் முதலிடத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பவரும் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களே ! (Web site : WHO POPULAR..COM.)
5. தமிழக முதல்வராகும் பொருட்டு, திரையுலகை விட்டு விலகும் போது, தனது 60 வயதிலும் சுமார் 17க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய சினிமா வரலாற்றில் ஓர் புதிய அதிசயத்தையே ஏற்படுத்தினார் நமது புதுமைப்பித்தன் எம். ஜி. ஆர். அவர்கள். ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)
6. நடிகர் ஒருவரின் திரைப்படங்களின் கதைகள் அதிக அளவில் RE-MAKE செயப்பட்டது மட்டுமல்லாமல், அவரது படத் தலைப்புக்களை கொண்டு அதிக அளவில் பிற நடிகர்கள் நடிப்பில் புதிய படங்கள் வெளிவந்து பெருமையுடன் பேசப்பட்ட ஒரே நடிகர் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !
7. கருப்பு-வெள்ளை காவியம் ....மதுரை வீரன் மூலம் 33 நகர அரங்குகளில் 100 நாட்கள் கடந்து, புதிய சாதனை புரிந்து, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது நம் இதய வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.
8. அதிக அளவில், நாடகக் கலைஞர்களையும், திரைக் கலைஞர்களையும் (நடிக - நடிகையர், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள்) அறிமுகப்படுத்திய ஒரே நாயகன் நம் நாடு போற்றும் நல்லவர் எம். ஜி. ஆர். அவர்களே ! ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)
D. தமிழக சாதனைகள் :
1. தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் பாரத் பட்டம் பெற்ற நடிகர் நம் மன்னவனாம் கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்களே !
2. தமிழ் வண்ணப்படத்தில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் நம் கொடை வள்ளல் எம். ஜி. ஆர். தான் (படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்)
3. முதன் முதலில் PUNCH DIALOGUE பேசி நடித்த முதல் நடிகர் நம் ஏழைபங்காளன் எம். ஜி. ஆர். தான். (படம் : மர்மயோகி)
4. முதன் முதலில் ஒரு நடிகர் இயக்குநராகி வெற்றிக் காவியத்தை தமிழ் திரையுலகுக்கு அளித்தது நம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் எம். ஜி. ஆர். தான். (படம் ... நாடோடி மன்னன்)
5. நுழைவுக் கட்டணம் பைசாக்களில் இருந்த அந்தக் கால கட்டத்திலேயே (1956ல்) ஒரு கோடி ரூபாய் வசூல் புரிந்து, இந்தியத் திரையுலகிலேயே ஒரு பெரும் புரட்சியை, "மதுரை வீரன்" காவியம் மூலம், உருவாக்கினார் நம் தர்ம தேவன் எம். ஜி. ஆர். அவர்கள்
6. தமிழ் திரையுலகில் பூஜை போடப்பட்டு முதல் காட்சி படமாக்கப்பட்ட அன்றே அனைத்து AREA க்களிலும், தனது காவியங்கள் விற்கப்படும் அதிசயத்தை நிகழ்த்தினார் உலகின் எட்டாவது அதிசயமான நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள்.
7. தொடர்ந்து 200 காட்சிகள் அரங்கு நிறையப்பெற்று, தனது மகத்தான காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மூலம் மற்றுமோர் சரித்திரம் படைத்தார், புவியுள்ளவரை புகழ் கொண்டிருக்கும் நம் தெய்வம் எம். ஜி. ஆர்.
8. 115 படங்களில் கதாநாயகனாக நடித்து, அதிக எண்ணிக்கையில் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் தமிழ் திரை உலகிற்கு அளித்தார், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்கள்.
திரையுலகின் முடி சூடா மன்னன் எம். ஜி. ஆர். அவர்களின் புரட்சிகரமான திரையுலக சாதனைகளின் (அரசியல் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட) பட்டியல் இன்னும் தொடர்கிறது.......... Thanks...
-
திரைப்பட இயக்குனர் விக்ரமனின் பேஸ்புக்-கிலிருந்து...
1985ம் வருடம்... MGR அமெரிக்காவில் இருந்து கிட்னி ஆப்பரேஷன் முடிச்சுட்டு இந்தியா வரப்போறாரு. அப்ப சில சொந்த வேலை காரணமா திருநெல்வேலிக்கு போயிருந்தேன்.
"ச்சே...தலைவர் வரும்போது நேர்ல பாக்கமுடியலையே"-ன்னு தவிப்பு எனக்கு....அந்த நேரத்துல தமிழ்நாடு முழுக்க ஒரே வதந்தி... "எம்.ஜி.ஆர். உயிரோடவே இல்லை...எலெக்சன்ல ஜெயிகிறதுக்காக ஆர்.எம். வீரப்பனும், ராஜிவ்காந்தியும் மக்களை ஏமாத்துறாங்க" அப்படி, இப்படின்னு வதந்தி...ஏன்...? தமிழ்நாட்டுல அ.தி.மு.க தலைவர்கள் சிலரே" தலைவர் உயிரோட இருக்காரா...இல்லையான்னு தெரியலே...என்று பேட்டியெல்லாம் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க...மக்களுக்கோ ஒரே குழப்பம்...எதை நம்புறதுன்னு தெரியலே...
இந்த நிலையில செய்தி வருகிறது.."எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து நாளை திரும்பிவருகிறார்" என்று.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது எம்.ஜி.ஆர் அருகில் நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் ஸ்ரீ பாதராவ், பா.உ.சண்முகம், ஜானகி எம்.ஜி.ஆர்
ஒட்டு மொத்த இந்தியாவும் "ஆப்பரேசனுக்கு பிறகு எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்னு" ஒரே எதிர்பார்ப்பு.
அப்பொழுது எங்கள் ஊரில் டி.வி. வரவில்லை...ஆகையால் ரேடியோவில் வர்ணனை செய்து கொண்டு இருந்தார்கள்.
எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து பாம்பே வந்து அங்கிருந்து சென்னை வருவதாக திட்டம்.
எம்.ஜி.ஆரை வரவேற்க கிண்டியில் உள்ள ராணுவப்படை மைதானத்தில் மிகப் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்...
காலை 7 மணிக்கு விமானம் சென்னை வந்துவிடும் என்பதால் முதல் நாள் இரவே லட்சோபலட்சம் ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்துவிட்டனர். இரவு முழுவதும் மேடையில் ஆடல்...பாடல்...கலைநிகழ்ச்சிகள்...இடையிடையே தலைவர்களின் சொற்பொழிவுகள்...
திருநெல்வேலியில் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள டீக் கடையில் ரேடியோவில் நேரடி வர்ணனையை நானும் நண்பர்கள் சிலரும் கேட்டுக்கொண்டு இருந்தோம்...நேரம் போகப்போக வர்ணனையை கேட்கும் கூட்டம் அதிகமாகிகொண்டே இருந்தது...அந்த அதிகாலை வேளையில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டுவிட்டனர்...
எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவருக்கு கை, கால் வேலை செய்யாது என்று சொன்னதாகவும் அதனால் விமானத்தில் இருந்து இறங்கும் அவரை ஒரு வீல்சேரில் அழைத்து ஆம்புலன்சில் ஏற்றி நேராக மேடைக்கு கொண்டு வந்துவிட வேண்டும்...என்பது R.M. வீரப்பன் அவர்களின் திட்டம்...
மேடையில் ஆம்புலன்ஸ் ஏறுவதற்கு வசதியாக ஒரு ரேம்ப் அமைத்து இருந்தனர்...மற்ற தலைவர்கள் ஏற வலது பக்கம் படிக்கட்டுக்கள்...
இப்பொழுது ரேடியோ வர்ணனை...
மும்பையில் இருந்து எம்.ஜி.ஆர்., புறப்பட்டார்...
வர்ணனையை கேட்ட அனைவரும் கை தட்டி, விசில் அடித்து ஆரவாரம்...
நேரம் செல்ல செல்ல அனைவருக்கும் டென்ஷன்...
இனிமேல் எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்...:?
ஓடி, ஆடி சினிமாவில் சண்டை போட்டாரே இனிமேல் காலம் முழுவதும் வீல் சேரில் தான் இருப்பாரா...?
பக்கம்,பக்கமாக வசனம் பேசினாரே...இனிமேல் அவரால் பேச முடியாதா...? இப்படி எல்லோர் மனதிலும் கவலை.
மணி 7...
மீண்டும் ரேடியோ வர்ணனை...
"முதல்வர் வந்த விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்கும் என்று அறிவிக்க பட்டு இருக்கிறது..."
மீண்டும் விசில், கைதட்டல், ஆரவாரம்...
15 நிமிடங்கள் போய்இருக்கும்...
மீண்டும் ரேடியோவில் செய்தி...
"சென்னை விமான நிலையம் முழுவதும் ஒரே பனிமூட்டமாக இருப்பதால் M.G.R. வந்த விமானம் தரை இறங்க முடியவில்லை...ஆகவே விமானத்தை பெங்களூருக்கு திருப்பலாமா என்று விமானிகள் ஆலோசித்து வருகின்றனர்..." என்று ரேடியோவில் செய்தி...
"ச்சே..என்னடா இது...தலைவர் வருவாரா...மாட்டாரா...?"
"தலைவர் உண்மையிலேயே உயிரோடு இருக்காரா...?"
"ஏதோ கோல்மால் நடக்குது..."
என்றெல்லாம் விமர்சனங்கள்...இந்த ரேடியோ அறிவிப்புக்கு பிறகு.
20 நிமிடங்கள் போயிருக்கும்...
பனிமூட்டம் விலகி விமானம் தரை இறங்க போகிறது என்று அறிவிப்பு...
இங்கு உற்சாகம்...கொண்டாட்டம்...
எம்.ஜி.ஆரை அழைத்துவர ஓடுபாதைக்கே ஆம்புலன்ஸ் செல்கிறது.
விமானத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., இறங்குகிறார்...
"எதற்காக ஆம்புலன்ஸ்" என்று திட்டுகிறார்..?
அவரது 4777 அம்பாசிடர் கார் வந்து இருக்கிறது... அதில் ஏறி உட்காருகிறார்...கார் புறப்டுகிறது...
வழியெங்கும் மக்கள் வெள்ளம்...அவர்களை பார்த்து கை அசைத்துக்கொண்டே ராணுவ, மைதானத்திற்கு சென்றடைகிறார்.
ஆம்புலன்சில் வருவார் என்று எதிர் பார்த்த தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர்., அம்பாசிடர் காரில் வருவதை பார்த்து அதிர்ச்சி...!
இருந்தாலும் அதை சமாளித்துக்கொண்டு "காரிலேயே மேடைக்கு போய்விடலாம்" என்று ஆர்.எம்.வி சொல்கிறார்... எம்.ஜி.ஆர்., அவரை திட்டிவிட்டு வலது புறம் இருக்கும் படிக்கட்டுகளில் வழக்கம்போல வேகவேகமாக ஏறி ...
மேடைக்கு வந்து அனைத்து திசைகளிலும் கைகாட்டுகிறார்...பின் பெண்களைப்பார்த்து தலையைகுனிந்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்குகிறார்... அப்பொழுது வந்த கைதட்டல், விசில் சத்தம் சென்னை முழுவதும் எதிரொலித்து இருக்கும்.
ரேடியோவில் வர்ணனையை கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து ஓருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லிக்கொள்கிறோம்...
இப்பொழுது தலைவர் பேசுவார் என்று அறிவிப்பு...
ஒரே நிசப்தம்...
எல்லோருமே தலைவரால் பேச முடியாது என்று நினைத்துக்கொண்டு இருந்த நேரம்...
"பெரி......யோ...ர்....க......ளே, தா.....ய்....மார்....க.....ளே...."
கொஞ்சம் வார்த்தை தடுமாறியது...பலரது கண்களில் கண்ணீர்...
"என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே..."
தெளிவான உச்சரிப்பு. கம்பீரமான அதே குரல்...
இப்பொழுது எழுந்த ஆரவாரத்தை பதிவு செய்து இருந்தால் கின்னஸ் சாதனையாகி இருக்கும்...அப்படி ஒரு கைதட்டல்...
ரேடியோவில் கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் கத்திக்கொண்டும், கூச்சல் இட்டுக்கொண்டும் இருந்ததால் அதன்பின்பு எம்.ஜி.ஆர்., என்ன பேசினார் என்பதை கேட்க முடியவில்லை...
வழக்கமாக காலை 6 மணிக்கு வரும் தினமலர் அன்று 11 மணிக்கு தான் வந்தது...பேப்பரை வாங்கிப் பார்த்தால் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து திரும்பிய போட்டோக்கள். மேடையில் ஏறிய காட்சி, இரட்டைவிரலை காட்டிய காட்சி. பெண்களைப் பார்த்து தலைகுனிந்து வணங்குவது என்று முதல் பக்கம் முழுவதும் படங்களை போட்டு இப்படிதலைப்பு வைத்திருந்தார்கள்...
நினைத்தேன் வந்தாய்...நூறு வயது....
அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது எம்.ஜி.ஆர் அருகில் நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் ஸ்ரீ பாதராவ், பா.உ.சண்முகம், ஜானகி எம்.ஜி.ஆர்.......... Thanks...
-
ராஜு சார் இந்த மாதிரி
நாலாந்தர விமர்சனங்களுக்கு எல்லாம் டென்ஷன் ஆகி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் , விமர்சனம் செய்யும் இவர்களைப் பற்றி நமக்குத் தெரியாதா?
கோஷ்டி சண்டைகளுக்கும் வேட்டி உருவல்களுக்கும் பெயர் போன இவர்களெல்லாம் பேசினால் என்ன ஆகி விடப் போகிறது, சமீபத்தில் கூட கராத்தே
தியாக ராஜனும் கே. எஸ் அழகிரியும் மாறி மாறி நாறிக் கொண்டது
ஊருக்கே தெரியும் அப்படியிருக்க இவர்களெல்லாம் பேச வந்து விட்டார்கள் , அந்தக் காலத்தில் இருந்தே திண்டிவனம் ராமமூர்த்தி கோஷ்டி, வாழப்பாடி கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி,
சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி என்றெல்லாம் கோஷ்டி
அரசியல் நடத்திக் கொண்டு அடுத்தவன் காலை எப்படா வாரலாம் என்று குழி பறிப்பதற்கு என்றே பிறந்த கூட்டம் தலைவரைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? விமர்சனம் என்பது பொதுவானது யார் மீது வேண்டுமானாலும் விமர்சனம் வைக்க முடியும், அது காந்தி ஆனாலும் சரி புத்தன் ஆனாலும் சரி ஆனால் அது வைக்கும் விதத்தைப் பொறுத்தது
நான் மட்டும் யோக்கியன் அடுத்தவன் எல்லாம் அயோக்கியன் என்ற வகையில் விமர்சனம் செய்வது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதைப் போன்றது, சிவாஜிக்கு
அந்தக் காலத்தில் குழி
பறித்தது அவர்களின்
ஆட்கள் தானே தவிர வேறு யாரும் கிடையாது திண்டிவனம் ராமமூர்த்தி, பழ. நெடுமாறன், போன்றவர்கள் சிவாஜிக்கு எதிராக என்ன உள்ளடி வேலை எல்லாம் செய்தார்கள் என்பதை " நான் கண்ட
அரசியல்" புத்தகத்திலும் இன்னும் பல புத்தகங்களிலும்
கண்ணதாசன் விலா வரியாக சொல்லி இருப்பார் ஏன் ஒரு படி மேலே போய் காமராஜர்
எப்படிப் பட்ட புத்தி உள்ளவர் அடுத்தவன் மேலே வந்தால் அவனை அமுக்குவதற்கு என்ன செய்வார் எப்படி எல்லாம் பொறாமை அடைவார் என்பதையும் இதே கண்ணதாசன் தான் புத்தகத்தில் எழுதினார் இவ்வளவுக்கும் கண்ணதாசன் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர்
தலைவர் பொய் சொல்லி ஜெயித்தார் என்ற வார்த்தைக்கு வருவோம், அப்போ அரசியலில் ஜெயித்தவர்கள் எல்லாம் பொய் சொல்லி ஜெயித்த வர்கள் அப்படித்தானே சரி காமராஜர் பொய் புரட்டு சொல்லித்தான் முதல்வர் ஆனாரா?
மூதறிஞர் இராஜாஜி மற்றும் பண்டித நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் பொய் சொல்லித்தான் முதல்வரும் பிரதமரும் ஆனார்களா? தோற் பவன் தான் காரணம் தேடுவான் , இதைத்தான் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில் உரையாற்றும் போது சொன்னார் " மக்கள் மன்றத்தில் தோற்றுப் போய் விட்டு அதற்கு ஒரு காரணத்தையும் கண்டுபிடித்து சொல்பவர்களின் வாக்கு என்பது முற்றிப் போன ஒரு பித்தனின் வார்த்தையைப் போன்றது காரணம் பித்தன் எதையாவது உளறிக் கொண்டேதான்
இருப்பான் அதைப் பார்த்து நாம் பரிதாபப் படத்தான் முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்று
அதைப் போல்தான் இந்த நாறிகளின் வார்த்தையும் புலம்பலும் பற்கடிப்பும்
விட்டுத் தள்ளுங்கள் ராஜு சார்
அடுத்ததாக இலவசம் கொடுத்து ஏமாற்றிய கதைக்கு வருவோம்
ஆரம்பத்தில் இலவசத்தின் பிதாமகன் யார்? காமராஜர்தானே இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் அப்போ அது மனிதாபத்தினால் அல்ல மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும்
ஒரு தந்திரம் அப்படித்தானே, என்னய்யா இது நீங்கள் கொண்டு வந்தால் நலத்
திட்டம் மற்றவன் கொண்டு வந்தால் ஏமாற்று வித்தை அப்படித்தானே?
அடுத்தது சிவாஜி பெரிய வள்ளலாம் யாருக்கும் தெரியாமல் கொடுப்பாரா? அப்படி எத்தனைபேர் இவரால்
பயன் பெற்றனர் என்று
இதுவரை நான் எந்த பத்திரிகையிலும் படித்ததில்லை, தெரியாமலா மறைந்த
முன்னாள் அமைச்சர்
காளிமுத்து அவர்கள் சொன்னார்கள் சிவாஜியை ஜமுக்காளத்தில் வடி கட்டின கஞ்சன் என்று,
எனவே ராஜு சார் இந்த
மாதிரி விமர்சனங்களை வைக்கும் சூரியனைப் பார்த்து ஏதோ குரைக்குமாமே அந்த மாதிரி ஜென்மங்களாக
நினைத்துக் கொண்டு
விட்டுத் தள்ளுங்கள்
இது போன்ற விமர்சனங்களால் தலைவரின் புகழ் இன்னும் சுடர் விட்டுப்
பிரகாசிக்குமே தவிர
குறைய ப் போவதில்லை
Leave it Raju sir!........ Thanks wa.,
-
இன்றைய தினமலரில் எதிர்காலத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் நினைத்து நினைத்து பூஜிக்க போகும் மகாசக்தியை மக்கள் சதவிகதத்தில் கோடியில் ஒரு சதவிகிதம் கூட இல்லாத ஒரு கும்பலின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிய விமர்சனம். நீங்கள் மக்கள் மத்தியில் அறியப்படும் நபராக விளங்கவேண்டுமா? உடனே புரட்சி தலைவர் என்ற பிரம்மாஸ்திரமத்தை கையில் எடுத்து அந்த மகானின் அறநெறிகளை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யுங்கள்.உடனே ஒலிமூலமாகவோ.எழுத்துமூலமாகவோ பெரும் கண்டனங்கள் எழும்.உடனே ஒரு சில தினங்களில் மறைந்து விடும்.மறுபடியும் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் யாருக்கு இருக்கிறதோ அந்த நபர் இந்த பிரம்மாஸ்திரத்தை வேறுவகையில் கையில் எடுப்பார்.அவருக்கும் இதே கண்டனம்தான்.இதை எல்லாம் பார்த்து பார்த்து கேட்டு கேட்டு அலுத்து போய்விட்டது.
இவர்கள் இந்த ஜென்மத்தில் திருந்தமாட்டார்கள்.உதாரணம் . காரணம் இருந்து விமர்சித்தால் அதற்கு பதில் கூறலாம்.இவர்களுக்கு தலைவர் மண்ணுலகில் இருந்த பொழுது இருந்த புகழைவிட விண்ணுலகில் இருக்கும் போது உலகில் எந்த தனிமனிதருக்கும் இல்லாத புனித புகழ் எகிறிக் கொண்டே போகிறதே என்கிற பொறாமையில் தன்னிலை மறந்து சுயநினைவு இல்லாமல் விமர்சனம் செய்பவர்களை கேட்பதற்கு தலைவர் உருவாக்கிய கழகமும் இல்லை.அவரால் பலன் பெற்ற பெரிய மனிதர்களுக்கும் நேரமும் இல்லை.சாதாரண தனிமனிதனுக்கு வசதியும் இல்லை.ஆகையால்பக்தர்களாகிய நாமும் வேறு வகையில் புரட்சி என்கிற பிரம்மாஸ்திரமத்திரத்தை கையில் எடுத்தால்தான்இவர்கள் அடங்குவார்கள். இல்லை என்றால் காலம் இப்படியேதான் இன்னும் பல விமர்சனங்களை கடக்கும்.அதில் காட்சிகளும் மாறாது.காரணமும்மாறாது.ஆகவே இதற்கு மௌனம் தான் பதில் கூறும்..கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தன்.ஷிவபெருமாள்............ Thanks wa.,
-
உ.சு.வா நிறைவு பகுதி.
டோக்கியோவில் குழு அந்த ஊரில் உள்ள மிகவும் பிரசத்தி பெற்ற டவரில் படம் எடுத்தது.இரவு நேரங்களில் ஜொலிக்கும் kinsaang வீதியில் அசோகன் லதாம்மா முதுகில் கை துப்பாக்கியுடன் செல்லும் காட்சி , வாத்தியார் சந்திரகலா நாகேஷ் நடித்த காட்சிகள் அருமையாய் வந்தன...
ஹீமோரிலால் என்ற இடத்தில் தண்ணீரில் காட்சிகள் ஷோ ஒன்று நடந்து வந்தது. போய் பார்த்தால் அருமை.தண்ணீருக்குள் பெண்கள் குழு நடனம்.. சுவாசகுழாய்களை இடுப்பில் கட்டி கொண்டு மூச்சை அடக்கிக்கொண்டு பார்க்க பிரமிக்க வைத்தது.. தண்ணீர் ஊற்றுக்கள் காண கண் கோடி வேண்டும்.எப்படியும் ஒரு காட்சி எடுக்க பட வேண்டும் என்று அதன் சாயலில் அவளொரு நவரச நாடகம் பாடல் பிறந்தது....அந்த ஷோவின் உரிமையாளர் ஒரு பெண் என்ற தகவல் மேலும் ஆவலை தூண்டியது....
மேல இருந்து தண்ணீருக்குள் பாயும் மரண ரயில் போல பயம் ஊட்டிய speed train ல் படம் பிடித்தது குழு..
ஒரு இடத்தில் நம் தலைவரின் சுறுசுறுப்பை கண்ட ஒரு அமெரிக்க தம்பதியர் விரும்பி வந்து தலைவருடன் வண்ண புகைப்படம் எடுத்து கொண்டனர். நீங்கள் கண்டிப்பாக அமெரிக்கா வந்து அங்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ள வாத்தியார் புன்னகையுடன் சரி என்கிறார்.
மிகவும் சவாலான படப்பிடிப்பு என்றால் அது உலகம் அழகு பாட்டுத்தான்... எட்டு லட்சம் மக்கள் மத்தியில் அனுமதிக்க பட்ட நேரத்தில் உடை மாற்ற ஒரு இடம் என்று இல்லாத இடத்தில் காமெராக்களை அங்கும் இங்கும் தூக்கி கொண்டு வாத்தியாரே பல நேரங்களில் சுமந்து கொண்டு அவர் வைத்து இருந்த ஒரு zoomlence உதவியுடன் படமாக்கினார் வாத்தியார். ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி உழைப்பு அசாத்தியம்..
தடித்த கண்ணாடி கூண்டுக்குள் வாத்தியார் மஞ்சுளா அதுவும் அந்தரத்தில். ஒரு புறம் 4 மைல் தூரத்தில் இவர்களை தேடும் அசோகன், நாகேஷ் வேறு அங்கும் இங்கும் தேடவேண்டும். ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள முடியாது.. அதோ பாரு என்று அண்ணன் தம்பியை தேட வாத்தியார் காண்பிக்க வேண்டும்...ஒரு வெளிச்சத்தை கூண்டுக்குள் இருந்து காட்டியவுடன் அனைவரும் நடிக்க வேண்டும் என்று முதலில்.... வெளிச்சம் காட்டப்பட்டபோது அது வெளியே தெரியவில்லை.ஒருவர் மூலம் சொல்லி அனுப்ப பட்டு நீங்கள் பாட்டு நடித்து கொண்டே இருங்கள் எல்லாவற்றையும் எடுத்து முடித்த பின் எல்லோரும் இணைவோம் என்று சொல்லி சுமார் 3 மணி நேரம் எல்லோரும் திருப்பி திருப்பி நடித்து கொண்டு இருக்க வாத்தியார் முருகன் ஆகவும் ராஜு வாகவும் உடை மாற்றி மாற்றி எடுக்க பட்ட காட்சிகள் எப்படி வரும் என்று ரஷ் போட்டு பார்க்க முடியாமல் நன்றாக வரும் என்று நம்பினார் வாத்தியார்....குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து முடிக்க பட அனைவரையும் கண்ணீர் மல்க பார்க்கிறார் வாத்தியார்.
அடுத்து ஒரு பிரசவம் போல காட்சிகள் என்று போட்டு பார்க்க பட்டன.ஒரு குழந்தை பிறந்தது..நன்றாக இருந்தது....எந்தவித குறைபாடும் இன்றி ஆரோக்கியமாக பிறந்தால் எப்படி ஒரு தம்பதியர் மகிழ்ச்சி அடைவார்களோ அப்பிடி இருந்தன காட்சிகள்.... இது ஒரு அதிசியமே....அதுதான் வாத்தியாரின் அனுபவம் உழைப்பு திறமை நம்பிக்கை..
இங்கு தமிழகத்தில் அரசியல் மேகங்கள் மாறி வாத்தியாரை கட்சியை விட்டு நீக்கி எம்ஜியார் மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றும் படி திமுக கிளை செயலாளர் வரை தீயசக்தி கடிதம் எழுதி விசில் அடித்த குஞ்சுகளை மிரட்டி உருட்டி இளம் கன்று பயம் அறியாது என்பதை மறந்து தீயசக்தி பதவி போதையில் ஆட எங்கள் உயிர் போனாலும் எம்ஜியார் வழி நடப்போம் என்று ரசிகர்கள் கொதிக்க..
அந்த நாளும் வந்தது.அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் என்ன நடந்தாலும் உ.சு.வா.திரைப்படம் நடக்கும் அரங்கம் பக்கம் யாரும் போக போக கூடாது என்று மறைமுக உத்தரவுகள் வர.. தீயசக்தி மாவாட்டும் செயலர்கள் தடுக்க துடிக்க.
மன்றம் கண்ட நெஞ்சங்கள் அதை தடுக்க வேறு மாதிரி யோசிக்க...மதுரையில் படம் வெளியாக வேண்டிய திரையரங்கம் கொளுத்த பட, படத்தை சுற்றும் ஆப்ரேட்டர்கள் மிரட்டப்பட மே 10 1973 இரவு முதல் ஒவ்வொரு படம் வெளி வரும் திரை அரங்கம் முன்பும் 10 மடங்கு கூட்டம் விடிய விடிய காத்து நிற்க
அனைவர் கண்களிலும் மண்ணை தூவி எல்லா இடங்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் வெற்றியை நாளை சரித்திரம் சொன்ன பாடல் ஒலிக்க
நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் வெளி முக்கிய வாசல்கள் திறக்க படாமல் பெண்கள் முதல் வாரம் படம் பார்க்க முடியாமல் எறிகுதித்து உள்ளே போகணும்....படம் பார்த்து விட்டு ஏறி குதித்து வெளியே வரணும்....ஒரு காட்சியில் இத்துணை பேர் என்றால் அதை விட பல மடங்கு கூட்டம் நாடு எங்கும் கூட...
அப்படி படம் 46 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த காட்சி டிக்கெட் 40 பைசா இன்னும் ஒன்று 3 ரூபாய் 35 காசுகள் மதிப்பில் பதிவில் பார்வைக்கு....
எம்ஜியார் ஒரு மந்திரசக்தி...மக்கள் சக்தி...நடமாடிய எலெட்ரிக் பவர் ஹௌஸ் ...தொட்டவன் கேடு நினைப்பவன் தூக்கி எரியப்பட்டது வரலாறு....நன்றி
இந்த தொடர் பதிவுகள் தலைவர் அவரே அன்று வந்த பொம்மை சினிமா இதழில் திரை கடல் ஓடியும் திரைப்படம் எடுத்தோம் என்பதில் இருந்து வந்தது.... ஒரு சின்ன ஆர்வத்தில் தொடங்கினேன் ஆதரித்த அத்துணை எம்ஜியார் நெஞ்சங்களுக்கும் பாதம் பணிந்த நன்றிகள். குறைகள் பிழைகள் இருந்தால் மன்னிக்க..... தொடரும்.
விரைவில்.
உங்கள் பேராதவுடன் அடிமை விலங்கை உடைத்து தாயின் பெருமையை உலகுக்கும் வழக்கம் போல் எடுத்து உணர்த்திய வேங்கையன் வீர வரலாறு...தொடரும்.
பின்குறிப்பு....சொல்ல மறந்து விட்டேன் உ.சு.வா புது பாணியில் இறுதி சண்டை காட்சிகள் பனி மலையில் நடப்பது போல் மாற்றி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன...நன்றி....... Thanks...
-
கடந்த ஒரு வாரமாக இயங்காமல்... இன்று மீண்டும் இயங்கும் மையம் இணைய நிர்வாகத்தினருக்கு அனைவரின் சார்பாக நன்றியும்... நல்வாழ்த்துக்கள்...
-
உ.சு.வா பாகம் 10..
படத்தை எடுக்க இந்திய அரசின் அந்நிய செலாவணி துறை அனுமதித்த தொகையை கொண்டு அத்துணை நாடுகளிலும் படம் எடுப்பது சவால்கள் நிறைந்தது...மணியன் அவர்கள் ஒத்துழைப்பு மிகவும் நன்றிக்கடன் செலுத்த கூடியது என்கிறார் எம்ஜியார்.
பாடல் காட்சிகளே சவாலாக இருந்தன.. வாத்தியாரும் மஞ்சுளாவும் அந்த கப் அண்ட் சாசருக்குள்ள உக்கார்ந்து அது சுழலும் வேகத்தில் கூட ஏறி இருந்த மற்ற சுற்றுலா பயணிகளுக்கும் தொந்தரவு செய்யாமல் எடுக்கப்பட்டது சவால்தான்...
அதே போல பன்சாயீ பாடலில் கடலுக்கு அருகில் உள்ள பாலத்தில் போகும் ஒரு மின்சார ரயிலை படம் எடுக்க 2 மணி நேரத்துக்கு மேலே காத்து இருக்க வேண்டி இருந்தது...
தங்கத்தோணியிலே பாடலில் படகில் வாத்தியார் கால்களுக்கு நடுவில் பறந்து செல்லும் விமானம் அடடா இன்றும் நினைத்தால் காட்சி கண் முன் ஓடும்.
இந்த சவால்களுக்கு நடுவில் தமிழகத்தில் என்ன நடக்கிறது அரசியல் சூழ்நிலை எப்படி உள்ளது என்று எதுவும் தெரியாமல் ஏன் என்றால் தமிழ் பத்திரிகைகள் அப்போது அங்கு வருவது இல்லை..ஏர் பிரான்சில் வேலை செய்யும் கோபால் என்பவர் மொத்த பத்திரிகைகளையும் கொண்டு வர ஆர்வமாக படிக்கிறார் பொன்மனம்..
ஒசாகாவில் இருந்து டோக்கியோ செல்லும் வழியில் விமானத்தில் இருந்து பியூஜி எரிமலை புகைந்து கொண்டு இருப்பதை பார்த்து வியக்கிறார் வாத்தியார். இரவு 10 மணி நகருக்குள் தங்கினால் செலவு அதிகம். நகரை விட்டு தூரத்தில் சென்று குறைந்த கட்டணத்தில் தங்குகின்றது நம் குழு.
மறுநாள் அங்கு உள்ள நாயர் கடையில் இந்திய உணவு வகைகள் கிடைக்கும் என்று தெரிந்து நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பாடா நம் ஊரு சாப்பாடு என்று குழு சந்தோசமாக அங்கு செல்ல கடை வாசலில் மிக நீண்ட கியூ வரிசை அய்யோ இதுவும் இப்படியா என்று வரிசையில் நம் வாத்தியார் உள்பட அனைவரும் நிற்க 15 பேர் வெளியே வந்த 30 பேர் இடித்து கொண்டு உள்ளே போக.....சற்று நேரத்தில் உரிமையாளர் அடுத்து எம்ஜியார் குழு உள்ளே வாங்க என்று கூப்பிட அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. வாசல் அருகில் குழு போக அதற்குள் 10 பேர் நுழைய இரண்டு பேருக்கு இடம் இல்லை அங்கு நிற்கும் எம்ஜியார் பண்பு.... பரவாயில்லை நான் பின்னால் சாப்பிடுகிறேன் நீங்க அனைவரும் உட்கார்ந்த இடம் விட்டு நகராமல் சாப்பிடுங்கள் என்று சொல்ல அட்டை பெட்டியில் பரிமாறும் கறி, மீன் குழம்பு, கெட்டி தயிர்..அதுவும் அட்டை பாக்ஸில்.....சுமார் சாப்பாடு.... கடை உரிமையாளர் பையன் வந்து குழுவுடன் பேச அவர் அப்படியே ஜப்பானியர் சாயலில் இருக்க பின்னால் தெரியவருகிறது நம்ம நாட்டு நாயர் அங்கே உள்ள ஜப்பானிய பெண்ணை மணந்து கொண்ட விவகாரம்.. சபாஷ்... நாயரே
அதே போல ஹாங்காக் கடை வீதியில் ஒரு பாலம் ஒரு புறம் இருந்து மறுபுறம் போக....பாலத்தில் இரு புறமும் கண்ணாடி....அங்கு நின்று தலைவர் ஆராய்ச்சி குறிப்பின் அடுத்த பகுதி எங்கே இருக்கு என்று சொல்ல வர அதை அசோகன் கேட்க வரும் நேரத்தில் அப்புறம் என்று தலைவர் சொல்லும் ஸீன் எடுக்க பட்ட இடமும் சிறப்பு... அதுக்கு பக்கத்தில் இருந்த ஹில்டன் ஹோட்டலில் விருந்து கொடுத்தார் வாத்தியார்...
நாளை உலகம் பாடலில் குழு அடைந்த சங்கடங்கள் அனைவரும் பொறுமை காத்த நிகழ்வுகள், இந்திய தூதரக அதிகாரிக்கு நன்றி சொன்ன வாத்தியார்.... நன்றி . உலகம் நாளையும் சுற்றும்... வாழ்க எம்ஜியார் புகழ் நன்றி.......... Thanks...
-
சேர்க்கவில்லை பணத்தை எம் ஜி ஆர்
சேர்த்தார் மக்கள் அன்பை
வாங்கவில்லை மனைகளை எம் ஜி ஆர்
வாங்கினார் மக்கள் மனங்களை எம்ஜிஆர்
சொந்தம் அக்கவில்லை ஊரார் சொத்துகளை எம் ஜி ஆர்
சொந்தம் ஆக்கினார் மக்கள் மனங்களை எம் ஜி ஆர்
ஊழல் செய்யவில்லை எம் ஜி ஆர்
ஊழியம் செய்தார் ஊருக்கு எம் ஜி ஆர்
சொந்தம் ஏதும் இல்லாமல் வந்தார் தமிழகத்துக்கு எம் ஜி ஆர்
மொத்த தமிழ் குடும்பவுமே எங்க வீட்டு பிள்ளை என சொந்தம் கொண்டாடியது எம் ஜி ஆரை இன்று
காலூன்ற ஒரு இடம் இல்லாமல் இருந்த எம் ஜி ஆர்
காவல் தெய்வமாக மாறி எங்கும் நிறைந்தார்
....
வாழ்க எம் ஜி ஆர் புகழ்......... Thanks...
-
#தெய்வத்தின் #பணம்
"ராமுவைக் காப்பாற்றுங்கள்"...
இது 1974 ம் வருடத்திய 'குமுதம்' வார இதழில் வந்த தலைப்பு...
சென்னை மயிலையைச் சேர்ந்த திரு.ராமு என்பவர் இருதயக்கோளாறினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றால் காப்பாற்றி விடலாம் என்பது தான் அந்தச் செய்தியின் கரு.
இதைக்கேள்விபட்ட தேவர் பிலிம்ஸைச் சேர்ந்த கலைஞானம் என்பவர் மயிலாப்பூர் சென்று அவருக்கு உதவுவதாகக் கூறி தேவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
முதல் மாடியிலிருக்கும் தேவரைக்காண இருவரும் படியேறிச்செல்லும் போது, தன் மார்பில் கைவைத்து திடீரென்று உட்கார்ந்து விடுகிறார் ராமு. ஆனால், சிலவிநாடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். தேவரின் முன்னால் சென்று கலைஞானம், ராமுவின் நிலைமையை விளக்குகுறார்...
தேவர், ராமுவிடம் 'அமெரிக்கா செல்ல எவ்வளவு பணம் தேவைப்படும்? எனக்கேட்க, 'ரூ.10000/- தேவைப்படும் என்று ராமு சொல்கிறார்.
' இப்போதைக்கு இந்தா ரூ.5000/-, மீதிப்பணத்தற்கு வேறு யாராவது உதவுகிறார்களா? ன்னு பாரு...அப்படி வேறு யாரும் உதவவில்லையெனில் மீதிப்பணத்தையும் நானே தருகிறேன்...' என்று தேவர் கூறுகிறார்...
ராமு அந்தப் பணத்தை வாங்கிச்சென்று, அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், தேவர் தழுதழுத்த குரலில், கலைஞானத்திடம் இப்படிக் கூறுகிறார்...
"இந்தப் பணம் கூட என்னுடையதல்ல...என் தெய்வத்தினுடையது...." (வாத்தியார்)
வாத்தியார் மேல எந்தளவு பக்தி பாருங்க தேவருக்கு...!
நல்ல எண்ணத்தில் கொடுக்கப்படும் பணமானது நல்ல விஷயங்களுக்காத் தானே சென்றடைந்துவிடுமல்லவா...!!!........... Thanks...
-
தலைவர் விழா வெற்றிபெற இதே வாழ்த்துக்கள் ......
" பாண்டிச்சேரி மாநிலத்தில் பாரதரத்னா
புரட்சி தலைவர் 102ஆம் ஆண்டு பிறந்த
நாள் விழா!!
--------------------------------------------
பார் போற்றும் உத்தமர் பாரதரத்னா புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பிறந்தநாள் விழா ஆகஸ்ட் மாதம் 10-8-2019ஆம் நாள் சனிக்கிழமை பாண்டிச்சேரி காந்தி திடல் கடற்கரையில்
புதுவை எம்ஜிஆர் பேரவை மற்றும் பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவை சார்பில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது!!
விழாவிற்கு அண்ணன் பிரான்ஸ்
Sp முருகு பத்மநாபன் அவர்கள் தலைமை தாங்குகிறார்கள்!!
சிறப்பு அழைப்பாளர்கள் :
உலக எம்ஜிஆர் பேரவை நிர்வாகிகள் :
மனித நேயர் அண்ணன் திரு சைதையார்
அண்ணன் திரு AC சண்முகம்
அண்ணன் திரு ஐசரி கணேஷ்
கலாம் அய்யா அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு பொன்ராஜ்
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன்
மற்றும் முன்னோடிகள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்!!
திரு.நாமக்கல் எம்ஜிஆர் அவர்கள் தலைவர் பாடல்களுக்கு ஆடல்பாடல் நிகழ்ச்சி நடத்துகிறார்!!
பட்டிமன்ற நடுவர் திரு கலக்கல் காங்கேயன் அவர்கள் தலைவர் குறித்துப் பாடல்மன்றம் நடத்துகிறார்!!
இசையரங்கம் உட்பட
இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது!!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த மண்ணில் நமது புரட்சி தலைவரின் புனித விழாவில் கலந்து கொண்டு அனைத்து நிகழ்வினையும் கண்டு மகிழ நமது புரட்சி தலைவரின் பக்தர்கள் அனைவரையும் அலைகடலென பாண்டிச்சேரி நோக்கி வாரீர்! வாரீர் என இருகரம் கூப்பி விழாக்குழுவினர் சார்பில் முகநூல் வழியே அன்போடு அழைக்கின்றோம்!!
அனைவரும் வாரீர்!!
ஆர்ப்பரிக்கும் பாண்டிச்சேரி கடல்
அலைகளை மிஞ்சும் விதத்தில்
நமது புரட்சி தலைவரின்
பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியட்டும்!!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்!!
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!!
என்று கவிதை எழுதிய பாரதிதாசன் பிறந்த பாண்டிச்சேரி தினறும் அளவில் அனைவரும் ஆங்கே சங்கமிப்போம்!!
இடம் : பாண்டிச்சேரி கடற்கரை காந்தி
சிலை அருகில்,
நேரம் : மாலை 4 மணியில் இருந்து
இரவு 9:30 வரை,
நாள்: 10-8-2019 சனிக்கிழமை......... Thanks...
-
, பதிவிறக்கம் செய்யப்பட்டது. இது கட்டுரை அல்ல. 1972ம் ஆண்டு நடந்த அக்டோபர் புரட்சியில் ஒரு உத்தமத் தலைவனுக்காக,அவருடைய உண்மைத்தொண்டர்கள் நிகழ்த்திய உணர்ச்சிப்போராட்டம். இதைப் படிக்கும்போது நீங்களும் உணர்ச்சிவசப்படப் போவது உண்மை.
போராட்டமே வாழ்க்கை!
”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போரட்டமாகவே இருக்கிறது!”
இப்படிச் சொன்னவர், புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள்தான்!
இதை அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் சர்வ சாதாரணமாக, பேச்சோடு பேச்சாகச் சொன்னார். ஆனால், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள்தாம் எத்தனை எத்தனை!
‘எம்.ஜி.ஆர்!’ என்று சொன்னாலே இந்தியா முழுவதிலும், – ஏன், உலகம் முழுவதிலும் – உள்ள தமிழர்கள் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் நிலையையும் பிரபலத்தையும் பெரும்புகழையும் 1972 ஆம் ஆண்டில் அவர் எய்தியிருந்தார். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு தம் வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் ஒன்றா, இரண்டா?
அந்தப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு அவர் ஆற்றிய சாகசங்கள் எத்தனை! சந்தித்த சோதனைகள் எத்தனை!
அந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் நீந்திய நெருப்பு ஆறுகள் எத்தனை!
அவர் ஏறி இறங்கிய இமயக் கொடுமுடிகள் எத்தனை! அவர் தாண்டி வந்த சஹாராப் பாலைவனங்கள் தாம் எத்தனை! எத்தனை!
ஏழு வயதிற்குள் எத்தனை நாள் வறுமைத் தீயில் வாடி இருக்கிறார்!
கதாநாயகன் ஆவதற்குள் பட்ட துன்பங்கள்
ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்து, நடிப்புக் கலையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டு ஒரு நாடறிந்த நடிகராகப் பரிணாம வளர்ச்சி பெறுவதற்குள் அவர் பட்ட அல்லல்கள் எத்தனை! ஆசிரியர்களிடம் பெற்ற பிரம்படிகள் எத்தனை!
நாடக உலகிலிருந்து திரைப்பட உலகில் புகுவதற்காக அவர் நடந்து நடந்து தேய்ந்த செருப்புகள் எத்தனை!
‘சதி லீலாவதி’ என்னும் படத்தில் ஒரு சாதாரண வேடத்தில் அறிமுகமாகி, ‘ராஜகுமாரி’ என்னும் படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடிப்பதற்குள் இடையில் அவர் அடைந்த இன்னல்கள் எத்தனை! சந்தித்த ஏற்ற இறக்கங்கள் எத்தனை!
ராஜகுமாரி படத்தை அடுத்து பல படங்களில் சரித்திர காலக் கதாநாயகன் வேடம் தாங்கியே நடித்து வந்த அவரது திரைஉலக வாழ்க்கை, சமூகப்படங்கள் தயாராகி மக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கிய ஒரு கால கட்டத்தோடு முடித்துவிட்டதாக ஆரூடம் சொன்னவர்கள் எத்தனை பேர்!
சமூகப்பட நாயகனாகவும் தம்மால் சிறப்பாக நடிக்க முடியும்; எந்த வேடத்திலும் தம்மால் ஒளிவீசிப் பிரகாசிக்க முடியும் என்று அவர் நிரூபித்ததை நாடறியும். இன்று அது வரலாறு.
ஆனால் அப்படி நிரூபிப்பதற்குள் அவர் சந்தித்த சோதனைகள் எத்தனை!
ஆரம்ப காலத்தில் கதர் வேட்டி, கதர் சட்டை அணிந்து சிறிய ருத்ராட்ச மாலையைக் கழுத்தில் தரித்துக் காங்கிரஸ்காரராக இருந்தார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்போது அவர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து, அவரது அறிவார்ந்த பேச்சாலும், ஆணித்தரமான எழுத்தாலும் கவரப்பட்டு, அவர் காட்டிய மெய்யன்பால் திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாய் உழைத்தார். உயர்ந்தார். அண்ணாவின் ‘இதயக்கனி’ யாகவும் மாறினார்.
ஆனால் அந்த இதயக்கனியை கன்றிவிடும்படி கல்லால் அடித்தவர்களும், சொல்லால் அடித்தவர்களும் எத்தனை பேர்! அவர்களை எதிர்த்துக் கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை.
ஊரறிந்த நடிகர் ஆகி, ஒப்பற்ற ‘புரட்சி நடிகர்’ ‘மக்கள் திலகம்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்ட காலத்திலுங்கூட அவர் சென்ற வழி மலர் தூவப்பட்ட பாதையாகவா இருந்தது? கல்லும், முள்ளும் நிரம்பி அவை அவர் காலைக் குத்திக் கிழித்துக் குருதியைக் கொட்டச் செய்தனவே!
கால் முறிந்தாலும் மனம் முரியாதவர்!
1959 ஆம ஆண்டில், தஞ்சை மாவட்டம் சீர்காழியில் ‘இன்பக்கனவு’ என்னும் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சண்டைக்காட்சியில் அவர் கால் எலும்பு முறிந்தது. அதனால் அவர் படுத்த படுக்கையானார். அந்த நிலையலேயே சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சில மாதங்கள் ஓய்வு பெறவும் நேர்ந்தது.
அப்பொழுது அவரது ‘அன்பார்ந்த’ எதிரிகள் என்ன சொன்னார்கள்? ‘முடிந்தது எம்.ஜி.ஆரின் கதை! இனிமேல் அவரால் முடியாது! ஒடிந்துவிட்ட அவர் கால் இனிமேல் ஒன்றுகூடாது. முறிந்த எலும்பு ஒன்றுகூடி அவர் எழுந்து நடந்தாலும் முன்போல அவரால் சண்டைக்காட்சிகளில் ஓடி ஆடி நடிக்க முடியாது” என்றுதான் கூறினார்கள்.
சண்டைக்காட்சிகளில் எம்.ஜி.ஆரின் அருகில் நிற்க முடியாதவர்களெல்லாம் அதை அறிந்து மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள்.
ஆனால், நடந்தது வேறு. ஆம்; மீண்டும் தமிழ்த்திரை உலகில் மிகச்சிறந்து நடிகராகத் தலை நிமிர்ந்து நின்றார்.
குண்டடிப் பட்டாலும் குன்றாதவர்
1967 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். குண்டு பாய்ந்த நிலையில் எம்.ஜி.ஆர். இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதை அறிந்து நாடே திடுக்கிட்டது. தாய்க்குலம் அழுது புலம்பியது. இளைஞர் கூட்டம் பெருந்துன்பமுற்றது.
அப்பொழுதும் அவர் விரோதிகள் என்ன சொன்னார்கள்?
”முடிந்தது எம்.ஜி.ஆர் கதை இனி மேல் அவர் பிழைக்கமாட்டார்” என்று சிலர் அற்ப மகிழ்ச்சி கொண்டார்கள்.
மறுநாள் அந்தச் செய்தி வந்தது ”எம்.ஜி.ஆரின் தொண்டைக்கருகில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது; அவர் உயிருக்கு ஆபத்தில்லை! என்பதே அது.
அப்போதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்?
”பிழைத்து எழுந்தாலும் அவரால் முன்போலப் பேச முடியாது; பேச முடியாவிட்டால் எப்படி நடிக்க முடியும்?” என்று கூறி தங்கள் குரூரமான மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்!
எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டுச்சிதறல் ஓர் ஓராமாய் ஒதுங்கிவிட்டது. அவர் தும்மியபோது தானாகவே அது வெளியே வந்துவிட்டது. இப்படி மறுபிறவியெடுத்த எம்.ஜி.ஆரின் தொண்டைப்புண் ஆறே மாத்த்தில் ஆறியது. அவரால் பேச முடிந்தது. ஆனால், குரல், குழந்தைகள் பேசும் மழலைபோல் சற்றுத் தெளிவின்றி அமைந்தது; ஆனால், அவரது கோடான கோடி ரசிகர்களும், உடன் பிறப்புக்களும் அக்குறையை எண்ணி அவர்மீது கொண்டிருந்த அன்பிலிருந்து சற்றும் மாறவில்லை. அது கண்டு எதிரிகள் வியப்பால் செயலற்றனர்.
1972 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுத் தூக்கி எறியப்பட்டார்.
அவர் செய்த தவறு என்ன? கணக்குக் கேட்டார். ஆம், கட்சிக்கணக்கைக் கேட்டார்; சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்று கணக்கு காட்ட வேண்டும் என்று கேட்டார்.
அதனால் கட்சித் தலைமை சீறியது. அவரைக் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தது. பின்னர் நிரந்தரமாகவே நீக்கிவிட்டதாகவும் அறிவித்தது!
அப்பொழுதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்? ”இன்றோடு முடிந்தது எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வு” என்று கொக்கரித்தார்கள்.
‘கட்சியால் எம்.ஜி.ஆர் வளர்ந்தாரா, எம்.ஜி.ஆரால் கட்சி வளர்ந்ததா? என்று பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் ஆராய்ச்சி நடத்தின.
ஆனால், எம்.ஜி.ஆரின் நிலை என்ன?
எம்.ஜி.ஆர். மீண்டும் இமயம்போல் எழுந்து நின்றார்.
புரட்சி நடிகர் புரட்சித் தலைவராக மாறினார். அண்ணாவின் பெயரால் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஐந்தே ஆண்டுகளில் கடுமையான அடக்குமுறைகளையும் மீறி, கட்சியை வளர்த்தார். 1987இல் தமிழகத்தின் ஆட்சியிலும் அமர்ந்தார்.
ஆனால், அந்த ஐந்தாண்டுகளுக்குள் அவர் சந்தித்த போராட்டங்கள்தான் எத்தனை.
முதல் போராட்டம்
1967 ஆம் ஆண்டில், தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு வித்தாக அமைந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆவார். ஆம்; நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் வீட்டினுள் புகுந்து அவரைத் தம் கைத்துப்பாக்கியால் சுட்டார், குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார்.
அப்போது கழுத்தில் கட்டிடப்பட்ட நிலையில் மக்கள் திலகத்தைப் புகைப்படமெடுத்து சுவரொட்டிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதிலும் ஒட்டச் செய்தது.
தமிழக மக்களிடம் ஒரு வகையான அனுதாப அலையை உருவாக்கி மக்களிடம் வாக்கைப் பெறக் கட்சித் தலைவர்கள் சிலர் சொன்ன யோசனை இது.
அதிக வாக்கு யாரால் கிட்டியது?
அதுவரை தி.மு.க.வுக்குப் பெருமளவில் வாக்களிக்காத தாய்க்குலம், குண்டடிப்பட்டுக் கட்டிடப்பட்ட நிலையில் இருந்த புரட்சித் தலைவரின் தோற்றத்தைப் பார்த்து முதன் முறையாக தி.மு.க.வுக்கு வாக்களித்தது. அதனால் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோற்றகடிக்கப்பட்டுத் தி.மு.க ஆட்சியில் அமர முடிந்துது.
ஆக, எதிர்க்கட்சியாய் இருந்த தி.மு.க.வை ஆளுங்கட்சியாக ஆக்கியது புரட்சித்தலைவர் மீது தமிழ்நாட்டுத் தாய்க்குலமும், இளைஞர்களும் கொண்டிருந்த அபரிமிதமான அன்பு என்று சொன்னால் அதிக மிகையில்லை.
தி.மு.க.வுக்கு மக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை அளிப்பார்கள் என்று கனவு கூட காணவில்லை.
தலைவரின் தவறான கணிப்பு!
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா 1969 – இல் நோயுற்று மரணமடைந்தார். அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி அண்ணாவைப் போல் எம்.ஜி.ஆரிடம் சுமூக நட்புக் கொள்ளவில்லை. முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் தன்னேரில்லாத் தலைவராக உயர்த்திக்கொண்டார். அதுமட்டுமா? அப்போது அகில இந்தியக் கட்சியான காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றமும் அவருக்குப் பயனுள்ளதாய் அமைந்தது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி ஒரு அணியிலும், பெருந்தலைவர் இன்னோர் அணியிலும் பிரிந்து நின்றனர். அது கலைஞருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அவர் பிரதமர் இந்திராகாந்தியின் அணியோடு தேர்தல் உறவை ஏற்படுத்திக்கொண்டார். 1971 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தி, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். அதனால் மீண்டும் முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு முன்னிலும் அதிகமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாகத் தி.மு.க. வின் எல்லா மட்டங்களிலும் கலைஞரின் செல்வாக்கைப் பெருக்கிக்கொண்டார். ஆட்சியும் தன் கையில், கட்சியும் தன் கையில் என்னும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரின் உதவி தமக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார் கலைஞர்.
ஆட்சியின் சரிவுக்கு அடித்தளங்கள்
இதற்கிடையில் தி.மு.கழக ஆட்சியைப்பற்றிய தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவின. மேற்சொன்ன போக்கு அந்த நேரத்தில் எம்.ஜி .ஆருக்கு வேதனை அளிப்பதாய் இருந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களின் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மன்றங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன. கட்சி அமைப்பின் கீழ் பதிவு செய்துகொண்டு, கட்சியின் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர் மன்றங்கள் செயல்படவேண்டும் என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
முதலில் ஊமை யுத்தமாகத் தொடங்கி ஊர்தோறும் ஓசையில்லாமல் பரவி வந்த இந்தப் பனிப்போர், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படம் வெளிவந்ததும், பகிரங்கமாய் வெடித்தது.
நாடு முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர்ள். புரட்சித்தலைவருக்குப் புகார் கடிதங்களை அனுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றங்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்த நடவடிக்கைகள் புரட்சித்தலைவரை மிகவும் வேதனைப்படுத்தின.
இந்நிலையில் தி.மு.கழக அரசு பூரண மது விலக்குக் கொள்கையை அடியோடு கைவிட்டது. அதாவது மது விலக்குச் சட்டம் இரத்து ஆகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இதைப் பகிரங்கமாய் எதிர்த்தனர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக் கட்டுப்பாடு கருதி தி.மு.கழகப் பொதுக்குழுவில் மதுவிலக்குச் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அத்தீர்மானம் தாய்க்குலத்திற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்று கருதித் தனிப்பட்ட முறையில் அதனை எதிர்த்தார். அதைக் கலைஞரிடமும் எடுத்துரைத்தார். அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை.
அடுத்து, மத்திய அரசை ஆளுகின்ற தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் போக்கு பிடிக்காத்தால் திடீரென்று ஒருநாள் ”உறவு முறிந்தது” என்று கருணாநிதி அறிவித்தார்.
மேற்குறித்த நடவடிக்கைகள் கழக ஆட்சிக்குப் பிற்காலத்தில் பெரிய இடையூற்றை ஏற்படுத்தக்கூடும் என்பது எம்.ஜி. ஆரின் கணிப்பாய் இருந்தது.
அந்த அக்டோபர் 10 – ஆம் நாள்!
இத்தகைய சூழ்நிலையில், 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 – ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;
”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.
கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்ப்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப பணியாய் இருக்கும்.
அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!”
கணக்குக் கேட்டால் கட்சியை விட்டுச் செல் என்பதா?
எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கழகத்தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது
உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் கலைஞருக்குக் கட்டுபட்டவர்கள்தாம் . இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப்போன்ற சிலரைத் தவிர, அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி. ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 10 – ம் நாளாகும்.
தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய மந்தகாசப் புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார். சற்று நேரத்தில் மேலும் பத்திரிகையாளர் பலரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் எம்.ஜி. ஆரை விலக்கியது குறித்து மிகுந்த வருத்தமுற்றனர். அவர்கள் முகங்களெல்லாம் வாட்டமுற்றிருந்தன. அவர்களை யெல்லாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.
”இன்றுதான் நான் மிகவும் நிம்மதியடைகிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாருங்கள். சாப்பிடலாம்!” என்று எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தார்.
அவர்களுள் சிலர் தாங்கள் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டதாக்க் கூறினார்கள்.
”பரவாயில்லை. இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் இனிப்பு வழங்க விரும்புகிறேன். கொஞ்சம் பாயாசமாவது சாப்பிடுங்கள்” என்ற கூறி எல்லாரையும் அழைத்துச் சென்றார். எல்லாருக்கும் பாயசம் வழங்கி தானும் பாயசம் சாப்பிட்டார்.
அன்றுவரை, அந்த நிமிடம்வரை, அண்ணாவின் பெயரால் தாம் தனிக்கட்சி அமைப்போம்; அதற்குக் கழக உடன் பிறப்புகளும், தமிழக மக்களும் எதிர்பாராத வகையில் பேராதரவை அளிப்பார்கள், அதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். அந்தப் புதிய வரலாற்றின் நாயகனாகத் தாம் ஆவோம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.
கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் கழகத் தலைமை தன்னையறியாமலேயே ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்துவிட்டது.
இனி, அந்த அக்டோபர் 10 – ஆம் தேதிக்குப் பின்னர் அறிவோம்.
புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து தறகாலிகமாக நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.
அடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதிலும் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
அந்த சுவரொட்டிகளுள் பாதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் கையாலேயே எழுதப்பட்டவையாகும். மீதி உள்ளதை ஆங்காங்கே இருந்த சிறுசிறு அச்சகங்களில் இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டவையாகவும் பெரிய அச்சகங்களில் அடிக்கப்பட்டு, ஈரம் காய்வதற்கு முன்னரே எடுத்து வரப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளாயும் இருந்தன.
நெஞ்சில் எழுந்த நினைவலைகள்
சென்னை முதல கன்னியாகுமரி வரையிலும் உள்ள கழகத் தொண்டர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கினார்கள். யாரும் அவர்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; தூண்டிவிடவில்லை.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக பொங்கி எழுந்து களத்தில் குதித்த கழகச் செயல் வீரர்கள் அடுத்த ஒரு வாரகாலம் வரை தம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
தம் பொருட்டுத் தம் தோழர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நிலையில் எம்.ஜி.ஆர் தம் ராமாவரம் தோட்டத்தில் தம் நண்பர்களோடு அமர்ந்து அடுத்துச் செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.
அப்போது அவர் உள்ளத்தில் சில பழைய நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன.
அறிஞர் அண்ணாவைத் தாம் சந்தித்தது.
முதன்முதலாகச் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்ற அண்ணாவின் ஆணைப்படி அல்லும் பகலும் தாம் உழைத்தது;
அண்ணா தம்மைத் ‘தம் இதயக்கனி’ என்று சிறப்பித்தது.
சில முடிவுகளில் ‘எம்.ஜி.ஆரின் கருத்து என்ன’ என்று கேட்டு அண்ணா செயல்பட்டது; இக்கட்டான சூழ்நிலையில் கலைஞரை முதல்வராக்கியது.
கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கத் தாம் உதவியது. அதன் பின்னர் கழக அரசு அண்ணாவின் பாதையை விட்டு விலகிச் சென்றதும், அதைத் தொடர்ந்து நடந்த சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் முதலியனவெல்லாம் உள்ளத்திரையில் அடுத்தடுத்து எழுந்தன.
நெருங்கிய நண்பர்களெல்லாம் தனி இயக்கம் தொடங்கியே தீரவேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர் மன்ற மறவர்களோ தாங்கள் இனி எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தானைத் தலைவனின் கட்டளையை எதிர்பார்த்திருந்தனர். எம்.ஜி.ஆரோ அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் பிளவுபடுவதா? அதற்குத் தாமே காரணமாய் இருக்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கழகத் தலைமைக்கும், புரட்சித் தலைவருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
அருமை நண்பர்கள் எங்கே?
வழ்க்கமாகப் பொழுது விடிவதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். இல்லத்தின் முன்பு அவர் முகதரிசனம் காணவும் உதவி பெறவும், அரசியல் ஆலோசனை பெறவும், கூட்டம் கூடியிருக்கும். அன்று எஸ்.எம். துரைராஜ், கே.ஏ.கிருஷ்ணசாமி,அனகாபுத்தூர் இராமலிங்கம், ஆளந்தூர் மோகனரங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர, வேறு எவரும் வரவில்லை. இது எம்.ஜி. ஆருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
என்ன ஆனார்கள் என் நண்பர்கள்? என்னிடம் உதவி பெற்றவர்கள், என் உதவியால் பதவி பெற்றவர்கள் எங்கே? நேரில் வர இயலாவிட்டாலும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கலாமே! பதவியில் இருக்கும் கருணாநிதியை எதிர்க்க அஞ்சுகிறார்களோ? அவர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று பயப்படுகிறார்களோ? என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்.
ஆனால், அரசியலைப் பிழைப்பாக்க் கொண்ட சிலர் தான் அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளாய் இருந்தார்களே தவிர, சாதாரணத் தொண்டர்கள் அப்படி இருக்கவில்லை.
தமிழகம் முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்றத் தோழர்கள் தங்களுக்குத் தாங்களே தளபதிகளாக மாறினர். புரட்சித் தலைவரை விலக்கிய தி.மு.க. தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கொடிகளை இறக்கினர். ‘தாமரை’ உருவம் பொறித்த கொடிகளை ஏற்றினர். ஓர் ஊரில் நிகழ்ந்திருந்த இந்த நிகழ்ச்சி பல ஊர்களுக்கும் பரவியது. ஆங்காங்கு உள்ள தோழர்கள் தாமரைக் கொடிகளை ஏற்றி வைத்துப் ‘புரட்சித் தலைவர் வாழ்க!’ என்று முழக்கமிட்டார்கள்.
நான்காம் நாளன்று பற்பல ஊர்களிலிருந்து, தோழர்கள் லாரி, வேன், பஸ், இரயில் எனப் பல வாகனங்களில் ஏறி சென்னையை நோக்கிப் படையெடுத்தது போலச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள்; சமுத்திரமாகப் பெருகினார்கள்.
அலை கடல் எழுந்ததோ?
ஒரே நாளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை நகரத்தில் திரண்டுவிட்டனர். அவர்களுள் பெரும்பாலானோர் புரட்சித் தலைவரின் வீடு எங்கே இருக்கிறது என்பதை அறியமாட்டார்கள். அவர்கள் சென்னை அவ்வை சண்முகம் சாலையிலிருந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்தை அறிவார்கள்; சத்யா ஸ்டுடியோவை அறிவார்கள்.
எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் எம்.ஜி.ஆர் இல்லை என அறிந்ததும் அலை அலையாகத் திரண்டு தோழர்கள், அடுத்து சத்யா ஸ்டுடியோவுக்குச் சென்று, சாலைகளில் குழுமினார்கள்.
காலை ஏழு மணிமுதல் திரளத் தொடங்கிய கூட்டம் எட்டு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காமல் பெருகியது; அடையாறு சந்திப்பு, இராஜா அண்ணாமலைபுரம், கேசவப் பெருமாளபுரம், கிரீன்வேஸ் சாலை, ராபர்ட்சன் பேட்டை, நாராயணசாமித்தோட்டம், மந்தைவெளி போன்ற பகுதிகளிலெல்லாம் பரவி மகாசமுத்திரம்போல விரிந்துகிடந்தது- போக்குவரத்து நிலை குலைந்துவிட்டது!.
”எங்கே மக்கள் தலைவர்? பொன்மனச் செம்மல் எங்கே? புரட்சித் தலைவரின் முகத்தைக் காணாமல், அவருடைய புன்சிரிப்பைப் பார்க்காமல், அவருடைய குரலைக் கேட்காமல்,நாங்கள் போக மாட்டோம், போகமாட்டோம்!” என்று அவர்கள் முழங்கினார்கள்.
சத்யா ஸ்டுடியோ நிர்வாகி பத்மனாபன் கூட்டத்தைப் பார்த்துச் செயலற்றவரானார். ”புரட்சித் தலைவர் இங்கே இல்லை!’ என்று அவர் கூறினார். ஆனால், பொங்குமாங் கடலெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் கலையவில்லை.
”தலைவரை வரச்சொல்லு! தலைவரை வரச் சொல்லு!” என்று பெரும் முழக்கமிட்டது.
உடனே உள்ளே சென்ற பத்மநாபன் ராமாவரம் தோட்டத்திற்குத் தொலைபேசியில் செய்தியைக் கூறினார்.
”இன்னும் அரை மணி நேரத்திற்குள் தலைவர் இங்கே வந்து சேரவில்லை யென்றால் அவர்கள் சத்யா ஸ்டுடியோவுக்குள் புகுந்துவிடுவார்கள் தலைவரை உடனே வரச்சொல்லுங்கள்!” என்ற தொலைபேசியில் கூறினார் பத்மநாபன்.
செய்தியறிந்ததும் புரட்சித் தலைவர் சில நண்பர்களுடன் புறப்பட்டுக் காரில் விரைந்து வந்தார்.
புரட்சித்தலைவர் கிண்டி கவர்னர் மாளிகையை நெருங்கும்பொழுதே வழியெல்லாம் தோழர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து. அவருடைய காரைக் கண்டதும் ”புரட்சித்தலைவர் வாழ்க! பொன்மனச்செம்மல் வாழ்க!” என்று விண்ணதிரத் தோழர்கள் முழங்கினர்.
புரட்சித் தலைவர் அந்தத் தோழர்களைக் கடந்து அடையாறு முனைக்கு வந்து சேருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. தேர் அசைவது போல அவருடைய கார் மிக மெதுவாகவே ஊர்ந்து செல்ல நேரிட்டது.
அன்பு வெள்ளத்தில் எம்.ஜி.ஆர்!
அடையாறு சந்திப்பை அடைந்தபோதே அதற்கு மேல் எம்.ஜி.ஆர் கார் போகவே முடியாது என்னும் நிலை நின்ற மக்கள் வெள்ளத்திற்குள் போய் நின்றார். அப்பொழுது அங்கே கூடியிருந்த தொண்டர்களின் உணர்ச்சியும், உற்சாகமும் கட்டு மீறின. எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். அப்படி முன்னேறிய தோழர்கள் எல்லாரும் சேர்ந்து நெருக்கித் துன்புறச் செய்து விடுவார்களோ என்று அவரோடு வந்த நண்பர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.
ஆனால், புரட்சித் தலைவரோ, சற்றும் அஞ்சாமல் தொண்டர்களின் அன்பினில் திளைத்தார். தமக்கே உரிய வீரசாகசங்களைப் புரிந்து கீழே இறங்கி நின்றார். தம்மை நெருங்கிய தொண்டர்களைப் பார்த்து, ‘இனிமேல் நானும் உங்களோடு நடந்தே வருகிறேன். வாருங்கள் போகலாம்!” என்றூ கூறி விட்டுப் புறப்பட்டார்.
ஆனால், எம்.ஜி.ஆர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்த தொண்டர்கள் அவரை நடக்க விடுவார்களா? அவரைத் தம் தோளில் தூக்கிக்கொண்டனர். அதற்குதப் பின்னர் அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலடசக்கண்க்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.
அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது; ஆம்; செல்லும் வழியெல்லாம் மக்கள். கால் வைக்ககூட இடமில்லாத அளவுக்கு எல்லாத் திக்குகளிலும் மக்கள். எள விழவும் இடமற்ற அந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து முன்னேறிச செல்வது இயலாத காரியமாகவே இருந்தது.
எம்.ஜி.ஆரைத் தொண்டர்கள் தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள் என்றாலும் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இடம் வேண்டுமல்லவா? நெருக்கியடித்து நினுற தொண்டர்கள் வழிவிட்டால்தானே? அவர்கள் வழிவிட அங்கே துளி இடமாவது காலியாக இருந்தால்தானே?
எப்படியோ ஒரு வழியாக புரட்சித்தலைவர் சத்யா ஸ்டுடியோ வாசலை அடைந்தார்.
தொண்டர்களின் உணர்வுகள் வடியட்டும் என்று காத்திருந்த புரட்சித்தலைவர் பின்னர் அவர்களை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தினார்.
‘மக்கள் யார் பக்கம்’ என்று அதுவரை மருகிக் கொண்டிருந்த அந்த மக்கள் திலகம், தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்த மக்கள் கடலைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.
நாங்கள் உங்கள் பின் இருப்போம்!
அவர்களிடையே சில நிமிடங்கள் பேசிய அவர் அடுத்து தாம் என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு கோடு காட்டிவிட்டு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ”நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.
அப்பொழுதும் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மன்ற மறவர்களும், பொதுமக்களும், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.
அவர்கள் கோரிக்கையை புன்னகைத்ததும்ப வரவேற்றார், புரட்சித் தலைவர். பின்பு அவர் , ”ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மக்கள் கருத்தை அறிந்து கொண்டு உங்கள் கருத்துப்படி செயல்படுவேன்” என்று உறுதியளித்தார்.
கருத்தறியும் சுற்றுப்பயணம்
எம்.ஜி.ஆர் தாம் கூறியபடியே மறுநாளே பொது மக்களின் கருத்தை அறியும் தம சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.
ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும்.
அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர். அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னறிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.
பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.
அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிர்க்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப்பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.
மாலை 5 மணி?............. Thanks...
-
புகழ் வெற்றி சாதனை
எம் ஜி ஆர்
இந்த மூன்று எழுத்தை வென்றவரும் இல்லை
இனி வெல்ல போவோரும் இல்லை
நினைத்ததை முடிப்பவர் எம் ஜி ஆர்
மற்றவர் நினைக்கும் முன் கொடுப்பவர் எம் ஜி ஆர்
கிள்ளி கொடுக்கும் மனம் இலலா மனிதர்கள் உள்ள உலகில் அள்ளி கொடுத்த எட்டாவது வள்ளல் எம் .ஜி .ஆர் .,புகழ் எவருக்கும் எட்டா புகழ்
வாழ்க எம். ஜி .ஆர் .,புகழ்.......... Thanks.....
-
-
-
1947-இல் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற தமிழ்திரைப்படங்கள் மக்களிடையே காலனிய ஆதிக்க எதிர்ப்பு உணர்வுகளை தூண்டின. 1931 ஆம் ஆண்டு வெளிவந்த முழுநீள பேசும் படமான காளிதாஸில் தேசிய தலைவர் காந்தி பெயரும் தேசிய முழக்கம் வந்தே மாதரமும் பயன்படுத்தப்பட்டன.
1937 ஆம் ஆண்டு வெளியான “சதி அனுசுயா” வில் அனுசுயா கைராட்டையோடு திரையில் தோன்றினார். 1936 ஆன் ஆண்டு வெளிவந்த “நவீன சாரங்க தாரா’ திரைப்படத்தில் கொடுங்கோல் மன்னனுக்கு எதிராக போராடும் மக்கள் காந்தி குல்லா அணிந்திருந்தனர்.
திரை அரங்குகள் நகர்புறங்களிலேயே இருந்ததனால், ஊரக மக்கள் திரைப்படங்களின் தாக்கத்துக்கு ஆட்படவில்லை. இந்திய விடுதலைக்குப்பின் ஊரக பகுதிகள் மின்மயமாக்கப்பட்டவுடன், திரைப்படம் மக்களுக்கு சென்று சேர ஆரம்பித்தது. இச்சூழலில் திமுக திரைப்படங்களை அரசியல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொண்டது.
திரைப்பட ரீதியிலான அரசியல் பரப்புரைகள் மூன்று வழிகளில் நிகழ்ந்தது எனலாம்.
நேரடியாக திரைப்பட வசனங்கள் வாயிலாக அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள்...
நேரடி அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள் முதல்வகை. தி.மு.கவின் வெளிப்படையான பரப்புரை படங்களான நல்லதம்பி(1949), வேலைக்காரி( 1949) மந்திரிகுமாரி(1950), மர்மயோகி (1951), சர்வாதிகாரி (1951) பராசக்தி(1952) சொர்க்கவாசல், (1954) நாடோடி மன்னன் (1958) மற்றும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959) ஆகியன.
திரைப்படங்களின் வெற்றிவிழா கூட்டங்களில் அரசியல் பிரச்சார உத்தி பின்பற்றப்பட்ட திரைப்படங்கள்...
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடிமன்னன் திரைப்படம் 100 நாட்களை தொட்ட பொழுது தி.மு.க அந்நிகழ்வை கொண்டாட வண்ணமயமான பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தியது. அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை முதலிய தி.மு.க தலைவர்கள் உரையாற்றினார்கள். கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் திரைப்படம் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி தி.மு.க என காட்டவே தயாரிக்கப்பட்டது என்றார்.
1947-இல் வெளியான “ராஜகுமாரி” படத்தில் நாயகன் கருப்புச் சட்டையில் தோன்றியது தி.க தொண்டர்களை பரவசப்படுத்தியது. 1957-இல் வெளியான சக்கரவர்த்தி திருமகன் படத்தில் “உதயசூரியன்” என பெயர் தாங்கி நடித்தார்.
1963-இல் வெளியான “எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்கு “காஞ்சித்தலைவன் “ என பெயரிடப்பட்டது. இது காஞ்சியில் தோன்றிய அண்ணாவை குறிக்கும் வகையில் இத்தலைப்புச் சூட்டப்பட்டது.
1968-இல் வெளியான “புதியபூமியில்” கதிரவன் என சூரியன் பெயரைத் தாங்கி நடித்தார்.
பாடல்கள் வழியாக மட்டும் அரசியல் பிரச்சாரம் செய்த திரைப்படங்கள்...
பாடல் வரிகளிலும் எம்.ஜி.ஆர் அண்ணா புகழ் பாடினார். இதயக்கனி படத்தில் வரும் பாடல் வரிகள்;
“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
“படியரிசி கிடைக்கிற காலத்திலே – நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே – நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே – நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே..”
என்ற ‘ஒளிவிளக்கு ‘ (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி (4.8 கிலோ) அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும் திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.
” வாங்கைய்யா வாத்தியாரய்யா
அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!
”பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.”
”கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க – இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க…” ( நம்நாடு – 1969)
இந்த ‘நம்நாடு’ படம் மாமூல் எம்.ஜி.ஆர். •பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரையை குறித்தார்.. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் ‘துரை’ என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சில ‘சுருக்’ வசனங்களும் உண்டு
” பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க.”
” யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. ”
” குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொல்லிட்டு
போயிடறாரு ” (‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜர் அடிக்கடி சொல்வாராம்)
முதலமைச்சராக இருந்த அண்ணா, நோய்வாய்பட்டு 1969 பிப்ரவரி 3ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ‘ பதவி நாற்காலிக்காக திமுகவில் அடிபிடி நடக்கும். குழப்பம் வரும். தலைவனை பறிகொடுத்தக் கட்சி காணாமல் போய் விடும் ‘ என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமூகமாக கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக 10-2-1969ல் பதவியேற்றார். இந்த விஷயத்தில் எதிரிகளுக்கு மூக்குடைப்பு ஏற்பட்டு தனது ஆருயிர் நண்பர் மு.க. முதலமைச்சரான மகிழ்ச்சியை எம்.ஜி.ஆர். 1970ல் வெளியான ‘எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்.
எம்.ஜி.ஆர். 1967ல், தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் பிழைத்ததை சுட்டிக் காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியபடி தொடங்கும் ” நான் செத்து பொழச்சவன்டா. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா…” என்ற பாடல் தான் அது.
“ வாழை போல வெட்ட வெட்ட முளைச்சி
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா;
வந்தால் தெரியும் சேதியடா
“சந்தனப் பெட்டியில் உறங்கிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்கிறார்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டு – அண்ணன்
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு.
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்தை
அழகுத் தமிழில் சொல்லிச் சொல்லிக் கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா; அதனால் தோல்வியில்லையடா”
ஓடும் ரயிலை வழிமறிச்சு
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது ”
அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆருக்கு முக்கிய பங்கிருந்ததாம். முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரை ஓரம்கட்டி மு.கருணாநிதி ஜெயிக்க எம்.ஜி.ஆர். பெரிதும் உதவி செய்தாரென தகவல் உண்டு. 1970ல் எம்.ஜி.ஆரை கட்சியின் பொருளாளராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.
” சூரியன் உதிச்சதுங்க…”
இங்கே காரிருள் மறஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க
இனி சரியா பொகுமுங்க
என்ற எம்.ஜி.ஆர் பாடல் 1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.
காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.
முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
(எம்.ஜி.ஆரை சுட்டதாக நடிகர் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்த சம்பவத்துக்கு சினிமாத் தொழில் தகராறு என்று ஒரு பக்கமும்; இல்லையில்லை உண்மையில் அரசியல் பின்னணி இதில் மறைந்திருக்கிறதென்று இன்னொரு பக்கமும் காரசார வதந்திகள், ஊகங்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் அடங்கியது என்பது வேறு விஷயம்)
ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றி விட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, ‘மக்கள் திலகமாக’ அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும் •போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக.இத்தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்.
அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.
இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். ‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயே தோற்று போகுமளவுக்கு திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.
சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949-ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்ததற்கு எம்.ஜி.ஆரின் உழைப்பும் உண்டு......... Thanks...
-
மக்கள் திலகத்தின் திரைப்படத்தை காண கையில் பணம் இல்லாத போது தன்னுடைய இரத்தத்தை விற்று அவருடைய திரைப்படத்தை பார்த்த வெறி பிடித்த கூட்டம் அப்படி பட்ட அடிமட்ட கூட்டத்தை விலைக்கு வாங்க எந்த சக்தியாலும் முடியாது அவருடைய கட்சியையும் புகழையும் எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது....
வாழ்க எம் .ஜி. ஆர்., புகழ்......... Thanks...
-
28-07-2019 ஞாயிற்று கிழமை "தினமணி" நாளிதழ் கட்டுரையின் சில பகுதிகள்.........ஊட்டி போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த வெளி இடங்களில் கண்ணுக்குக் குளிர்ச்சியான வெளிப்புறங்களில் படமாக்கினார். அதேபோல் எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் காதல் காட்சிகள்-பாடல்கள் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், இப்படத்தில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா காதல் புரியும் காட்சிகள் நேரிடையாக இல்லை.
பாசம் மற்றும் பழி உணர்வு கொண்ட இரட்டை வேடம்தான் 'அடிமைப் பெண்' படத்தில் வரும் இரு கதாநாயகிகளின் வேடம். இரு வேடங்களையும் செல்வி ஜெயலலிதா செய்திருப்பார்.. அந்தளவிற்கு அவர் நடிப்பின் மீது எம்.ஜி.ஆர் நம்பிக்கை வைத்திருந்தார். நம்பிக்கையின் வெற்றிப் பரிசாக தன் திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இப்படத்தில் 'அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலையும் பாடியிருப்பார் ஜெயலலிதா. இப்பாடலை பாடுவதற்கு பின்னால் சுவையான சம்பவம் நடந்தது.
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த வேறோரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, இடைவேளையில் நடன ஆசிரியர் சின்னி சம்பத்தும் - ஜெயலலிதாவும் இசையைப் பற்றி மிகவும் ஆழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தெரியாமல் இதைக் கவனித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், பேச்சு முடிவுற்றதும் இருவரின் அருகில் வந்து, இருவரும் இசையைப் பற்றி மிகவும் ஆழமாக பேசிக்கொண்டிருந்தீர்கள், இசையைப்பற்றிய நுணுக்கங்கள் தெரியுமா என்று கேட்க, இருவரும் 'ஓ நன்றாகத் தெரியுமே' என்று கோரஸ் குரலில் சொல்ல, சரி நாளை நீங்கள் எனக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்று ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் கேட்க, நிச்சயமாக பாடித் தருகிறேன் என்கிறார்.
மறுநாள் எம்.ஜி.ஆரே தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு பாடல் ஒலிப்பதிவு கூடத்திற்குச் செல்கிறார். அங்கே காத்திருந்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம், அந்தப் பாடலை இவரை வைத்து பாட வையுங்கள் என்கிறார். இப்படியாகத்தான் இப்பாடல் ஒலிப்பதிவானது. ஜெயலலிதா பல்வேறு பரிணாமத்தில் தன் முழு நடிப்பை வெளிப்படுத்திய படம். உடலுக்கு மருத்துவம் வேறு, உள்ளத்துக்கு மருத்துவம் வேறு. உள்ளத்தில் தூய்மை இருந்தால், காதலுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பயன்பட முடியும். வாழ்க்கையில் அவர்கள் முழு வெற்றியை பெறுவார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் வைத்தியர் கதாபாத்திரத்தில் நடித்தவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சந்திரபாபு ஆகிய மூவரும் பனிப்புயலில் சிக்கி பிரியும் போது, 'வேங்கையா நீ எங்கய்யா போன' என்று அடுக்கு மொழியில் பேசுவதும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா தப்பிப்பதற்கு "ஏமாற்றாதே ஏமாறாதே'' பாடலுக்கு முன்பாக பாலைவன மணலில் குழி தோண்டி தன்னைத்தானே புதைத்துக் கொண்டு புல்லாங்குழல் வழியாக மூச்சு விடும் காட்சியில் வருத்திக்கொண்டு நடித்திருப்பார். 1958-ஆண்டு வெளிவந்த 'நாடோடி மன்னன்" திரைப்படத்திற்குப் பிறகு, பத்தாண்டுகள் கழித்து 1968-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த 'கண்ணன் என் காதலன்' படத்தில் ரவுடி சந்திரனாக ஒரு காட்சியில் வந்து செல்வார். இதற்கடுத்து எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடித்த படம் "அடிமைப்பெண்' . இதுதான் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடித்த கடைசிப்படம். மந்திர சக்தி இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றிக் கூறி வாழ்க்கை நடத்துபவர்கள், பிறருக்கு உதவி செய்ய விரும்பினாலும் சில சமயங்களில் எப்படி தலைகீழான கதாபாத்திரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்தைக் கொண்ட வேடத்தில் நடித்திருப்பார் சோ.
இப்படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும், தந்தை எம்.ஜி.ஆர் படத்தின் ஆரம்பத்திலேயே கொல்லப்படுவார். பிறகு மகன் - எம்.ஜி.ஆர்தான் படம் முழுவதும் வருவார். அதுவும் மிகவும் வித்தியாசமான ஐரோப்பிய கிராம மக்கள் அணியும் உடை. கம்ப்யூட்டர், கிராபிக்ஸ், அனிமேஷன், டிஜிட்டல் கேமரா போன்ற அதிநவீன தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் படமாக்கப்பட்ட அடிமைப் பெண் படத்தில் வெற்றிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருந்ததால் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட படத்திற்கு 2019 - ஐம்பதாவது ஆண்டு (Golden Jubilee year). ரசிகர்களுக்கு அற்புதமான படத்தை கொடுத்த எம்.ஜி.ஆர் தமிழ்த் திரை உலகம் இருக்கும் வரை போற்றப்படுவார்.
அடிமைப்பெண் தகவல்கள்:
1. கண்ணதாசன் இப்படத்தில் பாடல்கள் எழுதவில்லை
2. ஜே.பி. சந்திரபாபு பாடல் பாடாத 20 படங்களில் இதுவும் ஒன்றாகும்
3. சந்திரபாபு - எம்.ஜி.ஆருடன் நடித்த கடைசிப்படம்.
4. இப்படத்தில் நடித்ததற்காக 1969-ஆம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருதை பண்டரிபாய் பெற்றார்.
5. இப்படத்திற்கு பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி போடும் பழக்கம் ஏற்பட்டது.
6. நாயகனும்-நாயகியும் ஒரே படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் இரண்டு. ஒன்று "அடிமைப்பெண்' மற்றொன்று 'கோகுலதாஸி'.
7. "காலத்தை வென்றவன் நீ'' பாடலின் இறுதியில் வரும் ஆலாபனையை பி.சுசிலாவும் - எஸ். ஜானகியும் ஒரு நிமிடம் 3 விநாடிகள் பாடியிருப்பார்கள்.......... Thanks...
-
எம்ஜிஆர் புகழ் இன்னமும் நிலைத்திருப்பது எதை காட்டுகிறது ?
எம்ஜிஆர் என்ற மாபெரும் மனிதரின் புகழ் அவர் வாழ்ந்த காலத்திலும் சரி , அவர் மறைந்து 31 ஆண்டுகள் தொடர்ந்து அவருடைய புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லுகிறது என்றல் அதற்கு உண்மையான காரணம் எம்ஜிஆரின் ரசிகர்கள் .மட்டுமே . எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் எம்ஜிஆரின் புகழை எல்லா மட்டத்திலும் எடுத்து செல்வதை காண முடிகிறது . பல அரிய தகவல்களுடன் எம்ஜிஆரை பற்றிய நூலகள் நூற்றுக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளது .
லட்சக்கணக்கான , பல கோடிக்கணக்கான மக்கள் எம்.ஜி.ஆரை., நேசித்தார்கள் .இன்றும் எம்ஜிஆரின் படங்கள் தமிழ் நாட்டில் ஓடிக்கொண்டிருப்பது உலக சாதனை . குறிப்பாக கோவை , மதுரை , சென்னை போன்ற நகரங்களில் பல படங்கள் நல்ல வசூலுடன் சாதனைகள் படைத்துள்ளது .
ஊடகங்களில் எம்ஜிஆரின் படங்கள் தொடர்ந்து ஒளி பரப்புகிறார்கள் .
அரசியல் , சினிமா , மனித நேயம் மூன்று துறைகளிலும் எம்ஜிஆர் பதித்த முத்திரைகள் உலகம் உள்ளளவும் பேசப்படும் . நினைவு கூறப்படும்
எதிர் காலத்தில் இனி எவருக்கும் கிடைக்காத பெருமை எம்.ஜி.ஆர்., ஒருவருக்கே கிடைத்துள்ளது .
எம்.ஜி.ஆர் ., ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் ... எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், தொண்டர்கள் பூர்வ புண்ணியம் செய்தவர்கள் என்று சொன்னால் அது கொஞ்சம் கூட மிகையன்று.........
-
எம்ஜிஆர் ரசிகனுக்கு கிடைத்த பெருமைகள் .
எங்கள் எம்ஜிஆர்'' பாரத ரத்னா ''
எங்கள் எம்ஜிஆர் '' பாரத் '' - 1971
எங்கள் எம்ஜிஆர் அண்ணாவின் ''இதயக்கனி ''
எங்கள் எம்ஜிஆர் ''மக்கள் திலகம் ''
எங்கள் எம்ஜிஆர் ''புரட்சித்தலைவர் ''
எம்ஜிஆர் நினைவிடம்
எம்ஜிஆர் தோட்டம்
எம்ஜிஆர் நினைவு இல்லம்
எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகம்
எம்ஜிஆர் பிலிம் சிட்டி
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நினைவு தூண்
எம்.ஜி.ஆர் ., சென்ட்ரல் ஸ்டேஷன்
எம்.ஜி.,ஆர் ., கோயம்பேடு பேருந்து நிலையம்
உலகப்பேரவை எம்.ஜி.ஆர்., மன்றம்
எம்.ஜி.ஆர்., மன்றங்கள்
எம்.ஜி.ஆர் ., புத்தகங்கள் ..விரைவில் 1000 கின்னஸ் சாதனை ...
இன்னும் தொடரும்........ Thanks...
-
கடந்த 26-07-2019 முதல் தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை காண்கிறார்... திரையரங்க உரிமையாளர்களின் அட்சய பாத்திரம், திரைப்பட விநியோகஸ்தர்களின் கற்பக விருட்சம் மக்கள் திலகம் அளிக்கும் " ரிக்க்ஷாக்காரன்"... சேலம் - அலங்கார் DTS., Courtesy: mr.Raja, Tirunelveli...
-
நாளை 02-08-2019 முதல் இணைந்த 2 வது வெற்றி வாரமாக சேலம் - சரஸ்வதி dts தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது... தகவல்: திரு ராஜா, திருநெல்வேலி...
-
#பொன்மனச்செம்மல்-லிடம் நிருபர் கேட்ட கேள்விகளும்... எம்ஜிஆரின் நேர்மையான பதில்களும்… ஒரு ஃப்ளாஷ்பேக்.........
"நீங்கள் நடிக்க வந்தது ஏன்?"
"வறுமை தான்."
"நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?"
"வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்."
"முதல் அனுபவம் எப்படி? நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார்?"
"ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை."
"மேடையில் எப்படி அனுபவம்?"
"மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார்."
"பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?"
"பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்."
"உங்களுக்கு பாட வருமா?"
"பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை."
"சினிமாவுக்கு வந்தபோது கேமராவை பார்த்தபோது எப்படி இருந்தது?"
"வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லை."
"நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?"
"நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே."
'நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?"
"நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.'
"பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?"
"நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே’ என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்."
"உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?"
"சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும்.
நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி."
"ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?"
இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்."
"மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?"
"தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்."
"கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?"
"நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை."
"உங்களுக்கு குல தெய்வம் உண்டா?"
"காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி."
"உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?"
"என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்."
"நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?"
"என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்."
"அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?"
"கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம்.
அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை."
"ஸ்டுடியோ பணியாளராக இருந்து அதன் உரிமையாளராக உயர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"நெப்டியூன் ஸ்டுடியோவில் யாரோ ஒரு ஊழியனாக வேலை செய்தேன். முதலாளி ஜூபிடர் சோமு மிகப் பெரிய மனிதர். அனுபவத்திலும் ஆற்றலிலும் என்னைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் நானெல்லாம் எத்தனை காலம் முதலாளியாக இருந்துவிட முடியும் என்று தோன்றுகிறது. இதுதான் வாழ்க்கை. மனிதனின் உடல் நிரந்தரம் இல்லாதது; நீர்க்குமிழி போல் எந்த நொடியும் அழையக் கூடியது என்பார்கள். உடல் மட்டுமா? பெயர், புகழ், செல்வாக்கு எல்லாமும் அப்படித்தான். அதைத்தான் நினைத்துக் கொள்வேன்."
"தமிழ் சினிமா முன்னேறி இருக்கிறதா?"
"சினிமா ஒரு கூட்டு முயற்சி. ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள ஆனால் வெவ்வேறான செயல்களின் விளைவுதான் ஒரு திரைப்படம். கதை, வசனம், காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, உடை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என வேறு வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ் சினிமா நிச்சயமாக முன்னேறி இருக்கிறது."
"சினிமா விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"ஒரு பத்திரிகை என் நடிப்பு அற்புதம் என்கிறது. இன்னொரு பத்திரிகை மோசம் என்கிறது. மூன்றாவது பத்திரிகை அந்த இரண்டுக்கும் பொதுவாக என் நடிப்பு சுமார் என்கிறது. இதில் எதை நான் எடுத்துக் கொள்வது? எப்படி என் நடிப்பை திருத்திக் கொள்வது? இங்கே சினிமா விமர்சனம் பெரும்பாலும் இப்படிதான் இருக்கிறது. எம்ஜிஆர் என்ற நடிகனின் நடிப்பை மட்டும் பார்க்காமல் என் கட்சியை, என் கட்சியின் கொள்கையை என் தனிப்பட்ட வாழ்க்கையை மனதில் தேக்கிக் கொண்டு பார்ப்பதால் விமர்சனத்தின் நேர்மை கேள்விக்குறி ஆகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ள ஊக்கமாக விமர்சனம் இருந்தால் நல்லது என்பேன்."
"சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?"
இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம். காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய.
எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது. படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான்.
அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.
அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லிவரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்?
லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது."
"ஹீரோ விரும்புகிற மாதிரியெல்லாம் கதையை மாற்றினால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி என்னாவது?"
"ஒன்றும் ஆகாது. நான் நடிகன் மட்டுமல்ல. படம் எடுத்திருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன். எவ்வளவு காலமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்தால் படம் ஓடும் என்பது தெரியும்.
மதுரை வீரன் படமும் காத்தவராயன் மாதிரி கர்ணபரம்பரை கதைதான். வெள்ளையம்மாள் பாத்திரம் படுமோசமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். படத்தில் அந்த பாத்திரத்தை வேறுமாதிரி மாற்ற ஆலோசனை சொன்னேன். தயாரிப்பாளர் சம்மதித்தார். படம் பெரிய வெற்றி.
அதே மாதிரி மலைக்கள்ளன் படத்திலும் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்திலும் சில ஆலோசனைகளை சொன்னேன். பட முதலாளிகள் ஏற்றுக் கொண்டு மாற்றியமைத்தார்கள். அந்த படங்களும் பெரும் வெற்றி பெற்றன. என்னுடைய கருத்தை நான் திணிப்பதாக நினைப்பது தவறு. என்னுடைய அனுபவத்தை அதில் கிடைத்த அறிவை பட முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்கிறேன், அவ்வளவுதான்."
"சம்பளம் வாங்கும் நடிகர் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்துவிட்டு போவதுதானே முறை? நீங்கள் செய்வது சர்வாதிகாரம் ஆகாதா?"
"ஊதியம் வாங்கும் பணியாளன் என்றாலும், நடிகனுக்கும் சமூக கடமைகள் உண்டு. அர்த்தமில்லாத, போலியான, பித்தலாட்டமான மூடத்தனமான காட்சிகளை அமைத்து மக்களை நம்ப வைக்க முயன்றால் அது தப்பில்லையா? அதற்கு நடிகன் உடந்தையாக இருக்க முடியுமா? நம்பத்தகுந்த, நம்பக்கூடிய காட்சிகள் என்றால் பரவாயில்லை. நம்பவே முடியாத, தர்க்க ரீதியாக ஏற்க முடியாத காட்சிகளை திணித்து மக்களிடம் காசு பறிக்க முயல்வது பேராசை. அதை ஒரு நடிகன் என்ற முறையில் நான் அனுமதிக்க முடியாது."
"பத்து இருபது பேரை ஏக காலத்தில் தன்னந்தனியாக அடித்து வீழ்த்துவது மட்டும் நம்பக் கூடியதா?"
"தமிழ் சினிமாவில் வந்தால் மட்டும் நம்ப மாட்டீர்களா? புராணங்களில் அப்படி வரும் காட்சிகளை மக்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள். மகாபாரதம் கதையில் அர்ஜுனன் பெரிய வில் விற்பன்னர்களுடன் மோதுகிறான். சிக்கலான வியூகத்தை எளிதாக உடைத்து, எதிரிகள் அத்தனை பேரையும் முறியடித்துவிட்டு திரும்புகிறான். அதை நம்பி ஏற்றுக் கொள்கிறீர்கள். அர்ஜுனனால் அது சாத்தியம் என்றால் என்னை போன்ற ஹீரோக்களால் இதுவும் சாத்தியம்தான்."
"வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே?"
"விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்கள் அப்படி என்னைச் சொல்லவில்லையே. தவிர இன்னொன்றையும் கவனியுங்கள். 25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதை பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன். இதைப்போய் சிலர் குறை கூறுகிறார்கள்."
"உங்கள் படங்கள் சரியாக ஓடாததால் அரசியலில் தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?"
"வியாபரம் ஓகோ என்று நடக்கும்போது யாராவது கடையை மூட நினைப்பார்களா? என் படங்களின் வசூலில் எந்த குறைவும் இல்லை. நீங்கள் வேறு யாரையும் கேட்க தேவையில்லை. என் படம் ஓடும் எந்த தியேட்டருக்கு போனாலும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதோ, சமீபத்தில் வெளியான என் படத்துக்கு 1 ரூபாய், 20 பைசா டிக்கெட், தியேட்டருக்கு வெளியே 16 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது."
"கோயில், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நீங்கள் நடிக்க மாட்டீர்களாமே?"
அது வெறும் வதந்தி. யார் கிளப்பியதோ தெரியாது. நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது. ஜெனோவா படத்தில் நடித்தேன். பரமபிதாவில் நடிக்கிறேன். பெரிய இடத்து பெண் படத்தில் எல்லாரையும் கோயிலுக்கு அழைத்து செல்வேன். சமீபத்தில் மருதமலை கோயிலுக்கு போய் வந்தேன்."
"பிறகு ஏன் பக்தி படங்களில் நடிப்பதில்லை?"
படம் எடுத்து அல்லது படத்தில் நடித்துதான் பக்தியை வளர்க்க முடியுமா. அப்படி இல்லை. பக்தி என்பது பரிசுத்தமானது. முன்பெல்லாம் மனசையே கோயிலாக்கி கடவுளை அதில் அமர்த்தி வைத்திருந்தார்கள். மனசு அழுக்கானதாலோ என்னவோ பிறகு கடவுளை கோயிலுக்கு அனுப்பி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனை கோயில்களை வைத்துக் கொண்டு வளர்க்க முடியாத பக்தியை சினிமா படங்களா வளர்த்து விடப் போகிறது? என்னை பொருத்தவரை தாயிடம் அன்பு, தந்தையிடம் மரியாதை, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்த பண்புகள்தான் மனதை தூய்மையாக்கும். மனம் தூய்மையானால் அதுதான் பக்தி. கடவுளாக வேஷம் போடாமலே அந்த பக்தியை நான் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்."
"திடீரென்று வெள்ளை தொப்பி போட என்ன காரணம்?"
"அடிமைப்பெண் ஷூட்டிங் நடத்த ராஜஸ்தான் சென்றபோது பாலைவனத்தில் வெயில் தாங்க முடியாமல் இருந்தது. ஒருத்தர் இந்த தொப்பியை கொடுத்து, ‘தலையில் போட்டுக்குங்க, வெயிலுக்கு இதமா இருக்கும்’ என்றார். அப்ப்டித்தான் இருந்தது. பிறகு தேர்தல் வந்தது. பிரசாரத்துக்கு வெயிலில் மழையில் ரொம்ப சுற்ற நேர்ந்தது. அப்படியே தொப்பியை பழக்கமாக்கிக் கொண்டேன்."
"வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களே?"
"தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எது தேவையோ அதை நான் பயன்படுத்துகிறேன். என் தலையில் முடி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். உடனே நான் எம்ஜிஆர் இல்லை என்று சொல்லி விடுவீர்களா, என்ன? இந்தி சினிமா நடிகர்கள் நிறைய பேர், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் தலையில் விக் இல்லாமல் வெளியே வருவதில்லை. அதுக்கு என்ன சொல்வீர்கள்?
யார் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. முன்பு ஜிப்பா போட்டேன். அப்புறம் காலர் வைத்த முழுக்கை சட்டைக்கு மாறினேன். அதை ஏதோ பேசினார்கள். ஒருநாள் சட்டையில் கை கிழிந்து விட்டது. சுருட்டி விட்டிருந்தேன். அதை பார்த்ததும், ‘எம்ஜிஆர் ரவுடி மாதிரி சட்டையை சுருட்டி விட்ருக்கார், பாரு’ என்றார்கள். இதுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்."
"சினிமாவில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?"
"என்னைச் சுட்டது கூட பாசத்தால் என்கிறீர்களா? எதிரி யாருக்குதான் இல்லை? மனிதன் பிறக்கும்போதே அதுவும் தோன்றி விடுகிறது. தளர்ச்சி, அயர்ச்சி, பலவீனம் என்று இயற்கை எத்தனை தடைகளை மனிதன் மீது சுமத்துகிறது. அதைவிட பெரிய எதிரி என்று யாரும் இல்லையே. அதையெல்லாம் தாண்டித்தானே வளர்கிறோம். சினிமாவில் அப்படி எதிர்ப்பு, ஆதரவு கலந்துதான் இருக்கும். மேக மூட்டம் மாதிரி. மேகத்தை பார்த்ததும் இங்கு மழை பெய்யும் என எதிர்பார்ப்போம். எங்கிருந்தோ வரும் காற்று மேகத்தை தள்ளிக் கொண்டு போய்விடும். மழை வேறு எங்கோ பெய்யும். எதிர்ப்பை அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்."
"எந்த எதிர்ப்பையும் தாங்கும் இந்த மனப் பக்குவம் எப்படி வந்தது?"
"இன்று நான் பெரிய நடிகன். வசதியாக வாழ்கிறேன். எனது வளர்ச்சி சிலரை பாதிக்கலாம். எனக்கு சிலர் தரும் ஆதரவு பலரை பாதிக்கலாம். நானே தெரியாமல் சில தவறுகள் செய்திருக்கலாம். இந்த காரணங்களால் எதிரிகள் உருவாகலாம். ஆனால் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் பல துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து பரிதாப நிலையில் வாழ்ந்தேனே, அதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்? அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது இன்று எல்லா எதிர்ப்பும் சாதாரணமாக தெரிகிறது."
"நடிகர்கள் கருப்பு பணம் வாங்குவது உண்மைதானே?"
"உண்மைதான். ஏன் வாங்குகிறார்கள்? ஒரு லட்சம் சம்பாதித்தால் அதில் 97 ஆயிரத்தை வரியாக கேட்கிறார்கள். நடிகன் சாதாரணமாக வாழ முடியாது. அதிகம் செலவு செய்தாக வேண்டிய கட்டாயம். எங்கள் தொழில் அப்படி. இதில் நுழைந்த முதல் நாளே லட்சங்களில் சம்பாதித்துவிட முடியாது. யாரும் தர மாட்டார்கள். நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரையில் ஒவ்வொரு நடிகனும் படாத கஷ்டம் இல்லை. அங்கே இங்கே கடன் வாங்கி காலத்தை கழிக்கிறான். அதை எல்லாம் வரி அதிகாரிகள் கணக்கில் எடுப்பதில்லையே."
"கருப்பு பணத்தை நியாயப்படுத்த முடியுமா?"
"அப்படி பார்த்தால் அரசும் சட்டமும்தான் இப்படி ஏமாற்ற வைக்கிறது. அவர்கள் பார்வையில் நாங்கள் திருடர்கள். ஆனால் அவர்கள் கேட்கும் வரியை செலுத்திவிட்டு மீதி பணத்தில் ஒரு நடிகன் வாழவே முடியாது. வருமானத்துக்கு மட்டுமா இவ்வளவு வரி? ஒரு நல்ல காரியத்துக்கு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தேன். அதற்கும் வரி போட்டார்கள். ஆத்திரம் வந்தது."
"நேரே டெல்லிக்கு போனேன். நிதி மந்திரி சி.சுப்பிரமணியம். அவரைச் சந்தித்து கேட்டேன்.
‘சட்டம் அப்படி; நான் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார்.
‘தேசத்தின் பாதுகாப்புக்காக நன்கொடை கொடுத்தாலும் வரி விதிப்போம் என்பது நியாயமா?’ என்று திரும்பவும் கேட்டேன்.
விளக்கம் சொன்னாரே தவிர, விலக்கு தரவில்லை. சட்டத்தை ஏமாற்றும் நோக்கம் நடிகர்களுக்கு இல்லை. ஆனால், நாங்கள் ஓரளவு நன்றாக வாழவாவது சட்டம் அனுமதிக்க வேண்டாமா? அதனால்தான் மனம் குறுக்கு வழியைச் சிந்திக்கிறது."
"அப்படியானால் இதுதான் (வரி ஏய்ப்பு) தொடருமா?"
"திரும்பத் திரும்ப அரசிடம் கேட்டுப் பார்க்க வேண்டியதுதான். நடிகன் வாழ்க்கை நிலை இல்லாதது. புகழும் மார்க்கெட்டும் குறிப்பிட்ட காலம் வரைதான். அதன் பிறகு வரும் வருமானமில்லாத காலத்துக்கு அவன் சேமிக்க வேண்டாமா? பிள்ளை குட்டிகளுக்கு எதுவும் செய்ய வேண்டாமா? ஓகோ என்று வாழ்ந்த பல நடிகர்கள் வரி கட்டியே வீடு, சொத்து எல்லாம் இழந்த கதைகள் உண்டு."
"சினிமாவுக்கு புதுசு புதுசாக நடிகர் நடிகைகள் வருவது நல்லதா?"
"நிசயம் நல்லது. ஆனால் அப்படி நடக்கவில்லை. பயிற்சி பெறாதவர்கள் வந்தால் நீடிக்க முடிவதில்லை. இப்படியே போனால் நடிகனுக்கு பஞ்சம் வந்து விடும்."
"அதற்காக நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?"
"செய்ய வேண்டும். 1948-ம் ஆண்டிலேயே இது பற்றி ஜூபிடர் சோமுவுடன் பேசி இருக்கிறேன். புதிதாக நாடக கம்பெனிகளை உருவாக்க வேண்டும். அதில் சிறப்பாக நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தர வேண்டும். அவர்கள் அவ்வப்போது நாடகத்திலும் நடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டேன். அது நடக்கவில்லை."
"அதோடு விட்டு விட்டீர்களா?"
"நடிகர் சங்கத்தில் இதை விவாதித்தோம். சிறந்த எழுத்தாளர்களை அழைத்து நாடகம் எழுத சொல்வோம். அமெச்சூர் நாடக நடிகர்களை அதில் நடிக்க சொல்வோம். பட முதலாளிகள் அந்த நாடகங்களை பார்த்து திறமையானவர்களை தேர்வு செய்யட்டும். அவர்களுக்கு சினிமா வய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சங்கத்தில் தீர்மானமே போட்டோம்."
"அதுவும் நடக்கவில்லையா?"
"நடக்கவில்லை. பிறகு பட முதலாளி என்ற வகையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு யோசனை சொன்னேன். ஒரு நடிகனை ஒரே நேரத்தில் 6 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் போடக்கூடாது. அப்படி உச்சவரம்பு வைத்தால் புது நடிகர்கள் வர வழி கிடைக்கும் என்று சொன்னேன். இப்படி பல யோசனைகள் சொல்லியும் ஏனோ நடக்கவில்லை."
"நடிகர் சங்கம் மூலமாக நடிப்பு பயிற்சி அளிக்கலாமே?"
"அதையும் முயற்சி செய்து பார்த்தேன். ஒவ்வொரு வருடமும் நாடக போட்டி நடத்தி, அதில் முக்கியமான வேடங்களை புதுமுகங்களும் சின்னச் சின்ன வேடங்களை பிரபல நடிகர்களும் ஏற்று நடிக்க வேண்டும். புதிய நடிகர்களின் திறமையை அதில் வெளிப்படுத்தி சினிமா உலக முக்கியஸ்தர்கள் அதை அங்கீகரிக்க செய்ய் வேண்டும் என்று முயற்சி செய்தேன்.
பலரும் ஒத்துழைப்பு தந்தார்கள். ஆனால் சில முக்கிய புள்ளிகள் இடையூறாக இருந்து திட்டத்தையே நடக்க விடாமல் தடுத்து விட்டார்கள். நடிப்புக்கென்று தனியாக பள்ளிகள் இல்லாததால் சங்கம்தான் அதை எடுத்து செய்ய வேண்டும்."
"உங்களை போல மற்ற நடிகர்கள் ஏன் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லை?"
"வாரியெல்லாம் நான் வழங்குவதில்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லாருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் உண்டு.
மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கு ஏற்ப கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்?"
செய்தியாளருக்கு பேட்டி....... Thanks...
T
-
ஆடிபெருக்கை முன்னிட்டு... இன்று முதல் மகத்தான தொடக்கம்... திருச்சி - முருகன் dts திரையரங்கில் தினசரி 3 காட்சிகள் வெற்றி நடை காணும்... அள்ள... அள்ள குறையாத வசூலை அள்ளி வழங்கும் மக்கள் திலகம் வாழும் " ரிக்க்ஷாக்காரன்" ... Information by : mr.Krishnan, Tiruchirappalli...
-
#வாத்தியாரின் #சென்டிமெண்ட்ஸ்
பெரிய தத்*து*வங்*களை சிறிய விளக்*கத்*தால் புரிய வைக்*கக்*கூ*டிய சக்தி வாத்தியாருக்கு உண்டு.
வள்*ள*லா*ராக நடிக்க ஒப்*புக்*கொண்*ட போது ‘தாயே துணை’ என்று துவங்கி திரைக்*கதை எழு*தத் துவங்*கி*னார். பதி அவர்கள், வாத்தியாரிடம் பிள்*ளை*யார் சுழி போட்டு ஆரம்*பிக்*க*லாமே என்*ற*தும், ‘உ’ வடி*வில் அந்*தச் சுழி*யைப் போட்*ட*தும் உங்*களை ஆஸ்*தி*க*ராக்*கி*விட்*டேன் என்*றேன்.
அதற்கு வாத்தியார் சிரித்துக்கொண்டே... ‘உ’ என்ற எழுத்*துக்கு உழைப்பு, உண்மை, உயர்வு என்று அர்த்*தம். இந்த மூன்*றை*யும் முன் நிறுத்தி எதை ஆரம்*பித்*தா*லும் அது வெற்*றி*தான்’ என்*றார்.
“அன்ன*மிட்ட கை”யின் போது சிவ*சாமி அய்*யர் என்*ப*வர் தெய்*வப்*ப*டங்*கள் வாங்கி வந்*தார். அதில் லட்*சுமி படத்*தைப் பார்த்து, 'லட்*சுமி உட்*கா*ரக்*கூ*டாது, ரவி*வர்மா படங்*கள் தத்*துவ ரீதி*யில் எழு*தப்*பட்*டது, அதை வாங்கி வாருங்*கள்' என்*றார் வாத்தியார்.
சாஸ்*திர சம்*பி*ர*தா*யங்*கள் தெரிந்த ஐயர் கார*ணம் கேட்*ட*போது ‘சகல சவு*பாக்*கி*யங்*க*ளும் நிலைத்து நிற்*கட்*டும் என்*று*தான் சொல்*லு*வோம், உட்*கா*ரட்*டும் என்று சொல்*வ*தில்லை” என்*றார் பொன்*ம*னச்*செம்*மல்.
நடை*முறை ஒவ்*வொன்*றை*யும் கவ*ன*மா*கக் கடைப்*பி*டித்*தார். அவர் எப்*போ*துமே கால் மேல் கால் போட்டு உட்*கா*ர*மாட்*டார். ‘அது அடுத்*த*வரை அவ*ம*திப்*பது போல் ஆகும்’ என்*பார்...
வேட்*டியை கணுக்*கால் தெரி*யும் வரை கட்*டு*வார். ‘தரை பெருக்*கக் கட்*டு*வது தரித்*தி*ரம்’ என்*பார்.
இரவு எத்*தனை மணிக்கு படுக்*கைக்கு போனா*லும் ஐந்*தரை மணிக்*கெல்*லாம் எழுந்து விடு*வார். ‘உத*யத்*தைப் பார்க்*கா*த*வன் உய*ரத்*தைப் பார்க்*க*மாட்*டான்’ என்று நபிகள் நாயகம் சொன்னதைக் கூறுவார்.
வாத்தியார் உணவு அருந்*தி*னால் அந்த இட*மும், இலை*யும் சுத்*த*மாக இருக்*கும். ‘அன்*னத்தை மிச்*சம் வைப்*ப*வன் வாழ்க்கை பின்*னப்*ப*டும்’ என்று அவ*ரது தாய் சொன்னதை கடைசிவரை செயல்படுத்தினார்.
“யாருக்*குக் கொடுப்*பது, அதனை எந்த நேரத்*தில் கொடுப்*பது என்று குறித்து தெரிந்து கொடுத்*தான் பாரி” என்று கபி*லர் அக*நா*னூ*றில் பாடி*யி*ருக்*கி*றார். அப்*ப*டித்*தான் வாத்தியாரும் கொடுத்*தார். இவரை ஏமாற்றி வாங்*கி*விட முடி*யாது. எல்*லோ*ரும் எழுத்*தைப் படிப்*பார்*கள். இவர் எண்*ணத்*தையே படிப்*பார். இப்*படி வாத்தியாரைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம்............. Thanks...
-
கேரள மாநிலம் பாலக்காட்டில் புரட்சித்தலைவர் சிறுவயதில் பிறந்து வளர்ந்த இல்லம்.
கருங்கல் சிற்பங்களோடு, கலைநயமிக்க வகையில் பராமரிக்கப்படுகிறது. நூலகம், புகைப்பட காட்சி அறை, மக்கள்திலகத்தின் திரையுலக அணிவரிசை என வியக்க வைக்கும் ஒருங்கமைவுகள்.
இந்த காணொளியை விளக்கி விவரிக்கும் நபர் காலணிகளை மரியாதை நிமித்தம் கழற்றிச்செல்வதும், வர விரும்புபவர்களுக்கான வழிகாட்டலில் "அந்த வளாகத்தின் உள்ளேயே இயங்கும் அங்கன்வாடி மையத்தின் குழந்தைகட்கு இனிப்புகள் வாங்கி வாருங்களென" கூறுவதும் அங்கே நிழலாடும் மக்கள் திலகத்தின் ஆன்ம உணர்வின் அன்பு வெளிப்பாடென்றே உணரத்தோன்றுகிறது.
வாழ்க புரட்சித்தலைவர் !!......... Thanks...
-
இன்று முதல் (02/08/2019) கோவை டிலைட்டில் (முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது )
மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் " நினைத்ததை முடிப்பவன் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
https://i1126.photobucket.com/albums...psb3iqflby.jpg
கோவையில் 7 வது முறையாக டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " திரைக்கு வந்துள்ளதாக கோவை பக்தர்கள் தகவல் தெரிவித்தனர் .
-
https://i1126.photobucket.com/albums...psdr9e4akr.jpg
https://i1126.photobucket.com/albums...psffbdevlx.jpg
திருச்சி முருகனில் இன்று முதல் (2/08/19) நிருத்திய வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படமாகிய டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4
காட்சிகள் நடைபெறுகிறது .
-
-
கோவை சண்முகாவில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆரின் "நேற்று இன்று நாளை " படத்திற்கு திரண்ட ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .
https://i1126.photobucket.com/albums...psioxydjq0.jpg
-
-