http://s10.postimg.org/e88vbm0gp/ccd.jpg
Printable View
அன்பு சகோதரர் ஹயாத் அவர்களது தாயாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் திருவடியில் அன்னாரது ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன்.
எனது பிறந்தநாளுக்கு திரியின் வாயிலாகவும் அலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். விரைவில் திரிக்கு வந்து தொடர்ச்சியாக எனது பங்களிப்பை அளிப்பேன் என உறுதி கூறுகிறேன்.
வரலாற்று உண்மை
அரசியல் வரலாற்றில் மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவாக்கிய சாதனை .
கோவை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தல் / கோவை நாடாளுமன்ற இடைத்தேர்தல் களம் - 1974
மக்கள் திலகத்தின் அண்ணா திமுக முதல் முறையாக களம் கண்ட திண்டுக்கல் இடைதேர்தல் -1973 அரசியல் வரலாற்றில் மாபெரும் சரித்திரம் படைத்தது .மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கத்தின் வளர்ச்சி , புகழ் கண்டு அன்றைய மத்திய அரசும் , மாநில அரசும் மற்றும் தமிழக கட்சிகள் எல்லாம் மிரண்டு போய் எப்படியாவது எம்ஜிஆரை தோற்கடிக்க வேண்டும் கோவை ,புதுவை , தேர்தலை சந்தித்தார்கள் .
மத்திய அரசு - இ. காங் - அன்றைய பிரதமர் இந்திரா காந்தி .
மாநில அரசு - தி மு க - அன்றைய முதல்வர் கருணாநிதி
ஸ்தாபன காங்கிரஸ் - பெருந்தலைவர் காமராஜர்
இடது கம்யூனிஸ்ட்
பிரபல நடிகர்கள் நடிகர் திலகம் மற்றும் அவருடைய ஆதரவு நடிகர்கள்
பிரபல பத்திரிகை யாளர்கள் சோ - ஜெயகாந்தன் - கண்ணதாசன் .
தினத்தந்தி - மற்றும் பல பத்திரிகைகள் என்று எல்லோருமே புரட்சித்தலைவரை எதிர்த்து இரவு பகல் பாராது
கடுமையான வார்த்தைகளால் எம்ஜிஆரை அரசியல் ரீதியாகவும் , தனிப்பட்ட முறையிலும் தாக்கி பிரச்சாரம்
செய்தார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டும் தன்னுடைய இயக்கத்தின் தொண்டர்கள் , ரசிகர்கள் மற்றும் மக்களை நம்பி
இரவு பகலாக சூறாவளி பிரச்சாரம் செய்தார் . தன்னை எதிர்த்த அத்தனை இயக்கங்களை சேர்ந்த தலைவர்களின்
பிரச்சாரம் அனைத்தையும் தன்னுடைய நிதான போக்கினாலும் , மக்களை நம்பி ஒட்டு கேட்டதாலும்
100 சத வீத வெற்றி கிடைத்தது .
கோவை நாடாளுமன்ற வெற்றி
கோவை மேற்கு சட்ட மன்ற வெற்றி
புதுவை அதிமுக அரசு
என்று ஒரே நேரத்தில் முப்பெரும் வெற்றி பெற்றவர் மக்கள் திலகம் .
எம்ஜிஆரை வீழ்த்த முயன்ற அத்தனை அரசியல் மேதைகளுக்கும் மக்கள் தந்த பரிசு ''தோல்வி ''
531- 2000 வாக்குகள் வித்தியாசம் வெற்றி - ஒரு வரலாற்றையே உருவாக்கி விட்டது .
எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் வெற்றி - எல்லா தலைவர்களையும் , நடிகர்களையும் அவர்களின் ரசிகர்களையும் சிந்திக்க வைத்தது .ஒரு சிலர் மட்டும் எம்ஜிஆரின் வெற்றிகளை ஜீரணிக்க முடியாமல் பல கணக்குகளை கூட்டி
கழித்து நடக்க முடியாத ஒன்றை எண்ணி சமாதனம்,அடைவது இயற்கைதானே .
விநோத் சார்
தங்களுடைய பதிவில் வரிசையாக பட்டியலிட்டு எல்லோரும் கடுமையான வார்த்தைகளால் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தாக்கி பிரச்சாரம் செய்தார்கள் எனக்குறிப்பிட்டிருக்கிறீர்கள். பெருந்தலைவரோ நடிகர் திலகமோ கொள்கைகளை வைத்தும் தர்க்க ரீதியாகவும் தான் பேசியிருக்கிறார்களே தவிர தனிப்பட்ட முறையிலும் அதே போன்று கடுமைான வார்த்தைகளிலும் என்றுமே யாரையுமே தாக்கிப் பேசியதில்லை, எம்.ஜி.ஆர். அவர்கள் உட்பட. அது மட்டுமல்ல மற்றவர்களையும் அது போன்ற முறையில் பேச அனுமதித்ததில்லை என்பதை பணிவுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
படம் : தாயின் மடியில்
பாடல் காட்சி: என்னை பார்த்து
http://i57.tinypic.com/34ii6u9.jpg
i don't understand what is wrong with my question. Do you mean that songs such as Naan Aaniyittal didn't contribute much for the success of EVP and MGR politics? I can cite many MGR movies, in which MSV music playing a major role in success. Eg. EVP, Anbe vaa, USV, Nam Naadu, Urimaikkural, K Kovil, Idhyakkani, and so on. This short list consists of both regular MGR movies and movies with heavy political tone in it. MSV always claimed that MGR squeezed a lot from him - that itself shows how MSV music was special for your films. Like many others, I usually felt MGR movies soul lies in MSV catchy tunes. If you still say that MSV music was not a big factor for MGR film and politics success, you are doing a disservice to MGR soul and commiting sin.
Compared to MGR movies, very few NT movies had "remarkable" tune from MSV. It never happened for NT movies, because in NT movies, NT alone matters.
Maestro Ilaiyaraja has also raised same issue: Regretting that politicians failed to acknowledge the contribution of artistes when they were alive, Mr. Ilayaraja said MSV had never sought any recognition from the government.
Link: http://www.thehindu.com/todays-paper...cle7427232.ece
My question was simple: Though MSV gave life to MGR themes, as a powerful 3-time CM, why didn't MGR (as CM) influence centre to get him Padma Awards? MSV totally deserved such awards.
Regards
PS: This is an open internet forum, not MGR paasarai. As a member of this forum, I have full right to jot down my thinkings and notes. You don't have any right to tell me not to enter this forum. If you want to stop me, open your own damn web site and restrict users there. Start Living in 21st century, not in old demigod - thuthipaadal. Good for you and everyone surrounding you. So, stop preaching others. Have a life man!
வினோத் சார்
1974 தமிழ் நாட்டில் இடைதேர்தல் பற்றிய தங்களின் பதிவு மிகவும் அருமை .தேர்தல் நேரத்தில் மேடைகளில் சில் சமயங்களில் தாக்குதல் நடப்பது சகஜம் மக்கள் திலகம் தன்னுடைய வெற்றி மூலம் தன்னை எதிர்த்த எல்லா தலைவர்களும் , அரசியல் விமர்சககளும் .வியக்கும் வகையில்தன்னுடைய அரசியல் செல்வாக்கு , சினிமா செல்வாக்கு இரண்டையும் நிருபித்து காட்டினார் .
படம் : தாயின் மடியில்
பாடல் காட்சி: ராசாத்தி காத்திருந்தா..
http://i59.tinypic.com/2vdi5om.jpg
நண்பர் டிஏசினிமா அவர்களுக்கு, தங்கள் வருகைக்கு நன்றி.
தங்கள் நோக்கம்தான் என்ன? எம்எஸ்விக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கமா? அல்லது மக்கள் திலகத்தை குறை கூறுவது நோக்கமா? மக்கள் திலகத்தின் படங்களின் வெற்றி பற்றியும் அரசியல் வெற்றி பற்றியும் நீங்கள் விமர்சிப்பது போல, உங்கள் அபிமானத்துக்குரியவரின் படங்களின் வெற்றி பற்றியும் அரசியல் பற்றியும் நாங்களும் விமர்சிக்க முடியும். பதிலுக்கு கேள்வியும் கேட்க முடியும்.
ஆனால், கடந்த 10ம் தேதியன்று திரு.ராகவேந்திரா சார், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியதுடன்...
//இந்நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் திரி நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் அவரவர் தலைவரின் புகழ் பாடுவதில் ஈடுபடுவதில் எந்தவித மனக்கசப்பிற்கும் இடம் தராமல் கருத்துக்களைக் கூறி நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பதே என் அவா.//
...என்று மேற்கண்ட வேண்டுகோளையும் விடுத்திருந்தார். (எங்கள் திரியில் பதிவு எண்.414). அதற்கு நான் நன்றி தெரிவித்து, தங்கள் அவா நிறைவேற எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு என்று கூறியிருந்தேன். (பதிவு எண்.423)
அதற்கிணங்க, ராகவேந்திரா சார் கூறியபடி, மனக்கசப்பிற்கு இடம் தராமல் சுமூக சூழ்நிலை நிலவவும், ஒத்துழைப்பு அளிக்கவும் விரும்புவதால் நான் இப்போதும் கூட பதிலளிக்க விரும்பவில்லை. இதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து நீங்கள் இந்தக் கேள்வியை வலியுறுத்தினால், நான் பதிலளிக்கத் தயார்.
அந்த சூழ்நிலை ஏற்பட்டு, மனக்கசப்பு உருவானால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.
மனக்கசப்பு ஏற்படாமல் நல்லிணக்கத்தை பேணுவதில் ஒத்துழைப்பு அந்தப் பக்கம் இருந்துதான் கிடைப்பதில்லை என்பதை நடுநிலையான நண்பர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் குறித்து மாடரேட்டர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோருகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்