I think they wont finish this serial since this is the only serial i guess is popular now in sun tv all others are dumb than this
Printable View
I think they wont finish this serial since this is the only serial i guess is popular now in sun tv all others are dumb than this
its cheaper to have the known devil
That's true. SunTV wouldn't have let this run this long, if it wasn't popular.Quote:
Originally Posted by kameshratnam
வைரஸ் காய்ச்சல் பத்துநாட்கள் படுக்கையில் சாய்த்துவிட்டது. தொடரை தொலைக்காட்சியில் பார்க்க முடிந்ததே தவிர பதிப்பிக்க முடியவில்லை. ஆகவே இடையே நடந்தவை சுருக்கமாக மட்டும்.....
அபியால் விரட்டியடிக்கப்பட்ட ஈஸ்வரன், சாலையில் போகும்போது மயக்கமடைந்து கீழே சாய, அவ்வழியே போகிறவர்கள் உதவிக்கு வருகின்றனர். அப்போது அங்கு ஆட்டோவில் வரும் தொல்காப்பியன் ஈஸ்வரனைக்கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்து, உஷாவுக்கு தகவல் சொல்ல உஷா பெற்றோருடன் அங்கு வருகிறாள். ஈஸ்வரனை சோதித்த மருத்துவர், அவருக்கு பக்க வாதம் அடித்துவிட்டதாகவும், ஒரு கை, ஒரு கால் விளங்காமல் போய்விட்டதாகவும் சொல்ல அவர்களுக்கு அதிர்ச்சி.
அசோஸியேஷன் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டாமென நினைத்திருந்த அபி, இப்போது முழு முச்சாக போட்டியில் இறங்கபோவதாக சொல்ல, ஆர்த்திக்கு மனதில் ஒரு அச்சம். அவளுடைய "ஆதியண்ணா" வை எதிர்த்து நிற்பது அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் அபி, ஆதிக்கு ஒருமுறையாவது பலத்த அடி கொடுக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறாள்.
ஈஸ்வரன் பக்கவாதத்தால் பாதிக்கப்ப்ட்டிருப்பதை முதலில் தொல்காப்பியன் அபியை நேரில் சந்தித்து சொல்லியும், உஷா மீண்டும் ஒருமுறை சொல்லியும் அபியின் மனம் மாறவில்லை. ஈஸ்வரன் மீதான வெறுப்பில் உறுதியாக இருக்கிறாள்.
கீழக்கரையில் இருந்து சென்னை வரும் தொல்ஸின் நண்பர் அன்வர்பாய், தொல்காப்பியனை சந்தித்து அவர் வீட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, போகும்போது ஒரு டைரியைக் கொடுத்துவிட்டுப்போகிறார். போட்டோக்கடை வைத்திருந்த பாய் இறந்துவிட்டதாகவும், அவர் இறக்கும் தறுவாயில் தன்னிடம் அந்த டைரியைக்கொடுத்து தொல்ஸிடம் சேர்ப்பிக்கச் சொன்னதாகவும் சொல்லி அதைக்கொடுத்துவிட்டுப்போகிறார். அதைப்பிரித்துப்படிக்கும் தொல்காப்பியனுக்கு மீண்டும் பழைய நினைவுகள்.
வீட்டை விட்டு விரட்டிய ஈஸ்வரனை மீண்டும் கண்டுபிடித்து அழைத்து வருமாறு காஞ்சனா சொல்ல, அவரைத்தேடிக் கொண்டிருக்கும் வேளையில், ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வரும் உஷாவைப் பார்க்கும் கிரி, அவள் சென்றபின் அங்கு விசாரித்து, ஈஸ்வரன் அங்குதான் இருப்பதையும், அவருக்கு ஒரு கை ஒருகால் விளங்காமல் போய்விட்டதையும் தெரிந்துவந்து ஆதியிடமும் காஞ்சனாவிடமும் சொல்கிறான். ஈஸ்வரனைக் அழைத்துக்கொண்டுவரப்போகும் ஆதிக்கும், உஷாவுக்கும் மருத்துவமனையில் சண்டை மூள, அங்கு வரும் டாக்டர், ஆதி கலாட்டா செய்தால் போலீஸில் புகார் செய்வதாகச் சொல்ல, ஆதி வெளியேறுகிறான். ஆனால் வராண்டாவில் அபியைப்பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி. அபியும் உஷாவும் தன்னிடம் நாடகம் ஆடுவதாகவும் அவர்களுக்கு தான் யார் என்பதை விரைவில் காண்பிப்பதாகவும் எச்சரிக்கை செய்துவிட்டுப்போகிறான்.
அபியை அங்கு எதிர்பார்க்காத உஷாவுக்கு ஆச்சர்யம், ஆனால் அது விரைவிலேயே காணாமல் போகிறது. காரணம், அபி ஈஸ்வரனைப்பார்க்க வரவில்லை. தன் பொறுப்பில் வளரும் மஞ்சுளாவின் பிள்ளைகளை செக் பண்ணிவிட்டுப்போகவே வந்திருக்கிறாள்.
டைரியைப்படித்துவிட்டு அம்மாவின் நினைவுகளோடு, தன்னுடைய கடலோர கிராமத்துக்கு வரும் தொல்காப்பியன், அங்கு முன்னர் ஆன்டனியால் சீரழிக்கப்பட்ட பொன்னுத்தாயி என்பவளைச் சந்திக்க, அவள் செல்லமாவைப் பற்றி விசாரிக்கிறாள். செல்லமா இறந்த செய்தி அவளுக்கு அதிர்ச்சியளிக்கிறது. பொன்னுத்தாயி மூலமாக தாஸய்யா, அவரது மகன் ஆண்டனி ஆகியோரின் அடாவடித்தனங்கள் தொல்காப்பியனுக்கு தெரிய வருகின்றன. அவளுடைய உதவியோடு ப்ஞ்சாயத்துபோர்டு அலுவலகத்தில் இருந்து ஆண்டனியின் பழைய போட்டோவைப் பெற்றுக்கொண்டு வருகிறான். இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை வெளியில் இருந்து ஒருவன் சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறான்.
நீண்ட காலத்துக்குப்பின் அப்பாவின் சமாதியில் பூஜை செய்யும் ஆண்டனியிடம், மேற்படி ஆள், செல்லம்மாவின் மகன் தொல்காப்பியன் வந்து ஆண்டனி குடும்பத்தைப்பற்றி விசாரித்து, அவனுடைய போட்டோவையும் வாங்கிப்போனதைச்சொல்ல, தொல்காப்பியனைக்கொல்ல கையில் துப்பாக்கியோடு ஓடும் ஆன்டனி, தான் வருவதற்குள் அவன் படகில் ஏறிச்சென்று விடுவதைப்பார்க்கிறான்.
சென்னை வரும் ஆண்டனி தொல்ஸின் வீட்டைத் தெரிந்துகொண்டு அவனது வருகைக்காக தெருவில் காத்திருக்க, அங்கு வரும் சித்ரா அவனிடம் பேச்சுக்கொடுக்கும்போது அவனிடம் இருக்கும் துப்பாக்கியைப் பார்த்து சந்தேகப்பட்ட்டு விசாரிக்க, ஆண்டனி சுதாரித்துக்கொண்டு ஓடி தலைமறைவாகிறான். இவர்கள் சண்டையில் சித்ராவின் தலையில் அடிபடுகிறது. சிறிதுநேரம் கழித்துவரும் தொல்ஸ், சித்ராவின் காயத்துக்கு மருந்துபோட, அவனுக்கு தெரியாமல் ஆண்டனியின் போட்டோவைப் பார்த்துவிடுகிறாள்.
தொல்காப்பியனும் உஷாவும் வரும்போது அவர்களைசந்திக்கும் வீட்டுக்காரர், தொல்காப்பியனைத்தேடி சந்தேகத்துக்கு உரிய நபர்கள் எல்லாம் வருவதாகவும், ஆகவே அவன் உடனடியாக அங்கிருந்து காலி செய்ய வேன்டும் என்றும் சொல்ல, அவருக்கும் உஷாவுக்கும் வாதம் முற்ற, தொல்காப்பியனை அங்கிருந்து காலிபண்ணி தன் வீட்டுக்கு அழைத்துவருகிறாள் உஷா. தொல்ஸ் உறங்கிக்கொண்டிருக்கும்போது, உஷா "அந்த" டைரியை உஷா படிக்கத்துவங்குகிறாள்....
நலமே இருக்க வாழ்த்துக்கள்
நன்றி வாழ்த்துக்கள்
take care of ur health saradha madam :D
தொல்ச் கொஞ்சம் economics் படித்திருந்தால் நல்லதுபோல.
இந்த நாடகத்தைப் பார்க்க
பார்க்காதவர்கள் - அப்படி யாரும் விரும்பமாட்டார்கள் - இருந்தும்
/cassette/CD/DVD எடுத்துப் பார்க்க வாய்ப்பே இல்லை.
சின்ன நடகங்களை மக்கள் கொப்பி எடுத்துப் பார்ப்பதுண்டு.
இங்கு ....
எத்தனை ஆயிரம் கொப்பிகள் எடுத்துப் பார்ப்பது ???
பாவம் தொல்ஸ் :-(
மீண்டும்Quote:
Originally Posted by aanaa
:huh:
Take care saradha madam :D
நன்றி ஆர்த்தி மற்றும் ஆனா....
கடந்த ஒரு வாரமாக உஷா தொல்காப்பியனின் டைரியைத்தான் படித்துக்கொண்டிருக்கிறாள். (ஒரு வழியாக நேற்று படித்து முடித்துவிட்டாள்).
அதாவது, தொல்காப்பியனின் சின்ன வயது ஃப்ளாஷ்பேக்குகள்தான் ஓடிக்கொன்டிருக்கின்றன. செல்லம்மாவும் வெள்ளையனும் வேலை தேடி கேரளா போனது. அங்கு தொல்காப்பியனும், அவன் தங்கை மீனுவும் பிறந்தது, இருவருக்கும் வேலை கொடுத்த மலையாள நாராயணன் ஜோதிடனின் சொல் கேட்டு (????) செல்லம்மாவிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டது, அங்கிருந்து தப்பி செல்லம்மா தன் குழந்தைகளுடன் ராமேஸ்வரம் வந்தது, மனைவியையும் குழந்தைகளையும் தேடி வெள்ளையனும் ராமேஸ்வரம் வருவது...... இப்படி முழுக்க ஃப்ளாஷ்பேக் கதைதான் ஒருவாரத்தை ஆக்ரமித்துக்கொண்டது.
அடுத்த வாரம் நடப்புக் கதைக்கு திரும்பக்கூடும் என்று நம்புவோம். (ஃப்ளாஷ்பேக் கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் விவரிக்கவில்லை).
:D
:ty:
நேற்றைய எபிசோடிலும் உஷா, தொல்காப்பியனின் டைரியைத்தான் படித்துக்கொண்டிருக்கிறாள்.......
ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடிக்கு அழைத்துப்போவதாக பொய் சொல்லி காரில் ஏற்றிச்செல்லும் வெள்ளையன், தன் மனைவியையும் குழந்தைகளையும் மீண்டும் நாயர் வீட்டுக்கே கொன்டு வந்து சேர்க்க, செல்லம்மா உள்ளே வர மறுக்கிறாள். அவளை அடித்து உள்ளே தள்ளிப் பூட்டிவிட்டு மகள் மீனுவை தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறான். (தொல்காப்பியன் இந்த சீரியலில் தன்னைத்தவிர அத்தனை ஆண்களும் அயோக்கியர்கள் என்றே சித்தரிக்க முயன்றிருக்கிறார்).
அம்மாவைக்காப்பாற்ற, தனக்கு ஆதரவாக இருந்த பெரியவரை அழைத்து வர சிறுவன் தொல்காப்பியன் ஓடிப்போக, அந்த இடைவெளியில் வீட்டுக்குள் நுழையும் நாராயணன் நாயர், செல்லம்மாவிடம் தவறாக நடக்க முயல, அவள் அங்குமிங்கும் ஓடுகிறாள். (வீட்டுக்குள் ஏகப்பட்ட அறைகள் இருக்கின்றன. ஏதாவது ஒரு அறையில் நுழைந்து கதவை உள்ளே தாழ் போட்டால்கூட போச்சு). ஆனால் அவளோ அவனிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறாள். முடிவில் அரிவாளை எடுத்து ஒரே போடு. சரி... போட்டவள் அப்படியே ஓடிப்போக வேண்டியதுதானே?. வெட்டுப்பட்ட நாயர் அவள் கையிலிருந்த அரிவாளையே பிடுங்கி அவளை வெட்டும் வரை கழுத்தைக்காட்டி விட்டு செத்துப்போகிறாள். ரெண்டு பேரும் அவுட்.
ஆக, தொல்காப்பியன் கொல்லவில்லை... தவறான தீர்ப்பினால்தான் சிறுவர் சிறைக்குப் போயிருக்கிறான் என்பது தெளிவாகிறது. (அதானே........, தன் மீது எந்தக் களங்கத்தையும் சுமத்திக்கொள்ள மாட்டாரே.
Welcome back Saradha mam :D
howzzz ur health now? thx for the wonderful update :)
:lol:Quote:
Originally Posted by saradhaa_sn
:rotfl:
:ty:
நன்றி மது & ஆனா.....
செல்லம்மா, நாராயணன் நாயர் இருவரும் கொல்லப்ப்ட்டுக்கிடக்க, பக்கத்தில் ரத்தக்கறை படிந்த சட்டையுடன் நிற்கும் சிறுவன் தொல்காப்பியன், நாயரின் ஆட்களால் பிடிக்கப்பட, அம்மாவின் கள்ளக்காதலைப் பார்க்க நேர்ந்ததால் இருவரையும் சிறுவன் தொல்காப்பியன் கொன்றுவிட்டதாக போலீஸ் கேஸை ஜோடித்து கோர்ட்டுக்கு கொன்டு போக, நீதிபதி வழக்கம்போல.... "சாட்சியங்களை வைத்துப்பார்க்கும்போது தொல்காப்பியன்தான் கொலை செய்தான் என்று நிரூபணமாகிறது" என்ற பீடிகையோடு தொல்ஸை சிறுவர் ஜெயிலுக்கு அனுப்ப....
தனக்கு ஆதரவாக இருந்த பெரியவர், தன்னைப்பார்க்க சிறைக்கு வர, முன்பு அவர் தன்னை தத்தெடுக்க விரும்பியதை தொல்ஸ் அவருக்கு நினைவூட்டி, தனக்கு பதிலாக தன் தங்கை மீனுவை தத்தெடுத்து வளர்த்து படிக்க வைக்குமாறு கூற, அவரும் மீனுவையும் அவன் அப்பாவையும் தேடிக் கண்டுபிடிப்பதாக உறுதியளித்துச்செல்கிறார்.
அடடே இப்போதான் ஞாபகம் வருகிறது... முன்பு மேனகாவின் ஃப்ளாஷ்பேக்கில், அவளை ஒரு பெரியவர் தத்தெடுப்பதாக காட்டினார்களே அந்தப்பெரியவர்தான் இவர். உண்மையில் தத்தெடுக்கவில்லை. பணப்பேயான அவள் அப்பாவிடம் இருந்து விலைக்கு வாங்கினார்.
(அடாடா.... அந்தக்கேரளக்காட்சிகள் கண்ணுக்கு விருந்தோ விருந்து. நாமே நேரில் போய்ப்பார்த்தது போல. அந்த வாய்க்கால்களும், படகு வீடுகளும்.... மலையாளத்திரைப்படங்களில் கூட இவ்வளவு அழகாக பார்த்ததாக நினைவில்லை. திருச்செல்வம் அப்படியே கதையை பெங்களுர், ஜெய்ப்பூர் என்று கொண்டு போனால் தேவலை. காரணம் கேமராவைப் பொறுத்தவரையில் திரைப்படங்களை விட அழகாக எடுக்கிறார்)
saradha madam..nice update with kutti +shottu :D
:exactly:Quote:
Originally Posted by saradhaa_sn
Thanks you saradhaa madam. It's nice to have you back.
எல்லோருக்கும் நன்றி... உங்க அன்பெல்லாம் இருக்கும்போது எனக்கென்ன குறை..?
ஒருவழியாக உஷா, தொல்ஸின் டைரியை மூடிவைத்துவிட்டு, உற்ங்கிக்கொண்டிருக்கும் தொல்ஸைப்பார்த்து, 'இவருக்குள் இவ்வளவு மனக்காயமா' என்ற சிந்தனையுடன் அவ்விடத்திலிருந்து செல்கிறாள்.
கதை நடப்புலகுக்கு வந்து விட்டது.... (இன்னொரு ஃப்ளாஷ்பேக் வரும்வரை)
ஒண்ணுக்கும் உதவாத தன் அப்பாவை அம்மா ஏன் வீட்டுக்கு அழைத்துவரவேண்டுமென்று பிடிவாதம் செய்கிறாள் என்று அலுத்துக்கொள்ளும் ஆதியிடம், கிரி இதைவிட முக்கியமான வேலைகள் இருப்பதாகவும் முத்லில் அசோஸியேஷன் தலைவர் தேர்தலில் வெற்றிபெற வேன்டுமென்றும் சொல்ல, அதற்கு ஆதி 'நிச்சயம் நான்தான் ஜெயிப்பேன். அந்த அபிக்கு கிழவன் வரதராஜன் போன்ற ஒருசிலருடைய ஆதரவு இருக்கலாம், ஆனால் பெரும்பாலோர் என் பக்கம்தான். நான் ஜெயிச்சதும் அவங்களையெல்லாம் என்ன பண்றேன்னு பார்' என்று சொல்கிறான். அப்போது போன், மேனகாவிடமிருந்துதான். அந்த இரவிலும் உடனடியாக வீட்டுக்கு வரும்படி சொல்கிறாள்.
மேனகாவின் வீட்டில் அவளை கிரியுடன் போய் சந்திக்க, அவளும் தலைவர் தேர்தல் பற்றியே பேசுகிறாள். ஆனால் அவள் சொல்லும் வழி வேறு. அபியை எதிர்த்து நின்று ஜெயிப்பதைவிட, அவளை தேர்தலிலேயே நிற்காமல் செய்ய வேண்டும். ஆதியை எதிர்த்து நிற்கணும்னு எதிர்காலத்தில் யாருக்குமே ஒரு எண்ணம் வரக்கூடாது. அந்த அளவுக்கு அவளுக்கு ஒரு பாடம் புகட்ட வேன்டுமென்று சொல்ல, ஆதியும் அதே எண்ணத்துடன் புறப்படுகிறான்.
(மீனவர் குப்பத்து செல்லம்மாவாகவும், கோடீஸ்வரி மேனகாவாகவும் இருவேறுபட்ட பாத்திரங்களில் எவ்வளவு வித்தியாசமான நடிப்பு...!!!!)
:ty:
ஆமாQuote:
Originally Posted by saradhaa_sn
அந்த நடிகையின் பெயர் தெரியுமா?
காலையில் தொல்காப்பியனுக்கு காபி கொண்டுவந்து கொடுக்கும் உஷா, தொல்ஸின் தெளிவான முகத்தைப்பார்த்து, 'எப்படி இந்த மனிதரால் எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டு அழுத்திக்கொண்டு ஒண்ணுமே நடக்காததுபோல் இருக்க முடிகிறது?' என்ற எண்ணத்துடன் பார்க்க...
'என்ன உஷா, ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?'
'தொல்ஸ், எப்படி உங்க கஷ்டத்தை எல்லாம் வெளியில் சொல்லாமல் உங்களுக்குள்ளேயே அடக்கிக்கொள்ல முடிகிறது?' (என்ன கஷ்ட்டம் என்று சொல்லவில்லை).
'கஷட்டத்தை வெளியில் சொல்லி மத்தவங்களையும் கஷ்ட்டப்படுத்துவதைவிட, சந்தோஷத்தை பகிர்ந்து மத்தவங்களையும் சந்தோஷப்படுத்துவது நல்லது என்பது என் எண்ணம்'
'அப்போ நீங்க மட்டும் மத்தவங்க கஷ்ட்டத்தை எல்லாம் தாங்கிப்பீங்க. அப்படித்தானே?'
'உஷா என்ன சொல்ல வர்ரீங்க?'
'ஸாரி தொல்ஸ், நேத்து ராத்திரி....' அவள் சொல்லி முடிப்பதற்குள் கீழேயிருந்து அப்பாவின் குரல் 'உஷா உனக்கு ரிஜிஸ்ட்டர் போஸ்ட் வந்திருக்கு. வந்து வாங்கிக்கம்மா'
உஷா கீழே வந்து ரிஜிஸ்ட்டர் கவரை வாங்கிப்பிரித்துபார்த்து விட்டு லேசாக சிரிக்க, அவள் அப்பா 'என்னம்மா, சிரிக்கிறே?. யாராவது ரிஜிஸ்ட்டர் போஸ்ட்டில் ஜோக்ஸ் அனுப்பியிருக்காங்களா?'
'கிட்டத்தட்ட அப்படிதாம்ப்பா. ஆதி டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கார். நான்தான் அந்த ஆதியே வேண்டாம்னு வந்திட்டேனே. அப்புறம் எதுக்கு நோட்டீஸ் எல்லாம்?'
இப்போது அப்பா, 'அதில்லைம்மா, நாளைக்கு உன்னால் பிரச்சினை வரக்கூடாதுன்னு நினைச்சிருப்பார்'
'அதில்லைப்பா, நோட்டீஸைப்பார்த்ததும் நான் அவன் காலில் போய் விழுவேன்னு எதிர்பார்த்திருப்பான்'
அப்போது தொல்ஸ் வந்து 'இது விஷயமா நீங்க நல்லா யோசிச்சு முடிவு செய்யணும் உஷா. இதுல உங்க வாழ்க்கை மட்டுமல்ல உங்க பையனின் எதிர்காலமும் அடங்கியிருக்கு'.
'இல்லே தொல்ஸ், அந்த ஆதியோட தயவு இல்லாமல் என்னால் என் மகனை வளர்க்க முடியும். அப்பாவைப்பத்தி அவன் கேட்கும் முன் நானே அவனிடம் எல்லாத்தையும் சொல்லிடுவேனே தவிர, மத்தவங்க மாதிரி அப்பா செத்துப்போயிட்டார், அப்படி, இப்படின்னு பொய் சொல்ல மாட்டேன்'
'சார், நீங்களாவது உஷாவுக்கு எடுத்துச் சொல்லக்கூடாதா?'
'இல்லே தொல்காப்பியன். எனக்கென்னமோ உஷா எடுத்த முடிவு சரின்னு படுது'
'இதை விடுங்கப்பா, இன்னைக்கு பத்து மணிக்கு மாமாவை டிஸ்சார்ஜ் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரணும். வாங்க போகலாம்'
அபியின் வீடு.....
கற்பகம், ஆனந்தி, ஆர்த்தி ஆகியோர் இருக்க மனோ வருகிறான். சஷ்டியப்த விழா நேரத்தில் அந்த ஆதிக்கு சாதகமாக பேசிவிட்டு தங்களைவிட்டு விலகிப்போய்விட்டதற்காக மூவரும் அவனை பிடி பிடியென்று பிடிக்கிறார்கள். (அப்பாவை அந்த ஆதி வீட்டுக்கு கடத்திப்போனவனே அவன்தான் என்பது இன்னும் அவர்களுக்கு தெரியாது)....
'சும்மா நிறுத்துங்க. என்னமோ என்மீது பாய்றீங்களே, இப்போ அபியக்கா செஞ்சது உங்களுக்கெல்லாம் தெரியுமா?. நீங்களெல்லாம் எந்த அப்பாவை இனி எக்காரணம் கொண்டும் சேர்க்கக்கூடதுன்னு விரட்டினீங்களோ அந்த அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்ப்பதே அபியக்காதான்'. இதைக்கேட்ட் அம்மாவுக்கும் ஆர்த்திக்கும் அதிர்ச்சி..
ஆனால் ஆனந்தி 'சும்மா நிறுத்துடா, அக்கா அந்த மாதிரியெல்லாம் செய்யாது'.
'அப்படியா, சந்தேகமாயிருந்தா என்னோடு இப்பவே ஆஸ்பத்திரிக்கு வாங்க'.
அப்போ உள்ளே நுழையும் அபி, 'இங்கே எதுக்குடா வந்தே?. அன்னைக்கு உன் மனைவியின் பேச்சைக்கேட்ட் ஓடுனியா அல்லது ஆதியின் வசதியைப்பார்த்து ஓடுனியா?'
'அக்கா இவன் என்ன சொல்றான்னா...'
'எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான் வந்தேன் ஆனந்தி. டேய் மனோ, உனக்கு அந்த ஆதிதானே சொன்னான்?. ஆனந்தி, நடந்தது என்னன்னா மஞ்சுளாவின் குழந்தைகளை செக்கப்புக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போனேன். அங்கே அந்த ஆதி இருந்தான். அவன் சொல்லித்தான் தெரியும் அப்பா அங்கேதான் அட்மிட் ஆயிருக்காருன்னு தெரிஞ்சிருந்தா, வேறு ஆஸ்பத்திரிக்குப்போயிருப்பேன்'.
நால்வரும் சேர்ந்து மனோவை சரமாரியாக திட்ட அவன் ஓடிப்போகிறான்.
ஆதியின் வீடு....
'இந்நேரம் மனோ போய் அந்த வீட்டில் அபிக்கு எதிராக குழப்பத்தை உண்டுபண்ணியிருப்பார்' என்று அனு சொல்லிக்கொண்டிக்கும்போது உள்ளே நுழையும் மனோ, 'நாம் நினைச்சது மாதிரி நடக்கவில்லை. அபியக்கா குழந்தைகளை 'செக்கப்' பண்ணத்தான் வந்ததாக சொல்லி திசை திருப்பிட்டாங்க'.
உடனே ஆதி, 'பொய்... சுத்தப்பொய். நான் பார்க்கும்போது அங்கு எந்த குழந்தையும் இல்லை'. (ஆதியும் கூட அபிதான் ஈஸ்வரனை ஆஸ்பத்திரியில் கவனிப்பதாகவே நம்புகிறான்).
அப்போது கிரி, 'பாஸ், இன்னைக்கு பத்துமணிக்கு உங்க அப்பாவை டிஸ்சார்ஜ் பண்ணி உஷா மேடம் வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுபோறாங்களாம்'.
'பாத்தியாடா, என்ன திமிர் அந்த உஷாவுக்கு. போ, நீ போய் அவரை டிஸ்சார்ஜ் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா'.
ஆதி, அனு, மனோ, ரேகா நால்வரும் புறப்ப்ட்டுப்போக... காஞ்சனாவின் முகம் குளோசப்பில்.
ஆனா,Quote:
Originally Posted by aanaa
அவரது பெயர் பூர்ணிமா. மறைந்த மலையாள நடிகர் சுகுமாரின் மருமகள். நடிகர் இந்த்ரஜிதின் மனைவி. நடிகர் ப்ரித்விராஜின் (மொழி) அண்ணி.
அன்புடன்
நன்றி முரளி,
நீங்கள் இந்த சீரியல் பார்க்கிறீர்கள் என்பதும், இந்த த்ரெட்கள் பக்கமும் உலவுகிறீர்கள் என்பதும் PLEASANT SURPRISE.
ஆனா,
தகவல் களஞ்சியம் முரளி இருக்கையில் அப்புறம் என்ன...?.
:ty:Quote:
Originally Posted by Murali Srinivas
சரித்திரமே இருக்கு
நன்றி
ஈஸ்வரனை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச்செல்ல உஷா, அப்பா, அம்மா, தொல்காப்பியன் ஆகியோர் ஏற்பாடு செய்துகொண்டிருக்கும்போது, எதிர்பார்த்தபடியே ஆதி மற்றும் நால்வரும் உள்ளே நுழைகின்றனர்....
'ஏய் உஷா, நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே?'
'மாமாவை டிஸ்சார்ஜ் பண்ணி எங்க வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப்போறேன்'
'நீயே எனக்கு வேண்டாம்னு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கேன். அப்படியிருக்க எங்க அப்பா மட்டும் எப்படி உனக்கு மாமாவானார்?'.
'இதோ பாருங்க ஆதி, உங்களுக்கும் எனக்கும் இருக்கும் பிரச்சினை வேறு, அதுல இந்த இந்த மனுஷனைப்போட்டு ஏன் சித்திரவதை பண்றீங்க?. கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடக்கப்பாருங்க'.
இந்த இடத்தில் தொல்காப்பியன் ஏதோ குறுக்கிட்டுப்பேச, 'ஏய் நீ பேசாதே. இது எங்க குடும்ப விஷயம், நீ இதுல தலையிடாதே'.
தொடர்ந்து உஷா, ரேகா மனோ, அனு ஆதி இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றுகிறது. ஆதியின் கத்தலைப்பொறுக்க முடியாத உஷாவின் அப்பா, 'உஷா, நீ என்னதான் மனிதாபிமான அடிப்படையில் பேசினாலும் உரிமைன்னு வரும்போது ஆதி சொல்றதுதான் எடுபடும், ஏனா அவருடைய அப்பா. அதனால அவரே ஈஸ்வரனை அழைச்சிக்கிட்டுப் போகட்டும், நாம் போகலாம் வா'.
'ஏய் உஷா, இந்தா எங்க அப்பாவுக்கு நீ செய்த வைத்திய செலவுக்கான பணம்'. ஆதி கொடுத்த பணத்தை ஈஸ்வரனின் கட்டில் மேலேயே வைத்துவிட்டு உஷா வெளியேறுகிறாள்.
மேனகாவின் வீடு......
மேனகா அவசரமாக வெளியே கிளம்பிக்கொண்டிருக்கும்போது போலீஸ் அதிகாரி வருகிறார்..
'உங்களோடு ஒரு முக்கிய விஷயம் பேசணும்'.
'நான் அவசரமா வெளியே கிளம்பிக்கிட்டு இருக்கேன். என்ன விஷயம் சொல்லுங்க'
'இப்போ உங்க உயிருக்கு மீண்டும் ஆபத்து'.
'இதையேதான் எப்போதும் சொல்லிக்கிட்டு இருக்கீங்க, ஆனா அதற்கு காரணமான நபரைக் கண்டுபிடிக்க காணோமே. ஒவ்வொரு முறை என்மீது கொலைமுயற்சி நடக்கும்போதும் நீங்க வேடிக்கை பார்த்துக்கிட்டிருப்பீங்க. அந்த தொல்காப்பியன் எங்கிருந்தாவது வந்து காப்பாத்துவான். இதானே நடக்குது..!'.
'மேடம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லே. அந்த தொல்காப்பியனும் உங்களது கொலைமுயற்சியில் கூட்டாளிதான்னு இப்போ சந்தேகப்ப்டுறோம். ஒவ்வொரு முறையும் அவன் உங்களைக்கொல்லத்தான் வருகிறான்'
'வாட் ஆர் யூ டாக்கிங் இன்ஸ்பெக்டர்?. முடிஞ்சா எனக்கு பாதுகாப்பு கொடுங்க, இல்லேன்னா விட்டுடுங்க. என் செக்யூரிட்டியை நான் பாக்குக்கறேன்'.
பேசிக்கொண்டே வெளியே போகிறாள்.
காஞ்சனாவின் வீடு....
ஈஸ்வரனைக் கட்டிலில் கிடத்தியிருக்க, அவர் கண்ணெதிரிலேயே அம்மாவிடம் கத்திக்கொண்டிருக்கிறான் ஆதி...
'அம்மா இந்த மனுஷனால ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு இடத்திலும் எனக்கு அவமானம்தான். இன்னைக்கு ஆஸ்பத்திரியிலே அந்த உஷாவும் தொல்காப்பியனும் என்ன பேசினாங்க தெரியுமா? தொல்காப்பியனை விடுங்க, ஆனா அந்த உஷா ரொம்ப மோசமா பேசிட்டா. எல்லாம் யாரால?. இந்த மனுஷனாலதானே. முதல் கல்யாணம் பண்ணியவர் அவங்களோடவே எங்காவது குடிசைல இருந்துட்டு போக வேண்டியதுதானே. எதுக்கு உங்களை கல்யாணம் பண்ணி, நாங்கள்ளாம் பொறந்து, இந்த அவமானமெல்லாம் எங்களுக்கு தேவையா?'
'ஆதி இப்போ பழசையெல்லாம் பேசி என்னடா பிரயோஜனம்? இனிமே ஆகவேண்டியதைப் பார்ப்போம்'.
இப்போது ரேகா குறுக்கிட்டு... 'ஆதி, இதுனால நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணி உடம்பை கெடுத்துக்காதீங்க. அவங்க குடும்பமே அப்படித்தான். அவங்க அப்பான்னு ஒருத்தர் இருக்காரே, அவர் உஷாவுடைய சொந்த அப்பாவா? அவங்க அம்மாவுடைய ரெண்டாவது புருஷன்தானே. அப்படீன்னா அந்த அம்மாவின் புத்திதானே உஷாவுக்கும் வரும்'.
'அவளுடைய ஆட்டத்துக்கேல்லாம் பின்னாடி யார் இருக்கான்னு எனக்கு தெரியும் ரேகா, அந்த அபிதான் எல்லாத்தையும் ஆட்டி வைக்கிறாள். அபியையும் உஷாவையும் ஷூட் பண்ணினால் கூட தப்பில்லை. காட்டுறேன்... இந்த ஆதி யாருன்னு காட்டுறேன்'.
அபியின் அலுவலகம்... அபி, விஸ்வநாதன், ராஜாமணி, வரதராஜன் ஆகியோர் ஆலோசனையில் இருக்கின்றனர். அப்போது வரதராஜன்... 'அபி, பிரஸிடெண்ட் எலெக்ஷன் நெருங்கிக்கிட்டு இருக்கு. என்ன ஏற்பாடு செஞ்சிருக்கீங்க?'
'ஆமா சார், ரொம்ப வேகமா நாள் ஓடிக்கிட்டு இருக்கு. இதோ இந்த ஃபைலைப்ப்பாருங்க. இதுல நம்மை ரொம்ப கான்ஃபிடன்ட்டா ஆதரிக்கிறவங்க யார் யாருன்னு லிஸ்ட் போட்டிருக்கேன். அதுபோல ஆதியை ரொம்ப ஸ்ட்ராங்கா சப்போர்ட் பண்றவங்க யாருன்னும் லிஸ்ட பண்ணியிருக்கேன். அவங்க எக்காரணம் கொண்டும் நம்ம பக்கம் திரும்ப மாட்டாங்க, ஏன்னா அவங்க ஆதியால ரொம்ப பலன் அடைஞ்சவங்க. அதுபோக இரண்டுபக்கமும் இல்லாமல் நியூட்ரலா இருக்கிறவங்களையும் லிஸ்ட் எடுத்திருக்கேன். அவங்க என்னை சப்போர்ட் பண்ணனும்னு கேட்டு எல்லோருக்கும் பெர்சனலா ஈ மெயில் அனுப்பியிருக்கேன், அத்துடன் அவங்களை நேரில் சந்தித்தும் ஆதரவு திரட்டிக்கிட்டிருக்கேன். விஸ்வநாதன் சார்... அந்த சிட்டி பில்டர்ஸ் எல்லாரும் உங்களுக்கு வேண்டியவங்க. அவங்க கிட்டே நீங்கதான் பேசி எனக்கு சப்போர்ட் பண்ண சொல்லணும்'.
'அதுக்கென்ன அபி நான் கன்டிப்பா சொல்றேன். அவங்க அதரவு உனக்கு வந்தாச்சுன்னு வச்சுக்கோ'.
'வெரிகுட் அபி, நல்ல ஏற்பாடுகள் செஞ்சிருக்கீங்க. அப்போ நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும்னு சொல்லுங்க'
'கண்டிப்பா இந்த பிரஸிடெண்ட் எலக்ஷன்ல நம் ஜெயிக்கிறோம் சார்'.
அபியின் நம்பிக்கையுடன் கூடிய புன்னகைமுகம் குளோசப்பில்....
சாரதா,Quote:
Originally Posted by saradhaa_sn
நான் இந்த சீரியல் பார்ப்பதில்லை (எந்த சீரியலுமே) . ஆனால் உங்கள் தொகுப்பை (உங்கள் எழுத்து நடைக்காகவே) நடு நடுவே படித்து விடுவேன். ஆனால் நான்கு வருடங்களாக இது ஓடுவதால் நடிக நடிகையரை தெரியும். முதலில் பூர்ணிமா (மோகன்) திரைப்படங்களிலும் பிறகு ஏசியா நெட் தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சியை (நமது பெப்சி உங்கள் சாய்ஸ் போல) தொகுத்து வழங்கினார். பிறகு திருமணம் செய்து கொண்டு விட்டார். ஆக அந்த முக பரிச்சயம் தான் ஆனா-வின் கேள்விக்கு பதிலளிக்க உதவியது.
அன்புடன்
ஆஸ்பத்திரியில் ஆதியும் அவனைச்சேர்ந்தவர்களும் அவ்வளவு பேசும்போது, உஷாவும் தொல்காப்பியனும் மனிதாபிமானம், அது இது என்று உப்பு சப்பில்லாத பதில் சொல்வதை விடுத்து....
"இன்றைக்கு ஐந்து பேர் வரிந்து கட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்களே. அன்று இவர் ரோட்டோரத்தில் மயக்கமடைந்து அனாதையாய்க் கிடந்தபோது நீங்களெல்லாம் எங்கே போயிருந்தீர்கள்?" என்று கேள்வியைக்கேட்டு மடக்கியிருக்கலாம். ஆதி கும்பல் கொஞ்சம் ஆடிப்போயிருக்கும்.
:ty:
எழுத்து நடை :clap:
shorthand படித்தீர்களா
நன்றி ஆனா,
நான் SHORT-HAND படிக்கவில்லை. ஆனால் இருக்கின்ற HANDS-ஐ வைத்து எதையும் SHORT ஆக முடிக்க TRY பண்ணுவேன். (நன்றி: விவேக்).
மற்றபடி, எல்லாம் நினைவுகளில் இருந்து வருவதுதான்.
Good sense of humour :rotfl:Quote:
Originally Posted by saradhaa_sn
:rotfl:
உஷாவை டைவர்ஸ் செய்வது சம்மந்தமாக லாயரைப்போய்ப் பார்க்கும் ஆதி அவரிடம் எவ்வளவு சீக்கிரம் விவாகரத்துப் பெறமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் பெற வேன்டுமென்று வற்புறுத்த, அவரோ ஆதியின் ஆதியின் அவசரத்துக்கெல்லாம் சட்டம் இடம் கொடுக்காது என்றும், எப்படியும் ஆறு மாதங்களாவது ஆகும் என்றும் சொல்வதுடன், அதற்கு முன்னர் முடித்துக்கொள்வதானால் ஒரு வழியிருப்பதாகவும் சொல்லி, உஷாவும் ஆதியும் சுமுகமான முறையில் பேசி இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பிரிவதாக இருந்தால் உடனடியாக விவாகரத்து கிடைக்க வழியுண்டு என்று சொல்கிறார்.
ஆதிக்கு இதில் உடன்பாடு இல்லாததுடன், உஷாவும் இதற்கு சம்மதிக்க மாட்டாள் என்றும் சொல்லி மறுக்கிறான். ஆனால் இந்த இடத்தில் ஒரு பெரியகுண்டைத்தூக்க்கிப்போடுகிறார். நாளை இவர்களின் விவாகரத்து வழக்கு மீடியாக்களில் வந்தால், அதனால் ஆதியின் பெயர் அவனுடைய சொஸைட்டியில் கெட வாய்ப்புள்ளது என்று கூற, தன் இமேஜைப்பெரிதாக நினைக்கும் ஆதி சற்று யோசிக்கிறான். இந்த சந்தர்ப்பத்தில், தான் உஷாவிடமும் அவளுடைய அப்பா அம்மாவிடமும் பேசிப்பார்ப்பதாக கிரி சொல்ல, ஆதி அரை மனதுடன் சம்மதிக்கிறான்.
ஆர்த்தியும் ராஜேஷும் தாங்கள் திட்டமிட்டபடி டாங்கர் லாரி ஒன்றை வாங்கி அதற்கு பூஜையும் போட்டு பிஸினஸைத்துவக்குகின்றனர். 'கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளி'யாக சிவசுவும் கூடவே இருக்கிறான்.
'ஆர்த்தி, நாம விரும்பியபடியே டாங்கர் லாரி வாங்கிட்டோம். இதுக்கெல்லாம் உன்னுடைய முயற்சிதான் காரணம்'.
'நம்முடைய முயற்சியைவிட ஆதியண்ணாவின் பெரிய உதவிதாங்க காரணம்'.
'அது உண்மைதான் ஆர்த்தி. சிவசு, முதல்ல டேங்கர் எங்கே போகுது?'
'டீஸல் ஏத்திக்கிட்டு திருச்சிக்கு போகுதுங்க'.
'சரி டிரைவர் பத்திரமா பார்த்து போங்க'.
டிரைவருடன் சிவசுவும் வண்டியில் ஏறிகொள்ள, அவன் சொல்லும் பாதையிலேயே ஓட்டச்சொல்கிறான். 'ஏங்க இந்த வழியா போனா டீஸல் லோடு பண்ற இடம் வராதுங்க'.
'டிரைவர், நாம் இப்போ டீஸல் லோடு பண்ணபோகலை. மனிதனுக்கு தேவையான டீஸல் ஏத்தப்போறோம்'
'என்னது சாராயமா?. இது தப்பில்லீங்களா? எனக்கு இது சரியா படலைங்க'.
அப்போது சிவசு, டிரைவரிடம் கத்தையாக பணத்தைக்கொடுத்து அவன் வாயை அடைக்க முயல, அப்படியும் டிரைவருக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. இருந்தாலும் சிவசுவின் சொல்படி வண்டி சாராய ஃபேக்டரிக்குப் போகிறது.
உஷாவின் பெற்றோருடன் பேசுவதாகச்சொன்ன கிரி, உஷா இல்லாத நேரம் அவர்கள் வீட்டுக்குப்போக, அங்கு அவனுக்கு வரவேற்பே சரியில்லை. இருந்தாலும் உஷாவின் அம்மா 'அவர் சொல்ல வந்ததையும் கேட்போமே' என்று சொல்ல.... உஷா தன் பாஸுடன் சமாதன்மாக பிரிந்துபோனால் இருவருக்கும் நல்லது, இருவரின் பெயரும் வெளியில் மீடியாக்களில் அடிபட்டு அசிங்கமாகாது என்று எடுத்துச்சொல்லிக் கொண்டிருக்கும் நேரம் வெளியிலிருந்து வரும் உஷா, 'கிரி உங்க பாஸ்தானே எனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பினார்?. நான் அனுப்பலையே. அப்போ இதை சட்டப்படி கோர்ட்டிலேயே பார்த்துக்கொள்கிறேன், நீ போகலாம்' என்று சொல்ல, கிரி மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுக்க அவள் கேட்க மறுத்து விரட்டுகிறாள்.
கிரி வெளியே போகும் நேரம் தொல்காப்பியன் அங்கு வர, 'ஓ... இவரும் வந்துட்டாரா?. பாஸுக்கும் உங்களுக்கும் பிரிவு வரக்காரணமே இவர்தானே' என்று சொல்லும் கிரியிடம், 'அவர் இப்போ வந்தது மட்டுமல்ல. இங்கே எங்க வீட்லதான் தங்கியிருக்கார். இதையும் உங்க பாஸ் கிட்டே சொல்லு' என்று சொல்லி விரட்டுகிறாள். எல்லோரும் போன பின்னரும், கிரி சொன்ன அந்த வார்த்தை தொல்காப்பியன் மனதை உறுத்துகிறது.
இரவு நேரத்தில் ஆதியை சந்திக்க வரும் கிரியிடம்...
'அங்கே போனியே என்ன ஆச்சு? திட்டி அனுப்பினாளா? இல்லே அடிச்சு அனுப்பினாளா?'
'நீங்க சொன்னது சரிதான் பாஸ், உஷா மேடம் எந்த சமாதானத்துக்கும் வர விரும்பவில்லை, கோர்ட்டிலேயே பார்த்துறேன்னு சொல்லிட்டாங்க'
'அதான் சொன்னேனே கிரி. அவளைப்பத்தி எனக்கு தெரியும். நீயும் லாயரும்தான் சமாதானமா போகனும்னீங்க'.
'இன்னொரு விஷயம் பாஸ். அந்த தொல்காப்பியனும் அவங்க கூடவே இருக்கன்'.
'அதான் தெரியுமே, அவன்கூடத்தானே அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு சுத்துறா'.
'அதில்லை பாஸ், இப்போ தொல்காப்பியன் உஷா மேடம் வீட்டிலேயே தங்கியிருக்கான். இதை மேடமே என் கிட்டே சொன்னாங்க'.
ஆதிக்கு சற்று அதிர்ச்சி....
'அப்படியா? அந்த உஷாவை என்ன கதியாக்குறேன்னு பார் கிரி'...
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
:rotfl:
Thanks for the updates, I really appreciate it.
நன்றி ஆனா & கீதா...
தன்னைப்பார்க்க "ஆதியண்ணா" வீடு தேடி வந்திருப்பதைபார்த்து ஆர்த்திக்கு வாயெல்லாம் பல். (ஆதி, தனக்கு ஆதாயமில்லாமல் துரும்பைக்கூட அசைக்க மாட்டான் என்பது இன்னும் இவர்களுக்கெல்லாம் தெரியவில்லை). வீட்டுக்குள் அழைத்தும் வராமல் வெளியில் நின்றே பேசுகிறான்.
"இதோ பார் ஆர்த்தி, உங்க அக்கா அபியை நான் என் எதிரியாக நினக்கலை. ஆனால் அவள்தான் என்னுடைய ஒவ்வொரு விஷயத்திலும் குறுக்கே வந்து எனக்கு சங்கடம் கொடுக்கிறாள். இப்போ அசோஸியேஷன் பிரஸிடெண்ட் எலெக்ஷனில் அபி நிற்கப்போவது உனக்கு தெரியுமா?"
தெரியும் என்பதாக ஆர்த்தி தலையாட்டுகிறாள்.
"உங்க அக்காவுக்கு இது தேவையா?. இப்போ அவள் பிஸினஸில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டிய நேரம். இப்போ எதுக்கு அவளுக்கு தலைவர் பதவியெல்லாம்?. அதனால் பிஸினஸ் எவ்வளவு பாதிக்கும் தெரியுமா?. அதுவும் கூட, நான் நிற்பது தெரிஞ்சும் எதிர்த்து நிற்கிறாள்னா என்ன அர்த்தம்?. எல்லா விஷ்யத்திலும் எனக்கு பிரச்சினை பண்ணனும்னுதானே. சஷ்டியப்த பூர்த்தி விழாவுல எங்களுக்குத்தான் உரிமையிருக்குன்னு சொன்னோம். அப்பாவும் அதைப்புரிஞ்சிகிட்டு அந்த நேரத்தில் எங்க வீட்டுக்கு வந்துட்டார்.(???) அதுக்காக கோபப்பட்டு அபி இதில இறங்கினாளா?. எனக்கு தெரியும், அவளாக இறங்கவில்லை, சில பேர் அவளை தூண்டி விட்டு இந்த எலக்ஷன்ல நிறுத்துறாங்க. அவங்களுக்கு என்னை எதிர்க்க உங்க அக்காவை விட்டால் ஆள் கிடைக்கலை. இதெல்லாம் அவளுக்கு தேவையா?"
"நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியுது அண்ணா. ஆனால் அக்கா கிட்டே இதையெல்லாம் யார் சொல்றது?"
"நீதான் சொல்லணும் ஆர்த்தி. ஏன்னா இப்போ அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல நீயும் ஒரு பார்ட்னர். அதனால தைரியமா சொல்லு. உன்னுடைய ட்ராவல்ஸுக்கு பிஸினஸ் பிடிக்க உதவி செஞ்சதுக்காகவும் , டேங்கர் லாரி வாங்க லோன் ஏற்பாடு செய்ததற்காகவும் இதைக் கேட்கவில்லை. என்னடா செஞ்ச உதவிகளை சொல்லிக்காட்டறானேன்னு நினைக்காதே".
"அய்யோ அப்படியில்லை அண்ணா, அதுக்கு ஒரு கைமாறு செய்ய வாய்ப்புக் கிடைக்குமான்னுதான் எதிர்பார்த்திருக்கேன்".
"ஆர்த்தி, நீ சொல்றது உண்மையா இருந்தால் இந்த விஷயத்துல தலையிட்டு அவளைத்தடுத்து நிறுத்து. உங்க அம்மா சொன்னால் அபி கேட்க மாட்டாளா?. அவங்க கிட்டே இதுல உள்ள பிரச்சினைகளை எடுத்துச்சொல்லு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ ஆர்த்தி, மத்த விஷயம் மாதிரி இல்லே இது, என்னுடைய கௌரவ பிரச்சினை. இதுல இடைஞ்சல் வந்தா நான் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டேன்".
அபியின் வீடு. அபி வீட்டில் இல்லாத நேரம் ஆர்த்தி வருகிறாள்...
"அம்மா, அக்கா இன்னும் வீட்டுக்கு வரலையா?"
"அவள் இப்போ எங்கே வரப்போறா. ஏதோ அசோஸியேஷன் வேலை அது இதுன்னு லேட்டாத்தான் வர்ரா".
"அது விஷயமா பேசத்தான் வந்தேம்மா. அந்த ஆதியை எதிர்த்துக்கிட்டு அக்காவுக்கு ஏம்மா இந்த வீண் வேலை?. இதுல நமக்கு என்ன பிரயோஜனம்? கம்பெனிக்கு பெரிய ப்ராஜக்ட் கிடைத்து, அதில் கவனமாக இருக்கிற நேரத்தில் எதுக்கு இந்த வேண்டாத வேலை?. இதனால அந்த ஆதியின் கோபம் அதிகமாகி அக்காவுக்கு எதிராக இன்னும் ஏதாவது இடைஞ்சல் கொடுப்பான்".
"ஆர்த்தி, இதைப்பத்தி எனக்கென்ன தெரியும்?. தவிர அபி நல்லா யோசிக்காமலா இதுல இறங்கியிருப்பாள்?".
"அக்காவும் மனுஷிதானம்மா. அவங்களும் தப்பு செய்ய வாய்ப்பிருக்கில்ல?"
இந்த உரையாடலைக்கேட்டுக்கொண்டே வரும் ஆனந்தி, அபியின் முடிவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள்.
"நான் அதுக்கு சொல்லலைக்கா. இந்த தலைவர் பதவியால நம்முடைய பிஸினஸுக்கு இடைஞ்சல்கள் வருமே தவிர எந்த பிரயோஜனமும் கிடையாது. அக்காவின் கவனமும் பிஸினஸைவிட்டு மாறிப்போகும்ணுதான் சொல்றேன்"
(சும்மா சொல்லக்கூடாது. 'ஆதியண்ணா' நல்லாவே பிரைன்வாஷ் அனுப்பியிருக்கார்).
ஆர்த்தி வந்து அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, டாக்டர் மகேஷ் வீட்டுக்குள் வருகிறார். அவரைப்பார்த்ததும் எல்லோருக்கும் மகிழ்ச்சி.
"வாங்க தம்பி வாங்க?. எப்படி இருக்கீங்க, எப்போ வந்தீங்க?"
"நான் வந்து ரென்டு நாளாச்சுங்க. இனிமேல் சென்னையில்தான் நிரந்தரமாக இருக்கப்போகிறேன்".
"அப்படியா ரொம்ப சந்தோஷம்"
"சரி அபி எப்படி இருக்காங்க?"
"அபியிடம் எந்த மாற்றமும் இல்லை, அப்படியேதான் இருக்கா".
"நானும் அப்படியேதான் இருக்கேன்.... யெஸ் ஸ்டில் வெயிட்டிங். அப்போ நான் வர்ரேங்க".
மகேஷ் போனதும், சாரதா கற்பகத்திடம் "அக்கா. அந்த தம்பி சொன்னதைக்கேட்டீங்களா? இன்னும் அபிக்காக காத்துக்கிட்டு இருக்காராம். நாமதான் அபிக்கு எடுத்துச்சொல்லி சம்மதிக்க வைக்கணும்"
கற்பகத்திடமிருந்து (வழக்கம்போல) பெருமூச்சு...
கோர்ட்......
காரை விட்டு இறங்கும் ஆதியை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகள் கேட்க, அவன் எந்த ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் உள்ளே போகிறான். (அந்த நிருபர்கள், ஏதோ ஒரு நடிகையின் வழக்கு சம்மந்தமாக வம்பளக்க வந்தவர்கள். நடிகை வராததால் ஆதியிடமாவது ஏதாவது தீனி கிடைக்குமா என்று பார்த்தனர்... ஊகும்). அதுபோலவே காரில் வந்திறங்கும் உஷாவிடமும் அவர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
நீதிபதி முன் அமர்ந்திருக்கின்றனர். அவர் இருவரையும் சமாதானமாகப் போக முயற்சிக்குமாறு சொல்கிறார். இருவருக்குமே அதில் விருப்பமில்லை. தனியாக மனவிட்டுப் பேசும்படி ஜட்ஜ் சொல்லியும் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லையென்று மறுக்கின்றனர்...
"சார், இந்த ஆதி ஒரு மேல் ஷாவனிஸ்ட். பெண்கள்னாலே அடிமைன்னு நினைக்கிறவர். அவருக்கு தேவை மனைவிங்கற பேர்ல ஒரு அடிமை. அதுக்கு நான் ஆளில்லை".
"ஏன் சார், மனைவியைப்பார்த்து குடும்ப பொண்ணா நம்ம கலாச்சாரத்து ஏற்றபடி நடந்துக்கோன்னு சொல்றது தப்பா. இதோ பாருங்க பேண்ட்டும் ஷர்ட்டும் போட்டுக்கொண்டு கோமாளி மாதிரி வந்திருக்கா. கழுத்தில் நான் கட்டிய தாலி கூட இல்லை".
"சார், கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டும்தானா?. அப்படீன்னா இவர் வேஷ்டி கட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே. இவருக்கு வேஷ்டி கட்டவாவது தெரியுமா?"
"இதோ பாருங்க, ரெண்டு பேரும் ஒரு மூணு மாசம் பிரிஞ்சு இருங்க. அதுக்குப்பின்னும் ரெண்டு பேரம் மனம் மாறலைன்னா இந்த வழக்கை கோர்ட்டுக்கு அனுப்பலாம்".
"சார், ஏற்கெனவே பல மாதங்கள் இவரைவிட்டு பிரிஞ்சுதான் இருக்கேன். இந்த மூணு மாசத்துல எந்த மாற்றமும் ஏற்படாது".
"அதையேதான் சார் நானும் சொல்றேன். இனி எக்காரணம் கொண்டும் இவளோடு சேர்ந்து வாழவே முடியாது".
"அப்படீன்னா இந்த வழக்கை கோர்ட்டுக்கு அனுப்புவதைத்தவிர வேறு வழியில்லை. நீங்க ரெண்டு பேரும் போகலாம்".
ஆதியும் உஷாவும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி வெளியேறுகின்றனர்.
(ஆனால் நிச்சயம் என்னைக்காவது இவங்க ஒண்ணு சேருவாங்கண்ணு உள்மனசு சொல்கிறது. ஏன்னா இந்த தொடரிலேயே ஆர்த்தி - ராஜேஷ், மனோ - அனுராதா, அர்ஜுன் - ரேகா இவர்களையெல்லாம் விட ஆதியும் உஷாவும்தான் ரொம்ப பொருத்தமான ஜோடி).
பெண்களுக்கு, குறிப்பாக சீரியலில் வரும் பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் வரும் பெண்களுக்கு... இவ்வளவு ஏன், கற்பகத்துக்கு வீட்டு விஷயங்களை (என்னதான் பெரிய வீட்டில் இருந்தாலும்) கோயில் நின்று பேசினால்தான் நிம்மதி.
கற்பகம் சந்திர மண்டலத்திலிருந்து வந்தவள் அல்ல, ராஜேந்திரனும் செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்தவன் அல்ல. ஒரே வீட்டில் காலம் முழுக்க இருப்பவர்கள். மற்றவர்களாவது வேலை வெட்டி என்று வெளியில் போய் வருவார்கள். இவர்கள் இருவரும் மேய்ச்சலுக்கு போகும் மாடுகள் அல்ல, தொழுவத்தில் கட்டிய மாடுகள். இருந்தும் இவர்கள் அபியின் கல்யாணம் பற்றியும் ஆனந்தியின் கல்யாணம் பற்றியும் பேச தேர்ந்தெடுக்கும் இடம் கோயில். ஆனந்தி கார்த்திக் கல்யாணம் பற்றியும், அபி - மகேஷ் கல்யாணம் பற்றியும் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை பின்னால் இருந்து 'குள்ளநரி' கலா கேட்டுவிடுகிறாள். அடுத்து அவள் எங்கே போய் யாரிடம் வத்தி வைப்பாள் என்று எல்.கே.ஜி. குழந்தையிடம் கேட்போம்......
'இதோ பாரும்மா குழந்தை, இந்த அக்கா இப்போ நேரா எங்கே போவாங்க?'
'அதுவா... வந்து... வந்து... அலமேலு ஆன்ட்டி வீட்டுக்கு போவாங்க'.
(தண்டனை கொடுப்பதில் மனிதனின் தீர்ப்பு சிலசமயம் தவறாக முடிவதுண்டு. ஆனால் கடவுளின் தீர்ப்பில் தவறு வருமா?. இந்த சந்தேகம் நமக்கு வரக்காரணம், உடம்பு முழுக்க விஷத்தை வைத்துக்கொண்டு, 'ஐந்தரை அடி சயனைட் பாட்டிலாக' உலவிக்கொண்டிருக்கும் கலாவை விட்டு விட்டு, நல்லவனான அவள் கணவனுக்கு கைகால்கள் விளங்காமல் செய்திருப்பதால் அப்படி ஒரு சந்தேகம் வருகிறது. இது கதாசிரியரின் கற்பனைக்கதை என்று விட்டுவிட்டாலும், நிஜ வாழ்க்கையிலும் சில இடங்களில் (பல இடங்களில்..?) அப்படித்தானே இருக்கிறது?. நல்லவர்கள்தானே எப்போதும் கஷ்ட்டப்படுகிறார்கள்?. மனிதனின் சட்டங்கள் மட்டும் ரொம்ப லட்சணமாக இருக்கிறதா?. மண்டையை பிளக்கும் உச்சி வெயிலில் வேலை செய்யும் விவசாயிக்கும், முதுகு ஒடிய மூட்டைதூக்கிப் பிழைத்து மானத்தோடு வாழ நினைக்கும் தொழிலாளிக்கும் அடுத்த வேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லை. ஆனால் குற்றம் செய்துவிட்டு ஐந்தாண்டு சிறைத்தண்டனை பெறும் ஒரு அயோக்கியனுக்கு, ஐந்தாண்டுகள் உணவுக்கு அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்கிறது. அவர்களுக்கு வாராவரம் கோழிக்கறியாம், சிறையிலேயே சினிமாவாம். எந்த அரசியல்வாதியின் முப்பாட்டன் வீட்டு சொத்திலிருந்தும் அல்ல, நம்முடைய வரிப்பணத்தில் இருந்து. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, கேள்விப்படும்போது நம்முடைய இ.பி.கோ. சட்டப் புத்தகங்களையெல்லாம் ஒரு பெரிய மைதானத்தில் போட்டு தீ வைத்துக்கொளுத்தினால் என்ன என்று தோன்றவில்லையா?. சரி, விஷயம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு மேல் எழுதினால் இந்தப்பதிவு நீக்கப்படவும் வாய்ப்புள்ளது).
தன்வீட்டுக்கதவு தட்டப்படுவதைக்கேட்டு உஷா கதவைத்திறந்து பார்க்க, யாரோ ஒருவர் 'பேக்'குடன் நின்றுகொண்டிருக்க... 'யார் நீங்க? என்ன வேணும்?'
'நான் தினச்சுடர் பத்திரிகை நிருபர். உங்களை ஒரு பேட்டியெடுக்கலாம்னு வந்திருக்கேன்'
'பேட்டி கொடுக்கும் அளவுக்கு நான் ஒண்ணும் வி.ஐ.பி.அல்லவே".
'அதில்லீங்க, நீங்களும் உங்க கணவர் ஆதித்யாவும் டைவர்ஸ் செஞ்சுக்கப்போறீங்க. அது சம்மந்தமா கோர்ட்டில் சொல்ல முடியாத விஷயங்களை சொன்னால் பத்திரிகையில் போடுவோம். அதனால...'
'அதனால உங்க பத்திரிகை பத்தாயிரம் பிரதி கூடுதலாக விற்கும். அதுதானே. இதோ பாருங்க, இது என்னுடைய பெர்சனல் விஷயம். இது பத்தி பேப்ப்ர்ல வருவதை நான் விரும்பலை'.
'நீங்க சொன்னதை அப்படியே எழுதிடட்டுமா?'
'நீங்க என்ன வேணும்னாலும் எழுதிக்குங்க. போங்க இங்கிருந்து'.
பத்திரிகைக்காரரின் பேச்சைக்கேட்ட உஷாவின் அம்மாவுக்கு, பேசாமல் ஆதியுடன் சமாதானமாக போயிடலாம்னு தோன்ற, அது பற்றிப்பேச ஆரம்பிக்கிறாள். ஆனால் உஷாவும் அவள் அப்பாவும் மறுக்கின்றனர். டைவர்ஸ் கிடைத்தபின் உஷாவின் அடுத்த வாழ்க்கை பற்றி அம்மா பேச, உஷா கோபப்படுகிறாள். தான் காலம் முழுக்க ஆண்துணையில்லாமலேயே வாழ விரும்புவதாக தன் குழந்தையை வளர்த்து ஆளாக முடியும் என்று சொல்வதுடன் வழக்கம்போல ஆண்களைப்பற்றி மோசமான லெக்சர் கொடுக்கிறாள். அன்பான அப்பாவும், ஆதரவான தொல்காப்பியனும் பக்கத்தில் இருக்கும்போது, இவள் ஏன் ஆதி என்ற அயோக்கியனையே ஸ்கேலாக வைத்து ஆண்களை அளக்கிறாள் என்பது புரியாத ஒன்று. ஏற்கெனவே அபியைப்பற்றி சொல்லும்போதும் இதைச்சொன்னேன் என்று நினைக்கிறேன். (நியாயத்தை எடுத்துச்சொலவ்து, ஸேம்சைட் கோல் போடுவதாகாது என்பது என் எண்ணம்.)
குழந்தை சொன்னதுபோலவே அலமேலுவின் வீட்டுக்கு வரும் கலா, வழக்கம்போல கொஞ்சநேரம் அலமேலுவின் வெட்டி பந்தாக்களை கேட்டுவிட்டு (இம்முறை ஷேர் மார்க்கெட்), பின்னர் மெல்ல அபியின் இரண்டாவது திருமணம் பற்றி தான் காதால் கேட்ட விஷயத்தைப்போடு உடைக்கிறாள்...
'ஏய், நீ என்ன சொல்றே கலா. அந்த அபிக்கு ஏற்கெனவே என் பையனோடு கல்யாணம் ஆகி டைவர்ஸும் ஆச்சு. அந்த டாக்டர் ஏன் போயும் போயும் அவளைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறான். ஒரு வேளை அவன் நிஜமாவே டாக்டர் இல்லையோ'.
'இல்லகா, அவன் டாக்டர் படிப்புலயே விசேஷமா படிச்சவனாம், அதாவது பைத்தியங்களையெல்லாம் குணப்படுத்துற டாக்டராம்'.
'அப்போ பைத்தியக்கார டாக்டரா, அப்படீன்னா அந்த குடும்பத்துக்கு பொருத்தமானவன்தான்'.
அப்போது வெளியேயிருந்து வீட்டுக்குள் பாஸ்கர் வர, அதே சமயம் மாடியில் இருந்து சங்கீதாவும் இறங்கி வர, பாஸ்கர் அலமேலுவிடம் கோபமாக...
'ஏம்மா உனக்கு வேறு வேலை இல்லையா?. அந்த அபியைக் குறை சொல்வதே உனக்கு வேலையா போச்சு. பாவம்மா அந்த அபி. ஏன் அவளைப்பத்தி எப்போதும் புரளி பேசிக்கிட்டே இருக்கே (????)'
மகனின் பேச்சு அலமேலுவுக்கு திகைப்பை உண்டாக்குகிறது. இவனா இப்படி...?.
'அதில்லைடா பாஸ்கரா, அந்த அபிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணப்போறதா....'
'விடும்மா. அவங்க என்ன வேணும்னாலும் பண்ணிட்டுப்போறாங்க' என்றவன் கலாவின் பக்கம் திரும்பி, 'ஏங்க, உங்களுக்கு வேலையில்லைன்னா அப்பளம் போடுங்க, ஊதுபத்தி செஞ்சு வியாபாரம் பண்ணுங்க. அதைவிட்டு ஏன் இங்கே வந்து புரளி பேசிக்கிட்டு இருக்கீங்க?' கன்னத்தில் பளார் என்று விழாத குறையாக பாஸ்கர் கேட்க, கலாவின் முகம் வாடுகிறது. 'இதென்னாடா கிணறு வெட்ட பள்ளம் தோண்டினால் உள்ளேயிருந்து பூதம் வருகிறதே' என்று ஏமாற்றம். (பாஸ்கர், சங்கீதாவுக்காக நடிக்கிறானா அல்லது உண்மையாகவே சொன்னானா தெரியாது. ஆனால் கலாவுக்கு கிடைத்த டோஸ் தேவையானதே).
வெளியில் புறப்பட்டுக்கொன்டிருக்கும் ஆதியிடம் 'இன்னைக்கு நியூஸ் பேப்பர் படிச்சீங்களா?' என்று ரேகா கேட்க, அதற்கு கிரி 'நான் படிச்சிட்டேன், ஒண்ணும் விசேஷம் இல்லையே'
'ஆதி, இவரை மாதிரி ஆளுங்களை உங்க செக்ரட்டரியா வச்சிருந்தா உருப்பட்ட மாதிரிதான். இதோ பாருங்க அந்த உஷா உங்களுடனான டைவர்ஸ் பத்தி பேட்டி கொடுத்திருக்கா' என்று சொல்லி அந்த பத்திரிகை நிருபர் விட்டிருந்த சரடுகளைப்படித்துக்காட்ட, ஆதியின் ரத்தம் சூடேறுகிறது.
'கிரி, இன்னைக்கு என்னுடைய எல்லா அப்பாயிண்ட்மெண்ட்டுகளையும் கேன்சல் பண்ணு. இதுல உடனடியா ஒரு முடிவு எடுத்தாகணும்'.
:clap: nanraaga sOneergaL :DQuote:
Originally Posted by saradhaa_sn
:lol:Quote:
Originally Posted by saradhaa_sn
:ty: