-
டியர் வாசுதேவன் சார்,
சுதந்திர திருநாள் ஸ்பெஷலாக தாங்கள் அள்ளி அளித்த அசத்தல் பதிவுகளுக்கு எனது அற்புதமான நன்றிகள்..!
'பகத் சிங்' படமும், 'சந்தனத் தேவர்' பாடலும் அருமை..!
1987-ம் ஆண்டு 'ஜெமினி சினிமா' சுதந்திர தின மலரில் வெளிவந்த, தந்தையார் பற்றி பிரபு அளித்த பேட்டி அற்புதம்..!
"கப்பலோட்டிய தமிழன்" காவிய விளம்பரம், படிக்காத மாமேதைகளின் புகைப்படம், காந்தி தாத்தா, நேரு மாமா புகைப்படங்கள் அட்டகாசம்..!
சுதந்திர தின சிறப்புக் கதாநாயகியாக, "கப்பலோட்டிய தமிழன்" ஜோடி குமாரி ருக்மணியை சிலாகித்த பதிவுகள் சிகரம்..!
மீண்டும் மீண்டும் எனது அன்பான பாராட்டுதல்களுடன் கூடிய நெஞ்சார்ந்த நன்றிகள்..!
தாங்கள் இந்த நன்னாளில் எனக்கு வழங்கிய புகழுரை நான் பெற்ற பெரும் பேறு..!
பாசத்துடன்,
பம்மலார்.
-
Dear murali sir
as you mentioned meenava nanban released on 14th aug 1977 & uzhaikkum karangal released on 23rd may 1976.
Thanks for the correction.
-
அன்புள்ள பம்மலார் சார்,
நம் நாட்டில் விடுதலைத்திருநாள் நேற்று ஒரே நாளில் முடிந்துவிட்டபோதிலும், நமது திரியில் இன்னும் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.
'தினத்தந்தி' சுதந்திர தின சிறப்பிதழில், தேசீயத்திலகம் அண்ணன் அவர்கள் தனது தந்தையாரின் விடுதலைப்போராட்ட பங்கு பற்றியும், அதன்விளைவாக அவரது தந்தைக்கு கிடைத்த ஏழு ஆண்டு சிறைத்தண்டனை (பின்னர் நாலரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது) பற்றியும், குடும்பத்தலைவனை சிறைக்கனுப்பி விட்டு அந்தக் குடும்பம் திசைதெரியாமல் தவித்ததைப்பற்றியும் கூறியுள்ளதைப் படித்தபோது, கண்கள் கலங்கின. எப்பேற்பட்ட தியாகக்குடும்பத்தில் பிறந்த நம் தலைவருக்கு, ரத்தத்திலேயே தேசீயம் ஊறியிருந்ததில் அதிசயமில்லை. அதனால்தான் இடையிலே ஏற்பட்ட திராவிட பந்தம் இடையிலேயே அறுந்துபோய், இறுதிவரையில் அவர் தேசீயவாதியாகவே திகழ்ந்தார். அவர் மூச்சுக்காற்று முழுக்க பெருந்தலைவர் கலந்திருந்ததில் ஆச்சரியமில்லை.
தலைவரின் தந்தையாரைப்போன்ற நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தால் கிடைத்த சுதந்திரத்தின் பலனை, சுதந்திர போராட்டத்துக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர்கள் எல்லாம் ஆண்டு அனுபவித்து, முடிந்தவரை கொள்ளையும் அடித்து வந்ததை / வருவதைக் காணும் ஒவ்வொரு தேசீய நெஞ்சமும் கனலாக எரியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தான் சார்ந்திருந்த கட்சியின் வளர்ச்சிக்காக, பாதயாத்திரை சென்ற தலைவரது உழைப்பை அவர் சார்ந்திருந்த காங்கிரஸும் கண்டுகொள்ளவில்லை. அவரது பாதயாத்திரையைப்பற்றி அன்றைய பிரபல பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் மாநிலங்களவை எம்.பி. பதவியை யாருக்குக் கொடுப்பது என்ற விவாதம் டெல்லியில் நடந்தபோது, "தியாகமா, அப்படீன்னா என்ன? அது எந்தக்கடையில் கிடைக்கும்?" என்று கேட்கக்கூடிய அமிதாப்புக்கு சிபாரிசு செய்திருக்கிறார் ராஜீவ்காந்தி. கட்சிக்காக நடிகர்திலகத்தின் உழைப்பை அறிந்திருந்த இந்திரா அம்மையார் மட்டும் இல்லாதிருந்தால், எத்தனையோ கௌரவங்கள் நடிகர்திலகத்துக்கு கிடைக்காமல் போனதுபோல, எம்.பி.பதவியும் கிடைக்காது போயிருக்கும்.
நடிகர்திலகத்தின் தேசீய உழைப்புக்கான பல்வேறு ஆவணங்களைத் திரட்டி இங்கே பதிவுகளாகத் தந்துகொண்டிருக்கும் தங்களுக்கு, அண்ணனின் உலகளாவிய ரசிகப்பெருமக்கள் அனைவரின் சார்பிலும் நன்றிகள் பல்லாயிரம்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
நம் நாடு விடுதலை பெற்ற செய்தியை அறிவிக்கும் 'டைம்ஸ் ஆப் இந்தியா' வின் நிழற்படத்தை அளித்து அனைவரது மனதிலும் தேசிய உணர்வைக் கொழுந்து விட்டு எரியச் செய்து விட்டீர்கள். அற்புதம். பதிவிட்ட face book இணைய தளத்தின் நண்பர் அவர்களுக்கும் நன்றிகள்.
டியர் வினோத் சார்,
அழகான கற்பனை. நிஜமாகவே ரசித்துப் படித்தேன். வெகு ஜாக்கிரதையாக கையாள வேண்டிய மேட்டர். சர்வ சாதாரணமாக கையாண்டு விட்டீர்கள். தங்கள் திறமைக்கு ஒரு சல்யூட். கற்பனை உரையாடலில் நடிகர் திலகம் வாயால் எங்கள் அனைவரின் பெயரையும் உச்சரிக்க வைத்ததற்கு தங்களுக்கு ஒரு கோடி நன்றிகள். அதுமட்டுமால்... கள்ளமில்லா வெள்ளை உள்ளத்துடன் ஒரு சிறு குழந்தை போல சிரிக்கும் எங்கள் இதய தெய்வத்துடன் மக்கள் திலகம் மகிழ்ந்து பேசி மகிழும் அந்த புகைப்படம் பட்டைகிளப்புகிறது. அதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
டியர் கல்நாயக் சார்,
தங்கள் அன்பான சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்களுக்கு நம் கடலூர் சார்பாக நன்றி!
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் பாராட்டிற்கு என் நெஞ்சு நெகிழ்ந்த நன்றிகள்.
டியர் ராதாகிருஷ்ணன் சார்,
சுதந்திரத் திருநாள் பதிவுகளைக் கண்டு களித்து பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
-
அன்பு பம்மலார் சார்,
கப்பலோட்டிய தமிழன் 'தினத்தந்தி' மறு வெளியீட்டு விளம்பரம் கன கச்சிதம். 'அடியேன் கைவசம் உள்ளவை ("கப்பலோட்டிய தமிழன்" மறுவெளியீட்டு ஆவணப் பொக்கிஷங்கள்)அனைத்தும் பதிக்கப்படும்' என்று நீங்கள் அறிவித்திருப்பது பதிவுகள் அளிப்பதில் நீங்கள் கொடை வள்ளல்
https://encrypted-tbn1.google.com/im...HWZrOEDsXsFm9b
என்பதைக் காட்டுகிறது
சிங்கத்தமிழன் குறித்த 'ராணி' வார இதழின் பக்கங்களைப் பதித்ததற்கு நன்றி. அந்த அட்டைப்படம் ஒன்று போதாதா! நடிகர் திலகத்தின் கொடைத்தன்மையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய ராணிக்கு நன்றிகள் என்றால் அந்த அருமையான பதிவை இங்கே மிகச் சரியான தருணத்தில் பதித்த தங்களுக்கு அதைவிட பல்லாயிரம் மடங்கு நன்றிகள்.
-
அன்பு கார்த்திக் சார்,
'நான் பிறந்த நாட்டுகெந்தநாடு பெரியது' பாடலைப் பற்றி அற்புதமாக ஒரு குறு ஆய்வையே செய்து விட்டீர்கள். மிக்க நன்றிகள் சார்! எந்த அளவிற்கு இந்தப் பாடல் தங்களை ஈர்த்துள்ளது என்பது புரிகிறது. இதே போல 'தர்மம் எங்கே' திரைப் படத்தில் வரும் "சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்" பாடல் ரொம்ப ரொம்ப என்னைக் கவர்ந்த பாடல். ம்... இணையத்தில் தேடிப் பார்ப்போம்... இல்லையென்றால் அப்லோட்தான்.
-
முத்தான முரளி சார்,
சுதந்திரத் திருநாள் பதிவுகளுக்காக தங்களின் மனமுவந்த பாரட்டுக்களுக்கு என் குளிர்ச்சியான நன்றிகள்.
தங்கள் அற்புதமான பதிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும்
-
நடிகர் திலகம் அவர்களுக்கு பல் மருத்துவம் பார்த்த பிரபல பல் மருத்துவ நிபுணர் திரு ஜானகிராமன் அவர்களின் நீங்காத நினைவுகள்.
நன்றி: denta-vista.com
http://denta-vista.com/blog/wp-conte...sivajinews.jpg
-
http://i47.tinypic.com/zsvbec.jpg
நவரசங்களின்
நாயகனே
நாடு போற்றும் வேந்தனே!
உலகம் போற்ற
தமிழ்சினிமாவை
உயர்த்திப் பிடித்துக் காத்தவனே!
நடிப்புக்கே நடிப்பு
கற்று கொடுத்த
எங்கள் நடிகர் திலகமே!
நீ பிறந்தாய்!தமிழ் சினிமா சிறந்தது!!
எங்கள் தமிழ் சினிமாவே பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
சுதந்திர திருநாள் சிறப்பு பதிவுகள் ஒவ்வொன்றும் உண்மையான சுதந்திர திருநாள் பற்றி கொண்டாடவேண்டிய தகவல்களை கொண்டவைகளாகும். இப்படிப்பட்ட பதிவுகளை பார்த்தாவது தொலைகாட்சி நடத்துவோர்கள் சுதந்திர தினத்தில் என்ன மாதிரியான சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கலாம், எந்த திரைப்படங்களை ஒளிபரப்பலாம் என்று கற்றுக்கொள்ளவேண்டும். அது நடக்காது. இருப்பினும் ஒரு ஆதங்கம்தான்.
பம்மலார் சார்,
நடிகர் திலகத்தின் சுதந்திர தின பேட்டிகள், ராணியில் வந்த 'விடுதலை போரில் சிவாஜி' கட்டுரை, விடுதலை போராட்ட வீரர்களின் (நடிகர் திலகத்தின் உருவில்) புகைப்படங்கள் நம்மிடம் இன்னும் அந்த போராட்டத்தின் சுவடுகளை நினைவில் வைத்திருக்கச்செய்யுமாறு அமைந்திருக்கின்றன.
வாசுதேவன் சார்,
சுதந்திர தினத்திற்கு ஏற்றவாறு 'நடிகர் திலகத்தின் நாயகிகள்' தொடரில் கப்பலோட்டிய தமிழன் நாயகி - திருமதி ருக்மணி அம்மாள் அவர்களை பதிவு செய்தது சிறப்பு. 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாடலைப் பற்றி எழுதி இதயம் கனக்கச் செய்துவிட்டீர்.
ருக்மணி அவர்களே நடிகர் திலகத்திற்கு மாமியாராய் நடித்ததை எழுதி, இப்படி பலர் நடிகர் திலகத்துடன் பல வேடங்களில் நடித்ததை நினைவு செய்யவும் வைத்துவிட்டீர். அவரது மகள் லக்ஷ்மி நடிகர் திலகத்துக்கு மகளாகவும், ஜோடியாகவும் நடித்திருக்கிறார். ஆமாம் வேறு எந்த நடிகராவது அம்மாவுடனும் ஜோடியாக நடித்து மகளுடனும் ஜோடியாக நடித்திருக்கிறாரா? நடிகர் திலகம் மட்டுமே இப்படி இரண்டு அம்மா-மகள்களுடன் (சந்தியா- ஜெ.ஜெயலலிதா மற்ற ஜோடி) ஜோடியாக நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். உங்கள் தொடரில் இது போன்ற விபரங்களை பதியும் போது சுவாரஸ்யம் இன்னும் அதிகரிக்கிறது. நன்றி.
-
டியர் கல்நாயக் சார்,
பதிவுகளைப் பாராட்டும் தங்கள் உயர் குணத்திற்கு நன்றி! நடிகர் திலகம் நிஜ அம்மா மற்றும் மகள்களுடன் ஜோடியாக நடித்ததை அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மிக உயர்ந்த ரசனை கொண்ட தங்களுக்கு என் அன்புப் பாராட்டுக்கள்.
-
டியர் வினோத் சார்,
நடிகர் திலகத்தைப் பற்றிய பிறந்த நாள் கவிதையை அருமையாக இங்கு பதித்ததற்கு நன்றி.
நடிப்புக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் உயிர் தந்து வாழ வைத்துக் கொண்டிருக்கும் உத்தமத் தெய்வம் நடிகர் திலகம்.
-
-
டியர் பம்மலார்,
ராணி வார இதழின் கட்டபொம்மன் அட்டைப் படத்துடன் கூடிய கட்டுரை உள்பட மிக அரிய ஆவணங்களை அளித்து அசத்தி வருகிறீர்கள். கார்த்திக் அவர்கள் அடிக்கடி கூறுவது போல் தங்களுக்கு நன்றி கூற மட்டுமே தனி திரி தொடங்க வேண்டும். அதுவே மிக மிக வேகமாக பக்கங்கள் ரொம்பி விடும். தங்களுக்கு கூறும் அதே கருத்துக்கள் தான் வாசு சாருக்கும். நிழற்படங்கள் இதயம் பேசுகிறது பக்கங்கள் என அவரும் தூள் கிளப்புகிறார். தங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.
இன்று 17.08.2012 தினகரன் நாளிதழுடன் வெளிவந்திருக்கும் வெள்ளி மலரில் மேஜரைப் பற்றி வந்திருக்கும் கட்டுரையில் நடிகர் திலகத்தைப் பற்றி வந்துள்ளது.
நம் பார்வைக்கு
http://i872.photobucket.com/albums/a...vellimalar.jpg
-
நடிகர் திலகத்தின் ரம்மியமான வடிவம்.
http://i1087.photobucket.com/albums/...van31355/n.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
Dear vasudevan sir,
'இதயம் பேசுகிறது' அக்டோபர் (5-11, 1986) இதழில் வந்த நடிகர் திலகத்தின் பொன்விழா ஆண்டு சிறப்புப் பேட்டி. - very nice. Thanks
-
APOORAVAMANA NATHIYIN STILLS FROM NET.
http://i47.tinypic.com/2usudrb.jpg
-
-
-
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
சுதந்திர தினத்தையொட்டி தாங்கள் அளித்திருந்த அனைத்து ஆவணங்களும் சூப்பரோ சூப்பர். 'ஜெமினி சினிமா'வில் வெளிவந்த இளையதிலகம் பிரபுவின் கட்டுரை கனஜோர். தன் தந்தையாரைப்பற்றியும், தந்தையின் தந்தையாரைப்பற்றியும் சிறப்பாக நினைவுகூர்ந்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் விளம்பரமும் அசத்தலாக, டைம்லி பிரசண்டேஷனாக இருந்தது. பெருந்தலைவரும் அண்ணனும் இணைந்திருக்கும் நிழற்படமும் அருமை.
நடிகர்திலகத்தின் திரைநாயகியர் வரிசையில், சுதந்திர திருநாளையொட்டி 'திருமதி வ.உ.சி.'யாக ருக்மணி தோன்றிய ஸ்டில்களைப்ப்தித்ததும் டைம்லி ஆக்ஷன். நீங்கள் குறிப்பிட்ட படங்களோடு, சமீபத்தில் தமிழகத்தையே கலக்கிய 'கர்ணன்' திரைக்காவியத்தில் கர்ணனின் வளர்ப்புத்தாயாகவும் நடித்திருக்கிறார் ருக்மணி. (நாயகனாக பிரபுவின் அப்பா, தாயாக லட்சுமியின் அம்மா, மாமியாராக ஜெயலலிதாவின் அம்மா, ஜோடியாக கனகாவின் அம்மா, எதிரியாக கார்த்திக்கின் அப்பா... ஒரே கலக்கல்தான்).
இதயம் பேசுகிறது பத்திரிகைக்காக அதன் ஆசிரியர் மணியனே நேரடியாக நடிகர்திலகத்தை பேட்டிகண்ட அரிய ஆவணத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி.
1967-ல் தன்னுடைய முதல் வெளிநாட்டுப்பயணத்துக்கு நடிகர்திலக்ம் மாலையிட்டு ஆசி வழங்கியதை நினைவுகூர்ந்துள்ளார் மணியன் (இந்நேரத்தில் 67-ல் அழகிய சுருள்முடியுடன் கூடிய ஸ்லிம்மான நடிகர்திலகத்தை நாம் மனக்கண்ணில் நிறுத்த வேண்டும்). ஆனால் அப்படிப்பட்ட மணியன் இடையில் ஏன் தடம்புரண்டதோடு இடையூறுகளிலும் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை.
1968 இறுதியில், ஐரோப்பிய நாடுகளில் சிவந்த மண் படப்பிடிப்பை முடித்து விட்டு வந்த கையோடு, அந்த அனுபவங்கள் குறித்து, படம் வெளிவருவதற்கு முன்பாகவே, தான் துணையாசிரியராக இருந்த ஆனந்த விகடன் பத்திரிகையில் எழுதுவது தொடர்பாகவும் நடிகர்திலகத்தை சந்தித்தார் மணியன். நடிகர்திலகம் எழுதிய அந்த தொடர்கட்டுரையின் தலைப்பு 'அந்நிய மண்ணில் சிவந்த மண்'. நடிகர்திலகத்தின் கட்டுரை துவங்கிய அதே இதழில் மணியன் 'உண்மை சொல்ல வேண்டும்' என்ற தன் புதிய தொடர்கதையையும் துவங்கினார். (அதற்கு முன்பு 'உன்னை ஒன்று கேட்பேன் என்ற தொடர்கதையையும், பின்னர் 74-வாக்கில் 'என்னைப்பாடச்சொன்னால்' தொடர்கதையையும் எழுதினார்).
அப்போது நடிகர்திலகத்தும் மணியனுக்குமிடையே நடந்த உரையாடலும் ஆனந்தவிகடனில் பேட்டியாக வெளியாகியிருந்தது. அதன்பின்னர் மணியன் நடிகர்திலகத்தை விட்டு விலகிப்போனார்.
அப்புறம் நடந்தவற்றை நடிகர்திலக்ம் திரியின் 9-ம் பாகத்தில் நமது வரலாற்று விற்பன்னர் முரளி சீனிவாஸ் அவர்கள் எழுதிய மெகா கட்டுரையில் பார்த்திருக்கலாம்.
-
அன்புள்ள 'நட்புத்திலகம்' வினோத் சார்,
கிடைத்தற்கரிய பொக்கிஷங்களான 'எங்கிருந்தோ வந்தாள்' 100-வது விழாவில் நடிகர்திலகம் ஷீல்டு பெறும் நிழற்படத்தையும், 'திரிசூலம்' வெள்ளி விழாவில் ஷீல்டு வழங்கும் நிழற்படத்தையும் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்.
திரிசூலம் வெளிவந்த காலத்தில் நடிகர்திலகம், முன்பு பல காலமாக அணிந்து வந்த சந்தன கலர் குர்தாவிலிருந்து மாறி, மெரூன் கலரில் வேஷ்டியும் அதே கலரில் ஜிப்பாவும் அணிவதை வழக்கமாக வைத்திருந்தார். (நட்சத்திரம் படத்தில் இறந்துபோன ஸ்ரீபிரியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும்போது அதே உடை அணிந்திருப்பார்). திரிசூலம் விழாவில் அணிந்திருப்பதும் அதே உடைதான்.
அசத்தல் ஆவணங்களுக்கு நன்றி
-
-
-
-
-
-
-
டியர் வினோத் சார்,
நீங்கள் அளித்திருக்கும் புகைப்படங்கள் அத்தனையும் அற்புதங்கள். குறிப்பாக நதியும், b.r. பந்துலுவும் எடுத்துக்கொண்ட படம், எகிப்தின் பிரமீடுகள் அருகே (உடனிருக்கும் மற்றொருவர் யாரென தெரியவில்லை) எடுத்துக்கொண்டவைகள், வீரபாண்டிய கட்டபொம்மன் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்டவைகள் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் ஆசியா-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் பெற்ற விருதுகளை பறை சாற்றுகின்றன. , மதியும் நதியும் இணைந்திருக்கும் படம் மதி நதியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்காக வாழ்த்தும் தருணத்தில் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன். வாழ்த்துகள்.
-
Dear Vinod sir (esvee),
Thanks for the excellent & rare photos.
-
சென்ற வருடம் 2011 ஜூலை மாதம் நினைவு நாளை ஒட்டி சென்ட்ரலில் வெளியான இரு மலர்கள் படத்திற்கு பிறகு ஒரு வருட இடைவெளிக்கு பின் [கர்ணன் திரைப்படத்தை கணக்கில் சேர்க்கவில்லை] மீண்டும் நான்மாடக்கூடலுக்கு நடிகர் திலகம் விஜயம். இன்று 17-ந் தேதி வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக மதுரை சென்ட்ரலில் தன்னந்தனிக் காட்டு ராஜாவாக எங்க மாமா விஜயம். புத்தம் புதிய பிரிண்ட் என்று விளம்பரம் வந்திருக்கிறது. மதுரையிலிருந்து நண்பன் செய்தி அனுப்பியிருக்கின்றான்.புகைப்படங்களும் வரும்.
அன்புடன்
-
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் எங்க மாமா திரையிடப் படுவதைக் கூறும் போஸ்டர்களின் நிழற்படங்கள். நன்றி திரு முரளி ஸ்ரீநிவாஸ்
http://i872.photobucket.com/albums/a...MMDY2012-1.jpg
http://i872.photobucket.com/albums/a...MMDY2012-2.jpg
-
இனிய நண்பர்கள் திரு .கார்த்திக் , திரு .கல்நாயக் , திரு சந்திரசேகர்
உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி .இணைய தளத்தில் பல்வேறு பகுதிகளில் நமது தமிழ் அன்பர்கள் பதிவிட்ட மதி- நதி படங்கள் ,விமர்சனங்கள் ,கட்டுரைகள் என்று தேட தேட கிடைப்பது எல்லையில்லா ஆனந்தம் அளிக்கிறது .அவர்களுக்கும் நமது திரியின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வோம் .
-
தூணிலும் இருப்பார் .... துரும்பிலும் இருப்பார் ... என்பது பழமொழி .
மக்கள் திலகமும் நடிகர்திலகமும் மதுரை - எங்கமாமா விளம்பரம் வந்துள்ள படத்தில் உள்ள தூணில் மதியின் படம் இருப்பது மேலே சொன்ன பழமொழி நினைவு படுத்துகிறது ராகவேந்திரன் சார் .
-
'Enga mama' show times in Madurai Central cinema hall.
http://entertainment.oneindia.in/mov...ga+Mama+8.html
-
இவரை யாரென்று தெரிகிறதா?
http://i1087.photobucket.com/albums/...1355/eswar.jpg
தமிழ் சினிமாவின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் நம் அபிமான நடிக, நடிகைகளை தன் கைப்பட வரைந்து தனெக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர் ஈஸ்வர். பல திரைப்பட விளம்பரங்களுக்கு டிசைனராக பணி புரிந்தவர். பலவித ஆர்ட்களில் நம் நடிகர்திலகத்தை போஸ்டர்களிலும், பேனர்களிலும் நம் கண்முன் கொண்டு வந்து ரசிக்க வைத்தவர். அவர் கூறுவது.
http://i1087.photobucket.com/albums/...an31355/e3.jpg
http://i1087.photobucket.com/albums/...an31355/e5.jpg
ஈஸ்வர் அவர்கள் தீட்டிய வசந்த மாளிகை போஸ்டர் டிசைன்.
http://i1087.photobucket.com/albums/...n31355/ees.jpg
-
(அபூர்வ நிழற்படம்).
கதை வசனகர்த்தா, இயக்குனர் திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுடன் நடிகர் திலகம்.'அச்சாணி' நாடக வெற்றிவிழாவில் நடிகர் திலகம் திரு நாராயணன் அவர்களுக்குக் கேடயம் வழங்கி கௌரவித்த போது எடுத்த படம். (உடன் மேஜர்).
http://i1087.photobucket.com/albums/...1355/knara.jpg
-
டியர் வாசுதேவன் சார்
கையைக் குடுங்க.... கலக்கிட்டீங்க.... என்னுடைய அபிமான டிசைனரின் படத்தைப் போட்டு உள்ளம் குளிர வைத்து விட்டீர்கள்....எலிகண்ட் பப்ளிசிட்டீஸ் நிறுவனத்தின் ஆஸ்தான டிசைனராக இருந்த ஈஸ்வர், தான் பங்கு கொண்ட நடிகர் திலகத்தின் பெரும்பாலான பட விளம்பரங்களில் அவருடைய உருவத்தை கையால் வரைந்து வெளியிடுவார். மிகவும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் விளம்பரங்கள், அதுவும் முழுப்பக்கத்தில் பிரம்மாண்டமான ஓவிய வடிவில் நடிகர் திலகத்தைக் காணும் போது அதனை போற்றிப் பாதுகாக்கும் என்கிற எண்ணம் யாருக்கும் வரும். இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகத்தின் பட விளம்பரங்களை சேகரிக்க வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்தியவை ஈஸ்வரின் டிசைனில் வெளி வந்த விளம்பரங்கள் என்றால் மிகையில்லை. ஏ.பி.என். பட விளம்பரங்களும் தனித்துவம் பெற்று பளிச்சிடும் காரணம் அ்வை டிசைனர் பக்தாவின் கைவண்ணத்தில் வந்தவை. அவர் டிசைனர் மட்டுமின்றி புகைப்பட நிபுணரும் கூட. அதே போல் பாலாஜியின் படங்களில் எஸ்.ஏ.நாயர் அவர்களும், பாலச்சந்தர் படத்தில் உபால்டு அவர்களும் ஸ்ரீதர் படங்களில் ஈஸ்வர் மற்றும் பரணி மாறி மாறியும் பங்கு பெற்றனர். இப்போதெல்லாம் கிடைக்கும் கணினி வசதிகள் இல்லாத அந்த காலத்தில் அவர்கள் உருவாக்கிய டிசைனில் ஒரு ஜீவன் இருந்தது. உயிர் இருந்தது. ஆனால் இப்போது என்னதான் அழகான விளம்பரங்கள் வந்தாலும் அந்தக் காலத்தைப் போன்று விளம்பரங்களில் ஜீவன் குறைகிறது. இதற்கு டிசைனர்களைக் காரணம் சொல்ல முடியாது என்றாலும் கூட, தற்போதைய விளம்பரங்களில் ஜீவன் குறைவதை நம்மால் உணர முடிகிறது என்பதென்னவோ உண்மை.
தங்களுக்கு மீண்டும் என் பாராட்டுக்களும் நன்றிகளும். அவர் வரைந்த ஓவியம் அடங்கிய ஏதாவது ஒரு விளம்பரத்தை இங்கே நாம் பார்த்தோமானால் ஈஸ்வரின் கைவண்ணம் விளங்கும்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
ரொம்ப ரொம்ப நன்றி... இப்போதே பார்த்து விடுவோம். ஈஸ்வர் அவர்களின் மேல் உள்ள தங்களின் ஈடுபாடு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய ஓவியங்களில் ஜீவன் தாண்டவமாடுவது உண்மை. இதோ! மீண்டும் தாங்கள் மனம் குளிர ஈஸ்வர் அவர்கள் வரைந்த நம் தலைவரின் 'தங்கப் பதக்கம்' தெலுங்கு பதிப்பிற்கான மிக அபூர்வமான போஸ்டர் டிசைன். இந்த போஸ்ட்டரை பதிப்பித்த Idlebrain.com ற்கு நன்றி.
http://i1087.photobucket.com/albums/...aposter194.jpg
'வசந்த மாளிகை' ஈஸ்வரின் கைவண்ணத்தில் உலகப் புகழ் பெற்ற போஸ்டர் டிசைன்
(ஆஹா! தலைவர் முகம் எவ்வளவு அழகாக வரையப்பட்டிருக்கிறது!)
http://www.idlebrain.com/news/functi...aposter198.jpg