ஓம் விநாயக நமஹ
வணக்கம் ராஜேஷ் ஜி! மனோ பாட்டா போட்டு கலக்குறீங்க.
Printable View
ஓம் விநாயக நமஹ
வணக்கம் ராஜேஷ் ஜி! மனோ பாட்டா போட்டு கலக்குறீங்க.
வாசு சார்..வாங்க வாங்க.. ஓம் வாசுதேவாய நமஹ..
நேற்று பார்த்து ரசித்த பாடல் உமக்காக..
http://www.youtube.com/watch?feature...&v=7uEZl-YvhPg
meh kyakru ram mujehe budda mil gaya..
ஆமா வைஜு பத்தி எழுதியிருக்கீங்களா..மறுபடி போடுமேன்..
(சிவாஜி செந்திலின் வர்ணனை..தமிழில் குடத்திலிட்ட விளக்கு ஹிந்தியில் குன்றிலிட்ட விளக்கு!..)
வைஜூ இன்னா அமர்க்களம்! (sangam) ராஜகபூரின் வியப்பும் சூப்பர் . பின்னாளில் ஸ்ரீதேவி இப்படி அமர்க்களம் செய்வார். தேங்க்ஸ் பானர்மேன்.
வையயந்தியை பற்றி எழுதணும்னா நிறைய இருக்கு கண்ணா! நேரம்தான் இல்லை. இந்தாங்க பதிலுக்கு வாங்கிக்குங்க.
'Honton Mein Aisi Baat Main'
இந்த மாதிரி டான்ஸ் வைஜயந்தியைத் தவிர வேறு எவரும் பண்ண முடியுமா(jewel thief)? சவாலா? சபாஷ்! சரியான போட்டி அப்படின்னு சொல்லல்லாம் முடியாது. நம்ம ஸ்டைல் தேவ் மேளம் கொட்டும் அழகே அழகு. ஆபிசுக்கு அவசரமா ஓடும் போது போஸ்ட் பண்ணிகிட்டே ஓடறேன் சினா கானாவுக்காக.
https://www.youtube.com/watch?featur...&v=jtn4am42kW4
வாவ் சூப்பர் பாட் வாசு சார்.. முன்னால் கேட்க மட்டும் செய்திருக்கிறேன்..இப்போது தான் பார்க்கிறேன்..அவசரத்திலும் எனக்குக் கொடுத்தமைக்கு ஒரு ஓ அண்ட் தாங்க்ஸ்..
இந்த கண்ணும் கண்ணும்கலந்து சொந்தம் கொண்டாடுதேயில் ..சாதூர்யம் பேசாதடி என் சலங்கைக்குப் பதில் சொல்லடியில் வரும் சீற்ற விழிகள்..ம்ம் பிடிக்கும்..கிருஷ்ணா ஜி எங்கே எங்கே..
இசையரசியின் அற்புத பாடல்களில் இதுவும் ஒன்று.
திரையில் உதய சந்த்ரிகா
https://www.youtube.com/watch?v=CuULKivWv5c
பாடல் இரண்டு
பாணி ஒன்று
தொடர் 3
குழந்தை இல்லாத இந்த தம்பதியர் தங்களுக்கு வளர்க்க ஒரு குழந்தை கிடைத்தவுடன் அடையும் பேரின்பத்தையும், மகிழ்ச்சியையும் பாருங்கள். தாய் தன் கடமையைச் செவ்வனே செய்ய, தந்தை அந்த தத்துக் குழந்தையை எடுத்து ஆனந்தக் கூத்தாடுவதைக் காணுங்கள். 'பிள்ளைக்கு அப்படி செய்... இப்படி செய்' என்று மனைவுக்கு அன்புக் கட்டளை வேறு. 'தங்கச் சிலம்பெடுத்து போடாத்தா... நல்ல தமிழாலே தாலாட்டொன்னு பாடாத்தா' என்று தங்கத்தையும், தமிழையும் ஒரே தராசில் இட்டுப் பாடும் இந்த நாயகனின் ஆட்ட அசைவுகள் அகிலம் போற்றக்கூடிய புகழ் பெற்றது.
கண்டவர் கண்ணுபடும் செல்லாத்தா
கன்னத்திலே கறுப்புப் பொட்டு வைக்கச்
சொல்லி சொல்லத்தா
என்று ரெண்டு படுத்தும் ரகளை பண்ணும் குறும்பான தந்தை.
'சுட்டிப் பய தொட்டிலிலே போடாததா
அழுதா புட்டிப் பாலைக் கரைச்சி
கொஞ்சம் ஊத்தாத்தா'
என்று தாய் தாய்ப்பால் கொடுக்க முடியாததால் புட்டிப்பாலைக் கரைத்துக் கொடுக்கச் சொல்லும் புத்திசாலித்தனம்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G_HwShd-vso
இந்தத் தம்பதியரைப் பாருங்கள். இந்த நாயகர் தாயால் முடியாது என்பதால் தானே செயலில் இறங்கி விட்டார். தாய் கால்கள் வராதவள் ஆதலால், வீல் சேரில் அமர்ந்து விட்டதால், குழந்தையை குளிப்பாட்டி, செய்ய வேண்டியவைகளை செய்து இந்த தந்தை கொஞ்சி மகிழ்கிறார். குழந்தை 'மின்மினியைக் கண்மணி'யாய்க் கொண்டவனாம். 'சச்சா மம்மா பப்பா' என்று அழகுக் கொஞ்சல்.
'மணிப்பயல் சிரிப்பினில் மயக்கிடும் கலை படைத்தான்
பசிக்குரல் கொடுக்கையில் புதுப் புது இசை அமைத்தான்'
அடடா! என்ன கற்பனை! குழந்தையின் பசிக்குரல் கூட புதிய இசையாக தோன்றுகிறதாமே!
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xqoOqS4bpWs
இரண்டு திலகங்களும் மனைவிமார்களோடு குழந்தைகளைக் கொஞ்சி நமக்குச் சுவைக்கத் தந்த அற்புத பாடல்கள்.
ஆமாம்! பாடல் இரண்டு. பாணி ஒன்றுதானே!
அன்பு கலைவேந்தன் சார்,
முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சில சொந்த அலுவல்கள் காரணமாக உடன் பதிவிட முடியவில்லை.
புதிய தொடருக்கான தங்கள் வாழ்த்திற்கு நன்றி!
'கடவுள் செய்த பாவம்' பாடல் பற்றிய விளக்கங்கள் சுவை. இதற்கு முன்னர் ஒரு சில மாதங்கள் இருக்கும் ராகவேந்திரன் சார் இந்தப் பாடலைப் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். அவருக்கு மிக மிக பிடித்த பாடல் என்று எழுதியிருந்தார். அவரைப் போலவே தான் எனக்கும். அதற்கு நானும் பின்னூட்டம் அளித்திருந்தேன். ஒரு சில வார்த்தைகள் சென்சார் பிரச்னையால் மாற்றப்பட்டு இருந்தன. பாடலின் வரிகளையும் அற்புதமாக ஞாபகப் படுத்தி விட்டீர்கள்.
இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் 'ஆனந்த ஜோதி' திரைப்படத்தில் வரும் கீழ்க் கண்ட இந்தப் பாடலும் உடனே எனக்கு ஞாபகம் வருகிறது. உங்களுக்கும் இதே மனநிலைதான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
'கடவுள் இருக்கின்றார்
அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா
காற்றில் தவழுகின்றாய்
அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா'
இதிலும் குழப்பமான மனநிலையில் இருக்கும் எம்.ஜி.ஆரை தெளிவான மனநிலை கொண்ட இன்னொரு எம்.ஜி.ஆர் அவர்கள் தெளிவு படுத்துவது போல பாடலமைந்திருக்கும்.
'புத்தன் மறைந்து விட்டான்
அவன்தன் போதனை மறைகின்றதா?
என்ற வரிகள் அருமை. இதைக் கேட்கும் போதெல்லாம் 'நடிகர் திலகம் மறைந்து விட்டார்...அவர்தம் நடிப்பு மறைகின்றதா? என்று எண்ணத் தோன்றும்.
'இசையை ரசிக்கின்றாய்
இசையின் உருவம் வருகின்றதா?
என்ற வரிகள் ஆண்டவன் இருக்கின்றான் என்ற உன்னதக் கருத்தை வலியுறுத்தும்
இந்தப் பாடலும் நான் மிகவும் என்ஜாய் செய்யும் பாடல்.
பாடல் இரண்டு பாணி ஒன்று தலைப்புக்குக் கூட இப்பாடல் பொருந்தும்.
நல்ல பாடலை தந்ததற்கும், பிறிதொரு கருத்துள்ள பாடலை நினைவுகூர வைத்ததற்கும் நன்றி கலைவேந்தன் சார்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YuM7GxWZaN0
வணக்கம் வாசு ஜி
தாய் பிறந்தாள்
ஒரு வித்தியாசமான படம்
சாரதா, முத்துராமன், பானுமதி என எல்லோருமே நன்றாய் செய்திருக்க ஒரே ஒரு நெருடல் சிஐடி சகுந்தலா பானுமதிக்கு மருமகள் சஹிக்காது.
பாடல் அருமையோ அருமை
கண்ணனுக்கு பேர் சூட்டி இசைய்ரசியும் ராட்சசியும் கலக்கும் பாடல்
https://www.youtube.com/watch?v=WqFQnj2OpS8
ஹாய் வாசு சார்..பா ஒ பா.இ தொடரில் இது இரண்டாவது அத்தியாயம் தானே.. அல்லது நான் இரண்டு மூன்றை மிஸ் செய்து விட்டேனா...