-
திருட்டு பயலே பார்ட் 2 - ரீ என்ட்ரியாகும் சுசிகணேசன்
பைவ் ஸ்டார் படத்தின் மூலம் இயக்குனரான சுசி கணேசனின் வரவும், மணிரத்னம் ஸ்கூல் என்ற கவுரவமும் சிறப்பாகவே அமைந்தது.
திருட்டு பயலே படத்தின் வெற்றி அவரையே கொஞ்சம் திணறடிக்கச் செய்தது. அதன் பிறகு விக்ரமை வைத்து அவர் இயக்கிய அகலக்கால் படம்தான் பாதாளத்தில் தள்ளியது. அது என்ன அகலக்கால் படம்? கந்தசாமி படத்தைத்தான் சொல்கிறோம்.
அந்தப் படத்தை விமர்சகர் ஞாநி கிழிக்க, பதிலுக்கு சுசி கணேசன் ஞாநியை கடுப்படிக்க, படமும் ப்ளாப்பாக, மும்பைக்கு வண்டியேறினார் சுசி. திருட்டு பயலே படத்தை இந்தியில் ரீமேக் செய்வதுதான் நோக்கம். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றவும் செய்தார். ஆனால், அடுத்தடுத்து வாய்ப்புகள் வர வேண்டுமே?
மும்பை இனி தேறாது என்ற நிலையில் மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். திருட்டு பயலே இரண்டாம் பாகம்தான் சுசியின் டார்கெட். கதை ரெடி. ஆனால், ஆர்யா உள்பட எந்த ஹீரோவும் சுசியின் ரயிலுக்கு தலை கொடுக்க தயாரில்லை.
பேசாம திருட்டு பயலேயில் நடித்த ஜீவனையே முயற்சி பண்ணலாமே.
-
தாமதமாகும் பாலாவின் அடுத்த படம் - Tamil HINDU
'தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் எனத் தெரிகிறது. 'தாரை தப்பட்டை' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெறும் போதே விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா ஆகியோர் நடிக்கும் படத்தை அடுத்து இயக்கவிருப்பதாக பாலா அறிவித்தார். பல்வேறு முன்னணி நாயகர்கள் இணைவதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டானது.
'குற்ற பரம்பரை' படத்தை பாலா எடுக்கவிருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா - இயக்குநர் பாலா இருவருக்குமே வார்த்தைப் போர் உண்டானது. இதில் எழுத்தாளர் ரத்தினகுமாரும் பாலா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். "தான் எடுக்கப் போகும் கதை 'குற்ற பரம்பரை' இல்லை. வேறு ஒரு கதை" என்று பாலா விளக்கம் அளித்தார்.
பாலாவின் மும்முரமான அறிவிப்பால், படப்பிடிப்பு உடனடியாக தொடங்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், தற்போது 2017 ஜனவரியில் தான் படப்பிடிப்பு தொடங்கப்படும் என விஷால் தெரிவித்திருக்கிறார்.
'மருது' படத்தைத் தொடர்ந்து 'கத்தி சண்டை' படத்தில் நடித்து வருகிறார் விஷால். அப்படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் 'துப்பறிவாளன்' படத்திலும், 'டெம்பர்' ரீமேக்கிலும் இந்தாண்டு நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார்.
இப்படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் பாலா இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஷால்.
-
தணிக்கை குழுவுக்கு தடை விதிக்க நடிகை நந்திதா தாஸ் கோரிக்கை
தணிக்கை குழுவை கலைக்க வேண்டும் என்று பிரபல நடிகை நந்திதா தாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பிரபல நடிகை நந்திதா தாஸ் கூறுகையில், சினிமா என்பது மக்களுக்கானது. அதில் பொழுதுபோக்கு மட்டுமே நல்ல விழிப்புணர்வு தகவல்களும் உள்ளது. ஆனால், சினிமா படங்களுக்கு தணிக்கை குழுவில் சான்று பெறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது.
ஒரு படத்தை உலகம் முழுவதும் 200 கோடி இந்தியர்கள் பார்க்கிறார்கள். ஒரு படம் எனக்கு பிடிக்கும் படம், அடுத்தவருக்கு பிடிக்காது. இப்படி பலரது விருப்பங்கள் மாறுபடும்.
ஒரு படத்துக்கு என்ன சான்று அளிப்பது என்று தணிக்கை குழுவில் உள்ள 5 பேர் மட்டுமே முடிவு செய்வது சரியா அல்லது நியாயமா என தெரியவில்லை. ஆகவே, தணிக்கை குழுவை தடை செய்யலாம். அதற்கு பதில் ரேட்டிங் முறை கொண்டுவரலாம். எனவே, நல்ல படமா? இல்லையா? என்பதை மக்கள் மட்டுமே முடிவு செய்யவேண்டும் என்றார்.
-
தமிழ் சினிமாவில் சம்பளம் தராத இயக்குனர்கள் - மிஷ்கின், பாலா மற்றும் பலர்
தமிழ் சினிமாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்று, சம்பளம். வியாபாரம் உள்ள நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கு மீறிய சம்பளத்தை தர தயங்காதவர்கள் உதவி இயக்குனர்கள் போன்றவர்களுக்கு அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியத்தில் ஒரு சதவீதத்தைகூட தர முன்வருவதில்லை.
அறம், உழைப்பு, உன்னதம், கலை, மக்கள் என்று தொண்டை கிழிக்கும் இயக்குனர்கள்தான் இதுபோன்ற சின்னச் செயல்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.
வாயை திறந்தால் மக்கள் உரிமை என்று முழக்கமிடும் தங்கர் பச்சான் தனது உதவி இயக்குனர்களுக்கு சரிவர சம்பளம் தருவதில்லை. தயாரிப்பாளர் உதவி இயக்குனர்களுக்கு நிர்ணயிக்கும் சம்பளத்திலும் கணிசமான பகுதியை தங்கர் எடுத்துக் கொள்வார்.
இயக்குனர் சேரன் தனது படத்தை தயாரிக்கவே ஆளில்லாத நிலையில், ரோகிணி இயக்கிய அப்பாவின் மீசை படத்தை தயாரித்தார். கொல்கத்தாவில் நடந்த படப்பிடிப்பில், அங்குள்ள கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு பைசா பாக்கியில்லாமல் சம்பளத்தை செட்டில் செய்தவர் தமிழகத்திலிருந்து அழைத்து செல்லப்பட்ட கலைஞர்களுக்கு இன்றுவரை பாக்கி வைத்துள்ளார். உதவி இயக்குனர்கள் நிலைபற்றி சொல்ல வேண்டியதில்லை.
காசு கேட்கும் போதெல்லாம், நான் எவ்ளோ பெரிய விஷயத்துக்காக போராடிகிட்டிருக்கேன். அது தெரியாம காசு கேட்கிறீங்களே என்று உதவி இயக்குனர்களை அர்ச்சித்திருக்கிறார். சினிமா டூ ஹோம் என்ற சேரனின் செல்லுபடியாகாத திட்டத்தைதான் அவர் போராட்டம் என்று வர்ணித்தது. நீங்க போராடுறதுக்காக மத்தவன் கூலியில்லாமல் வேலை பார்க்கணுமா என்ன.
மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வேலை பார்த்த உதவி இயக்குனர் இதுபோன்ற குற்றச்சாட்டை இணையத்தில் முன் வைத்துள்ளார். அவர் பெயர் ஸ்ரீகணேஷ்.
"ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களின் உழைப்பு மிகப்பெரியது. அந்த படத்தின் கதை ஆரம்பத்திலிருந்து, Pre production, பல பொருளாதார நெருக்கடிகளில் நடந்த படப்பிடிப்பு, எல்லாவற்றிலும் உதவி இயக்குநர்கள் இரவு பகலாக உழைத்தோம். நரேஷ், பாலாஜி, சீனிவாசன் மூவரும் கதை விவாதத்தில் நிறைய பங்கெடுத்தனர். நரேஷ் வேலைப்பளுவால் ஆஸ்பத்திரியில் 1 வாரம் கிடந்தார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைக்கதையை மிஷ்னின் எழுத, முழுக்க தமிழில் தட்டச்சு செய்தது நான்.
படம் ரிலீஸுக்கு பின் நடந்த வெற்றி விழாக்கள் துவங்கி இந்த திரைக்கதை புத்தக வெளியீட்டு விழா வரை எங்கள் யாருக்குமே அழைப்பு இல்லை (சம்பளம் தரவில்லை என்பது தனிக்கதை). கமர்ஷியல் சினிமா என்றாலும் மாற்று சினிமா என்றாலும் வண்ண விளக்குகளுக்கு பின் சினிமாவில் உதவி இயக்குநர்கள் போன்ற உதிரி தொழிலாளர்களின் நிலை இது தான்" என்று ஸ்ரீ கணேஷ் வருத்தப்பட்டிருக்கிறார்.
இந்த பஞ்சாயத்து நிலுவையில் இருக்கையில், நான் கடவுள் படத்தில் நடித்த மாற்றுத் திறனாளி பெண், ஒன்பது மாதங்கள் பாலா படத்தில் பணிபுரிந்ததற்கு அவர் சம்பளமே தரலை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். வாட்ஸ் அப்பில் அப்பெண் சாந்தியின் வீரியோ வைரலாகி வருகிறது. தற்போது பிச்சை எடுத்து ஜீவனம் நடத்திவரும் சாந்தியின் குற்றச்சாட்டுக்கு இன்னும் பதில் வரவில்லை.
தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியே என் தோள் ஒடிஞ்சுப் போச்சி என்று கதைவிடும் அறச்சீற்ற இயக்குனர்கள்தான் இப்படி அடிமட்டத்தில் உள்ளவர்களின் வயிற்றில் கை வைக்கிறார்கள். கலையே சரணம் என்று சாஷ்டாங்கமாக கிடக்கும் வசந்தபாலன் தனது உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தையில் திட்டுவதைப் பார்த்தால் யாருக்கும் குமட்டிக் கொண்டு வரும்.
கலைக்காகவே உயிர் வளர்ப்பதாக நாடகமாடும் இவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
-
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாவாரா சாய்பல்லவி!
இசையமைப்பை ஓரங்கட்டிவிட்டு, ஹீரோயிஸத்தில் குதித்திருக்கும் ஜி.வி.பிரகாஷூக்கு அடுத்தடுத்து படங்களின் ஷூட்டிங், ரிலீஸ் என்று படு பிஸியில் இருக்கிறார்.
டார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா படங்களைத் தொடர்ந்து பென்சில் படமும் சமீபத்தில் ரிலீஸானது. அடுத்ததாக “ எனக்கு இன்னொரு பேர் இருக்கு” படத்தின் படப்பிடிப்பு முடிந்து, நாளை டிரெய்லரும் ரிலீஸாகவிருக்கிறது. தொடர்ந்து புரூஸ்லீ, கடவுள் இருக்கான் குமாரு படத்திலும் நடித்துவருகிறார்.
இந்தப் படங்கள் முடியும் நிலையில், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை என்பது ஹைலைட்! இப்படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆனால் இப்படத்திற்கான நாயகி யாரென்பதே இன்றைய லேட்டஸ்ட் டாபிக். பிரேமம் படத்தில் மலர்டீச்சராக வந்த சாய்பல்லவியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் உறுதியான தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
"தம்" அடிக்காதீங்க தம்பிகளா.. டி.ஆர். வேண்டுகோள்
சென்னை: சென்னையில் இன்று புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நடந்த பேரணியில் லட்சிய திமுக தலைவரும், நடிகர் - இயக்குநருமான டி.ராஜேந்தர் கலந்து கொண்டார்.தனது வாழ்க்கையில் இதுவரை புகை பிடித்ததில்லை என்று கூறிய அவர் இளைஞர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். View Photosஇன்று புகையிலை எதிர்ப்பு தினமாகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டன. பாஜக சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் இன்று இப்பேரணி நடைபெற்றது.அதில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது டி.ராஜேந்தர் பேசுகையில், நான் இதுவரை சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தியது கிடையாது. இங்கே நான் கட்சி மற்றும் கொள்கையை பார்த்து வரவில்லை. கையில் எடுத்துள்ள குறிக்கோளை பார்த்து வந்தேன்.கொடியின் வண்ணத்தை பார்த்து வரவில்லை. நல்ல எண்ணத்தை பார்த்து வந்தேன். கொடியை பார்த்து வரவில்லை - நல்ல கொள்கையை பார்த்து வந்தேன். இளைஞர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
‘ஊமை விழிகள்’ புகழ் ஆபாவாணனுக்கு ஐந்து ஆண்டு சிறை
செக் மோசடி வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஆபாவணனுக்கு நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே, இணைந்த கைகள் ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆபாவாணன். இவர் 1999ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் காசோலை செலுத்தி பணம் பெறுவதில், வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது அதன் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. மோசடியில் ஈடுபட்ட ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், வங்கி தலைமை மேலாளர் மற்றும் உதவி மேலாளருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், ஆபாவாணனுக்கு ரூ.2.40 கோடி அபராதமும், மேலாளருக்கு ரூ.15 லட்சமும், உதவி மேலாளருக்கு ரூ.10 லட்சமும் அபராதம் விதித்து திர்ப்பளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
T. Rajendar joins BJP for social cause | World No Tobacco Day
https://www.youtube.com/watch?v=mDqg5hmmcv0
-
சிரிக்க வைத்த என்னை அழ வைக்கின்றனர்: வாட்ஸ்அப் வதந்தியால் நடிகர் செந்தில் வேதனை
http://tamil.thehindu.com/multimedia...l_2876836f.jpg மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த நடிகர் செந்தில் | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.
எல்லோரையும் சிரிக்க வைத்த நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரப்பி அழ வைக்கின்றனர் என நடிகர் செந்தில் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திருச்சியில் நடிகர் செந்தில் அதிமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்போது அவர் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தக வல் பரவியது. அதிர்ச்சி அடைந்த அவர், தான் நலமுடன் இருப்பதாக அப்போது தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நடிகர் செந்தில் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இதனால் கடும் மன உளைச்சலடைந்த அவர் நேற்று மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங் களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளேன். அதிமுகவில் தலைமைக் கழக பேச்சாளராகவும் இருக்கிறேன். தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன் நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு வந்தேன். அப்போது நான் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் மீண்டும் தகவல் பரவுவதாகக் கேள்விப்பட்டேன். வாட்ஸ்அப் மூலம் இந்த தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
திமுகவினர்தான் காரணம்
நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் எல்லோரையும் சிரிக்க வைத்து பழக்கப்பட்டவன். ஆனால், இப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக என்னை அழ வைக்கின்றனர். இதன் பின்னணியில் திமுகவினர்தான் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக நான் பிரச்சாரம் செய்ததால், தற்போது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுகவினர்தான் நான் இறந்துவிட்டதாக தகவல் பரப்புகின்றனர் என்றார்
-
பெரிய திரைப்படங்கள் வசூல் லாபகரமாக இல்லை: மதுரை, ராமநாதபுரம் விநியோகஸ்தர்கள் அதிருப்தி
பெரிய திரைப்படங்கள் வசூல் லாபகரமாக இல்லை என மதுரை, ராமநாதபுரம் திரைப்பட விநியோ கஸ்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
மதுரை, ராமநாதபுரம் யுனைடெட் பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ் அசோசி யேஷன் பொதுக் குழு கூட்டம் சங்க கவுரவத் தலைவர் ஜி.என். அன்புசெழியன், தலைவர் ஆர்.செல்வி ன்ராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. செயலர் எம்.ஓ.சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து அவர்கள் கூறி யதாவது: மதுரை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள திரையரங்குகளில் நுழைவுக் கட்டணம் குறைவாக உள்ளது. நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக ஏற் கெனவே அளித்த மனு மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து திரையங்கு நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரந்தோறும் அதிகளவில் வெளியாகும் திரைப்படங்கள் எண்ணிக்கையை கட்டுப் படுத்த தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்க கூட்டமைப்பு எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்து ழைப்பு கொடுப்போம்.
சமீப காலமாக தமிழ் திரைப் படங்களின் விலை மிக அபரிமிதமாக உள்ளது. பெரிய திரைப்படங்களின் வசூல் விநியோகஸ்தர்களுக்கு லாப கரமாக இல்லை. பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திரைப்படத் தொழிலையே நம்பி தொழில் செய்யும் திரைப் பட விநியோகஸ்தர்களும், உரி மையாளர்களும் தொடர்ந்து தொழில் செய்யவும், நலிந்துவரும் திரைப்படத் தொழிலைக் காப்பாற்ற நடிகர், நடிகைகள் தங்கள் ஊதிய த்தைக் குறைக்க வேண்டும்.
ரூ.50 லட்சத்துக்கு மேல் ஊதியம் வாங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகி யோரிடம் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் அவர்களின் ஊதி யத்தில் 25 சதவீதம் நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். படம் வெளியான ஆன பின்பு படம் வெற்றி பெற்று லாபம் கிடைத்தால் நிறுத்தி வைத்திருந்த 25 சதவீதம் பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
தோல்வி ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டால் அந்த 25 சதவீதம் ஊதியத்தை அதன் தயாரிப் பாளர்கள், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு சதவிகித அடிப்படையில் பகிர்ந்து வழங்க வேண்டும்.
இதற்கான முயற்சியை தமிழ் திரைப்படத் துறையில் உள்ள சங்கங்கள் ஒன்றுகூடி உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.