காலத்தை வென்ற பாடல்.. இனிமை என்ற சொல்லுக்கு விளக்கம் தரும் குரல்...
என் கடமை படத்திலிருந்து ...
https://www.youtube.com/watch?v=CZQwiqKUhX4
Printable View
காலத்தை வென்ற பாடல்.. இனிமை என்ற சொல்லுக்கு விளக்கம் தரும் குரல்...
என் கடமை படத்திலிருந்து ...
https://www.youtube.com/watch?v=CZQwiqKUhX4
சொல்ல நினைத்த வார்த்தைகள் சொல்லாமல் போனதேன்
சொல்ல வந்த வேளையில் பொல்லாத நாணம் ஏன்..
என்றென்றும் ரீங்கரிக்கும் இந்தப் பாடல்
...ஏற்றமுடன் காதுகளில் இறங்கி நெஞ்சில்
மென்மையென நங்கையவள் தவிப்பை நன்றாய்
..மேன்மையுடன் உருகித்தான் சொல்லு மன்றோ
கண்களிலே ஏக்கமுடன் நடிகை அங்கே
...கலங்கித்தான் பாடுவதை உணர்வில் கொய்து
பெண்மையதன் நாணத்தைக் குரலில் தந்த
...பேரின்பம் என்சொல்வேன் கேட்பீர் நீரே..
https://youtu.be/QoVumrtuJds
ரொம்ப நாளைக்கப்புறம் வாசுவின் ஜோரான ரைட் அப் அபெளட் இல்லற ஜோதி.
http://www.mayyam.com/talk/showthrea...Part-18/page34
இது வரை பார்க்காத படம் தான்.. பாடல்களில் கேட்பதெல்லாம் காதல்.. அதுமட்டும் கேட்ட நினைவு..
இருந்தாலும் கடைசியில் பத்மினியை ந.தி தங்கை என்று விடுவார் என எழுதியிருந்தார் வாசு. எனக்கென்னமோ அது ஒப்பவே இல்லை.. (இன்னொரு எக்ஸாம்பிள்..பச்சைக்கிளி முத்துச்சரம்..) வேறென்ன படஙக்ள் இந்தமாதிரி இருக்கின்றன..
எஸ் உ.சு.வா. தான்..:) பச்சக்கிளி முத்துச்சரம் வேற லைன்
சுசீலாம்மாவின் மதுர கான வரிசையில் ......தேடினேன் வந்தது..... என் மனத்தில் ஒன்றைப் பற்றி....நான் நினைத்ததெல்லாம் வெற்றி.....
நடிகர்திலகத்தின் நகர்வில் .!
https://www.youtube.com/watch?v=wiPBzW4-wrY
அம்மம்மா ...சுசீலாம்மா.....குரலிசைவில் காற்றும் வெண்ணிற ஆடை தொட்டுப் பேசிடும் தேனிசைத் தென்றல் வருடிடுமே குளிராய் நெஞ்சில் ஊடுருவி...!
https://www.youtube.com/watch?v=nMr9uh5NyzA
From MeeNda Sorgam (1960)
mana naattiya medaiyil aadinen.......
http://www.youtube.com/watch?v=nsyOmOnRDFQ
அனைவருக்கும் வணக்கம்.
ராகவேந்திரன் சார், முரளி சார், கோபால், ரவி சார், மது அண்ணா, ஜி, சின்னக்(செல்லக்)கண்ணன்:), வினோத் சார், ராகதேவன் சார், ராஜ்ராஜ் சார், கல்நாயக், ஆதிராம் சார், முத்தையன் சார், தம்பி செந்திவேல், குமார் சார், கிருஷ்ணா சார், வாசுதேவன் சார், கோபு சார், சிவாஜி செந்தில் சார், மற்றும் அனைத்து நண்பர்களும் நலம்தானே!
வேலைப்பளு அதிகம். அதுதான் வர முடியவில்லை. மன்னிக்கவும். மதுரகானத்தை தொடர்ந்து அமர்க்களமாக நடத்தி வரும் அனைவருக்கும் நன்றி.
நடுவில் மகிழ்ச்சியான சில சம்பவங்கள்.
http://images.apherald.com/ImageStor...re-Photos1.jpg
சுசீலா அம்மா கின்னஸில் இடம் பிடித்தது.....'சிவகாமியின் செல்வன்' ரிலீஸ்.... என் பிரிய ராஜேஷ்ஜி யை சென்னையில் நேரில் சந்தித்து மகிழ்வுற்றது... மது அண்ணா நீண்ட நாட்களுக்குப் பின் தொடர்பு கொண்டது... வினோத் சாரின் அரிய விளம்பர ஆவணங்கள்.... சின்னாவின் சந்தேகங்கள்.... என்று சந்தோஷம் தொடர்கிறது. இப்படியே தொடரட்டும்.
சுசீலா அம்மாவை வாழ்த்திவிட்டு ராகவேந்திரன் சாரின் விருப்பப்படி எனக்குப் பிடித்த, மிக பிடித்த, மிக மிகப் பிடித்த இந்தப் 'பாலாடை' பாட்டை பட்டாடையாய் இசைக்குயிலுக்கு போர்த்தி இன்புறுகிறேன். (பாடலின் வீடியோ தரம் தடுமாற்றம்தான்) 'ஜி'யிடமும் மகிழ்ச்சியை மலையளவு பகிர்ந்து கொள்கிறேன்.
'அன்னையைப் பிள்ளை வாழ்த்தும் கோலம் கண்ணனும் காண வேண்டும். சின்னக் கண்ணனும் காணவேண்டும்'....
https://youtu.be/7y0r1jNJcyw