//சின்னச் சின்ன மேகம் என்னைத் தொட்டு போகும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்// மதுண்ணா வாவ்.. என்னா பாட்டுங்க இது..இது கேட்க மட்டும் செய்திருக்கேன் பார்த்ததில்லை..ஆக்சுவலா கீதாவிற்கு அழகு நடிப்பு எல்லாம் இருந்தும் அவர் ஹீரோயினாக சோபிக்கவில்லை.. பாடல்வரிகளுக்கும், வீடியோவிற்கும் தாங்க்ஸ்..
வான் நிலாவிற்கும் கல்யாணத் தேன் நிலாவிற்கும் வரிகள்,கம்பேரிஸனுக்கு + காணொளிகள் சரி ஈ ஈ தமிழ்ல வீடியோக்களுக்கு நன்றி..இரண்டுமே என்னைக் கவர்ந்த பிடித்த பாடல்கள்.. ஒன்றில் பாடல் அழகு (சிவரஞ்சனி அவ்வளவாகக் கவரவில்லை) இன்னொன்றில் பாடலும் அழகு (அடக்க ஹேண்ட்ஸ்ம் மம்முட்டி ஒடுக்க அழகு சொர்ண புஷ்பம்)..
இந்த வான் நிலா பாடல் இருக்கிறதே.. வழக்கமாக மெட்டுப் போட்டுத்தான் பாட்டெழுதச் சொல்வார்கள்.. இது கவிஞர கண்ண தாசனைப் பாட்டெழுதச் சொல்லிவிட்டு மெட்டுப் போட்டார் என்பது போல் எம்.எஸ்.வியின் ஒரு பேட்டியில் படித்ததாக நினைவு.. என் நினைவில் பிழை கூட இருக்கலாம்..
//உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர். புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்தபோது, ராமநாதபுரம் ராஜா சேதுபதியின் மகளான குமாரி நளினியை எம்.ஜி.ஆருக்கு 'விஸ்வம்' மனோகர் அறிமுகப்படுத்த உடனே எம்.ஜி.ஆர். 'கண்டேன் என் கம்பெனியின் கதாநாயகியை' என்று நாகேஷ் பாணியில் கமெண்ட் அடித்து, குமாரி நளினியின் பெயரை 'லதா' என்று மாற்ற, ஜொள்ளு ரசிகர்களால் 'லட்டு லதா' ஆக்கப்பட்டார்...// கார்த்திக் சார்..எனக்குத் தெரியாத தகவல் இது.. ராஜா வீட்டுப் பெண்ணா லதா.. நன்றி. (இருந்தாலும் அவர் லத்து தான்..!)
//கவிஞர் சொன்னார் தான் ஆனால் அதற்கு முன்பும் கா.மு ஷெரிப், மருதகாசி ஐயா, தஞ்சை ராமய்யா தாஸ் மற்றும் கு.மா.பா போன்றோரும் பல தத்துவ பாடல்களையும் ஆழமான சிந்தனைகளையும் சொல்லத்தான் செய்தனர். // இதுவும் உண்மைன்னு சொல்லட்டுமா.. :) ராஜேஷ் ஜி..அந்தந்த கால கட்டத்தில் தத்துவங்கள் வந்திருக்கின்றன..பிறந்திருக்கின்றன.. வழிமொழிந்த வகை என்பதைத் தான் கார்த்திக் சார் சொல்ல நான் வழி மொழிந்தேன் (ஹப்பாடா ஒருவகையா குழ்ப்பியாச்சு).. கவிஞர் கண்ண தாசன் கூட செங்கலின் வண்டு கலின் கலின் என்று - குற்றாலக் குறவஞ்சியில் இருந்து நிமிண்டி – எழுந்து வாராயோ கனிந்து வாராயோன்னு அபிராமியை எஸ்.வி.சுப்பையா கூப்பிடுவது போல எழுதியிருப்பார்..அங்கங்கே உள்ள நல்லவிஷயங்களை மற்ற காலங்களில் கவிஞர்கள் தம் சிந்தனைக்கேற்ப எழுதியதில் எதுவும் தவறுண்டோ..இல்லை என்று தான் நினைக்கிறேன்..