டியர் ராகுல்ராம்,
விளையாட்டுப் பிள்ளை பற்றிய தங்களுடைய விமர்சனம் அருமை.
Printable View
நன்றி - லிஸ்டில் 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படங்களில் சில இடம் பெற வில்லை - ஓடியிய திரை அரங்குகளும் அதிகம் -
1. லிஸ்டில் சேர்க்க மறந்த படங்கள்
திருவருட்செல்வர் (சென்னை )
விளையாட்டுபிள்ளை (மதுரை )
என்தம்பி
சங்கலி
தியாகி ( ஸ்ரீலங்கா)
பரீட்சைக்கு நேரமாச்சு (சென்னை)
பெஜவாடா பொப்பிலி (ஆந்திரா )
விடுதலை (சென்னை)
ராஜா பார்ட் ரங்கதுரை ( சென்னை)
ராஜராஜ சோழன் (சென்னை)
சத்யம் ( யாழ் வின்சர் -ஸ்ரீலங்கா)
சந்திர குப்த சாணக்கியா ( ஆந்திரா )
2. அதிகமாக ஓடின திரைஅரங்குகள்
பராசக்தி - சென்னை (4) , மதுரை (2)
எதிர்பாராதது - சென்னை (5)
சம்பூர்ண இராமாயணம் - கோவை , தஞ்சை
கர்ணன் ( re release யையும் சேர்த்து ) - சென்னை -5
Pilot Prem Nath - கொலம்போ (3)
ராமன் எத்தனை ராமனடி - சென்னை 2
dear Murali - many thanks . Our analysis should always end up with your recalling the defining moments of the past - this would make the circuit complete . Neither I have this much memory nor I could correlate the way you do . hence this request.
நாம் எப்பொழுதும் இருப்பதை வைத்து சந்தோஷ படுவதில்லை - இருக்கும் குறைகளையே பெரிதாக நினைத்து கிடைத்த சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு எதையோ தேடிக்கொண்டே இருக்கிறோம்
இந்த பாடலை கேளுங்கள் :
நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்து விட்டவர்களுக்கு நினைவினில் குறைகள் வருவதில்லை! கண்களில் ஒன்றாய்க் கலந்து விட்டவர்களுக்கு இனி காட்சிகள் வேறாய்த் தெரிவதில்லை.
குறையில் நிறையை கண்டு மகிழ்ச்சியை தங்க வைத்து கொண்டால் வாழ்க்கையில் தோல்வி ஏது ? ஏமாற்றம் ஏது ? ---------------
தன்னால் நடக்க இயலாது என்பதைத் தலைவி கூற, தலைவன் அதற்கேற்றவாறு பதிலுரைத்துப் பாடுகிறான். மலரும் கொடியும் நடப்பதில்லை! அவை மணம்தர என்றும் மறப்பதில்லை! கோவிற்சிலைகள் நடப்பதில்லை! அதைக் குறையெனக் கலைகள் வெறுப்பதில்லை! தாமரை மலரும் நடப்பதில்லை! அதைத் தழுவும் கதிரவன் வெறுப்பதில்லை! முத்திரை பதிப்பதுபோல அமையும் இறுதி வரிகளைக் கவனியுங்கள்! நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்துவிட்டோம்; நினைவினில் குறைகள் வருவதில்லை! கண்களில் ஒன்றாய்க் கலந்துவிட்டோம்; இனி காட்சிகள் வேறாய்த் தெரிவதில்லை. அருமையான பாடல்!!!
http://youtu.be/IaxGu--YQpQ
NT யின் படங்களை கீழ்கண்டவாறு பிரிக்கலாம் :
1. சுனாமி , பூகம்பம் , மின்னல் , இடி இவைகளை சந்தித்து , அவைகளை வீழ்த்தி சாகா வரம் பெற்ற படங்கள் - வசூலிலும் மிக பெரிய புரட்சிகளை ஏற்படுத்திய படங்கள்
சில உதாரணகள் : ( not exhaustive )
1. பராசக்தி
2. வீரபாண்டிய கட்டபொம்மன்
3. திருவிளையாடல்
4. ராஜா
5. பட்டிகாடா பட்டணமா
6. ஞானஒளி
7. திரிசூலம்
8. வசந்த மாளிகை
9. தங்கபதக்கம்
2. போட்டி , பொறாமை , காழ்புணர்ச்சி இவைகளை சந்தித்தும் வெற்றி பெற்ற படங்கள் :
சில உதாரணகள் : ( not exhaustive )
1. தில்லானா மோகனாம்பாள்
2. கர்ணன்
3. பாபு
4. அவன்தான் மனிதன்
5. நவராத்திரி
6. சிவந்த மண்
7. தீபம்
8. கப்பலோட்டிய தமிழன்
3. தன் படமே தனக்கு போட்டியாக வந்து மகத்தான வெற்றிக்கு தடை போட்ட படங்கள்
சில உதாரணகள் : ( not exhaustive )
1. எங்க மாமா
2. அன்பு கரங்கள்
3. தேனும் பாலும்
4. நெஞ்சிருக்கும் வரை
5, ரத்த திலகம்
4. அரசியல் சூழ்நிலை , கூட்டாளிகளின் சதி , மற்றும் பல அரசியல் காரணங்கள் இவைகளால் தன் வெற்றியின் வேகத்தை சற்றே இழந்த படங்கள்
சில உதாரணகள் : ( not exhaustive )
1. பழனி
2. பாட்டும் பரதமும்
3. உனக்காக நான்
5. 100 நாட்கள் என்ற இலக்கை அடையாவிட்டாலும் , தயாரிப்பாளர்களுக்கும் , விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த லாபத்தை தந்த படங்கள்
சில உதாரணகள் : ( not exhaustive )
1. எங்க மாமா
2. பழனி
3. தங்க சுரங்கம்
4. லக்ஷ்மி கல்யாணம்
5. ஊருக்கு ஒரு பிள்ளை
6. கவரிமான்
7. முரடன் முத்து
8. அன்பு கரங்கள்
9. நீலவானம்
6. கௌரமாக வந்து படத்தின் கௌரவத்தையும் , தயாரிப்பாளர்களின் கௌரவத்தையும் நிலை நிறுத்தின படங்கள்
சில உதாரணகள் : ( not exhaustive )
1. காவல் தெய்வம்
2. மனிதருள் மாணிக்கம்
3. தாயே உனக்காக
அவர் நடித்த படங்கள் எல்லாமே சாகா வரம் பெற்றவை - எந்த காலகட்டத்திலும் சோடை போகாதவை - நிரந்தரமானவை அதனால் அவைகளுக்கு என்றுமே மரணம் இல்லை
கண்ணன் சொல்வதுபோல
paritranaya sadhunam vinasaya cha duskrtam |
dharmasamsthapanaarthaaya sambhavami yuge yuge ||
ஒவ்வொரு யுகத்திலும் மீண்டும் மீண்டும் வெளி வந்து ஒரு புரட்ச்சியை செய்துகொண்டே இருக்கும்
தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் கொடுக்கப்படும் !!
தேசபக்தியை பரப்பிவிட்டு , தெய்வீகத்தில் நம்பிக்கை வரவழைத்து , உணர்சிகளுக்கு உயிர் கொடுத்து , குடும்ப பாசத்தில் வாழவைத்து , மனித நேயத்திற்கு மதிப்பு கொடுக்க வைத்து , உரிமைக்கு குரல் கொடுக்க வைத்து , நண்பர்களுக்கு மதிப்பு கொடுக்க வைத்து , தியாக எண்ணத்திற்கு உயிர் கொடுத்து , கடமையை நல்லமுறையில் செய்ய வைத்து - பிறருக்காக வாழும் எண்ணத்தை வளர வைத்து - எத்தனை எத்தனை சாதனைகள் ?? - உழைப்புக்கள் !! அவர் படங்கள் மூலம் எவ்வளவு கற்றுகொண்டோம் - இன்னும் எவ்வளவு பாக்கி உள்ளது !! என்னும் எவ்வளவு ஜென்மங்கள் தேவைப்படும் ??
இது ஒரு அலசல் :
1. தேசபக்தி என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. கப்பலோட்டிய தமிழன்
2. நாம் பிறந்த மண்
3. வீரபாண்டிய கட்டபொம்மன்
4. ராஜபார்ட் ரங்கதுரை
2. தெய்வீகத்தை வளர்க்க வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. திருவிளையாடல்
2. திருவருட்செல்வர்
3. கந்தன் கருணை
4. ஸ்ரீவள்ளி
5. திருமால் பெருமை
3. மற்ற மதங்களின் உயர்வை தெரிந்து கொள்ள வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. பாவ மன்னிப்பு
2. எழுதாத சட்டங்கள்
3. ஞானஒளி
4. கடமை உணர்ச்சியை வளர்த்து கொள்ள வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. தங்கபதக்கம்
2. என் மகன்
3. ஜெனரல் சக்கரவர்த்தி
5. அண்ணன் தம்பி உறவில் தகராறா - திருத்திக்கொள்ள வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. சம்பூர்ண ஒரு கோயில்
2. பழனி
3. என் தம்பி
6. அண்ணன் தங்கை உறவில் தகராறா - திருத்திக்கொள்ள வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. பாசமலர்
2. தங்கைக்காக
3. தங்கை
4. அண்ணன் ஒரு கோயில்
7. வில்லன் எப்படி இருப்பான் என்று தெரிந்து கொண்டு உஷாராக வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. ரங்கோன் ராதா
2. அந்த நாள்
3. திரும்பி பார்
4.பெண்ணின் பெருமை
5. துளி விஷம்
8. உண்மையான நட்பை தெரிந்து கொள்ளவேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. பார்த்தால் பசி தீரும்
2. உனக்காக நான்
3. கை கொடுத்த தெய்வம்
4. ஆலயமணி
9. மனிதனாக வாழ வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. அவன் தான் மனிதன்
2. அவன் ஒரு சரித்திரம்
3. பச்சை விளக்கு
4. உயர்ந்த மனிதன்
10. கௌரமாக வாழ்ந்து புகழ் பெற வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. கெளரவம்
2. வியட்நாம் வீடு
11. மென்மையான காதலை புரிந்து கொள்ள வேண்டுமா ?
பாருங்கள் : ( சில உதாரணங்கள் மட்டுமே )
1. வசந்த மாளிகை
2. தில்லானா மோகனாம்பாள்
சொல்லிகொண்டே போகலாம் -- எது இயற்க்கை எது செயற்கை என்று புரிந்து விடும் - முகத்தை மூடிக்கொண்டு அழுவதும் , கொள்ளு பேத்திகளுக்கு சம மானவர்களை கதாநாயகிளாக்கி கடைசியில் அவர்களில் பலரை தங்கைகளாக்கி , வில்லனை எமனுக்கு தம்பியாக்கி நடிக்கும் உலகத்தில் nt ஒருவரே தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்னவர், வாழ்ந்தவர் , இன்னும் வாழ்பவர்.